Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் மங்கள சமரவீரவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அறிய வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் இருவர் அரசாங்கத்துடன் முரண்பட்டிருக்கும் சூழ்நிலையில் இவர்களுடன் இணைந்திருந்து பின்னர் ஜனாதிபதியுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்ட அநுரா பண்டாரநாயக்கவின் 58 ஆவது பிறந்ததினக் கொண்டாட்டம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (15 ஆம் திகதி) கொழும்பிலுள்ள விசும்பாயாவில் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு புதன்கிழமை நள்ளிரவு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதியும் அநுராவின் சகோதரியுமான சந்திரிகா குமாரதுங்கவும் விசும்பாயாவிற்கு சென்று சகோதரனுக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன…

  2. பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேற் ஆகியோருக்கு கனடாவின் திருமணப் பரிசு பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேற் மிடில்ரன் ஆகியோருக்கான கனடாவின் திருமண நாள் பரிசாக கனேடியக் கரையோரத் துணைப் படையினருக்கு 50,000 டொலர்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. தமக்கான திருமணப் பரிசாக கனடா வழங்கும் தொகையினை யாருக்கு வழங்குவது என இந்தப் புதுமணத் தம்பதியினரே தீர்மானித்தனராம். அதற்கமைய இந்தப் பரிசுத்தொகை கனேடிய கரையோரத் துணைப் படையினருக்கு வழங்கப்படுகிறது. அனைத்துக் கனேடியர்களதும் சார்பாக இந்தப் பரிசுத்தொகை வழங்கப்படும் என இன்று விடுத்திருக்கும் செய்திக்குறிப்பில் கனேடியப் பிரதமர் ஸ்ரிபன் காப்பர் அறிவித்திருக்கிறார். கனேடியக் கரையோரத் துணைப் பட…

    • 0 replies
    • 654 views
  3. புதுடெல்லி, 2014 பொதுத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை தழுவியுள்ள நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியானது நாளை 131-வது துவக்க தினத்தை கொண்டாடுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக திகழ்ந்து வந்த காங்கிரஸ் கட்சி கடந்த 1885-ஆம் ஆண்டு டிசம்பர் 28-நாள் துவங்கப்பட்டது. இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது முதல் பல்வேறு பாரம்பரியம் காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இந்நிலையில், நாளை 131-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பது, கட்சியை அடிமட்டத்திலிருந்து மீண்டும் வலுப்படுத்துவது உள்ளிட்ட தொலைநோக்கு திட்டங்களில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியி்ன் 130-வது ஆண்டையொட்டி நாளை தலைநகர் டெல்லியி…

  4. 'அரசியல் அழுத்தத்துக்கு பணியப்போவதில்லை': டிரம்புக்கு மேலும் ஒரு சவால் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அட்டார்னி ஜெனரலான (அரசு முதன்மை வழக்கறிஞர்) ஜெஃப் செஷன்ஸ், அதிபர் டொனல்ட் டிரம்பின் அண்மைய கருத்து ரீதியான தாக்குதலுக்கு பதிலளித்துள்ளார். படத்தின் காப்புரிமைAFP அரசியல் அழுத்தங்களுக்கு நீதித்துறை அடிபணியாது என்று தான் அளித்துள்ள பதிலில் ஜெஃப் செஷன்ஸ்…

  5. போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்று தெம்பாக இருக்கிறார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார். எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்ற அவரை சந்தித்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அமைதியாக பதில் அளித்தார். பண பலம், படைபலம் ஆகியவற்றை மீறி இரண்டு தொகுதிகளில் எப்படி வெற்றி பெற்றீர்கள்? ‘‘ 1977-ம் ஆண்டில் இருந்து கருப்பசாமிபாண்டியன் அரசியலில் இருக்கிறார். அதிலும் ஆளும் கட்சி வேட்பாளர் என்றால் சொல்லவே வேண்டாம். அ.தி.மு.க.வின் கூ ட்டணி பலம், நாங்கள் வகுத்த வியூகங்கள், ‘கரப்ட்’ ஆகிப்போன தி.மு.க. ஆட்சியை மாற்றியே ஆகவேண்டும் என்கிற உணர்வு, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் க டுமையான உழைப்பு தென்காசியிலும், நாங்குனேரியிலும் வெற்றி பெறச் செய்திருக்கிறது.’’ தி.மு.…

  6. இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு எதிராக பிரான்ஸ் அரசின் புதிய நடவடிக்கைகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு எதிராக பிரான்சின் புதிய நடவடிக்கைகள்பிரான்ஸில், உள்நாட்டிலேயே உருவான இஸ்லாமியத் தீவிரவாதத்தை எதிர்கொள்ள புதிய , பரந்துபட்ட அதிகாரங்கள் கொண்ட பயங்கரவாதத்துக்கு எதிர் நடவடிக்கைகளை, பிரெஞ்சு அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில், 2,500க்கும் மேற்பட்ட உளவு ஏஜெண்டுகள் ஆட்சேர்க்கப்படுவார்கள் என்று பிரதமர் மானுவெல் வேல்ஸ் கூறினார். பாதுகாப்புப் படைகளுக்கு மேலும் நல்லமுறையில் ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும், இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்ட சந்தேக நபர்கள் குறித்த மேலும் விவரமான தரவுகள் கொண்ட தகவல் தளம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் அவர் கூறின…

  7. ரிசர்வ் செய்தும் பயனில்லை: ரயிலில் சீட் இல்லாமல் நெல்லை மாணவிகள் பரிதவிப்பு திருநெல்வேலி: ரிசர்வ் செய்தும் பயனில்லை ரயிலில் சீட் இல்லாமல் நெல்லை மாணவிகள் 150 பேர் கடும் சிரமப்பட்டனர். நெல்லை ரஹ்மத்நகரில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றனர். பின்னர் நேற்று இரவில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நெல்லை வர டிக்கெட் ரிசர்வ் செய்தனர். கொச்சியில் ரயிலில் ஏறியதும் ரிசர்வ் செய்யப்பட்ட பெட்டிகளில் கேரள பயணிகள் அமர்ந்து கொண்டு இடம் கொடுக்க மறுத்து விட்டனர். இது குறித்து டி. டி. ஆரிடம் புகார் தெரிவிக்கப்பட்டும் பயனில்லை. மாணவ, மாணவிகள் அமர இடம் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாயினர். தமிழக பயணிகள் என்றால் கேரள பயணிகள் அவ்வப்போது இப்படி இடையூறு ச…

  8. சட்டவிரோத பெற்றோல் விற்பனையின்போது நிகழ்ந்த அசம்பாவிதம் ஒன்று பெரும் தீ விபத்தாக மாறியது. இதில் 2 குழந்தைகள் உட்பட 35 பேர் பலியாகி உள்ளனர். ஆபிரிக்க நாடான பெனினில் இந்த சோகம் நிகழ்ந்திருக்கிறது. மேற்கு ஆபிரிக்க தேசங்களின் ஒன்று பெனின். நைஜீரியாவின் அண்டை தேசமான பெனினில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத தீ விபத்தில் 35 பேர் பலியாகி இருக்கின்றனர். தீயில் சிக்கிய பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. பெனின் நாட்டில் பெற்றோல் உள்ளிட்ட எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதோடு அங்கே விலையும் அதிகம். எனவே பெற்றோல்ல் மலிவாகவும், தாராளமாகவும் கிடைக்கும் எல்லை தேசமான நைஜீரியாவிலிருந்து சட்ட விரோதமாக ப…

  9. ஜகார்தா: இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட பூகம்பத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் சம்பவார் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.5 ஆக பதிவானது. வடக்கு சுமத்ரா தீவிலும் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை வி்டப்பட்டது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். இருப்பினும் பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் நேற்று நள்ளிரவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 என பதிவானது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    • 0 replies
    • 682 views
  10. சீனாவிற்கு எதிராக ஜப்பானை களமிறக்கும் அமெரிக்கா.. ஆசியாவில் உருவாகும் புது எதிரிகள்.. பதற்றம்! மெரிக்காவுடன் ஜப்பான் பாதுகாப்பு துறை செய்ய உள்ள போர் விமான ஒப்பந்தம் சீனாவை அச்சமடைய வைத்து இருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜப்பான் அமைதி பாதைக்கு திரும்பியது. லிட்டில் பாய், பேட் பாய் என்ற இரண்டு அணு குண்டுகளை தாங்கி எழுந்த ஜப்பான் வேகமாக உலகின் நம்பர் 2 நாடாக மாறியது. இப்போது ஜப்பானின் வளர்ச்சி குறைந்து 3வது இடத்திற்கு சென்றுள்ளது. மாறாக சீனா ஆசியாவின் வலுவான நாடாக மாறியுள்ளது.சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் வெளிப்படையாக பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் சீனாவின் தெற்கு கடல் பகுதியில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த…

  11. இஸ்லாமாபாத்: கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் பின்லேடனின் குடும்பத்தை சீரழித்ததற்காக பாகிஸ்தான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று லேடனின் மைத்துனர் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்திய அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த மே மாதம் 2-ம் தேதி அப்போத்தாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு பாதுகாப்பு வளையமாக இருந்த அவரது மனைவி அமால் அல் சதா (28) மற்றும் 5 குழந்தைகளை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த 6 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அமால் அல் சதாவின் சகோதரர் சகாரியா அல் சதா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, எனது சகோதரி பின் லேடனின் மனைவிய…

  12. யு.எஸ்.-வாசிங்டன் நெடுஞ்சாலையில் இருந்து விழுந்த கான்கிரீட் பலகையால் இளம் தம்பதியர் மற்றும் அவர்களது எட்டுமாத குழந்தை மூவரும் கொல்லப்பட்ட துயர சம்பவம் நடந்துள்ளது. இவர்கள் அண்மையில் தங்கள் ஐந்தாவது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இவர்கள் இருவரும் கிறிஸ்தவ சமய இளைஞர்கள் பாதிரியார்களாவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜோஷ் மற்றும் வனெஸ்சா ஆகிய இருவரும் தங்கள் 20-ன் மத்திய வயதுடையவர்கள். தங்கள் பிக்அப் டிரக்கில் சென்றுகொண்டிருந்த போது ராக்கோமா பகுதியில் பொனி லேக் வழியாக பயணித்துக் கொண்டிருந்த போது பாரிய கான்கிரீட் பலகை டிரக் மீது விழுந்து இவர்களை நெரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்களது எட்டுமாத மகன் ஹட்சனும் பின் இருக்கையில் இருந்துள்ளான். மூவரும் கொல்லப்பட்டனர். - S…

    • 0 replies
    • 228 views
  13. வங்கக் கடலில் இந்தியா - அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் கூட்டுப் பயிற்சி. வங்கக் கடலில் இந்தியா,அமெரிக்கா,ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கப்பற்படைகள் கூட்டுப் பயிற்சி மேற்கொள்வதற்கு குறித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக் கடலில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கப்பற்படைகள் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப் போவதாக வந்துள்ள செய்தி குறித்து எமது அரசியல் தலைமைக் குழு தனது கவலையைத் தெரிவிக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே உ…

  14. காசாப் போர் ஏற்படுத்தியத் தாக்கம் கடந்த ஆண்டு காசா யுத்தத்தில் இஸ்ரேலிய இராணுவத்தினர் நடந்து கொண்டவிதம் குறித்து புதிய கேள்விகள் எழுந்துள்ளன. இஸ்ரேலிய செயற்பாட்டாளர்கள் குழுவொன்று அறுபதுக்கும் அதிகமான இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய்களிடமிருந்து பெற்ற வாக்குமூலங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஒன்றிலேயே இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அந்த மோதலில் பங்கேற்ற இஸ்ரேல் இராணுவத்தினரிடமிருந்து, எட்டு மாதங்களாக சேகரிக்கப்பட்ட சான்றுகளை வைத்து breaking the silence எனும் அந்த செயல்பாட்டுக் குழு இந்த அறிக்கையை தயாரித்துள்ளது. இந்த காசா யுத்தம் குறித்து முன்பு இஸ்ரேலிய அரசு தெரிவித்திருந்த அதிகாரப்பூர்வ கருத்துகளுக்கு மாறுபட்டதாக இந்த அறிக்கை இருக்கிறது. காசா போரின்போது…

    • 0 replies
    • 241 views
  15. சவுதி மன்னர் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவுள்ளார் சவுதி மன்னர்கூட பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். பெண்களை ஒடுக்குமுறைக்குள்ளேயே இதுவரை காலமும் வைத்திருந்த சவுதி மன்னர் எதிர்காலத்தில் நடக்கவுள்ள சவுதி நகரசபை தேர்தலில் பெண்கள் போட்டியிடலாம் என்று தெரிவித்தார். மன்னரின் இந்த அறிவிப்பு உலக நாடுகளில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. சவுதியில் கடந்த வியாழன் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் 285 நகர சபைகளுக்கு 5000 ஆண்கள் போட்டி போட்டனர். இவர்கள் அரைப்பங்கு பதவிகளை பூர்த்தி செய்வார்கள், ஏனைய அரைப்பங்கு உறுப்பினர்கள் சவுதி மன்னரால் நியமனம் செய்யப்படுவார்கள். இந்தத் தேர்தலில் பெண்கள் பின்தள்ளப்பட்ட காரணத்தால் 60 கல்வியியலாளர் தேர்தலில் இருந்து விலத…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் லோவென் ஜெருசலேமிலிருந்து மற்றும் சான் செடோன் பதவி, பிபிசி 21 ஜனவரி 2024 பாலத்தீன தனி நாட்டை உருவாக்கும் யோசனையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் நிராகரித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசிய சில மணிநேரங்களுக்குப் பிறகு அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தனி பாலத்தீன நாட்டை உருவாக்கும் யோசனையை பெஞ்சமின் ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியம் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுட்டிக்காட்டியிருந்தார். நெதன்யாகுவின் இக்கருத்துகள் அமெரிக்காவுடனான பிளவை ஆழப்படுத்துவதாகத் தோன்றுகிறது. பாலத்தீன பிரச்னையில் இரு ந…

  17. தமிழகத்தில் அதிரடி நடவடிக்கை 61பிரபல கடைகளிற்கு சீல் -பரபரப்பு சென்னை தி.நகரில் உள்ள 61 சிறிய மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்து மூடி விட்டனர். இதனால் இந்த நிறுவனங்களில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் பெரும் கவலையுடன் கடைகளுக்கு முன்பு கூடி நிற்கின்றனர். சென்னை தி.நகரில் உஸ்மான் சாலையிலும், ரங்கநாதன் தெருவிலும் பெருமளவில் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இவற்றில் முக்கியமானவை. இன்று காலை தி.நகருக்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் த…

  18. http://www.esnips.com/doc/20777bde-2374-44...3/trbalu_speech

    • 0 replies
    • 1.4k views
  19. பல்பொருள் சில்லறை வர்த்தகம்: நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு சில்லறை வர்த்தகத்தில், பல்வேறு நிறுவனத் தயாரிப்புக்களை விற்பனை செய்ய, அன்னிய நேரடி முதலீட்டில் 51 சதத்தை அனுமதிக்க இந்திய அமைச்சரவை இன்றிரவு முடிவு செய்திருப்பதாக, அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது. அதன் மூலம், வால்மார்ட், டெஸ்கோ, கேர்ஃபோர் உள்ளிட்ட பன்னாட்டு வணிக நிறுவனங்கள் இந்தியாவின் பெரும் நுகர்வோர் சந்தையில் நுழைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை மட்டும் விற்பனை செய்ய, அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 51 சதமாக உள்ளது. அது இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் 100 சதமாக உயர்த்த ஒப்புதல் வ…

    • 3 replies
    • 1.3k views
  20. பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா... தன்னைத் தானே சுட்டுக்கொண்டார் பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா தன்னைத் தானே சுட்டுக்கொண்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலையில் குண்டு பாய்ந்துள்ள நிலையில் தலைநகர் லீமாவிலுள்ள காசிமிரோ உல்லோவா மருத்துவமனையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரேசிலியக் கட்டுமான நிறுவனமான Odebrecht இடமிருந்து கையூட்டுப்பெற்றதாக அலன் கார்சியா குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். குறித்த குற்றச்சாட்டுத் தொடர்பாக அவரைக் கைதுசெய்ய பொலிஸார் சென்றவேளையிலேயே அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா குறித்த இந்தக…

    • 1 reply
    • 590 views
  21. ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் கிம்யொங் உன் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் -உன் தலைமையிலான குழு இந்த வாரம் ரஷ்யாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. ரஷ்யாவின் விளாடிவோஸ்டக் நகருக்கு செல்லும் மேற்படி குழு அங்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இந்த சந்திப்பு புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற இருக்கிறது. 8 ஆண்டுகளுக்கு முன்பு வட கொரிய ஜனாதிபதியாக இருந்த கிம் ஜோங் இல், அப்போது ரஷ்ய ஜனாதிபதியாக இருந்த திமித்ரி மெட்வதேவ் ஆகியோர் முதன் முதலாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதன் பிறகு இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES 30 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்ரேலியா அருகேயுள்ள பப்புவா நியூ கினி நாட்டில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சுமார் 670 பேர் பூமிக்கடியில் புதையுண்டு விட்டதாக ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹான் அக்டோப்ராக் கூறுகையில், "நாட்டின் எங்கா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் தாக்கம் முதலில் நினைத்ததை விட அதிகமாக இருந்தது." என்றார். "இப்போது 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார். தென்மேற்கு பசிபிக்கில் உள்ள பப்புவா நியூ கினி தீவுகளின் வடக்கே எங்கா பிராந…

  23. பிரித்தானியாவில் இளையவர்கள் மத்தியில் வேகமாக பாலியல் நோய்கள் பெருகி வருவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக 16- 24 வயதுக்கு உட்பட்டவர்களில் இதன் தாக்கம் பாரிய அளவில் அதிகரித்திருக்கிறது. உறுதியான சுகாதார நடைமுறைகளுக்கும் மத்தியில் பாலியல் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவது பிரித்தானியாவுக்கு கவலையளிக்கும் விடயமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டில் சுமார் 3 76 508 ( கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேர்) பாலியல் நோய்களின் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளனர். சுமார் 73,000 பேர் எயிட்சுக்கான எச் ஐ வியுடன் வாழ்கின்றனர். குறிப்பாக ஆண் ஒருபால் சேர்க்கை உள்ளவர்கள் மத்தியில் எயிட்ஸ் நோய் அதிகம் இனங்காணப்பட்டுள்ளது. மேலும் syphilis, gonorrhoea, chlamydia மற்றும் பிற பால்வினை நோய்களின் த…

  24. ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் ஆபத்தான பல விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அமெரிக்காவும் இஸ்ரேலும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ரஸ்யா எச்சரித்துள்ளது.அமெரிக்கா, இஸ்ரேல், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற போதும், அதையும் மீறி ஈரான் அணுகுண்டு தயாரித்து வருகிறது. இதனால் ஈரானை அமெரிக்கா தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ஈரானின் நிரந்தர எதிரி நாடான இஸ்ரேலும் தாக்குதல் நடத்த சந்தர்ப்பத்தை பார்த்து காத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ரஸ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜிலாரோ, "அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானை தாக்கலாம் என்று நினைத்தால் இது பெரும் தவறாக அமைந்து விடும். அது பேரழிவுக்க…

  25. கர்நாடக சட்டசபையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த 3 அமைச்சர்கள்- பிரச்சனையானதால் ராஜினாமா! பெங்களூர்: கர்நாடக சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் செல்போனில் 3 பாஜக அமைச்சர்கள் ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக சட்டசபை கூட்டம் விதான சௌதாவில் நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது தூர்தர்ஷன் மற்றும் பல்வேறு தனியார் டிவி சேனல்களும் சபை நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தன. அப்போது, சட்டசபையில் முன் வரிசையில் அமர்ந்திருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் லக்ஷ்மன் சாவாதி தனது செல்போனில் ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். இதை தனியார் சேனலின் கேமராமேன் அப்படியே 'ஷூம்' செய்ய, ஒரு கருப்பு சேலை அணிந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.