உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
ஒண்டோரியாவில் உள்ள Peel Region பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது, அந்நகரையே பரபரப்பாக்கியுள்ளது. 23 வயது இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, உயிருக்கு ஆபத்தான காயங்களை உண்டாக்கிய Peel Region பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரி Abel Gomes என்பவரை நேற்று காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யும்போதுகூட அவர் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பாலியல் பலாத்கார சம்பவம் டிசம்பர் 14, 2012 ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு நேற்று ஒண்டோரியோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கையுடன், மீண்டும் ஜூன் 24ஆம் தே…
-
- 0 replies
- 452 views
-
-
டொரண்டோவில் 38 வயது தமிழர் ஒருவர் அவருடைய வீட்டிலேயே துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் டொரண்டோ தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (டொரண்டோ தமிழர் சுரேந்திரா வைத்திலிங்கம் கொலையை விசாரணை செய்யும் அதிகாரி) டொரண்டோவில் Mantis Road, in the Morningside and Finch avenues area, என்ற பகுதியில் உள்ள தன் வீட்டில் சுரேந்திர வைத்திலிங்கம் என்ற தமிழர் மாலை 3 மணியளவில் தனது வீட்டு தோட்டத்தில் நின்றுகொண்டு, இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். அவருக்கு மனைவியும், 4 வயது மகனும் இருக்கின்றனர். அவர் தன்னுடைய மகனின் பிறந்தநாளை நேற்றுதான் சந்தோஷம…
-
- 0 replies
- 635 views
-
-
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வி அடைந்ததையொட்டி எடியூரப்பாவை மீண்டும் கட்சியில் சேர்க்க முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதனை பாரதீய ஜனதா மறுத்துள்ளது. எடியூரப்பாவை கட்சியில் சேர்க்கும் முயற்சி எதுவும் நடக்கவில்லை என்று முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார். இந்த நிலையில் கர்நாடக ஜனதா கட்சி தலைவர் எடியூரப்பா பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தல் மிக அருகில் இருந்த போது நாங்கள் கட்சியை தொடங்கினோம். கட்சி சின்னம், பெயர், வேட்பாளர்கள் போன்ற அனைத்தும் புதியதாக இருந்தன. பிரசாரம் செய்யவும் காலம் குறைவாக இருந்தது. இந்த காரணங்களால் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற முடிய வில்லை. எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள …
-
- 1 reply
- 349 views
-
-
பாரதீய ஜனதா துணைத் தலைவரும் டெல்லி மேல் சபை எம்.பி.யுமான ரவிசங்கர் பிரசாத் தலைமையில் 3 பேர் கொண்ட குழு இலங்கை செல்கிறது. வருகிற ஜூன் 4-ந்தேதி அவர்கள் டெல்லியில் இருந்து புறப்பட்டு கொழும்பு செல்கிறார்கள். அங்கு அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சே, ராணுவ செயலாளர் கோத்தபய ராஜபக்சே மற்றும் இலங்கை மந்திரிகள் அதிகாரிகளை சந்திக்கிறார்கள். இலங்கையின் வடக்கில் உள்ள தமிழர் பகுதிகளுக்கும் சென்று பார்வையிடுகிறார்கள். தமிழர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகளையும் பார்வையிட திட்டமிட்டுள்ளனர். இது பற்றி வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டணி கட்சி எம்.பி.க்களிடம் கேட்டபோது, பாரதீய ஜனதா குழு வருகை பற்றி தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்றார். இதே போல் இந்திய தூதரக அதிகா…
-
- 0 replies
- 355 views
-
-
இலங்கை வீரர்கள் பங்குபற்றும் ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசு நடத்தாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை அடுத்து, இந்தப் போட்டிகள் சென்னை நகரில் இருந்து புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய தடகளக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தடகளக் கூட்டமைப்பின் தலைவர் அடில் சுமரிவாலா, ஆசிய தடகளப் போட்டிகள் சென்னை நகரிலிருந்து புனே நகருக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்தார். வரும் ஜூலை 3-ம் தேதி முதல் முதல் 7-ம் தேதி வரை புனே நகரில் இந்தப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன என்றார். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15074:asian-athletic-competition-and-from-chennai-to-pune&a…
-
- 0 replies
- 446 views
-
-
அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் தலிபான் அமைப்பின் தலைவர் வாலி-உர்-ரஹ்மான் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பின் ஆட்சியை இழந்த தலிபான்கள் பாகிஸ்தானின் பழங்குடி பகுதியான வாஜிரிஸ்தான் பகுதியில் பதுங்கியுள்ளனர். இவர்கள் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்க அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பின் தலைவர் வாலி-உர்-ரஹ்மான் அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் மூலம் நேற்று கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/a…
-
- 2 replies
- 417 views
-
-
ஸ்ரீனிவாசன் ஒதுங்க வேண்டும் என்று கோரிக்கை கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 29 மே, 2013 - 08:39 ஜிஎம்டி ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான பிரச்சினைகளில் சிக்கியுள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தலைவர் என்.ஸ்ரீனிவாசன், இப்பிரச்சினையில் கைதாகியிருக்கும் அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் மீதான புகார்கள் குறித்த விசாரணை முடிவடையும் வரை வாரியத்தலைவராகப் பணியாற்றாமல் ஒதுங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். கேரள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இன்னும் வேறிருவர் சூதாட்டக்காரர்களுக்கு உதவியாக பந்து வீசினர் என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் முதலில் கைதாக, பின்னர் பிரபல ஐபிஎல் அணியான் சென்னை சூப்பர் கிங்சின் உரிமையாளர் என அண்மைக் காலம்வரை வர்ணிக்கப்பட்ட ஸ்ரீனிவ…
-
- 1 reply
- 389 views
-
-
டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. இன்று காலை 9.05 மணி அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு 56 புள்ளிகள் குறைந்து, ஒரு டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 56.13 ரூபாயாக இருந்தது. இதன் மூலம் 17 பைசா வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ஜூன் 2012க்குப் பிறகு, டொலருக்கு எதிரான இந்த வீழ்ச்சி மிகப் பெரிய வீழ்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2 வாரங்களாகவே டொலருக்கு எதிரான மதிப்பு படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. தங்கத்தின் விலை குறைந்து வருவதினால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்வதும் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் அதிகமாக தங்கத்தை இறக்குமதி செய்யு…
-
- 0 replies
- 634 views
-
-
புதுடெல்லி: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்க கடற்படையை சேர்ந்த வீரர்கள் சுட்டுக்கொல்லவில்லை என்றும், பின்லேடன் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவரது முன்னாள் பாதுகாவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள அப்போட்டாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதியன்று, தங்கள் நாட்டின் கடற்படை ( 'சீல்' ) வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் கடலில் வீசிவிட்டதாகவும் அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்நிலையில் ஒசாமாவின் முன்னாள் மெய்க்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தாஹ் இதனை தற்போது மறுத்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள வளைகுடா நாட்டின் ஊடகம் ஒன்றுக…
-
- 0 replies
- 529 views
-
-
மியன்மாரின் வடகிழக்கில் உள்ள ஷான் மாகாணத்தின் தலைநகர் லாஷியோவில் முஸ்லிம்கள் மற்றும் பௌத்தர்களிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. பெளத்த மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பெற்றோல் ஊற்றி முஸ்லிம் ஒருவர் எரித்ததாக வந்த செய்தியை அடுத்து இந்த கலவரம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவதுடன் அவரை எரித்த நபர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து ஏற்பட்ட மோதலில் முஸ்லிம்களின் பள்ளிகள் மற்றும் கடைகளுக்கு தீவைக்கப்பட்டது. இதனால் கலவரம் நடைபெற்ற பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் மியன்மாரில் இடம்பெற்ற மதக்கலவரத்தில் 200-கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக…
-
- 0 replies
- 685 views
-
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மறுவிசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது ஜூன் 5ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ)க்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று புதன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜிவ் கொலை வழக்கின் விசாரணை பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நளினிக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தங்கள் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மதுரை மேலூரைச் ச…
-
- 0 replies
- 391 views
-
-
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பாரதீய ஜனதாவின் தலைமையை விமர்சித்ததற்காக மூத்த வழக்கறிஞரும், பாரதீய ஜனதா எம்பியுமான ராம் ஜெத்மலானி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராம்ஜெத்மலானி கூறியதாவது:- சமூக விரோதிகளிடம் உள்ள கருப்பு பணம் குறித்து பேசுவதற்கோ, அதை திரும்ப பெறுவதற்கோ பாரதீய ஜனதா கட்சியில் சிலர் விரும்பவில்லை. கட்சிக்குள்ளே சில விரும்பத்தகாத சக்திகள் இருக்கின்றன. அவர்கள் கட்சியை அழிக்க பார்க்கிறார்கள். அவர்களை கட்சியை விட்டு வெளியேற்றவே நான் விரும்புகிறேன். அந்த விரும்பத்தகாத சக்திகள் தான் நான் வெளியேற்றப்பட்டதற்கு காரணம். அவர்களை வெளிக்காட்டும் வரை நான் ஓயப்போவதில்லை. நான் தொடங்கிய கருப்பு பண விவக…
-
- 0 replies
- 362 views
-
-
ஜப்பானை சேர்ந்த தமிழ் மொழி அறிஞர் நோபுரு கரஷிமா என்பவருக்கு இலக்கியம் மற்றும் கல்விக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உடல்நலம் சரிஇல்லாததால் அவரால் டெல்லியில் நடந்த விழாவுக்கு வரமுடியவில்லை. எனவே தற்போது ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங் டோக்கியோவில் நடந்த ஒரு விழாவில் கரஷிமாவுக்கு பத்மஸ்ரீ விருதினை வழங்கினார். கரஷிமா தற்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். அவர் பல ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்து தென் இந்திய வரலாறு குறித்து ஆய்வு செய்துள்ளார். அப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் கல்வெட்டுகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். கரஷிமாவுக்கு நன்றாக தமிழ் பேசவும் தெரியும்.http://www.dinaithal.com/index.php?option=com_content&view=art…
-
- 9 replies
- 726 views
-
-
பழங்குடி மக்கள் மீதான சல்வா ஜூதுமின் வன்முறைகளுக்குப் பழிவாங்கவே மே 25-ந் தேதி தாக்குதல் நடத்தப்பட்டதாக மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மே 25-ந் தேதியன்று சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சென்ற வாகனம் மீது மாவோயிஸ்டுகள் அதிரடித் தாக்குதலை நடத்தினர். இதில் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், முன்னாள் மாநில அமைச்சர் மகேந்திர கர்மா, முன்னாள் எம்.எல்.ஏ. உதய் முதியார் உள்ளிட்ட 27 பேர் கொல்லப்பட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா உள்ளிட்ட 36 பேர் படுகாயமடைந்தனர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீதான மாவோயிஸ்டுகளின் இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்நிலையில் மாவோயிஸ்டுகளின் தண்டகாருண்யா செய்தி…
-
- 4 replies
- 901 views
-
-
பாஜக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராம் ஜெத்மலானி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சிபிஐ இயக்குனர் நியமனம் குறித்த பாஜகவின் நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்தது மற்றும் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரியை விமர்சித்தது ஆகியவற்றுக்காக அக்கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராம் ஜெத்மலானி கடந்த நவம்பர் மாதம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அப்படி இருந்தும் அவர் இந்த மாத துவக்கத்தில் நடந்த பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்திற்கு வந்து ஊழல் விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வன்மையாக ஏன் எதிர்க்காமல் உள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து அவரை கட்சியில் நீக்கிவிட தலைவர்கள் நினைத்தனர். கட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் காரணத்தைக் …
-
- 0 replies
- 423 views
-
-
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் லெபனான், துருக்கி போன்ற அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். சிரியாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்டி விரிவாக விவாதம் நடத்த வேண்டும் என அமெரிக்கா, துருக்கி, கத்தார் உள்ளிட்ட நாடுகள் கடந்த 24ம் தேதி கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து, ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலின் அவசர ஆலோசனை கூட்டம் ஜெனீவாவில் நாளை (29ம் தேதி) கூடுகிறது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் உயர் ஆணையாளர் நவி பிள்ளை கூறியதாவது:- சிரியாவில் அரசு தரப்பில் இருந்து மட்டுமல்ல... போராளிகள் தரப்பிலும் மனித உரிமைக…
-
- 2 replies
- 488 views
-
-
இந்தியாவுக்கு எதிராக 3 முறை பாகிஸ்தான் போர் தொடுத்திருக்கும், ஆனால் பாகிஸ்தான் நாட்டின் அணுசக்தி, அணு ஆயுதத் திறமைகளைக் கண்டு அந்தப் போர்கள் தவிர்க்கப்பட்டன என்று பாகிஸ்தானை ஒரு சக்தி வாய்ந்த அணுசக்தி நாடாக உருவாக்கியதாகக் கூறப்படும் விஞ்ஞானி டாக்டர். சமர் முபாரக்மன்ட் தெரிவித்துள்ளார். இவர் ஒரு மூத்த அணு விஞ்ஞானி ஆவார். பாகிஸ்தான் அணு ஆயுத நாடாக மாறியதில் இவரது பங்கு அபரிமிதமானது என்று தெ நேஷன் என்ற பத்திரிக்கை தெரிவித்துள்ளது. நேஷன் பத்திரிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: டாக்டர் முபாரக்மன்ட் சமீபத்தில் தி நேஷன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் 3 முறை இந்தியாவுடன் போர் தடுக்கப்பட்டதற்கு காரணம் பாகிஸ்தான் இந்தியாவுக்கு சரிசமமான அணுசக்தி நாடாக இருந்த…
-
- 0 replies
- 1.8k views
-
-
பிரித்தானியாவில் திருமண பந்தத்தில் இணைந்த முதல் முஸ்லிம் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களாக பாகிஸ்தானைச் சேர்ந்த ரெஹானா கவுசார் (34) மற்றும் சோபிடா கமார்(29) ஆகிய இருவரும் பதிவாகியுள்ளனர். இம்மாத ஆரம்பத்தில் லீட்சிலுள்ள திருமணப்பதிவாளர் அலுவகத்தில் இவர்கள் திருமணம் செய்துகொண்டதாகவும், திருமணத்திற்கு பின்னர் அவர்கள் இருவரும் உடனடியாக அங்கேயே புகலிடம் கோரியுள்ளதாகவும் தெரியவருகின்றது. தங்களது சொந்த நாட்டு திரும்பினால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கூறியே இருவரும் புகலிடக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் பாகிஸ்தானின் லாஹூர் மற்றும் மிர்பூரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இவர்கள் இருவருக்கும் தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல்கள்…
-
- 18 replies
- 1.2k views
-
-
மேற்கு வங்கத்தில் ஹௌரா பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலை ஒட்டி திரிணாமுல் காங்கிரசின் தலைவரும் முதல் அமைச்சருமான மம்தா பானர்ஜி அங்கு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது மத்திய அரசு குறித்து மம்தா கூறியதாவது:- மத்திய அரசு மேற்கு வங்க மாநிலத்திற்கு தேவையான நிதியை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டி வருகிறது. எங்களுக்கு எதிராக சி.பி.ஐ-யை ஏவி விட்டு மிரட்டல் விடுத்து வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேறிய பிறகு எங்கள் மீது பழிவாங்கும் போக்கை காங்கிரஸ் கூட்டணி அரசு கடைபிடித்து வருகிறது. எனது அரசுக்கு எதிராக காங்கிரசும், சி.பி.ஐ-எம் கைகோர்த்து செயல்படுகிறார்கள். ஆனால் அவர்களின் சதித்திட்டம் செல்லுபடியாகது. கடந்த 34 வருடங்களாக நான் மிரட்டப்ப…
-
- 0 replies
- 409 views
-
-
Financial bubbles creating conditions for new crash உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் முழுமையான நிலைமுறிவிற்கு உறுதியான அடையாளமாக நெருக்கடியை தடுக்க கொண்டுவரப்பட்ட அதே நடவடிக்கைகள்தாம் 2008 இன் அளவை விட அதிகமாக ஒரு நிதியக்கரைப்பிற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளன. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக உலகின் பெரிய மத்திய வங்கிகள் 7 டிரில்லியன் டாலர்களை நிதியச் சந்தைகளில் உட்செலுத்தியுள்ளன. அதன் நோக்கம் பொருளாதார மீட்சிக்கு அது தூண்டுதல் கொடுக்கும் என்பதாகும். ஆனால் உலகெங்கிலும் இருந்து வரும் பொருளாதாரத் தரவுகள் இது ஒரு தோல்வி என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்பதை குறிக்கின்றன. விலைவாசி அளவுகள் பற்றிய புள்ளிவிவரங்கள் மிகவும் முக்கியமானவை. இவை “சாதாரண” சூழலில் மீட்பிற்கு அடையாளமான விலை …
-
- 1 reply
- 523 views
-
-
பாதுகாப்பு படையினர் மீது பெருந் தாக்குதல்களை நடத்தி வந்த மாவோயிஸ்டுகள் இப்போது காங்கிரஸ் தலைவர்களை இலக்கு வைத்து இருக்கின்றனர். இதற்கு காரணம் காங்கிரஸ் உருவக்கிய சல்வா ஜூதும் என்ற அமைப்புதான்! ஆந்திரா, ஒடிஷா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா என விரிந்து பரந்து கிடக்கும் தண்டகாருண்ய காடுகளும் பழங்குடி மக்களும்தான் மாவோயிஸ்டுகளின் வலிமை வாய்ந்த பிரதேசம்.. இதில் குறிப்பாக சத்தீஸ்கரின் தண்டேவடா, பஸ்தர் பிரதேசங்கள் மாவோயிஸ்டுகளின் கொடி பறக்கும் கோட்டை... இதேபோல்தான் இதர மாநிலங்களிலும் பழங்குடி இன மக்கள்தான் மாவோயிஸ்டுகளுக்கு ஆதார பலம்.. இந்த ஆதார பலத்தை சிதைக்கும் முயற்சியாகத்தான் 1991ல் உருவானது ஜன் ஜாக்ரன் அபியான்... அதாவது நிலமற்ற பழங்குடி மக்களுக்கு நிலத்தை பகிர்ந்து கொடுக்கும் இயக…
-
- 0 replies
- 443 views
-
-
அமெரிக்கக் கண்டத்தைக் 'கண்டுபிடித்த' கிறிஸ்டோபர் கொலம்பஸின் நினைவாக அந்த நாட்டிற்குக் கொலம்பியா எனப் பெயர் சூட்டப்பட்டது. அதன் தலைநகர் போகோட்டாவில் இன்றைய ஜனாதிபதி தனது பதவியேற்பு வைபவத்தை கொண்டாடிக் கொண்டிருந்தார். நாட்டின் தீராத பிரச்சினையான தீவிரவாத இயக்கங்களை ஒழிப்பேன் என புதிய ஜனாதிபதி விழாமேடையில் சூளுரைத்துக் கொண்டிருந்த சமயம், எங்கிருந்தோ வந்த செல்கள் விழா நடந்த இடத்திற்கு அருகாமையில் விழுந்து வெடித்தன. ஜனாதிபதி தீவிரவாதிகளை ஒழிக்க காடுகளுக்குப் போக முன்னர் அவர்களாகவே தலைநகருக்கு வந்துவிட்டனர். இது நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகவில்லை. தலைநகரின் மத்தியில் பணக்காரக் குடும்பங்கள் தமது ஆர்ப்பாட்டமான கொண்டாட்டங்களை நடத்தும் மண்டபம் குண்டுவெடிப்பில் சேதமாகியது. இன்னொ…
-
- 0 replies
- 521 views
-
-
கொலம்பியாவில் அரசாங்கத்திற்கும் இடதுசாரி ஃபார்க் இயக்கத்தினருக்கும் இடையில் கடந்த 6 மாத காலத்துக்கும் அதிககாலம் நடந்துவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக, இரு தரப்பினருக்கும் இடையே நில சீர்திருத்தம் தொடர்பான இணக்கப்பாடொன்று எட்டப்பட்டுள்ளது. 'கிராமப்புற கொலம்பியாவின் அதிரடி மாற்றத்துக்கு இந்த உடன்பாடு வழிவகுக்கும்' என்று இருதரப்பும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் பொருளாதார மற்றும் சமூக ரீதியான அபிவிருத்தித் திட்டங்களைக் கொண்டுவரவும் ஏழை விவசாயிகளுக்கு காணிகளை வழங்கவும் இந்த ஒப்பந்தத்தில் கோரப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களுக்கும் அதிக காலமாக தொடர்ந்த உள்நாட்டு மோதலை முடித்துவைத்துள்ள அமைதிப் பேச்சுக்களில் பெர…
-
- 0 replies
- 388 views
-
-
மும்பை: மும்பை எரவடா சிறையில் நடிகர் சஞ்சய் தத்துக்கு பைண்டிங், கோப்புகளை (ஃபைல்) பராமரிக்கும் வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தண்டனைப் பெற்று மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார் பிரபல நடிகர் சஞ்சய் தத். அங்கு இவருக்கு சமையல் செய்யும் வேலை ஒதுக்கப்பட்டது. ஆனால் உயிருக்கு ஆபத்து என்று கூறி வேறு சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும், வேறு வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டு சஞ்சய் தத் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து சஞ்சய் தத் எரவடா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இங்குதான் அவர் அடுத்த 42 மாதங்கள் இருக்க வேண்டும். இந்தச் சிறையில் சஞ்சய் தத்துக்கு மிகவும் பாதுகாப்பு மிகுந்த இடத்தில், அறைக்குள் அமர்ந்…
-
- 1 reply
- 540 views
-
-
இந்திய எல்லைப் பகுதிக்குள் மீண்டும் சீனப்படைகள் அத்துமீறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லடாக் பகுதியில் முகாம் அமைத்தது தொடர்பாக எழுந்த சர்ச்சை இந்திய சீன ராணுவ அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட்டது. அதே நேரத்தில் உதம்பூர் அருகே உள்ள சிரி ஜாப் பகுதியில் தற்போதைய எல்லைக்கோடு பகுதிக்கு இந்திய ராணுவ வீரர்கள் செல்லும் போது சீன ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனப்பிரதமரின் இந்திய வருகைக்கு இரு நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதன் பின்னர் லடாக் பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் 14 கம்பெனிகள் உத்தேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தங்கள் பணிகளை மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப…
-
- 5 replies
- 677 views
-