Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கனடாவைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு பயிற்சியாளர் ஒருவர் 18 வயதுக்கும் குறைவான சிறுவர் சிறுமிகளிடம் பாலியல் குற்றம் புரிந்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இண்டர்நெட், செல்போன் மற்றும் சேட்டிங் முதலியவற்றில் 18 வயதுக்கும் குறைவான சிறுவர் சிறுமிகளிடம் ஆபாச புகைப்படங்கள், வீடியோ மற்றும் ஆபாச வார்த்தைகள் அடங்கிய குறுஞ்செய்திகள் அனுப்புதல் போன்ற குற்றங்களுக்காக 24 வயதான யூனிஸ் என்பவர் நேற்று அதிரடியாக டொரண்டோ போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் York University Lions football அணியின் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பயிற்சியாளராக இருக்கும் இவர் மீது கிரிமினல் வழக்கு ப…

  2. கடன் தகமை அல்லது கடன் அந்தஸ்து நிலையில் 3 ஏ என்ற உயர் நிலையில் இருந்து பிரிட்டனை விலக்குவதாக ஒரு உலக கடன் தகமை கணிப்பீட்டு நிறுவனம் அறிவித்ததை அடுத்து, தமது நாட்டின் கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளை அதிகரிக்கப்போவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறுயுள்ளது. வரவு செலவுத்திட்ட துண்டுவிழுதலை குறைப்பதற்கான தனது நடவடிக்கைகளுக்கு, ''மூடி'' நிறுவனத்தின் இந்த தகமைக் குறைப்பு, பலத்தை தந்துள்ளதாக பிரித்தானிய நிதி அமைச்சரான ஜோர்ஜ் ஒஸ்போர்ன் கூறியுள்ளார். அரசாங்கம் ஒரு அவமானகரமான தாக்கத்தை இதன் மூலம் எதிர்கொண்டுள்ளதாகவும், தனது செலவு வெட்டுத் திட்டத்தை அது கைவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான தொழில் கட்சி கூறியுள்ளது. பிரிட்டனின் மந்தமான பொருளாதார வளர்ச்சியும், செலவு வ…

    • 0 replies
    • 412 views
  3. டெல்லி: தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் அமைப்பின் (டெசோ) சார்பில் டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியைப் புறக்கணித்துவிட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு அழைப்பு விடுக்க திமுக திட்டமிட்டிருக்கிறது. டெல்லியில் வரும் 7-ந் தேதி டெசோ அமைப்பின் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பா.ஜ. க தலைவர்களான அத்வானி, சுஷ்மா சுவராஜ், யஷ்வந்த் சின்கா, மத்திய அமைச்சர்கள் பரூக் அப்துல்லா, சரத்பவார், முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளின் தலைவர்களையும் அழைக்க திட்டமிட்டிருக்கின்றனர். ஆனால் காங்கிரஸை புறக்கணிக்கவும் திமுக முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக நாளை சென்னையில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டில் ஆலோசிக்கப்பட…

  4. இளையராஜா சஞ்சிகை ஒன்றில், “பாரதிராஜாவின் பேச்சை வெறும் பைத்தியக்காரன் பேச்சு என்று விட்டு விட வேண்டியதுதான்” என்று கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள பாரதிராஜா, “அவரது பேச்சு பைத்தியக்காரன் பேச்சு அல்ல.. ஆனா குழந்தைத்தனமானது. வேலை செய்ய முடியாதவன் தத்துவம் பேசிக்கிட்டுருப்பான்” என்று கூறியுள்ளார். இளையராஜா பேச்சு பற்றி கருத்து தெரிவித்துள்ள பாரதிராஜா, “நாங்க அண்ணன் தம்பி நாலுபேரு. ஆனால் நான்தான் பாரதிராஜாவா மாறியிருக்கேன். ஏன்னா கடவுள் என்னை தேர்ந்தெடுத்திருக்கான். என்னை விட திறமையான ஆயிரம் பாரதிராஜாக்கள் சினிமா பக்கமே வரல. அவுங்களுக்கு ஒரு களம் கிடைக்கல. ஆயிரம் ரஜினிகாந்த், ஆயிரம் கமல் இருக்காங்க. அவுங்களுக்கு களம் கிடைக்கல, கமலுக்கும் ரஜினிக்கும் கிடைச்சுது. நாம எவ்ளோ பெரி…

  5. அமெரிக்காவில் புதைக்கப்பட்ட அணு உலைக் கழிவுகளில் இருந்து திடீரென கசிவு ஏற்பட்டிருப்பது பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஹன்போர்ட் அணு உலை 1943-ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகில் முதல் முறையாக அணு ஆயுதத்துக்கான புளுடோனியம் இங்குதான் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த புளுடோனியம் மூலமே ஜப்பான் மீது நாசகர அணுகுண்டுகளும் வீசப்பட்டன.இந்த அணு உலை 1989-ம் ஆண்டு மூடப்பட்டது. இந்த கூடத்தில் கதிர் வீச்சை ஏற்படுத்தக் கூடிய பல மில்லியன் லிட்டர் அணுக கழிவுகள் 200 கலங்களில் நிரப்பப்பட்டு பூமிக்கடியில் புதைத்து பாதுகாக்கப்படுகிறது. இதில் ஆறு கலங்களில் இருக்கும் அணுக் கழிவுகள் கசிவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ஆண்டுக்கு 1136 லிட்டர் அணுக் …

  6. இந்திய விமானப்படையின் முதல் பகல் - இரவுப் பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நேற்றுத் தொடங்கியது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி, ராஜஸ்தான் ஆளுநர் மார்கரெட் ஆல்வா, முதல்வர் அசோக் கெலாட், முப்படை உயரதிகாரிகள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். "அயர்ன் ஃபிஸ்ட்' என்ற பெயரிலான இந்த பயிற்சியில் இந்திய விமானப்படை தலைமை தளபதி என்.ஏ.கே. பிரெளன், தொடக்க உரை நிகழ்த்தினார். சுகோய் 30, மிக் 27, மிக் 21, மிக் 29, ஜாகுவார் என பல்வேறு வகையான போர் விமானங்கள், நவீன ரக ஹெலிகாப்டர்கள் மூலம் இந்திய விமானப்படை வீரர்கள் நாட்டின் வான் தாக்குதல் திறனை வெளிப்படுத்தினர். …

  7. இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சேனல் 4 தொலைக்காட்சியின் "நோ பயர் ஸோன்" ( "வேட்டுக்கள் மறுக்கப்பட்ட போரற்ற பாதுகாப்பு வலயம்") என்கிற ஆவணப்படம் முதன்முறையாக டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. 20 நிமிடக் காட்சிகளை கொண்ட இந்த ஆவணப் படம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    • 3 replies
    • 620 views
  8. ஜப்பானில் மூவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் ஜப்பானில் கொடூரமான குற்றங்கள் புரிந்த, மூன்று பேருக்கு, நேற்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. வளர்ந்த நாடுகளில் ஒன்றான, ஜப்பானில், மரண தண்டனைக்கு எதிரான அமைப்புகள் அதிகம் உள்ளன. கொடூர குற்றவாளிகளுக்கு கூட, மரண தண்டனை விதிக்கக் கூடாது என, அந்த அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும், மிக கொடூர குற்றவாளிகளுக்கு, மரண தண்டனை விதிப்பதை, ஜப்பான் வழக்கமாக கொண்டுள்ளது. மரண தண்டனை நிறைவேற்ற, பல அறிவியல் முறைகள் இருந்த போதிலும், இன்னமும், தூக்கு தண்டனையை தான் ஜப்பான் பின்பற்றுகிறது. அந்நாட்டில் புதிய அரசு, கடந்த, டிசம்பரில் பொறுப்பேற்ற பிறகு, நேற்று தான், முதல் முறையாக, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது…

  9. பஞ்சாப்: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதை பஞ்சாப் மாநில சீக்கியர்களின் கட்சியான டல் கல்சா கடுமையாக கண்டித்திருக்கிறது. மேலும் இலங்கை வீரர்கள் பங்கேற்பதால் ஆசிய தடகளப் போட்டியை நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதற்கும் அக்கட்சி பாராட்டு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக டல் கல்சா கட்சியின் தலைவர் தாமி கூறுகையில், இலங்கை விவகாரத்தில் இந்தியா இரட்டைவேடம் காட்டி வருகிறது. இந்த நிலை மாறவேண்டும். இலங்கை இறுதிக் கட்ட போரின் போது இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இலங்கை மனித உரிமை மீறலில் ஈடுபட்டதற்கு சாட்சியமாக இருப்பது பிரபா…

    • 0 replies
    • 594 views
  10. அணுகுண்டுவீச்சில் எரியும் ஒபாமா - வடகொரியா வெளியிட்ட பிரசார வீடியோ! [Thursday, 2013-02-21 17:50:31] அமெரிக்க அதிபர் ஒபாமா, அணுகுண்டு வீச்சில் எரிவது போன்ற வீடியோ காட்சிகளை வட கொரியா வெளியிட்டது. வட கொரியா கடந்த 12-ந் தேதி அணுகுண்டு சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து அமெரிக்காவுக்கு எதிரான பிரசாரத்தில் வடகொரியா ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் ஏவுகணை தாக்குதலில் நியூயார்க் நகரம் தாக்குதலுக்கு உள்ளாவது போன்றும், நகரம் எரிவது போன்றும் வீடியோ காட்சிகளை வடகொரியா வெளியிட்டது இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புதிதாக ஒரு வீடியோ காட்சியை வடகொரியா வெளியிட்டுள்ளது. அதில் அணுகுண்டு வீச்சில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், …

  11. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பாதுகாப்புப் அதிகாரி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிரதமர் உள்ளிட்ட அரசின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் படையில் இவர் பணியாற்றினார். வடக்கு லண்டனின் காம்டேன் எனும் இடத்திலுள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இதுபற்றி அவருடைய உறவினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் குண்டடிபட்டு அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர். மேலும் இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை சுட போலீஸ் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதா என்றும் விசாரணை நடந்து வருகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=76552&category=WorldNews&language=tamil

  12. மாலியில் நடப்பது யுரேனியப் போர்! By சு. வெங்கடேஸ்வரன் உள்நாட்டுப் போர் "ஏற்படும்' அல்லது "ஏற்படுத்தப்படும்' நாடுகள் தொடர்பாக, மேற்கத்திய நாடுகள் எடுக்கும் நிலைப்பாடு முழுவதும் அவர்களுக்குச் சாதகமானதாகவே இருக்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. மேற்காசிய நாடான சிரியாவில் அரசுக்கு எதிரான புரட்சியாளர்கள் படைக்கு ஆதரவாக ஆயுதங்களுடன் களமிறங்கியுள்ள அதே நாடுகள்தான், மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் புரட்சியாளர்களுக்கு எதிராகவும் அரசுக்கு ஆதரவாகவும் போரில் ஈடுபட்டுள்ளன. மாலியில், "ஆபரேஷன் செர்வல்' என்ற பெயரில் போர் நடத்தி வருகிறது பிரான்ஸ். மாலி முன்பு பிரான்ஸ் நாட்டின் காலனி ஆதிக்கத்துக்கு உள்பட்டிருந்தது என்பதால், அங்கு பிரச்னை ஏற்பட்டால் ராணுவ நடவடிக்…

  13. ஹைதராபாத்: ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இன்று இரவு 7 மணியளவில் தில்சுக் நகர் பகுதியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹைதராபாத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த தில்சுக் நகர் பகுதியில் இன்று இரவு 7 மணிக்கு குண்டுவெடிப்பு நடந்தது. மொத்தம் 5 இடங்களில் குண்டுகள் வெடி்தததாக முதலில் தகவல்கள் வெளியாகின. தற்போது 3 இடமாக அது குறுகியுள்ளது. ஆனந்த் டிபன் சென்டர், கொனார்க் மற்றும் வெங்கடாத்ரி தியேட்டர்களுக்கு அருகே குண்டுகள் வெடித்தன என்று தகவல்கள் கூறுகின்றன. குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோரில் பலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும்…

    • 18 replies
    • 1.1k views
  14. கம்ப்யூட்டர் கோளாறு காரணாக, தரைகட்டுப்பாட்டு தளத்துக்கும், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு, துண்டிக்கப்பட்டது.அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் ஒன்றிணைந்து, விண்வெளியில், சர்வதேச விண் ஆராய்ச்சி மையத்தை நிறுவியுள்ளன. தற்போது, இந்த மையத்தில், இரண்டு அமெரிக்கர்களும், மூன்று ரஷ்யர்களும், கனடா நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவரும் தங்கியுள்ளனர்.இவர்களுக்கு தேவையான உணவு, பிராணவாயு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், சோயுஸ் உள்ளிட்ட விண்கலங்கள் மூலம், அனுப்பப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம், இந்த மையத்துடனான தொடர்பு, திடீரென துண்டிக்கப்பட்டது. அமெரிக்காவின், ஹூஸ்டன் நகரில் உள்ள, தரை கட்டுபாட்டு மைய அதிகாரிகள், விரைந்து ச…

  15. தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தூக்குத் தண்டனை பற்றிய கருத்துகள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. வீரப்பனின் நண்பர் என, குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்தத் தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டிருந்தால், அவர்கள் கடந்த, 9 ஆண்டுகளாக, சிறையிலே உழன்று உருக்குலைய வேண்டி இருந்திருக்காது. அவர்கள், 9 ஆண்டு காலம் சிறைத் தண்டனையும் அனுபவித்து விட்டு, தற்போது மேலும் தூக்குத் தண்டனை என்றால், ஒரே குற்றத்திற்காக இரண்டு கடும் தண்டனைகள் என, ஆகிவிடாதா என்பதையும், நமது சட்டம் அனுமதிக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். கடந்த, 2007ல் ஐ.நா., சபை தூக்குத் தண்டனைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை முன் வைத்தபோது,…

  16. புதுடில்லி: கடந்த சில நாட்களுக்கு முன் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் காவி பயங்கரவாதம் குறித்த தனது பேச்சுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே மன்னிப்பு கேட்டார். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை துவங்கவுள்ளது. ரயில்வே பட்ஜெட்,பொது பட்ஜெட் ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளன.இதில் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ. பல்வேறு பிரச்னைகளை கிளப்ப உள்ளது. நேற்று இக்கட்சியின் எம்.பி.,க்கள் கூட்டத்தில் ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரத்தினை வைத்து புயலை கிளப்புவோம் என கூறியது. கடந்த மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த காங்., மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே பேசுகையில், நாட்டில் காவி பயங்கரவாதத்தை பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஆகியவை ஊக்கு…

    • 2 replies
    • 706 views
  17. கெஜட்டில் காவிரி தீர்ப்பு: இது தான் என் 30 ஆண்டு அரசியல் வாழ்விலேயே மாபெரும் சாதனை- ஜெயலலிதா. சென்னை: காவிரி் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை மத்திய அரசு இன்று கெஜட்டில் (அரசிதழ்) வெளியிட்ட இந்த நாள் தான், எனது 30 வருட அரசியல் வாழ்வில் மிக மகிழ்ச்சியான நாள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், இன்று காவிரி் இடைக்காலத் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது. இது கடந்த 22 ஆண்டு காலமாக நான் இடைவிடாது நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி இது. இந்தச் செய்தி எனக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியைத் தருகிறது.நான் 1991ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி முதன்முதலாக முதல்வராக பொறுப்பேற்றேன். 21ம் தேதி காவிரி நடுவர் மன்றம் தனது இடைக…

  18. புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக்கியது சரிதான்- பசுமை தீர்ப்பாயம் Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/20/tamilnadu-green-tribunal-gives-green-signal-tn-govt-170158.html டெல்லி: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகத்தை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றியது செல்லும் என்று பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.இந்தத் தீர்ப்பை முதல்வர் ஜெயலலிதா வரவேற்றுள்ளார். சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, புதிய தலைமை செயலக கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவ மனையாக மாற்ற, மாநில அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து, டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், புதிய தலைமை செயலக கட்டடத்தில், கடந்த, 30ம் தேதி…

  19. டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் கொடூரக் கொலையால் இதயம் படைத்த அத்தனை பேரும் பதறிப் போய் நிற்கும் நிலையில் இலங்கையர்கள் நமது நண்பர்கள், பார்ட்னர்கள், பங்காளிகள் என்று மனிதாபிமானம் சற்றும் இல்லாமல் கருத்து தெரிவித்துள்ளார் மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித். ராஜபக்சே கும்பல் என்ன செய்தாலும் அதை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது என்பதை கொள்கையாகவே வைத்துக் கொண்டுள்ளது இந்தியா. ஆனால் மிகக் கொடூரமான கோரக் கொலைகளையும் கூட அது கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் அதிர்ச்சியாக உள்ளது. லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது குறித்த புகைப்படங்கள் உள்ளிட்டவை வெளியானபோதும் கூட இந்தியா அதைக் கண்டுகொள்ளவில்லை. இலங்கை நமத…

  20. ரீடர்ஸ் டைஜஸ்ட் 'திவால்': ரூ.1,900 கோடி காண்ட்ராக்டை இழக்கும் எச்.சி.எல்! Posted by: Chakra Published: Wednesday, February 20, 2013, 11:33 [iST] நியூயார்க்: ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கை நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அறிவித்துள்ளதால் அந்த நிறுவனத்துடனான ரூ. 1,900 கோடி (350 மில்லியன் டாலர்) காண்ட்ராக்டை இந்தியாவின் எச்.சி.எஸ் நிறுவனம் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் 4வது மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான எச்சிஎல் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்துடன் ரூ. 1,900 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. அந்த நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளையும் கம்ப்யூட்டர் மயமாக்கும் 7 ஆண்டு காண்ட்ராக்ட் அது. இந்த இதழை அமெரிக்காவின் ஆர்டிஏ ஹோல்டிங் கம்பெனி என்ற நிறுவனம்…

  21. புத்தர் சிலைகளுக்கு தடை விதிக்கப்படவில்லை - ஈரான் 20 பெப்ரவரி 2013 புத்தர் சிலைகளுக்கு தடை விதிக்கப்படவில்லை என ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.ஈரானில் புத்தர் சிலைகளை இறக்குமதி செய்யவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் பிழையானவை என ஈரான் அறிவித்துள்ளது. சிலைகளை விற்பனை செய்வதற்கும் இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என ஈரானிய கலாச்சாரத் திணைக்கள செயலாளர் சஹின் ஜாபர் அன்சாரி தெரிவித்துள்ளார்.துரதிஸ்டவசமாக தாம் வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். கலாச்சார பெறுமதியுடைய பொ…

  22. உலகில் தலைசிறந்த உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான, நெஸ்ட்லே தயாரிப்புகளில், குதிரை மாமிசம் கலக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. பிரபல, நெஸ்ட்லே நிறுவனம், பல வகை உணவுப் பொருட்களை தயாரித்து, உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனம் தயாரித்த, மாட்டிறைச்சி கலந்த உணவுப் பொருளில், குதிரையின் மாமிசம் கலப்படம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த கலப்பட புகார் காரணமாக, நெஸ்ட்லே நிறுவனம், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள, ஒப்பந்த கம்பெனிகளிடமிருந்து பொருட்கள் வாங்குவதை நிறுத்தியுள்ளது. முதலில், இந்த குதிரை மாமிச கலப்பு புகாரை மறுத்த, நெஸ்ட்லே நிர்வாகம், தற்போது தவறை ஒப்புக் கொண்டுள்ளது. பொதுவாக, ஐரோப்பிய நாடுகளில், மாட்டிறைச்சியில் தயாரிக்கப்படும் உணவுப் பொரு…

  23. ஐவரி கோஸ்ற் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி உலகப் போர்க்குற்ற நீதிமன்றில் நீதிபதிகள் முன் இன்று (செவ்வாய்க் கிழமை 19.02. 2013 )தோன்றினார். உலகப் போர்க்குற்றத்திற்கான நீதிமன்றம் ஒல்லாந்து நாட்டின் டென்ஹெக் நகரில் இயங்கிவருகின்றது. இந்த நீதிமன்றின் முன் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமைமீறல் போன்ற குற்றங்கள் சாட்டப்பட்ட நிலையில் முதலாவதாக ஆஜர்படுத்தப்பட்ட ஒரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி இவராவார். லௌரன் க்பாக்போ ஐவரி கோஸ்ட் என்ற ஆபிரிக்கநாட்டின் சர்ச்சைக்குரிய முன்னாள் ஜனாதிபதி. 2010 ம் ஆண்டு கார்த்திகை மாதம் ஐவரி கோஸ்ட் நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஏற்பட்ட கிளர்ச்சியாளர்களின் மீதான தாக்குதல் நடவடிக்கைகளின்போது தனது ஆதரவாளர்கள் மூலம் 16…

  24. பெல்ஜியம் தலைநகரில்.. விமான நிலையம் ஒன்றில்.. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுவிஸ் எயார் விமானத்தில் இருந்து விமான நிலைய பாதுகாப்பு வேலிகளை பிய்த்துக் கொண்டு நுழைந்த ஆயுதம் தரித்த கொள்ளையர்கள்.. துணிகரமாக 32 மில்லியன் பெறுமதி வாய்ந்த வைரத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த விமான நிலையம் உலகில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பான ஒன்று என்று கூறப்படுகிறது. போகும் முன் கொள்ளையர் தாம் கொண்டு வந்திருந்த ஒரு வாகனத்திற்கு தீயிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தின் போது கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு எதனையும் நடத்தவில்லை. மேலும் இக்கொள்ளை வெறும் 11 நிமிட நேரத்துக்குள் மிக வேகமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெல்ஜியத்தை மட்டுமன்றி ம…

  25. பாக்.துறைமுகம் சீனா வசம் - இந்தியாவுக்கு செக் வைக்க புதிய திட்டமா? February 19, 2013 12:07 pm இதுநாள் வரை சிங்கப்பூர் வசம் இருந்த, பாகிஸ்தான் கவ்தார் துறைமுகத்தை சீனா தனது பொறுப்பில் எடுத்துள்ளது. இங்கு தனது கடற்படைத் தளத்தை அமைக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது. இதனால் இந்தியா கடும் எரிச்சலும், அதிர்ச்சியும் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவைச் சுற்றி வளைக்கும் சீனாவின் பூமாலைத் திட்டத்தின் கீழ்தான் இந்த துறைமுகத்தை சீனா கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவைச் சுற்றிலும் சீனா தனது நிலைகளைப் பலப்படுத்தி வருகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி கூறுகையில்... முறைப்படி கவ்தார் துறைமுகம் சீனாவிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.