உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி பிரச்சார கூட்டத்தில் ஷூ வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் பொது செயலர் ராகுல் காந்தி பேசி கொண்டு இருந்தார். அப்போது அவரை நோக்கி ஷூ வீசப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, இது போன்ற தாக்குதல்கள் மூலம் என்னை தடுத்து நிறுத்தி விடலாம் என்றும், நான் ஓடி விடுவேன் என்றும் சிலர் நினைக்கின்றனர். அவர்கள் எண்ணம் நிறைவேறாது. நான் எங்கும் ஓடி விட மாட்டேன் என்று தெரிவித்தார். ஷூ வீசியதாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நக்கீரன்.
-
- 6 replies
- 1.1k views
-
-
சென்னை: இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாகச் செயல்பட்ட இந்திய அரசு, இப்போது வீடுகள், பள்ளிக்கூடங்கள் கட்டித் தருகிறோம் என்று மாய்மால வேலை செய்கிறது என்றும். அரசியல் சட்டத் திருத்ததை இலங்கையிடம் வலியுறுத்தியதாகக் கூறி தமிழக மக்களையும், உலகத்தையும் ஏமாற்றும் வேலைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதகுலத்தின் மனசாட்சியை நடுங்கச் செய்யும், கோரமான தமிழ் இனப்படுகொலையை இலங்கையின் ராஜபக்சே அரசு செய்தது. லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2008ம் ஆண்டிலும், 2009 மே 18 வரையிலும், ஈழத்தமிழ் மக்கள், வயது முதிர்ந்தோர், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே, ச…
-
- 0 replies
- 413 views
-
-
இஸ்ரேல், ஈரானை தாக்கினால் உலகப்போர் மூளும். சர்கோசி இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏற்படும் போரை யாராலும் தடுக்க இயலாது என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சர்கோசியை பிரான்சின் உயரதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போது ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட நான்கு இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது சர்கோசி பேசுகையில், தமது வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தொடர்ந்தால் ஆப்கானிஸ்தானின் இராணுவத்துக்கு பிரான்ஸ் அளித்துவரும் உதவியும், பயிற்சியும் நிறுத்தப்படும். மேலும் பிரான்ஸ் இராணுவம் முன்கூட்டியே தாய்நாடு திரும்ப நேரிடும் என்று எச்சரித்தார். மேலும் தெரிவிக்கையில், ஈ…
-
- 3 replies
- 2.6k views
-
-
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவைப் போன்றவர்கள் காங்கிரஸுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அழைப்பு விடுத்துள்ளார். ஒரு காலத்தில் ஏகப்பட்ட சினிமாக்காரர்கள் நிறைந்திருந்த கட்சி காங்கிரஸ். இருப்பினும் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் எல்லாம் திராவிடக் கட்சிகள் பின்னால்தான் அதிகம் உலவுகின்றனர். சிலர் தனிக் கட்சி தொடங்கி தனி ஆவர்த்தனம் செய்கிறார்கள். ஆனால் காங்கிரஸுக்கு ஆதரவு தருவதில் பிரபல திரையுலகினர் யாரும் இப்போதெல்லாம் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே யாராவது பிரபலம் கொஞ்சம் அரசியல் சபலத்துடனோ, சலசலப்புடனோ இருப்பதாக தெரிந்தால் உடனே கட்சியில் சேர எங்க கிட்ட வாங்க என்று கார் வாடகை கம்பெனி ரேஞ்சுக்கு …
-
- 5 replies
- 797 views
-
-
சிதம்பரத்திற்கு எதிராக சுவாமி வழக்கு: தீர்ப்பு பெப்ரவரி 4 இல் இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சுப்ரமணியன் சுவாமியின் வாதம் முடிவடைந்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தீர்ப்பை ஒத்திவைத்தார். அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் பிரதான குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ஆ. ராசாவுடன், ப. சிதம்பரமும் சமபங்கு குற்றம் புரிந்திருக்கிறார் என்பது, நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் பூர்வாங்கமாகத் தெரிய வருவதாக சுவாமி தெரிவித்துள்ளார். நிதிய…
-
- 0 replies
- 668 views
-
-
அதிநவீன எப்-35 போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கவல்ல ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஆகியவற்றை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க நாட்டின் இராணுவ தலைமையகமாக பென்டகனில், துணைப் பாதுகாப்புச் செயலர் ராபர்ட் ஷேர் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவும், அமெரிக்காவும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, சமீபத்தில் பேச்சு நடத்தின. இதையடுத்து, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கவல்ல ஏவுகணைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கத் தேவையான பாதுகாப்பு வசதி, ஐந்தாம் தலைமுறை அதிநவீன எப்-35 ரக போர் விமானங்கள் ஆகியவற்றை அளிப்பதற்கு, அமெரிக்கா விரும்புகிறது. இந்தியாவுக்கான இராணுவத் தேவை…
-
- 1 reply
- 1.1k views
-
-
கிருஷ்ணாவின் பேச்சு தமிழர்களை ஏமாற்றும் திட்டமிட்ட நாடகம்! - சீமான் சனிக்கிழமை, ஜனவரி 21, 2012, 10:17 [iST] சென்னை: இலங்கை அரசமைப்பில் திருத்தம் செய்து தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளது, ஈழத் தமிழர்களை ஏமாற்றும், திசை திருப்பும் நாடகம் என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கை: தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போரை நிகழ்த்தி ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள பெளத்த இனவாத அரசின் தலைவர் ராஜபக்சவிடமே, தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க இ…
-
- 2 replies
- 556 views
-
-
இரான் விவகாரம்: மதில் மேல் பூனையாய் சீனா மேற்குலகம் இரான் மீதான பிடியை இறுக்கி வருகின்ற நிலையில் சீனா பெரும் தர்மசங்கடத்தில் சிக்கிக்கொண்டிருக்கின்றது. இரானின் முக்கிய வர்த்தக பங்காளியாகவும் அந்நாட்டு கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரிய வாடிக்கையாளனாகவும் இருந்துவருகின்ற சீனாவுக்கு இரானின் யுரேனிய செறிவூட்டலைத் தடுக்க நினைக்கும் மேற்குலகின் புதிய முயற்சி வெற்றியளித்தால் பெரும் நெருக்கடி நேரிடும். மேற்குலகின் இந்த முயற்சிக்கு சீனாவின் ஒத்துழைப்பு எப்படி இருக்கும் என்பது தெளிவில்லை, ஆனால், அண்மையில் பீஜிங் சென்றிருந்த அமெரிக்காவின் நிதித்துறைச் செயலர் திமோத்தி கீத்னர், இரான் விடயத்தில் தம்முடன் இசைந்து நடக்குமாறு சீனாவை கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு சீன அதிக…
-
- 4 replies
- 605 views
-
-
சுரங்க ஊழல் வழக்கு: எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு சிக்கல் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மீதான சுரங்க ஊழல் வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. லோக் அயுத்தா தொடர்ந்துள்ள இந்த வழக்கிற்கு தடை விதிக்கக் கோரிய எஸ்.எம்.கிருஷ்ணாவின் மனுவையும், உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அவர் மீதான வழக்கில் புலன் விசாரணை தொடரும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவு பின்னடைவா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, கருத்து தெரிவிக்க எஸ்.எம்.கிருஷ்ணா மறுத்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அவர், எனது வழக்கறிஞர்கள் அடுத்த நடவடிக்கை பற்றி உரிய முடிவு எடுப்பார்கள். நீதிமன்ற உத்தர…
-
- 3 replies
- 965 views
-
-
இந்தியாவின் பிரபலமான ‘இந்து‘ நாளேட்டின் 134 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக - அதன் உரிமையாளர் குடும்பத்துக்கு வெளியே உள்ள தொழில்சார் ஊடகவியலாளர் ஒருவர் ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார். கடந்த புதன்கிழமை இந்து நாளிதழின் பிரதம ஆசிரியர் மற்றும் இந்து, பிஸ்னஸ் லைன், புரொன்ட்லைன், ஸ்போட்ஸ் ஸ்ரார் ஆகியவற்றின் பதிப்பாளர் பொறுப்பில் இருந்த என்.ராம் பதவியில் இருந்து விலகிக் கொண்டதை அடுத்து புதிய ஆசிரியராக சித்தார்த் வரதராஜன் நேற்று பதவியேற்றுள்ளார். 1867ம் ஆண்டின் ஊடக மற்றும் நூல்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் ‘இந்து‘வில் பிரசுரமாகும் செய்திகளுக்கு இவர் பொறுப்பாக இருப்பார். 46 வயதான சித்தார்த் வரதராஜன் லண்டன் பொருளாதாரப் பாடசாலையிலும், கொலம்பியா …
-
- 2 replies
- 685 views
-
-
மியான்மரில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, அந்நாட்டின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூகி, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மியான்மர் அரசு, அரசியல் கைதிகளை விடுவித்தல், அரசியல் கட்சிகளை அங்கீகரித்தல், பழங்குடியினர் உடனான மோதலை நிறுத்தி வைத்தல் என சமீப காலமாக பல்வேறு ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்கலாம் என மியான்மர் அரசு கருதுகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் 48 இடங்களுக்கான இடைத்தேர்தல் ஏப்ரலில் நடக்க உள்ளது. அதில் போட்டியிடுவதற்கு ஆங் சான் சூகி அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. முதற்கட்டமாக, அவரின் தேசிய ஜனநாயக லீக் கட்சி, தேர்தல் கமிஷனில் பதிவு செ…
-
- 0 replies
- 343 views
-
-
ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் ஆபத்தான பல விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அமெரிக்காவும் இஸ்ரேலும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ரஸ்யா எச்சரித்துள்ளது.அமெரிக்கா, இஸ்ரேல், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற போதும், அதையும் மீறி ஈரான் அணுகுண்டு தயாரித்து வருகிறது. இதனால் ஈரானை அமெரிக்கா தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ஈரானின் நிரந்தர எதிரி நாடான இஸ்ரேலும் தாக்குதல் நடத்த சந்தர்ப்பத்தை பார்த்து காத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ரஸ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜிலாரோ, "அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானை தாக்கலாம் என்று நினைத்தால் இது பெரும் தவறாக அமைந்து விடும். அது பேரழிவுக்க…
-
- 6 replies
- 2.2k views
-
-
இந்திய பங்களாதேஷ் எல்லையில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தான் மேற்படி கொடூர சித்திரவதைக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. மாடு கடத்தல்காரர் ஒருவர் ஆமிக்கு இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் தான் மேற்படி கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 683 views
-
-
சிரியாவில் தொடரும் வன்முறைகளால் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, சிரிய அதிபர் பஷர் அல் அசாத் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சிரியாவில் அதிபர் அசாத்தை எதிர்த்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மக்கள் போராடி வருகின்றனர். அரபு லீகின் பிரதிநிதிகள், சிரியாவில் உள்ள நிலவரத்தை ஆய்வு செய்து வருகின்றனர். அரபு லீக் குழு வந்த பின்பும் கூட மக்கள் மீதான சிரிய ராணுவத் தாக்குதல்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், லெபனான் எல்லை அருகில் உள்ள ஜபாதானி என்ற இடத்தில், எதிர் தரப்பு வீரர்களுக்கும், சிரிய ராணுவத்திற்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இரு தரப்பினரும் அந்நகரின் தெருக்களில் இருந்து விலக சம்மதித்துள்ளனர். …
-
- 0 replies
- 364 views
-
-
தஞ்சாவூர்: தஞ்சாவூரில், மருதப்பா அறக்கட்டளை சார்பில் நடந்து வரும் தமிழர் கலை இலக்கியத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் (சசிகலா) பேசியதாவது: இந்த விழாவுக்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகன்ஜி வந்துள்ளார். இது போல், இந்தியா முழுவதும் உள்ள என் நண்பர்களை அழைத்தால் தாங்க மாட்டார்கள்; இனிமேல் அனைவரையும் அழைப்பேன். இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். ஒன்று பழ.நெடுமாறனுக்கு கட்டுப்படுவேன்; இரண்டாவது என் மனைவிக்கு கட்டுப்படுவேன். தன் மகள் திகார் சிறையில் இருந்து விடுபட, முல்லைப் பெரியாறு பிரச்னையில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க கருணாநிதி தயங்குகிறார். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, இலங்…
-
- 1 reply
- 796 views
-
-
இயற்கையைத் தவிர யாராலும் என்னை சாய்க்க முடியாது: கருணாநிதி ஜெயலலிதாவால் மட்டும் அல்ல இயற்கையைத் தவிர வேறு யாராலும் தன்னை சாய்க்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கேள்வி: கருணாநிதி என்னும் தீய சக்தியை வேரோடு சாய்த்த; யாராலும் வெல்லவே முடியாத கட்சி ஜெயலலிதாவின் அதிமுக என்று அவர் தனது அறிக்கையில் உங்கள் மீது நெருப்பைக் கொட்டியிருக்கிறாரே? பதில்: வெற்றி, தோல்வி மாறி, மாறி வரக் கூடியவை. எம்.ஜி.ஆர்., காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலிலும், ஜெயலலிதா அ.தி.மு.க.,வுக்கு தலைமையேற்ற பின், 1996 மற்றும் 2006லும் சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க. படுதோல்விகளைச் சந்தித்து…
-
- 15 replies
- 1.2k views
-
-
இணையத் திருட்டு நிறுத்தல் சட்டத்தை (SOPA) எதிர்த்து ஆங்கில விக்கிப்பீடியா இன்று மூடப்படுகிறது இணையத் திருட்டு நிறுத்தல் சட்டம் (Stop Online Piracy Act, SOPA), அவை வரைவு என்றும் அறியப்படும் சட்ட வரைவு அமெரிக்க கீழவையில் அக்டோபர் 26, 2011 அன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை அவையின் நீதித்துறைக் குழுவின் தலைவர் லாமர் எஸ். ஸ்மித் மற்றும் இரு கட்சிகளையும் சேர்ந்த 12 துவக்க முன்மொழிவாளர்களாலும் கொண்டு வரப்படுள்ளது. இது சட்டமானால், அமெரிக்க சட்டச் செயலுறுத்தும் முகவர்கள் மற்றும் பதிப்புரிமையாளர்களால் இணையத்தில் பதிப்புரிமை உடைய அறிவுசார் சொத்துரிமை மற்றும் போலி பொருட்களின் விற்பனையை எதிர்த்து போராடும் திறனை கூட்டும். தற்போது அவையின் நீதித்துறை குழுவில் உள்ள இந்த சட்டவரைவு இதன…
-
- 4 replies
- 836 views
-
-
வெந்நீர் ஊற்றிக் கொல்லப்பட்ட தமிழன் சபரிமலை சென்ற சென்னையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் மீது வென்னீரை ஊற்றி படுகாயப்படுத்தி அவரது உயிரைப் பறித்த மலையாளிகளின் கொடுஞ்செயலையும்,அச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாத கேரள காவல் துறையின் உதாசீனப் போக்கையும் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில், ‘’சபரிமலைக்குச் சென்ற சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த ஐயப்ப சாமி பக்தர் சாந்தவேலு, பம்பை நதி அருகே தேநீர் அருந்தச் சென்றபோது கடைக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது கடைக்காரர் அவர் மீது வென்னீர் ஊற்றித் தாக்கியதால் ஏற்பட்ட கடுமையான தீக்காயங்களால் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி பெரும் வேதனையளிக்கிறது. …
-
- 8 replies
- 1.7k views
-
-
வயது பிரச்சனையில் இந்திய ராணுவ தளபதி வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கும், ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணியும் ஆலோசனை நடத்தினார்கள். சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் `கேவியட்' மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. பிரச்சனையின் தீவிரம் கருதி, மலேசியா சென்றுள்ள பாதுகாப்பு செயலாளர் சசிகாந்த் சர்மா உடனே டெல்லிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், அட்டர்னி ஜெனரல் வாகன்வதியிடமும் மத்திய அரசு மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறது. nakheeran.in
-
- 0 replies
- 1k views
-
-
டெல்லி: ராகுல்காந்தி கேட்டுக் கொண்டால் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று அவரது சகோதரி பிரியங்கா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா பிரசாரம் செய்து வருகிறார். அமேதி, ரே பரேலி தொகுதிகளில் பிரியங்கா இன்று பிரசாரம் செய்கிறார். ஆனால், அவர் பொதுக்கூட்டம் எதிலும் பேசவில்லை. இந்த நிலையில் ராகுல் காந்தி விரும்பினால் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று அவர் கூறியுள்ளார். அவர் கூறுகையில், இப்போதைக்கு அமேதி மற்றும் ரே பரேலியில் தேர்தல் பிரசாரம் செய்யவிருக்கிறேன். தீவிர அரசியலில் ஈடுபடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. ராகுல் காந்தி விரும்பினால் எதையும் செய்வேன் என்றார். …
-
- 1 reply
- 557 views
-
-
ஆட்சேபகரமான தகவல்களை வலைத் தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என கூறுவது, இந்தியா போன்ற ஜனநாயக நாட்டுக்கு பொருந்தாது. இந்தியா என்பது சீனா போன்ற கட்டுப்பாடுகள் மிக்க ஜனநாயகமற்ற நாடு அல்ல என கூகுள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. சில சமூக வலைத் தளங்களில் ஆட்சேபகரமான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும், இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் புகார் எழுந்தது. 21 சமூக வலைத் தளங்கள் மீது இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. தடை விதிக்கப்படும்இந்த விவகாரம் டில்லி ஐகோர்ட்டுக்குச் சென்றது. இந்த வழக்கு தொடர்பான கடந்த விசாரணையின்போது ஐகோர்ட் நீதிபதி சுரேஷ் கய்த் கூறுகையில், "ஆட்சேபகரமான தகவல்களை வெளியிடுவதை கட்டுப்படுத்துவதற்…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஆண்களின் உயிர் என்ன விளையாட்டுப் பொம்மையா..?! அண்மையில் இத்தாலிக் கடலில் விபத்துக்குள்ளாகி மூழ்கிய கோஸ்ரா கொங்கோடியா என்ற பாரிய ஆடம்பரக் கப்பலில் நிகழ்ந்த.. மீட்புப் பணியின் போது.. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து உயிர் காப்புப் படகுகளில் ஏற்ற கேட்கப்பட்ட போதும்.. ஆண்களும் உயிர் தப்ப விரும்பும்.. மனிதர்கள் என்ற வகையில்.. அந்தக் கோரிக்கையை செவிமடுக்காது செயற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் கப்பல் கப்டன் பயணிகளை விட முதலில் கப்பலை விட்டு வெளியேறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. மனிதாபிமான அடிப்படையில்.. நெருக்கடி சூழலோ.. என்னவோ.. ஆண் பெண் என்ற வேறுபாடு அவசியமா..??! உண்மையில்.. இயலக் கூடிய ஆண்களும் பெண்கள…
-
- 10 replies
- 1.1k views
-
-
A former American Diplomat says, India must prevent further Chinese involvement in Sri Lankan affairs, as the Chinese have already made its mark on the Sri Lanka. Former U.S. diplomat William H. Avery said, in a book titled “China’s Nightmare, America’s Dream: India as the Next Global Power” that India must pressure Sri Lanka to kick out the Chinese and become a kind of vassal state. In the book, extracts of which were published in the Wall Street Journal last week, Avery describes how India just stood by and watched as China moved in to build a port at Hambantota. Avery, now a business consultant, served at the U.S. Consulate in Chennai in the 1990s, a time when In…
-
- 6 replies
- 784 views
-
-
தூணாக நின்ற தமிழன் துரும்பானது ஏன்? இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ பதினாறில் ஒரு பங்கு தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்குரிய அங்கீகாரம் என்பது இந்திய அரசியலில் அளிக்கப்படவில்லை. இந்திய அரசும் சரி, அகில இந்திய அரசியல் கட்சிகளும் சரி தமிழர்களின் தலையாய பிரச்னைகளைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. …
-
- 1 reply
- 548 views
-
-
நாளொன்றுக்கு ஜந்து மில்லியன் செய்திகளைச் CIA சேகரிக்கிறது! அமெரிக்க வெளிநாட்டு உளவமைப்பு சிஜஏ சர்வதேச மட்டத்தில் நாளொன்றுக்கு ஐந்து மில்லியன் செய்திகளைச் சேகரிக்கிறது. இந்தச் செய்திகளின் முக்கியத்துவம் பார்க்கப்படாமல் அனைத்தும் சேகரிக்கப்படுகின்றன. இந்தச் சேகரிப்பின் நோக்கம் அமெரிக்காவின் அண்மைக் கால கொள்கை முன்னெடுப்புக்கள் பற்றி உலக மக்களின் அபிப்பிராயங்களைத் திரட்டுவதாகும். குறிப்பாக மத்திய கிழக்கில் நடக்கும் ஆட்சி மாற்றங்கள், ஆட்சி மாற்றத்திற்கான போராட்டங்கள் பற்றி மக்கள் கருத்துக் கணிப்பை அமெரிக்கா இரகசியமாக மேற்கொள்கிறது. சிஜஏ மேற்கொள்ளும் இந்த வகை தகவல் சேகரிப்பு வித்தியாசமானது. முன்பு சிஜஏ புலனாய்வுத் தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. இப்போ…
-
- 1 reply
- 740 views
-