Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் மாயமானது தொடர்பாக காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை ஏன் பதிவு செய்யப்படவில்லை என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ கோரும் ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சிபிஐ கோரிய ஆவணங்கள் பலவும் காணாமல் போய்விட்டது என்று கைவிரித்தது மத்திய அரசு. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது . மத்திய அரசு ஆவணங்களைக் காணவில்லை என்று கூறியதையும் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஒரு சிறு …

  2. நிலக்கரி சுரங்க ஊழலை மூடி முறைக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, நாடு முழுவதும் இரண்டு நாள் போராட்டம் நடத்தப்படும் என பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையில் 142 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டின் போது நடந்த முறைகேட்டில் அரசுக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித்திருந்தார். அதன்பேரில், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக மாநில தலைநகரங்களில் மே 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளரான பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக மாநில ஆளுநர்களிடம் மனு அளிக்க…

    • 0 replies
    • 333 views
  3. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற முறையில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 10 ஆண்டு பதவி காலத்தில் கூடுதலாக நிலக்கரி இலாகாவையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் 2005–ம் ஆண்டு ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்ததாக கூறப்படுவது குறித்து சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. குமாரமங்கலம் பிர்லா மீதும் நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பாரக் மற்றும் சில அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையையும் சி.பி.ஐ. தாக்கல்…

  4. நிலக்கீழ் ரெயில் நிலையங்களில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு : மருத்துவர்கள் எச்சரிக்கை லண்டன் நிலக்கீழ் ரெயில் நிலையங்கள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஒரு மையமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தலைநகரில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளி குறித்த தகவல் வெளிவந்த சில மணிநேரங்களுக்குப் பின்னர், லண்டன் நிலக்கீழ் ரெயில் நிலையங்கள் கொரோனா வைரஸ் பரவக்கூடிய இடமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனினும் நிலக்கீழ் ரெயில் பயணிகளுக்கு அதில் பயணிக்கவேண்டாம் என இதுவரையில் எந்தவிதமான அறிவுறுத்தல்களும் அரசாங்கத்தால் விடுக்கப்படவில்லை. கொரோனா வைரஸால் ஏற்படும் COVID-19 நோயினால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேர் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். …

  5. நிலக்கீழ் ரெயில் பயணத்தை நிறுத்துங்கள் அல்லது பலர் இறந்துவிடுவார்கள் : லண்டன் மேயர் சாதிக் கான் எச்சரிக்கை நிலக்கீழ் ரெயில் பயணத்தை நிறுத்துங்கள் அல்லது பலர் இறந்துவிடுவார்கள் என்று லண்டன் மேயர் சாதிக் கான் எச்சரித்துள்ளார். பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்றிரவு விடுத்த அவரகாலநிலை அறிவிப்பினையும் மீறி இன்று செவ்வாய்க்கிழமை ஏராளமான பயணிகள் நிலக்கீழ் ரெயில்கள் மூலமாகப் பயணம் செய்துள்ளனர். மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்துச் சேவைகள் முக்கியமான அத்தியாவசியச் சேவைகளில் பணியாற்றுகின்றவர்களுக்காக இயக்கப்படுகின்றன. எனவே அரசாங்கத்தின் உத்தரவுகளை மீறி ரெயில்களில் பயணம் செய்வதை நிறுத்தாவிட்டால் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் இறந்துவிடுவார்கள் எ…

    • 1 reply
    • 335 views
  6. நியுயோர்க்கில் கொரோனா வைரஸ் அதிவேகபுகையிரதத்தை விட வேகமாக பரவுகின்றது என தெரிவித்துள்ள ஆளுநர் அன்றூ குயுமோ மருந்துகள் மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நியுயோர்க் நிலங்கரி சுரங்கத்தில் சிக்குண்டுள்ள கனரி பறவை போல காணப்படுகின்றது,நியுயோர்க் வேகமாக பாதிக்கப்படுகின்றது நியுயோர்க்கில் தற்போது நடப்பது நாளை கலிபோர்னியா இலினொய்சில் நடக்கலாம்,எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். நாங்கள் எதிர்பார்த்ததை விட உச்சநிலையை விரைவில் அடைந்துவிட்டோம், அது நாங்கள் எதிர்பார்த்ததை விட பெரிதாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார் வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக அமெரிக்க அரசாங்கம் அனுப்புகின்ற உயிர்காக்கும் கருவிகள் போதுமானவையாகயில்லை எனவும் அவர் கு…

    • 1 reply
    • 290 views
  7. நிலத்தடியில் 20,000 மக்கள் வசித்த ரகசிய நகரம் - கோழிகள் மூலம் உலகிற்கு தெரியவந்தது எப்படி? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES துருக்கியில் அமைந்துள்ள கப்படோசியாவின் காதல் பள்ளத்தாக்கு வழியாக நான் நடந்தபோது வேகமாக வீசிய காற்றால் புழுதிப் பறந்தது. இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற மலைச்சரிவுகள் அந்த நிலப்பரப்பை ஆழமான சிவப்பு பள்ளத்தாக்குகளுடன் வண்ணமயமாக்கின. மேலும், தூரத்தில் புகைக்கூடு போன்ற பாறை வடிவங்கள் தெரிந்தன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கொந்தளிப்பான எரிமலைச் சூழல் இயற்கையாகவே இந்தக் கோபுரங்களை உருவாக்கியுள்ளது. மத்திய துருக்கியில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு சுற்றுப்பயணமும் அதன…

  8. பட மூலாதாரம்,TAPANI KARJANLAHTI/ TVO கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பீசிங் பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அணுக் கழிவுகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு கதிர்வீச்சின் நச்சுத் தன்மையுடன் இருக்கும். அதைப் பாதுகாப்பாகப் புதைத்து வைக்க சேமிப்புக் கிடங்கை எவ்வாறு கட்டமைப்பது? கோடைக்காலத்தில் ஒரு குளிரான நாளாக அது இருந்தாலும் வடகிழக்கு பிரான்சில் ஷாம்பெயின் பகுதியில் 1,500 அடிக்குக் கீழே சற்று கதகதப்பாகத்தான் உணரப்பட்டது. இந்த அணுக்கழிவுக் கிடங்கு மிக வெளிச்சமாகவும், காய்ந்தும் இருக்கும். இங்குள்ள தூசிகளை என்னால் உணர முடிகிறது. நான் என்னுடன் எடுத்துச் செல்லும் செயற்கை சுவாசக் கருவிகள் இந்த நிலத்தடியில் உள்ள ஆபத்துகளை உணர்த்துகின்றன. இங்குள்ள கரடுமுரடான பாதைகள், ஆய்வுக் …

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சட்டத்திற்குப் புறம்பான சுரங்கத் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்க நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கி அனுமதி எழுதியவர், நோம்சா மசெகோவ் பதவி, பிபிசி செய்திகள் தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோத கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தச் சிறிய "நகரத்தில்" சுமார் 600 பேருடன் ஒருவராக இந்தூமிசோ என்ற நபர் அங்கே வசித்துப் பணிபுரிந்து வருகிறார். இந்த நகரம் முழுவதும் சந்தைகளும், பாலியல் தொழில் நடைபெறும் பகுதிகளும் இருக்கும். மேலும் இங்கு தென்னாப்பிரிக்காவில் பயன்பாட்டில் இல்லாத ஒரு தங்கச் சுரங்கத்தின் உள்ளே இந்த நகரம் இருக்கிறது. தங்கச் சுரங்கத்தில் உள்ள…

  10. நிலத்தடியில் வாகனம் நிறுத்துமிடத்தில் வெள்ளத்தில் மூழ்கி 7 பேர் பலி By T. SARANYA 07 SEP, 2022 | 12:28 PM தென் கொரியாவில் 'ஹின்னம்னார்' என்ற சக்தி வாய்ந்த சூறாவளியால் ஏற்பட்ட கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நிலத்தடியில் வாகனம் நிறுத்துமிடத்தில் வெள்ளத்தில் மூழ்கி 7 பேர் உயிரிழந்துள்ளார்கள். போஹாங் நகரத்திலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் இருந்த ஒன்பது பேரின் காரை வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்து அகற்றுமாறு குடியிருப்பு நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கமைய தங்கள் வாகனங்களை அகற்ற சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளார்கள். இந்நிலையில், 2 பேர் மீட்கப்பட்டுள்ளதோடு…

  11. நிலத்திலும் நீரிலும் தரையிறங்கும் உலகின் மிகப்பெரிய விமானம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA உலகிலேயே மிகப்பெரிய, `தரையிலும், நீரிலும் தரையிறங்கும்` விமானமான ஏ.ஜி 600 என்ற விமானத்தை சீனா வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விமானம், தனது முதல் ஒரு மணி நேர பயணத்தை செய்துள்ளது. கிட்டத்தட்ட போயிங் 747 வகை விமானத்தைபோலவே அளவுள்ள இந…

  12. சென்னை: தமிழகத்தில் மொழியையும், ஈழத்தில் நிலத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் என்று வேதனை வெளியிட்டுள்ளார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன். எழுகதிர் தமிழ் நிலம் இணைந்து நடத்திய தமிழர் இந்தியர் இல்லையா என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நூலை மாலை முரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் வெளியிட்டார். முதல் பிரதியை தொழிலதிபர் சுந்தரேசனார் பெற்றுக் கொண்டார். லண்டனில் திருக்குறள் தமிழ்ப்பள்ளி நடத்தும் தேவதாசு,​ நூலாசிரியர் அறுகோபாலன்,​டெல்லி தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் இந்திரா மணியன்,​​ பாவலர் மு.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே விழாவில், தமிழர் மிகுதியாக இழந்தவற்றை மீட்க என்ன வழி?, வாழ்வியற் சொல் அகரமுதலி ஆகிய நூல்களும் வ…

  13. நேபாளத்தில் போர் கால அடிப்படையிலான மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர். | படம்:ஏ.பி. நிலநடுக்கத்தால் தரைமட்டமான கோயில். | படம்:ராய்ட்டர்ஸ். நேபாளத்தை புரட்டிப் போட்டிருக்கும் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 10,000-ஐ எட்டும் அபாயம் உண்டு என்று அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா கவலை தெரிவித்துள்ளார். கடந்த 25-ம் தேதி காலை இமாலய மலைப்பகுதியில் இருக்கும் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பேரழிவைச் சந்தித்துள்ளன. நேபாளத்தின் எல்லை நாடுகளிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,347 ஆக அ…

    • 0 replies
    • 282 views
  14. தொடர் நிலநடுக்கங்களால் ஜப்பான் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள். இதனால், பொதுமக்கள் பேரழிவு ஏற்பட்டால் தேவைப்படக்கூடிய பொருள்களையும் அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்களையும் வாங்கிக் குவிப்பதில் மும்முரம் காட்டிவருகிறார்கள். தெற்கு ஜப்பானில் ஆகஸ்ட் 8 ஆம் திகதி ரிக்டர் அளவில் 7.1ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 14 பேர் காயமடைந்தனர். இதனால், வரும் நாட்களில் பெரிய அளவிலான நிலநடுக்கம் வரக்கூடும் என அந்நாட்டு பருவநிலை முகவை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், டோக்கியோ பேரங்காடி ஒன்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருள்கள் சில குறைவாக இருப்பதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. அதற்குக் காரணம் நிலநடுக்கம் தொடர்பாக ஊடகங்களில் வரும் தகவல்களே எ…

  15. நேபாளத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘சேப்டி செக் அப்டேட்’ மூலமாக உதவிய பேஸ்புக், தற்போது இந்த பூகம்பத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் நன்கொடை அளிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக்கை திறந்தாலே நிலைத்தகவல்களை (status) காணும் இடத்திற்கு மேலே வாருங்கள் அங்கே நேபாளத்திற்கு நன்கொடை அளிக்கலாம் என்ற வார்த்தைகளுக்கு கீழே ‘டொனேட்’ என்ற பட்டன் இருக்கிறது, அதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கடன் அட்டைகளை (கிரெடிட்/டெபிட் கார்ட்) பயன்படுத்தி குறைந்தது 500 ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் உதவி செய்யலாம். வாடிக்கையாளர்கள் நன்கொடையாக அளிக்கும் நிதி முழுவதையும் சர்வதேச மருத்துவ நிறுவனத்திற்கு அளிக்கும் பேஸ்புக், அந்த நிறுவனத்திற்கு 2 மில்லிய…

    • 0 replies
    • 336 views
  16. நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேஷியாவை தாக்கியது சுனாமி! (2 ஆம் இணைப்பு) இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியது. இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகி இருந்த நிலையில் சுனாமி தாக்கியுள்ளது. சுமார் 2 மீட்டர் உயரத்தில் (6.6) சுனாமி அலைகள் தாக்கும் என எச்சரித்திருந்தது. இதைத்தொடர்ந்து கடலோர பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது சுமூகமான நிலை காணப்படுவதால் சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!( 1 ஆம் இணைப்பு) இந்தோனேஷியாவின் சுலாவேசி பிராந்தியத்தில் 7.5 ரிச…

  17. நிலநடுக்கத்தை தொடர்ந்து நியூசிலாந்தில் மழை வெள்ளம்: மக்கள் சிக்கித் தவிப்பு நிலநடுக்கத்தை தொடர்ந்து நியூசிலாந்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர். கைகொயுராவில் சிக்கிய மக்கள் ஹெலிகாப்டரில் ஏற்றிச்செல்லப்படும் காட்சி. வெலிங்டன்: நியூசிலாந்தில் நேற்று முன்தினம் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் 7.8 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து, 2 பேர் பலியாகினர் பலர் காயம் அடைந்தனர். ரோடுகள் துண்டிக்கப்பட்டன. மின்சாரம், ரோடுகள், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்ப…

  18. புதுடெல்லி: பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலம் தவறாக பயன்படுத்தபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி உள்பட 4 பேர் நேரில் ஆஜராக டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 'நேஷனல் ஹெரால்ட்' மற்றும் 'குவாமி அவாஷ்' ஆகிய பத்திரிகைகளை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் என்ற பொது நிறுவனத்திற்கு டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரால்டு ஹவுஸ் என்ற இடமும், மிகவும் விலை மதிப்பு மிக்க நிலமும் உள்ளது. இந்நிலையில் சோனியாவும்,ராகுலும் சேர்ந்து தொடங்கிய 'யெங் இந்தியன்’ என்ற நிறுவனம், அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, அதன் பெரும்பாலான பங்க…

  19. நிலம் கையகப்படுத்துதல்: அவசர திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் தனியார் நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்வவது தொடர்பான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை திங்களன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிமத்திய அமைச்சரவையின் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இந்த தகவலை தெரிவித்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய தலைநகர் டில்லி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கைப்பட்டுள்ள குடியிருப்புகளை ஒழுங்குப்பட்டுதுதல் மற்றும் நாட்டில் நிலம் கையகப்படுத்துதல் முறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் என்று இந்த இரண்டு விவகாரங்களுக்காகவும் அ…

  20. அந்தமான்- நிக்கோபர் தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இது புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2011ம் டிசம்பரில் தானே புயலின் கோரத்தாண்டத்தில் கடலூர் மாவட்டம் சிக்கி முற்றிலும் சேதமடைந்தது கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் உருவான‘நிலம்' புயல் மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட கடலோட மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. தற்போது உருவாகி வரும் புதிய புயல் மேற்கு வடமேற்காக நகர்ந்து ஆந்திராவில் கரை கடக்க வாய்ப்புள்ளது. இன்னும் சில தினங்களில் புயல் ஆந்திராவை தாக்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புதிய புயல், கடந்த ஆண்டு உருவான நீலம் புயலை விட வலிம…

  21. நிலவில் கால் பதித்த முதல் மனிதன் நீல்ஆம்ஸ்ரோங் இயற்கை எய்தி விட்டார். US astronaut Neil Armstrong dies, first man on MoonComments (362) Advertisement The BBC's Pallab Ghosh, who interviewed Armstrong, says he had an ''ice cool attitude'' which made him an excellent astronaut Continue reading the main story Related Stories Obituary: Neil Armstrong Neil Armstrong has heart surgery Apollo 11 astronauts awarded medals Watch US astronaut Neil Armstrong, the first man to set foot on the Moon, has died at the age of 82. His family says he died from complications from heart surgery he had earlier this month. He walked on the Moon on 20 July …

    • 14 replies
    • 1k views
  22. நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் தீர்மானம்! எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளா் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இதுகுறித்த அறிப்பினை வெளியிட்டுள்ளார். நிலவில் ஆய்வுக் கலத்தை தரையிறக்கி, ஆய்வுகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக ஆய்வுக் கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை ஐக்கிய அரபு அமீரகம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நிலவுக்கு-விண்கலம்-அனுப்/

    • 23 replies
    • 1.9k views
  23. பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் 1950-களில் விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்திய ரஷ்யாவுக்கு ஒரு அச்சத்தை உருவாக்கும் முயற்சியாக அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு வினோதமான திட்டத்தை தீட்டினர். ஆனால் அணு குண்டு வெடித்து அந்த நிலவின் நிலப்பரப்பை கதிரியக்கம் மிக்க ஆபத்தான நிலப்பரப்பாக மாற்றியிருந்தால் அது எப்படியிருக்கும்? நிலவுக்கு மேற்கொள்ளப்படும் பயணங்கள் குறித்த ஆய்வறிக்கை, தொகுப்பு 1 என்ற அந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் அது ஒரு சாதாரண அறிவியல் ஆராய்ச்சி குறித்த தகவல்களை வெளிப்படுத்தும் விதத்திலேயே இருக்கிறது. அந்த புத்தகத்தை சாதாரணமாக நாம் புறந்தள்ளிவிட முடியும். அது தான் அந்தத் தலைப்பின்…

  24. நிழலுலக தாதா 'சோட்டா ராஜன்' பாலியில் கைது சோட்டா ராஜன். | கோப்புப் படம். இந்தியாவில் பல கொலை வழக்குகளில் தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா சோட்டா ராஜன் இந்தோனேசியாவின் பாலியில் கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய போலீஸ் அளித்த துப்புத் தகவலின் அடிப்படையில், இந்தோனேசிய அதிகாரிகள் சோட்டா ராஜன் என்று அழைக்கப்படும் ராஜேந்திர சதாசிவ் நிகல்ஜியைக் கைது செய்தனர். இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. பல்வேறு கொலை வழக்குகள் தொடர்பாக தேடப்பட்டு வரும் குற்றவாளியான சோட்டா ராஜன் கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மும்பை குண்டுவெடிப்பு, மற்றும் பல கடத்தல் கொலை வழக்குகளில் இவர் தேடப்பட்டு வந்தார். இதனையடுத்து, இந்தியா கோரிக்கை வைத்தால் சோட்டா ராஜன் இந…

  25. கடும் அமளி: ராஜ்யசபா நேற்று காலை கூடியதும், ஜம்மு - காஷ்மீரில், ராணுவ வீரர்கள் ஐந்து பேர், பாக்., ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், பெரிய அளவில் வெடித்தது. "இந்தப் பிரச்னை குறித்து, உடனே விவாதம் நடத்த வேண்டும்' என, பா.ஜ., உட்பட, எதிர்க்கட்சிகள் பலவும் கோரிக்கை விடுத்தன; அத்துடன், அமளியிலும் ஈடுபட்டன. இந்த அமளிக்கு இடையே, பா.ஜ.,வைச் சேர்ந்த, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி பேசியதாவது: ஐந்து ராணுவ வீரர்களை, இந்தியா பறிகொடுத்திருக்கிறது. இதை, சாதாரண உயிரிழப்பு என, எடுத்துக் கொள்ள முடியாது. ராணுவ வீரர்கள், சுட்டுக் கொல்லப்பட்ட விஷயத்தை, மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக ஊடுருவல் சம்பவங்களையும், இதுபோன்ற உயிர்பலி சம்பவங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.