உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26643 topics in this forum
-
பன்னாட்டு மருந்து கம்பெனிகள்: நாஜிகளின் வாரிசுகள்! பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், தமது மருந்துகளை சோதித்துப் பார்ப்பதற்கு நம் மக்களைச் சோதனை எலிகளாக்கும் விசயம் அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக அம்பலமாகி வந்தது. தற்போது உலகமயக் கொள்கையின் கீழ் இந்த அயோக்கியத்தனம் புதிய பரிமாணத்தை எட்டிவிட்டது. ம.பி. மாநில மருத்துவர்கள் குறித்துப் புலன் விசாரணை நடத்திய பொருளாதாரக் குற்றப்பிரிவு, இம்மாநிலத்தில் மட்டும் 2006-10 காலக்கட்டத்தில் 3307 பேர் மீது நெறிமுறைக்கு விரோதமாக மருந்துப் பரிசோதனை செய்து, பல கோடி ரூபாயைப் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து இம்மாநில மருத்துவர்கள் பலர் பெற்றுள்ளனர் என்று சென்ற ஆகஸ்டு மாதம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆந்திர மாநிலத்…
-
- 0 replies
- 794 views
-
-
தேர்தல் நெருங்கி வரும் நேரம் தொடராக இத்தகைய கொலைகள் நடப்பது ஏன் என்பது இன்னமும் யாராலும் விளங்க வைக்கப்படவில்லை. ஆனால் இவற்றை நிறுத்த எதாவது நல்ல முடிவுகள் தேர்தலில் எடுக்கப்பட்டால் நல்லதே. தெற்கில் மூன்றில் ஒரு அமெரிக்கரிடம் துவக்குகள் உண்டென்கிறார்கள். பலதவைகளில் இவர்கள் கனடா பயணிக்கும் போது தமது துவக்குகளையும் கையோடு எடுத்துச் செல்வதால் திருப்பியும் அனுப்பப்படுகிறார்கள். அதனால் திரும்பி வந்து கனடாவில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று அலுத்துக்கொள்கிறார்கள். Updated at 2:40 p.m. ET: "Multiple" people, including an undetermined number of police officers, were shot when a gunman opened fire Monday near the campus of Texas A&M University in College Station, p…
-
- 5 replies
- 706 views
-
-
ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச் சங்கு! பாதாளத்தை நோக்கி உருண்டோடிக் கொண்டிருக்கிறது ரூபாயின் மதிப்பு. வளர்ச்சி, வல்லரசு என்ற வெற்று ஜம்பங்களையும், முறுக்கேற்றிவிடப்பட்ட முட்டாள்தனங்களையும் நிலை தடுமாற வைத்திருக்கிறது இந்த வீழ்ச்சி. டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கடந்த 7 மாதங்களில் மட்டுமே 25% வீழ்ச்சியடைந்து, 56க்கும் 57க்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. கிரீஸின் நிலைகுலைவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நெருக்கடியும்தான் ரூபாயின் வீழ்ச்சிக்குக் காரணமென்றும், ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி ஜப்பானும் நெருக்கடியிலிருந்து மீண்டு முன்னேறினால்தான், இந்தியாவும் மீளமுடியும் என்றும் கூறியிருக்கிறார், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. இந்தியாவின் எதிர்…
-
- 3 replies
- 1k views
-
-
அமெரிக்க ஐஓவா வாக்கெடுப்பில் மிட் றொம்நி வெற்றி அமெரிக்க மசச்சூசெட்ஸ் மாநிலத்தின் ஆளுனரான மிட் றொம்நி அவர்கள் குடியரசுக் கட்சியின் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான போட்டியில், முதல் வாக்கெடுப்பு ஒன்றில் மிகவும் சொற்ப வாக்குகளில் வெற்றி பெற்றிருக்கிறார். ஒரு லட்சத்து இருபதினாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைக் கொண்ட ஐஓவா மாநிலத்தில் தனக்கு அடுத்ததாக வந்த செனட் சபையின் முன்னாள் உறுப்பினரான றிக் சண்டொரம்மை விட வெறுமனே 8 வாக்குகள் அதிகமாகப் பெற்று றொம்நி வெற்றிபெற்றார். இருவருக்கும் தலா 25 வீத ஆதரவு கிடைத்திருந்தது. சண்டோரம் அவர்கள் ஐஒவாவில் மாத்திரம் முழுமையாக தனது முயற்சியை குவித்திருந்த நிலையில் தான் தேசிய மட்டத்தில் பிரச்சாரத…
-
- 49 replies
- 4.7k views
-
-
லண்டனில் ஒலிம்பிக் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நேற்று கோலாகலமாக நடந்துவந்த நேரத்தில் கிழக்கு லண்டனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. லண்டனில் கடந்த 27ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நேற்று நிறைவடைந்தன. நிறைவு விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், விஐபிக்கள் கலந்துகொள்வதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், லண்டனின் கிழக்கு பகுதியில் டேகன்ஹாம் என்ற இடத்தில் உள்ள குப்பை மறுசுழற்சி மையத்தில் நேற்று திடீர் வெடி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது. குப்பைகள், ரசாயனங்கள் தீப்பிடித்ததால் பல அடி உயரத்துக்கு நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. புகை மண்டலமும் பரவியது. விபத்து ஏற்பட்ட இடத்தில் …
-
- 0 replies
- 421 views
-
-
ரியாத்: பெண்கள் மட்டும் பணியாற்றும் தனி நகரத்தை உருவாக்க செளதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இஸ்லாமிய ஷரியா சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இந்த நகரில் பெண்கள் மட்டுமே வசிப்பர், பணியாற்றுவர். இந்த நகரை கட்டும் பணி அடுத்த ஆண்டு துவங்கவுள்ளது. செளதி அரேபியாவில் ஆண்களைப் போலவே பெண்கள் மத்தியிலும் பணியாற்றும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால், செளதி பெண்கள் பணியாற்ற ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. இப்போது செளதி அரேபியர்களில் 15 சதவீதத்துக்கும் குறைவான பெண்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந் நிலையில், பெண்கள் மத்தியில் பணியாற்றும் ஆர்வத்துக்கு இனியும் தடைபோட விரும்பாத செளதி அரசு, அவர்களுக்கென தனி நகரத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. அதே போல பெண்கள் மட்டுமே ப…
-
- 0 replies
- 460 views
-
-
சோமாலியாவில் உள்ள அல்கொய்தா இயக்கத்தினர் சிறுவர்களைக் கடத்தி அவர்களுக்குத் தீவிரவாத பயிற்சியளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையை நிரூபிக்கும் வகையில் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன. அல்கொய்தா இயக்கத்தினர் சிறுவர்களைக் கடத்தி அவர்களுக்கு மூளைச் சலவை செய்து தீவிரவாத நடவடிக்கைகளில் குறிப்பாக மனித வெடிகுண்டுகளாக மாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகப் பல ஆண்டுகளாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சோமாலியாவின் மொகாடிசுவில் உள்ள பாடசாலையொன்றில் அண்மையில் தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது 10 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் பலர் மீட்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் பலரின் புகைப்படங…
-
- 0 replies
- 515 views
-
-
விக்கிரமபாகு கருணாரட்ன இலங்கையில் நடந்த இறுதிப் போரில் இனப்படுகொலை நிகழ்வதற்கு இந்திய அரசும் உடந்தையாக இருந்தது என அவர் அங்கு துணிச்சலாக உரையாற்றினார். இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒரு தேசிய இனம். வடக்குக் கிழக்கு பிரதேசம் தமிழர்களின் தாயக பூமி. ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை நிச்சயமாக உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதிப் போர் என்று சொல்லி நடத்தப்பட்டது ஒரு இனப்படுகொலை இதற்கு இந்திய அரசும் உடந்தை என்று விக்கிரமபாகு கருணாரட்ன பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார். டெசோ மாநாட்டிற்காக இலங்கையிலிருந்து சென்ற ஒரே ஒரு தலைவர் சமசமஜமாசக் கட்சியின் காலநிதி விக்கிரமபாகு கருணாரட்ண என்பது குறிப்பிடத்தக்கது. www.Globaltmilnews.net
-
- 1 reply
- 1.5k views
-
-
வவுனியா சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீதான மோசமான தாக்குதல்களின் விளைவாக கணேசன் நிமலரூபன் கொல்லப்பட்டார். சொந்த மண்ணில் அவரின் உயிரற்ற சடலத்தைப் புதைக்க நீதிமன்றத்தை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. தற்போது அத்தாக்குதலில் அகப்பட்ட இன்னுமொரு அரசியல் கைதியான மரியதாஸ் நவிஸ் டில்ருக்சன் என்பவரும் சாவடைந்துள்ளார். கடுந்தாக்குதலுக்கு உள்ளான டில்ருக்சன் "கோமா' நிலையில் இருந்தபோது அவரின் கைகளில் விலங்கிடப்பட்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன. விசாரணையின்றி நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து இதுவரை எந்த நடவடிக்கைகளையும் உலக ஜனநாயகவாதிகள் முன்னெடுக்கவில்லை. இந்நிலையில் நீடித்த சமாதானம் பற்றிய பாதுகாப்புச் செயலமர்வுகள…
-
- 0 replies
- 475 views
-
-
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும்கூட ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் அரச அடக்குமுறை தொடருகிறது. இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் மறுவாழ்வுக்காகவும் மனித உரிமைகளை காக்கவும் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் டெசோ மாநாட்டை முன்னிட்டு ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு ஆய்வரங்கத்தை இன்று காலை தொடங்கி வைத்து கருணாநிதி பேசியதாவது: இலங்கையில் போருக்கு முன்பும், போருக்கு பின்பும் நடைபெற்று வரும் நிகழ்வுகளை கண்டு உலக நாடுகள் மிகவும் கவலை அடைந்துள்ளன. ஈழத்தமிழர்களின் பிரச்சினையானது மனிதாபிமானம், மனித உரிமைகள், சுயமரியாதை தொடர்புடையது, பிரச்…
-
- 1 reply
- 479 views
-
-
[size=4]உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். இருப்பது ஓருயிர். போவது ஒருமுறை. அது தமிழுக்காக போகட்டுமென்று வாயால் வடை சுடுவார். ஊழலின் ஊற்றுக் கண்ணென அவரை உண்மைச் சுடுமானால், மீண்டுமோர் ஆரிய, திராவிடப் போர் மூளும். இது அடிமைச் சாதியை ஒடுக்கும் ஆதிக்க சாதியின் கொடும்சதி என்பார். இன விடுதலைக்கு ஈகம் செய்த சித்தாந்தப் புலியின் சிகிச்சைக்கு மறுத்து மனிதத்தைக் குழி தோண்டிப் புதைப்பார். எம் சமாதான முகத்தை பேரினவாதி சிதறடிக்கையில் கவியெழுதி முதலைக் கண்ணீர் விடுவார். அச் செயலை இனப்பற்றாளர் செய்தால் பயங்கரவாதமென்று பதறித் துடிப்பார். தம் வீட்டிற்குள் நிகழும்…
-
- 5 replies
- 1.1k views
-
-
உலகத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய மத்திய அரசாங்கத்தின் நோக்கமாகும் என மத்திய அமைச்சர் ஜீ.கே. வாசன் தெரிவித்துள்ளார். குறிப்பாக இலங்கை வாழ் தமிழர்களுக்கு சம உரிமையும், பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்பதே மத்திய அரசாங்கத்தின் கோரிக்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், டொசோ மாநாடு தொடர்பில் ஜீ.கே. வாசன் நேரடியாக எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த மத்திய அரசாங்கமும் காங்கிரஸ் கட்சியும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/81413/language/ta-IN/article.a…
-
- 2 replies
- 660 views
-
-
சிறீலங்காவில் தமிழ் பெண்கள் சிங்கள இராணுவம்..பொலிஸ் மற்றும் உதிரி ஆயுதக் குழுக்களால் திட்டமிடப்பட்ட வகையில் பாலியல் சித்திரவதைகளுக்கும் இனப்படுகொலைக்கும் ஆளாகின்றனர் என்று சென்னையில் நடந்த 19வது National Federation of Indian Women (NFIW) மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தின் சுயாதீன விசாரணைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அத்தோடு ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு அவர்கள் மத்தியில் தேர்தல் நடத்தி அவர்கள் விரும்பும் தீர்வை முன்வைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஈழத்தமிழர்களின் தாயக நிலப்பரப்பில் இராணுவ மயமாக்கலுக்கு முடிவுகட்ட இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்தை இந்தப் பெண்கள் மாநாடு வலியுறுத்திக் கேட்டுக…
-
- 1 reply
- 679 views
-
-
[size=4]சென்னையில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் 12.08.2012 அன்று டெசோ மாநாடு நடக்க உள்ளது. டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.[/size] [size=4]இதையடுத்து திமுக, மத்திய அரசோடு தொடர்பு கொண்டு இதுகுறித்து விவாதித்தது. இந்த நிலையில் டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு திடீர் அனுமதி வழங்கியுள்ளது.[/size] [size=4]மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,[/size] http://www.nakkheera...ws.aspx?N=80620
-
- 7 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ""ஒன்றுபட்ட இலங்கைக்குள்'' தீர்வுகாண வேண்டுமென இந்திய நாட்டின் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ""ஒன்றுபட்ட இலங்கை'' என்று ஒன்று எப்போதும் இருந்ததில்லை என்பதுதான் உண்மையான வரலாறு. ஆங்கிலேயர் (ஐரோப்பியர்) ஆட்சிக் காலத்துக்கு முன்பு இலங்கையில் மூன்று அரசுகள் இருந்தன. யாழ்குடா நாட்டை இறுதியாக ஆட்சி செய்த சங்கிலி மன்னன், கயவன் ஒருவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு போர்த்துகீசியரால் சிறைபிடிக்கப்பட்டு கடல் வழியாக இந்தியாவின் கோவா பகுதிக்குக் கொண்டுவந்து சிறை வைக்கப்பட்டு கொடும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். கண்டி கதிர்காமம் பகுதி…
-
- 0 replies
- 598 views
-
-
முன்னாள் அமெரிக்க விண்வெளி வீரரும், உலகிலேயே முதல் முறையாக நிலவில் காலடி வைத்தவருமான நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நான்கு இதய வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டதால் 82 வயதான அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போல்லா 11 விண்வெளி திட்டத்திற்கு தளபதியாக விளங்கும் நெயில் ஆம்ஸ்ட்ராங், 20 ஜூலை 1969-ஆம் ஆண்டு நிலவில் முதன் முறையாக கால் பதித்தார். "உண்மையான அமெரிக்க வீரரான அவர்", விரைவில் உடல்நலம் தேறி வரவேண்டும் என நாசா நிர்வாக இயக்குனர்களுள் ஒருவரான சார்ல்ஸ் போல்டன் அறிக்கை ஒன்றில் வழி தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை அவர் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டது. நீல…
-
- 1 reply
- 602 views
-
-
அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரில் நடந்த சாலை விபத்தில், ஆந்திராவைச் சேர்ந்த ஐந்து பேர் பலியாகினர். ஆந்திராவைச் சேர்ந்தவர் ஜஸ்வந்த் ரெட்டி, சுப்பையாகிரி, பனிந்திரகாடே, அனுராக் அந்தாடி, சீனிவாஸ் ரவி, வெங்கட். இவர்கள் அமெரிக்காவின் ஒக்லஹோமா நகர சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். இன்ற இந்த ஐந்து பேரும் காரில் வேகமாகச் சென்ற போது, எதிரே வந்த லாரி மோதியது. இதில் ஐந்து பேரும் பலியாகினர். இதில் வெங்கட் மட்டும் திருமணமானவர். இவர்கள் யாரும் கார் பெல்ட் அணியவில்லை என, போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களது உடலை இந்தியாவுக்கு அனுப்பும் நடவடிக்கையில், வட அமெரிக்க தெலுங்கர் சங்கம் ஈடுபட்டுள்ளது. http://tamil.yahoo.com/அம-ர-க்க-வ-ல்-173300013.html
-
- 3 replies
- 876 views
-
-
[size=4][/size] [size=4]தனிநபர் சுதந்திர விதிமுறையை மீறி, விளம்பர "குக்கீஸ்'களை இடம் பெறச் செய்த "கூகுள்' நிறுவனம், அபராதத் தொகையாக, 22.5 மில்லியன் டொலர் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக, அமெரிக்க தலைமை வர்த்தக கமிஷன் தெரிவித்துள்ளது.[/size] [size=4]கடந்த, 2011ம் ஆண்டு முதல், இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை, "ஆப்பிள் வெப் பிரவ்சர்' கணினிகளில் கூகுள் நிறுவனத்தின் "டபுள் கிளிக்' என்ற விளம்பர "ட்ராக்கிங் நெட்வொர்க்' வசதி, தாமாக இடம் பெற்றிருந்தது.[/size] [size=4]கணினி பயன்படுத்துவோரின் விருப்பத்துக்கு மாறாக, இந்த வசதியை இடம் பெறச் செய்ததன் மூலம், தனிநபர் சுதந்திர விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக, கூகுள் நிறுவனத்தின் மீது, புகார் சுமத்தப்பட்டது."இந்த விதிமீ…
-
- 0 replies
- 966 views
-
-
[size=4]தி,மு.க., தலைவர் கருணாநிதி ஏற்பாடு செய்துள்ள டெசோ மாநாட்டில் காங்கிரஸ்காரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என சென்னையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.[/size] [size=3] [size=4]வரும் 12 ம் தேதி இலங்கை தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு டெசோ மாநாடு நடக்கவிருக்கிறது. இம்மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தோழமை கட்சியான காங்கிரஸ் பங்கேற்குமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் இன்று முற்றுப்புள்ளி வைத்தார்.[/size][/size] [size=3] [size=4] [/size][/size] [size=3] [size=4]சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில்: ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க.,அங்கம் வகிக்கிறது. இருந்தாலும் அந்த கட…
-
- 5 replies
- 671 views
-
-
சிம்லா: இமாச்சலப்பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் பள்ளத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் மொத்தம் 52 பேர் உயிரிழந்துள்ளனர். 46 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பாவிலிருந்து துலேரா நோக்கி 100 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ரஜேரா என்ற இடத்தில் பள்ளத்தில் பேருந்து திடீரென கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 32 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு மாநில முதல்வர் பி.கே. துமல் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். http://tamil.onein…
-
- 0 replies
- 332 views
-
-
லிபியாவில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள இடைக்கால பாராளுமன்றமானது முன்னாள் ௭திரணி செயற்பாட்டாளரான மொஹமட் மகரீப்பை தனது தலைவராக தெரிவுசெய்துள்ளது. மேற்படி பாராளுமன்றம் அதிகாரத்தைக் கையேற்று ஒரு நாளில் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது. ௭திர்வரும் வருடம் அரசியலமைப்பு வரைபொன்று முன்னெடுக்கும் வரை நாட்டை செயற்படுத்துவதற்காக பிரதமரை நியமிக்கும் நடவடிக்கைக்கு மொஹமட் மகரீப் தலைமை தாங்கவுள்ளார். இடைக் கால தேசிய அதிகார மாற்று சபையானது 200 அங்கத்தவர்களைக் கொண்ட பாராளுமன்றத்துக்கு வியாழக்கிழமை அதிகாரத்தைக் கையளித்திருந்தது. கடந்த வருடம் அந் நாட்டு முன்னாள் தலைவர் மும்மர் கடாபி படுகொலை செய்யப்படுவதற்கு வழி வகுத்த புரட்சியின் போது ஸ்தாபிக்கப்பட்ட தேசிய அதிகாரமாற்று சபை தற்போது…
-
- 0 replies
- 438 views
-
-
[size=4]ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- [/size] [size=4] [size=1] [size=1] [size=4]சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு காங்கிரஸ் அரசு உடந்தையாக இருந்தது. அந்த அரசில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது. தமிழக மக்களையும் ஈழத் தமிழர்களையும் ஏமாற்றவே டெசோ மாநாடு நடக்கிறது. இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவே மாநாட்டு தேதி மாற்றப்பட்டது தமிழ் ஈழத்துக்காக தீர்மானம் நிறைவேற்றப் போவது இல்லை என்று சொன்னது ஏமாற்று வேலை. கருணாநிதி ஆட்சியில் இருந்த போது தமிழ் ஈழத்துக்கு ஆதரவான பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேச பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டது பழ நெடுமாறன் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஈழத…
-
- 1 reply
- 595 views
-
-
[size=2] [/size] [size=4]தி.மு.க. சென்னையில் நாளை நடத்த திட்டமிட்டுள்ள டெசோ மாநாடு பற்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர கட்-அவுட்டுகளை அகற்றும்படி போலீஸ் தலைமையகம், சென்னை ஏரியா காவல் நிலையங்களுக்கு சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, தி.மு.க.-வினரை நிலைகுலையச் செய்துள்ளது.[/size] [size=2] [size=4]சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் டெசோ மாநாடு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் இன்று அதிகாலை 2 மணிவரை நடைபெற்று, முடிவு எடுக்கப்பட்டிருந்தது. மாநாட்டுக்கு அனுமதி கிடையாது என்ற முடிவு போலீஸ் தரப்பில் எடுக்கப்பட்டது.[/size] [size=4]இந்த தகவல் வெளியானதையடுத்து, கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு உடனே கிளம்பி வருமாறு தி.மு.க. நி…
-
- 0 replies
- 665 views
-
-
சென்னை: "ஈழம்" என்பது கற்பனை சொல் அல்ல என்று திமுக தலைவர் கருணாவிதி கூறியிருப்பதால் அந்த வார்த்தையை பயன்படுத்த திமுக முடுவு செய்துவிட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக சென்னையில் அவர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது: டெசோ மாநாட்டிற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கில், தமிழக அரசு மாநாட்டிற்கு அனுமதி வழங்கிடக் கூடாது என்று தடுத்திருக்கிறார்கள். ஆனால் நீதிபதி அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டார். இந்த நிலையில் டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்குமா? நடக்கும். மத்திய அரசு "ஈழம்'' என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்களாமே? மத்திய அரசிடம் இருந்து அப்படி எந்த ஆணையும் அதிகாரபூர்வமாக உள்துறை அம…
-
- 1 reply
- 484 views
-
-
நித்யானந்தாவைப் போலவே, அவரது சீடர் ஒருவரும், பெண் சீடரை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. பெண் சீடரின் புகாரை அடுத்து, நித்தி சீடர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்தவர் டாக்டர் விக்ரம் டிராவிட், 37. இவர், அமெரிக்காவில் மருத்துவப் படிப்பு முடித்தவர். நித்யானந்தாவின் சீடராக டிராவிட் மாறி, தத்துவ போதானந்தா என்ற பெயருடன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ளார்.இவர் மீது, திருமணமான மற்றொரு பெண் சீடர், 32, மும்பை நகரின் கொலாபா பகுதி போலீஸ் நிலையத்தில் இரு நாட்களுக்கு முன் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், "நீ பார்வதி, நான் சிவன் என்று சொல்லி, என்னை மூளைச் சலவை செய்து, 2008, …
-
- 2 replies
- 890 views
-