Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜெர்மனியின் முன்னாள் சான்சலர் ஹெல்முட் கோல் காலமானார் பெர்லின்: ஜெர்மனியின் முன்னாள் சான்சலர் ஹெ ல்முட் கோல் காலமானார் கடந்த 1982 முதல் 1998 வரையில் இப்பதவியில் இருந்துள்ளார். கடந்த சில காலமாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கிழக்கு மேற்கு என இரண்டாக பிரிந்திருந்த ஜெர்மனியை ஒருங்கிணைக்க பாடுபட்டுள்ளார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1791979

  2. ஜெர்மனியில் 135,000 அகதிகள் மாயம் ஜெர்மனியில் அகதித் தஞ்சம் கோரி தம்மை பதிவு செய்தவர்களில் சுமார் 135,00 பேர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் இதர ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 2015ஆம் ஆண்டு, ஜெர்மனியில் சுமார் பதினொரு இலட்சம் பேர் தங்களை அகதிகளாக பதிவு செய்துள்ள நிலையில், அவர்களில் 13 % தற்போது எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாதுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அகதிகள் விவகாரம் தொடர்பில் ஜெர்மனிய நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட பரிந்துரைகள், அவர்களை கண்டுபிடிக்க உதவலாம் என அந்நாட்டு உள்துறை அமைச்சின் பேச்சாளரை மேற்கோள்காட்டி செய…

  3. ஜெர்மனியில் 18 வயது வாலிபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலி, 2 பேர் காயம் பெர்லின்: ஜெர்மனியில் உள்ள பவாரியாவில் காரில் இருந்தபடி பொதுமக்களைப் பார்த்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியாகியுள்ளனர். ஜெர்மனியில் உள்ள பவாரியா மாநிலத்தில் இருக்கும் அன்ஸ்பாக் நகரில் ஒருவர் தனது காரில் வந்துள்ளார். அவர் திடீர் என்று காரை நிறுத்தி தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சாலையில் சென்றவர்களை நோக்கி சுட்டார். இதில் மூதாட்டி, சைக்கிளில் சென்ற ஆண் ஆகிய இருவர் பலியாகியுள்ளனர். மேலும் இரண்டு பேர் மீது குண்டு பாய்ந்தது. அதன் பிறகு அவர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தின்.…

  4. ஜெர்மனியில் 2-ம் உலக போரின் 1.8 டன் வெடிகுண்டு: செயலிழக்க செய்ய 8,500 பேர் வெளியேற்றம் ஜெர்மனியில் கட்டுமானப் பணியின்போது கண்டெடுக்கப்பட்ட 2-ஆம் உலக போர் கால வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சுமார் 8,500 பேர் வெளியேற்றப்பட்டனர். கடந்த நவம்பர் 26-ஆம் தேதி ஜெர்மனின் மைன்ஸ்(Mainz) நகரில் நடந்துவரும் கட்டுமானப் பணியிடம் ஒன்றில் 3 மீட்டர் நீளம், சுமார் 1.8 டன் எடைகொண்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்த நிபுணர்கள் வெடிகுண்டு புத்துயிருடன் இருப்பதாகவும், மேலும் அது எதிர்பாராத நிலையில் வெடித்தால் மிகப் பெரிய ஆபத்து உண்டாகும் என்றும் எச்சரித்தனர். இதனை அடுத்து வெடிகுண்டை செயலிழக்க செய்யும் பணிக்காக அந்த பகு…

  5. ஜெர்மனியில் 4.5 லட்சம் அகதிகள் தஞ்சம் இந்த ஆண்டில் இதுவரை 4.5 லட்சம் அகதிகளுக்கு ஜெர்மனி அடைக்கலம் அளித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் துணை பிரதமர் சிக்மர் கேபிரியேல் கூறியதாவது: கடந்த ஜனவரி முதல் இதுவரை ஜெர்மனிக்கு 4.5 லட்சம் அகதிகள் வந்துள்ளனர். இதில் ஆகஸ்டில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேரும் செப்டம்பரில் முதல் எட்டு நாட்களில் மட்டும் 37 ஆயிரம் பேரும் வந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். ஐரோப்பிய யூனியனில் 28 நாடுகள் உள்ளன. இதில் ஜெர்மனி, சுவீடன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அகதிகளுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளன. லட்சக்கணக்கான அகதிகளை ஜெர்மனி ஏற்றுக் கொண்டுள்ளது. பிரான்ஸ், டென்மார்க், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கணிசமான அகதிகளுக்கு அடைக்கலம் அளித்துள்ளன. …

  6. ஜெர்மனியில் 94 வயதான ரீன்ஹோல்ட் ஹான்னிங்ன் வழக்கில் இன்று தீர்ப்பு நாஜிக்களின் பிடியில் இருந்த போலாந்தின் பகுதியான அவுஷ்விட்சின் முன்னாள் பாதுகாவலர் குறித்த வழக்கு ஒன்றின் தீர்ப்பை ஜெர்மனியில் உள்ள நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது. 94 வயதான ரீன்ஹோல்ட் ஹான்னிங், 1,70,000 பேரை கொன்றதற்கு உதவியாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். அவரது வழக்கறிஞர்கள் அவர் தனிப்பட்ட வகையில், யாரையும் அடிக்கவோ, கொல்லவோ இல்லை என்று வாதிட்டனர். ஹான்னிங் ஏப்ரலில் நடந்த இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டார். தான் அநீதியை பார்த்தபோதும், அதை நிறுத்த எதுவும் செய்யாமல் இருந்ததற்காக வெட்கப்படுவதாக கூறினார். ஜெர்மனியில் போர்க்கால நாஜிக்கள் கு…

  7. ஜெர்மனியில் ஃபேஸ்புக் அலுவலகம் மீது மர்ம கும்பல் தாக்குதல்; சுவரில் 'டிஸ்லைக்' வாசகம் பதிவு சுவற்றில் 'ஃபேஸ்புக் டிஸ்லைக்' என்று எழுதப்பட்டிருந்தது. | படம்: ஏ.பி. ஜெர்மனியில் உள்ள ஃபேஸ்புக் அலுவலகத்தை மர்ம கும்பல் அடித்து நொறுக்கியதோடு அல்லாமல் 'ஃபேஸ்புக் டிஸ்லைக்' என்ற வாசகத்தை சுவற்றில் எழுதி சென்றனர். ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் ஃபேஸ்புக் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு நேற்று (ஞாயிறு) இரவு கறுப்பு உடையணிந்த சுமார் 20 நபர்கள் நுழைந்து அலுவலக ஜன்னல்களை சூறையாடியதாக புலனாய்வு போலீஸார் கூறினர். அதோடு, ஃபேஸ்புக் பேனர்களை மறைக்கும்படியாக கருப்பு மை ஊற்றியும் சுவற்றில் 'ஃபேஸ்புக் டிஸ்லைக்' என்று எழுதியதாக அந்நாட்டு காவல்து…

  8. ஜெர்மனியில் அகதிகளுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பலர் காயம் ஜெர்மனியில் அகதிகளுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நடைபெற்ற போட்டி போராட்டங்களில் வன்முறை வெடித்ததில் பலர் காயமடைந்துள்ளனர். உள்நாட்டு போர் நடைபெறும் சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து ஏராளமானோர் வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களுக்கு ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் அரசு ஆதரவு அளித்து வருகின்ற நிலையில் வலதுசாரி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் கிழக்கு ஜெர்மனியின் செமின்ட்ஷ் நகரில் நடந்த மோதலில் ஜெர்மனைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் இது தொடர்பாக ஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த இரண…

  9. ஜெர்மனியில் அகதிகள் மீது தாக்குதல்: 3 பேர் காயம் ஜெர்மனியின் ஹைடனவ் நகரில் நடைபெற்ற தாக்குதலில் மூன்று அகதிகள் காயமடைந்துள்ளனர்; ஒரு வருடத்திற்கு முன்பு வலது சாரி தீவிரவாதிகளல் அங்கு பலநாட்கள் வன்முறை போராட்டங்கள் நடத்தப்பட்டன. கோப்புப் படம் முப்பது பேர் கொண்ட குழு ஒன்று, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பதின்ம வயதைக் கொண்ட அம்மூவரை நோக்கி அவதூறாக பேசினர்; பின்பு அவர்களை தாக்கவும் செய்தனர் இது குறித்து போலிஸார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து பேசிய ஹைடனவ்வின் மேயர் ஜுர்ஜென் ஒபிடிஸ், இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்; ஆனால் தனது நகரில் நிறவெறிப் பிரச்சனை நிகழ்வதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். " ஜெர்மனி முழுவதும் தின…

  10. ஜெர்மனியில் அகதிகள் மீது தாக்குதல்: 3500 குற்றச்சாட்டுகள் பதிவு ஜெர்மனியில் தங்கி இருக்கும் அகதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சுமார் 3 ஆயிரத்து 500 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெர்லின்: சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டு போர் காரணமாக நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மையால் அந்நாடுகளில் இருந்து மக்கள் மேற்குகுலக நாடுகளை நோக்கி அகதிகளாக படையெடுத்து வருகின்றனர். பிரான்ஸ் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு மேற்கு நாட…

  11. ஜெர்மனியில் அவசர நிலை அறிவிப்பு! ஜெர்மனியில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி ஜெர்மனியின் பவேரியா, பாடன் வுர்ட்டம்பேர்க் (Baden-Württemberg) மாகாணங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள டோனாவ், நெக்கர், குயென்ஸ் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன இதன் காரணமாக சில ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அங்குள்ள 10 மாவட்டங்களுக்கு அவசர நிலை விடுக்கப்பட்டு உள்ளது. எனவே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதுடன் இதற்காக அங்கு…

  12. ஜெர்மனியில் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் ஆகஸ்ட் 21, 2007 மியூஜெலின்: ஜெர்மனியில் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை கிழக்கு ஜெர்மனியின் மயூஜெலின் நகரில் இச் சம்பவம் நடந்தது. இந்திய வாலிபர்கள் ஒன்று கூடி இந்திய விழாவை நடத்திக் கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் சுமார் 50 ஜெர்மனியர்கள் அங்கு வந்து வாக்குவாதத்தில் இறங்கினர். பின்னர் இந்தியர்களை கடுமையாகத் தாக்கினர். இதையடுத்து இந்தியர்கள் கலைந்து ஓட அவர்களை விரட்டி விரட்டி அந்தக் கும்பல் தாக்கியது. இதைத் தொடர்ந்து தங்களை காத்துக் கொள்ள அப் பகுதியில் உள்ள இந்தியருக்குச் சொந்தமான உணவு விடுதியில் இந்திய வாலிபர்கள் புகுந்தனர். அவர்களை காப்பதற்காக விடுதி…

  13. ஜெர்மனியில் உடைந்த சுவர் - ஒட்டிய மனங்கள் பெர்லின் சுவரை 1989-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உடைக்கத் தொடங்கினர். அந்த சுவரில் இருந்த ஓட்டையை தனது தந்தையிடம் காட்டுகிறார் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு சிறுமி. சுவரின் மேல் ராணுவ வீரர்கள். - கோப்பு படம்: ராய்ட்டர்ஸ் இதே தினம் - நவம்பர் 9. ஆண்டு 1989. பெர்லின் நகரை இரண்டாகப் பிரித்த, 160 கிலோ மீட்டர் தூரத்துக்கு எழுப்பப்பட்டிருந்த, அந்தச் சுவர் இடிக்கப்பட்டது. அரசியலை மீறிச் செயல்பட்டது மக்கள் சக்தி. அந்தச் சுவர் எழுப்பப்பட்டதும் சரித்திரத்தில் ஒரு முக்கிய மைல் கல். இடிக்கப்பட்டதும்தான். இரண்டாம் உலகப் போரிலும் ஹிட்லர் …

  14. ஜெர்மனியில் உணவு கிடைக்காமல் பரிதவிக்கும் உயிரியல் பூங்கா விலங்குகள் ஜெர்மனியில் உணவு கிடைக்காமல் உயிரியல் பூங்கா விலங்குகள் பரிதவித்து வருகின்றன. ஜெர்மனியில் 1 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இந்த கொடிய வைரசுக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்டவற்றை தவிர்த்து, மக்கள் கூட்டம் அதிகம் வரும் தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவற்றை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் உயிரியல் பூங்காக்களும் அடங்கும். அதன்படி அந்த நாட்டின்…

  15. ஜெர்மனியில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமானது ஒரு பாலின திருமணத்தை சட்டமாக்கும் வகையில் ஜெர்மனிய நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. இந்த சட்டமூலத்தின் மூலம் ஆண் மற்றும் பெண் ஒருபாலுறவுக்காரர்களுக்கு குழந்தைகளை தத்து எடுப்பது உட்பட முழுமையான திருமண உரிமை வழங்கப்படுகின்றது. இந்தச் சட்டத்தை அங்கீகரிப்பதற்கான வாக்களிப்பு மேலும் சமூக அமைதிக்கு வழி செய்யும் என எதிர்பார்ப்பதாக ஜேர்மன் அதிபர் ஏங்கிலா மேர்க்கல் கூறியுள்ளார். http://globaltamilnews.net/archives/31422

  16. ஜெர்மனியில் ஓடும் புகையிரதத்தில் பயணிகள் மீது கோடரியால் தாக்குதல் ஜேர்மனி நாட்டின் பவாரியா மாநிலத்தில் உள்ள டிரியூச்லிங்கென் மற்றும் உவர்ஸ்பர்க் நகரங்களுக்கு இடையிலான மின்சார புகையிரத்தில் (உள்ளூர் நேரப்படி) நேற்றிரவு 9.15 மணியளவில் பயணிகளில் ஒருவன் திடீரென கோடரி மற்றும் கத்தியால் சகப்பயணிகளை சரமாரியாக வெட்டியுள்ளார். குறித்த புகையிரதம் ஓச்ஸென்பர்ட் புகையிரத நிலையத்தை நெருங்கியபோது உள்ளே இருந்த பயணிகளில் ஒருவன் திடீரென கோடரி மற்றும் கத்தியால் சகப்பயணிகளை சரமாரியாக தாக்கியதில் 19 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். இதில் மூவரின் நிலமை கவலைக்கிடமாகவுள்ளது. ஓச்ஸென்பர்ட் புகையிரத நிலையத்தில் புகையிரதம் நின்றதும் தப்பி செல்ல முயன்றவ…

  17. ஒருவர் தனிப்பட்ட முறையில் வீட்டிலேயே 3 கஞ்சா செடி வரை வளர்க்கலாம் மற்றும் தினமும் 25 கிராம் வரை உபயோகிக்கலாம் என ஜெர்மனி பாராளுமன்றம் சட்டம் நிறைவேற்றியுள்ளது. ஜெர்மனியில் கடந்த வெள்ளிக்கிழமை கூடிய பாராளுமன்றம் இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கஞ்சா உபயோகத்தை சட்டரீதியாக ஒப்புகொள்ளும் இந்த சட்டத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், அரச தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தனிநபர், சட்டம் கொடுத்த உரிமையுடன் வீட்டிலேயே 3 கஞ்சா செடிகள் வரை வளர்க்கலாம். மேலும், ஒருவர் சுமார் 25 கிராம் வரை கஞ்சாவை தினமும் எடுத்துகொள்ளலாம். கஞ்சா எடுத்துகொள்வதற்கு என்று ஒரு குழு அமைக்கப்படும் அதில் உறுபினர்கள் மட்டுமே சட்டபூர்வம…

  18. ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் 12பேர் படுகாயம்! ஜெர்மனியில் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக்கொண்டு இருந்தவர்கள் மீது திடீரென மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் இவர்களில் மூன்று பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கத்தியால் தாக்கிய நபரை அங்கிருந்த பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளதுடன் கத்தி குத்து தாக்குதல் நடத்தியவரின் நோக்கம் குறித்தும் அவரது பின்னணி குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://at…

  19. ஜெர்மனியில் கருப்பு பணம்: 18பேர் பட்டியலை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு! டெல்லி: ஜெர்மனியில் கருப்பு பணத்தை முதலீடு செய்துள்ள 18 பேரின் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கிய இந்தியர்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஜெர்மனி வங்கியில் முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலை வழங்குமாறு 2011ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கருப்புப் பணம் பதுக்கியவர்களின் பட்டியலை 3 ஆண்டுகளாக தாக்கல் செய்யாததால் கடந்த வாரம் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் கருப்புப் பண பதுக்கல் தொடர்பான வழக்கில் மத…

  20. ஜெர்மனியில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 90,000 - ஐ கடந்துள்ளது. இதுகுறித்து ஜெர்மனியின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “ஜெர்மனியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90,000 - ஐ கடந்துள்ளது. சனிக்கிழமை மட்டும் சுமார் 5,600 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 147 பேர் பலியாகி உள்ளனர். ஜெர்மனியில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றுக்கு 1,444 பேர் பலியாகி உள்ளனர். 26,000க்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வந்தாலும் நோயாளிகளின் உயிரிழப்பை ஜெர்மனி வெற்றிக்கரமாக தடுத்து வருகிறது. மேலும் அந்நாட்டைச் சேர்ந்…

  21. ஜெர்மனியில் கலைநிகழ்வில் நடந்த துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்! ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பேர்லின் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைத் தேட பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பேர்லின் பொலிஸார் டுவிற்றர் பக்கத்தில் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளனர். ஜேர்மனிய தலைநகரின் க்ரூஸ்பேர்க் (Kreuzberg) மாவட்டத்தில் உள்ள ரெம்பொட்ரோம் மண்டபத்தில் (Tempodrom hall) துருக்கிய கலை நிகழ்ச்சியின்போது மக்கள் அதிகளவாக கூடியிருந்த சமயத்தில் நேற்று இரவு இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. …

  22. ஜெர்மனியின் முனீச் நகரில் இடம்பெற்ற போராட்டத்தில் கார் ஒன்று பாய்ந்தமையால் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முனீச் நகரில் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், உலகத் தலைவர்கள் பலர் அங்கு பங்குபற்றியுள்ளனர். குறித்த நகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு இந்நிலையில், போராட்டக் களத்திற்குள் வேகமாக உட்புகுந்த கார், மோதியதில் 28 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, காரினை செலுத்திய 24 வயதுடைய இளைஞன் ஒருவர் ஜெர்மனி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, சர்வதேச மாநாடு நடக்கும் இடத்தி…

  23. எஸ்பல்காம்ப்: ஜெர்மனியில் உள்ள எஸ்பல்காம்ப் என்ற நகரில் உள்ள சூதாட்ட விடுதியில் சிவபெருமான் பெயரால் சூதாட்டம் நடத்தப்பட்டது. இதை அறிந்து அப்பகுதியில் உள்ள இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்துக்களின் இந்த எதிர்ப்புக்கு கிறிஸ்தவர்களும் யூதர்களும் புத்த மதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, நவேதாவில் உள்ள ஐக்கிய கிறிஸ்தவ சர்ச்சின் பாஸ்டர் மறைதிரு. ரிச்சர்டு எல்.ஸ்மித் இது குறித்து கூறுகையில், சூதாட்ட இயந்திரங்களில் சிவபெருமான் படம் பொறிக்கப்பட்டது தங்கள் மத உணர்வை பாதிப்பதாக உள்ளதென இந்துக்கள் தெரிவித்துள்ள எதிர்ப்புக்கு நான் ஆதரவளிக்கிறேன். இவ்வாறு இந்து கடவுளின் பெயரையோ படத்தையோ சூதாட்டத்தில் பயன்படுத்துவது பொருத்தமற்ற செயல். எனவே, இந்த சூதாட்ட விடுதியின…

  24. ஜெர்மனியில் சீனாவுக்கு உளவு பார்த்த 3 பேர் கைது Posted on April 23, 2024 by தென்னவள் 20 0 ஜெர்மனியின் டஸ்ஸல்டோர்ப் நகரில் வசித்து வந்த தம்பதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். பின்னர் ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் அவர்கள் போர்க்கப்பல்களின் எந்திரங்கள் தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் செய்தனர். இதற்கிடையே சீன பாதுகாப்பு துறையை சேர்ந்த ஒருவருடன் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஜெர்மனி ராணுவ தொழில்நுட்பங்களை அவருக்கு அறிவித்தனர்.இதனையடுத்து சீனாவுக்கு உளவு பார்த்ததாக அந்த தம்பதி உள்பட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ரஷியாவுக்கு உள…

    • 0 replies
    • 461 views
  25. ஜெர்மனியில் சேவியர் புயலுக்கு 4 பேர் பலி ஜெர்மனியில் வீசிய சேவியர் புயலுக்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ”ஜெர்மனியில் ஹம்பெர்க் நகரில் சேவியர் புயலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனனர். பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளது மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பல இடங்களில் ரயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வனவிலங்கு சாரணலயங்கள் பல சேவியர் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்லதால் அவை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.