உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26883 topics in this forum
-
கென்யா பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்: 147 மாணவர்கள் பலி. கென்யாவில் பல்கலைக்கழக வளாகத்தில் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 147 மாணவர்கள் உயிரிழந்தனர். 79 பேர் காயமடைந்தனர். கென்யாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள காரிஸா நகர பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் வியாழக்கிழமை அதிகாலை பலர் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நுழைந்த பயங்கரவாதிகள், சரமாரியாகச் சுட்டனர். பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதலில் பலர் காயமடைந்ததாக அங்கிருந்து தப்பிய மாணவர்கள் தெரிவித்தனர். அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தாலும், மாணவர் விடுதியில் ஏராளமானோரை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாகச் சிறை பிடித்து …
-
- 2 replies
- 507 views
-
-
பிரிட்டனில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது: - டேவிட் கேமரூனுக்கு 40 சதவீதம் பேர் ஆதரவு! [Friday 2015-04-03 09:00] வரும் மே 7-ந் தேதி பிரிட்டனில் பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் இன்று அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்ற நேரடி விவாதம் அந்நாட்டு தொலைக்காட்சியில் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் 40 சதவீதம் பேர் தற்போதைய அதிபராக உள்ள டேவிட் கேமரூனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அடுத்த பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட தொழிலாளர் கட்சியின் மிலிபாண்ட் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களான ஸ்டர்ஜியன் மற்றும் பரேஜ் ஆகியோருக்கு கிடைத்த ஆதரவால் பின்தங்கினார். மிலிபாண்ட்டுக்கு ஆதரவாக 21.5 சதவீதம…
-
- 0 replies
- 568 views
-
-
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 39வது முறையாக நடந்த விபத்தில் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வானிலை அறிக்கை.. வெப்பநிலை அறிக்கை சொல்வது போல ஆகிவிட்டது சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் விபத்து குறித்த செய்தி. ஒருநாள் கண்ணாடி உடைந்தால் மறுநாள் கிரானைட் சுவர் பெயர்ந்து விழுகிறது.. மற்றொரு நாள் மேற்கூரை சரிகிறது... இப்படி நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஏதாவது ஒரு விபத்துக்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவரை வெளியில் தெரிந்து 39 விபத்து நடந்து விட்டது. இனி தெரியாமல் எத்தனை நடந்துள்ளதோ. ஆனால் அனைத்து விபத்துகளுக்கும் அசால்டாகவே பதில் சொல்கின்றனர் விமான நிலைய அதிகாரிகள் என்பது பயணிகளின் புகாராக இருக்கிறது. உடைந்த கண்ணாடி கதவு இதுவரை பல விபத்துக்கள் நடந்திருந்தா…
-
- 2 replies
- 496 views
-
-
பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனின் மத்திய பகுதியில் இன்று மின்கசிவு காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தால் நச்சு புகை ஏற்பட்டதன் காரணமாக பாதுகாப்பு கருதி 2000 பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இவ்விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகே தான் இந்திய தூதரகம் அமைந்துள்ளது. ஹோல்போர்ன் பகுதியில் உள்ள கிங்ஸ்வே நடைபாதைக்கு கீழே சாக்கடை மூடியில் இருந்து வெளியேறிய தீ காரணமாக, அப்பகுதியில் இருந்த அனைவருக்கும் சுவாச கோளாறு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் குழப்பம் காணப்பட்டது. அப்பகுதியில் உள்ள தியேட்டர்களில் தி லயன் கிங், சார்லி அண்ட் தி சாக்லேட் பாக்டரி ஆகிய திரைப்படங்களின் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் அப்பகுதியில் பணியிலிருந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்…
-
- 1 reply
- 525 views
-
-
தமிழகத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படும் தாலி அகற்றும் விழாவுக்கு கடும் கண்டனங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் கைப்பேசி மூலம் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகம் சார்பில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் வருகிற ஏப்ரல் 14ம் திகதி, தாலி அகற்றும் விழா நடத்தப்படும் என்று கி.வீரமணி அறிவித்திருந்தார். தி.க. சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூறி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 10 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தாலி அகற்றும் போராட்டம் தொடர்பாக திராவிடர் கழகத்தின் மகளிர் பாசறை சார்பில் தற்போது அறிவிப்பு ஒன்று வெளி…
-
- 20 replies
- 2.5k views
-
-
விபத்துக்குள்ளான ஜேர்மன்விங்ஸ் விமானத்தினுள் பதிவு செய்யப்பட்ட காணொளி? அலறும் பயணிகள் பிரான்ஸ் நாட்டு அல்ப்ஸ் மலையில் மோதி அண்மையில் விபத்துக்குள்ளான ஜேர்மன்விங்ஸ் விமானத்திற்குள்ளிருந்து பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காணொளியொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கையடக்கத் தொலைபேசி ஊடாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் காணொளி தம்மிடம் உள்ளதாக பிரான்ஸ் நாட்டு ஊடகமான பெரிஸ் மட்ச் மற்றும் ஜெர்மன் ஊடகமான பெல்ட் என்பவைகளே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. குறித்த காணொளியை தாம் பார்வையிட்டதாகவும் விபத்து நடந்த இடத்தில் இருந்த ஒருவரின் ஊடாக இதனை பெற்றுக் கொண்டதாக பெரிஸ் மெட்ச் ஊடகம்ட தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணித்தோர் பயத்தில் அலறுவதும், அவர்க…
-
- 0 replies
- 322 views
-
-
டென்வர்: அமெரிக்காவின் டென்வர் நகரில் பெண் பயணியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற உபேர் டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கொலரடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் விமான நிலையத்திற்கு செல்ல உபேர் டாக்சியை அழைத்துள்ளார். அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற டாக்சி டிரைவர் ஜெரால்டு மான்ட்கோமரி(51) அவரை டென்வர் விமான நிலையத்திற்கு தனது வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அந்த பெண்ணை விமான நிலையத்தில் இறக்கிவிட்ட மான்ட்கோமரிக்கு ஒரு யோசனை வந்துள்ளது. உடனே அவர் அந்த பெண் பயணியின் வீட்டுக்கு சென்றுள்ளார். பெண் பயணியின் வீட்டில் யாரும் இல்லை என நினைத்து பின்கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்றார் டாக்சி டிரைவர் மான்ட்கோமரி. ஆனால் வீட்டில் இருந்த அ…
-
- 2 replies
- 688 views
-
-
சிரியாவில் கேமராவை பார்த்து துப்பாக்கி என்று பயந்து இரு கைகளையும் தூக்கி விம்மிய சிறுமி. உலகையே உலுக்கிய புகைப்படம் இது. பிஞ்சு முகத்தில் பயம். அழுகை வெடிக்கும் நிலை. கைகளைத் தூக்கி என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சும் முகபாவனை. இந்தக் காட்சியைப் படம் பிடித்த புகைப்படக் கலைஞர் நாடியா அபு ஷபான். சிரியாவில் எப்போதும் குண்டு சத்தத்தையே கேட்டு பழகிய இக்குழந்தை, படம் பிடிக்க கேமராவை சரி செய்தபோது, துப்பாக்கியால் சுடப் போகிறார் என்று மிரண்டு கைகளை உயர்த்தி நின்ற காட்சியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது இணையதளத்தில் பலரையும் பரிதாபப்பட வைத்துள்ளது. http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%…
-
- 0 replies
- 344 views
-
-
ஏர் கனடா விமானம் தரை இறங்கும்போது சறுக்கி விபத்துக்குள்ளானது. விமானத்தினுள் இருந்த பயணிகள் கதவுகளை உடைத்து கீழே குதித்தனர். இதில் 23 பயணிகள் படுகாயமடைந்தனர். கனடாவில், ஏர் கனடா விமானம் 133 பயணிகளுடன் ஸ்டான்ஃபோர்ட் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஓடுதளத்தில் மோதி சறுக்கிய நிலையில் செங்குத்தாக சென்று பனிக் கட்டிகளுக்குள் புகுந்தது. விமானம் அதி வேகத்தில் தரையில் உரசியபடி 300 மீட்டர் தூரத்துக்கு சறுக்கி ஓடியதில் விமானத்தின் அடிப் பகுதி, இறக்கை கடுமையாக சேதமடைந்தன. பயங்கர சத்தத்தால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அச்சத்தால் விமானத்திலிருந்து தப்பிக்க முயற்சி செய்தனர். விமான கதவு, ஜன்னல்களை உடைத்த பயணிகள் விமானம் ஓடிக் கொண்டிருந்த போதே அதிலிருந்து கீழே குதித்தனர்…
-
- 1 reply
- 569 views
-
-
1,000 மீட்டர் அகலம் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று நாளை பூமியை மிக அருகில் கடக்க உள்ளதாகவும், 37 ஆயிரம் கிமீ வேகத்தில் வரும் இந்த விண்கல் பூமியில் மோதினால் ஒரு பெரிய நாட்டையே அழித்துவிடக் கூடிய அளவுக்கு அதன் தாக்கம் இருக்கும் எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். '2014 ஒய்.பி.35' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள விண்கல்லானது, பூமியை நெருங்க 4,473,807 கிலோ மீட்டர்களை கடந்து பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 37 ஆயிரம் கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து வரும் இந்த விண்கல்லானது, பூமியின் மீது மோதினால் ஒரு நாட்டையே அழித்துவிடக் கூடிய அளவுக்கு ஆபத்தானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மிகவும் நெருக்கமாக வரும் இந்த விண்கல் பூமியின் மீது மோதினால், பருவநிலை மாற்றம், நிலநடுக்கம், சுன…
-
- 5 replies
- 1k views
-
-
ஸ்ரீநகர்: உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி யில், ஆஸ்திரேலியாவிடம், இந்திய அணி தோல்வி அடைந்ததை, காஷ்மீர் மக்கள், பட்டாசு வெடித்து கொண்டாடினர். பா.ஜ., ஆதரவுடன், மக்கள் குடியரசு கட்சியை சேர்ந்த, முப்தி முகமது சயீத் தலைமையிலான ஆட்சி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடக்கிறது.கடந்த 26ம் தேதி, சிட்னியில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில்,இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடின.சமபலம் பொருந்திய இரு அணிகள் மோதியதில், இந்தியா 95 ரன் வித்தியாசத்தில், ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.இந்திய அணி தோல்வி அடைந்ததை அறிந்தரசிகர்கள், தற்கொலை வரை சென்றனர். ஆனால், இந்திய அணியை சேர்ந்த, உமேஷ் யாதவை, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஸ்டார்க் அவுட்டாக்கி, பெவிலியனுக்கு அனுப்பிய போது, …
-
- 2 replies
- 447 views
-
-
தனது சொத்து முழுவதையும் நன்கொடையாக வழங்கியோர் பட்டியலில் சேர்ந்துள்ளார் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக். இத்தகவலை பார்ச்சூன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இவரது 78.50 கோடி டாலர் சொத்தை தனது 10 வயது உறவுக்கார சிறுவனின் கல்லூரி படிப்புக்குப் பிறகு அறக்கட்டளைக்கு செல்லு மாறு திட்டமிட்டுள்ளார் குக். இவருக்கு திருமணமாகவில்லை. பார்ச்சூன் பத்திரிகை மதிப் பீட்டின்படி டிம் குக் வசம் உள்ள ஆப்பிள் நிறுவன ஸ்டாக்குகள் அடிப்படையில் அவரது சொத்து 12 கோடி டாலராகும். அத்துடன் அவர் கட்டுப்பாட்டில் உள்ள பங்குகளின் மதிப்பு 66.50 கோடி டாலராகும். 54 வயதாகும் டிம் குக், அறக் கட்டளைகளுக்கு அதிக நன் கொடை அளிக்கும் பெரும் பணக் கார கொடையாளிகள் பட்டியலில் சேர்ந்துள்ளார். …
-
- 1 reply
- 356 views
-
-
பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. விமான விபத்தில் யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் பிரெஞ்ச் அதிபர்ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை நிறுவனமான ஜெர்மன்விங்ஸின் விமானமே அங்கு விழுந்து நொறுங்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த விமானத்தில் 142 பயணிகளும், ஆறு பணியாளர்களும் இருந்ததாக உள்ளூர் செய்தி பத்திரிகை ஒன்று கூறுகிறது. விபத்துக்குள்ளான விமானம் பார்சிலோனாவிலிருந்து டசல்டார்ஃப்க்கு பறந்து கொண்டிருந்தது. டின் லே பான் நகருக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அபாய சமிஞ்கை வெளியிட்டது என்று தகவல்கள் கூறுகின்றன. அந்த விமானத்தில…
-
- 68 replies
- 4.1k views
-
-
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கவனத்திற்கொள்ளாது ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளின் தடையை நீடித்துள்ளது என வெளியுறவுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான அரசாங்கத்தினால் விடுதலைப் புலிகளின் தடையை நீடிக்க முடிந்துள்ளது என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்பு கொண்டு இந்த தடையை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த நவம்பரில் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பெரட்ரிக்கா மொக்ஹெரன்னியுடன் தொடர்புகொண்டு இந்த தடையை நீடிக்குமாறு கோரியிருந்தார் என்றும் பெரேரா சுட்டிக்காட்டி…
-
- 0 replies
- 422 views
-
-
ராகுல் காந்தியை காணவில்லை, கண்டுபிடித்து தகவல் தருவோருக்கு பரிசு என உத்தரப் பிரதேசத்தின் பல இடங்களில் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் தொடங்கியபோது, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நீண்ட விடுமுறையில் சென்றார். இது குறித்து அதிகளவில் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து ராகுல் 3 வாரத்தில் டெல்லி திரும்புவார் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா அறிவித்தார். அதன்பின் இரண்டு முறை தனது விடுமுறையை ராகுல் நீட்டித்தார். கட்சியை வலுப்படுத்துவது குறித்து உள்ளாய்வு செய்வதற்காக, அவர் கட்சி தலைமையிடம் அனுமதி பெற்று நீண்ட விடுப்பில் சென்றுள்ளார். அவர் இம்மாத இறுதியில் டெல்லி திரும்புவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெர…
-
- 1 reply
- 530 views
-
-
TRIBUTE TO LEE KUVAN YEW FOR HIS LANGUAGE POLICY WHICH MADE SINGAPORE IS THE ONLY COUNTRY IN THE WORLD WHERE TAMILS ENJOY LINGUISTIC EQUALITY AND FREEDOM தனது இன மொழிச் சமத்துவ கொள்கையால் தமிழர் மொழிவாரி சுதந்திரத்துடனும் சமத்துவத்துடனும் வாழ்கிற ஒரே நாடாக சிங்கப்பூரை மேம்படுதியமைக்காக சிங்கை முதல்வர் லீ குவான் யூவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். சோசலிசமோ பொது உடமையோ முதலாளித்துவமோ பிரதேச இனங்களின் மொழிவாரிச் சமத்துவமில்லாத நாடு ஒரு நோயாளிதான். மொழிவாரிச் சமத்துவமின்மை உலக வல்லரசான சோவியத் ரூசியாவைக்கூட காப்பாறவில்லை. எழுபது வருடங்களாக ரூசிய மொழி படித்து அடங்கிக் கிடந்த மாநிலங்கள் வெளி எதிர்ப்பும் நெருக்கடியும் அதிகரித்தபோது ஒன்றாக நிற்காமல் பிரித்துக்கொண்டு ஓடிவிட்டன…
-
- 0 replies
- 987 views
-
-
தக்காளி சுவையூட்டி தயாரிப்புகளுக்கு பேர் போன ஹைன்ஸ் (Heinz) நிறுவனம், இன்னொரு பெரிய உணவுக் கம்பனியான கிராஃப்ட் (Kraft foods) நிறுவனத்துடன் இணைந்து, சுமார் 40 பில்லியன் டாலர்களுக்கும் அதிக பெறுமதி கொண்ட உலக உணவு நிறுவனத்தை உருவாக்க இணங்கியுள்ளது. இந்தப் புதிய கூட்டு நிறுவனமே அமெரிக்காவின் மூன்றாவது பெரிய உணவு மற்றும் குடிபான உற்பத்தி நிறுவனமாகும் என்று அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன. சீஸ் மற்றும் காப்பி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கிராஃப்ட் பிராண்டுகளின் கீழ் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்க வர்த்தகரான வாரன் பஃபெட்டினால் நிறுவப்பட்ட பேர்க்ஷயர் ஹாதவே (Berkshire Hathaway) நிறுவனத்துக்கும் பிரேஸில் முதலீட்டு நிறுவனமான 3-ஜி கெப்பிட்டல் நிறுவனத்துக்கும் சொந்தமானது தான் ஹைன்ஸ் நிறுவ…
-
- 0 replies
- 332 views
-
-
செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் பயணம்: 2 ஆண்டு தாமதம் நெதர்லாந்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் ‘மார்ஸ் ஒன்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. அங்கு செல்பவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாது. அங்கேயே நிரந்தரமாக தங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுக்கு ஒருமுறை 4 பேர் செவ்வாய் கிரகத்துக்கு பயணம் செய்யும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதற்காக பல்வேறு பரிசோதனைகளுக்கு பின் இறுதியாக 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அமெரிக்கா புளோரிடா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் தரஞ்ஜித் சிங் பாட்டியா (29), துபாயில் வசிக்கும் ரித்திசாகிங் (29), கேரளாவை சேர்ந்த சாரதா பிரசாத் (…
-
- 5 replies
- 590 views
-
-
நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர் லொரெட்டா பரோக்ஸ் ( வயது63) இவரது கணவர் டேனியல் (வயது 64) இவரை விட்டு விட்டு வேறு ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டு புளோரிடாவிற்குச் சென்றுவிட்டார். பரோசிடம் இருந்த நிலத்தையும் பங்கு போட்டு இளம் மனைவிக்கு டேனியல் கொடுத்து விட்டார். இந்நிலையில், டேனியலைக் காணவில்லை என அவரது சகோதரர் பொலிஸில் முறைப்பாடு செய்தார். இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. கணவன் வேறு பெண்ணுடன் சென்ற கோபத்தில், பெரோஸ் கணவனை சந்தித்துப் பேசி வீட்டிற்கு அழைத்து வந்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து 2 பெரிய பெட்டிகளில் மூடி வைத்திருந்துள்ளார். பிண வாடை…
-
- 3 replies
- 595 views
-
-
மனைவியின் மருத்துவ செலவுக்காக 35மைல் தூரம் நடக்கும் கணவன் மனைவி என்பவள் ஆணின் வாழ்க்கைக்கு மிக நெருங்கிய தொடர்புடையவள். ஓர் ஆணின் வெற்றி மற்றும் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பவள். குடும்ப உறவுகளைப் பேணி அதன் மூலம் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிகளைத் தருபவளே மனைவி என்று கூறுவதுண்டு. ஆனால், அவ்வாறான மனைவிக்கு கணவன் செய்வது என்ன? சுகயீனமுற்றிருக்கும் தனது மனைவியை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நாளொன்றுக்கு 35 மைல் தூரம் நடந்து செல்லும் நபர் பற்றி கேள்வியுற்றிருக்கின்றீர்களா? ஆம், ஸ்டீவன் சிம்ஓப் எனும் 61 வயதுடைய நபர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள டேவிஸ் நகரத்தில் வசிக்கின்றார். இவர் அமெரிக…
-
- 0 replies
- 364 views
-
-
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நடிகை குஷ்புவை அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி நியமனம் செய்துள்ளார். தி.மு.க.வில் சில ஆண்டுகாலம் இருந்து வந்த நடிகை குஷ்பு, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுடனான மோதலால் கட்சியை விட்டு விலகினார். பின்னர் பாரதிய ஜனதாவில் சேருவார் எனக் கூறப்பட்ட நிலையில் திடீரென சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸில் நடிகை குஷ்பு இணைந்தார். காங்கிரஸில் குஷ்பு இணைந்தது முதலே தமிழக காங்கிரஸ் கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் நடிகை குஷ்பு முன்னிலைப்படுத்தப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று நடிகை குஷ்புவை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ச…
-
- 0 replies
- 475 views
-
-
நீதிபதி மார்கண்டேய கட்ஜூவை அடுத்து விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சியும மகாத்மா காந்தியை ஆங்கிலேயர்களின் உளவாளி(பிரிட்டிஷ் ஏஜெண்ட்) என்று தெரிவித்துள்ளார். நீதிபதி மார்கண்டேய கட்ஜூ மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் ஏஜெண்ட் என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி உத்தர பிரதேச மாநிலம் காசியபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பகத் சிங், சந்திர சேகர் ஆசாத், ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் முயற்சியால் மட்டுமே இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. தந்திரம் பெற காந்திய வழி போராட்டங்களும், உண்ணாவிரதங்களும் பயனில்லாதவை. காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட். பிஸ்மில் தூக்கிலி…
-
- 7 replies
- 1.6k views
-
-
இணையத்தில் ஆட்சேபத்திற்குரிய கருத்துக்களை வெளியிட்டால் கைது செய்வதற்கு காவல்துறையினருக்கு அதிகாரமளிக்கும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 ஏ பிரிவை ரத்து செய்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 66ஏ சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதால் அதனை ரத்துசெய்வதாக இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், இணையத்தில் சில கருத்துக்களை தடை செய்ய அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் தடுக்கவில்லை. சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரே மரணடைந்த போது, மும்பையில் நடந்த கடையடைப்பைக் கண்டித்து, தாணே மாவட்டத்தில் பால்கர் என்ற இடத்தைச் சேர்ந்த ஷகீன் தாதா, ரீனு சீனிவாசன் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவுசெய்தனர். இதற்காக அவர்கள் இருவரும் 66ஏ பிரிவின் கீ…
-
- 0 replies
- 279 views
-
-
இங்கிலாந்தில் 530 வருடங்களுக்கு முன் இறந்த மூன்றாம் ரிச்சர்ட் என்ற மன்னரின் உடல் நேற்று தான் முறையாக அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பிரான்சில் இருந்து இங்கிலாந்து வந்து குடியேறிய பிளான்டஜெனட் என்ற ஒரு பிரிவினர் அங்கு லீசெஸ்டர் என்ற பகுதியை 1154 முதல் 1485 வரை ஆண்டு வந்திருக்கிறார்கள். அந்த வம்சத்தின் கடைசி மன்னராக இருந்த மூன்றாம் ரிச்சர்ட், 1485 ல் நடந்த ஒரு போரில் இறந்துவி்ட்டார். அவரது உடலை அப்போது உள்ளவர்கள், ஒரு சவப்பெட்டி கூட் வைத்திருக்காமல்,ஒரு மரியாதையும் செய்யாமல் அப்படியே எங்கோ புதைத்திருக்கிறார்கள். 2012-ல் ஒரு புதைபொருள் ஆராட்சியாளர், தற்செயலாக இவரது எலும்புகளை, கார்பார்க்கிங் ஒன்றின் அடியில் கண்டுபிடித்து எடுத்து லீசெஸ்டன் பல்கலைக்கழகத்தில் கொ…
-
- 4 replies
- 476 views
-
-
சிங்கப்பூரின் தேசத்தந்தை என்று வர்ணிக்கப்படும் லி குவான் யூ மறைந்ததாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் சற்று முன்னர் அறிவித்திருக்கிறது. கடந்த பல வாரங்களாக அவர் கடும் நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரிட்டனிடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறும் வழிமுறையை முன்னின்று நடத்திய லீ க்வான் யூ பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார். அவர் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த மூன்று தசாப்தகாலத்தில் , அந்த நாடு, பெரிய இயற்கை வளங்கள் ஏதுமற்ற ஒரு சாதாரண துறைமுகம் என்ற நிலையில் இருந்து பிரகாசிக்கும் வர்த்தக மையமாக உருவான ஒரு அசாதாரண மாற்றத்தை ஏற்படுத்தினார். கருத்து மாறுபடுபவர்களை அவர் நீதிமன்றங்களை வைத்து ஒடுக்…
-
- 12 replies
- 2.1k views
-