உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பின்னர் பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்படுவதால் மத்தியில் மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: டைம்ஸ் நவ் பா.ஜ.க கூட்டணி 249, காங்கிரஸ் 148, இதர கட்சிகள் 146 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறியுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க- 31, தி.மு.க- 7, காங்கிரஸ் -1 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. ஏ.பி.பி.- ஏ.சி. நீல்சன் பா.ஜ.க கூட்டணிக்கு 272க்கும் அதிகமான இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 110…
-
- 6 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவை கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸின் பிரதான கப்பலான 'சாந்த மரியா'வின் சிதைவுகளை ஹெய்ட்டிக்கு அருகிலுள்ள கடலின் அடிப்பரப்பில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இக்கப்பல் நீரில் மூழ்கி சுமார் 500 ஆண்டுகளுக்குப்பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடலடியிலிருந்து மீட்கப்பட்ட மிக முக்கியமான தொல்பொருளியல் பொருள் இதுவென வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். இக்கப்பல் மீட்கப்பட்ட இடம், மற்றும் பல்வேறு தொல்பொருளியல் ஆதாரங்களை கருத்திற்கொள்ளும்போது இது கொலம்பஸின் புகழ்பெற்ற சாந்த மரியா கப்பலின் சிதைவு எனக் கருதப்படுகிறது என இப்பலை மீட்ட ஆய்வுக்குழுவின் தலைவரான பெரி கிளிபோர்ட் தெரிவித்துள்ளார். 2003 ஆம் ஆண்டில் நடத்த…
-
- 0 replies
- 807 views
-
-
துருக்கி நிலக்கரி சுரங்க விபத்தில் 201 பேர் பலி புதன்கிழமை, 14 மே 2014 10:01 துருக்கி பகுதியிலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த மின்மாற்றி வெடி விபத்தில் இதுவரை 201 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு மின்சக்தி அமைச்சர் தானீர் டெல்திஸ் தெரிவித்துள்ளார். துருக்கியின் சோமானகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் தான் இந்த விபத்து நிகழ்ந்தது. அங்கு ஒரு பகுதியில் எதிர்பாராத விதமாக மின்மாற்றி வெடித்தது. இதில் சுரங்கத்தில் பணியில் இருந்த 201 பேர் உயிரிழந்தனர். 300இற்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கித்தவிப்பதாக அஞ்சப்படுகிறது. மீட்பு பணியினர் அவர்களை மீட்க்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்த ஏராளமானோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்த…
-
- 0 replies
- 307 views
-
-
இவ்வருடத்துக்கான ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான யூரோவிஷன் பாடல் போட்டியில் ஆஸ்திரியா முதலிடம் பெற்றுள்ளது. ஆஸ்திரியாவின் சார்பில் இப்போட்டியில் பங்குபற்றிய கொன்சிதா வேர்ஸ்ட் பாடிய பாடலுக்கு முதலிடம் கிடைத்தது. ஆனால், கொன்சிதா வேர்ஸ்ட் பற்றி அதிகம் அறியாதவர்களிடையே ஆனா பெண்ணா என்ற விவாதங்கள் மூண்டுள்ளன. 1956 ஆம் ஆண்;டு முதல் யூரோவிஷன் பாடல்போட்டி நடைபெறுகிறது. ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் இப்போட்டியில் பங்குபற்றுகின்றன. இப்போட்டிக்காக ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் நேரடியாக மேடையில் பாடுவதற்கான பாடலொன்று சமர்ப்பிக்கப்படும். உலகில் மிக நீண்டகாலமாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இது விளங்குகிறது. இம்முறை டென்மார்க் தலை…
-
- 6 replies
- 542 views
-
-
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவே அதிக இடங்களை கைப்பற்றும் என பல்வேறு ஊடகங்கள் நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றபோதிலும், அது உண்மையாகும்பட்சத்தில் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் கூறியபடி அதிமுக அங்கம் வகிக்கின்ற மத்திய அரசு என்பது சாத்தியமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தொடங்கியபோது, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 'நாளை நமதே...நாற்பதும் நமதே...!' என்ற கோஷத்துடன் அதிமுகவினர் பிரசாரம் மேற்கொண்டனர். அத்துடன் 40 இடங்களையும் அதிமுக கைப்பற்றி ஜெயலலிதா பிரதமர் ஆவார் என்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் போகுமிடமெல்லா…
-
- 0 replies
- 560 views
-
-
செயற்கைக்கோள் உதவியுடன் விமானத்தின் பாதையும் இடத்தையும் அறிய முடியும் உலகிலுள்ள அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் அடிப்படையான ஒரு பாதை அறிவிப்பு சேவையை இலவசமாக வழங்க பிரிட்டனின் செயற்கைக்கோள் வலயமைப்பு நிறுவனமான இன்மர்சாட் முன்வந்துள்ளது. மலேசிய விமானம் MH370 கடந்த மார்ச் எட்டாம் தேதி சுவடே இல்லாமல் காணாமல்போனதை அடுத்து இன்மர்சாட் இந்த சேவையை வழங்க முன்வந்துள்ளது. இந்நிலையில் பறக்கும் விமானங்கள் இருக்கும் இடம் பற்றி துல்லியமாக தகவல் வழங்கக்கூடிய இலவச சேவை ஒன்றை வழங்க இன்மர்சாட் முன்வந்துள்ளது.மலேசிய விமானத்தில் இருந்த இன்மர்சாட் கருவியில் இருந்து சற்று நேரம் வந்த மின் அலை ஒலிச் சமிக்ஞைகளைக் கொண்டுதான் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதன் எச்சங்களைத் தேட நடவடிக்கை எடுக்…
-
- 1 reply
- 366 views
-
-
டுபாயில் நிறுத்தப்பட்டிருந்த டிரக் வண்டியொன்றின் மீது பஸ்ஸொன்று மோதி சனிக்கிழமை(10) விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 ஆசிய தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேற்படி தொழிலாளர்களில் 10 பேர் இந்திய பீஹார் பிராந்தியத்தை சேர்ந்தவர்களாவர். ஜெபெல் அலி பிரதேசத்துக்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற மேற்படி பஸ் அபுதாபியையும் வட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வட பகுதியையும் இணைக்கும் சனசந்தடி மிக்க வீதியில் விபத்துக்குள்ளானது. அந்த பஸ்ஸில் இந்தியா மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த 27 தொழிலாளர்கள் பயணித்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ரஷீட் மற்றும் அல் பரஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/articles/2014/05/11/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E…
-
- 0 replies
- 596 views
-
-
சோனியா தலைமையில் மன்மோகனுக்கு ‘ஃபேர்வெல்’ பார்ட்டி! மன்மோகன் சிங்கிற்கான பிரிவு உபச்சார விழா விருந்திற்கு வரும் 14-ந் தேதியன்று ஏற்பாடு செய்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி. 16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடந்து வருகிறது. நாளை கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 16ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் ஒரே கட்டமாக எண்ணப்படுகின்றன. அன்று அல்லது அதற்கு மறுநாள் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி விடும் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவி விலகல் கடிதத்தை வரும் 17ம் தேதி குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பார் எனத் தெரிகிறது. இதனால், வரும் 14ம் தேதி காங்கிரஸ் கட்சிச் சார்பில் மன்மோகன் சிங்கிற்கு பிரிவு உபச்சார …
-
- 2 replies
- 574 views
-
-
14:30:38 Saturday 2014-05-10 MORE VIDEOS பீஜிங்: சீனாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சுரங்க விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய தொழிலாளி ஒருவர் கடந்த மாதம் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசய சம்பவம் உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளது. சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் ஏராளமான சுரங்கங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு சுரங்கத்திலும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1997ம் ஆண்டு இப்பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் ஏராளமான சுரங்கங்கள் சரிந்து அப்படியே மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதில் சிக்கி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணிற்குள்ளேயே சமாதியாகினர். இவர்களை தேடிய அரசு ஒருகட்டத்தில் அனை…
-
- 3 replies
- 750 views
-
-
பயணிகளின் நன்மை கருதி படுக்கையறை, மலசலக்கூடம், மாநாடு மண்டபம் போன்ற வசதிகள் அடங்கிய சொகுசு விமானங்கள் இரண்டை ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏயர்பஸ் ஏ-380 மற்றும் பொயிங் பி 787 ஆகிய விமானங்களே இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விமானங்களில் ஐந்து நட்சத்திர ஹோட்டலைப்போன்று தனியாக பிரிக்கப்பட்ட மூன்று படுக்கையறைகள், குளியலறை மலசலக்கூட வசதிகள் என்பன காணப்படுகின்றன. இவ்விமானத்தில் 32 அங்குல தொலைக்காட்சிகள் அலுமாரி என்பவையும் இணைக்கப்பட்டுள்ளன. இது குறித்து எடிகாட் எயர்லைன் விமான சேவையின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் ஹோர்கன் தெரிவிக்கையில், 'இந்த விமானத்தை ஆகாய மார்க்;கத்தில் பயணிக்கும் வாகனங்களின் தயாரிப்புக்களை அதிகரிக்கும் வகையிலும் விமான போக்குவரத்தின…
-
- 4 replies
- 588 views
-
-
பாஜக ஆட்சிக்கு வந்தால் 22,000 பேர் கொல்லப்படுவர்.. ராகுல் பேச்சால் புது சர்ச்சை. டெல்லி: பாஜக ஆட்சியைப் பிடித்தால் நாடு முழுவதும் 22,000 பேர் கொல்லப்படுவர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் விதிமுறையை மீறி ராகுல் பேசியிருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மே 12ம் தேதி ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சோலன் நகரில் ராகுல் காந்தி பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் பேசிய பேச்சுதான் தற்போது தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்குக் காரணமாகியுள்ளது. அவர் பேசுகையில், ஜப்பானைச் சேர்ந்தவர்கள் என்னிடம் கேட்கிறார்கள்.. நாங்கள் ஒரே ஒரு…
-
- 1 reply
- 447 views
-
-
மிஷெல் ஒபாமா நைஜீரியாவில் 200க்கும் மேற்பட்ட பள்ளிச்சிறுமிகள் கடத்தப்பட்ட செய்திகேட்டு தானும் தனது கணவரும் மிகுந்த கோபமும் மனவேதனையும் அடைந்துள்ளதாக அமெரிக்காவின் முதற்பெண்மணி மிஷெல் ஒபாமா கூறியுள்ளார். அதிபர் ஒபாமாவின் வாராந்த வானொலி உரையை, அவரது மனைவி மிஷெல் ஒபாமா தனது கண்டனத்தை வெளியிடுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். சின்னஞ்சிறு பிள்ளைகளின் கனவுகளை பறிக்கும் வளர்ந்த மனிதர்களின் மனசாட்சியற்ற செயல் என்று மிஷெல் ஒபாமா இந்தக் கடத்தல்களை வர்ணித்துள்ளார். கடத்தப்பட்ட பிள்ளைகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளுக்கு உதவுவதற்காக மேற்குலக நாடுகளின் நிபுணர்கள் தற்போது நைஜீரியாவில் உள்ளனர். இதற்காக கண்காணிப்பு விமானங்களை தந்துதவுமாறு அமெரிக்காவிடமும் பிரிட்டனிடமும் உதவிகள் …
-
- 8 replies
- 631 views
-
-
கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச விதிகளை மீறி தகவல்களை தர முடியாது சுவிஸ் அரசு திட்டவட்டம் பெர்ன்:'கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி இந்தியர்கள் குறித்த தகவல்களை தர முடியாது' என்று சுவிஸ் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து ஏராளமான இந்தியர்கள் ரூ.70 லட்சம் கோடி வரை சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் ஜெர்மன் வங்கியில் பணம் பதுக்கிய 18 இந்தியர்களின் தகவல…
-
- 0 replies
- 292 views
-
-
சீனாவில் அதிசயம் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 17 ஆண்டுக்கு பிறகு உயிருடன் மீட்பு Saturday 2014-05-10 MORE VIDEOS பீஜிங்: சீனாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சுரங்க விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய தொழிலாளி ஒருவர் கடந்த மாதம் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசய சம்பவம் உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளது. சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் ஏராளமான சுரங்கங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு சுரங்கத்திலும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1997ம் ஆண்டு இப்பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் ஏராளமான சுரங்கங்கள் சரிந்து அப்படியே மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதில் சிக்கி நூற்றுக்கணக்கான தொ…
-
- 0 replies
- 350 views
-
-
போபாலில், பல்வேறு கனவுகளுடன் மணமேடை ஏறிய மணப்பெண்ணை, சொந்த அத்தை மகன் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவரான ஜெயஸ்ரீக்கும் (26) ரோஹித் என்ற முதுநிலை மருத்துவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமையன்று மணமேடையில் இருவரும் அமர்ந்திருந்த போது, ஜெயஸ்ரீயின் அத்தை மகன் அனுராக் (31) நாட்டுத் துப்பாக்கியால் மணமகளை சுட்டுக் கொன்றான். கையில் அட்சதையுடன் காத்திருந்த உறவினர்கள், வெடிகுண்டு சப்தத்தால் அதிர்ந்து போயினர். கைதான கொலையாளி அளித்த வாக்குமூலத்தில், தனது சொந்த மாமன் மகளான ஜெயஸ்ரீயை தான் காதலித்து வந்ததாகவும், ஆனால், ஒரு சாதாரண பணியில் இருந்த என்னுடைய காதலை மருத்துவரான ஜெயஸ்ரீ ஏற்றுக் கொள்ளவில்லை. இத…
-
- 0 replies
- 456 views
-
-
புதுடெல்லி::காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பயணம் செய்த விமானம் ஆக்ராவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று காலை உத்தரபிரதேசத்தில் இருந்து தனியார் விமானம் மூலமாக டெல்லி வந்தார். அப்போது மோசமான வானிலை காரணமாக விமான நிலைய இறங்கு தளம் பகுதியில் கடுமையான காற்று வீசியது. இதனால் விமானத்தை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதனையடுத்து ஆக்ராவுக்கு விமானம் திருப்பி விடப்பட்டது. அங்கு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவசர தரையிறக்கத்திற்கான தகவலை விமானி தெரிவித்தார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், விமானியின் தகவலையடுத்து ஆக்ராவில் அவசரமாக தரையிறக்குவதற்கான ஏ…
-
- 2 replies
- 575 views
-
-
பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து அமெரிக்காவுக்கு மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் போக்குவரத்து தொடங்க சீனா திட்டமிட்டு உள்ளது. சீனாவின் வடகிழக்கு பகுதி வழியாக 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை அமெரிக்காவுக்கு கடலுக்கு அடியில் ரயில் இருப்பு பாதைகளை அமைத்து, சைபீரியா மற்றும் அலாஸ்கா நீரிணைப்பு வழியாக மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக பறக்கும் ரயிலை விடுவதற்கு சீன பொறியியல் அகடமி திட்டமிட்டு உள்ளது. சீனாவில் இருந்து ரஷ்யா மற்றும் அலாஸ்கா வழியாக கடலுக்கு அடியில் 200 கிலோ மீட்டர் தூரம் தொடர் சுரங்க ரயில் பாதை அமைத்து, 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்காவை இணைக்கும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மிக விரைவில் …
-
- 1 reply
- 824 views
-
-
மும்பை: கடற்படைக்கு சொந்தமான கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மும்பை கடலில், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எல். கங்கா கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த கப்பலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கப்பலில் இருந்த மாலுமிகள் உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. http://news.vikatan.com/article.php?module=news&aid=27749
-
- 3 replies
- 540 views
-
-
சர்வதேச உணவகப் பட்டியலில் பாங்காக் இந்திய உணவகம் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்வதேச விழாவில், 2013ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த 100 உணவகங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. இந்தியாவில் உள்ள உணவகங்கள் ஒன்றுக் கூட அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. எனினும் இந்திய வகை உணவைப் பரிமாறும் ஒரே ஒரு உணவகம் அந்தப் பட்டியலில், 17ஆம் இடத்தை பிடித்துள்ளது. ‘ககன்’ என்ற அந்த உணவகம், தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் நகரில் அமைந்துள்ளது. சர்வதேச சமையல்காரர்கள், சமையல் நிபுணர்கள் மற்றும் உணவக விமர்சகர்கள் ஆகியோரிடம் நடத்தப்படும் ஒரு கருத்து கணிப்பின் அடிப்படையில், ‘ரெஸ்டாரண்ட்ஸ்’ என்ற பிரிட்டிஷ் பத்திரிகை இந்த வருடாந்திர பட்டியலை வெளியிடுகின்றது. டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் …
-
- 0 replies
- 433 views
-
-
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் 8000 மைல் தூரம் கொண்ட ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் 125 மைல் தூரம் கடலுக்கு அடியில் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு ரயிலை இயக்க சீனா முடிவு செய்துள்ளது. 8000 மைல் தூரம் கொண்ட இந்த பயணத் திட்டத்தில் கடலுக்கு அடியில் 125 மைல் தூரம் சுரங்கப்பாதை வழியாக கடந்து செல்லும் வகையில் இது திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இரண்டு நாட்களில் சென்றடைய முடியும். சீனாவின் வடகிழக்கு பகுதியிலிருந்து மணிக்கு 217 மைல் வேகத்தில் செல்லும் அந்த ரயில் சைபீரியா, ரஷ்யா வழியாக சென்று பின்னர் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை வழியாக அமெரிக்க மாகானமாகிய அலாஸ்காவை அடையும். அலாஸ்க…
-
- 0 replies
- 493 views
-
-
பாகிஸ்தானின் இடைசேவைகள் உளவுத்துறை இலங்கையிலிருந்து கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவலாம் என தகவல்கள் கிடைத்துள்ளதால் மூன்று கடற்படை ரோந்து படகுகள் இராமேஸ்வரத்திலுள்ள கடற்படை துறைக்கு வந்துள்ளன. இது தொடர்பாக மேலும் தகவல் வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இப்பிராந்தியத்தில் கடற்படையின் பலத்தை அதிகரிப்பது பாகிஸ்தான் இடைசேவைகள் உளவுத்துறையின் ஊடுருவலை தடுப்பது இதன் நோக்கமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. பாகிஸ்தான் இடைசேவைகள் உளவுத்துறை இலங்கையிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவலாம் என பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததனால் கரையோர பாதுகாப்பு அணி இப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஊடுருவலை பூரணமாக தடுப்பதற்காக புதியதொரு பாதுகாப்பு முறைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது என க…
-
- 0 replies
- 314 views
-
-
சென்னை: சென்னையில் நடைபெறவிருந்த 4 ஐ.பி.எல். போட்டிகள் ராஞ்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மே 18ஆம் தேதி சென்னை அணியும், பெங்களூரு அணியும் சென்னையில் விளையாட இருந்தன. அதேபோல், 22ஆம் தேதி சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் சென்னையில் விளையாட இருந்தன. மேலும், மே 27 மற்றும் 28ஆம் தேதிகளில் ஐ.பி.எல். இரையிறுதி போட்டியும் சென்னையில் நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்த 4 ஐ.பி.எல். போட்டிகளும் ராஞ்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றத்துக்கான காரணம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கேலரிகள் திறப்பு பற்றிய வழக்கு நிலுவையில் உள்ளதாலும், இலங்கை வீரர்கள் சென்னையில் நடைபெறும் போட்டிகளி…
-
- 0 replies
- 399 views
-
-
அதிகார துஷ்பிரயோகத்தால் பதவி இழந்தார் தாய்லாந்து பிரதமர் news தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா மற்றும் கேபினட் அமைச்சர்கள் 9 பேரை பதவி விலகுமாறு அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதனையடுத்து அமைச்சரவை கூட்டத்தில், வர்த்தக்துறை அமைச்சராக இருந்த நிவ்வத்தம்ராங் போன்சாங்பைசாங் இடைக்காலப் பிரதமராக நியமிக்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு எதிராக, தாய்லாந்து நீதிமன்றில், எதிர்க்கட்சிகள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கடந்த 2011 ஆம் ஆண்டு, பிரதமர் பதவியை பயன்படுத்தி, மூத்த அதிகாரியை பதவி மாற்றம் செய்ததன் மூலம் ஷினாவத் நாட்டின் அரசியல் சாசனத்தை மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இ…
-
- 0 replies
- 560 views
-
-
கனடா - ஒன்றாரியோ மாகாணத்தில் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்! [Thursday, 2014-05-08 21:28:50] கனடா நாட்டில் - ஒன்றாரியோ மாகாணத்தில் உத்தியோகபூர்வமாகத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வைன் கத்லீனால் தேர்தலுக்கான திகதி குறிப்பிடப்பட்டவுடன் தேர்தலுக்கான பரப்புரைகள் ஆங்காங்கே ஆரம்பமாகத் தொடங்கிவிட்டன. யூன் மாதம் 12ம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தார். ஆனால் தற்சமயம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனக் கனடியன் பிறஸ் என அழைக்கப்படுகின்ற செய்தித் தாபனமானது தகவல் வெளியிட்டுள்ளது. ஒன்றாரியோவில் 3 முக்கியமான கட்சிகளின் தலைவர்கள் கடந்த கிழமையிலிருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள் வைன் கத்லீன் கிச்சினர் பகுதியில…
-
- 0 replies
- 623 views
-
-
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுடன் பாலியல் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் வெள்ளை மாளிகை பயிற்சி ஊழியர், மோனிக்கா லூயின்ஸ்கி, அவ்விவகாரம் குறித்து ,தனது நீண்ட கால மௌனத்தைக் கலைத்து, மனம் திறந்திருக்கிறார். அமெரிக்காவின் 'வேனிட்டி பேர்' என்ற சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில், இப்போது 40 வயதாகும் மோனிக்கா, கிளிண்டனுடன் நடந்த இந்த பாலியல் தொடர்பு குறித்து தான் வருந்துவதாகக் கூறியிருக்கிறார். "பலியாடாக்கப்பட்டேன்"அதிபர் கிளிண்டன் தன்னைப் பயன்படுத்திக்கொண்டார் என்று கூறியிருக்கும் மோனிக்கா, ஆனால் தங்களுக்குள் ஏற்பட்ட தொடர்பு என்பது இருவரும் மனதொப்பி நடந்ததுதான் என்றும் கூறியிருக்கிறார். 1998ல் பில் கிளிண்ட்ன் அதிபர் காலத்தின் முடிவில் நடந்த இந்த பாலியல் சம்பவம், பில் கிளிண…
-
- 2 replies
- 1.6k views
-