Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாண ஆளுனர் சல்மான் தஸீர், அவரது பாதுகாவலர் ஒருவரால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார். ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் சல்மான் தஸீர், அதிபர் ஆஸிப் அலி சர்தாரிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். இந்நிலையில் இன்று தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள செல்வந்தர்கள் வந்து செல்லும் பிரபல கோஷார் வணிக மையத்திற்கு வந்தபோது, அவருடன் வந்த அவரது பாதுகாவலர்களில் ஒருவர் தஸீரை திடீரென துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த தாக்குதலின்போது தஸீரின் பாதுகாப்பு வந்த மற்ற பாதுகாவலர்கள் பதிலுக்கு சுட்டதில் ஐந்து பேர் காயமடைந்ததாகவும், ஆளுனர் தஸீரை சுட்டுக்கொன்ற பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை உயரதிகாரி ஒர…

  2. பாகிஸ்தான்: பெண்களுக்காக ஆங்கில பத்திரிக்கை தொடங்கிய தாலிபான் படத்தின் காப்புரிமைGETTY IMAGES பெண்கள் மற்றும் ஆண்கள் வழிதவறாமல் இருக்க, அவர்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்துவிடவேண்டும் என்று தஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தானின் முக்கியத் தலைவர் ஃபஜ்லுல்லாஹ்வின் மனைவி கருத்து தெரிவித்துள்ளார். ஜிகாதின் வழியில் பெண்களை ஈர்ப்பதற்காக தாலிபான் வெளியிடும் பத்திரிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தாலிபான் பெண்களுக்காக ஒரு ஆங்கில பத்திரிகையை வெளியிட்டுள்ளது, அதன் முதல் பதிப்பு அண்மையில் வெளியானது. அதில், 'ஜிகாதியாக' விரும்பும் ஆறு வயது சிறுமியின் கதையும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 'சுன்னத்-இ-குலா' என்ற அந்த பத்திரிக…

  3. பாகிஸ்தான்: மும்பையை இலக்கு வைக்கும் அணுஆயுத ஏவுகணை சோதனை வெற்றி! சுமார் 2 ஆயிரத்து 750 கிலோ மீட்டர் தொலைவுக்கு அணுஆயுதங்களை தாங்கி சென்று தாக்கும் ஷாகீன்-3 ரக ஏவுகணையை பாகிஸ்தான் இன்று வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டால் மும்பை வரை தாக்கப்படும் அபாயமிருக்கிறது. ஆனால் இந்த ஏவுகணை எந்த இடத்தில் பரிசோதித்து பார்க்கப்பட்டது என்ற விபரங்களை பாகிஸ்தான் ராணுவம் அறிவிக்கவில்லை. தரையில் இருந்து ஏவப்படும் ஷாகீன் 3 ரக ஏவுகணை இதுவாகும். ஷாகீன் 3 ரக ஏவுகணை திட்டத்தின் இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் மசார் ஜமில் இது குறித்து கூறுகையில், '' பாகிஸ்தான் ராணுவத்தின் பலத்தை உலகுக்கு பறைசாற்றும் விதத்தில், இந்த ஏவுகண…

  4. [size=4]பாகிஸ்தானில் உள்ள முக்கிய விமானப்படைத்தளம் ஒன்றின் மீது இன்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து அங்கு சண்டைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மின்காஸ் விமானப்படைத்தளத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதை அடுத்து இந்தச் சண்டை மூண்டுள்ளது. மேலதிக விபரங்கள் பின்னர்....![/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  5. பாக் இராணுவத்துக்கு பிரதமர் கீலானி கடும் கண்டனம் பாகிஸ்தானின் பிரதமர் யூசூஃப் ராஜா கீலானி இதுவரை இல்லாத வகையில் அந்நாட்டின் பலம் பொருந்திய இராணுவத்தினர் மீது கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளார். நாட்டின் இராணுவம் ஒரு ஆட்சிக்குள் இன்னொரு ஆட்சி போல நடந்து கொள்ளாமல், பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூறும் வகையில் இருக்க வேண்டும் என்று இஸ்லாமாபாதில் இன்று உரையாற்றிய போது கீலானி தெரிவித்துள்ளார். தேர்தெடுக்கப்பட்ட ஒரு மக்களாட்சி மற்றும் சர்வாதிகாரம் ஆகிய இரண்டுக்கும் இடையே எது தேவை என்பதை பாகிஸ்தானிய மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தனது அரசை கவிழ்ப்பதற்கு ஒரு சதித்திட்டம் இருப்பதாகவும் யூசூஃப் ராஜா கீலானி கூறினாலும், அந்தக் குற்றச்சாட்ட…

    • 2 replies
    • 875 views
  6. கிரிக்கெட்டில் கூட அரசியலா, தீவிரவாதமா என பலரும் பாக்கில் நடந்த இலங்கை அணி மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து பேசுகிறார்கள். எந்த நாட்டிலும் அதன் அரசியல் சமூக வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள், முரண்பாடுகள் தீர்க்கப்படாமல் இருக்கும் போது அதன் தாக்கங்கள் விளையாட்டில் மட்டுமல்ல அன்றாடம் நடக்கும் எல்லா வாழ்க்கை இயக்கத்திலும் இருந்தே தீரும். இதை தூங்கிய ஒருவன் கனவில் விழித்து என்ன தீவிரவாதமா என்று அதிர்ச்சியடைவதில் பலனில்லை. இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் ஏழை நாடுகளின் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் அவர்களின் கவலையை போக்கும் நவீன மதமாக கிரிக்கெட் இருந்தது, இனி அதுவும் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை என்று சிலர் கவலைப்படுகிறார்கள். ஆனால் அன்றாட அரச…

  7. உலக நாடுகளுக்கெல்லாம் அச்சுறுத்தலாக திகழ்ந்து வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கிலும், சிரியாவிலும் முக்கிய நகரங்களை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இப்போது அந்த இயக்கத்தினர் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் வேரூன்றி வருகின்றனர். பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில் தங்கள் மண்ணில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இல்லை என்று கூறி வந்தாலும், கடந்த ஆகஸ்டு மாதம் அந்த இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அந்த நாடு ரகசிய நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இஸ்லாமாபாத் நகர தலைவர் அமீர் மன்சூர், துணைத்தலைவர் அப்துல்லா மன்சூரி, சிந்து மாகாண தலைவர் உமர் கதியோ உள்ளிட்ட 40 பேர் சமீபத்தில் அங்கு கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.…

  8. சென்னை: பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மே மாதம் சென்னை, மண்ணடியில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டார். பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் இன்று நீதிபதி மோனி இன்று தீர்ப்பளித்தார். உளவாளி ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 2 ஆயிரம் அபராதமும் விதித்ததோடு, அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். முன்னதாக, சென்னையில் சதிதிட்டத்துடன் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக மத்திய உளவு பிரிவு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, மாநில உளவு பிரிவு காவல்துறையினரும், கிய…

  9. பாக். ஏவுகணை சோதனை Wednesday, 13 February, 2008 04:14 PM . இஸ்லாமாபாத், பிப். 13: பாகிஸ்தான் குறுகிய தூர இலக்கை தாக்கக் கூடிய கஜ்நவீ ஏவுகணையை இன்று சோதனை செய்தது. 290 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை இந்த ஏவுகணை தாக்கக் கூடியது. . அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் இந்த ஏவுகணையை பெயர் குறிப்பிடப்படாத இடம் ஒன்றில் சோதனை செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அண்மை காலத்தில் பாகிஸ்தான் இத்தகைய பரிசோதனையில் ஈடுபடுவது இது 3வது முறையாகும். வட இந்திய நகரங்களை தாக்கும் ஆற்றல் கொண்டது இந்த ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.maalaisudar.com

  10. . பாக். கடற்படைத் தளத்தில் பயங்கர தாக்குதல் - 10 பேர் பலி-சண்டை நீடிக்கிறது கராச்சி: கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளத்தில் புகுந்துள்ள தலிபான் தீவிரவாதிகள் பெரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். 2 விமானங்களை அவர்கள் குண்டு வைத்துத் தகர்த்து விட்டனர். 12 மணி நேரமாக நடந்து வரும் சண்டையில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். கராச்சியில் பாகிஸ்தான் கடற்படையின் பிஎன்எஸ் மேஹ்ரான் என்ற கடற்படைத் தளம் உள்ளது. இங்கு நேற்று இரவு பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் 12 முதல் 15 பேர் வரை புகுந்தனர். அருகில் உள்ள விமானப்படை அருங்காட்சியகம் வழியாக இவர்கள் கடற்படைத் தளத்துக்குள் புகுந்து விட்டனர். உள்ளே நுழைந்த அவர்கள் அங்கிருந்த 2 விமானங்களை அவர்க…

  11. மீரட்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் 67 பேரை மீரட் தனியார் பல்கலைக்கழகம் சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில், அவர்கள் மீது பிரிவினை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், மீரட்டில் உள்ள ஒரு (தனியார்) சுவாமி விவேகனந்தா சுப்ராதி பல்கலைக்கழகத்தில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் 67 பேர் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினர். பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து காஷ்மீர் மாணவர்கள், விடுதியிலும் வளாகத்திலும் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடை…

    • 2 replies
    • 577 views
  12. பாக். குண்டு வெடிப்பில் 16 பேர் பலி; 80 பேர் காயம் வீரகேசரி இணையம் 12/5/2008 9:04:51 PM - பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் இன்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 16 பேர் பலியாகியுள்ளதுடன் 80 பேர் காயமடைந்துள்ளனர். பலியான மற்றும் காயமடைந்தோரில் பெண்களும் குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. பெஷாவர் நகரில் உள்ள ஷீற் பள்ளி வாசலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் பொருத்தப்பட்ட சுமார் 25 கிலோ கிராம் நிறைகொண்ட குண்டே வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  13. பாக். தாக்குதல்- மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க சோனியா, ராகுல் வலியுறுத்தல். டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் அருகே எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 இந்திய வீரர்கள் பலியாகினர். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற அப்பட்டமான துரோகத்திற்கு இந்திய தேசம் ஒரு போதும் அடி பணியாது. இது தொட…

  14. டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் நாடாளுமன்றத்தில் கடும் அமளியை ஏற்படுத்தியது. அமளிக்கிடையே லோக்சபாவில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி, எல்லையில் பாகிஸ்தானின் எத்தகைய ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ள ராணுவம் முழு அளவில் தயாராக இருக்கிறது என்றார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆனால் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பது, புதிய மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்று போன்ற முழக்கங்களால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இன்று காலையும் நாடாளுமன்ற இரு சபைகளும் கூடின. அப்போது மாநில பிரிவினை முழக்கங்களுடன் எல்லையில் 5 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் தொடர்பாக அரசு விளக்கம் அளிக்கக் கோரியும் முழக…

    • 1 reply
    • 254 views
  15. Feedback Print பாக். தீவிரவாதிகளின்'ஜிகாத்'அழைப்பால் இந்தியா கவலை: நிருபமா ராவ் ) பாகிஸ்தானிலுள்ள சில தீவிரவாத சக்திகள் விடுத்துள்ள 'ஜிகாத்'(புனிதப்போர்)அழைப்பால் இந்தியா கவலை அடைந்துள்ளதாக இந்திய அயலுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார். லண்டன் வந்துள்ள நிருபமா ராவ், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். வருகிற 25 ஆம் தேதியன்று பாகிஸ்தானுடன் நடத்த உள்ள அயலுறவுத்துறைச் செயலர் மட்டத்திலான பேச்சுவார்த்தையின்போது இப்பிரச்னை எழுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார். webdunia.com

    • 2 replies
    • 869 views
  16. பாக். தேர்தல்: எதிர்க்கட்சிகள் வெற்றி . Tuesday, 19 February, 2008 10:08 AM . இஸ்லாமாபாத், பிப்.19: பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன. முஷாரப் ஆதரவு பெற்ற ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு இடையே பாகிஸ்தானில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. . வன்முறை அச்சத்தால் பலர் வாக்களிக்க வரவில்லை. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே இன்று காலை வெளியான அதிகாரபூர்வமான முடிவுகளின்படி எதிர்க்கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன. நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக்என் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரண்டும் அதிக இடங்களை வெல்லும் நில…

    • 2 replies
    • 1.1k views
  17. பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளிக்குள் நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெறித்தனமான கொடூரத் தாக்குதலில் 80 பள்ளி குழந்தைகள் உட்பட 104 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான பள்ளி குழந்தைகள் பிணைக் கைதிகளாக தலிபான் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளிக் கூடத்துக்குள் இன்று 7 தலிபான்கள் தீவிரவாதிகள் திடீரென உள்ளே நுழைந்தனர். பாகிஸ்தான் ராணுவ சீருடையுடன் உள்ளே நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் முதலில் பள்ளி வாகனத்துக்கு தீ வைத்தனர். அப்போது பள்ளிக்கூடத்தில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் கலையரங்கம் ஒன்றில் தலிபான…

  18. பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் தொடர்புடைய ஊழல் விவகாரத்தை விசாரித்துவந்த போலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இஸ்லாமாபாத்தில், அவர் தங்கியிருந்த அரச விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் போலிஸ் அதிகாரி கம்ரான் ஃபய்சலின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டில் நீர் மற்றும் சக்தி வளத்துறை அமைச்சராக இருந்தபோது தற்போதைய பிரதமர் அஷ்ரப் பெருமளவு இலஞ்சம் வாங்கியுள்ளதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் அவரைக் கைதுசெய்ய வேண்டுமென்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ஆனால் பிரதமர் அந்தக் குற்றச்சாட்டினை மறுக்கிறார். கம்ரான் உண்மையில் தற்கொலைதான் செய்து கொண்டுள்ளாரா என்பதை கண்டறிவதற்காக பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்று …

  19. பாகிஸ்தானில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டு அவர்களின் மத சுதந்திரம் பறிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ (Mike Pompeo) குற்றம் சாட்டி உள்ளார். 27 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச மத சுதந்திர கூட்டணி அமைப்பை (International Religious Freedom Alliance)வாஷிங்டனில் துவக்கி வைத்து பேசுகையில் அவர் இந்த குற்றச்சாட்டை முன் வைத்தார். பாகிஸ்தானைப் போன்று நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும், பர்மாவில் முஸ்லீம்களும், ஈராக்கில் யசீதிகளும் தீவிரவாதிகளாலும், வன்முறையாளர்களாலும் தாக்கப்படுவதாக அவர் கூறினார். பாகிஸ்தானில் இந்து வழிபாட்டுத் தலங்கள் அடித்து நொறுக்கப்படுவதுடன், இந்துப் பெண்கள் கட்டாய மத மாற்றத்திற்கு பின் திருமணம் செய்யப்படுவதாக அடிக…

    • 0 replies
    • 928 views
  20. அணு ஆயுதங்களை நெடுந்தூரம் தாங்கிச் சென்று தாக்கவல்ல ஏவுகணையை, பாகிஸ்தான் இன்று சோதனை செய்தது. இது, குறிப்பாக இந்தியாவிற்குள் உள்ள இலக்குகளை குறிவைத்துத் தாக்குதல் நடத்தக் கூடிய திறன் பொருந்தியதாகும். கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஷாகீன் - 2' அலல்து 'ஹத்ஃப் - VI' என்றழைக்கப்படும் அணு ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு சுமார் 2000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை சோதனை , முதன்முறையாக ராணுவப் போர் படையால் மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது. இதற்கு, முந்தைய சோதனைகள் யாவும் ராணுவ விஞ்ஞானிகள்…

    • 0 replies
    • 910 views
  21. ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள பலூசிஸ்தானில் உள்ள சிறுபான்மை இந்துக்கள், சிந்தி இனத்தவர் மற்றும் சீக்கியர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் அத்துமீறல்களைக் கண்டித்து,ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கட்டடம் அருகே பலூசிஸ்தான் இயக்கத்தவர் தர்ணா போராட்டம் நடத்தினர். சிந்திக்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற முழக்கத்தை அவர்கள் எழுப்பினர்.பலூசிஸ்தானில் சீனாவின் ஏகாதியபத்தியத்தையும் அவர்கள் கண்டனம் செய்து கோஷங்களை எழுப்பினர். பலூசிஸ்தானில் ஏராளமான கிராமங்கள் ராணுவ அதிகாரிகளால் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.ராணுவ நடவடிக்கையால் சுமார் 6 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். https://www.polimer…

    • 0 replies
    • 475 views
  22. பாக். ராணுவத்தின் ‘பொருத்தமான கைப்பாவை’ இம்ரான் கான்: முன்னாள் மனைவி ரேஹம் கான் பிரத்யேக பேட்டி இம்ரான் கான், முன்னாள் மனைவியும் பத்திரிகையாளருமான ரேஹம் கான். இம்ரான் கானை ஆட்சிக்குக் கொண்டு வரும் திட்டம் 2-3 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது என்று கூறும் இம்ரானின் முன்னாள் மனைவியும் பத்திரிகையாளருமான ரேஹம் கான், இம்ரானுக்கு பல சிக்கலான விஷயங்கள் புரியாது, ராணுவத்தின் சொல்படிதான் அவர் நடப்பார் என்று திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து: கேள்வி: இம்ரான் கான் கட்சியான பிடிஐ-யின் வெற்றி குறித்து என்ன நினைக்கிறீர்கள்? குறிப்பாக 5 தொகுதிகள…

  23. பாக். விமான விபத்தில் 100 பலி; 42 பேர் உயிர் தப்பினர் இஸ்லாமாபாத், புதன், 28 ஜூலை 2010( 13:50 IST ) பாகிஸ்தானில் 152 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 100 பேர் பலியாகினர்; 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். துருக்கியிலிருந்து கராச்சி வழியாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி, ஏர் புளூ என்ற விமான நிறுவனத்தின் ஏர் பஸ் விமானம் ஒன்று, 146 பயணிகள் மற்றும் 6 விமான சிப்பந்திகள் என மொத்தம் 152 பேருடன் சென்றுகொண்டிருந்தது. கராச்சி விமானநிலையத்தில் தரையிறங்கி மீண்டும் காலை 7.50 மணியளவில் புறப்பட்ட அந்த விமானம், இஸ்லாமாபாத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. மார்காலா என்ற மலைப்பகுதியில் பறந்தபோது மோசமான வானிலை மற்றும் புகை…

  24. பாக்., மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தாவூத்? கராச்சி: மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், ஆபத்தான நிலையில் கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிழலுலக தாதா: மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில், 257 பேர் கொல்லப்பட்டனர்; 1,000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம், சவுதி அரேபியாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் பாகிஸ்தான் அரசிடம் தஞ்சம் அடைந்தான். கராச்சி நகரில் ரகசியமாக வசித்து வருவதாக இந்தியா கூற…

  25. புதுடில்லி:""இந்திய குடிமக்களின் பாதுகாப்பை நாங்கள் பார்த்து கொள்கிறோம்; நீங்கள் உங்கள் நாட்டு மக்களை கவனித்து கொள்ளுங்கள். தேவையில்லாமல், எங்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம்,'' என, பாகிஸ்தான் உள்துறை அமைச்சருக்கு, மத்திய உள்துறை செயலர், ஆர்.கே.சிங் பதில் அளித்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கான், மும்பையில், தன் மனைவி, கவுரியுடன் வசிக்கிறார். "பொது இடங்களில், மது அருந்தி குழப்பம் ஏற்படுத்தினார்' என்றும், "புகை பிடிக்க தடை விதிக்கப்பட்ட இடங்களில், மீறி புகை பிடித்தார்' எனவும் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் இவர்.சில நாட்களுக்கு முன், பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் ஷாருக் கான், "நான் முஸ்லிம் என்பதால், என்னை இந்திய குடிமகனாக இந்திய அரசியல் கட்சி…

    • 3 replies
    • 488 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.