உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
ரஷ்யாவில் இன்று காலை திடீரென வானத்தில் இருந்து தீக்குழம்பாக எரிந்து கொண்டிருந்த ஒர் விண்கல் கீழே விழுந்ததால், ஒரு மொபைல் உள்பட பல கட்டிடங்கள் பாதிப்புக்குள்ளாயின. இந்த சம்பவத்தில் சுமார் 400 பேர் காயம் அடைந்தனர். இதில் பலர் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய நேரப்படி காலை 9.20 மணிக்கு, பெரும் நெருப்புக்குழம்பாக எரிந்து கொண்டு, ஒரு மிகப்பெரிய விண்கள் ஒன்று வானவில் போன்று வளைந்து வந்து மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு சாலையில் விழுந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதில் 6000 சதுர அடியில் இயங்கிக்கொண்டிருந்த துத்தநாக தொழிற்சாலை ஒன்று அடியோடு அழிந்தது. மேலும் பல கட்டிடங்கள் நொறுங்கியது. சில கட்டிடங்களின் கண்…
-
- 40 replies
- 3.8k views
-
-
22 பேர் பலியான வழக்கில் தூக்கு தண்டனை கைதிகள் 4 பேரும் வீரப்பனை பார்த்தது கூட இல்லை ஈரோடு : கடந்த 1993ம் ஆண்டு ஏப்ரலில் கர்நாடகா போலீஸ் வேனை வெடிகுண்டால் சிதறடித்து 22 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிலேந்திரன், மீசை மாதையன், ஞானபிரகாசம், சைமன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. இந்நிலையில், தமிழக , கர்நாடக அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட எல்லையோர கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாநாடு நேற்று ஈரோட்டில் நடந்தது. இதில் செய்தியாளர்களிடம் 4 பேரின் குடும்பத்தினர் கண்ணீர் பேட்டி அளித்தனர். அதன் விவரம் வருமாறு: தூக்கு கைதி மீசை மாதையன் மகள் அம்மாசி (30): கர்நாடகா அதிரடிப்படை போலீசார் சந்தேகத்தி…
-
- 1 reply
- 564 views
-
-
பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன், மூன்று நாள் பயணமாக, இன்று இந்தியா வருகிறார். இன்று அவர், மும்பையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரூன், 2010, மே மாதம் இந்தியா வந்தார். இரண்டாவது முறையாக, இன்று அவர் மீண்டும் வருகிறார். லண்டனில் இருந்து, நேரடியாக மும்பை வரும் அவர், மாலை வரை, மும்பையில் இருப்பார்.இரவில், டில்லி சென்றடையும் அவர், முன்னதாக, மும்பை தொழில் அதிபர்களை சந்திக்கிறார். செயின்ட் சேவியர்ஸ் பள்ளிக்கு செல்லும் அவர், அங்குள்ள போலீஸ் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வணங்குகிறார். நாளையும், நாளை மறுநாளும் அவர் டில்லியில் தங்கியிருந்து, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேசுகிறார்.இத…
-
- 1 reply
- 478 views
-
-
ஹெலிகாப்டர் ஒப்பந்தம் முறைகேடு தொடர்பாக, இந்தியாவிடம் அதற்கான ஆவணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை, இத்தாலி கோர்ட் மறுத்துள்ளது. இவ்விசாரணையின் பொருட்டு, மத்திய புலனாய் துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் உள்ளடக்கிய இந்தியக்குழு, இத்தாலி செல்ல உள்ள நிலையில், இத்தாலி கோர்ட்டின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. http://tamil.yahoo.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87-%E0%AF%8D-%E0%AE%B2-103100807.html
-
- 7 replies
- 674 views
-
-
பெங்களூர் நகரில், ஆட்டோ ஓட்டி, பிழைப்பு நடத்திய பெண், வழக்கறிஞராகி, சாதனை படைத்துள்ளார்.வெங்கடலட்சுமி, 40, பெங்களூரு நகர வீதிகளில், ஆட்டோ ஓட்டும் பெண்களில் ஒருவர். பட்டப்படிப்பு முடித்திருந்த இவர், வழக்கறிஞராக வேண்டும் என, சிறு வயதிலிருந்தே விரும்பினார்.எனினும், பட்டப்படிப்பு முடித்ததும், திருமணம், குழந்தை, வாழ்க்கையை ஓட்ட, ஆட்டோ ஓட்ட வேண்டிய நிர்பந்தம் போன்ற கட்டாயங்களால், நேரடியாக அவரால், வழக்கறிஞர் ஆக, தேவையான படிப்பை படிக்க முடியவில்லை. கடந்த, 13 ஆண்டுகளாக, ஆட்டோ ஓட்டி வரும் வெங்கடலட்சுமி, தினமும் காலை, 8:00 மணிக்கு, தன் பணிகளை துவக்கி விடுவார். 8:30 மணிக்கு, மகளை, பள்ளியில் கொண்டு விடும் இந்த பெண், 10 கி.மீ., தூரத்தில், பசவேஸ்வர் நகரில் உள்ள, பாபு ஜெகஜீவன் ராம் ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
‘‘வினோதினியின் முன் நாம் எப்படி நம் முகத்தைக் காட்டப் போகிறோம்?’’ வினோதினி பற்றி நாம் முன்பு எழுதிய கட்டுரையின் இறுதிவரியாக இதை எழுதியிருந்தோம். இப்போது அந்த இறுதி வரிகளையே முதல் வரிகள் ஆக்கவேண்டிய வேதனையான கட்டாயத்தை காலம் நமக்கு இட்டிருக்கிறது. மூன்று மாதங்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வினோதினி பிப்ரவரி 12-ம் தேதி காதலர் தினத்துக்கு இரு நாட்கள் முன்பு தன் மூச்சை நிறுத்திக்கொண்டிருக்கிறாள்... மன்னிக்கவும் கொல்லப்பட்டிருக்கிறாள். அழகான முகத்தை உடைய அந்த சகோதரி ஒருவனை காதலிக்க மறுத்ததன் காரணமாக, முகத்தில் திராவகம் வீசப்பட்டாள். வேதனையும் வலியுமாக இத்தனை நாட்கள் மருத்துவமனையில் திணறிக் கொண்டிருந்த அவளை மரணம் அந்த வலியில் இருந்து விடுதலை செய்திருக்கிறது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
பெல்காம்: நான்கு வீரப்பன் கூட்டாளிகளும் தற்போது பெல்காம் சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு விருப்பமான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களை அசோக் என்பவர் தூக்கில் போட தயாராக இருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன. நான்கு பேரையும் காப்பாற்ற குடும்பத்தினர் கடுமையாக போராடி வரும் நிலையில் மறுபக்கம் நாளையே அவர்களைத் தூக்கிலிடத் தேவையான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்கு பேரின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்நது தற்போது அவர்களை பெல்காம் சிறையின் தனிமைச் சிறையில் அடைத்துள்ளனராம். Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/17/india-veerappan-associates-be-hanged-hangman-ashok-1699…
-
- 0 replies
- 550 views
-
-
உலகத்தின் நாணயம் வழங்கும் தொகையில் அமெரிக்க நாணயத்தின் அளவு தொடர்ச்சியான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இன்று உலகின் நாணயச் சந்தையில் ஆறு ரில்லியன் டொலர்கள் பெறுமதியான பணத்தொகை புழக்கத்திலுள்ளது. அதன் 62 வீதத்தை இன்றும் அமெரிக்க டொலர்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. அமெரிக்க டொலர்களின் தொலை 3.2 ரில்லியன் ஆகும். இருந்த போதும் அமரிக்க டொலர் பதினைந்து வருட தொடர் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. ஜப்பானிய யென், சீன யுவான், சுவிஸ் பிராங் ஆகிய நாணயங்கள் சந்தையை ஆக்கிரமித்து வரும் அதேவேளை வேறு நாணயங்களும் சந்தையில் அமரிக்க நாணயத்தை நிரப்பி வருவதாக ஐ.எம்.எப் தெரிவிக்கின்றது. அமெரிக்க மக்களின் பெரும்பன்மையினர் நம்பவில்லை என்றாலும் டொ…
-
- 1 reply
- 535 views
-
-
ரஷ்ய வான் பகுதியில் எரிநட்சத்திரம் வெடித்துச் சிதறியபோது வெளியான சக்தி ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா போட்ட அணுகுண்டு வெடித்தபோது ஏற்பட்ட சக்தியை விட அதிக சக்தி வாய்ந்தது, என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.ரஷ்யாவின் யுரால் மலைத் தொடர் பகுதியில்,வான்வெளியில் எரி நட்சத்திரம் ஒன்று 2 நாட்களுக்கு முன்பு விழுந்தது. இதன் அதிர்வலைகளால் வீட்டு கண்ணாடிகள் உடைந்தும் மேற்கூரைகள் விழுந்தும் 1100 பேர் படுகாயமடைந்தனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1,500 கிலோ மீட்டர் தொலைவில் யுரால் பகுதியில் உள்ள ஒன்று செல்யபின்ஸ்க் என்ற இடத்தில் இந்த பெரிய எரிநட்சத்திரம் விழுந்து வெடித்துச் சிதறியது. அப்போது நிலநடுக்கத்தைப் போல மிகப் பெரிய அதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. வானிலிருந்து…
-
- 0 replies
- 452 views
-
-
பாகிஸ்தான் வசம் 90 முதல் 110 வரையிலான அணு ஆயுதங்கள் இருக்க வாய்ப்புள்ளது என்றும், அதே சமயம் இந்தியா வசம் 80 அணு ஆயுதங்கள் மட்டுமே இருப்பதாகவும் அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்த அமைப்பின் சார்பில், பாகிஸ்தான் அணு ஆயுதங்களும், பாதுகாப்புப் பிரச்னைகளும் என்ற தலைப்பிலான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் அணு ஆயுதங்களை தயாரிப்பது மட்டுமல்ல, அதைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதற்கான ஏவுகணைகளை தயாரிப்பதிலும், போர்விமானங்களை வடிவமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 90 முதல் 110 அணு ஆயுதங்களை அந்நாடு வைத்திருக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் இந்தியாவிடம் 60 முதல் 80 அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ளன. 2008ஆம் ஆண்டு…
-
- 4 replies
- 2.5k views
-
-
உலகிலேயே உயரமான கட்டடம் - கராச்சியில் கட்டுகிறார் பாகிஸ்தான் தொழிலதிபர்! [sunday, 2013-02-17 18:21:00] துபாயில் உலகிலேயே மிக உயரமான புர்ஜ் கலிபா என்ற கட்டிடம் உள்ளது. அதை மிஞ்சும் வகையில் பாகிஸ்தான், கராச்சியில் ஒரு கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதை பாகிஸ்தானின் கட்டுமான தொழில் அதிபர் மாலிக் ரியாஷ் கட்டுகிறார். இதற்காக 45 பில்லியன் டொலர் செலவிடப்படுகிறது. 16 ஆயிரம் ஏக்கரில் கட்டப்படும் இந்த கட்டிடத்தில், 1 லட்சத்து 25 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இவை தவிர ஓட்டல்கள், வர்த்தக மையங்கள், கல்வித்துறை வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும். இக்கட்டிடம் கராச்சியில் எங்கு கட்டப்படுகிறது என்ற தகவல் வெளியாகவில்லை. அநேகமாக கராச்சி அருகே 3 முதல் 4 கி.மீட்டர் தொலைவில் அரபிக…
-
- 1 reply
- 343 views
-
-
கனடாவில் வோட்கா என நினைத்து வாஷிங் திரவத்தை குடித்து உயிரிழந்த பீர் ஸ்டோரில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக $175,000 வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. Brewers Retail Inc.,என்ற பீர் ஸ்டோர் கனடாவின் ஒண்டோரியா மாகாணத்தில் உள்ள மிஸ்ஸிஸூகா நகரத்தை தலைமையிடமாக கொண்டு, மொத்தம் 421 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இதில் பிராம்ப்டன் நகர கிளையில் பணிபுரியும், John Whitcombe என்பவர் வோட்கா என நினைத்து, வாஷிங் திரவத்தை குடித்து பரிதாபமாக உயிரிழந்தார். John Whitcombe மற்றும் அவருடன் பணிபுரியும் இன்னொருவரும், அன்று டெலிவரியான வாஷிங் திரவங்களில் ஒரு பாட்டில் மட்டும் வோட்கா லேபிளில் வந்துள்ளதை பார்த்து, இது உண்மையிலேய…
-
- 1 reply
- 508 views
-
-
டொரண்டோவில் Queens Quay West பகுதி அருகே Gardiner Expressway என்ற இடத்தில் அருகேயுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 12 வது மாடியில் ஜன்னல் வழியாக திடீரென துப்பாக்கி சூடு மர்ம நபர்களால் நடத்தப்பட்டதாகவும், இந்த சம்பவம் அதிகாலை 4.30 மணியளவில் நடந்தது என்றும் காவல்துறையினர் செய்தியாளர்களிடம் கூறினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் Highway at Spadina Avenue சாலையின் பல பகுதிகள் போலீஸாரின் விசாரணைக்காக மூடப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடிந்த பின்னர் திறந்துவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் …
-
- 0 replies
- 359 views
-
-
அமெரிக்கா மற்றும் கனடாவில் தயாரான 570,000 ஆயிரம் கார்களை திரும்ப பெறுகிறது பி.எம்.டபுள்யூ.கார் நிறுவனம். 3-சீரியஸ் செடான்ஸ், மற்றும் வேகன்ஸ் மாடல் கார் எஞ்சினில் உள்ள பேட்டரி கேபிள் இணைப்பு பிரச்சினையால் அந்நிறுவனம் அதனை மாற்றி தர 570,000 கார்களை திரும்ப பெறுகிறது. 3 சீரியஸ் செடான்ஸ் கார்களில் உள்ள ஃபியூஸ் பாக்ஸின் கேபிள் இணைப்புகள் சரியாக அமையாத காரணத்தினால், காரின் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதாகவும், இதனால் இன்ஜின் மற்றும் சில உதிரி பாகங்கள் பழுதடைய காரணமாக இருப்பதாலும், இவ்வகை மாடல் கார்களை திரும்ப பெற்றுக்கொள்ள பி.எம்.டபுள்யூ கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்ற ஆண்டு அமெரிக்காவில் மிகவும் பிரபலம் அடைந்த இந்த கார் 2012 ஆம் ஆண்டு மட்டும் சுமார் …
-
- 0 replies
- 460 views
-
-
கனடா நாட்டில் பூர்விக மக்கள் நலத்துறை மந்திரியாக ஜான் டூன்கான் என்பவர் பதவி வகித்து வந்தார். ஆனால் இவர் தனது நிர்வாகத்தை சீராக நடத்தவில்லை என்றும், பூர்விக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோரி இவருக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதனை அடுத்து ஜான் டூன்கான் நேற்று மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். மந்திரிசபையில் இருந்து ராஜினாமா செய்த முதல் நபர் இவர் ஆவார். இந்த பொறுப்பை மற்றொரு மந்திரியான ஜேம்ஸ்மூர் ஏற்று கொண்டார். ராஜினாமா செய்த கனடா அமைச்சர் ஜாண்டுன்கான் புகைப்படம் பார்க்க..
-
- 0 replies
- 368 views
-
-
கனடாவின் பிரபல இணையதளத்தின் புகைப்படக்காரர் எடுத்த ஒரு புகைப்படம் International Society for News Design awards என்ற விருதை பெற்றுள்ளார். அவர் எடுத்த ஒரு அற்புதமான புகைப்படத்திற்காக வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. கனடாவின் பிரபல செய்தி இணையதளமான டொரண்டோ ஸ்டார் என்ற பத்திரிகையின் புகைப்படக்காரர் Rick Madonik என்பவர், நயாகரா நீர்வீழ்ச்சியை Nik Wallenda என்பவர் கயிறு மூலம் கடந்ததை புகைப்படம் எடுத்தார். அப்போதே இந்த புகைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. பிரபல டைம் பத்திரிகையின் 2012ஆம் ஆண்டின் Most Surprising Photos விருதினை தட்டிச் சென்றது. இந்த புகைப்படத்திற்கு தற்போது புதிய கெளரவம் கிடைத்துள்ளதால், அவர் மிகவும் மகிழ்ச்சியடைவதாக செய்தியாளர்களிடம் கூறினார். இந்த பு…
-
- 0 replies
- 415 views
-
-
அமெரிக்க அரசை ஏமாற்றி $15 மில்லியன் பணத்தை முறைகேடு செய்த பயங்கர குற்றவாளி ஒருவனை டொரண்டோ காவல்துறையினர் வெள்ளிக்கிழமை அதிரடியாக கைது செய்தனர். Franzie Colaco என்ற 53 வயது நபர் ஒருவர், அமெரிக்க அரசுக்கு செலுத்த வேண்டிய வரி $15 மில்லியனை கட்டாமல் ஏமாற்றி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் நேரத்தில், கனடாவுக்கு தப்பிவிட்டதாக தெரிகிறது. இவர் 2009 மற்றும் 2010 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிகிறது. அமெரிக்க அரசின் The Internal Revenue Service அளித்த புகாரின் பேரில் இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க அமெரிக்க அரசு ஆணையிட்டது. ஆனால் இவர் தந்திரமாக தப்பி, கனடாவிற்கு சென்றுவிட்டார். தற்…
-
- 0 replies
- 444 views
-
-
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள விக்டோரியோவில் மாணவர்கள் குழுவாக தங்கியிருந்த ஒரு வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு பெண் உள்பட இரண்டு பேர் பலியாகினர். ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விக்டோரியோ மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் மாணவ மாணவிகள் குழுவாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்தனர். அவர்கள் நேற்று வெள்ளிகிழமை இரவு நீண்ட நேரம் வரை விருந்தில் பங்குகொண்டிருந்தனர் என்றும், பின்னர் அதிகாலை 4.30 மணிக்கு திடீரென எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்ததால், தீயில் சிக்கி ஒரு மாணவியும், ஒரு மாணவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Fire C…
-
- 0 replies
- 504 views
-
-
இதுவரை ரகசியமாக கணக்குகளைப் பராமரித்து வந்த சுவிஸ் வங்கிகள் மற்ற சாதாரண வங்கிகளைப் போல செயல்படத் திட்டமிட்டுள்ளன. இவ்வகையில் 2 வங்கிகள் தங்கள் கணக்கு விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளன. சுவிட்ஸர்லாந்து வங்கிகளின் கணக்கு விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படுவதில்லை. அவ்வங்கிகள், பங்குச் சந்தைகளில் கூட பட்டியலிடப்படுவதில்லை. ஆனால், தற்போது இந்நிலையில் சிறிது மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. 200 ஆண்டு பழமையான பிக்டெட் மற்றும் லொம்பார்டு ஒடியர் என்ற இரு வங்கிகள் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக (லிமிடெட்) செயல்பட முடிவு செய்துள்ளன. தங்களின் கணக்கு விவரங்களை வெளியிட முடிவு செய்துள்ளன. பிக்டெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "வங்கியின் பெயர் பங்குச் சந்தைப் ப…
-
- 5 replies
- 1.7k views
-
-
தட்சிணாமூரத்தி : தமிழகம் பல கேவலங்களைச் சந்தித்திருக்கிறது… பல கேவலமான தலைவர்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால் இந்த வழக்கு கேவலமானதல்ல. வேலத்திலும் கேவலமானது.. இது பற்றிப் பேசும் நான் மனிதனும் அல்ல. இந்திய அரசியலிலே உள்ள பல கேவலமான மனிதர்களை போலத்தான் நானும். கட்சியிலே குழப்பம் விளைவித்தேன்… குடும்பத்தை குழப்பினேன்.என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். இப்படியெல்லாம் எதிர்ப்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று… இல்லை. நிச்சயமாக இல்லை. கட்சியிலே குழப்பம் விளைவித்தேன்…. கட்சியே கூடாது என்பதற்காக அல்ல… கட்சியிலே வேறு யாருமே தலைவராகக் கூடாது என்பதற்காக. குடும்பத்தை குழப்பினேன். குடும்பம் நாசமாகப் போக வேண்டும் என்பதற்காக அல்ல… என் குடு…
-
- 1 reply
- 1.1k views
-
-
சோவியத்தைப் போல சீனாவும் சிதைந்துவிடும்: சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை கட்சியில் கொள்கை விஷயத்தில் கருத்து வேறுபாடும், பிரச்னைகளும் ஏற்பட்டால் சோவியத் ரஷியாவைப் போல சீனாவும் சிதைந்துவிடும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் எச்சரித்துள்ளார். அதிகரித்து வரும் ஊழல், ராணுவத்தில் ஒழுங்கின்மை ஆகியவை நாட்டை சரிவுப் பாதைக்கு கொண்டு சென்றுவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக ஜி ஜின்பிங் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த மாதத்தில் அங்குள்ள குவாங்டாங் மாகாணத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள கட்சித் தலைவர்…
-
- 1 reply
- 758 views
-
-
காதலர் தினத்தில் தனது காதலியை சுட்டுக் கொன்ற பராலிம்பிக் வீரர் கைது காதலியை சுட்டுக் கொன்றதாக தென்னாபிரிக்காவின் மாற்றுத் திறனாளியான தடகள வீரர் ஒஸ்கர் பிஸ்டோரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவைச் சேர்ந்த தடகள வீரர் ஒஸ்கர் பிஸ்டோரிஸ். பீஜிங் பாராலிம்பிக் போட்டியில் 200, 400 மீற்றர் ஓட்டங்களில் தங்கம் வென்றவர். லண்டனில் நடந்த பாராலிம்பிக்கில் 400 மற்றும் 400ழx100 மீற்றர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கங்களை கைப்பற்றியவர். இவர் தனது காதலியை தலையில் சுட்டுக் கொன்றதாக, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/sports.php?vid=491
-
- 5 replies
- 689 views
-
-
போப் ஆண்டவர் மரியாதைக்குரியவர்… குஷ்பூ பிரியர் ………………………? போப் ஆண்டவர் போற்ற வேண்டியவர்…. குஷ்பூ பிரியர் ………………………………? போப் ஆண்டவர் பண்பாட்டை காப்பாற்றியவர் குஷ்பூ பிரியர் ………………………….? போப் ஆண்டவரை பற்றி நீ என்ன கூறுவது. அவர் மரியாதை மிக்கவர்…. போற்ற வேண்டியவர்…..பண்பாட்டை காப்பாற்றியவர் என்பதை நீ சொல்லி அறிய வேண்டியதில்லை. முதலில் குஷ்பூ பிரியர் யார்? அவரையும் போப் ஆண்டவரையும் இழுத்து தலைப்பு வைத்து எழுத வேண்டிய அவசியம் என்ன? என்று ஆவேசப்படும் அனைத்து உள்ளங்களுக்கும், முதலில் போப் ஆண்டவரின் அறிக்கையை படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன் பின்னரே மற்ற விவரங்களை சொல்வது நியாயமாகும். உலகம் முழுவதும் வாழும் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவ …
-
- 2 replies
- 2.2k views
-
-
பிரணாபின் இணையதளத்திலிருந்து கருணை மனு தகவல் நீக்கம் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அலுவலக இணையதளத்திலிருந்து கருணை மனு தொடர்பான பக்கம் நீக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தங்களின் தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்வது வழக்கம். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் கருணை மனுக்களின் நிலை குறித்த தகவல்கள் ஜனாதிபதியின் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வந்தது. மும்பைத் தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாபின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட தகவல் உடனடியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், கடந்த 9-ஆம் தேதி அப்சல் குருவின் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்த தகவல் இணையதளத்தில் பதிவு செய்யப்படவ…
-
- 1 reply
- 533 views
-
-
வடகொரியாவை சேர்ந்த 49 வயது நபர் ஒருவர் வான்கூவர் பேருந்து ஒன்றில் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். போக்குவரத்த்து காவல்துறையினர் இன்று செய்தியாளர்களுக்க் அளித்த பேட்டி ஒன்றில் 1995 முதல் கனடாவில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருந்த வடகொரியாவை சேர்ந்த Seung Woo Min என்பவர் வான்கூவர் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் உடையை அகற்றி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட நபரை விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அவர் ஏற்கனவே வடகொரியாவில் $200,000 வரை பொருளாதார குற்றம் புரிந்து தலைமறைவாக வாழ்ந்து வருபவர் என்றும், வடகொரியா காவல்துறை அவரை …
-
- 0 replies
- 612 views
-