உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26907 topics in this forum
-
ஒட்டாவா- கொன்சவேட்டிவ் அரசாங்கம் கனடாவின் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவர பரிசீலனை செய்கின்றது. இந்த மாற்றம் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி ஒருவரை குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றி நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்க பொலிசாருக்கு அனுமதி வழங்கும். இந்த மாற்றம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப் படுகின்றது. தற்போது எவராவது பயங்கரவாத செயல்பாட்டிற்கு திட்டமிடுகின்றார் என பொலிசார் நம்பும் பட்சத்தில் அந்நபரை பொலிசார் குற்றச்சாட்டு இல்லாமல் கைது செய்யலாம். பின்னர் 72 மணித்தியாலங்களிற்குள் பொலிசார் போதுமான ஆதாரங்கள் கொண்டுவராவிடில் சந்தேக நபர் விடுதலை செய்யப் படவேண்டும். பரிசீலனையில் இருக்கும் புதிய சட்டம் பொலிசார் ஒரு நீதிபதி முன் தோன்றி இரண்டு மேலதிக 4…
-
- 0 replies
- 228 views
-
-
USA $1 = CAD .7987 கனடிய டொலர் கிட்டத்தட்ட 6-வருடங்களில் முதல் தடவையாக யுஎஸ்.சின் 80-சதத்திற்கு கீழே சறுக்கியுள்ளது. புதன்கிழமை கனடிய டொலர் யுஎஸ்சின் 79.87-சதமாக காணப்பட்டுள்ளது. இது செவ்வாய்கிழமையை விட சதத்திற்கு முக்கால் விகிதம் குறைந்துள்ளது. யுஎஸ். டொலரின் பெறுமதி கனடா உட்பட்ட உலகின் பல பெரிய நாணயங்களிற்கு எதிராக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கனடிய லூனியின் பெறுமதி வீழ்ச்சியடைந்த பின்னர் ஒரு யுஎஸ் டொலரை வாங்க அதிகார பூர்வமான பரிமாற்ற விகிதமாக 1.25 கனடிய டொலர்கள் வேண்டும். 2009-ஏப்ரலில் இருந்து கனடிய டொலர் 80-சத யுஎஸ்சிற்கு பரிமாற்றம் செய்யப்படவில்லை. அடுத்த சில மாதங்களிற்கு நிலைமை மோசமாகலாம் எனவும் கூறப்படுகின்றது. கச்சா எண்ணெயின் விலை புதன்கிழமை பீப…
-
- 0 replies
- 473 views
-
-
டமாஸ்கஸ்: சிரியாவில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.விடம் ராணுவ பயிற்சி பெறும் கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்துவிடுவது தொடர்கதையாகிவிட்டது அந்நாட்டுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிரியாவின் பல கிளர்ச்சி குழுக்களுக்கு அளித்து வந்த நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தி வருகிறது. சிரியாவின் வடக்கு பகுதியில் 16க்கும் மேற்பட்ட கிளர்ச்சி குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த கிளர்ச்சி குழுக்களுக்கு அமெரிக்கா முழு அளவில் நிதி உதவி வழங்கி வருகிறது. தற்போது சிரியா புரட்சியாளர்கள் முன்னணி உள்ளிட்ட 4 கிளர்ச்சி குழுக்களுக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.விடம் இருந்து நிதி உதவி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஹராஹத் …
-
- 3 replies
- 517 views
-
-
நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தலையைத் துண்டித்து, அந்நாட்டை இஸ்லாமிய நாடாக்குவோம் என ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘நாங்கள் விரைவில் அமெரிக்காவை அடைவோம் ஒபாமா. அப்போது வெள்ளை மாளிகையில் வைத்து உமது தலையைக் கொய்து, அமெரிக்காவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம்' என தெரிவிக்கப் பட்டுள்ளது. குர்தீஷ் வீரரின் தலையைக் கொய்வதற்கு முன்னதாக, ஈராக்கின் மோசூல் நகர வீதியில் நின்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பேசுவது போல் அந்த வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ காட்சிகளில் அமெரிக்கா மட்டுமின்றி பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்திற்கும் மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரவ…
-
- 4 replies
- 655 views
-
-
இந்திய வெளிவிவகாரச் செயலராக ஜெய்சங்கர் நியமனம் –அமைதிப்படையின் ஆலோசகராக இருந்தவர் JAN 29, 2015 | 0:12by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் இந்திய வெளிவிவகாரச் செயலராக, எஸ்.ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்த சுஜாதா சிங்கின் பதவிக்காலம் எட்டுமாதங்களால் குறைக்கப்பட்டதையடுத்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவையின் நியமனக் குழுவின் கூட்டத்துக்குப் பின்னர், இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றும் எஸ்.ஜெய்சங்கர் வரும் 31ம் நாளுடன் இந்திய வெளிவிவகாரச் சேவையில் இருந்து ஓய்வு பெறவிருந்த நிலையிலேயே, புதிய வெளிவிவகாரச் செயலராக அவர் நியமிக்கப்பட்…
-
- 2 replies
- 480 views
-
-
கனடாவில் பயங்கரவாதத்தைத் தூண்டுவதற்கும், சட்டபூர்வமான மதக் கருத்துக்களை வெளியிடுவதற்கும் இடையில் மிகக் குறுகிற வேறுபாடுதான் இருப்பதாக கனேடிய அமைச்சர் ஜேசன் கெனி தெரிவித்தார். தமது அரசு எதிர்வரும் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், அந்த வேறுபாட்டை கருத்திலெடுத்துத் தயாரிக்கப்பட்டதென நேற்று வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் குறிப்பிட்டார். சட்டபூர்வமான மதக் கருத்துக்களை வெளியிடுவதைத் தடை செய்வது தமது அரசின் நோக்கம் அல்லவென அவர் குறிப்பிட்டார். தனிநபர்கள் தாக்குதல்களை நடத்துவதைத் தடுப்பதற்கும், பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்காக பயணம் செய்வதைத் தடுப்பதற்கும் வழிவகுக்கும் வகையில் புதிய சட்டமூலம் அமையுமென பிரதம மந்திரி ஸ்ரீபன் ஹாப்பர் கூறினார். ஆனால், ஏற…
-
- 0 replies
- 584 views
-
-
சவுதியில் முக்காடு அணியாத மிஷல் ஓபாமா: ட்விட்டரில் திட்டும் மக்கள். ரியாத்: சவுதி சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் தலையில் ஸ்கார்ப் அணியாதது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தனது மனைவி மிஷலுடன் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 25ம் தேதி இந்தியா வந்தார். அவர்கள் நேற்று கிளம்பி சவுதி அரேபியா சென்றனர். ஆக்ரா சென்று தாஜ் மஹாலை பார்க்கும் திட்டத்தை கூட ரத்து செய்துவிட்டு அவர்கள் சவுதி கிளம்பினர். சவுதியில் மிஷல் ஒபாமா தலையில் ஸ்கார்ப் அணியாதது தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சவுதியில் பெண்கள் தலையில் ஸ்கார்ப் அணிய வேண்டும் அல்லது புர்கா அணிந்து முகத்தை மறைக்க வேண்டும். இந்நிலையில் மிஷல் ஸ்கார்ப் அணியாதது பற்றி பலரும் ட்விட்டர…
-
- 37 replies
- 2.8k views
-
-
சமையல்காரரின் பேரன் ஒருவன் அதிபராக முடியும் என்பதற்கு நானே உதாரணம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உருக்கமாக கூறினார். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, டெல்லியில் இன்று நடைபெற்ற இருநாட்டு உறவு குறித்த கூட்டத்தில் பேசினார். அப்போது, அமெரிக்க மக்களின் நட்பை இந்திய மக்களுக்காக கொண்டு வந்திருக்கிறேன் என்றார். குடியரசு தின விழாவில் பங்கேற்ற முதல் அமெரிக்க அதிபர் என்பது பெருமையளிக்கிறது என்று கூறிய ஒபாமா, இந்தியா- அமெரிக்க உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்க உறுதியாக உள்ளேன் என்றார். இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் மூலம் புதிய அத்தியாயம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்றும், இந்தியா, அமெரிக்கா என்ற இரு நாடுகளும் வலிமை வாய…
-
- 0 replies
- 576 views
-
-
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்க காரணம், தொழில்நுட்ப கோளாறு இல்லை, ஹேக்கர்கள் கைவரிசை! லண்டன்: பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களை ஹேக் செய்தது தாங்கள்தான் என்று லிசார்ட் ஸ்குவாட் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் சுமார் ஒரு மணிநேரமாக இன்று முடங்கிப்போனது. இதுகுறித்த பரபரப்பு உலகமெங்கும் பரவிய நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இதுபோல நிகழ்ந்ததாக அந்த நிறுவனங்கள் விளக்கம் கொடுத்தன. ஆனால் இரண்டும் ஒரே நேரத்தில் எப்படி தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகம் வலைஞர்களுக்கு விலகாமலே இருந்துவந்தது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்க காரணம், தொழில்நுட்ப கோளாறு இல்லை, ஹேக்கர்க…
-
- 0 replies
- 369 views
-
-
டெல்லி: இந்தியாவுடனான உறவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல சீனா தயாராக இருப்பதாக அந்த நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இந்தியா தனது 66வது குடியரசு தினத்தை இன்று கொண்டாடிவருகிறது. குடியரசு தின விழாவுக்கான சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை தந்துள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையே அணு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவும்-இந்தியாவும் மிகவும் நெருக்கமான நட்பு நாடுகளாக மாறிவருவதை இந்த ஒப்பந்தங்கள் வெளிப்படுத்தின. இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்தியாவுடனான கூட்டுறவை அடுத்த கட்டத்திற்கு கொண்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்தியா விஜயம் செய்திருக்கும் அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா மீது இலங்கையர்கள் குழுவொன்று அல்லது மாலைதீவினர் குடியரசு தினத்தன்று தாக்குதல் நடாத்தவிருப்பதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் மத்திய அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக பிரபல இந்திய தேசிய பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், நீண்ட நாட்கள் தங்கியிருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் அவதானமாக இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக விசா இல்லாத நிலையில் தொடர்ந்தும் தங்கியிருப்போர் தொடர்பில் கண்காணிப்புகளை அதிகரித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய குடியரசு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் இச்செய்தி வெளியாகியமை குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID…
-
- 1 reply
- 424 views
-
-
கனடா- வட அமெரிக்காவின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட H7N9 பிரிட்டிஷ் கொலம்பியாவில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதனை பறவை காய்ச்சல் என்றும் சொல்லப்படும். அண்மையில் சீனாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என கனடா பொது சுகாதார பிரிவு உறுதிப்படுத்தி உள்ளது. இவர்கள் சீனாவில் இருந்து வேறு பல இடங்களிற்கும் சென்று விட்டு ஜனவரி மாதம் 12-ந்திகதி கனடா திரும்பிய பின்னர் சுகயீனமுற்றதாக கூறப்பட்டுள்ளது. பயணத்தின் போது இவர்களிற்கு எதுவித அறிகுறிகளும் தென்படவில்லை. ஜனவரி 14-ந்திகதிக்கு பின்னரே தோன்ற ஆரம்பித்துள்ளது. பறவை காய்ச்சல் மனிதரிலிருந்து மனிதருக்கு இலகுவில் தொற்றக் கூடிய சாத்திய கூறுகள் இல்லை எனவும் இதனால் அபா…
-
- 0 replies
- 384 views
-
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்| கோப்புப் படம் "அமெரிக்க சதிவலையில் வீழ்ந்துவிட வேண்டாம்" என குடியரசு தின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவுக்கு சீனப் பத்திரிகைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், "இந்தியா - சீனா உறவு மேம்பட்டு இருநாடுகளுக்கும் இடையே அமைதி மேலோங்க வேண்டும் என சீனா விரும்புவகிறது" என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இன்று (திங்கள்கிழமை) சீனாவில் வெளியான குளோபல் டைம்ஸ், பீப்பிள்ஸ் டெய்லி ஆகிய இரண்டு பத்திரிகைகளிலும் வெளியான கட்டுரைகளில், "அமெரிக்க சதிவலையில் இந்தியா வீழ்ந்துவிட வேண்டாம். சீனாவுக்கு எதிராக இந்தியாவை திசை திருப்பவே அண்மைகாலமாக, அ…
-
- 0 replies
- 294 views
-
-
வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் 5000க்கும் மேலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரலாறு காணாத பனிப் பொழிவு அங்கு சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில் பனிப் பொழிவு ஏற்படக் கூடும் என்று அமெரிக்காவின் தேசிய வானிலை சேவைகள் மையம் அறிவித்துள்ளதை அடுத்தே இந்த அளவுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் வீசும் என்று எதிர்பார்க்கப்படும் குளிர்காலப் புயல் காரணமாக 90 செ.மீ அளவுக்கு பனிப் பொழிவு ஏற்படக் கூடும் என்று வானியல் வல்லுநர்கள் அறிவித்துள்ளனர். மேலும் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் கடுமையான காற்றும் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மக்களை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என நியூயார்க்கின் மேயர் கூறியு…
-
- 3 replies
- 481 views
-
-
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் உடல் கடலில் வீசப்படவில்லை என்றும் அவரது உடலை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று அங்கு ரகசிய இடத்தில் வைத்து எரித்துவிட்டதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு மே 1ம் தேதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கி வாழ்ந்து வந்த பின்லேடனை, அமெரிக்கக் கடற்படையின் சீல் பிரிவு கமாண்டோக்கள் அதிகாலையில் வீடு புகுந்து அதிரடியாக தாக்கி சுட்டு வீழ்த்தினர். பின்னர் பின்லேடன் உடலை கடலில் அடக்கம் செய்து விட்டதாகவும் அமெரிக்கா அறிவித்தது. ஆனாலும் பின்லேடனின் உடல் எங்கே போனது என்பதில் சர்ச்சை நீடித்து வந்தது. இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு உளவு ஆய்வு நிறுவனம் ஒன்றின் இமெய…
-
- 1 reply
- 534 views
-
-
யு.எஸ்.- ஒரு சிறிய ஆளில்லாத விமானம் குறைந்த உயரத்தில் பறந்து திங்கள்கிழமை விடியலுக்கு முன் வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் மோதியுள்ளது என இரகசிய சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் எந்த அச்சுறுத்தலையும் முன்வைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வணிகரீதியாக கிடைக்க கூடிய பெயரற்ற நான்கு சுற்றியக்கியால் தூக்கப்படுவதாகும். இது குறித்து புலன்விசாரனை இடம்பெறுகின்றதாக தெரிவிக்க பட்டுள்ளது. சம்பவம் நடந்த சமயம் அதிபார் பராக் ஒபாமா மாளிகையில் இல்லை. அதிபரும் முதல் பெண்மணி மிசேல் ஒபாமாவும் இந்தியாவில் உள்ளனர். அதிபரின் பெண் பிள்ளைகள் ஷாசா மற்றும் மலியா இருவரும் அவர்களது பேத்தியார் மரியம் றொபின்சனுடன் வெள்ளை மாளிகையில் இருந்தனர் என கூறப்படுகின்றது. அதிபரின் இந்திய பய…
-
- 0 replies
- 298 views
-
-
"அமெரிக்க சதிவலையில் வீழ்ந்துவிட வேண்டாம்" என குடியரசு தின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவுக்கு சீனப் பத்திரிகைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், "இந்தியா - சீனா உறவு மேம்பட்டு இருநாடுகளுக்கும் இடையே அமைதி மேலோங்க வேண்டும் என சீனா விரும்புவகிறது" என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இன்று (திங்கள்கிழமை) சீனாவில் வெளியான குளோபல் டைம்ஸ், பீப்பிள்ஸ் டெய்லி ஆகிய இரண்டு பத்திரிகைகளிலும் வெளியான கட்டுரைகளில், "அமெரிக்க சதிவலையில் இந்தியா வீழ்ந்துவிட வேண்டாம். சீனாவுக்கு எதிராக இந்தியாவை திசை திருப்பவே அண்மைகாலமாக, அமெரிக்கா இந்தியாவுடன் அதிகளவு நெருக்கம் காட…
-
- 2 replies
- 1.1k views
-
-
இந்தியாவின் முன்னணி கேலிச்சித்திரக் கலைஞர்களில் ஒருவரான ஆர் கே லக்ஷமண் சற்று நேரத்துக்கு முன்னர் காலமானர். இவரது 'திருவாளர் பொதுஜனம்' கேலிச்சித்திரம் மிகவும் பிரபலமானது அவருக்கு வயது 93. சிறுநீர் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவர் சில நாட்கள் முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று-திங்கட்கிழமை அவர் உயிரிழந்தார். அவர் உருவாக்கிய 'பொதுஜனம்' எனும் கேலிச்சித்திரம் மிகவும் பிரபலமடைந்தது. நாட்டு நடப்புகளையும், அரசியல்வாதிகளையும் மையப்படுத்தி அந்தப் பாத்திரத்தின் மூலம் நையாண்டித்தனமாக தனது கருத்துக்களை அவர் வெளிப்படுத்தி வந்தார். அவர் காலஞ்சென்ற பிரபல எழுத்தாளர் ஆர் கே நாராயணின் சகோதரர் என்பது குறிப்பிடத்தகுந்தது. …
-
- 0 replies
- 384 views
-
-
நியூயார்க்: உலக அழகிப் போட்டியில் கொலம்பியா அழகி பௌலீனா வேகா பட்டம் வென்றார். 2015–ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் (பிரபஞ்ச அழகி) போட்டி அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் நடந்தது. அதில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, உக்ரைன் உள்ளிட்ட 88 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். உடை அலங்காரம், அறிவுத்திறன், உடல் அழகு உள்ளிட்ட பல்வேறு பிரிவு களில் போட்டி நடந்தது. நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. அதில் கொலம்பியாவை சேர்ந்த பவுலினா வேகா மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார். அவருக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற வெனிசுலா அழகி காபிரியலா இஸ்லர் கிரீடம் அணிவித்தார். 22 வயதாகும் வேகா தொழில் நிர்வாகம் படித்து வருகிறார். தான் பங்கேற்ற முதல் சர்வதேச அழகிப் போட்டி இதுதான் என்றும், இதில் பட்டம் …
-
- 2 replies
- 315 views
-
-
டெல்லி: இந்திய குடியரசு தின வரலாற்றில் முதல்முறையாக, ராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவினரும் முதன்முறையாக அணிவகுப்பு நிகழ்த்திக் காண்பித்தனர். இன்று குடியரசு தின அணிவகுப்பில் இந்திய தொழில் நுட்பத்தில் உருவான நவீன ரக ஆகாஷ் ஏவுகணை, நீர் மூழ்கி எதிர்ப்பு விமானம் பி-81, நவீன மிக் 29 ரக போர் விமானம், பீஷ்மா போர் டாங்கி, தானியங்கி பிரமோஷ் ஏவுகணை மற்றும் அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர்கள் ஆகியவை முதலில் அணிவகுத்து வந்தன. தொடர்ந்து இந்திய ராணுவத்தில் பெண்களின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் பெண்களின் முப்படை வீரர்களின் அணிவகுப்புக்கு 154 பெண் அதிகாரிகள் தலைமை ஏற்று நடத்தி வந்த னர். 25 வயதாகும் கேப்டன் திவ்யா அஜித் குமார் தலைமையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. "நாம் அனைவரும்…
-
- 0 replies
- 561 views
-
-
டெல்லி: இந்தாண்டு டெல்லி குடியரசு தின விழா ஊர்வலத்தில் தமிழக அரசின் ஊர்தி இடம் பெறவில்லை. இது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவின் 66வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், டெல்லி குடியரசு தின விழா ஊர்வலத்தில் இந்தாண்டு தமிழக அரசின் ஊர்தி பங்கு பெறவில்லை. மொத்தம் 16 மாநிலங்களுக்கு மட்டுமே இந்த ஊர்வலத்தில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த 16 மாநிலங்கள் பெயர் பட்டியலில் தமிழகத்தின் பெயர் இடம் பெறவில்லை. கடந்தாண்டு நடந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் இரண்டாம் பரிசைத் தட்டிச் சென்றது தமிழக அரசின் ஊர்தி. ஆனால், சிலப்பல காரண…
-
- 0 replies
- 330 views
-
-
ஜனாதிபதி மாளிகையில் எட்டிப்பார்த்த நாய்!!: துரத்தி பிடித்த போலீஸ். வர்றார்... ஒபாமா வர்றார்... என இந்தியா முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்க... டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் எறும்பு கூட எட்டிப்பார்க்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. தெரு நாய் ஒன்று கடும் பாதுகாப்பையும் மீறி குடியரசுத்தலைவர் மாளிகையில் ஹாயாக வலம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டின் 66 வது குடியரசு தினவிழாவில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று வருகை தந்தார். அவருக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்படுத்தப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒபாமா வர இருந்த சம…
-
- 7 replies
- 1.3k views
-
-
வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வரும் போது விமான நிலையத்தில் அவர்களை நாட்டின் பிரதமரோ, ஜனாதிபதியோ வரவேற்கும் மரபு கிடையாது. வழியனுப்பும் போது மட்டும் விமான நிலையம் வந்து வழியனுப்புவார்கள். மத்திய மந்திரி ஒருவர்தான் தலைவர்களை வரவேற்க விமான நிலையம் வந்து காத்திருப்பார். அதேபோல் இப்போது ஒபாமாவை வரவேற்கும் வரவேற்பு குழு தலைவராக மத்திய மந்திரி பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் ஒபாமாவை வரவேற்க பாலம் விமான நிலையம் வந்து வரவேற்பறையில் காத்து இருந்தார். ஆனால் திடீர் என்று பிரதமர் நரேந்திர மோடி பாலம் விமான நிலையத்துக்கு வந்தார். ஒபாமா விமானம் தரை இறங்கியதும் மோடி அந்த விமானத்தின் அருகே சென்று நின்று கொண்டார். அங்கிருந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேசிக் கொண்டு இருந…
-
- 1 reply
- 324 views
-
-
ஜப்பானியப் பிணைக் கைதிகள் சிரியாவில் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள தமது பிரஜைகள் இருவரில் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறும் வீடியோ காட்சிகளைத் தாம் சரிபார்த்து வருவதாக ஜப்பான் கூறியுள்ளது. இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் இவர்களை பிடித்து வைத்துள்ளனர். ஹருணா யாக்காவா என்ற பணயக் கைதி கொல்லப்பட்டதாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் மற்றொரு பணயக் கைதியான கென்ஜி கோடோ இன்னும் உயிருடன் இருப்பதாகவும் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ஆராய பிரதமர் ஷின்ஸோ அபே தலைமையில் அமைச்சரவை அவசரமாகக் கூட்டப்பட்டது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு ஜப்பான் பணியாது என்று பிரதமர் கூறியுள்ளார். இந்த வீடியோ வெளியிட்டுள்ள கொலையை மன்னிக்க முடியாதது என்று தலைமை…
-
- 2 replies
- 384 views
-
-
இஸ்லாமிய அரச தீவிரவாதிகளுக்கு உதவும் நோக்கில் சிரியாவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்த ஒரு பெண்ணுக்கு அமெரிக்காவின் டென்வர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. கடந்த ஆண்டு ஜெர்மனி செல்லும் விமானத்தில் ஏறத் தயாராகிக் கொண்டிருந்த 19 வயதான ஷனான் கனோலியை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் முஸ்லீமாக மதம் மாறியவர். பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு உதவ சதி புரிந்த குற்றச்சாட்டை கானோலி நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். மேலும், தன்னைக் கைது செய்ததன் மூலம் தனது உயிரை அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வுத் துறை காப்பாற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிரியாவிலும், மத்திய கிழக்கின் பிற நாடுகளிலும் நடக்கும் போர்களில் பங்கு பெற மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான…
-
- 4 replies
- 654 views
-