உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26726 topics in this forum
-
ஜெர்மனியில் உள்ள சர்வதேச இயற்கை நிதியகம், கனடாவின் மிகப்பெரிய ஏரி, அப்பகுதிக்கு அபாயகரமான ஏரியாக மாறிவருவதாக எச்சரித்துள்ளனர். Global Nature Fund (GNF) இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், கனடாவின் மிகப்பெரிய ஏரி, Lake Winnipeg இல் உள்ள தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாறிவருவதாகவும், இது சுற்றுப்புற சூழ்நிலையை மிகவும் பாதிக்கக்கூடிய அபாயம இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். கனடாவின் மிகப்பெரிய இந்த ஏரி விஷத்தன்மையாக மாறி வருவதை கனடிய மக்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றும், இதை சரிசெய்வது என்பது ஒரு மிகப்பெரிய சவால் என்றும் கனடிய மக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் இதிலுள்ள தண்ணீர் அனைத்தையும் வெளியேற்றிவிட்டு மாற்ற மில்லியன் செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட…
-
- 0 replies
- 431 views
-
-
ஒண்டோரியோ மாகாணத்தில் உள்ள St. Catharines என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு பெண்ணும், அவர் வளர்த்து வந்த நாயும் பரிதாபமாக பலியாகினர். St.Catharines உள்ள ஒரு வீட்டின் உள்ளே தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக வந்த செய்தியை அடுத்து விரைந்து வந்த ஒண்டோரியோ தீயணைப்பு படை வீரர்கள் தீவிபத்து நடந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, ஒரு பெண்ணும், நாயும் இறந்து கிடந்ததை அறிந்தார்கள். தீயை உடனே கட்டுக்குள் கொண்டுவர ஏறத்தாழ ஒரு மணிநேரம் போராடினர். மதியம் 1.30 மணிக்கு தீ முழுவதும் அணைந்தது. இறந்த பெண், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். தீ விபத்து எதனால் நடந்தது என்று தெரியவில்லை என்றும் அதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் …
-
- 0 replies
- 624 views
-
-
சுவிஸ் வங்கிகள், தங்களிடம் கணக்கு வைக்க, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, பணக்காரர்களுக்கு, மறைமுக அழைப்பு விடுத்திருக்கின்றன. முறைகேடாக சேர்த்த சொத்துகளை, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பணக்காரர்கள், சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பதாக,குற்றச்சாட்டு உள்ளது.இந்நிலையில், தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை, தங்கள் வங்கிகளில், டெபாசிட் செய்ய வருமாறு, உலகில் உள்ள பணக்காரர்களுக்கு, சுவிஸ் வங்கிகள் அழைப்பு விடுத்துள்ளன. வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்கள், அவர்களது நாட்டின், வருமான வரி துறையினர் மற்றும் கட்டுப்பாட்டாளர்களால் கண்டுபிடிக்கப்பட முடியாத அளவுக்கு, பாதுகாப்பாக இருக்கும் என, சுவிஸ் வங்கிகள் உறுதியளித்துள்ளன.சுவிஸ் வங்கிகள், இது தொடர்பாக, அதிகாரப்பூர்வமா…
-
- 0 replies
- 461 views
-
-
டொரண்டோவில் உள்ள North York மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் 25 வயது இளம்பெண்ணை கொலை செய்ததாக 18 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். North York நகரின் Don Mills Road and Finch Avenue என்ற இடத்தில் அருகில் உள்ள ஒரு வீட்டில் ஒரு இளம்பெண் உயிருக்கு போராடி வருவதாக செய்தியறிந்த காவல்துறை விரைந்து சென்று பார்த்தபோது, 25 வயது இளம்பெண் ஒருவர் உடலில் ஏகப்பட்ட படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக முதலுதவி செய்ய மருத்துவமனையில் அவரை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பந்தமாக Mohamed Adam Bharwani என்ற 18 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. இந்த இளைஞனுக்கும், கொலையான இளம்பெண்ண…
-
- 0 replies
- 498 views
-
-
இந்திய அமெரிக்கரான ரங்கசுவாமி ஸ்ரீநிவாசனுக்கு தொழில்நுடப் மற்றும் கண்டுபிடிப்புக்கான தேசிய விருதை அதிபர் பராக் ஒபாமா வழங்கினார். லேசர் துறையில் சிறந்த பணியாற்றியமைக்காக அவருக்கு இவ்விருதுக்கு வழங்கப்பட்டது. சாமுவேல் பிளம் மற்றும் ஜேம்ஸ் வெய்ன் ஆகிய விஞ்ஞானிகளுடன் இணைந்து இவ்விருதைப் பெற்றார் ஸ்ரீநிவாசன். தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்புக்கான தேசிய விருது, அறிவியல் அறிஞர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்காவின் உயரிய விருதாகும். 1985-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அறவியல் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழா வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அறிவ…
-
- 2 replies
- 1.4k views
-
-
பிரான்சில் ஓரினச் சேர்க்கை திருமணம் சட்டமானது தான் ஆட்சிக்கு வந்தால் ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் அளிப்பேன் என்று வாக்களித்தபடி, ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதனை சட்டமாக்கியிருக்கிறார் பிரான்ஸ் புதிய அதிபர் ஹோலண்டே. பிரான்ஸில் ஓரின சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. இதற்கு அங்கீகாரம் அளிக்க அவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதற்கு முன்னால் அதிபராக இருந்த சர்கோசி, ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்க மறுத்துவந்தார். இந்நிலையில், தான் ஆட்சிக்கு வந்தால் ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் அளிப்பேன் என்று உறுதியளித்திருந்தார் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹோலண்டே. அதன்படி, தற்போது அதிபராகியுள்ள ஹோல…
-
- 6 replies
- 631 views
-
-
Print this டெல்லி மாணவி பாலியல் வல்லுறவு போலவே மீண்டும் ஒரு சம்பவம் பதிவு டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை போலவே ஒரு சம்பவம் பெங்களூருவிலும் அரங்கேறியுள்ளது. வீடு திரும்ப பேருந்திற்காக காத்துகொண்டிருந்த 19 வயது மாணவியை அடையாளம் தெரியாத 3 நபர்கள் லிங்கராஜபுரம் மேம்பாலம் அருகே இருந்த புதர்களுள் இழுத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். தன்னை பாதுகாத்துக்கொள்ள போராடிய மாணவியை மூவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் பெங்களூரு காவல்துறையின் துணை ஆணையர் சுனில் குமார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை விசாரிக்கையில் தன்…
-
- 2 replies
- 551 views
-
-
ஹாமில்டன் நகரிலுள்ள Oakville என்ற இடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் முதிய வயது பெண் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை இரவு Oakville என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இரவு சுமார் 10.30 மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்தஅடுக்குமாடி கட்டிடம் Speers Road north of Kerr Street என்ற இடத்தில் உள்ளது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ வேகமாக பரவியதால், தீயணைப்புப்படை வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து முதலில் கட்டிடத்தில் இருக்கும் மக்களை வெளியேற்றி, பின்னர் தீயை கட்டுப்படுத்தினர். அதிகமானப…
-
- 0 replies
- 364 views
-
-
கனடாவின்ஒண்டோரியோ மாகாணத்தில் கடந்த 1964 முதல் இயங்கிவரும் மிக பிரபலமான ரெஸ்டாரெண்ட் Tim Hortons Restaurant. இந்த ரெஸ்டாரண்ட் தேசிய நெடுஞ்சாலை 404ல் ஷெப்பர்டு அவென்யுவின் கிழக்கு திசையில் இயங்கிவருகிறாது. நேற்றுசனிக்கிழமை மாலை நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, இந்த ரெஸ்டாரெண்டுக்குள் புகுந்தது. ரெஸ்டாரெண்ட் கண்ணாடியை உடைத்துக் கொண்டு, உள்ளே புகுந்த காரால், ரெஸ்டாரெண்டில் உணவு அருந்திக்கொண்டிருந்த இருவர் படுகாயம் அடைந்தனர். மேலும் காரில் பயணம் செய்த இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இந்தவிபத்து மாலை 5 மணியளவில் நடந்ததாக ஒண்டோரியோ காவல்துறை தெரிவிக்கின்றது. காயம் அடைந்தவர்கள் உடனே அருகிலுள…
-
- 0 replies
- 359 views
-
-
அமெரிக்காவில் போருக்கு சென்ற இராணுவத்தினரிடையே தற்கொலை செய்வது அதிகரித்து செல்கிறது என்று கவலை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள 21 மாநிலங்களிலும் நடாத்தப்பட்ட ஆய்வில் தினசரி 22 இராணுவ வீரர்கள் தற்கொலை செய்வதாக தெரிவிக்கிறது. கடந்த 1999 – 2010 ம் ஆண்டு காலப்பகுதியில் இடம் பெற்ற அமெரிக்க இராணுவ வீரர்களின் தற்கொலைகள் குறித்த ஆய்வறிக்கையே மேற்கண்ட அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. போரும், அதனால் உண்டாகும் அனர்த்தங்களும் ஏற்படுத்தும் உளவியல் தாக்கம் அமெரிக்க வீரர்களை மணிக்கு மணி கயிற்றில் தொங்க வைத்துக் கொண்டிருக்கிறது. போரில் வெற்றி பெறுவது என்பது ஊடகங்களின் வெற்று செய்தியே அல்லாது உண்மையாக வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் என்று போரில் ஈடுபடுகிறார்களோ …
-
- 3 replies
- 647 views
-
-
மாலியில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட திம்பக்டு நகருக்கு சென்றிருக்கும் பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஒல்லோந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரஞ்சு மற்றும் மாலி படைகளால் 6 நாட்களுக்கு முன்னர் தான் திம்பக்டு நகர் கைப்பற்றப்பட்டது. ஒரு நாள் விஜயமாக மாலி சென்றுள்ள அதிபர் ஒல்லோந்துடன் பிரான்ஸின் மூத்த அமைச்சர்கள் பலரும் இணைந்துகொண்டுள்ளனர். கடந்த ஆண்டில் வடக்கு மாலியின் பிராந்தியங்களைக் கைப்பற்றிய இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சில் கடந்த மூன்று வாரங்களாக படைநடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரஞ்சுப் படைகளை பாராட்டுவதற்காகவே அதிபர் ஒல்லோந்த் மாலி சென்றுள்ளார். மாலிக்கு புறப்படும் முன்னதாக கருத்துத் தெரிவித்த பிரான்ஸ…
-
- 1 reply
- 412 views
-
-
இந்தியாவை உலுக்கிய தில்லி பாலியல் வல்லுறவு சம்பவத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ள ஐந்து பேர் நீதிமன்றத்தில் தமக்கெதிரான குற்றச்சாட்டுகளை முறைப்படி மறுத்துள்ளனர். 23 வயது மாணவியை ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐந்து பேர் மீது இந்த வழக்கை விசாரிப்பதற்கென்று விசேடமாக உருவாக்கப்பட்டுள்ள விரைவு விசாரணை நீதிமன்றம், முறைப்படி குற்றப் பத்திரிகையை வாசித்துள்ளது. நீதிமன்றம் வந்து குற்றச்சாட்டுகளைக் கேட்ட ஐந்து பேரும் தாம் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர். இந்திய குற்றவியல் சட்டத்தின் 13 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் இந்த ஐந்து பேர் மீதும் நீதிபதி யோகேந்திர கன்னா வாசித்தார். கொலைசெய்தது, ஒரே நேரத்தில் பாலியல் வல்லுற…
-
- 2 replies
- 651 views
-
-
அன்புள்ள கமல் அவர்களுக்கு வணக்கம் .... 1992-93 ஆம் ஆண்டுகளில் இயங்கிய கமல் நற்பணி இயக்க அனைத்துக்கல்லூரி மாணவர் அமைப்பின் பச்சையப்பன் கல்லூரி பொறுப்பாளர் செங்குட்டுவன் எழுதுவது! இன்றைக்கு யாதவர் சங்கத்தில் உள்ள நண்பர் குணசீலன் அன்று உங்கள் நற்பணி இயக்கத்தின் தலைவர் . நாங்கள் படித்த சென்னை முத்தையா செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நீங்களும் படித்தீர்கள் என்று அன்றைக்கு பெருமைகொள்வோம் நாங்கள் . 1992 ஆம் ஆண்டு தாகம் அனைத்துக்கல்லூரி மாணவர் இதழாய் வெளியிடும் விழாவுக்கு நீங்கள் வருவதாக இருந்து , குணா படத்தின் படப்பிடிப்புக் காரணமாக நீங்கள் வாழ்த்து செய்தி மட்டும் அனுப்புனீர்கள். தாகத்தின் முதல் ஆண்டு விழாவில் கலந்துக்கொள்வேன் என்று சொன்னீர்கள் . "சுட்டி" "தேன்மழை " …
-
- 7 replies
- 1k views
-
-
இரண்டாம் உலகப் போரில் பெரும் திருப்பு முனையாக அமைந்த ஸ்டாலின்கிராட் சண்டை முடிவுக்கு வந்து 70 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. இதற்கான நினைவு தினம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் பூட்டின் தலைமையில் அனுட்டிக்கப்படுகின்றது. இரண்டாம் உலகப் போரின் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்த இந்தச் சண்டையில் சுமார் 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஸ்டாலின் இறந்த பிறகு இந்த நகருக்கு ''வொல்கோகிராட்'' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், உள்ளூர் கவுன்ஸில் மீண்டும் இதனை ஸ்டாலின்கிராட் என்று இந்தப் போரின் நினைவு தினங்களின் போது அழைப்பதற்கான அனுமதியை அங்கீகரித்தது. ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் முன்னாள் இராணுவ தளபதிகள் மாத்திரமல்லாமல், சில ஜேர்மனிய இராணுவ மூத்த அதிகாரிகளும் …
-
- 0 replies
- 515 views
-
-
பாலிய வல்லுறவில் ஈடுபட்டால் தூக்கு- மத்திய அரசு அதிரடி சட்டம்! சனி, 2 பிப்ரவரி 2013( 09:49 IST ) பாலியல் வல்லுறவுக் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாகவும், பெண் கற்பழித்துக் கொல்லப்பட்டாலோ அல்லது பெண்ணுக்கு நிரந்தர பாதிப்பு ஏற்பட்டாலோ குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதல் வாழ்நாள் முழுவதும் சிறை அல்லது மரண தண்டனை விதிக்க முடியும் என்றும் மத்திய அமைச்சரவை இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களுக்கு எதிராக குற்றம்புரிந்தவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நீதிபதி ஜேஎஸ் வர்மா குழுவின் அறிக்கை அடிப்படையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங…
-
- 2 replies
- 775 views
-
-
கடந்த காலங்களில் நடைபெற்ற போர் சம்பவங்களை மறந்து வரும் காலங்களில் புதிய உறவுக்கு முன்னேறுவோம் என இந்திய அதி்காரிகளிடம் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா-சீனா போர்:சீனாவுடனான எல்லைப்பகுதியில் ரஷ்யாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது. இந்தியா-சீனா இடையேஎல்லைப்பகுதி மூன்றுபகுதிகளில் குறுக்கிடுகிறது.இருநாடுகளிடையே உள்ளமேற்கு பகுதியான அக்சய் சீனாதன்னுடைய பகுதி என சீனாவும்,காஷ்மீர் மாநிலத்தி்ன் ஒரு பகுதி என இந்தியாவும் உரிமை கொண்டாடி வருகின்றது. அதே போல் பூடான் நேபாளம் எல்லையை ஒட்டிஅமைந்துள்ள நமது அருணசாலபிரதேச மாநிலம்சீனாவின் தென் எல்லையாக அமைந்துள்ளது. இதற்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி என அப்போதைய பிரதமர் ந…
-
- 1 reply
- 531 views
-
-
பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக இருந்த முஷாரஃப், கார்கில் போர் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு எல்லை தாண்டி வந்து இந்தியப் பகுதிக்குள் ஓர் இரவு தங்கியிருந்ததாக அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அதிபராக பர்வேஸ் முஷாரஃப் இருந்தபோது அந்நாட்டு ராணுவத்தின் ஊடகப் பிரிவின் மூத்த அதிகாரியாக இருந்த அஷ்பக் ஹுசேன், கார்கில் போர் குறித்து புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார். அதில் தாம் எழுதிய கருத்துகளை அவர் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் வியாழக்கிழமை மீண்டும் கூறினார். ஹுசேன் கூறியதாவது: முஷாரப் கடந்த 1999ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஹெலிகாப்டரில் இந்தியப் பகுதிக்குள் சென்றார். அங்கு 11 கி.மீ. தூரம் பயணித்த அவருடன…
-
- 2 replies
- 499 views
-
-
One person died and two were wounded Friday when a suicide bomber blew himself up outside the U.S. Embassy in Ankara, police said. http://www.cnn.com/2013/02/01/world/europe/turkey-embassy-explosion/index.html?hpt=hp_t2
-
- 3 replies
- 608 views
-
-
நோர்வே சிறுவர் காப்பக விவகாரம் : இலங்கை அரசு தலையீடு செய்யும் நோர்வேயின் சிறுவர் காப்பக விவகாரங்கள், அங்கு மீறப்பட்டு வருகின்ற சிறுவர் உரிமைகள் அடிப்படை மற்றும் மனித உரிமை மீறல்கள் சர்வதேச சட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசு கவனம் செலுத்தியுள்ளதுடன் தலையீடுகளை மேற்கொள்வதற்கு தகலவ்களை திரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர் காப்பகங்களால் பொறுப்பேற்கப்பட்டு சிறுவர் விடுதிகளிலும் வளர்ப்புப் பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ள பெறும்பாலான சிறுவர்கள் அங்கு தவறான நடத்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதனால் மரணங்கள் சம்பவித்திருப்பதாகவும் நோர்வேயின் பல்வேறு ஊடகங்களில் இருந்து கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். நோர்வே சிறுவர் காப்பக சிறுவர்…
-
- 0 replies
- 580 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இந்தியா, இலங்கைக்கு ஆதரவளிக்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்து வருகின்றன. இந்தத் தீர்மானத்தின் போது இந்தியா, இலங்கைக்கு சாதகமான முறையில் நடந்து கொள்ளுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.அண்டை மற்றும் நட்பு நாடு என்ற ரீதியில் மனித உரிமை விவகாரங்களின் போது இந்தியா, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்பதில் சந்தேகமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த தடவை இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்த போதிலும், அந்த விடயங்கள் குறித்து ராஜதந்திர ரீதியில் கலந்துரை…
-
- 6 replies
- 900 views
-
-
ஈரானில் நபரொருவருக்கு விரல்களை வெட்டித்தண்டனை: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் By General 2013-02-01 09:59:30 திருட்டு மற்றும் முறைகேடான பாலியல் தொடர்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபரொருவரின் விரல்கள் விசேட வெட்டும் உபகரணமொன்றின் மூலம் துண்டிக்கப்படும் கொடீர காட்சியை வெளிப்படுத்தும் புகைப்படங்களை அந்நாட்டு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேற்படி நபர் கண்கள் கட்டப்பட்ட நிலையில், விரல்களை வெட்டும் இயந்திரத்துக்கு அருகே அழைத்து வரப்பட்டு அவரது கரம் இயந்திரத்தின் வெட்டுப் பகுதியில் வைக்கப்பட்டு விரல்கள் துண்டிக்கப்படும் காட்சியை மேற்படி புகைப்படங்கள் விபரிகின்றன. ஆனால், தண்டனை நிறைவேற்றத்துக்கு உள்ளான நபர் எதுவித வலியுணர்வையும் வெளிப்படுத்…
-
- 0 replies
- 417 views
-
-
தீக்குளிக்கத் தூண்டியதாக திபெத் புத்த துறவிக்கு சீனாவில் மரணதண்டனை! [Friday, 2013-02-01 08:11:33] சீனாவில் திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் துறவிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவரது உறவினருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு எதிராகப் போராட்டம் நடந்து வரும் திபெத்தில் இளைஞர்களை தீக்குளிக்க தூண்டியதான குற்றச்சாட்டில் இவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு சிச்சுவான் மாகாண நீதிமன்றம் இத்தீர்ப்பை அளித்துள்ளது. அதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மொத்தம் 8 பேரை தீக்குளிக்கத் தூண்டியுள்ளனர். அதில் 3 பேர் இறந்துவிட்டனர். 5 பேர் காப்பாற்றப்பட்டனர். எனவே முக்கியக் குற்றவாளியான புத்தத் துறவி லோராங்க் கோன்சோக்குக்கு …
-
- 0 replies
- 240 views
-
-
முக்கிய நேரங்களில் மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க. அழகிரி பங்கேற்காமல் இருக்கும் செயலுக்கு மூத்த அமைச்சர்கள் சிலரிடம் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், மாதத்தின் பெரும்பாலான நாள்களை மதுரையில் கழிப்பதை மு.க. அழகிரி வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அங்கிருந்தபடி அமைச்சகத்தின் அலுவல் பணிகளை அவர் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இணை அமைச்சர் மூலம் பணிகள்: அவரது துறையில் கேபினட் அமைச்சர் மேற்கொள்ள வேண்டிய பெரும்பாலான பணிகளை மத்திய இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா நிறைவேற்றி வருகிறார். இதனால், மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறைகளில் கேபினட் அமைச்சராக அழகிரி பெயரளவுக…
-
- 4 replies
- 604 views
-
-
"விக்ரம்' படத்தின்போது நடிகர் கமல்ஹாசன் குறித்து எம்ஜிஆருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தரத் தயாராக இருக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: "வெளியே வந்துவிட்டது பூனைக்குட்டி' என்ற தலைப்பில் புதன்கிழமை கடிதம் ஒன்று எழுதினேன். அதில் கமல்ஹாசன் தொடர்பாக எம்ஜிஆருக்கு ஜெயலலிதா தன் கைப்பட எழுதிய கடிதம் குறித்தும் குறிப்பிட்டிருந்தேன். இது கற்பனையான குற்றச்சாட்டு என்றும், எம்ஜிஆருடன் தினமும் பேசுவதற்கு தனக்கு வாய்ப்பு இருந்ததால் எதற்கு கடிதம் எழுத வேண்டும் என்றும் ஜெயலலிதா கேட்டுள்ளார். இதற்காக என் மீது வழக்கு தொடரப் போவதாகவும் ஜெயலலிதா தன் பேட்டியில் கூறியுள்ளார். நான் …
-
- 2 replies
- 1.1k views
-
-
விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையில் எந்தத் தவறும் இல்லை. சரியான முடிவுதான், என்று துக்ளக் ஆசிரியர் சோ கூறியுள்ளார். கமல் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள ‘விஸ்வரூபம்' படத்திற்கு தமிழக அரசு விதிக்கப்பட்ட தடைக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளரும், நடிகருமான சோ, விஸ்வரூபம் தொடர்பாக ‘தமிழக அரசு செய்தது சரியே. படம் தடை செய்யப்பட வேண்டிய படம்தான்' என்று கூறியுள்ளார். நேற்று மாலை ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு சோ அளித்த பேட்டியில், "தமிழக அரசு ‘விஸ்வரூபம்' படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும். ஒரு திரைப்படத்துக்காக, ஒரு நடிகரின் வர்த்தகத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை…
-
- 5 replies
- 1k views
-