Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரித்தானியாவில் தொலைபேசி ஒட்டுக் கேட்டல் சர்ச்சை தீவிரம் : 19 ஜூலை 2011 பிரித்தானியாவில் தொலைபேசி ஒட்டுக் கேட்டல் தொடர்பான சர்ச்சை உக்கிரமடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.நாளுக்கு நாள் தொலைபேசி ஒட்டுக் கேட்டல் சம்பவத்துடன் தொடர்புடைவர்கள் கைது செய்யப்படுவதுடன், ஊடக நிறுவனத்தின் பதவிகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தொலைபேசி ஒட்டுக் கேட்டல் சம்பவம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நியூஸ் கோர்பரசேன் சிரேஸ்ட அதிகாரிகளான ருபர்ட், ஜேம்ஸ் மோர்டொச் மற்றும் முன்னாள் நிறைவேற்று அதிகாரி ரெபெக்கா புருக்ஸிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. பிரித்தானிய ஊடக ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு குறித்த நபர்களுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்…

    • 1 reply
    • 556 views
  2. பிரித்தானியா நாட்டில் உள்ள தொழிற்சாலையில் சுவர் ஒன்று எதிர்பாராமல் சரிந்து விழுந்த விபத்தில் 5 தொழிலாளிகள் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிர்மிங்காம் நகருக்கு அருகில் உள்ள Nechells என்ற பகுதியில் இரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுப்பட்டு வந்தபோது விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக சற்று முன்னர் தகவல் வெளியானது.தகவல் பெற்று பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது, தொழிற்சாலைக்குள் உயரமான சுவர் ஒன்று சரிந்து விழுந்துள்ளது தெரியவந்தது. இடர்பாடுகளை விலக்கி பார்த்தபோது உள்ளே 6 தொழிலாளிகளின் உடல்கள் படுகாயத்துடன் இருந்துள்ளன. மீட்புக்குழுவினர் முதலுதவி சி…

  3. Published By: DIGITAL DESK 3 04 MAY, 2025 | 04:28 PM பிரித்தானியாவில் குறிப்பிட்ட இடமொன்றினை இலக்கு வைக்கும் சதித்திட்டம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நடத்திய இருவேறு தேடுதலில் நடவடிக்கையில் எட்டு ஆண்கள் சனிக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் ஈரானியர்கள் ஆவர். முதலில் கைது செய்யப்பட்ட 4 ஈரானிய நாட்டவர்களில் 29 வயதுடைய இருவர், 40 வயதுடைய ஒருவர் மற்றும் 46 வயதுடைய ஒருவர் அடங்குவர். ஐந்தாவது நபரின் நாடு மற்றும் வயது இன்னும் வெளியாகவில்லை. அதேவேளை, லண்டனில் மேலும் மூன்று ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு நடவடிக்கைகளும் ஒன்றோடொன்று இணைந்தவை அல்ல என பொலிஸார் தெரிவித்தனர். "நமது நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவர்கள் எடுத்த நடவடிக்கைக்…

  4. பிரித்தானியாவில் பரவிவரும் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ், இத்தாலிக்கும் பரவியது..! Ilango BharathyDecember 22, 2020 பிரித்தானியாவில் பரவிவரும் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ், இத்தாலிக்கும் பரவியது..!2020-12-22T07:44:52+05:30உலகம் FacebookTwitterMore கட்டுப்படுத்த முடியாத நிலையிலுள்ளது என பிரித்தானியா வர்ணித்துள்ள வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் தொற்று, இத்தாலிக்கும் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ் வார ஆரம்பத்தில் பிரித்தானியாவிலிருந்து ரோம் நகரிலுள்ள பியூமிசினோ(Fiumicino) விமான நிலையத்திற்கு திரும்பிய 2 பேரில் ஒரு நபருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக இத்தாலி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. …

  5. பிரித்தானியாவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்! இந்தக் காலத்தில் இப்படியுமா? Report us Vethu 9 hours ago பிரித்தானியாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தின் செயற்பாடு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையில் பிறந்து ஜேர்மனியில் வளர்ந்து பிரித்தானியாவில் வாழைப்பழம் செய்கையில் ஈடுபட்டு வரும் தமிழ் குடும்பம் ஒன்று பிரபல்யம் அடைந்துள்ளது. பிரித்தானியா கொவன்றி பிரதேசத்தில் Radford பகுதியில் வாழும் நபர் ஒருவர் பாரிய வாழைப்பழ செய்கையில் ஈடுபட்டுள்ளார். Radford சாலையில் வசிக்கும் சின்னையா செந்தில்செல்வன் தனது வீட்டின் பின்னாலுள்ள தோட்டத…

  6. பிரித்தானியாவில் வாழும் சில முஸ்லிம் சமுகத்தினர் தமது பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வகுப்புகளை ஒழுங்கு செய்து படிப்பிக்கிறார்கள்.சிலர் தமது பிள்ளைகள் கேலி வதைகளுக்கு உட்படுத்தப்படுவதை காரணமாக தெரிவித்தே பிள்ளைகளை வீட்டில் வைத்து படிப்பிக்கிறார்கள் வாழ்க்கைமுறைமை, மதம், கேலி வதை ஆகிய காரணங்களுக்காக பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டிலே பிள்ளைகளைபடிப்பிக்கும் முறைமை, கடந்த ஆறு ஆண்டுகளில் பிரித்தானியாவில் பெரிதும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளதாக தெரிவிப்பட்டாலும் தீவிரவாத எதிர்ப்பு வியூகத்தின் ஒரு பகுதியாக அரசு விசாரிப்புகளை மேற்கொள்வதால் இம்மாதிரி வீட்டிலேயே தமது குழந்தைகளை படிப்பிப்பதாக சிலர் பிபிசிக்க…

  7. பிரித்தானியாவில் புதிய கட்டுப்பாடுகளை மீறும் பயணிகளுக்கு10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை! பிரித்தானியாவிற்கு வருகைதரும் பயணிகள் புதிதாக விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி, பொய் கூறினால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன், 10 ஆயிரம் பவுண்ட்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியப் பொதுமக்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிகவும் வலுவான செயற்பாட்டை எதிர்பார்க்கிறார்கள் எனவும் குற்றத்தின் அளவுக்கு ஏற்ப அதிகபட்ச தண்டனை தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துச் செயலாளர் கிரான்ட் ஷப்ஸ் (Grant Shapps) தெரிவித்துள்ளார். பிரித்தானிய அரசாங்கம் COVID-19 தொற்று மற்றும் உருமாறி…

  8. பிரித்தானியாவில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 2020 ஆம் ஆண்டளவில் பிரித்தானியாவின் சனத்தொகையில் சுமார் அரைவாசிப் பேர், புற்றுநோய் தொடர்பான சிகிச்சைகளைப் பெறுவார்கள் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் 44 வீதமானவர்கள் புற்றுநோய்க்கான சிகிச்சைகளைப் பெற்றிருந்தனர். எனினும் முடியுமானமளவுக்கு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்படடுவதாக தெரிவிக்கப்படுகிறது. Half of UK population 'will get cancer in lifetime' The number of people in the UK who will get cancer during their lifetime will increase to nearly half the population by 2020, a report has forecast. Macmillan Cancer Support …

  9. பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை! written by admin January 16, 2026 இங்கிலாந்தின் லிவர்பூல் (Liverpool) நகரில், பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை மக்கள் நடமாட்டம் உள்ள கடையொன்றில் வைத்து இரக்கமற்ற முறையில் குத்திக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 47 வயதான நிமலராஜா மதியபரணம் என்பவரே இந்த அதிர்ச்சிகரமான குற்றத்தைச் செய்தவர். செஃப்டன் (Sefton) பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்த தனது மனைவி நிலானி நிமலராஜாவை (44), கடந்த ஜூன் 20 அன்று மதியபரணம் கத்தியால் தாக்கிப் படுகொலை செய்தார். நிலானி தனது மகள்களுடன் அந்தக் கடைக்கு மேல் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். 🔪" width="16" h…

  10. பிரித்தானியாவில் மர்ம கும்பலொன்றினால் இன்று மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில், Brentwood நகரத்தில் உள்ள Regency Court பகுதியில் மர்ம கும்பலொன்றினால் 3 பேர் கொடூரமாக தாக்கப்பட்டு ஆபத்தில் உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அவரச உதவிகளுடன் சென்ற பொலிஸார், பாதிக்கப்பட்ட்டவர்களை காப்பாற்ற முயற்சித்த போதிலும், அவர்களில் இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,மற்றுமொரு சிறுவர் சிகிச்…

  11. பிரித்தானியாவில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு! கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்றை பிரித்தானிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரித்தானியாவில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. B.1.525 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோன வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் தொற்றை ஒத்து அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ்-இல் இருவரும், இங்கிலாந்தில் 36 பேரும் புதிய வகை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக எடின்பரோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். டெ…

  12. பிரித்தானியாவில் ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை இனி வெளியாகாது! பிரித்தானியாவில் 86 ஆண்டுகளாக வெளியாகிய ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை, இனி வெளியாகாது என அதன் தலைமை ஆசிரியர் இவா மெக்கெவிக் (Eva Mackevic) தெரிவித்துள்ளார். நிதிநெருக்கடி காரணமாக ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) பதிப்பினை இத்துடன் முடித்துக் கொள்வதாக, இவா மெக்கெவிக் (Eva Mackevic) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது பதிவில், துரதிர்ஷ்டவசமாக நிதிசார்ந்த பிரச்னைகளை நிறுவனத்தால் தாங்க முடியவில்லை என்பதால் பதிப்பினை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. தனது சக ஊழியர்களுக்கும், பத்திரிகையின் எழுத்தாளர்களுக்கும், பல ஆண்டுகளாக ஒத்துழைத்த பிரதிநிதிகள…

  13. பிரித்தானியாவில் வாக்களிக்கும் வயதில் மாற்றம்! பிரித்தானியாவில் 2029 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்களிக்கும் வயதை 18லிருந்து 16 ஆகக் குறைக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த கட்சி ஜூலை 2024 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, வாக்களிக்கும் வயது குறைக்கப்படும் என உறுதியளித்தது. இந்நிலையில், வாக்களிப்பதற்கான வயது வரம்பை 16 ஆக குறைத்து நாடு முழுதும் அமுல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில் 16 வயது பூர்த்தியடைபவர்களின் பெயர் தானாகவே வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வசதியையும் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள…

  14. பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளே எனது முன்னுரிமைக்குரிய விடயம் – தெரேசா மே குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றிய உச்சி மாநாட்டின் மூலமாக ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பை நிராகரித்துள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஐரோப்பிய ஓன்றிய பேரவையின் உச்சி மாநாடு நிலைமையை மதிப்பிடுவதற்கான ஓரு வாய்ப்பே என குறிப்பிட்டுள்ளார். உச்சிமாநாட்டிற்காக பிரசல்ஸ் சென்றுள்ள அவர் அங்கு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த உச்சிமாநாடு பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான ஓரு வாய்ப்பு மாத்திரமே என அவர் தெரிவித்துள்ளார். இ…

  15. கொள்ளை மற்றும் பண மோசடி மூலம் பிரித்தானியாவில் சொத்துக்களை வாங்க வெளிநாட்டினர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என பிரதமர் கேமரூன் அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய பிரதமரான டேவிட் கேமரூன் மற்றும் அந்நாட்டை சேர்ந்த 31 தொழிலதிபர்கள் மலேசியா, இந்தோனேஷியா, வியட்னாம் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். சிங்கப்பூரில் அந்நாட்டு பிரதமருடன் நடக்கவிருக்கும் கூட்டத்தில் பிரதமர் கேமரூன் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் கொள்ளை மற்றும் பண மோசடிகளில் ஈடுபட்டு அதன் மூலம் பெறப்பட்ட ஊழல் பணத்தை கொண்டு பிரித்தானியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது. அந்நிய நிறுவனங்கள்…

    • 3 replies
    • 984 views
  16. பிரித்தானியாவில் வெள்ள அனர்த்த எச்சரிக்கை By General 2012-09-26 15:37:39 பிரித்தானியாவில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதனால் அங்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் வட கிழக்கு மற்றும் வட மேற்கு பிராந்தியங்களிலேயே இவ் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல பிராந்தியங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் வீடுகளும் பல வீதிகளும், புகையிரதப் பாதைகளும், வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. கேம்பிரிட்ஜ்ஷியரில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட வீதி விபத்தில் ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது. மற்றுமொரு இடத்தில் தாயொருவரும் மகன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் உயிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்…

  17. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=bQIeZ1pNFfI பிரித்தானியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை - கடற்கரையில் 30 அடி உயரம் வரை எழுந்த அலைகள்.. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101254/language/ta-IN/article.aspx

  18. பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid ! பிரித்தானியா முழுவதும் டபுள் கோவிட் (Double Covid) வேகமாக பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு வலியுறுத்தப்படுகிறது. இந்த டபுள் கோவிட் குறித்து வைத்தியர்கள் தெரிவித்ததாவது, இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்து, நோயாளிகள் எண்ணிக்கை தினசரி உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, முதியோர்கள், நீண்டநாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். இந்த வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள, உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தீவிர பாதிப்புகளை குறைக்க முடியும் என்று…

  19. பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானம்! பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க, புதிய அரசாங்கமான தொழிலாளர் அரசாங்கம் (Labour Party) தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் (Keir Starmer) புதிய குடியேற்றத் திட்டங்களின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ருவாண்டா நாடு கடத்தல் திட்டமானது முன்னதாக கன்சர்வேடிவ் கட்சி (Conservative Party) அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை கைவிடுவதே தற்போது புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) அரசாங்க…

  20. பிரித்தானியாவில், 70 சதவீத பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயம்! கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகள் காரணமாக பிரித்தானியாவில் 70 சதவீத பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்களிடையே பொருட்கள் வாங்கும் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் குறிப்பாக ஒன்லைனில் பொருட்கள் வாங்குவதால் பல்பொருள் அங்காடிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பல்பொருள் அங்காடிகளில் உள்ள அத்தியாவசியமற்ற கடைகள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் சுமார் 700 பல்பொருள் அங்காடிகள் உள்ளன. இவற்றில் 10 சதவீதம் முற்றிலுமாக மூடப்படும் சூழலில் உள்ளன. சில பல்பொருள் அங்காடிகள் பகுதியளவில் குடியிருப்புகளாகவும், அலுவலகங்களாகவும் மாற்…

  21. பிரித்தானியாவில், வாழ்க்கைச் செலவுகள்... அதிகரிப்பு: கடைகளில், விற்பனை குறைந்துள்ளது! அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவின் அழுத்தத்தின் கீழ் வீட்டு வரவு செலவுத் திட்டங்கள் வருவதால் கடைகளில் விற்பனை குறைந்துள்ளது என்று பிரித்தானிய சில்லறை வணிகக் கூட்டமைப்பு (பிஆர்சி) தெரிவித்துள்ளது. புதிய புள்ளிவிபரங்கள் மார்ச் மாதத்திற்கான விற்பனை வளர்ச்சி இந்த ஆண்டு இதுவரை அதன் மெதுவான வீதத்தில் உயர்ந்துள்ளது. பிரித்தானிய சில்லறை விற்பனை 12 மாதங்களுக்கு முந்தையதை விட 0.4 சதவீதம் குறைந்துள்ளது. மில்லியன் கணக்கானவர்கள் அதிக எரிசக்தி கட்டணங்கள் மற்றும் வரிகளை சமாளிக்க வேண்டியிருக்கும் நிலையில் இந்த தகவல் வந்துள்ளது. மக்களின் நிதி மீதான அழுத்தம் மற்றும் …

  22. பிரித்தானியாவில்... 2020ஆம் ஆண்டு நடுப்பகுதியில், எயார் டாக்ஸி: வெர்டிகல் எயிரோஸ்பேஸ் திட்டம்! பிரித்தானியாவில் 2020ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எயார் டாக்ஸிகள் வானை அலங்கரிக்கும் என வெர்டிகல் எயிரோஸ்பேஸ் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெர்டிகல் எயிரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீபன் ஃபிட்ஸ்பேட்ரிக் கூறுகையில், ‘2025ஆம் ஆண்டு இந்த டாக்ஸி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இதற்காக அமெரிக்காவின் பிளான்க் செக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். 193 கிமீ தூரம் வரை, சுமார் 4 பேரை ஏற்றிச் செல்லும் இந்த டாக்ஸி திட்டத்தில் உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. ஏவவான், ஹனிவெல், ரோல்ஸ்ராய்ஸ் மற்றும…

  23. பிரித்தானியாவில்... ஆயிரக்கணக்கான மக்கள், உணவை அணுக போராடுகிறார்கள்: ஆய்வில் தகவல்! பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொரு ஆறு உள்ளூர் அதிகார சபைகளில் ஒன்றில் பசியின் வீதம், தேசிய சராசரியை விட 150 சதவீதம் அதிகம் என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. ஷெஃபீல்ட் பல்கலைக்கழகம் மற்றும் உணவு அறக்கட்டளை மேற்கொண்ட இந்த ஆய்வில், உணவுப் பாதுகாப்பின்மையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாக விக்கோம்பே அடையாளங் காணப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம்ஷையரில் 14 சதவீத மக்கள் பசியுடன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 சதவீத மக்கள் உணவை அணுக முடியாமல் தவிக்கின்றனர். யார்க்ஷயரில் 13 சதவீத மக்கள் பசியுடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஐந்து பெரியவர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவ…

    • 4 replies
    • 533 views
  24. பிரித்தானியாவில்... எரிபொருள் விநியோக சிக்கல்களை எளிதாக்க உதவும் இராணுவம்! பிரித்தானியாவில் நான்காவது நாளாக தொடரும் நீண்ட வரிசைகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடுதலுக்குப் பிறகு, எரிபொருள் விநியோக சிக்கல்களை எளிதாக்க இராணுவம் தயாராக உள்ளது. பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால் 150 இராணுவ லொறி ஓட்டுனர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் 100,000க்கும் மேற்பட்ட லொறி ஓட்டுனர்கள் குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது சமீபத்திய மாதங்களில் உணவு விநியோகஸ்தர்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் உட்பட பல தொழில்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. சில இடங்களில் எரிபொருள் தீர்ந்து பல எரிபொருள் நிலையங்களில் வரிசைகளை…

  25. பிரித்தானியாவில்... வேலை காலியிடங்கள், சாதனை அளவை எட்டியுள்ளன! பிரித்தானியாவில் தொழிலாளர் சந்தை வலுவாக மீண்டு வருவதால், சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, வேலை காலியிடங்கள் சாதனை அளவை எட்டியுள்ளன. ஜூலை முதல் மூன்று மாதங்களில் காலியிடங்களின் எண்ணிக்கை 953,000ஐ எட்டியது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்திற்கான மூன்று மாதங்களில் வேலையின்மை வீதம் 4.7 சதவீதமாக குறைந்தது. அதே நேரத்தில் சராசரி ஊதியத்தின் ஆண்டு வளர்ச்சி 7.4 சதவீதம் ஆகும். தேசிய புள்ளியியல் அலுவலக துணைப் புள்ளியியலாளர் ஜொனாதன் அதோவ் கூறுகையில், ‘சராசரி ஊதிய உயர்வு நீண்ட காலமாக அந்த அளவுக்கு அதிகமாக இல்லை என்றாலும், கடந்த ஆண்டு மில்லியன் கணக்கான மக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.