உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
பஞ்சாப்: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதை பஞ்சாப் மாநில சீக்கியர்களின் கட்சியான டல் கல்சா கடுமையாக கண்டித்திருக்கிறது. மேலும் இலங்கை வீரர்கள் பங்கேற்பதால் ஆசிய தடகளப் போட்டியை நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதற்கும் அக்கட்சி பாராட்டு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக டல் கல்சா கட்சியின் தலைவர் தாமி கூறுகையில், இலங்கை விவகாரத்தில் இந்தியா இரட்டைவேடம் காட்டி வருகிறது. இந்த நிலை மாறவேண்டும். இலங்கை இறுதிக் கட்ட போரின் போது இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இலங்கை மனித உரிமை மீறலில் ஈடுபட்டதற்கு சாட்சியமாக இருப்பது பிரபா…
-
- 0 replies
- 594 views
-
-
இரகசியமாக பாதிக்கப்பட்டவர்கள் --வடகொரியா
-
- 2 replies
- 579 views
-
-
பதவி விலகும் போப் ஆண்டவருக்கு மாதம் ரூ.1.75 லட்சம் பென்சன்? தற்போது 16-ம் பெனடிக்ட் போப் ஆண்டவராக பதவி வகித்து வருகிறார். அவர் வருகிற 28-ந்தேதியுடன் போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரை தொடர்ந்து மார்ச் மாத இறுதிக்குள் புதிய போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதற்கான பணிகள் தற்போதே தொடங்கி விட்டன. இந்த நிலையில், பதவி விலகும் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட்டுக்கு ஓய்வூதியம் (பென்சன்) வழங்க வாடிகன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு மாதம் ரூ.1.75 லட்சம் பென்சன் தொகையாக வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதை வாடிகன் நிர்வாகம் உறுதி செய்யவில்லை. இது குறித்து வாடிகன் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் பாதிரியின் பெட…
-
- 3 replies
- 675 views
-
-
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பாதுகாப்புப் அதிகாரி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிரதமர் உள்ளிட்ட அரசின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் படையில் இவர் பணியாற்றினார். வடக்கு லண்டனின் காம்டேன் எனும் இடத்திலுள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இதுபற்றி அவருடைய உறவினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் குண்டடிபட்டு அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர். மேலும் இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை சுட போலீஸ் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதா என்றும் விசாரணை நடந்து வருகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=76552&category=WorldNews&language=tamil
-
- 3 replies
- 484 views
-
-
அணுகுண்டுவீச்சில் எரியும் ஒபாமா - வடகொரியா வெளியிட்ட பிரசார வீடியோ! [Thursday, 2013-02-21 17:50:31] அமெரிக்க அதிபர் ஒபாமா, அணுகுண்டு வீச்சில் எரிவது போன்ற வீடியோ காட்சிகளை வட கொரியா வெளியிட்டது. வட கொரியா கடந்த 12-ந் தேதி அணுகுண்டு சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து அமெரிக்காவுக்கு எதிரான பிரசாரத்தில் வடகொரியா ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் ஏவுகணை தாக்குதலில் நியூயார்க் நகரம் தாக்குதலுக்கு உள்ளாவது போன்றும், நகரம் எரிவது போன்றும் வீடியோ காட்சிகளை வடகொரியா வெளியிட்டது இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புதிதாக ஒரு வீடியோ காட்சியை வடகொரியா வெளியிட்டுள்ளது. அதில் அணுகுண்டு வீச்சில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், …
-
- 0 replies
- 565 views
-
-
மாலியில் நடப்பது யுரேனியப் போர்! By சு. வெங்கடேஸ்வரன் உள்நாட்டுப் போர் "ஏற்படும்' அல்லது "ஏற்படுத்தப்படும்' நாடுகள் தொடர்பாக, மேற்கத்திய நாடுகள் எடுக்கும் நிலைப்பாடு முழுவதும் அவர்களுக்குச் சாதகமானதாகவே இருக்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. மேற்காசிய நாடான சிரியாவில் அரசுக்கு எதிரான புரட்சியாளர்கள் படைக்கு ஆதரவாக ஆயுதங்களுடன் களமிறங்கியுள்ள அதே நாடுகள்தான், மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் புரட்சியாளர்களுக்கு எதிராகவும் அரசுக்கு ஆதரவாகவும் போரில் ஈடுபட்டுள்ளன. மாலியில், "ஆபரேஷன் செர்வல்' என்ற பெயரில் போர் நடத்தி வருகிறது பிரான்ஸ். மாலி முன்பு பிரான்ஸ் நாட்டின் காலனி ஆதிக்கத்துக்கு உள்பட்டிருந்தது என்பதால், அங்கு பிரச்னை ஏற்பட்டால் ராணுவ நடவடிக்…
-
- 0 replies
- 509 views
-
-
கம்ப்யூட்டர் கோளாறு காரணாக, தரைகட்டுப்பாட்டு தளத்துக்கும், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு, துண்டிக்கப்பட்டது.அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் ஒன்றிணைந்து, விண்வெளியில், சர்வதேச விண் ஆராய்ச்சி மையத்தை நிறுவியுள்ளன. தற்போது, இந்த மையத்தில், இரண்டு அமெரிக்கர்களும், மூன்று ரஷ்யர்களும், கனடா நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவரும் தங்கியுள்ளனர்.இவர்களுக்கு தேவையான உணவு, பிராணவாயு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், சோயுஸ் உள்ளிட்ட விண்கலங்கள் மூலம், அனுப்பப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம், இந்த மையத்துடனான தொடர்பு, திடீரென துண்டிக்கப்பட்டது. அமெரிக்காவின், ஹூஸ்டன் நகரில் உள்ள, தரை கட்டுபாட்டு மைய அதிகாரிகள், விரைந்து ச…
-
- 2 replies
- 523 views
-
-
புதுடில்லி: கடந்த சில நாட்களுக்கு முன் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் காவி பயங்கரவாதம் குறித்த தனது பேச்சுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே மன்னிப்பு கேட்டார். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை துவங்கவுள்ளது. ரயில்வே பட்ஜெட்,பொது பட்ஜெட் ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளன.இதில் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ. பல்வேறு பிரச்னைகளை கிளப்ப உள்ளது. நேற்று இக்கட்சியின் எம்.பி.,க்கள் கூட்டத்தில் ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரத்தினை வைத்து புயலை கிளப்புவோம் என கூறியது. கடந்த மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த காங்., மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே பேசுகையில், நாட்டில் காவி பயங்கரவாதத்தை பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஆகியவை ஊக்கு…
-
- 2 replies
- 706 views
-
-
தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தூக்குத் தண்டனை பற்றிய கருத்துகள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. வீரப்பனின் நண்பர் என, குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்தத் தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டிருந்தால், அவர்கள் கடந்த, 9 ஆண்டுகளாக, சிறையிலே உழன்று உருக்குலைய வேண்டி இருந்திருக்காது. அவர்கள், 9 ஆண்டு காலம் சிறைத் தண்டனையும் அனுபவித்து விட்டு, தற்போது மேலும் தூக்குத் தண்டனை என்றால், ஒரே குற்றத்திற்காக இரண்டு கடும் தண்டனைகள் என, ஆகிவிடாதா என்பதையும், நமது சட்டம் அனுமதிக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். கடந்த, 2007ல் ஐ.நா., சபை தூக்குத் தண்டனைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை முன் வைத்தபோது,…
-
- 0 replies
- 700 views
-
-
கெஜட்டில் காவிரி தீர்ப்பு: இது தான் என் 30 ஆண்டு அரசியல் வாழ்விலேயே மாபெரும் சாதனை- ஜெயலலிதா. சென்னை: காவிரி் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை மத்திய அரசு இன்று கெஜட்டில் (அரசிதழ்) வெளியிட்ட இந்த நாள் தான், எனது 30 வருட அரசியல் வாழ்வில் மிக மகிழ்ச்சியான நாள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், இன்று காவிரி் இடைக்காலத் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது. இது கடந்த 22 ஆண்டு காலமாக நான் இடைவிடாது நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி இது. இந்தச் செய்தி எனக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியைத் தருகிறது.நான் 1991ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி முதன்முதலாக முதல்வராக பொறுப்பேற்றேன். 21ம் தேதி காவிரி நடுவர் மன்றம் தனது இடைக…
-
- 1 reply
- 453 views
-
-
பாகிஸ்தான் இன்று குறைந்த தூரம் சென்று தாக்கக்கூடிய ஹாட்ப்-2(அப்டலி) என்ற ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்செய்தியை பாகிஸ்தானின் ஐ.எஸ்.பி.ஆர் என்கிற ராணுவ செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. ஹாட்ப்-2(அப்டலி) என்கிற இந்த ஏவுகணை 180 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடியது. இந்த ஏவுகணை அணு ஆயுதத்தையும் மற்ற வழக்கமான ஆயுதங்களையும் கொண்டு செல்லும் திறன் கொண்டதாகும். இது கடல் அல்லது நிலத்திலிருக்கும் இலக்கை துல்லியமாகத் தாக்கக்கூடியது. இதனை நிலம் அல்லது கடலில் இருந்து ஏவலாம். இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து, விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு அதிபர் ஆசிப் அலி சர்தாரியும…
-
- 1 reply
- 392 views
-
-
புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக்கியது சரிதான்- பசுமை தீர்ப்பாயம் Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/20/tamilnadu-green-tribunal-gives-green-signal-tn-govt-170158.html டெல்லி: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகத்தை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றியது செல்லும் என்று பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.இந்தத் தீர்ப்பை முதல்வர் ஜெயலலிதா வரவேற்றுள்ளார். சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, புதிய தலைமை செயலக கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவ மனையாக மாற்ற, மாநில அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து, டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், புதிய தலைமை செயலக கட்டடத்தில், கடந்த, 30ம் தேதி…
-
- 0 replies
- 292 views
-
-
டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் கொடூரக் கொலையால் இதயம் படைத்த அத்தனை பேரும் பதறிப் போய் நிற்கும் நிலையில் இலங்கையர்கள் நமது நண்பர்கள், பார்ட்னர்கள், பங்காளிகள் என்று மனிதாபிமானம் சற்றும் இல்லாமல் கருத்து தெரிவித்துள்ளார் மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித். ராஜபக்சே கும்பல் என்ன செய்தாலும் அதை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது என்பதை கொள்கையாகவே வைத்துக் கொண்டுள்ளது இந்தியா. ஆனால் மிகக் கொடூரமான கோரக் கொலைகளையும் கூட அது கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் அதிர்ச்சியாக உள்ளது. லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது குறித்த புகைப்படங்கள் உள்ளிட்டவை வெளியானபோதும் கூட இந்தியா அதைக் கண்டுகொள்ளவில்லை. இலங்கை நமத…
-
- 3 replies
- 701 views
-
-
புத்தர் சிலைகளுக்கு தடை விதிக்கப்படவில்லை - ஈரான் 20 பெப்ரவரி 2013 புத்தர் சிலைகளுக்கு தடை விதிக்கப்படவில்லை என ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.ஈரானில் புத்தர் சிலைகளை இறக்குமதி செய்யவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் பிழையானவை என ஈரான் அறிவித்துள்ளது. சிலைகளை விற்பனை செய்வதற்கும் இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என ஈரானிய கலாச்சாரத் திணைக்கள செயலாளர் சஹின் ஜாபர் அன்சாரி தெரிவித்துள்ளார்.துரதிஸ்டவசமாக தாம் வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். கலாச்சார பெறுமதியுடைய பொ…
-
- 1 reply
- 749 views
-
-
ரீடர்ஸ் டைஜஸ்ட் 'திவால்': ரூ.1,900 கோடி காண்ட்ராக்டை இழக்கும் எச்.சி.எல்! Posted by: Chakra Published: Wednesday, February 20, 2013, 11:33 [iST] நியூயார்க்: ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கை நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அறிவித்துள்ளதால் அந்த நிறுவனத்துடனான ரூ. 1,900 கோடி (350 மில்லியன் டாலர்) காண்ட்ராக்டை இந்தியாவின் எச்.சி.எஸ் நிறுவனம் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் 4வது மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான எச்சிஎல் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்துடன் ரூ. 1,900 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. அந்த நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளையும் கம்ப்யூட்டர் மயமாக்கும் 7 ஆண்டு காண்ட்ராக்ட் அது. இந்த இதழை அமெரிக்காவின் ஆர்டிஏ ஹோல்டிங் கம்பெனி என்ற நிறுவனம்…
-
- 0 replies
- 521 views
-
-
உலகில் தலைசிறந்த உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான, நெஸ்ட்லே தயாரிப்புகளில், குதிரை மாமிசம் கலக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. பிரபல, நெஸ்ட்லே நிறுவனம், பல வகை உணவுப் பொருட்களை தயாரித்து, உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனம் தயாரித்த, மாட்டிறைச்சி கலந்த உணவுப் பொருளில், குதிரையின் மாமிசம் கலப்படம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த கலப்பட புகார் காரணமாக, நெஸ்ட்லே நிறுவனம், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள, ஒப்பந்த கம்பெனிகளிடமிருந்து பொருட்கள் வாங்குவதை நிறுத்தியுள்ளது. முதலில், இந்த குதிரை மாமிச கலப்பு புகாரை மறுத்த, நெஸ்ட்லே நிர்வாகம், தற்போது தவறை ஒப்புக் கொண்டுள்ளது. பொதுவாக, ஐரோப்பிய நாடுகளில், மாட்டிறைச்சியில் தயாரிக்கப்படும் உணவுப் பொரு…
-
- 1 reply
- 599 views
-
-
ஐவரி கோஸ்ற் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி உலகப் போர்க்குற்ற நீதிமன்றில் நீதிபதிகள் முன் இன்று (செவ்வாய்க் கிழமை 19.02. 2013 )தோன்றினார். உலகப் போர்க்குற்றத்திற்கான நீதிமன்றம் ஒல்லாந்து நாட்டின் டென்ஹெக் நகரில் இயங்கிவருகின்றது. இந்த நீதிமன்றின் முன் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமைமீறல் போன்ற குற்றங்கள் சாட்டப்பட்ட நிலையில் முதலாவதாக ஆஜர்படுத்தப்பட்ட ஒரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி இவராவார். லௌரன் க்பாக்போ ஐவரி கோஸ்ட் என்ற ஆபிரிக்கநாட்டின் சர்ச்சைக்குரிய முன்னாள் ஜனாதிபதி. 2010 ம் ஆண்டு கார்த்திகை மாதம் ஐவரி கோஸ்ட் நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஏற்பட்ட கிளர்ச்சியாளர்களின் மீதான தாக்குதல் நடவடிக்கைகளின்போது தனது ஆதரவாளர்கள் மூலம் 16…
-
- 2 replies
- 536 views
-
-
பெல்ஜியம் தலைநகரில்.. விமான நிலையம் ஒன்றில்.. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுவிஸ் எயார் விமானத்தில் இருந்து விமான நிலைய பாதுகாப்பு வேலிகளை பிய்த்துக் கொண்டு நுழைந்த ஆயுதம் தரித்த கொள்ளையர்கள்.. துணிகரமாக 32 மில்லியன் பெறுமதி வாய்ந்த வைரத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த விமான நிலையம் உலகில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பான ஒன்று என்று கூறப்படுகிறது. போகும் முன் கொள்ளையர் தாம் கொண்டு வந்திருந்த ஒரு வாகனத்திற்கு தீயிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தின் போது கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு எதனையும் நடத்தவில்லை. மேலும் இக்கொள்ளை வெறும் 11 நிமிட நேரத்துக்குள் மிக வேகமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெல்ஜியத்தை மட்டுமன்றி ம…
-
- 0 replies
- 599 views
-
-
பாக்.துறைமுகம் சீனா வசம் - இந்தியாவுக்கு செக் வைக்க புதிய திட்டமா? February 19, 2013 12:07 pm இதுநாள் வரை சிங்கப்பூர் வசம் இருந்த, பாகிஸ்தான் கவ்தார் துறைமுகத்தை சீனா தனது பொறுப்பில் எடுத்துள்ளது. இங்கு தனது கடற்படைத் தளத்தை அமைக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது. இதனால் இந்தியா கடும் எரிச்சலும், அதிர்ச்சியும் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவைச் சுற்றி வளைக்கும் சீனாவின் பூமாலைத் திட்டத்தின் கீழ்தான் இந்த துறைமுகத்தை சீனா கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவைச் சுற்றிலும் சீனா தனது நிலைகளைப் பலப்படுத்தி வருகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி கூறுகையில்... முறைப்படி கவ்தார் துறைமுகம் சீனாவிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்…
-
- 0 replies
- 430 views
-
-
முன்னாள் பனிச்சறுக்கு விளையாட்டு பயிற்சியாளரருமான ஒருவரை பாலியல் குற்றத்திற்காக டொரண்டோ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Kevin Michael Hicks, என்ற பெயருடைய 53 வயதான முன்னாள்பனிச்சறுக்கு விளையாட்டு பயிற்சியாளர் மீது பாலியல் புகாரை மாணவர் ஒருவர் டொரண்டோ காவல்துறையினரிடம் அளித்துள்ளதால் அவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இவர் மீது ஒரு மாணவி பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் இன்று இரண்டாவதாக ஒரு மாணவரும் பாலியல் புகார் கொடுத்துள்ளதால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட Kevin Michael Hicks, மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் 1980ஆம் ஆண்டுமுதல் ஒண்டோரியோவில் உள்ள Woodbine Winter Skating Club, Westo…
-
- 0 replies
- 385 views
-
-
கணினி துறையில் மேற்கொள்ளப்படுகின்ற தொடர்ச்சியான உயர் மட்ட சைபர் தாக்குதல்களின் பின்னணியில் ஒரு குறித்த சீன இராணுவப் பிரிவு இருப்பதாக தாம் நம்புவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட கணினி பாதுகாப்பு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கான மூல ஆதாரமாக ஷங்கையில் உள்ள ஒரு டவர் புளொக் மையம் இருப்பதை தாம் கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ள மண்டியண்ட் என்னும் அந்த நிறுவனம், இவற்றுக்கு அதிகபட்ச காரணமாக 61398 எனும் இராணுவப் பிரிவு இருக்கலாம் என்று அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறியுள்ளது. அந்தப் பிரிவு பெரும்பாலும் அமெரிக்காவில் உள்ள பரந்துபட்ட தொழில்துறையில், நூற்றுக்கணக்கான டெராபைட்ஸ் தரவுகளை திருடியுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்று இதனை சீன …
-
- 3 replies
- 628 views
-
-
ஈரானில் உள்ள கடைகளில், புத்தர் சிலை விற்பனைக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில், பார்பி பொம்மை, உள்ளிட்ட மேற்கத்திய பாணி சிலைகள், பல ஆண்டுகளாக தடைசெய்யப்பட்டுள்ளன.தற்போது, அந்நாட்டில், புத்தர் சிலை விற்பனைக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புத்த மதம் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, அந்நாட்டின் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, புத்தர் சிலைகள், அகற்றப்படுகின்றன.புத்தர் சிலைகள் விற்கப்படுவது, கலாச்சார அத்துமீறல் என, அந்நாட்டு கலாச்சார பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்தார். http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%88%E0%AE%B0-165500541.html Iran confiscates Budd…
-
- 5 replies
- 700 views
-
-
ஊனம் ஒரு தடையல்லஸ இரு கைகளும் இன்றி கால்களால் விமானம் ஓட்டும் அமெரிக்க பெண் Posted by: Mayura Akilan Updated: Tuesday, February 19, 2013, 9:50 [iST] அரிசோனா: உடல் உறுப்புகள் நன்றாக இருப்பவர்களே சாதிக்க பல்வேறு தடைகளை சந்திக்கும் நிலையில் இரண்டு கைகளும் இன்றி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண். அரிசோனா மாவட்டத்தில் 1983ம் ஆண்டு பிறந்த பெண், ஜெசிகா காக்ஸ். பிறவியிலேயே இரு தோள் பட்டைகளுக்கு வெளியே கைகள் இல்லாத நிலையில் பிறந்த இவர், வாழ்வில் சாதனைகள் படைப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை பல வகைகளில் நிரூபித்துள்ளார். சிறுமியாக இருந்தபோது பல் துலக்குவது, தலை சீவுவது உள்ளிட்ட சுய பராமரிப்பு வேலைகளை இரு கால்களின் உதவியுடன் செய்து பழகிய ஜெசிகா காக்ஸ், …
-
- 0 replies
- 459 views
-
-
கியூபா நாட்டில், இரண்டு மாதங்களாக, புற்று நோய்க்காக சிகிச்சை பெற்ற, வெனிசுலா அதிபர், ஹக்கோ சாவெஸ், இன்று தாயகம் திரும்பினார்.தென் அமெரிக்க நாடான, வெனிசுலா நாட்டின் அதிபராக, ஹக்கோ சாவெஸ், 1998ம் ஆண்டு முதல், பதவி வகித்து வருகிறார். அக்டோபரில் நடந்த தேர்தலில், இவர், நான்காவது முறையாக, அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.குடல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சாவெசுக்கு, கடந்த ஆண்டு, அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், தற்போது அவருக்கு இடுப்பு பகுதியில், புற்றுநோய் பரவியதால், கியூபா சென்று சிகிச்சை பெற்றார். நான்காவது முறையாக, தேர்தலில் வெற்றி பெற்ற சாவெஸ், இந்த முறை, இன்னும் பதவி ஏற்காமல் உள்ளார். குறிப்பிட்ட காலத்தில், அவர் பதவி ஏற்காவிட்டால், மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதை தவி…
-
- 1 reply
- 450 views
-
-
ரஸ்யாவின் யூரல் மலைத்தொடரில் அமைந்துள்ள செல்யாபின்ஸ்க் பகுதி வான்பரப்பில் அண்மையில் விண்கல் வெடித்துச் சிதறியதில் சுமார் 1000 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதன்போது பொதுச் சொத்துக்களுக்கும் சேதமேற்பட்டது.இந்நிலையில் சிதறிய விற்கற்களை தேடி பலர் அப்பகுதிக்கு படையெடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்கற்களுக்கு நல்ல கேள்வி நிலவுவதால் அதனை விற்றுப் பணமாக்கும் நோக்குடனேயே பலர் தேடலில் குதித்துள்ளனர். பலர் ஏற்கனவே தாம் சேகரித்த விண்கற்களை விற்பனை செய்யத்தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை விண்கற்களைத் தேடிவருபவர்களை ரஸ்ய அதிகாரிகள் தடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மொஸ்கோ பல்கலைக்கழகத்தினால் இவை ஆய்வுக்குட…
-
- 1 reply
- 690 views
-