உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26857 topics in this forum
-
500 க்கும் அதிகமானோரை ஏற்றிச் சென்ற அகதிகள் படகு கவிழ்ந்தது இத்தாலி நோக்கி வந்த படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 562 பேரை இத்தாலி கடற்படையினர் மீட்டனர். இதில் 7 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். அரபு நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போரால் அந்த நாட்டு மக்கள் இலட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் படகுகளில் பயணம் செய்து மத்திய தரை கடலை தாண்டி ஐரோப்பிய நாடுகளுக்குள் ஊடுருவி வருகிறார்கள். இந்த நிலையில் இத்தாலி அருகே மத்திய தரைக்கடலில் உள்ள சிசிலி வளைகுடா பகுதியில் 550க்கும் மேற்பட்டோர் ஒரு சிறிய படகில் இத்தாலி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். இந்த படகு திடீரென ஒரு பக்கமாக சாய்து மூழ்கும் நிலையில் தத்தளித்துக் கொண்டிரு…
-
- 0 replies
- 432 views
-
-
500 தீவிரவாதிகள் அடுத்தடுத்து தூக்கிலிடப்படுவர்: பாகிஸ்தான் அரசு அறிவிப்பு. இஸ்லாமாபாத்: தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் 500 பேர் இனிவரும் 2 அல்லது 3 வாரங்களில் தூக்கிலிடப்படுவர் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: தீவிரவாதிகளின் கருணை மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுவிட்ட்டன. இதனால் அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் மொத்தம் 500 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட உள்ளனர். இப்படி தூக்கிலிடுவதால் தீவிரவாதிகள் பதில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தப் போரில் நிச்சயம் நாங்கள் வெல்வோம். இவ்வாறு நிசார் கூறினார். நன்றி தற்ஸ் தமிழ்.
-
- 4 replies
- 637 views
-
-
ஸ்பெயினைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் பீட்ரிஸ் ஃப்ளாமினி. கொரோனா தொற்று காரணமாக உலகமே வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தபோது, இவர் தனியாக ஒரு குகைக்குள் வாழ வேண்டும் என்று முடிவெடுத்தார். இவரது எண்ணத்தை அறிந்த ஆராய்ச்சியாளர்கள், வெளியுலகத் தொடர்பின்றி ஒரு மனிதரால் வாழ முடிமா, அப்படி வாழும்போது மன நிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதை எல்லாம் அறிந்துகொள்ள முடிவெடுத்தனர். 48 வயது ஃப்ளாமினி ஸ்பெயினில் கிரானடா பகுதியில் உள்ள குகைக்குச் சென்றார். 70 மீற்றர் (230 அடி) ஆழமுள்ள குகைக்குள் 2021 நவம்பர் மாதம் நுழைந்தார். குகையின் வாயிலுக்கு வேலி போடப்பட்டது. 500 நாள்களுக்குப் பிறகு 2023 ஏப்ரலில் ஃப்ளாமினி வெளியே வந்தபோது, பெருந்தொற்று காலம் முடிந்து உலகம் இயல்பு நிலைக்குத் தி…
-
- 0 replies
- 602 views
- 1 follower
-
-
500 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்பை எட்டிய முதல் நபராக எலோன் மஸ்க்! குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையாக, வரலாற்றில் 500 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிகர மதிப்பினை விஞ்ஞசிய தனிநபராக டெஸ்லாவின் (TSLA.O) தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon Musk) உருவெடுத்துள்ளார். இந்த அசாதாரண சாதனை ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்கள் குறியீட்டின் தரவுகளால் உறுதிப்படுத்தப்பட்டது. இது நிதித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. 2023 ஒக்டோபர் நிலவரப்படி, மஸ்க்கின் செல்வம் முதன்மையாக டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸில் அவர் வைத்திருக்கும் உரிமைப் பங்குகளிலிருந்து வருகிறது. உலகின் மிகப் பெரிய செல்வந்தராக மாறுவதற்கான எலோன் மஸ்க்கின் பயணம் அசாதாரணமானது. 1971 ஜூன் 28 அன்று தென்னாப்பி…
-
- 0 replies
- 120 views
-
-
500 பில்லியன் டொலர் மதிப்பிலான... சேதத்தை, ரஷ்யா விளைவித்துள்ளது – உக்ரைன் ரஷ்யாவின்படையெலுப்பை தொடர்ந்து தாம் 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான சேதத்தை சந்தித்துள்ளதாக உக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் போருக்குப் பின்னர் உக்ரைனை மீட்டெடுப்பதற்கு ரஷ்யா பணம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனும் நட்பு நாடுகளிடம் இருந்து நிதி கிடைக்கும் என்றும் வெளிநாட்டில் ரஷ்யாவின் சொத்துக்களை கைப்பற்றுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். கியூவ் நகருக்கு விஜயம் செய்த செக் குடியரசு, போலந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய மூன்று அண்டை நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை நான்காவது சுற்று சமாதானப் பேச்சுவார்த…
-
- 0 replies
- 207 views
-
-
500 மில்லியன் பயணங்களை மேற்கொண்ட வெர்ஜின் ரயில்களின் சேவை முடிவுக்கு வந்தது பிரித்தானியாவில் மிக நீண்ட காலமாக இயங்கிவந்த வெர்ஜின் ரயில்களின் சேவை முடிவுக்கு வந்துள்ளது. 1997 ஆம் ஆண்டில் இருந்து 22 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள வந்த குறித்த ரயில் நேற்று (சனிக்கிழமை) சேவையை நிறுத்திக் கொண்டது. எனினும், இந்த வெர்ஜின் ரயில்களின் சேவைகள் அவந்தி மேற்கு கடற்கரைக்கு மாற்றப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேர் ரிச்சார்ட் பிரான்சனின் வெர்ஜின் குழுமம் மற்றும் ஸ்ரேஜ்கோச் (Sir Richard Branson’s Virgin Group and Stagecoach) ஆகியோருக்குச் சொந்தமான குறித்த வெர்ஜின் ரயில்கள் கிட்டத்தட்ட 500 மில்லியன் பயணங்களை மேற்கொண்டுள்ளன. இதன் இறுதிச் சேவை லண்டன்…
-
- 0 replies
- 361 views
-
-
சுமார் 5000 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து நுரையீரல் கட்டி அகற்றும் அறுவை சிகிச்சையை சீனாவைச் (China) சேர்ந்த வைத்தியர் ஒருவர் ரோபோ இயந்திரம் மூலம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். சீன வைத்தியசாலை ஒன்றின் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான லூவோ கிங்குவேன் (Luo Qingquan) என்ற வைத்தியரே தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அலுவலகத்தில் இருந்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். கடந்த ஜூலை 13ஆம் திகதி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதுடன் அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5ஜி (5G) அறுவை சிகிச்சை ரோபோ இயந்திரத்தை பயன்படுத்தி ரிமோட் மூலம் சிகிச்சை செய்து நுரையீரல் கட்டியை வைத்தியர் அகற்றியுள்ளார். அறுவை சிகிச்சை நோயாளி சீனாவில் உள்ள காஷ்கரில் சிக…
-
-
- 12 replies
- 1k views
- 1 follower
-
-
500களை கடந்து நிற்கும் UKயின் மரணங்களும் -200களில் குறைந்து நிற்கும் ஐரோப்பிய மரணங்களும்… கடந்த 24 மணித்தியாலத்தில் பிரிட்டனில் +539 ஏற்பட்டுள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது. கடந்த வார இறுதியில் இருந்து குறைவை நோக்கி கீழிறங்கிய பிரிட்டனின் மரணங்கள், மீண்டும் 500 களைக் கடந்த எண்ணிக்கையை தக்கவைத்துள்ளமை புள்ளிவிபரங்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரிட்டனின் மொத்த மரணங்களும், அமெரிக்காவின் 76,290 என்ற எண்ணிக்கைக்கு அடுத்த நிலையில், 30,615 ஆக உயர்ந்துள்ளன. புதிதாக அடையாளம் காணப்பட்ட +5,614 தொற்றாளர்களுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206,715 உயர்ந்துள்ளது. இதேவேளை, பிரான்ஸ…
-
- 0 replies
- 296 views
-
-
501,472’ பேரை காவு கொண்டது கொரோனா! – கோடியைத் தாண்டியது தொற்று! சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, பிரேஷில், ரஷ்யா, ஸ்பைன், பிரித்தானியா மற்றும் இத்தாலி எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை அழித்து வருகின்றது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இன்று (28) மதியம் 1 மணி வரை 213 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் இரு கப்பல்கள் அடங்கலாக (இளவரசி மற்றும் எம்எஸ் ஷான்டம் கப்பல்) உலக நாடுகளில் 10,090,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களில் 501,472 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5,466,895 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இப்போது வரை 4,122,080 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் (Active Case) சி…
-
- 0 replies
- 363 views
-
-
தனது வலது கையில் உள்ள விரல்களை அசைத்துப் பார்க்க முடிவதைப் பார்த்து வாயில் சிரிப்புடன் கண்களில் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் மார்க் காஹில் பேசுகிறார். 51 வயதான அவருக்கு ஒருவாரத்துக்கு முன்னர்தான் கை-மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனில் முதல் தடவையாக அறுவை சிகிச்சை மூலம் புதிதாக மனிதக் கையொன்றைப் பொருத்திக்கொண்டுள்ள முதல் நபர் இவர்தான். பிரிட்டனில் லீட்ஸ் மருத்துவமனையில் எட்டு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் போதுதான் இவரது பழைய கை அகற்றப்பட்டு புதிதாக கொடையாளி ஒருவர் வழங்கியிருந்த கையொன்று அவருக்குப் பொருத்தப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது காலிலும் விரல்களிலும் மூட்டுவாதம் ஏற்பட்டது. பின்னர் அதுவே 5 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது வலது கைக்…
-
- 0 replies
- 437 views
-
-
14 வயது சிறுமி Annaleise Carr 52 கிலோ மீற்றர் இடைத் தூரமுள்ள நயாகரா ஏரியை இன்று பின்னேரம் வெற்றிகரமாகக் கடந்து இளம் வயதில் இந்த ஏரியைக் கடந்தவர்களில் முதலாவது சிறுமி என்ற சாதனையை நிலை நாட்டியுள்ளார். இவர் புற்றுநோயிற்குள்ளான சிறுவர்களின் camping இற்கு நிதி சேகரிக்கவே இந்த சாதனையை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விபரங்கள்: http://www.thestar.com/news/canada/article/1243772--lake-ontario-swimmer-reaches-50-000-donation-goal-keeps-swimming
-
- 2 replies
- 522 views
-
-
கனடா எல்லை பகுதி சேவைகள் அதிகாரிகள் வின்ஸ்டர் ஒன்ராறியோவின் அம்பாசடர் பாலத்தில் வைத்து பாரிய கொக்கெயின் பறிமுதல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு வர்த்தக டிரக் மற்றும் டிரெய்லர் இரண்டாம் நிலை சோதனைக்கு உள்ளாக்கப் பட்ட போது சந்தேகத்திற்கிடமான 52கட்டிகள் கொக்கெயினை CBSA அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.இவை ஒரு வகை கம்பளித்துணியிலான பைகள் மற்றும் வேறொரு பைக்குள்ளும் வைத்து டிரக்கின் சேமிப்பு பகுதிக்குள் வைக்கப்பட்டிருந்துள்ளது.சந்தேகத்திற்கிடமான இந்த கொக்கெயினை பறிமுதல் செய்ததுடன் 26வயதுடைய ரொறொன்ரோவை சேர்ந்த லாவ்றிம் மெஹ்மெடி என்பவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canada/47045.html#sthash.wAebdk6v.dpuf
-
- 0 replies
- 462 views
-
-
53 பேருடன் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் மாயம்: ஆஸி- சிங்கப்பூரின் உதவியை நாடும் இந்தோனேசியா! இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் காணாமல் போயுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நீர்மூழ்கி கப்பல் நேற்று (புதன்கிழமை) பாலி தீவுக்கு வடக்கே பயிற்சியை மேற்கொண்டிருந்த போது, தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கே.ஆர்.ஐ.நங்கலா-402 கப்பலைக் கண்டுபிடிக்க போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் இராணுவத் தலைவர் தெரிவித்தார். அத்துடன், தேடலுக்கு உதவுமாறு அவுஸ்ரேலியா மற்றும் சிங்கப்பூருக்கு, அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். எனினும், நாடுகள் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்ப…
-
- 4 replies
- 1.1k views
-
-
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைவது மலையேற்ற வீரர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மலையேற்ற சீசனில் ஏராளமான வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகின்றனர். அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கென வழிகாட்டிகள் உள்ளனர். அவர்களும் வீரர்களுடன் சிகரத்தில் ஏறி இறங்குகின்றனர். அவ்வகையில் இந்த ஆண்டு நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டி கமி ரீட்டா (வயது 53), மலையேற்ற வீரர்களுடன் நேற்று சிகரத்தை அடைந்தார். இந்த வாரத்தில் மட்டும் இரண்டு முறை அவர் சிகரத்தை அடைந்துள்ளார். அத்துடன் தன் வாழ்நாளில் 28 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி புதிய சாதனை படைத்துள்ளார். அவர் பாரம்பரியமான தென்கிழக்கு மலைமுகட்டு பாதை வழியாக சென்று 8,849 உயரம் கொண்ட சிகரத்தை வெற்றிகரமாக அட…
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
கனடாவில் உள்ள Scarborough பள்ளி ஒன்றில் பணிபுரிந்த 53 வயது ஆசிரியர் ஒருவர் மீது சுமார் 30 மாணவ, மாணவிகள் பாலியல் தொந்தரவு உள்பட பல புகார்களை அடுக்கியதால், ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டர். Scarborough நகரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்து வரும் Christian Kpodjie என்ற 53 வயது ஆசிரியர் ஒருவர் மீது சுமார் 30 மாணவர்கள் ஒன்று சேர்ந்து இன்று Toronto District School Board அதிகாரிகளிடம் அளித்த புகாரில், ஆசிரியர் தங்களை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியதாக வந்த புகாரால், பெரும் பதட்டம் ஏற்பட்டது. உடனே காவல்துறையினரை தொடர்பு கொண்ட Toronto District School Board மாணவகளின் புகார் குறித்து விளக்கமளித்தனர். உடனே விசாரணையில் இறங்கிய போலீஸார்,அதிரடியாக ஆசிரியரை கைது …
-
- 1 reply
- 992 views
-
-
5300 வயது பனிமனிதன் பேசுவது தமிழா?! ஆஸ்திரியா-இத்தாலி நாட்டின் எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் ஆல்ப்ஸ் மலையில் உள்ளது டைசென்ஜாக் என்கிற சிகரம். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாவாசிகள் உலகையே அசத்தப்போகும் ஒன்றை கண்டுபிடித்தனர். அது 5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதன் ஒருவனின் உடல். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? அந்த உடல் 90% சதவிகிதம் அப்படியே இருந்ததுதான். அதுமட்டுமல்ல அந்த மனிதன் பயன் படுத்திய பொருட்களும் அப்படியே பனியில் உறைந்து போயிருந்தது. மனித அறிவியல் வரலாற்றில் இப்படி முழுமையாக சிதிலமின்றி கிடைத்த மம்மி இதுதான். கடல்மட்டத்தில் இருந்து 11000 அடி உயரத்…
-
- 5 replies
- 1.1k views
-
-
54 ஆண்டுகளாக சீன வீரரை சீனாவுக்கு அனுப்பாத இந்திய அரசு! 'தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதால் சிறைப்பிடிப்பு' என்பது நமக்கு ரொம்பவே பழக்கப்பட்ட சர்வ சாதாரணமான செய்தியாகிவிட்டது. சில நேரங்களில் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்ற விஷயத்தையும் சின்னப் பெட்டிச் செய்தியாக கடந்துசெல்கிறோம். ஆனால், எல்லை தாண்டிய குற்றத்துக்கு விடுதலை, அவ்வளவு எளிதாக அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை. வழிதவறி இந்திய எல்லைக்குள் வந்த சீனாவைச் சேர்ந்த வாங் க்யூ என்பவர், கிட்டத்தட்ட 54 ஆண்டுகளை இங்கேயே கழித்துள்ளார். அதுபற்றிய சுவையான சம்பவம் இதோ... சீனாவைச் சேர்ந்த இந்த ராணுவ வீரர், 1963-ம் ஆண்டு இந்தோ - சீனப் போரின் பணியில் இருந்த சமயத்தில்... வழிதவறி நம் எல்ல…
-
- 0 replies
- 426 views
-
-
பிரிவு: இந்தியா 55 ஆண்டு காலமாக ஆட்சி செய்து நாட்டை படு குழியில் தள்ளிவிட்டது காங்கிரஸ் கட்சிக்கு இனி ஆட்சி செய்யும் அதிகாரத்தை பெற தகுதி இல்லை என பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் கட்சியின் பேரணியில் கலந்து கொண்ட போது இதனை கூறியுள்ளார். விவசாயிகளின் பிரச்சனை, வேலையில்லா திண்டாட்டம், மின்வெட்டு போன்ற அடிப்படை பிரச்சனைகள் கூட காங்கிரஸ் ஆட்சியில் தீர்க்கப்படவில்லை என ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டியுள்ளார். ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நாட்டை காப்பாற்ற பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே முடியும் என அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்புகளின் படி 2014ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலி…
-
- 0 replies
- 651 views
-
-
55 கிமீ நீளம், 4 லட்சம் டன் இரும்பு.. கடல் மீது கட்டப்பட்ட உலகின் நீளமான பாலம்.. சீனா சாதனை! உலகின் மிக நீளமான பாலம் சீனாவில் இந்த வாரம் திறக்கப்பட உள்ளது. சீனா தற்போது உலகின் மிக வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமான துறை மிக முக்கியமான காரணமாக உருவெடுத்து இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக சீனாவில் உலகிலேயே நீளமான பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த பாலம் கடல் மீது கட்டப்பட்டு இருப்பதுதான் வியக்கத்தக்க விஷயம் ஆகும்.சீனாவின் தென்புறத்தில் உள்ள மாக்கா தீவையும், ஹாங்காங்கையும், சீனாவில் உள்ள சுஹாய் நகரத்தையும் இணையும் வகையில் இந்த பாலம் கட்டுப்பட்டு இருக்கிறது. உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிச…
-
- 5 replies
- 1.7k views
-
-
55 வயதிற்குட்பட்டவர்களுக்கான... அஸ்ட்ராஸெனாகா கொவிட்-19 தடுப்பூசி விநியோகம் இடைநிறுத்தம்! பெரும்பாலான மாகாணங்கள், 55 வயதிற்குட்பட்டவர்களிடையே அஸ்ட்ராஸெனாகா தடுப்பூசி விநியோகத்தை நிறுத்pயுள்ளது. முன்னதாக பிரின்ஸ் எட்வர்ட் தீவு, 18 முதல் 29 வயதுக்குட்பட்ட தகுதியுள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசிக்கான சந்திப்புகளை நடவடிக்கை எடுத்தது. இதன்மூலம் புதுப்பிப்பை அறிவித்த முதல் பிராந்தியமாக இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, கியூபெக் அதிகாரிகளும் 55 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தப் போவதாக அறிவித்தனர். அதே நாளில் மனிடோபா இதேபோன்ற புதுப்பிப்பைப் பகிர்ந்து கொண்டது. இதனிடையே அஸ்ட்ராஸெனாகா தடுப்பூசி விநியோகத்தை நிறுத்துமாறு கனடாவின் ந…
-
- 0 replies
- 338 views
-
-
கனடா- மொன்றியலில் ஒரு றோனா கடையில் பணிபுரியும் 20பேர் லொட்டோ மக்ஸ் லாட்டரியில் 55மில்லியன் டொலர்களை வென்றுள்ளனர்.20 பேரும் ஒவ்வொருவரும் 2.75மில்லியன் டொலர்களை பெறுகின்றனர்—வரி அற்ற.இவர்களது சில சக-ஊழியர்கள் குறைந்த அதிஷ்டமுடையவர்கள். ஒவ்வொரு வாரமும் 20 பேர்களின் பெயர்கள் பதியப்படும். ஒவ்வொரு வாரமும் அதே 20பேர்களின் பெயர்கள் பதிவாகப்படுவதில்லை.55மில்லியன் டொலர்கள் பரிசு தொகை மாகாணத்தில் இதுவரை விநியோகிக்கப்பட்ட பரிசுத் தொகைகளில் மிக அதிகமான தொகையாகும்.சீட்டு விற்பனையாகிய எரிவாயு நிலையம் ஜக்பொட் தொகையின் 1சத விகிதத்தை பெறுகின்றது.பரிசை வென்ற 20 ஊழியர்களில் சிலர் தாங்கள் வேலையில் இருந்து இளைப்பாற போவதாக தெரிவித்துள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canad…
-
- 0 replies
- 596 views
-
-
Editorial / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 04:38 - 0 - 22 வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து,சவுதி அரேபிய ஒரே நேரத்தில் 56,000 பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியுள்ளது. பிச்சை எடுக்கும் நோக்கில் வெளிநாடு செல்ல முயன்ற 6,000 க்கும் மேற்பட்டோரை பாகிஸ்தான் அதிகாரிகளே விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தியுள்ளனர். புனிதப் பயணம் (உம்ரா) என்ற பெயரில் சவுதி அரேபியாவுக்கு சென்று மெக்கா மற்றும் மதினா நகரங்களில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்கள் மீது சவுதி அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்ட 56,000 பேர் தற்போது பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். Tamilmirror Online || 56…
-
-
- 2 replies
- 267 views
-
-
56ஆவது நாளாக... தொடரும் போர்: உக்ரைனின், முக்கிய நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு! கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள், அங்குள்ள துறைமுக பகுதியான மரியுபோல் நகரை கைப்பற்றியுள்ளது. இதனை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நகரை ரஷ்ய படைகள், கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அத்துடன், மரியுபோல் நகரை கைப்பற்றியதற்காக ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், பாராட்டு தெரிவிததார். மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் கைப்பற்றுமாறு இராணுவத்தினருக்கு பு…
-
- 0 replies
- 194 views
-
-
சுவிசர்லாந்தின் மிக நீளமான சுரங்கப்பாதையாக கருதப்படும் கோத்தாட் தொடரூந்து சுரங்கப்பாதையில் முதலாவது தொடரூந்தின் வெள்ளோட்டம் இடம்பெற்றது. ஊரி மாநிலத்திலிருந்து திச்சினோ மாநிலம் வரையான 57கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை உலகில் நீளமான சுரங்கப்பாதை என கருதப்படுகிறது. 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி ஆரம்பமான சுரங்கப்பாதை நிர்மாணிப்பு பணிகள் 1000 நாட்களில் நிறைவு பெற்றிருப்பதாக தொடருந்து பாதை நிர்மாண பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சூரிச் நகரிலிருந்து இத்தாலி மிலான் நகருக்கான அதிவேக தொடருந்தின் நேரம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.thinakkathir.com/?p=51943#sthash.mtcWhMFU.dpuf
-
- 0 replies
- 419 views
-
-
575 கி.மீ., வேகத்தில் ஓடும் மின்னல் ரயில் : புதிய சாதனை படைத்தது பிரான்ஸ் அரசு பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் நேற்று, மணிக்கு 574.8 கி.மீ., வேகத்தில் அதிவேக மின்னல் ரயில் இயக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது. அதிவேக ரயில்கள் தயாரிப்பில் பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. தண்டவாளத்தில் செல்லும் ரயில்களில் அதிவேக ரயில் என்ற சாதனை பிரான்சில் தான் முன்னர் நிகழ்த்தப்பட்டது. 1990ல் மணிக்கு 515 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு இச்சாதனை படைக்கப்பட்டது. ஜப்பானில் 2003ல் காந்த சக்தியால் இயங்கும் ரயில் மணிக்கு 581 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டது. உலகளவில் இது தான் அதிவேக ரயில். ஆனால், இந்த ரயில் தண்டவாளத்தில் செல்லாமல் அதற்கு மேலே வழுக்கிக் கொ…
-
- 15 replies
- 2.4k views
-