உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26715 topics in this forum
-
காஸாவில் ஐக்கிய நாடுகள் பாடசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐ.நா.வின் பாடசாலை ஒன்றில் தங்கியிருந்த 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 200 பேர் காயமடைந்துள்ளனர். காஸாவில் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் நடத்தப்பட்டு வரும் குறித்த பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் தங்கியுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோன் கெர்ரியுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் பான் கீ மூன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பான் கீ…
-
- 0 replies
- 361 views
-
-
கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு ரூ. 100 கோடியில் நினைவு சின்னம்! அமைச்சர் அருண்ஜெட்லி அறிவிப்பு [sunday 2014-07-27 13:00] கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு ரூ. 100 கோடியில் நினைவு சின்னம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார். பாகிஸ்தானுடன் கடந்த 1999ம் ஆண்டு கார்கில் பகுதியில் ஏற்பட்ட போரில் ஏராளமான வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். அந்த போரில் இந்தியா, பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைத்தது. கார்கில் போரில் வென்று 15 ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தியா கேட் பகுதியில் அமைந்துள்ள அமர்ஜவான் ஜோதி எனப்படும் ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் மத்திய ராணுவ அமைச்சர் அருண்ஜெட்லி அஞ்சலி செலுத்தினார்…
-
- 1 reply
- 413 views
-
-
3000- மீட்டர் சைக்கிளோட்டத்தில் வெள்ளி, வெண்கலம் பெற்ற ஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் தங்கம் வென்ற இங்கிலாந்து வீராங்கனை ஜோவானா ரோவ்ஸெல் (நடுவில்) கிளாஸ்கோ கொமன்வெல்த் போட்டிகளின் இரண்டாவது நாள் போட்டிகளின் களநிலவரப் படி, (ஜிஎம்டி நேரம் 16.00 மணியளவில்) பதக்கப் பட்டியலில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் கடும்போட்டிகளுக்கு நடுவே முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இங்கிலாந்து 8 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் அடங்கலாக 23 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 7 தங்கப் பதக்கங்களுடன் 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தமாக 22 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இம்முறை போட்டியை நடத்தும் ஸ்கொட்லாந்து 5 தங்கம் அடங்கலாக 11 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத…
-
- 5 replies
- 633 views
-
-
மோடிக்கு விசா மறுக்கப்பட்ட விவகாரம்: அமெரிக்கா விளக்கம்! ) வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடிக்கு விசா மறுக்கப்பட்ட விவகாரம் முடிந்து போன ஒன்று என அமெரிக்கா கூறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது அவருக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது. இதையடுத்து மோடி பிரதமராக பதவியேற்றதும் அவரை அமெரிக்கா வருமாறு அதிபர் ஒபாமா பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், மோடிக்கு விசா மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத்தறை இணையமைச்சர் நேஷா தேசாய் பிஸ்வால் கூறுகையில், "தனி நபர் ஒருவருக்கு அமெரிக்கா விசா வழங்கும் போது அவர் மீதான வழக்குகள் தொடர்பான விஷயங்களை கவனத்தில் எடுத…
-
- 0 replies
- 502 views
-
-
மலேசிய விமானம் மீதான தாக்குதலின் எதிரொலி - நெதர்லாந்தில் வசித்து வரும் புடினின் மகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது n உக்ரைனில் மலேசிய விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக நெதர்லாந்தில் வசித்து வரும் ரஷ்ய அதிபர் புடின் மகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் வெளியேற வேண்டும் என்ற அரசியல் தலைவர் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது. உக்ரைனில் கடந்த 17ம் தேதி ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் பகுதியின் மேலே பறந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இதில் 298 பயணிகளுடன் நடுவானில் விமானம் வெடித்து சிதறியது. இந்த தாக்குதலுக்கு கிளர்ச்சியாளர்கள்தான் காரணம் என உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. மேலு…
-
- 1 reply
- 556 views
-
-
2 கிலோ தங்கத்தை ஷூவுக்குள் மறைத்து கடத்தி வந்த ஆப்கானிஸ்தானியர்கள் கைது ஜெய்ப்பூர், ஜூலை 26- ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சங்கானர் விமான நிலையத்தில் அபுதாபியில் இருந்து வந்த விமானம் இன்று தரையிறங்கிய போது பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறையினர் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பயணிகளில் இருவரின் நடத்தையில் சந்தேகப்பட்ட அதிகாரிகள், அவர்களை தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அவர்கள் ‘ஷூ’க்களின் உள்பக்கத்தில் ரகசியமாக தங்க பிஸ்கட்களை மறைத்து, கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தானை சேர்ந்த அவர்களை கைது செய்த போலீசார், மறைத்து கடத்தி வந்த 2 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள தங்க பிஸ்கட்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர் மாலைமலர்
-
- 3 replies
- 350 views
-
-
அமெரிக்காவை கண்டித்து மும்பையில் பெப்சி, கோக் குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை! [saturday 2014-07-26 08:00] பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இம் மோதலை முடிவுக்கு கொண்டுவராத அமெரிக்காவை கண்டித்தும் மும்பையில் பெப்சி, கோக் குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காஸா பகுதியில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது இஸ்ரேல். மொத்தம் 850 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் பிஞ்சு குழந்தைகள். இந்த இனப்படுகொலையை தடுக்க அமெரிக்கா எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கண்டித்து மும்பையில் பெப்சி, கோக் விற்பனைக்கு தடை விதிக…
-
- 0 replies
- 568 views
-
-
ஓடும் காரில் 4 பேர் என்னை கற்பழித்தார்கள்!! - மும்பை பெண் பரபரப்பு புகார்! [saturday 2014-07-26 08:00] ஓடும் காரில் 4 பேர் சேர்ந்து கற்பழித்ததாக 35 வயது பெண் காவல்துறையில் பரபரப்பு புகார் செய்தார். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தானே மிரா ரோட்டில் இருந்து 'ஷாப்பிங்' செய்வதற்காக 35 வயது பெண் ஒருவர் மும்பை பாந்திரா லிங்க் வந்தார். பின்னர் அங்கிருந்து பாந்திரா ரயில் நிலையம் செல்ல ஆட்டோவில் ஏறி சென்றார். ஆட்டோ டிரைவர் அவரை தாராவியில் இறக்கி விட்டார். அப்போது அங்கு 4 பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் காரில் 'லிப்ட்' கொடுப்பதாக கூறி அந்த பெண்ணை ஏற்றி சென்றனர். ஆனால் ஓடும் காரிலேயே அந்த பெண்ணை 4 பேரும் சேர்ந்து கற்பழித்…
-
- 0 replies
- 373 views
-
-
12 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புதல் இஸ்ரேல் நாட்டில் கடந்த மாதம் 12-ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 இளைஞர்களை பாலஸ்தீனத்தின் காசா எல்லைப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் குழுவினர் கடத்தினர். அந்த மாணவர்களைக் கொன்று, பிரேதங்களை பாலஸ்தீனம் - இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியான வெஸ்ட் பேங்க் அருகே வீசிச் சென்றனர். இதனையடுத்து, ஹமாஸ் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹமாஸ் குழுவினரும் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தி வருவதால் காசா பகுதியை அவர்களிடம் இருந்து பறிக்கும் நோக்கத்தில் தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப…
-
- 0 replies
- 290 views
-
-
உத்தரகாண்ட் சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி டேராடூன், ஜூலை 25- உத்தரகாண்ட் மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் பொறுப்பை ஏற்ற ஹரிஷ் ராவத் அரசியலமைப்பு சட்டப்படி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவர் போட்டியிடுவதற்காக தார்சூலா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹரிஷ் தாமி பதவி விலகி வழிவிட்டார். இதேபோல் டோய்வாலா தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் பொகாரியால், சோமேஷ்வர் தொகுதி எம்.எல்.ஏ. அஜய் தாம்டா ஆகியோர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து இந்த மூன்று தொகுதிகளிலும் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மூன்று தொகுதிக…
-
- 0 replies
- 565 views
-
-
வரும் ஜூலை 30ஆம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி இந்தியா வருகிறார். 3 நாள் பயணமாக இந்தியா வரும் அவர், இந்திய தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலக பிரச்சனைகள் குறித்து பேச உள்ளார். இந்தியா வரும் ஜான் கெர்ரியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரவேற்று வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது. பின்னர் இரு தலைவர்களும் இணைந்து 5வது இந்திய-அமெரிக்க மூலோபாய கலந்துரையாடலை நடத்துவார்கள். பின்னர் இருவரும் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் சத்திக்கும் போது பேச உள்ள விவகாரங்கள் குறித்து அலசுவார்கள் என்று தெரிகிறது. பின்னர் பிரதமர் மோடியையும் கெர்ரி சந்திக்க உள்ளார். அமெரிக்கா அதிபரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோ…
-
- 0 replies
- 352 views
-
-
எங்கும் ரத்தம், எங்கும் மரணம் உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்! உயிருக்கு உயிரான நண்பர்களே, நேற்று இரவு ரொம்பவும் கொடுமை. எத்தனையெத்தனை மக்கள்! குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை; எல்லோரும் அப்பாவிப் பொதுமக்கள்; படுகாயமடைந்து, உறுப்புகளை இழந்து, ரத்தம் வடிய நடுங்கிக்கொண்டு, செத்துக்கொண்டு வண்டிகளில் மந்தைமந்தையாக ஏறிச்சென்று… அப்பப்பா! இப்படியொரு நிலைக்குத்தான் இறுதியில் கொண்டுவந்து விட்டிருக்கிறது இஸ்ரேலியப் படையெடுப்பு. இங்கே அவசரச் சிகிச்சை ஊர்திகளில் பணியாற்றுபவர்கள்தான் நிஜமான வீரர்கள். காஸாவிலுள்ள எல்லா மருத்துவமனைகளிலும் நேரங்காலம் பார்க்காமல் 12-24 மணி நேரம் கூடப் பணியாற்றுகின்றனர். கொடூரங்கள் நிரம்பிய பணியின் …
-
- 0 replies
- 460 views
-
-
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 7 பேர் பலியாயினர். உத்தரபிரதேச மாநிலம் அட்டாரியா என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாகவும், அதில் இருந்த பைலட் மற்றும் துணை பைலட் உள்பட 7 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை என்றும், இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். http://news.vikatan.com/article.php?module=news&aid=30598
-
- 1 reply
- 394 views
-
-
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் குழு அருகே அமர எந்த ஒரு கட்சியும் விரும்பாமல் இருப்பதால், இருக்கைகள் ஒதுக்குவதில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு விநோதமான பிரச்னை எழுந்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களை மட்டுமே கைப்பற்றியதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலைமை அக்கட்சிக்கு ஏற்பட்டுவிட்டது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களில் குறைந்தது 55 இடங்களையாவது கைப்பற்றுகிற கட்சிக்குத்தான் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். ஆனால் அந்த அளவுக்கு இடங்கள் இல்லாததால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படவில்லை. இருப்பினும் ஆளும் பா.ஜனதா கூட்டணிக்கு அடுத்தபடியாக அதிக…
-
- 0 replies
- 643 views
-
-
உக்கிரேனிய பிரதமர் அர்ஸெனி யட்ஸெனியுக் வியாழக்கிழமை பதவி விலகியுள்ளார். சக்தி வளத்துறையின் கட்டுப்பாட்டை பொறுப்பேற்பதற்கான சட்டமொன்றை அந்நாட்டு பாராளுமன்றம் நிறைவேற்ற தவறியதையடுத்தே அவர் பதவி விலகியுள்ளார். அதேசமயம் அவரின் பதவி விலகல் இடம்பெறுவதற்கு முன்னர் அன்றைய தினம் இரு கட்சிகள் ஆளும் கூட்டமைப்பில் இருந்து விலகியிருந்தன. ரஷ்யாவின் முகவர்களாகவுள்ள உறுப்பினர்களை பாராளுமன்றத்திலிருந்து அகற்றும் வகையில் புதிய தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு வழிவகை செய்யும் முகமாகவே அந்த கட்சிகள் விலகியிருந்தன. மேற்படி, கட்சிகளின் நடவடிக்கைக்கு உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ வரவேற்பளித்துள்ளார். பிரதமர் அர்ஸெனியின் பதவி விலகலானது கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள…
-
- 0 replies
- 418 views
-
-
இராக்கின் வடக்கே மோசுல் நகரிலும் சுற்றியுள்ள இடங்களிலும் சிறுமிகளும் பெண்களும் பெண்ணுறுப்பை சிதைக்கும் நடைமுறைக்கு உட்பட வேண்டும் என அப்பிராந்தியத்திலுள்ள இஸ்லாமியவாத ஆயுததாரிகள் உத்தரவிட்டுள்ளதாக ஐநா கூறியுள்ளது. இந்த உத்தரவினால் பெரும் கவலை அடைந்துள்ளதாக இராக்கிற்கான ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி ஜாக்குலின் பேட்காக் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு சம்பந்தமாக சுன்னி ஜிகாதி குழுவான ஐசிஸ் நேரடியாக எவ்வித கருத்தையும் கூறவில்லை. இந்த உத்தரவு சம்பந்தமாக அரபு நாடுகளில் மக்கள் சமூக வலைத்தளங்களில் ஆத்திரமும் அதிர்ச்சியும் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இந்த உத்தரவை ஐசிஸ் பிறப்பித்ததாகத் தெரியவில்லை என ஐசிஸுடன் தொடர்புடைய சமூக வலைத்தள கணக்குகள் கூறுகின்றன. பெண்ணுறுப்ப…
-
- 1 reply
- 593 views
-
-
ஜேர்மனியில் மருத்துவ தேவைகளுக்காக தங்கள் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்க்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கஞ்சா செடி பல மருத்துவ நன்மைகளை தரக்கூடியவை. மேலும் இவை மருந்து கடைகளில் மிகவும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில் ஜேர்மனியை சேர்ந்த நடுத்தர குடும்பத்தினர் ஐந்து பேருக்கு கஞ்சாவினை மருந்தாக பயன்படுத்துமாறு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது கடைகளில் வாங்குவதற்கு மாதம் 800 முதல் 1000 பவுண்ட்ஸ் செலவு ஆகிறது. இதனால் நபர் ஒருவர் தனது மாத ஊதியம் 1500 பவுண்ட்ஸ் என்பதால் காப்பீட்டு திட்டம் பணம் வழங்க மறுப்பதாலும் கஞ்சாவை தனது வீட்டிலேயே வளர்க்க அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஐந்தில் மூவருக்கு கஞ்சாவை வீட்டிலேயே வளர்க்க அனுமதியளித்து…
-
- 3 replies
- 562 views
-
-
EN IMAGES. Troyes : six morts dans une collision frontale Publié le 22.07.2014, 22h44 | Mise à jour : 23.07.2014, 12h19 (FRANCOIS NASCIMBENI / FRANCOIS GUILLOT) Réagir Un minibus transportant des enfants a heurté de plein fouet mardi après-midi un poids lourd roulant en sens inverse sur la départementale 619, sur la commune de Courteranges (Aube). Le dernier bilan fait état de six morts dont cinq enfants originaires de Seine-et-Marne. Le conducteur du véhicule a également trouvé la mort. Le ministre de l'Intérieur, Bernard Cazeneuve, et le secrétaire d’Etat aux Transports, Frédéric Cuvillier, sont arrivés, en fin d'après-midi près du …
-
- 2 replies
- 381 views
-
-
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் 20 மாணவர்கள் பலியாகினர்; 19 பேர் காயமடைந்தனர். மேடக் மாவட்டம் மசாய்பேட் கிராமத்தில் இன்று காலை 9.10 மணியளவில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது. காகடியா டெக்னோ பள்ளிக்குச் சொந்தமான பேருந்து சுமார் 40 மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, மசாய்பேட் கிராமம் அருகே ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த நான்டெட் - செகந்தராபாத் பயணிகள் ரயில் பேருந்து மீது மோதியது. இதில் பேருந்து ஓட்டுநர், பேருந்தில் இருந்த 20 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த 19 மாணவர்கள், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கா…
-
- 2 replies
- 429 views
-
-
சென்னை: எனக்குள்ள ஒரே சொத்து கோபாலபுரம் வீடு மட்டும்தான் என முன்னாள் நீதிபதி மாக்கண்டேய கட்ஜூக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கை வருமாறு:- உங்களுடைய சொத்துக் கணக்கைக் காட்டத் தயாரா என்று நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கேட்டிருக்கிறாரே? என்னுடைய சொத்துக் கணக்கு திறந்த புத்தகம். நான் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் ஒவ்வொரு முறை போட்டியிட்ட போதும், அந்தக் கணக்கு தரப்பட்டு நாளேடுகளிலும் வந்துள்ளது. அந்தக் கணக்கை இந்த நீதிபதி இப்போது கேட்கிறார் என்பதிலிருந்தே அவர் எந்த அளவுக்கு விபரம் தெரிந்தவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். நான் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவன். சுமார் 70 திரைப்படங்களுக்கு என்னுடை…
-
- 1 reply
- 596 views
-
-
காஸாமுனை: போர் பெருந்துயரமானது.. அதுவும் பச்சிளங்குழந்தைகளையும் அப்பாவி பொதுமக்களையும் ரணகளப்படுத்தி பலியெடுக்கும் போர் எத்தனை கொடூரமானது என்பதை காஸா பிஞ்சுகள் உலகுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் வகைதொகையின்றி வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் பலியானோர் எண்ணிக்கை 700 ஆகிவிட்டது. படுகாயமடைந்தோர் எண்ணிக்கையோ 5 ஆயிரம். அப்பா.. இன்று நான் இறந்துவிடுவேனா.? நாள்தோறும் கேட்கும் காஸா பச்சிளங்குழந்தைகளின் துயரக் கேள்வி பலி எடுக்கப்பட்ட பாலகர்கள்: இஸ்ரேலின் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீன பச்சிளம் குழந்தைகள் பலியாகிவிட்டன. பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உடலெங்கும் குண்டு காயங்களோடு, துப்பாக்கி சன்…
-
- 0 replies
- 1.9k views
-
-
பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு, சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. பாலஸ்தீனப் பகுதிகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களில், 700 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இதுபற்றி ஆராய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அவசர சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு, சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத…
-
- 0 replies
- 371 views
-
-
அல்ஜீரியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் அல்ஜெரி, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா ஃபாஸோவிலிருந்து கிளம்பிய தன் விமானம் ஒன்றுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. ஓவுவாககடகோவிருந்து கிளம்பிய 50 நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமான நிறுவனத்தை மேற்கோள் காட்டி அல்ஜீரியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானம் அல்ஜியர்சிற்குச் சென்று கொண்டிருந்தது. ஏஎச்5017 என்ற இந்த விமானத்தில் 110 பயணிகளும் 6 ஊழியர்களும் இருந்தார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்http://www.bbc.co.uk/tamil/global/2014/07/140724_algeria.shtml
-
- 5 replies
- 718 views
-
-
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில், ’’பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியசாமி தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று இலங்கை சென்று ராஜபக்சேவை சந்தித்து பேசியுள்ளது. இந்த சந்திப்பின்போது இலங்கையுடன் நல்லுறவையே இந்திய பிரதமர் நரேந்திரமோடி விரும்புகிறார் என்றும், தமிழக குரல்கள் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்றும் ராஜபக்சேவிடம் சுப்பிரமணிய சாமி கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சுப்பிரமணியசாமி தலைமையிலான குழு தன்னிச்சையாக சென்றதா? அல்லது பா.ஜனதா கட்சியே அனுப்பி வைத்ததா? அல்லது மத்திய மோடி அரசு அனுப்பி வைத்ததா? என்ற கேள்விகளுக்கு விடை எதுவும் இல்லை. இந்திய அரசின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு குறித்து பேச சுப்பிரமணியசாமி யார்? அவருக்கு என்ன உ…
-
- 0 replies
- 314 views
-
-
காசா மீது அமெரிக்காவின் ஆதரவோடு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்டு இரத்தவெள்ளதில் உயிருக்குப் போராடுபவர்களை, நோர்வே நாட்டை சேர்ந்த மருத்துவர் குழு ஒன்று இரவு பகல் பாராமல் காப்பாற்றி வருகிறது. இந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் நோர்வே மருத்துவர் கில்பர்ட் என்பவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு அவசர கடிதத்தை எழுதியுள்ளார். அதன் விபரம் வருமாறு, “ஒபாமா உங்களுக்கு இதயம் ஒன்று இருக்கிறதா? ஒரே ஒரு இரவு-வெறுமனே ஒரே ஒரு இரவு மாத்திரம் காசா மருத்துவ மனையில் எம்முடன் இருந்து பாருங்கள். அது வரலாற்றை மாற்றிவிடும் என்று நான் 100 சதவீதம் நம்புகிறேன். மனமிருக்கும் எவரும் க…
-
- 0 replies
- 569 views
-