உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26606 topics in this forum
-
ஈரான் மீதான தனது பதில்த் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் இம்மாத ஆரம்பத்தில் தன்மீது நடத்தப்பட்ட 180 இற்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கும், ஈரானின் கூலிகளான ஹமாஸ், ஹிஸ்புள்ளா, ஹூத்தீக்கள், ஈராக்கிலும் சிரியாவிலும் இயங்கும் இஸ்லாமியக் குழுக்கள் ஆகியவற்றின் ஊடாக தன்மீது ஈரான் நடத்திவரும் தாக்குதல்களுக்கும் பதிலடியாக இஸ்ரேல் சனி அதிகாலையிலிருந்து ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகிறது
-
-
- 47 replies
- 2.9k views
- 1 follower
-
-
ஜி-7 கூட்டமைப்பில் உள்ள உலகின் மிக பெரிய பணக்கார நாடுகளின் தலைவர்கள் ஏற்கனவே முடக்கி வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் சொத்துக்களில் இருந்து 5000 கோடி டொலர்களை உக்ரைனுக்கு கொடுக்க முடி வெடுத்துள்ளனர். இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் அங்கம் வகிக்ககூடிய ஜி-7 நாடுகள் உக்ரைன் போரை நிறுத்துவதற்கு மாறாக மேலும் அதிகரிக்கவும் ரஷ்யாவின் கோபத்தை தூண்டும் வேலைகளையுமே செய்து வருகின்றன. 30 ஆயிரம் கோடி டொலர்களுக்கும் அதிகமான ரஷ்ய சொத்துக்களை மேற்கு நாடுகள் முடக்கி …
-
-
- 5 replies
- 772 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்ஜித் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது கொலைக்கு நீதி கேட்டு கனடாவில் சீக்கிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. எழுதியவர், குஷ்ஹால் லாலி பதவி, பிபிசி செய்தியாளர், பிராம்டன் "நாங்கள் பணி செய்ய மட்டுமே போதிய நேரம் கிடைக்கிறது, இதில் காலிஸ்தானைப் பற்றி நாங்கள் எப்போது பேசுவோம்?, நான் மட்டும் அல்ல என்னை சுற்றியுள்ள அனைவரும் செக்கு மாடுகள் போல ஒரே வட்டத்தில் சிக்கியுள்ளோம்", என்று கடந்த நான்கு ஆண்டுகளாக கனடாவின் பிராம்டன் நகரில் வசிக்கும் 30 வயது டாக்ஸி டிரைவர் குர்ஜித் சிங் கூறினார். இந்தியா - கனடா இடையிலான ராஜ்ஜீய உறவுகளில் பதற்றம் நிலவும் சூழலில் கனட…
-
- 0 replies
- 298 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் (கோப்புப் படம்) எழுதியவர், ரூஹான் அகமது பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத் அக்டோபர் மாத தொடக்கத்தில் இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது. தற்போது சர்வதேச அரங்கின் ஒட்டுமொத்த கவனமும் மீண்டும் மத்திய கிழக்கின் மீது குவிந்துள்ளது. அங்கு மோதல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து மிகவும் ஆபத்தான சூழல் உருவாகி வருகிறது. பங்குச் சந்தைகள் முதல் சர்வதேச விவகாரங்களைக் கண்காணிக்கும் ஆய்வாளர்கள் வரை, மத்திய கிழக்கின் சமீபத்திய நிலைமைகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் அடுத்…
-
- 2 replies
- 560 views
- 1 follower
-
-
இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் – அலி கமேனி! இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா செயத் அலி கமேனி (Ayatollah Seyyed Ali Khamenei), இஸ்ரேலின் சனிக்கிழமை (26) தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்று சூசகமாகத் தெரிவித்தார். அத்துடன், ஈரானின் சக்தியையும் உறுதியையும் இஸ்ரேலை உணரச் செய்ய வேண்டும் என்றும் கூறினார். இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் இராணுவ வீரர்களின் குடும்பங்களுடன் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற சந்திப்பின் போது உரையாற்றிய அவர், ஈரானிய தேசத்தின் இந்த சக்தியையும் உறுதியையும் சியோனிச (யூத தேசிய இயக்கம்) ஆட்சிக்கு எவ்வாறு தெரிவிப்பது என்பது நமது அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டும். இஸ்ரேலின் தீய செயலை மிகைப்படுத்தப…
-
- 4 replies
- 392 views
-
-
ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பெறதவறியுள்ளது. பெரும்பான்மையை பெறுவதற்கு 235 ஆசனங்களை கைப்பற்றவேண்டிய நிலையில் லிபரல் ஜனநாயக கட்சியும் அதன் கூட்டணிகளும் 215 ஆசனங்களை மாத்திரம் கைப்பற்றியுள்ளன. 2009ம் ஆண்டின் பின்னர் ஜப்பானில் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பெற தவறியமை இதுவே முதல் தடவை. லிபரல் ஜனநாயக கட்சி 1955 முதல் ஜப்பானை பலதடவைகள் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்து வந்துள்ளது. கடந்த சில வருடங்களாக லிபரல் ஜனநாயக கட்சி ஊழல் குற்றச்சாட்டுகள் மக்கள் ஆதரவின்மை உட்பட பல குழப்பத்தில் சிக்குண்டுள்ள நிலையிலேயே இந்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கட்சி தேர்தலில் பின்னடைவை சந…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: இரு நாட்டு உறவுகள் இனி மேம்படுமா? நிபுணர்களின் முக்கிய எச்சரிக்கை என்ன?- ஓர் அலசல் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கைகுலுக்கிக் கொண்டனர். கட்டுரை தகவல் எழுதியவர், சந்தீப் ராய் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஐந்து ஆண்டுகளாக இறுக்கமாக இருந்த இந்தியா - சீனா உறவுகள், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்துக் கொண்ட போது இளகியது. ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின்போது இந்திய…
-
- 3 replies
- 275 views
- 1 follower
-
-
சூடானின் துணை இராணுவ ஆதரவுப் படைகள், எல் கெசிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குறைந்தது 124 பேரைக் கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது அந்த நாட்டில் இடம்பெற்று வரும் 18 மாத காலப் போரின் மிகக் கொடிய சம்பவங்களில் ஒன்றாகும் என்று கருதப்படுகிறது. அத்துடன் குறித்த மாநிலத்தில் நடந்த தாக்குதல்களில் மிகப்பெரியது என்றும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். உயர் பதவியில் இருந்த Abuagla Keikal என்ற துணை இராணுவ அதிகாரி ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டின் இராணுவத்திடம் சரணடைந்ததைத் தொடர்ந்து, சரணடைந்த அதிகாரி வசித்து வந்த விவசாய கிராமத்தின் மீது இந்த பழிவாங்கும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சூடானில் இடம்பெற்று வரும் போரால் 11 ம…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
பிலிப்பைன்சில் டிராமி புயல்-65 பேர் உயிரிழப்பு! பிலிப்பைன்சில் உருவான டிராமி புயலை அடுத்து ஏற்பட்ட இயற்றை அனர்த்தங்களில் சிக்குண்டு, 65 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்சின் இசபெலா, இபுகாவோ உள்ளிட்ட பல மாகாணங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும. இங்கு பெய்த கனமழையால் பல நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழையை தொடர்ந்து படங்காஸ் மாகாணத்தில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதுடன் இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில், தற்போது அங்கு மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி காணாமற் போயுள்ளதால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை உயர்வடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு…
-
- 1 reply
- 676 views
- 1 follower
-
-
விரைவில் அமெரிக்கா வீழ்ச்சியைச் சந்திக்கும்! – எலோன் எச்சரிக்கை! விரைவில் அமெரிக்கா வீழ்ச்சியைச் சந்திக்கும் என செல்வந்தரும், டெஸ்லா நிறுவனத்தின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜோ பைடன் அரசாங்கத்தில் நாட்டின் கடன், 3000 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து எலோன் மஸ்க் மேலும் தெரிவித்துள்ளதாவது ”அமெரிக்க அரசாங்கம் செலவினங்களை தீவிரமாகக் குறைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாடு விரைவில் திவால் ஆகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 5-ஆம் திகதி நடைபெறும் பொது தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹரிசும…
-
-
- 4 replies
- 548 views
-
-
Published By: RAJEEBAN 22 NOV, 2023 | 05:14 PM அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாத செயற்பாட்டாளர் ஒருவரை கொலை செய்வதற்கான முயற்சிகளை அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இதன் பின்னணியில் இந்தியா உள்ளது என்ற கரிசனை காரணமாக அமெரிக்கா இந்தியாவை எச்சரித்துள்ளது எனவும் பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட நீதிக்கான சீக்கியர் என்ற அமைப்பின் குர்பட்வன்ட் சிங் பன்னும் என்னும் நபரே இலக்குவைக்கப்பட்டார் என பினான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்பினால் இந்த சதிமுயற்சி கைவிடப்பட்டதா அல்லது எவ்பிஐயினர் தலையிட்டு …
-
-
- 13 replies
- 1.4k views
- 1 follower
-
-
இஸ்ரேலின் பதில் தாக்குதலிற்கு தயராகிவரும் ஈரான் தனது படையினரை யுத்தமொன்றிற்கு தயாராயிருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் நியுயோர்க் டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேலின் பதில் தாக்குதலிற்கு தயாராகிவரும் ஈரான் தனது படையினரை யுத்தமொன்றிற்கு தயாராகுமாறு கேட்டுக்கொண்டுள்ள அதேவேளை காசாவிலும் லெபனானிலும் தனது சகாக்கள் அழிக்கப்பட்டதை பார்த்துள்ளதால் யுத்தமொன்றை தவிர்ப்பதற்கு முயல்கின்றது. இஸ்ரேலின் பதில் தாக்குதலை எதிர்கொள்வதற்காக பல இராணுவதிட்டங்களை வகுக்குமாறு ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா கொமேனி பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார். ஈரானின் நான்கு அதிகாரிகள் இத…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதற்கு சொந்த கட்சி எம்பிக்கள் கெடு விதித்துள்ள நிலையில், லிபரல் கட்சியை அடுத்த தேர்தலிலும் வழிநடத்தவுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளது எம்பிக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த இடைத்தேர்தலில் லிபரல் கட்சி செல்வாக்கு மிகுந்த டோரண்டோ செயிண்ட் பாலில் தோல்வியை சந்தித்தது. இதனிடையே, இந்தியாவுக்கு எதிராக கனடா பிரதமரின் குற்றச்சாட்டால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவுக்கான தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது. இந்த விவகாரங்கள் குறித்து லிபரல் கட்சியின் சில எம்பிக்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்த நிலையில், “கனடா மக்கள் ஜஸ்டின் பதவி விலக் விரும்புகிறார்கள்” என…
-
- 0 replies
- 459 views
- 1 follower
-
-
போர் நிறுத்தத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஹமாஸ். காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறும் வரை போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்க ஹமாஸ் மறுத்துள்ளது. அந்த அமைப்பின் பிரதிநிதிகள் குழுவிற்கும் எகிப்தின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று கெய்ரோவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஹமாஸ் அமைப்பின் மூத்த உறுப்பினரான ஹம்தான், காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறினால் மட்டுமே, தனது அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1405731
-
- 0 replies
- 480 views
-
-
அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்ல்சினை பார்த்து நீங்கள் எனது மன்னரில்லை என அவுஸ்திரேலிய செனெட்டர் ஒருவர் கோசமிட்டுள்ளார். அவுஸ்திரேலிய விஜயத்தின் இரண்டாவது நாளான இன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சார்ல்ஸ் உரையாற்றிய பின்னர் சுயேட்சை கட்சியின் செனெட்டர் ஒருவர் நீங்கள் எனது மன்னரில்லை என கோசம்எழுப்பியுள்ளார். அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளான அபோர்ஜினிகளை பிரதிநிதித்துவம் செய்யும் லிடியா தோர்ப்பே இவ்வாறு சத்தமிட்டு;ள்ளார். அவரை பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றியுள்ளனர். அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளை பிரிட்டன் இனப்படுகொலைக்கு உட்படுத்தியது என சத்தமிட்ட செனெட்டர் இது உங்களது நிலமில்லை நீங்கள் எங்கள் மன்னரும் …
-
-
- 13 replies
- 709 views
- 2 followers
-
-
துருக்கி அரசாங்கத்திற்கு சொந்தமான விமானநிறுவனத்தின் தலைமையகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கியின் ஏரோஸ்பேஸ் சிஸ்டத்தின் தலைமையகத்தின் மீது இருவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். பயங்கரவாத தாக்குதலே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அலியெர்லிகயா தெரிவித்துள்ளார். தாக்குதலை மேற்கொண்ட இருவரும் கொல்லப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். நபர் ஒருவர் துப்பாக்கியுடன் காணப்படுவதை சிசிடிவி காண்பித்துள்ளது. தலைநகரிலிருந்து 40கிலோமீற்றர் தொலைவில் உள்ள பகுதியில் வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் துருக்கி ஊடகங்கள் தெர…
-
- 4 replies
- 416 views
- 1 follower
-
-
மார்ச் மாதம் பால்டிமோரின் பிரான்சிஸ் ஸ்காட் கீ பிரிட்ஜை அழித்த கொள்கலன் கப்பலுக்கு சொந்தமான மற்றும் இயக்கிய இரண்டு நிறுவனங்களுடன் நீதித்துறை $100 மில்லியனுக்கும் அதிகமான தொகைக்கு ஒரு தீர்வை எட்டியுள்ளது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கிரேஸ் ஓஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் சினெர்ஜி மரைன் பிரைவேட் லிமிடெட் - இரண்டு சிங்கப்பூர் நிறுவனங்கள் - நிறுவனங்களின் செலவுக் குறைப்பு மற்றும் கப்பலின் பராமரிப்பில் கவனக்குறைவு ஆகியவை பேரழிவுகரமான மோதலுக்கு வழிவகுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சிவில் உரிமைகோரலைத் தீர்க்க கிட்டத்தட்ட $102 மில்லியன் செலுத்தும். 213 மில்லியன் பவுண்டுகள் கொண்ட சரக்குக் கப்பல் ஆற்றலை இழந்து பாலத்தில் மோதியதில் ஆறு கட்டுமானத் தொழிலாளர்கள் இறந்த ஆறு மாதங்களு…
-
- 0 replies
- 280 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி, இந்தியா செய்தியாளர் 24 அக்டோபர் 2024, 06:16 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் இரு பெரும் பணக்காரர்களான ஈலோன் மஸ்க் மற்றும் முகேஷ் அம்பானிக்கு இடையே ஒரு கடும் போட்டி நிலவி வருகிறது. இந்தியாவின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சந்தையை யார் கைப்பற்றுவது என்பதுதான் அந்தப் போட்டி. இந்தப் போட்டி ஆரம்பத்தில் இருந்தே தீவிரமாக இருந்து வந்தது. ஆனால், பிராட்பேண்ட் சேவைக்கான செயற்கைக்கோள் அலைக்கற்றை, ஏலத்தின் மூலமாக இல்லாமல் நிர்வாக ரீதியாக ஒதுக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் கடந்த வாரம் அறிவ…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
இந்தியா மற்றும் சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைனில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை 1 கோடி குறைந்துள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை ஒரு பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்தியாவில் அதன் பெரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான வளங்கள் இல்லை என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். மறுபுறம், உலகின் அனைத்து வளர்ந்த நாடுகளிலும் மக்கள் தொகை குறைவாக உள்ளதுடன், அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் நன்றாக உள்ளது. ரஷ்யாவுடன் உக்ரைன் போர் துவங்கிய பின், கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்கள் தொகை சுமார் ஒரு கோடி குறைந்துள்ளது. உக்ரைன் பிறப்பு விகிதம் ஏற்கனவே மிகக் குறைந்த அளவில் இருக்கும் நாடு. இங்கு…
-
- 0 replies
- 436 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரிமி ஹோவெல் பதவி, பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனுடனான போரில் ரஷ்யா ஆண்டுக்கு லட்சக்கணக்கான ஷெல் குண்டுகளை யுக்ரேன் ராணுவத்தின் மீது வீசுகிறது. மேலும் அங்கு பொதுமக்கள் வாழும் பகுதிகளின் மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறது. இதில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான வெடிபொருட்கள் ரஷ்யாவின் நட்பு நாடுகளால் வழங்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் அந்நாட்டின் ஆயுதங்களைத் தயாரிக்கும் திறனைத் தடுக்க முயல்கின்றன. ஆனால், அதே வேளையில் சீனா, இரான், வட கொரியா …
-
-
- 6 replies
- 827 views
- 1 follower
-
-
காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் தினமும் கை, கால் துண்டிப்பால் சுமார் 10 பேர் பாதிக்கப்படுகின்றனர். காஸாவில் 22,500க்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். சுமார் 17,000 கை, கால் துண்டிப்புகள் பதிவாகியுள்ளன. இவர்களுக்கு சிகிச்சையளிக்க போதுமான வசதிகள் இல்லை. செயற்கை கை, கால்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இங்கிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் லெபனானில் மோதல் தீவிரமடைந்துள்ளது. தாக்குதலில் இருந்து தப்பிக்க பலரும் பெய்ரூட்டில் உள்ள பள்ளிகளில் தங்கியுள்ளனர். லெபனானில் மோதல் காரணமாக சுமார் 4 லட்சம் குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு காணொளியை ப…
-
-
- 10 replies
- 909 views
- 1 follower
-
-
பங்களாதேஷின் ஜனாதிபதி முகமது ஷஹாபுதின் பதவி விலகக் கோரி, அவரது மாளிகையை போராட்டக்காரர்கள் நேற்று இரவு முற்றுகையிட்டனர். பங்களாதேஷில் மாணவர்கள் போராட்டம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில், தற்போது புதிய ஜனாதிபதிக்கு எதிராகவும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிற்பகலில் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் பதவி விலக வேண்டும் உள்பட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்திய மாணவர்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். அப்போது ஜனாதிபதியை ராஜிநாமா செய்யக் கோரி அவர்கள…
-
- 0 replies
- 641 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பாட்ரிக் ஜான்சன் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹெஸ்பொலாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் செப்டம்பர் 27ஆம் தேதி உயிரிழந்தார். அடுத்த தலைவராக வருவதற்கு வாய்ப்புகள் கொண்ட, மதத் தலைவரை மூன்று வாரங்களுக்கு முன் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. லெபனான் தலைநகரின் தெற்கில் உள்ள புறநகர்ப் பகுதிகளில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் ஹஷேம் சஃபியத்தீன் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. ஆனால், ஹெஸ்பொலா அமைப்பு இதுவரை ஹஷேம் சஃபியத்தீனின் இறப…
-
- 0 replies
- 522 views
- 1 follower
-
-
டூம்ஸ்டே பனிப்பாறை: உலகின் மிக ஆபத்தான இடத்திற்குப் பயணித்த பெண் எழுத்தாளர் எலிசபெத் ரஷ் பட மூலாதாரம்,ELIZABETH RUSH கட்டுரை தகவல் எழுதியவர், எலியட் ஸ்டெய்ன் பதவி, பிபிசி செய்திகள் 49 நிமிடங்களுக்கு முன்னர் புலிட்சர் பரிசுக்கான இறுதிப் போட்டியாளர்களில் ஒருவரான எலிசபெத் ரஷ் தனது சமீபத்திய புத்தகமான ‘தி குயிக்கனிங்’-இல் (The Quickening), உலகின் மிக முக்கியமான, ஆனால் மனிதர்கள் அதிகம் செல்லாத இடங்களில் ஒன்றுக்கு தான் மேற்கொண்ட அரிய பயணத்தை விவரித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டில், 57 விஞ்ஞானிகளும் அவர்களது குழுவினரும், அன்டார்டிகாவின் மிக தொலைதூரப் பகுதிகளுக்குத் தங்கள் 54 நாள் பயணத்தை மேற்கொண்ட…
-
- 0 replies
- 493 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், நேதன் வில்லியம்ஸ் பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு ரஷ்யச் சிறுமி, ரஷ்யா யுக்ரேன் மீது போர் தொடுப்பதை எதிர்க்கும், சமாதானச் செய்தியுடனான ஒரு ஓவியத்தை வரைந்தார். அதற்கு அவரது தந்தை சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் உலகளாவிய செய்தியானது. இப்போது அந்தத் தந்தை, ‘தண்டனை காலனி’ என்றழைக்கப்படும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். அலெக்ஸி மொஸ்கலேவ் என்ற அந்த நபரின் மகள் மாஷா வரைந்த அந்த ஓவியத்தில் ‘போர் வேண்டாம்’ என்றும் ‘யுக்ரேன் புகழ் ஓங்குக’ என்றும் எழுதப்பட்டிருந்தது. இந்த ஓவியத்தைக் குறித்து 2022-ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. …
-
- 0 replies
- 389 views
- 1 follower
-