Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐரோப்பிய செய்தியாளர் - இங்கிலாந்தில் இடம் பெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள், பூமி அதிர்ச்சியை ஒத்ததாக அமைந்துள்ளதாக ஐக்கிய ராஜ்ய சுதந்திரக் கட்சியின் தலைவர் நைகெல் வெ(க)ரேஜ் குறிப்பிட்டுள்ளார். ஜரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான அரசியற் கொள்கையோடு, வெளி நாட்டவர்களின் குடியேற்றத்திற்கும் எதிர்ப்புத் தெரிவிற்கும் ஐக்கிய ராஜ்ய சுதந்திரக் கட்சி, இது வரையில் வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 100 ற்கும் சற்று அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இது வரையில் ஐக்கிய ராஜ்ய அரசியலில் சுதந்திரக்கட்சி, பழமைக்கட்சி, தொழில்கட்சி என மூன்று பெரும் கட்சிகள் அதிகாரத்திற்குப் போட்டியிட்ட காலம் மாறி, நான்காவது புதிய கட்சியும் இணைவதாக அரசியல் வட்டாரம் கருத்துத் தெரிவித்துள்ளது. அத்தோட…

  2. பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு யசோதா பென் என்ற பெண்னுடன் இளம் வயதில் திருமணம் நடந்தது. பின்னர் சேர்ந்து வாழாமல் குறுகிய காலத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டனர் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மோடி வேட்பு மனுதாக்கலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது மனைவி பெயர் யசோதா பென் என்று முதன்முதலாக குறிப்பிட்டார். இதனையடுத்து அவரை கண்டறிந்த ஊடகங்கள், தொடக்க பள்ளி ஆசிரியையாக இருந்தவர் என்றும், கிராமத்தில் வசித்துவருவதாகவும் செய்திகள் வெளியிட்டடன. மோடி குறித்து யசோதா பென் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், அவர் நாட்டின் பிரதமராக பதவி ஏற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒட்டுமொத்த தேசத்தைவிட அதிகமாக …

  3. இஸ்லாமாபாத்: நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொள்ள அந்நாட்டு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, வருகிற 26 ஆம் தேதியன்று நரேந்திர மோடி இந்தியாவின் 14 வது பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து நவாஸ் ஷெரீப், மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளக்கூடும் என எதிர்பார்ப்பு எழுந்தது. அதே சமயம் இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நி…

  4. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மீது தலிபான் தீவிரவாதிகள் திடீரென தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆப்கான் ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மே 26-ந் தேதி பதவியேற்க உள்ளார். தமது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான், ஆப்கான், இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கும் மோடி அழைப்பு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியா வர விரும்பினாலும் அந்நாட்டு ராணுவம் தடுப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் உள்ள இந்திய துணைத் தூதரகம் மீது இன்று திடீர் என்று தலிபான் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளனர். ஹெராத்தில் உள்ள துணை த…

  5. அதிபர் ராஜபசே அரசின் இலங்கை ராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள், மற்றும் இனப் படுகொலை புரிந்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தி, விசாரணைக்கு அவர்களை உட்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் ஒன்றை இந்தியா முன்னின்று கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய தீர்மானங்களின் மீது இந்திய மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தியுள்ளமையை மோடி அவர்கள் அறியாதிருப்பதற்கு வாய்ப்பில்லை. தனது மாநிலத் தலைவர்களையும் அவர்களுக்குள்ள அரசியல் பிரச்சனைகளையும் அவர்களுடன் கலந்து ஆலோசனை செய்யாது அதிகாரத்தில் இருக்கும் ஒரு கட்சி தனது வலிமையைக்கொண்டு எடுக்கும் முடிவுகள் ஐனநாயக வரமுறைக்குள் உட்படமுடியுமா? அது சர்வாதிகாரமாகவே த…

  6. ஆபிரிக்க நாடான மாலி சர்வதேச நிதியுதவியில் தங்கியுள்ளபோதிலும் அந்நாட்டின் ஜனாதிபதியின் பாவனைக்காக 4 கோடி டொலர் செலவில் விமானமொன்றை வாங்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் கவலை தெரிவித்துள்ளது. '4 கோடி டொலர் செலவில் ஜனாதிபதிக்காக விமானம் வாங்கியமை மற்றும் இராணுவத்தினருக்கான விநியோகங்களுக்காக 20 கோடி டொலர் அரச உத்தரவாதம் வழங்கியமை குறித்து நாம் கவலையடைகிறோம்' என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மாலிக்கு 422 கோடி டொலர் நிதியுதவி வழங்கவதற்கு 55 நாடுகள் கடந்த வருடம் உறுதியளித்திருந்தன.அந்நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் பௌபக்கர் கெய்ட்டாவின்; பாவனைக்காக கடந்த மாதம் போயிங் 737 விமானமொன்று மாலி அரசாங்கத்தினால் வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.…

  7. 233 மில்லியன் பயனர்களைக்கொண்டுள்ள இணையத்தள சந்தையின் முன்னணி நாமமான ஈபே இணையத்தளத்தின் பயனர்கள் தரவுகள் மிகப்பெரியளவில் ஹெக் ஹெக்செய்யப்பட்டுள்ளது. மிகப்பெரும் சைபர் தாக்குதலாகக் கருதப்படும் இந்த தகவல் திருட்டினையடுத்து வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது கடவுச்சொல்லை மாற்றுமாறு ஈபே நிறுவனம் கேட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் சுய தரவுகள் மீது இரு வாரங்களுக்கு முன்னர் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளபோதிலும் வணிகத் தகவல்களை ஹெக்கர்களால் நெருங்க முடியவில்லை என ஈபே நிறுவனம் கூறியுள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=technology&news=5564#sthash.ZaD71L97.dpuf

  8. புதுடெல்லி: நாடாளுமன்ற எதிர்க்கட்சி பதவியில் இருந்து காங்கிரசை ஓரம் கட்ட மூன்று மாநில கட்சிகள் முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 7ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 12 ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தல் தேதி அறிவித்ததுமே நாட்டில் மூன்றாவது அணியை அமைத்து மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசை ஓரம் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட குறைந்த பட்சம் 10 சதவீத தொகுதிகளிலாவது வெற்றி பெற…

  9. சீனாவும் ரஷ்யாவும் 400 பி(b)ல்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிவாயு விநியோக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கையாக அமையாலாமெனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்றபடி பிரச்சனைகளை வகைப்படுத்தி முறைப்படுத்தும் பூட்டீனின் அரசியற் தந்திரம், ரஷ்ய சீன உறவில் நெருக்கத்தை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்ய அரசால் இயக்கப்படும் எரிவாயு நிறுவனமான காஸ்புறொம் (Gazprom), 2018 களிலிருந்து 30 வருடங்களுக்கு ரஷ்யாவிற்கு எரிவாயு விநியோகம் செய்யக் கூடுமெனத் தெரியவந்துள்ளது. தொழில் நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் வளர்ச்சி பெற்று வரும் சீன நாட்டிற்கு அதிகபட்ச எரிவாயு தேவைப்படுவதும்…

  10. நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடியின் முதல் உரையின் முழு வடிவம் மே 20,2014 நாடாளுமன்றம் மத்திய மண்டபத்தில் நரேந்திர மோடி இந்தியில் ஆற்றிய முதல் உரையின் முழுவடிவம். "மதிப்பிற்குரிய அத்வானி அவர்களே, தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களே மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்களே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே, நீங்கள் அனைவரும் ஏகமனதாக எனக்கு புதிய பொறுப்பை அளித்துள்ளீர்கள். அதற்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். குறிப்பாக என்னை ஆசீர்வதித்த அத்வானி அவர்களுக்கும், ராஜ்நாத் அவர்களுக்கும் நன்றி. நான் இத்தருணத்தில் அடல் (வாஜ்பாய்) அவர்களை நினைவு கூர்கிறேன். அவரது உடல் நலன் சீராக இருந்திருந்தால் அவர் இன்று இங்கு இருந்திருப்பார். அவரது வருகை இந்நிகழ்ச்சிக்கு முழுமை …

  11. நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் மீண்டும் கைவரிசை. கார் வெடிகுண்டு வெடித்து 118 பேர் பலி. கடந்த மாதம் 300 நைஜீரிய பள்ளி மாணவிகளை கடத்திய போகோஹராம் தீவிரவாதிகள் மீது போர் நடவடிக்கை எடுக்க நைஜீரியா உள்பட நான்கு ஆப்பிரிக்க நாடுகள் முடிவு செய்திருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின. இதனால் ஆத்திரமடைந்த போகோஹராம் தீவிரவாதிகள் நேற்று நைஜீரிய நகரம் ஒன்றில் அடுத்தடுத்த இரண்டு கார் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து பழிவாங்கினர். இந்த பயங்கர தாக்குதலில் 118 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நைஜீர்யாவின் முக்கிய நகரமான Jos என்னும் நகரில் நேற்று மாலை அடுத்தடுத்து வெடித்த இரண்டு கார் குண்டுகளால் பெரும் பரபரப்பு …

    • 11 replies
    • 796 views
  12. புதுடெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பா.ஜனதா தலைவர் நிதின்கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில், கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஜனவரிமாதம் கெஜ்ரிவால் பத்திரிகையாளர்களிடம் வெளியிட்ட இந்தியாவின் முக்கிய ஊழல் தலைவர்களின் பட்டியலில் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான நிதின் கட்கரி பெயர் இடம்பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து கெஜ்ரிவால் மீது கட்கரி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கெஜ்ரிவாலை இன்று நேரில் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை ரூ. 10,000 மதிப்பிலான ஜாமீன் பத்திரம் அளிக்க நீதிபதி உத்தரவி…

  13. டெல்லி: பயங்கவராதத்தை எதிர்கொள்ள இலங்கையுடன் இந்தியா இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். அண்மையில் சென்னையில் நடைபெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஒருவர் பலியானார். பலர் படுகாயமடைந்தனர். இதனால் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கத்தை இலங்கை அரசு முற்றாக அழித்துவிட்டிருக்கிறது. அந்த அரசை நாடு சிறப்பிக்க வேண்டும். இ…

  14. செய்தி: தமிழக தலைமைச் செயலகத்தில் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி (உறுதிமொழி) ரத்து. இது போதுமா..????! 800 குர்திஸ் மக்களைக் கொன்ற சதாம் குசைனுக்கு மரண தண்டனை. 10,000 ஈழத்தமிழர்களைக் கொன்ற ராஜீவ் காந்திக்கு.. காங்கிரஸ் தலைவர்களுக்கு.. இந்திய படை தளபதிகளுக்கு தண்டனை என்ன..??! அதேபோல்.. 1,20,000 தமிழ் மக்களைக் கொன்ற மகிந்தவுக்கும் பரிவாரங்களுக்கும்.. தண்டனை என்ன..?! ------------------------------------------------------------------ பயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தி: தமிழக அரசுக்கு ஞானதேசிகன் கண்டனம். இந்த ஆண்டு தலைமை செயலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி பயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தியாக இருக்கிறது என்று தமிழ்நாட…

  15. பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம், வைகோவை ராஜசபா உறுப்பினர் ஆக்கி பாராளுமன்றுக்கு கொண்டு வர ஆலோசிப்பதாக தெரிய வருகிறது. போதிய அளவு உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால், தமிழ் நாட்டுக்கு வெளியே, உள்ள ஓர் மாநிலம் மூலமாக இந்த ஏற்பாடினைப் செய்வதன் மூலம், அனுபவம் மிக்க, வைகோ போன்ற தோழமைக் கட்சிகளின் தலைவர்களை பாராளுமன்றுக்கு அனுப்ப முடியும் என்ற கருத்து உயர் மட்டத்தில் நிலவுவதாக பெயர் குறிக்க விரும்பாத தலைவர் ஒருவர் தெரிவித்தாக 'தி ஹிந்து' பத்திரிகை தெரிவிக்கின்றது. வைகோ தோல்வி குறித்து தென் இலங்கை அரசியல் மகிழ்ச்சி தெரிவித்துள்ள வேளையில் இச் செய்தி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, தனது மச்சான், சுதிஸ், தோத்து விட்டார் என நொந்து போயிருந்த விஜயகாந்த் மனைவி பிரேமலதா, ச…

    • 3 replies
    • 1.6k views
  16. புதுடெல்லி: பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தனது இருப்பிடத்தை ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் மாற்றிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது பேட்டி அளித்த நரேந்திர மோடி, நான் ஆட்சி வந்தால் பாகிஸ்தானில் உள்ள நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம்பை இந்தியா கொண்டு வருவேன் என்று கூறினார். தற்போது மோடி பதவிக்கு வந்துவிட்டார். தாவூத் மீதான திருக்குகளை இறுக்க வேண்டும் என்பது புலனாய்வு துறையின் பொது எதிர்பார்ப்பு. கமாண்டோ வகை தாக்குதல் அச்சத்தில் தாவூத் தனது இடத்தை மாற்றம் செய்திருப்பார் என்று நம்பப்படுகிறது. தனது பாதுகாப்பை ப…

  17. புதுடெல்லி: தம்மை பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து உரையாற்றியபோது உணர்ச்சிவசப்பட்ட அழுதார் மோடி. அவர் தனது உரையில் மக்களுக்கான பிரச்னைகளுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும், பதவிக்கு அல்ல என்று கூறினார். நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் இன்று நடைபெற்ற பா.ஜ.க நாடாளுமன்ற குழு கூட்டத்தி்ல், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பேசிய மோடி, நாடாளுமன்ற குழு தலைவராக தன்னை தேர்வு செய்த கட்சிக்கும், அத்வானி மற்றும் ராஜ்நாத் சிங்கிற்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றம் என்பது கோயில் போன்று புதினமானது என்று கூறிய மோடி, மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக பாடுபட வேண்டும் என்றும், மக்கள் பணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமைய…

  18. இந்தியாவின் புதிய பிரதமராக பாரதிய ஜனதாவின் நரேந்திர மோடியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தியோகபூர்வமாக நியமித்து மே 26-ந் திகதியன்று புதிய அரசு அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் நரேந்திர மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கூட்டத்திலும் மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் ராஜ்நாத்சிங் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் 15 பேர் அடங்கிய குழு முதலில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதியிடம் ராஜ்ந…

  19. நாடாளுமன்றத்தில் கமல்நாத், குலாம் நபி எதிர்க்கட்சி தலைவர்களாகிறார்கள்: சோனியா- ராகுல் இல்லை. டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவராக கமல்நாத்தையும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக குலாம்நபி ஆசாத்தையும் நியமிக்க சோனியாகாந்தி முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் கூறுகின்றன. வாஜ்பாய் ஆட்சியில் சோனியாகாந்திதான் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார். இம்முறையும் அவரையே மக்களவையின் காங்கிரஸ் குழு தலைவராக நியமிக்க கட்சியி எம்பிக்கள் விரும்புகிறார்கள். ஆனால் பிரச்சாரத்தின்போது தனது குடும்பத்தை கடுமையாக விமர்சனம் செய்த மோடியை எதிர்கொண்டு பணியாற்ற சோனியா தயங்குவதாக கூறப்படுகிறது. அதேநேரம் அனைத்து கட்சி உறுப்பினர்களுடனும் நல்ல தொடர்பிலுள்ள 9 முறை நாடாளுமன்றத்துக்…

  20. இனப்படுகொலையில் ஈடுபட்ட சேர்பிய இராணுவத் தளபதி மிலாடிக் மீதான விசாரணைகள் ஆரம்பம் மே 20, 2014 இனப்படுகொலை மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக முன்னாள் பொஸ்னிய சேர்பிய இராணுவத் தளபதி ரத்கோ மிலாடிக் மீதான வழக்கில் பிரதிவாதி தரப்பு விசாரணை ஹேக் நகரில் நேற்று ஆரம்பமானது. முன்னாள் யுகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன்னால் ஆஜராகவுள்ள மிகவும் அதிகளவுக்கு சந்தேகநபராக கருதப்படுபவர்களில் 72 வயதுடைய மிலாடிக்கும் ஒருவராவார். 1992 - 1995 காலப்பகுதியில் பொஸ்னிய யுத்தத்தின் போதான 11 குற்றச்சாட்டுகளை மிலாடிக் மறுத்து வருகிறார். சிறிபெரினிக்காவில் 7 ஆயிரத்துக்கு அதிகமான பொஸ்னிய ஆண்களையும் சிறுவர்களையும் படுகொலை செய்ததில் இவருக்கு பங்களிப்பு இரு…

  21. கடல் உணவில் காண்டம்: நஷ்ட ஈடு கேட்டு 3 பெண்கள் வழக்கு. பீஜிங்: சீனா ஹோட்டல் ஒன்றில் ஆர்டர் செய்த கடல் உணவில் ஆணுறை இருந்த காரணத்தால் அதிர்ச்சியடைந்த பெண்கள் நஷ்ட ஈடு கேட்டு வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள கடல் உணவகம் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மே லியாங் என்ற பெண், தனது தோழிகள் இருவருடன் சாப்பிட சென்றார். அவர்கள் வறுத்த மீன் வகை உணவு ஒன்றை ஆர்டர் செய்தனர். அவர்கள் கேட்ட உணவு சிறிது நேரத்தில் பரிமாறப்பட்டது. அந்த உணவை பெண்கள் மூவரும் மிக ஆவலுடன் சாப்பிட்டனர். அந்த உணவில் ஒரு ஆணுறை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை பார்த்ததும் சப்பிட வந்த மூன்று பெண்களில் ஒருவர் வாந்தி எடுத்தார். இன்னொரு பெண்ணுக்கு வயிற்று வலி…

  22. ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் போல செயல்பட வேண்டாம்: மோடியிடம் வைகோ வலியுறுத்தல். "ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைப் போல செயல்பட வேண்டாம்' என்று நரேந்திர மோடியிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார். மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள குஜராத் பவனில் அம் மாநில முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியை வைகோ திங்கள்கிழமை நேரில் சந்தித்தார். இச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது. இச்சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: மரண அடி கொடுக்கப்பட்டு, குப்பைத் தொட்டியில் காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு சில மாநிலங்களில் ஓர் இடம்கூட கிடைக்கவில்…

  23. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாக சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கூறியிருந்தனர். நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாடளவில் வெறும் 44தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் திங்களன்று மாலை புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக முன்வந்ததாகவும், ஆனால் காங்கிரஸ் செயற்குழு அதை ஏற்றுகொள்ளவில்லை என்றும் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவர் ஆஸ்கர் ஃபெர்னாண்டெஸ் தெரிவித்தார். செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீ…

  24. டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி முயற்சி! காங்கிரஸ் எதிர்ப்பு!! டெல்லி: டெல்லி மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை ஆம் ஆத்மி மேற்கொண்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ ஆதரவளிக்கப்போவதில்லை என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 28 இடங்களை பிடித்து ஆம் ஆத்மி சாதனை படைத்தது. பின்னர் பல்வேறு இழுபறிக்குப்பின், காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சியமைத்தார். ஆனால் நிலைக்கவில்லை. ஜன்லோக்பால் மசோதாவை, சட்டசபையில் நிறைவேற்ற முடியாததை தொடர்ந்து, அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அக்கட்சியின் 49 நாள் ஆட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.