உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26911 topics in this forum
-
கனடாவின் கிழக்கு கடற்கரையிலுள்ள நியூபவுண்ட்லான்டில் நீல திமிங்கிலமொன்று அழுகிய நிலையில் கரையொதுங்கியுள்ளது. 28 யார் நீளமான இந்த திமிங்கிலத்தின் உடல் அழுகி உருக்குழைந்து வீங்கியுள்ளதால் அது எப்போதும் வெடித்து பெருமளவு மெதேன் வாயு வெளியேறலாம் என பிரதேசவாசிகள் கவலை அடைந்துள்ளனர். அத்துடன் மேற்படி 60 தொன் நிறையுடைய அழுகிய திமிங்கிலம் வெடிக்கும் போது அதன் உடலிலுள்ள மனித நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பற்றீரியா நகரமெங்கும் பரவலாகம் என்ற அச்சமும் தோன்றியுள்ளது. http://www.virakesari.lk/articles/2014/05/01/60-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%…
-
- 0 replies
- 429 views
-
-
பம்பாய் சென்னை தாக்குதல்கள் - இந்திய பாதுகாப்பில் ஓட்டை - வ.ஐ.ச.ஜெயபாலன் இந்தியாவின் பாதுகாப்பு ஓட்டைகள் தொடர்பாக 2006ல் இருந்து எச்சரித்துவரும் எனது சில நேர்காணல்களில் இருந்து ஒரு சில பகுதிகளை மீழ நினைவூட்ட விரும்புகிறேன். இந்திய பாதுகாப்பு ஓட்டைகலை அடைக்க இலங்கை தமிழர்போன்ற தென்னாசிய நட்ப்பு சக்திகளில் நல்லுறவு அவசியம் என்பதை இனியாவது இந்தியா உணரவேண்டும். பம்பாய் சென்னை தாக்குதல்களுக்கான சூழல் நிலவுவதை 2006ல் இருந்தே தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். இலங்கை உளவுத்துறையிலுள்ள சிலரது அனுசரனையுடனேயே பாகிஸ்தான் உளவுத்துறையின் இலங்கையில் செயல்படுகிறது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். வ.ஐ.ச. ஜெயபாலன் - 01.10.2006 நேர்காணல் - தீராநதி http://www.tamilcanadian.com…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஈராக்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மத்தியிலும் தேர்தல் முழுப் பிரயாசையுடன் இடம்பெற்றுள்ளது ஐரோப்பியசெய்தியாளர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் ஈராக்கில் பல உயிர்களைப் பலியெடுக்கும் சூழலிலும், பாராளுமன்றத் தேர்தல் முழுப் பிரயாசையுடன் இடம் பெற்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போதும், அதற்கு முன்னான தேர்தல் பிரச்சாரங்களின் போதும் பல இடங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் யாவும் பயனளிக்காது போனதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் தற்போதைய பிரதமர் அல் மாலிக் மூன்றாம் முறையாகப் போட்டியிடுவதும், இவர் பதவிக்கு வந்த காலத்திலிருந்து ஈராக்கில்…
-
- 0 replies
- 300 views
-
-
இயேசு கிறிஸ்துவின் ஆரம்ப கால உருவ ஓவியமொன்றை பண்டைய எகிப்திய நகரான ஒக்ஸிரைசஸிலுள்ள மர்மமான கல்லறையொன்றில் கண்டுப்பித்துள்ளதாக ஸ்பெயின் அகழ்வாராச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். கிறிஸ்துவுக்கு பின் ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறையில் கண்டுப்பிக்கப்பட்ட இந்த ஓவியத்தில் இயேசு கிறிஸ்து சுருண்ட கேசமுள்ள இளைஞராக ஆசி வழங்கிய வண்ணம் காணப்படுகின்றார். மேற்படி ஆய்வானது பார்சிலோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த போரசிரியர் ஜோசப் பட்ரோ தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மேற்படி உருவ ஓவியத்தில் காணப்படும் குறிப்புகளை மொழி பெயர்த்து அந்த ஓவியத்தில் காட்சியளிப்பவர் யார் என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஆய்வாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர். http://virakesari.lk/articles/…
-
- 9 replies
- 1.2k views
-
-
கிழக்கு உக்ரைன் பிரிவினைவாதிகள் டொனெற்ஸ்க் மக்கள் குடியரசை அமைக்கத் தீர்மானம் : ஐரோப்பியசெய்தியாளர் லெனின் பாதச் சுவடுகளைப் பின்பற்றிக் கிழக்கு உக்ரைன் பிரிவினைவாதிகள் டொனெற்ஸ்க் மக்கள் குடியரசை அமைக்கத் தீர்மானம் எடுத்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புரட்சியை நிறுத்தி அரசியற் கட்டுமான அமைப்பொன்றை ஏற்படுத்துவது அவசியமெனக் கருதப்படுகிறது. வருங்காலங்களில், மிகவும் ஒழுங்கு படுத்தப்பட்ட கூட்டு வேலைத் திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டு, இதுவரையில் பேச்சு மட்டுமிருந்த டொனெற்ஸ்க் மக்கள் குடியரசு மலர, லெனினின் பாதை பின்பற்றப்படவும் உள்ளது. 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இடம் பெற்ற மாபெரும் புரட்சிக் காலத்தில், லெனினால் எழுதப்பட்ட "தேசமும் புரட்சியும்" எனும் நூலில…
-
- 11 replies
- 641 views
-
-
ஜெர்மனியில் கருப்பு பணம்: 18பேர் பட்டியலை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு! டெல்லி: ஜெர்மனியில் கருப்பு பணத்தை முதலீடு செய்துள்ள 18 பேரின் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கிய இந்தியர்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஜெர்மனி வங்கியில் முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலை வழங்குமாறு 2011ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கருப்புப் பணம் பதுக்கியவர்களின் பட்டியலை 3 ஆண்டுகளாக தாக்கல் செய்யாததால் கடந்த வாரம் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் கருப்புப் பண பதுக்கல் தொடர்பான வழக்கில் மத…
-
- 0 replies
- 519 views
-
-
பெண்களை மரியாதையாக நடத்தும் நாடுகளில் மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அரபு இராச்சியம் முதலிடத்தினைப் பெற்றுள்ளது.132 நாடுகளிடையிலான வளர்ச்சி மற்றும் நலன்புரி ஒப்பீட்டு ஆய்வினை மேற்கொண்ட உலக பொருளாதார அமைப்பின் உலகளாவிய செயற்திட்ட சபையே இத்தகவலினை வெளியிட்டுள்ளது. 'நாங்கள் பெண்களை மதிக்கிறோம். நாட்டின் முக்கிய பங்களார்களான பெண்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாயங்களை மதிக்கிறோம். பல்வேறு துறைகளில் ஆண்களை விட அதிகமாக பெண்களால் பங்களிப்புச் செய்ய முடிகின்றது. ஐக்கிய அரபு இராச்சிய சமூகம் பெண்களின் சக்தியினை முழுமையாக அடைவதற்கு உதவி புரிகின்றது' என துணை ஜனாதிபதியும் அமைச்சருமான ஷேக் மொஹமட் பின் ரஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார். இதேவேளை 54 அளவீடுகளை கொண்டு மேற்கொள்ளப…
-
- 6 replies
- 895 views
-
-
ஜார்க்கண்டில் பாஜகவின் சிறுபான்மை பிரிவில் முக்கிய பொறுப்பில் உள்ள இஸ்லாமிய பெண் ஒருவர் அக்கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் 12க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த கொடுஞ்செயல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான அந்த பெண், தனது மகள் மற்றும் கணவர் ஆகியோருடன் தங்களது வீட்டில் இருந்த போது உள்ளே புகுந்த அந்த கும்பல் அவரது கணவரை கட்டிப்போட்டதுடன், மகளையும் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை 12க்கும் மேற்பட்ட நபர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பெண் தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறை உயர் அதிகாரியான அனுராக் குப்தா இது குறித்து கருத்து தெரிவிக்கைய…
-
- 0 replies
- 3k views
-
-
சென்னை: மதிப்பு கூட்டு வரி ஏய்ப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.240 கோடி செலுத்த நோக்கியா நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா நிறுவனம் இங்கு தயாரிக்கும் செல்போன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறி, வரிச்சலுகை பெற்ற நிலையில், அந்த செல்போன்களை இங்கேயே விற்று ரூ.2,400 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாக தமிழக அரசு புகார் கூறியது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரி வாய்ப்பு செய்த வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.240 கோடி செலுத்த நோக்கியா நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, 8 வாரத்திற்குள் பணத்தை…
-
- 0 replies
- 364 views
-
-
Tupelo, Mississippi (CNN) -- The scope is staggering. Some 75 million Americans are under threat of severe weather on Tuesday. People from the Great Lakes to the Gulf Coast, and from the Midwest to the East Coast, are advised to keep their eyes to the sky and their ears to the radio. That's a third of the country. The greatest risk will again be in the Deep South, with Mississippi and Alabama in the bull's-eye for the worst of the storms. The first two days of this powerful spring storm system, which is expected to rage into Wednesday, claimed 29 lives in six states. Third of the country under weather threat Twisters leave death and destruction Photos…
-
- 5 replies
- 616 views
-
-
இந்தியாவின் புதுடெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை திடீரென்று பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. கணினியில் ஏற்பட்ட மின்கசிவு இந்தத் தீ விபத்துக்கு காரணமென்று சந்தேகிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்து ஏற்பட்ட வேளையில் பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்தில் இருக்கவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி அலுவலகத்தின் கீழ்தளத்தில் புகை எழுந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது, அலுவலகத்திலிருந்த ஆவணங்களுக்குச் சேதம் ஏற்படவில்லை என பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/108568-2014-04-29-06-29-14.html
-
- 2 replies
- 263 views
-
-
அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் தீப்பிடித்து எரிந்தது. விமானி சாதுர்யமாக விமானத்தைத் தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஜெட் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை 10.45 மணிக்கு 93 பயணிகளுடன் மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பரோ தீவை நோக்கிப் பயணித்தது. இந்த விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் எஞ்சின் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. எரிபொருள் தீப்பிடித்து எஞ்சினில் பற்றி தீ பரவியதாகத் தெரிகிறது. எனினும், விமானி சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கியதால், விமானம் விபத்தில் இருந்து தப்பியது. இதனால் 93 பயணிகள் உயிர்பிழைத்தனர். http://www.akkinikkunchu.com/2014/04/29…
-
- 0 replies
- 187 views
-
-
எகிப்தில் இஸ்லாமிய இயக்க தலைவர் உட்பட 683 பேருக்கு மரண தண்டனை! [Tuesday, 2014-04-29 09:50:25] போலீசாரை கொன்ற வழக்கில் எகிப்து நாட்டின் இஸ்லாமிய இயக்க தலைவர் உள்பட 683 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.எகிப்தை நீண்ட காலம் ஆட்சி செய்த சர்வாதிகாரி ஹோன்சி முபாரக்கிற்கு எதிராக மக்களின் புரட்சி வெடித்ததால் 2011�ம் ஆண்டு அவர் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து அந்த நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் முகமது மோர்சி என்பவரின் தலைமையிலான இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. எனினும் மோர்சியின் ஆட்சியின் போதும் நாட்டில் ஆங்காங்கே கலவரமும், வன்முறையும் தொடர்ந்ததால் அரசியல் …
-
- 0 replies
- 390 views
-
-
எனக்கு தமிழை தவிர வேறு மொழிஇல்லை....என் தமிழரை தவிர எனக்கு வேறு வழியில்லை.... என் பாசத்திற்குறிய உலகம் முழுக்க வாழும் தாய்தமிழ் உறவுகளே..... கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிறுநீரக பிரச்சனையால் அவதிபட்டுக் கொண்டு, உறவுகளின் உதவியால் அனைத்து பரிசோதனைகளும் செய்துவிட்டு இன்னும் சிகிச்சை செய்ய இயலாத சூழலில் இருக்கிறேன், கோவை மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்வதே தீர்வு என இருக்கிறேன் , நேற்று மாலை முதல் என் இடதுகால் மறத்து போய்க்கிட்டு இருக்கு அவசர உதவிக்கு மருத்துவரிடம் காட்டி ஊசி மருந்து எடுத்தேன்,அவரோ அறுவைசிகிச்சைக்கு போ காலம் தாழ்த்தாதே என எச்சரித்து அனுப்பிவிட்டார். இதுவரை உறவுகளின் உதவியால் இன்றுவரை உயிருடன் இருக்கிறேன் மருத்துவ செலவே 3 முதல்4 இலட்சம் ஆகு…
-
- 5 replies
- 1.9k views
-
-
இடைமறித்து தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா: [Monday, 2014-04-28 08:18:31] குறித்த ஏவுகணை பரிசோதனையை இந்தியா தனது ஒடிஷாவின் பாலசூரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீலர் தீவில் நேற்று காலை 9.10 மணியளவில் வான் நோக்கி செலுத்தி சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. குறித்த ஏவுகணைக்கு பிரித்திவி எயார் டிபென்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கடற்படை விமானத்தில் இருந்து நேற்று காலை 9.06 மணிக்கு எதிரி நாட்டு இலக்காக கருதப்படும் ஏவுகணை ஏவப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரேடார் மூலம் கிடைத்த சிக்னல்களைக் கொண்டு ஏவப்பட்ட வீலர் தீவில் இருந்து சென்ற நவீன ரக இடைமறி ஏவுகணை வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்ததாக இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அ…
-
- 2 replies
- 373 views
-
-
நடுவானில் விமானங்கள் மோதிக் கொண்டன - ஒன்று கடலில் விழுந்தது! [Monday, 2014-04-28 10:51:21] வானில் பறந்து கொண்டிருந்த இரண்டு சிறிய ரக விமானங்கள் எதிர்பாராத விதமாக நடு வானில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில், ஒரு விமானம் கடலில் மூழ்கியது. மற்றொரு விமானத்தின் விமானி, சாதுர்யமாக விமானத்தை விமான நிலையத்தில் தரையிறக்கினார். சான்பிரான்சிஸ்கோ வளைகுடாவை ஒட்டிய சிறிய விமான நிலையத்தில் தரையிறங்க வந்த போது இந்த விபத்து நேரிட்டது. கடலில் விழுந்த விமானத்தைத் தேடும் பணி நடந்து வருகிறது. இரண்டு விமானங்களிலும் விமானிகள் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. http://seithy.com/breifNews.php?newsID=108251&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 211 views
-
-
மக்களவைத் தேர்தலில் வெற்றி பாஜக தலைமையிலான அரசு அமைந்தால், மத பேதமின்றி அனைவரின் பாதுகாப்புக்கும் உறுதிபூண்டுள்ளதாக, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி தெரிவித்தார். மதவாதம், அதிகாரம் மற்றும் பணம் ஆகியவற்றின் ஆபத்தான கலவையே பாஜகவின் கொள்கைகள் என்றும், இந்தியாவை சொர்க்கமாக்கப் போவதாக மோடி கூறிவருவதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். என்னிடம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இல்லை... பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மோடி அளித்த பேட்டியில், சோனியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தவர், "மக்களவைத் தேர்தலில் 100 இடங்களிலாவது கைப்பற்ற மாட்டோமா என்ற விரக்தியில் அவர் இப்படி பேசி வருகிறார். இந்தியாவை சொர்க்கமாக்குவேன் என்றும், எல்லா பிரச்சினைகளுக்கும் என்னிடம்…
-
- 3 replies
- 766 views
-
-
கடவுள்தான் தயவு செய்து இந்த நாட்டை மோடி மாடலில் இருந்து காப்பாற்ற வேண்டும்: - சோனியா பிரசாரம் [sunday, 2014-04-27 13:16:05] பஞ்சாப் மாநிலம், மால்வா பகுதியில் அமைந்துள்ள பர்னாலா என்ற இடத்தில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாரதீய ஜனதா தலைமை பிரசாரகர், குஜராத்தின் பெயரால் நரேந்திர மோடி மாடலை விற்பனை செய்து கொண்டிருக்கிறார். இந்த மாடலில் குஜராத்தில் என்ன நடக்கிறது? கடந்த 50 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வருகிற சீக்கியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற வைக்கிறார்கள். கடவுள்தான் தயவு செய்து இந்த நாட்டை மோடி மாடலில் இருந்து காப்பாற்ற வேண்டும். குஜராத்தில் சீக்கியர்களுக்கு …
-
- 1 reply
- 333 views
-
-
எழுவர் விடுதலை தாமதம் அரசியல் தலையீடு காரணமா???
-
- 2 replies
- 544 views
-
-
பூச்சி பயம்... 1.6 கோடி இந்திய மாங்கனிகளுக்கு தடை விதித்த ஐரோப்பிய யூனியன். லண்டன்: பூச்சி தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சுவை மிகுந்த இந்திய மாம்பழங்களை இங்கிலாந்தில் விற்பனை செய்ய ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. ஏற்கனவே கடைகளுக்கு வந்து சேர்ந்துள்ள கி்ட்டத்தடட 1.6 கோடி மாம்பழங்களுக்கு யூனியன் தடை விதித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் இந்திய மாம்பழங்களை சுவைக்கும் வாய்ப்பை இங்கிலாந்தைச் சேர்நதவர்கள் தற்காலிகமாக இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பூச்சி பயம். இந்தியாவிலிருந்து இறக்குமதி செயய்ப்பட்ட மாம்பழங்களில் பூச்சி தாக்கியிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளதாம். இங்கிலாந்து வெள்ளரிக்கு (Cucumber / Gurken) ஆபத்து. இந்தி பூச்சிகளால் இங்கி…
-
- 4 replies
- 789 views
-
-
உக்ரைன் விவகாரத்தின் எதிரொலியாக ரஷ்யா மீது புதிதாக கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க ஜி-7 நாடுகளின் தலைவர்கள் இன்று ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும், வரும திங்கள்கிழமைக்குள் அமெரிக்கா இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா ஆசியா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஜி-7 நாடுகளின் தலைவர்கள் அளித்துள்ள ஒப்புதல் அறிக்கையை வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டுள்ளது. அதில், 'ஜெனிவா உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ள எந்த முழுமையான நடவடிக்கையையும் ரஷ்யா எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் உக்ரைன் எல்லையில் தனது ராணுவத்தை குவித்து வருகிறது. உக்ரைனில் நிலவி வரும் பதற்றத்தை தணிப்பதற்காக கொண்டு வர…
-
- 4 replies
- 684 views
-
-
பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜீத் சிங் கோலி, நரேந்திர மோடி முன்னிலையில் பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, அம்மாநில முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோர் பங்கேற்றனர். பிரசார மேடையில் அவர்கள் முன்னிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் தல்ஜீத் சிங் கோலி, பாரதிய ஜனதாவில் தம்மை இணைத்துக் கொண்டார். இதனையடுத்து கருத்து தெரிவித்த நரேந்திர மோடி அவரது வருகை, பாரதிய ஜனதாவை மேலும் வலுப்படுத்தும் என்றார். தல்ஜீத் சிங் கோலியின் முடிவு குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கின் குடும்பம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. எனினும், அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இந்…
-
- 2 replies
- 523 views
-
-
உக்ரேன் கிளர்ச்சியால் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் அபாயம்! [saturday, 2014-04-26 11:29:20] ரஷ்ய - உக்ரேன் நாடுகளுக்கிடையிலான நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் சுமார் 10 நகரங்களில் அரசு கட்டிடங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தமது கட்டுப்பாட்டுக்கள் வைத்துள்ளனர். உக்ரேனின் எச்சரிக்கையையும் மீறி அங்கிருந்து அவர்கள் வெளியேற மறுத்து வருகின்றனர். அவர்களை தனது செல்வாக்கை பயன்படுத்தி ரஷ்யா வெளியேற்ற வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் ரஷ்யா உடன்பாட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில், ரஷ்யப்படையினர் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான தீவிர இராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ரஷ்ய துருப்பினர்…
-
- 1 reply
- 574 views
-
-
தற்போதைய காலங்களில் இங்கிலாந்து மக்கள் சகல தளங்களிலும் ஆபத்திருப்பது போன்ற பிரம்மையிற் பயந்து வாழ்வதாக கருத்துக் கணிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகையிரதத்திற்காகக் காத்திருக்கும் சந்தர்ப்பங்களிலும், பயணங்களின் போதும், தான் இயங்கிப் படிக்கட்டுகளில் செல்லும் சமயங்களிலும், இனம் தெரியாத பய உணர்வு மக்கள் மத்தியிற் காணப்படுவதாக அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புச் சந்தை நடைமுறைகளிலும், வேலை இடங்களுக்கான உத்தரவாதத்திலும் தேவையற்றுக் காணப்படும் சந்தேகம், பய உணர்வைத் தோற்றி நிற்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்து மக்கள், உணராத வகையில் பய உணர்வு அவர்கள் மனங்களில் ரகசியமாக குடியேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் வாதிகள் ம…
-
- 1 reply
- 452 views
-
-
மலையடிவாரத்து முகாமில் போராடும் ஷெர்பாக்கள் மலையேறுவோர்க்கு வழிகாட்டிகளாக இருந்துவரும் ஷெர்பா இனத்தார் 16 பேர் சென்ற வாரம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த பின்னணியில், தற்போதைய மலையேற்ற பருவத்தில் ஏனையோரின் பயணங்கள் தொடருமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. மலையேறச் சென்றிருந்த மற்றவர்களும் எவரெஸ்ட் சிகர அடிவராத்து முகாமிலிருந்து தற்போது கீழே இறங்கிவர ஆரம்பித்துள்ளனர். ஷெர்பாக்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையும், இமலயலையில் தற்போது காணப்படும் ஆபத்தான சூழலும் இந்நிலைக்கு காரணம். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்ற ஆர்வலர்கள் ஏறுவதற்குரிய காலம் என்பது ஒரு மூன்று மாத காலகட்டம்தான். ஷெர்பாக்களின் ஊதிய…
-
- 0 replies
- 429 views
-