உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26874 topics in this forum
-
பாங்கொக் நகரில் விஷ புகை வெளியேற்றம் : மக்கள் அச்சத்தில் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் நகரில் வரலாறு காணத அளவுக்கு விஷ புகை வெளியேறுவதால் மக்களின் அன்றாட வாழ்கை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த விஷ புகை வெளியேற்றத்தால் 400 மேற்பட்ட பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பாடசாலை பிள்ளைகளுக்கு நோய் வராமல் பாதுகாப்பதற்காக குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விஷ புகை பரவியுள்ளதால் போக்குவரத்து நெரிசல், ஒழுங்கற்ற கட்டுமானம், பயிர்ச் செய்கை பாதிப்பு மற்றும் வளி மாசு அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.virakesari.lk/article/49056
-
- 0 replies
- 342 views
-
-
தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் இந்து (பிரமா) கோவிலுக்கு அருகில் நிகழ்ந்த பாரிய குண்டுவெடிப்பில் இதுவரை 12 பேர் உயிரிழந்து 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கோவிலுக்கு தினமும் பெளத்தர்களும் வழிபடச் செல்வது குறிப்பிடத்தக்கது. மேலும் இது கோடைகால விடுமுறை என்பதால்.. பல வெளிநாட்டவர்களும் பாங்கொக்கில் உல்லாசப் பயணம் செய்வது முறையே ஆகும். மேலதிக செய்திகள்.. http://www.bbc.co.uk/news/world-asia-33963280
-
- 1 reply
- 1.1k views
-
-
பாங்கொக்கில் தீ விபத்து; 1000 விலங்குகள் உயிரிழப்பு! தாய்லாந்தின் பாங்கொக் நகரில் உள்ள பிராணிகள் விற்கும் சந்தையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 1000 விலங்குகள் உயிரிழந்துள்ளன. இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் 100 கடைகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்த விலங்குகளில் நாய்கள், பூனைகள், பாம்புகள் உள்ளிட்டவை அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாகவே குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதில் மனிதர்கள் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1387212
-
- 0 replies
- 276 views
-
-
நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, பாரதிய ஜனதாவின் ஆட்சி மன்றக்குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லியில் பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், புதிய நிர்வாகிகள் பட்டியலை இன்று அறிவித்தார். அதன்படி, ராஜ்நாத்சிங் தலைமையில் 12 பேர் கொண்ட ஆட்சி மன்றக் குழு, 12 துணைத் தலைவர்கள், 10 பொதுச் செயலாளர்கள், 7 செய்தித் தொடர்பாளர்கள், 19 பேர் கொண்ட மத்திய தேர்தல் குழு, 5 பேர் அடங்கிய மத்திய ஒழுங்கு நடவடிக்கைக் குழு உள்பட 76 புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்சி மன்றக் குழுவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ம…
-
- 0 replies
- 476 views
-
-
பாஜக ஆட்சிக்கு வந்தால் 22,000 பேர் கொல்லப்படுவர்.. ராகுல் பேச்சால் புது சர்ச்சை. டெல்லி: பாஜக ஆட்சியைப் பிடித்தால் நாடு முழுவதும் 22,000 பேர் கொல்லப்படுவர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் விதிமுறையை மீறி ராகுல் பேசியிருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மே 12ம் தேதி ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சோலன் நகரில் ராகுல் காந்தி பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் பேசிய பேச்சுதான் தற்போது தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்குக் காரணமாகியுள்ளது. அவர் பேசுகையில், ஜப்பானைச் சேர்ந்தவர்கள் என்னிடம் கேட்கிறார்கள்.. நாங்கள் ஒரே ஒரு…
-
- 1 reply
- 450 views
-
-
பீகாரைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராஜ் கிஷோர் கேசரி இன்று ஒரு பள்ளி ஆசிரியையால் குத்தி கொல்லப்பட்டார். அந்த பெண் ஏற்கனவே கேசரி தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளக்கியதாக புகார் அளித்திருந்தார். பூர்னியாவில் ஒரு பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு அவர் கேசரி மீது போலீஸில் புகார் கொடுத்தார். அதில், தன்னை கேசரியும், அவரது அடியாட்களும் கடந்த மூன்று வருடமாக கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளக்கி வந்ததாக கூறியிருந்தார். இருப்பினும் இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை சிபாஹி தோலாவில் உள்ள எம்எல்ஏவின் வீட்டுக்குச் சென்றார் பூனம். அங்கு தொண்டர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் கேசரி. அவரிட…
-
- 1 reply
- 386 views
-
-
பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறது மதிமுக! தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணிக்கு அச்சாரம் போட்டது தமிழருவிமணியன். முதல் முதலில் கூட்டணியில் சேர்ந்தது ம.தி.மு.க., மற்ற கட்சிகளுக்கிடையே இழுபறி ஏற்பட்ட நிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூட்டணி பற்றி பகிரங்கமாக அறிவித்தார். தேர்தலில் இந்த கூட்டணி எதிர்பார்த்தபடி சோபிக்கவில்லை. பா.ஜனதாவும், பா.ம.க.வும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. எனவே, தேர்தலுக்கு பிறகு இந்த கூட்டணி நீடிக்குமா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. வருங்காலத்தில் இந்த கூட்டணி நீடிக்க வேண்டும் …
-
- 8 replies
- 824 views
-
-
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாக நடிகர் சாய்குமார் தெரிவித்துள்ளார். தமிழில் அந்தப்புரம் படம் மூலம் அறிமுகமானவர் சாய்குமார். வேட்டிய மடிச்சுக்கட்டு, திருவண்ணாமலை, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் பாரதீய ஜனதா கட்சியில் உள்ளார். இவர் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூரில் நிருபர்களிடம் கூறுகையில், "இன்றைக்கு அரசியல் என்பது வயதானவர்களும், பணக்காரர்களும் இருக்கும் இடமாகிவிட்டது. இந்த நிலை மாற வேண்டும். படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நான் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் சிக்மல்லா…
-
- 0 replies
- 327 views
-
-
ஹைதராபாத்: பாஜகவின் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை அக்கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று ஹைதராபாத்தில் தொடங்குகிறார். ஹைதராபாத் லால் பகதூர் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த பிரசாரக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு தனது முதல் பிரசார உரையை நிகழ்த்துகிறார். பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் அவரது இந்த முதல் பிரசாரக் கூட்டம் பெரும் கவனிப்புக்குரியதாக மாறியுள்ளது. மோடி தனது உரையில் காங்கிரஸுக்கு எதிராக என்னை மாதிரியான திட்டங்களை, பிரசாரத்தை, கோஷத்தை வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மோடியின் இந்தக் கூட்டத்தில் லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று பாஜக தரப…
-
- 0 replies
- 346 views
-
-
பாஜக முக்கியத் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் உத்தரப் பிரதேச மாநில மூத்த பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரிஜ்பால் திவோடியா, வியாழக்கிழமை இரவு டெல்லியை அடுத்த காஜியாபாத் அருகே மர்மநபர்களால் சரமாரி துப்பாக்கித் தாக்குதலுக்கு உள்ளானார். அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முராத் நகரில் இருந்து காஜியாபாத்துக்கு தனது காரில், பாதுகாவலர்கள் உள்ளிட்ட ஐந்து பேருடன் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு பக்கங்களிலும் இருந்து வந்த கார்களில் இருந்த மர்ம நபர்கள், அவரது காரை நோக்கி ஏராளமான சுற்றுக்கள் துப்பாக்கியால் சுட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த பிரிஜ்பால், அவரது பாதுகாவலர் ஆகியோர் முதலில் காஜியாபாத்தில் உள்ள…
-
- 0 replies
- 284 views
-
-
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்ய நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் களம் காண உள்ளது. இந்த கூட்டணியில் ஐக்கியம் ஆவாரா அல்லது தனி அணி காண்பாரா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிலைப்பாடு மிகவும் ரகசியமாக உள்ளது. இந்த நிலையில், வரும் தேர்தலில் பாஜக-விற்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்ய நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து நாம் தமிழர் கட்சி முன்னணி தலைவர்களிடம் பேசிய போது, ஈழத்தில் தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் இலங்கை ராணுவம் அழிப்புக…
-
- 6 replies
- 855 views
-
-
சென்னை: பாஜகஜெயலலிதாவிஜய்காந்த் மூவரும் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என 'துக்ளக்' சோ கூறினார். துக்ளக் இதழின் 37வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பாஜக தலைவர் அத்வானி, அவரது மகள் பிரதீபா, பாஜக துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினி காந்த், நடிகர் நாகேஷ், அதிமுக சார்பில் மைத்ரேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகிறது. ஆட்சிக்கு வரும் முன் பல வாக்குறுதிகளை அளித்தனர். அதை முழுமையாக செய்ய முடியாமல் பார்ட் பார்ட்டாக செய்கிறார்கள். 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்ன கருணாநிதி, இப்போது உள்ளங் கை அளவேனும் தருவேன் என்கிறார். இலவச திட்டங்களால் பிக…
-
- 1 reply
- 985 views
-
-
[size=2]பாஜகவினர்-நடிகை ரம்யா இடையே கடும் வாக்குவாதம்[/size] [size=2]முழு அடைப்பின்போது படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து நடிகை ரம்யாவுடன் பா.ஜனதா கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மைசூரில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.[/size] [size=2]நடிகர் திகந்த், நடிகை ரம்யா ஜோடியாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மைசூர் லலிதா மகால் பேலஸ் மைதானத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. படப்பிடிப்பு குழுவினர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படப்பிடிப்புக்கான பணிகளை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டனர்.[/size] [size=2]படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை ரம்யா காலை 9.30 மணி அளவில் படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு காரில் வந்து இறங்…
-
- 1 reply
- 655 views
-
-
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளார். மல்லேஸ்வரத்தில் மாநில பாஜக தலைவர் பிரகலாஜோஷி முன்னிலையில், ஏராளமான பாஜக தொண்டர்களின் கரகோஷங்கள் முழங்க, எடியூரப்பா பாஜகவில் இணைந்தார். http://www.dinamani.com/latest_news/2014/01/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/article1991299.ece
-
- 1 reply
- 330 views
-
-
ஜார்க்கண்டில் பாஜகவின் சிறுபான்மை பிரிவில் முக்கிய பொறுப்பில் உள்ள இஸ்லாமிய பெண் ஒருவர் அக்கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் 12க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த கொடுஞ்செயல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான அந்த பெண், தனது மகள் மற்றும் கணவர் ஆகியோருடன் தங்களது வீட்டில் இருந்த போது உள்ளே புகுந்த அந்த கும்பல் அவரது கணவரை கட்டிப்போட்டதுடன், மகளையும் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை 12க்கும் மேற்பட்ட நபர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பெண் தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறை உயர் அதிகாரியான அனுராக் குப்தா இது குறித்து கருத்து தெரிவிக்கைய…
-
- 0 replies
- 3k views
-
-
நரேந்திர மோடி பிரதமராகலாம் என்கிற சூழலில் அமெரிக்கா பாஜகவை வேவுபார்த்ததாக புகார் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அப்போதைய பிரதான எதிர்கட்சியான பாஜகவை அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு அமைப்பு வேவு பார்த்ததாக வெளியான செய்திகள் தொடர்பில் இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்து புகார் செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவால் ஏற்கமுடியாதவை என்று வர்ணித்திருக்கும் இந்திய அதிகாரிகள் இனிமேல் எதிர்காலத்தில் இப்படி நடக்காது என்று அமெரிக்கா உறுதியளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். அமெரிக்க அரசின் புலனாய்வுத்துறையால் வேவு பார்க்கப்பட்ட வெளிநாட்டு அரசியல் கட்சிகள் பட்டியலில் பாஜகவும் இருந்த…
-
- 0 replies
- 520 views
-
-
பாடகர் ஜார்ஜ் மைக்கேல் காலமானார்.! பிரிட்டீஷ் பாப் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் லண்டன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். ஜார்ஜ் மைக்கேலின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். பாடகர் ஜார்ஜ் மைக்கேல் தமது இசைக் குழு மூலமாக உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானார். ஜார்ஜ் மைக்கேலின் ஆல்பம்கள் கோடிக்கணக்கில் விற்பனை ஆகியுள்ளது. மறைந்த மைக்கேலுக்கு வயது 53. உலகம் முழுவதும் மக்கள் கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடி கொண்டிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. உடல்நலக் குறைவுக் காரணமான நீண்ட காலமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த மைக்கேல் நேற்று உயிரிழந்துள்ளார். http://www.virakesari.lk/article/14757
-
- 3 replies
- 710 views
-
-
பாடசாலை சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் அடிமைகளாக நடத்திய கடாபி By General 2012-09-25 09:34:09 லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் கடாபி பாடசாலை சிறுமிகளை கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வந்ததாக புதிய புத்தகம் ஒன்று தெரிவிக்கிறது. பிரான்ஸ் ஊடகவியலாளரான அன்னிக் கொகனால் ௭ழுதப்பட்ட கடந்த வாரம் வெளியான லெஸ் புரொயிஸ் டான்ஸ் வி ஹரெம் டி கடாபி ௭ன்ற நூலிலேயே இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. கேணல் கடாபியின் அந்தப்புரத்தில் பாலியல் அடிமைகளாக செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்ட சிறுமிகளிடமிருந்து…
-
- 0 replies
- 732 views
-
-
[size=3] அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தின் தலைநகரான மயாமியில் பாடசாலை நோக்கிப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த மாணவியொருவர் சுடப்பட்டார். வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட போதும் அங்கு மரணமானர்.[/size][size=3] பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அந்தப் பேருந்தினுள் இருந்த பிரிதொரு மாணவனே இந்த மாணவியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். பொலிசார் அந்த மாணவனைக் கைது செய்து விசாரணைக்காகத் தடுத்து வைத்துள்ளனர்.[/size][size=3] இச்சம்பவம் இடம்பெற்ற போது அந்தப் பேருந்தில் 8 மாணக்கர்கள் இருந்ததாகவும், அதில் இறந்த மாணவியினுடைய 7 வயது நிரம்பிய சகோதரனும் இருந்ததாக தெரிவித்துள்ள செய்திகள் இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள…
-
- 0 replies
- 497 views
-
-
பாடசாலை மாணவர்கள் இருவருக்கு மரண தண்டனை..! கிம் ஜோங் அதிரடி – வெளியாகிய காரணம் வடகொரியாவில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மாணவர்கள் இருவரும் தென் கொரியா மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி நாடகங்களை கண்டுகளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வடகொரியாவில் நாடகங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாணவர்கள் இருவரும் கடந்த ஒக்டோபர் மாதம் பாடசாலையில் வைத்து நாடகங்களை பார்த்துள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள் முன்னிலையில் அந்த இரு மாணவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த ஒக்டோபர் மாதத்திலேயே இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணையும் முடித்து மரண தண்டனையும் நிறைவ…
-
- 3 replies
- 289 views
-
-
பாடசாலை விடுதியில் தீ பரவல் -19 மாணவர்கள் உயிரிழப்பு தென் அமெரிக்கா Guyana பகுதியில் பாடசாலை விடுதியொன்றில் இடம்பெற்ற தீ பரவலில் சிக்குண்டு உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 25 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் இந்த தீ பரவலுக்கான காரணங்கள் இது வரையில் கண்டறியப்படவில்லை என Guyana பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பழங்குடியினர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 20 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் இந்த தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை Guyana பொலிஸார் முன்;னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. htt…
-
- 0 replies
- 250 views
-
-
பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதிக்க யுனெஸ்கோ அழைப்பு விடுத்துள்ளது. கல்வியில் தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி மற்றும் அறிவியல் பிரச்சினைகளைக் கையாளும் குழுவான யுனெஸ்கோவின் 2023 உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கையில் இந்த விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும், கல்வியின் தரத்தை மேம்படுத்த ஓன்லைன் கல்வியை அதிகம் நம்பக்கூடாது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறியுள்ளது. அறிக்கையின்படி, ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாடு கற்றலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் குழந்தைகளின் உணர்…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
பாடசாலையொன்றில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த 300 பேர் மீட்பு- நைஜீரியாவில் சம்பவம் நைஜீரிய காவல்துறையினர் பாடசாலையொன்றில் மிகமோசமான விதத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் உட்பட 300 பேரை மீட்டுள்ளனர். நைஜீரியாவின் கடுனா நகரில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட பாடசாலையின் உரிமையாளர் தான் இஸ்லாமிய சீர்திருத்த பள்;ளியை நடத்துவதாக தெரிவித்துள்ள போதிலும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் உட்பட பலர் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து குறிப்பிட்ட பாடசாலைக்கு சென்ற காவல்துறையினர் 13 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் உட்பட பல சிறுவர்களையும் இளைஞர்களை…
-
- 0 replies
- 432 views
-
-
பாடலாசிரியர் பாப் டிலன் நோபல் பரிசை முறையாக ஏற்கவில்லை என குற்றச்சாட்டு இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஏற்பதாக முறையாக அறிவிக்காமல் இருப்பதால், அமெரிக்க பாடகர் பாப் டிலன், மரியாதையற்றவர், திமிர்பிடித்தவர் என்று ஸ்வீடன் அகாடமியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். நோபல் பரிசு பெறும் முதல் பாடலாசிரியராக பலரும் ஆச்சரியமடையும் வகையில் கடந்த வாரம் டிலன் அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள எடுத்த தொடர் முயற்சிகளுக்கு பின்னரும், அவரிடம் இருந்து எந்தவொரு மறுமொழியும் அகாடமிக்கு இன்னும் கிடைக்கவில்லை. இத்தகைய நிலைமை இதற்கு முன் ஏற்பட்டதில்லை என்று ஸ்வீடன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பெர் வாஸ்ட்பெர்க் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 357 views
-
-
இஸ்லாமாபாத்: விமானப் பணிப் பெண்ணை, அனைத்து பயணிகளும் கேட்கும் வகையில் ஸ்பீக்கரில் இந்தி பாட்டு பாடி அழைத்த பாகிஸ்தான் [^] பைலட்டுகளின் செயலால் பயணிகள் எரிச்சலடைந்தனர். இதையடுத்து பைலட்டுகள் பயணிகளிடம் மன்னிப்பு கோரினர். இஸ்லாமாபாத்தில் இருந்து நேற்றிரவு கராச்சி சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் ஏர்வேஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது. விமானப் பணிப் பெண்ணிடம் தங்களுக்கு உணவு கொண்டு வருமாறு ஓபன் மைக்கில் கோரிய பைலட்டுகள், திடீரென 'ஆ பி ஜா சனம்...' என்ற இந்திப் பாடலை பாட ஆரம்பித்தனர். இதைக் கேட்டு பல பயணிகள் எரிச்சலடைந்து திட்ட ஆரம்பித்தனர். இது குறித்து விமானிகளிடம் அந்த விமானப் பணிப் பெண் தகவல் சொன்னதையடுத்து அதே மைக்கில் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டு்க் க…
-
- 0 replies
- 454 views
-