Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பர்மிய தமிழரான நண்பர் ஒருவரின் ... என் நாடான பர்மா வில் , கோவில் ஒன்றில் திருவிழா , அங்கே நமது தமிழர்களை சந்திக்கும் பொது அவர்களுக்கு நமது தமிழ் தேசிய இன விடுதலையை பற்றி தெரியப்படுத்தவும் , உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்களாய் ஒன்று படவேண்டும் என்றும் ஈழ விடுதலைக்காக அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கும் துண்டு சீட்டு விநியோகம் செய்தபோ எடுத்த புகைப்படம் ............ என் நாடான பர்மா வில் , கோவில் ஒன்றில் திருவிழா , அங்கே நமது தமிழர்களை சந்திக்கும் பொது அவர்களுக்கு நமது தமிழ் தேசிய இன விடுதலையை பற்றி தெரியப்படுத்தவும் , உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்களாய் ஒன்று படவேண்டும் என்றும் ஈழ விடுதலைக்காக அவர்கள் என்ன செ…

  2. சோனியாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய பெண்ணுக்கு அடி போலீசார் சரமாரியாக தாக்கியதால் மக்கள் கோபம் கர்நாடக மாநிலம் தும்கூரில், காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், அவருக்கு எதிராக பெண் ஒருவர் கறுப்புக் கொடி காட்டியதால், பெரும் பரபரப்பு உருவானது. கறுப்புக் கொடி காட்டிய அந்தப் பெண்ணை போலீசார் சரமாரியாக தாக்கியதால், மக்கள் கோபம் அடைந்தனர். கர்நாடக மாநிலம் தும்கூரில், சித்த கங்கா மடாதிபதி சிவகுமார சுவாமிகளின் 105வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்று பேசினார். அப்போது, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் திடீரென எழுந்து, தங்கள் சமுதாயத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கூறியபடி,…

    • 0 replies
    • 468 views
  3. இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு நேற்று டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த சிறப்பு பட்டமளிப்பு விவாழில் கலந்து கொண்ட அவருக்கு, பல்கலைக்கழக வேந்தரும், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியுமான எம்.ஏ.ஜாகி டாக்டர் பட்டத்தை வழங்கினார். இதன் போது கருத்துரைத்த பான் கீ மூன், நான்கு தசாப்தகாலத்திற்கு முன்னர் இந்தியாவில் மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். அதற்கான ஆதாரமாக இன்று பட்டம் பெற்றிருக்கிறேன் என்றார். மேலும் தனது மகன் இங்கு தான் பிறந்ததாகவும், தனது மகளின் கணவரும் இந்தியாவை சேர்ந்தவர் எனவும் அவர் தெரிவித்தார். இந்தியா தனது மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான சவால்க…

  4. வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், மே மாதம் 5ம் தேதி இந்திய பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் ஜூன் 13ம் தேதி இந்திய - அமெரிக்க உறவு குறித்த பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. அதில் ஹிலாரி பங்கேற்க உள்ளார். இதற்கிடையில் மே 3-4ம் தேதி அமெரிக்கா - சீனா இடையே பொருளாதாரம் மற்றும் ராணுவம் தொடர்பான 4வது சுற்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில் பங்கேற்க ஹிலாரி திட்டமிட்டிருந்தார். சீனா வந்தாலும், இந்திய சுற்றுப் பயணம் குறித்து எதுவும் திட்டமிடப்படவில்லை. இந்நிலையில், திடீரென தனது பயண திட்டத்தை ஹிலாரி மாற்றி உள்ளார். சீனாவில் நடக்கும் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு மே 5ம் தேதி முதல் 8ம் தேதி இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.…

  5. இளம் வயது தாய்மார்களைக் கொண்ட நாடு இந்தியா! அதிர்ச்சி தரும் ஆய்வு உலகிலேயே இளம் வயது தாய்மார்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் 15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட வயதிலேயே பெண்கள் தாயாகி விடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் யுனெஸ்கோ நிறுவனம் பெண்கள் குறித்து நடாத்திய ஆய்விலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், 30 வீதமான பெண்களுக்கு டீன் ஏஜிலேயே திருமணம் செய்துவைக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. அதாவது 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு திருமணங்கள் நடப்பதாகவும், அதில் 22 வீதமான பெண்கள் 18 வயதை தாண்டுவதற்கு முன்பாக்வே தாயாகி விடுவதாகவும் தெரிய வந்துள்ளது. இதேப்போன்று, உலகம் முழுவதும் 47 விழுக்காடு பெண்கள் 20 முதல் 24 வ…

  6. உலகளவில் 60 சதவீதமான பாலியல் வன்முறைகள் 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளின் மீதே மேற்கொள்ளப்படுகின்றன எனவும் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மூன்று மில்லியன் பெண் பிள்ளைகள் பாலுறுப்பு சிதைக்கப்படும் அல்லது வெட்டி அகற்றப்படும் ஆபத்தில் உள்ளதாகவும் அண்மைக்கால ஐ.நா.அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. குடித்தொகை மற்றும் அபிவிருத்தி ஆணையகத்தின் 45ஆம் அமர்வில் 'குடித்தொகை நிகழ்ச்சி திட்டங்களை கண்காணித்தல் -கட்டிளமை பருவத்தினர் மற்றும் இளைஞர் மீதான விசேட கவனம்' என்னும் அறிக்கை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் சமர்பிக்கப்பட்டது. மில்லியன் கணக்கான பெண் பிள்ளைகள் தேவையற்ற கர்ப்பம், பாதுகாப்பு கருக்கலைப்பு, பால்வினை நோய்கள் என்பவற்றை தவிர்க்கும் முறைகளை அறியாதுள்ளனர் என இந்த அறிக்க…

    • 0 replies
    • 327 views
  7. 747 விமானத்தின் முதுகில் ஏறி நியூயோர்க் வந்திறங்கிய விண்வெளி விமானம். இந்த விண்வெளி விமானத்தை அடுத்த ஆடி மாதத்திலிருந்து நியூயோர்க் கப்பல் நூதனசாலையில் பார்வைக்காக வைக்கப்படும் New York (CNN) -- The space shuttle Enterprise, mounted atop a 747 jumbo jet, swooped across the New York City skyline on Friday before touching down at the city's John F. Kennedy International Airport, bringing an end to its final flight. It took off from Virginia's Dulles International Airport with a flight plan that included fly-bys of the Statue of Liberty and other Gotham landmarks. It is ultimately bound for its new home at the city's Intrepid Sea, Air and Space Museum. "This…

  8. உச்சநீதிமன்ற தீர்ப்பால் பதவிவிலக முடியாது. முடிந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாருங்கள் என எதிர்க்கட்சிகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி சவால் விடுத்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கிலானி குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. அதற்கு கட்டுப்பட்டு கிலானி உடனடியாக பதவி விலக வேண்டும் என நவாஸ் ஷெரிப்பின் பிஎம்எல்,என் மற்றும் இம்ரான் கானின் டெரிக் இ இன்ஷாப் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. http://www.seithy.co...&language=tamil

  9. போர் ஏற்பட்டால் அமெரிக்காவை தோற்கடிக்கும் அளவுக்கு எங்களிடம் சக்திவாய்ந்த ஆயுதங்கள் உள்ளன என்று வடகொரிய ராணுவ உயரதிகாரி மிரட்டல் விடுத்துள்ளார். வடகொரியா ஏவுகணை, அணுஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் வடகொரியா நடத்திய ராக்கெட் சோதனை தோல்வி அடைந்தது. இதற்கிடையில், வடகொரியாவை நிறுவிய கிம் சங்கின் 100,வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை தரக்குறைவாக தென் கொரியா விமர்சித்ததாக புகார் எழுந்தது. இதனால் ஆவேசம் அடைந்த வடகொரிய ராணுவ அதிகாரிகள், தென் கொரியா மீது குண்டு வீசி 3 நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில் அமெரிக்காவை தோற்கடிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்…

    • 6 replies
    • 1.2k views
  10. இந்தியாவின் நவீன செயற்கை கோளான ராடார் இமேஜிங் செய்மதி ரிசாட் - 1 இன்று காலை 5.47 மணியளவில் சிறீஹரிகோட்டா தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. சந்திராயன் - 1 மற்றும் ஜி.சாட் -12 ஆகிய செயற்கை கோள்களை விண்ணுக்கு ஏவிய பி.எஸ்.எல்.விசி -19 ராக்கெட் மூலமே 1858 கிலோ எடையுள்ள ரிசாட் 1 செய்மதியும் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. தற்போது ரிசாட் -1 பூமியின் சுற்றுவட்ட பாதையில் தன்னை வெற்றிகரமாக இணைத்து கொண்டுள்ளதாக விஞ்னானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 10 வருட கால கடும் உழைப்பில் முற்றுமுழுதாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரிசாட்-1 செய்மதியின் வடிவமைப்புக்காக இஸ்ரோ மொத்தம் ரூ.498 கோடி செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்செய்மதி ஏவும் திட்டத்தின் இயக்குனரான வளர்மத…

  11. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் மகன் சில டெலிகம் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சியினர் இன்று லோக்சபாவில் கடும் அமளியில் ஈடுபட்டன . இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். இந்த பேட்டியின் போது ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடந்தபோது மத்திய நிதி துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். இந்நேரத்தில் இந்த பதவியை பயன்படுத்தி இவரது மகன் கார்த்தி சிதம்பரம் சில ஆதாயங்களை பெற்று கொடுத்ததாகவும், சில குறிப்பிட்ட நிறுவனங்களில் கார்த்தி பணத்தை முதலீடு செய்திருப்பதாகவும், மேலும் அன்னிய முதலீட்டு தொகை கிளியரன்ஸ் கொடுக்க நிதி …

  12. போபர்ஸ்: குவாத்ராச்சிக்கு லஞ்சம் தரப்பட்டது ஏன்?; சோனியா விசாரணை நடத்தியிருக்க வேண்டும்- சித்ரா வியாழக்கிழமை, ஏப்ரல் 26, 2012, 9:45 [iST] டெல்லி: போபர்ஸ் நிறுவனம் குவாத்ராச்சிக்கு ஏன் ரூ. 64 கோடி லஞ்சம் தர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது என்ற விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். அது தொடர்பாக சோனியா காந்தியையும் விசாரித்திருக்க வேண்டும் என்று இந்த ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த முன்னாள் இந்து பத்திரிக்கையாளர் சித்ரா சுப்பிரமணியம் கூறியுள்ளார். போபர்ஸ் ஊழலை வெளியே கொண்டு வர சித்ரா சுப்பிரமணியத்துக்கு உதவியாக இருந்த ஸ்வீடன் நாட்டு காவல் துறையின் முன்னாள் தலைவர் ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம் 25 ஆண்டுகளுக்கு முன் முதன் முறையாக வாய் திறந்துள்ளார். அவர் அளித…

    • 1 reply
    • 382 views
  13. ஒசாமா குடும்பத்தினர் நாடுகடத்தப்பட்டனர் அல் கயீடா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடனின் விதவை மனைவியர் மூவரையும் அவர்களின் பிள்ளைகளையும் சவூதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் நாடு கடத்தியுள்ளது. கடந்த வருடம் மே 2 ஆம் திகதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் வைத்து அமெரிக்கப் படையினரின் முற்றுகையின்போது ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் இடம்பெற்று ஒருவருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில ஒசாமாவின் குடும்பத்தினரை பாகிஸ்தான் நாடு கடத்தியுள்ளது. ஓசாமாவின் மனைவிகள் மூவரையும் மூத்த புதல்விகள் இருவரையும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த குற்றச்சாட்டின் காரணமாக 45 நாள் தடுப்புக்காவலில் வைக்குமாறும் அதன்பின் நாடுகடத்துமாறு…

    • 1 reply
    • 419 views
  14. லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி Charles Taylor, குற்றவாளியென சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சாள்ஸ் ரெய்லர், போர்க் குற்றக் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியென சியேரா லியோனுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சியேரா லியோனில் உள்நாட்டுப் போரின்போது புரியப்பட்ட குற்றங்கள் தொடர்பாக, போர்க் குற்றங்களும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களுமாக 11 குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன. இரண்டாம் உலகப் போரின் பின்னர் இடம்பெற்ற நியரென்பேர்க் விசாரணைக்குப் பின்னர், தற்போதுதான் உலக நாடு ஒன்றின் முன்னாள் தலைவர் ஒருவர் போர்க் குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். மே மாதம் முப்பதாந்…

    • 2 replies
    • 551 views
  15. பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை தொடர்ந்து கிண்டல் செய்து வந்த நகைச்சுவை நடிகர் கடத்தப்பட்டார். பாகிஸ்தானை சேர்ந்த நகைச்சுவை நடிகர் நிசார் கான். இவர் நகைச்சுவை பாடல் எழுதுவதிலும் வல்லவர். தலிபான் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கிண்டல் செய்து வந்தார். தலிபான் தீவிரவாதிகள், திருடர்களை கண்டுபிடித்து எப்படி தண்டனை வழங்குகிறார் என்பது குறித்து சமீபத்தில் ஒரு பாடல் எழுதியிருந்தார். என் தலையை மொட்டை அடியுங்கள், என் முகத்தில் கறுப்பு மை பூசுங்கள், கழுதை மீது என்னை உட்கார வையுங்கள், என்னை கிண்டல் செய்யுங்கள் என்ற ரீதியில் அந்த பாடல் அமைந்துள்ளது. இந்நிலையில், பெஷாவர் புறநகரில் உள்ள மடானி என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அதில் பங்கே…

  16. "போபர்ஸ் ஊழலில் ராஜிவுக்கு தொடர்பில்லை': சுவீடன் முன்னாள் போலீஸ் அதிகாரி தகவல் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவுக்கு, போபர்ஸ் ஊழலில் எந்த சம்பந்தமும் இல்லை என, சுவீடன் நாட்டு முன்னாள் போலீஸ் அதிகாரி தெரிவித்துள் ளார். ராஜிவ் பிரதமராக இருந்த போது, சுவீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன. ராணுவத்துக்காக வாங்கப்பட்ட போபர்ஸ் பீரங்கி பேரத்தில், 61 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இந்த ஊழலில் ராஜிவ் சம்பந்தப்பட்டதாகக் கூறப்பட்டதால், 1989ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்., கட்சி தோல்வியடைந்தது. குட்ரோச்சியை காப்பாற்ற முயற்சி: இதற்கிடையே, போபர்ஸ் ஊழல் நடந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு, இது தொடர்பாக விசாரணை நடத்திய சுவீடன் …

    • 0 replies
    • 318 views
  17. தொடர் 17வது ஆண்டாக அம்நாசிற்றி இன்ரநசினனால் வெளியிடங்களில் இருந்து நியூயோர்க் வந்து சீனா இந்தோனேசியா போர்மா இலங்கை ஆகிய நாடுகளுக்கு எதிராக வருடாவருடம் நடத்தும் ஆர்ப்பாட்டம் 27ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது.முடியுமானவர்கள் முழு ஊர்வலத்திலும் முடியாதவர்கள் இலங்கை தூதராலயத்துக்கு முன்பாக(அனேகமாக 2.15-----2.45மணி)என்றாலும் கலந்து கொள்ள முயற்சிக்கவும் http://www.gotb.org/ http://www.gotb.org/...and-issues.html Sri Lanka: Justice for Ragihar Manoharan Ragihar Manoharan, a Sri Lankan Tamil student, and four fellow students had gathered for a chat near the seafront in the town of Trincomalee in northeastern Sri Lanka at about 7:00 P.M. on January …

  18. திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும். கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார். “சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்…

  19. தொலைபேசி சேவை மூலம் பெருமளவு வருமானத்தைப் பெற்றுவரும் ஈழத்ததமிழரின் நிறுவனமான 'லைகா மொபைல்' பாரிய வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற அதேநேரம் பிரித்தானிய கொன்சவேடிவ்கட்சிக்கு பெருமளவு நிதி அன்பளிப்புச் செய்திருக்கும் விடயத்தை பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் பிரபல நாளேடான கார்டியன் தனது இணையப் பதிப்பில் (www.guardian.co.uk) அம்பலப்படுத்தி இருக்கின்றது. கொன்சவேடிவ் கட்சிக்கான நிதி அன்பளிப்பு வரிசையில் மூன்றாவது இடத்திலுள்ள நிறுவனம் மூன்று வருடங்களாக வரி கட்டவில்லை Tories' third largest donor is company that paid no tax for three years என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரையில் ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 180 பவுண்ஸ் (£136,180) பிரித்தானிய கொன்சவேடிவ் கட்ச…

  20. இந்திய நகரங்களை குறிவைத்து தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை பாக்., சோதனை இந்தியாவில் உள்ள நகரங்களை குறிவைத்துதாக்கும் திறன் கொண்ட ஷாகின் 1ஏ ஏவுகணையைபாகிஸ்தான் சோதனை செய்துள்ளது. இந்தியா அக்னி 5 ஏவுகணையை சோதனை செய்த 6வது நாளில் பாகிஸ்தான் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை அணுஆயுதங்களை தாக்கி செல்லும் வல்லமை கொண்டது என பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.ஷாகின் 1ன் மேம்படுத்தப்பட்ட ஏவுகணையான ஷாகின் 1 ஏ-வை சோதனை செய்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. இந்த ஏவுகணை சுமார் 750 கி.மீ., தூரம் செல்லும் திறன் உடையதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த ஷாகின் 1 ஏவுகணை எவ்வளவு தூரம் செல்லும் என்பதை கூற பாகிஸ்தான் ராணுவம் மறுத்து விட்டது. இந்த ஏவுகணை இந்திய பெருங்கடலை வ…

    • 5 replies
    • 619 views
  21. இந்தியாவின் பொருளாதாரம் குறித்த எதிர்பார்ப்பு நிலையை ஸ்ரான்டட் அன்ட் புவர்ஸ் குறைத்தது ஸ்ரான்டட் அன்ட் புவர்ஸ் நிறுவனம் (Standard & Poor's), இந்தியாவின் பொருளாதாரம் குறித்த எதிர்பார்ப்பு நிலையைக் குறைத்து அறிவிப்பொன்றை விடுத்தது. இதுவரை BBB என்ற நிலையில் இருந்த பொருளாதாரம் குறித்த எதிர்பார்ப்பு, BBB negative என்ற நிலைக்குக் குறைக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, இந்திய அரசு, சந்தையில் கடனைப் பெறுவதற்கு செலுத்தவேண்டிய பணத்தின் அளவு அதிகரித்தது. இந்திய ரூபாவின் பெறுமதி குறைந்தது. பங்குகளினது பெறுமதியும் குறைந்தது. கடந்த நிதியாண்டில், வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4.6 சதவீதமாக மட்டுப்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்தபோதிலும், …

    • 2 replies
    • 408 views
  22. இதற்கான வரைவோலையை இத்தாலிய அதிகாரிகள் கேரள உயர் நீதிமன்றத்தின் லோக் அதாலத்திடம் நேற்று ஒப்படைத்தனர். முன்னதாக, இழப்பீடு அளிப்பதில் உடன்படிக்கை ஏற்பட்டதை அடுத்து, மீனவர் குடும்பத்தினர் தங்களது வழக்குகளைத் திரும்பப் பெற உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதித்தது. பின்னர் மாலையில் இழப்பீடுத் தொகைக்கான இரு வரைவோலைகளை அதிகாரிகள் உயர் நீதிமன்றத் தில் உள்ள லோக் அதாலத்திடம் ஒப்படைத்தனர்.அதன் பின்னர், மீனவர்களை சுட்ட இரு இத்தாலிய கடற்படை வீரர்களைத் தாங்கள் மன்னித்துவிட்டதாக இரு குடும்பத்தினரும் கடிதம் எழுதி அந்த நாட்டு அதிகாரிகளிடம் தந்தனர். பிப்ரவரி மாதம் கேரள மாநிலம் கொல்லம் அருகே ஒரு இத்தாலிய கப்பலில் காவலுக்கு இருந்த இரு கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் ச…

  23. சீனா – இந்தியா – ஜப்பானுக்கு இடையே போட்டி ராணுவ ரீதியாக சீனாவுக்கும் இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் இடையே ஒரு போட்டியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால், ஆசியாவின் பாதுகாப்பு சூழலில் நிச்சயமாக பாதிப்பு ஏற்படலாம்,” என, ராணுவ அமைச்சர் அந்தோணி கூறினார். டில்லியில் முப்படை கமாண்டர்களின் மாநாட்டில் பங்கேற்ற ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியதாவது:பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில், ராணுவ ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்கள், இந்தியாவின் பாதுகாப்பு சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இந்தப் பிராந்திய நிலவரங்களை, ராணுவத்தினர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். சீன அச்சுறுத்தல்: பொருளாதார ரீதியிலும், ராணுவ ரீதியிலும் தன் பலத்தை நிரூ…

    • 0 replies
    • 410 views
  24. கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவும், தென் கொரியாவும் எதிரி நாடுகளாக உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகொரியா நிறுவன தலைவர் கிம்2 சங் 100-வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தென்கொரியா அதிபர் லீ மியுஸ்பக், மறைந்த வடகொரியா தலைவர் கிம்2 சங் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் தென்கொரியா மீது தாக்குதல் நடத்துவோம் என வட கொரியா பகிரங்கமாக அறிவித்தது. அதற்கு பதில் அளித்த தென்காரியா அதிபர், வடகொரியா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ரூ.4250 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை சோதனை நடத்தப் போவதாக சமீபத்தில் அறிவித்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் வடகொரியா ராணுவம் நேற்று மீண்டும் மிரட்டல…

  25. ''பிரபாகரனுடனான உங்கள் உறவு எப்படி இருந்தது?'' ''உங்களுக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். 1990-ம் ஆண்டுகளில் ஈழப் போராட்டம் தீவிரமாக நடந்துவந்த நேரம். இந்திய ராணுவம் இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் துப்பாக்கிகளுடன் திரிந்துகொண்டு இருந்தனர். அந்தச் சூழலில் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நான் ஈழம் சென்றேன். நான், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் புலிகளின் முன்னணித் தளபதிகள் உட்பட பலரும் பிரபாகரனுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது பிரபாகரன் திடீரென, 'வாருங்கள், ஓர் இடத்துக்குப் போவோம்’ என்று என்னையும் காசி ஆனந்தனையும் அழைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்குள் சென்றார். அது ஓர் அடர்ந்த காடு. சிறிது தூரம் சென்ற பிறகு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.