Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. (இத்தாலியில் பரபரப்பு) தேவாலயத்தில் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொணடிருந்த போது நபரொருவர் தனது சொந்த கண்களை தோண்டியெடுத்து அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. வியரேக்கியோ பிராந்தியத்திலுள்ள சாந்த அன்றியா தேவாலயத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து கண்களை வெளியே தோண்டியெடுத்த அல்டோ பியன்சினி என்ற மேற்படி நபர் உடனடியாக வேர்சிலியா நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுபற்றி அவர் விபரிக்கையில் ஒரு குரல் ஒன்று எனது கண்களை தோண்டி எடுக்கும் படி என்னிடம் கூறியது என்று தெரிவித்தார். இந்த நபருடைய கண்களை மீளவும் பொருத்தி அவருக்கு பார்வை ஏற்படுத்துவது சாத்தியமில்லாது உள்ளதாக தெரிவித்திருந்த மேற்படி மர…

  2. புற்று நோய்க்கு புதிய மருந்து; 3 பேருக்கு நோபல் பரிசு! புற்று நோய்க்கான புதிய மருந்து மற்றும் சிகிச்சை அளிக்க ஏதுவாக, உடம்பின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ரகசியங்களை கண்டறிந்து வெளியிட்ட மூன்று மருத்துவ விஞ்ஞானிகளுக்கு 2011 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த புரூஸ் பெட்லர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜூலேஸ் ஹாஃப்மேன் மற்றும் கனடாவை சேர்ந்த ரேல்ப் ஸ்டெய்ன் மேன் ஆகிய மூவரும் சேர்ந்து இந்த விருதை பகிர்ந்து கொள்கிறார்கள். இதில் புரூஸ் மற்றும் ஜூலேஸ் ஆகிய இருவரும் நோய் தாக்கியவுடன் நோய் எதிர்ப்பு மண்டலம் எவ்விதமாக எதிர்வினையாற்றுகிறது என்பதன் முதல்கட்ட ஆய்வை கண்டறிந்தனர். கனடா விஞ்ஞானியான ரால்ப் கண்டறிந்த உயிர…

    • 3 replies
    • 687 views
  3. சன் குழுமத்தின் சன் பிக்சர்ஸ் திரைப்படப் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பாளராக இருந்தவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. இவர் பல்வேறு மோசடி, மிரட்டல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு அனைத்து வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் பெற்று தற்போது வெளியே வந்துள்ளார். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தற்காலிமாக செம்பியன் என்பவரை சி.இ.ஓ.’வாக நியமித்தது. அவர் மூலம் மங்காத்தா படத்தை வெளியிட்டு வசூலை வாரிக் குவித்தது. தற்போது வெடி என்ற படத்தையும் வெளியிட உள்ளது. இதனைத் தொடர்ந்து சக்சேனா, சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனை தொடர்பு கொண்டு தன் மீதுள்ள வழக்குகளால் நிறுவனத்திற்கு எந்தவித கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது என்ற காரணத்தால் சன் குழுமத்தின் அனைத்து …

  4. பூமிக்கு அருகில், சுற்றிக் கொண்டிருக்கும் விண்கற்களில், 90 சதவீதத்தை அமெரிக்காவின் “நாசா’ கண்டறிந்துள்ளது. மேலும், இந்த விண்கற்களால், பூமிக்கு ஆபத்தில்லை என்றும், “நாசா’ தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் “நாசா’ ஆய்வு மையம், “வைஸ்’ என்ற விண்கலம், 2009ல் ஏவியது. பூமிக்கு வெகு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் விண்கற்கள், கேலக்சிகள், நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வதற்காக, இது அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, அந்த விண்கலம், மொத்தம், 981 விண்கற்கள் பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த 981 கற்களில், 911 கற்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டவை. இதற்கு முன்பு நடந்த ஆய்வுகளின்படி, 3,300 அடிக்கும் அதிகமான அகலம் கொண்ட, இந்த கற்கள் எந்நேரம் வேண்டுமானாலும், பூமியைத் தாக்க…

  5. சென்னைக்குள் ரவுண்ட் வரும் சி.பி.ஐ.! - சிதம்பரமும் தயாநிதி மாறனும்தான் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் துடிக்கிறார்கள் சாணக்கியபுரியாம் டெல்லியின் சதிராட்டத்தில் இப்போது சிதம்பரமும் தயாநிதி மாறனும்தான் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் துடிக்கிறார்கள். சிக்கலில் இருந்து சிதம்பரம் விடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதும், தயாநிதி மாறனை நோக்கியும் சி.பி.ஐ. பார்வை வலுக்கிறது என்பதும்தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாகத் தகிக்கும் நிலவரம்! 2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சைனி முன் நடந்து வந்தாலும்... அந்த வழக்கின் வெளி விவகாரங்கள் அதிகமாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகின்றன. சுப்ரீம் கோர்ட்தான்…

  6. 'தொழிலுக்கு வயதில்லை'- பிரிட்டனில் சட்டம் பிரிட்டனில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக ஒருவர் தொழிலொன்றிலிருந்து ஓய்வு பெற வேண்டிய (65 வயது) சட்ட ரீதியான வயது உச்ச வரம்பு முற்று முழுதாக நீக்கப்பட்டுவிட்டது. ஒருவர் 65 வயதை அடைந்தவுடன் வயதைக் காரணம் காட்டி அவரை தொழிலிருந்து நீக்குவதற்கு தொழில் வழங்குநருக்கு இருந்த அதிகாரத்தை இந்தப் புதிய சட்டம் இத்துடன் ஒழித்துவிட்டது. ஆனாலும், பிரிட்டனில் உள்ள தொழில் ஸ்தாபனங்களில் பத்தில் ஒரு நிறுவனம், ஊழியர்களை குறித்த ஒரு வயதில் ஓய்வு பெறச் செய்வதற்காக ஊக்குவிப்பு சலுகைகளை வழங்குவதாக நோர்ட்டன் ரோஸ் என்ற சட்ட நிறுவனமொன்று நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. …

  7. இந்தியத் தேசபிதா மகாத்மா காந்தியின் 143வது பிறந்ததினம் இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்தியத் தேசபிதா எனப் போற்றப்படும் மகாத்மா காந்தியின் 143வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகின்றது. பிறந்தநாளையொட்டி, டெல்லி ராஜ்கொட்டிலுள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் பிரதமர் மன்மோகன்சிங், கொங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினார்கள். டெல்லி முதலமைச்சர் ஷீலா டிக்ஷித், துணைக் குடியரசுத் தலைவர் ஹமீட் அன்சாரி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இதேவேளை மகாத்மா கர்நதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுனர் ரோசய்யா மற்றம் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.…

  8. அல்கைதா அமைப்பின் முக்கிய பயங்கரவாதியும், 'முதலாவது பயங்கரவாதி' என்று அழைகப்படுகின்றவருமான 'அல் அவ்லாக்கி' இன்று அமெரிக்க தாக்குதல் ஒன்றில் யேர்மனியில் கொல்லப்பட்டு உள்ளார் எனும் நல்ல செய்தி வெளியாகியிருக்கு உலகு முழுதும் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பெயரில் முழு உலகையும் இஸ்லாமிய மயப்படுத்த முனையும் பயங்கரவாதிகளுக்கு இன்னுமொரு பெரும் இழப்பு ----------------------- Anwar al Awlaki, the U.S.-born cleric dubbed “Terrorist Number One” was reportedly killed Friday by an air strike in the mountains of Yemen. A statement emailed from Yemen’s Washington embassy announced his death under with the subject line: “Breaking News: Awlaki Dead.” The 40-year-old cleric …

  9. உலக விமானப் பறப்பு வரலாற்றில் புதிய சாதனை எழுதப்படுகிறது.. கடந்த மூன்று ஆண்டு காலமாக பறப்பதற்கு தாமதம் செய்யப்பட்டுவந்த சூப்ப போயிங் விமானமான றீம்லைனர் 787 பறப்பெடுக்க தயாராகிவிட்டதாக ஏ.என்.ஏ விமான சேவை அறிவித்துள்ளது. இந்த விமானம் இதுவரை உலகில் நடைபெற்ற விமான சேவைகளில் புதியதோர் சரித்திரத்தை எழுதப்போவதாகவும் அது அறிவித்துள்ளது. அமெரிக்க வோஷிங்டனுக்கும் – ஜப்பான் டோக்கியோவுக்கும் இடையே இந்த விமானம் பறக்கவுள்ளது. குறைந்த எரிபொருளுடன் கூடிய வேகத்தில் பறப்பதற்கான முயற்சிகளை வெற்றிகரமாக முடிக்கவே மூன்று வருடங்கள் தாமதிக்கப்பட்டது. கனவு உலகத்தில் மிதப்பதைப் போல சுகமாக ஆகாயத்தில் பறந்து செல்லக்கூடிய அற்புத சேவையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கால் நீட்டுவத…

  10. முடக்கப்பட்டுள்ள டூனிசியாவின் 67 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை திருப்பிக் கொடுப்பது முரண்பாடான நிலையைத் தோற்றுவிக்கும் என்று சுவிஸ் நாட்டின் சொத்து மீள்எடுப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சுவிஸ் வெளியுறவு அமைச்சர் மிச்செலின் கால்மி-றே டூனிசியாவில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன்-டூனிசியா செயல் அணியின் கூட்டத்தில் பேசும்போது இதனைத் தெரிவித்ததுடன் ஐநாவின் பாதுகாப்புச்சபை இது தொடர்பாக தடை உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பென்-அலி அரசாங்கத்துடன் தொடர்புடைய தடைசெய்யப்பட்ட நிதியை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஜனவரி மாதம் பென் அலி அரசு தூக்கி எறியப்பட்ட பின்னர் முன்னாள் அதிபர் பென் அலி மற்றும் அவரின் குழுக்களுக்கும்…

  11. வென்றாலும் வீழ்ந்தாலும் அரசியல் தன்னைச் சுற்றியே சுழல வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் கருணாநிதி. அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளை மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தொடங்குவதற்கு முன்பே, ''இந்தத் தேர்தலில் தி.மு.க. தனித்துப் போட்டி!'' என்று கருணாநிதி அறிவித்தார். கடந்த 40 ஆண்டுகளாக சவாரி பாலிடிக்ஸ் செய்துவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு, இதை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. கருணாநிதியின் அறிவிப்புக்குக் கருத்து சொல்லாத தங்கபாலு, ''காங்கிரஸும் தனித்துப் போட்டி!'' என்று காமெடி பண்ணினார். ''இத... இதத்தான் எதிர்பார்த்தேன்' என்றார் இளங்கோவன். தீராத தலைவலியில் சிக்கி இருக்கும் சிதம்பரத்துக்கு இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட நேரம் இல்லை. ஜி.கே.வாசன் இப்போது கப்ப…

  12. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (ஜி.டி.பி.) 7.7 சதமாக வீழ்ச்சி. கடந்த 18 மாதங்களில் மிகக் குறைந்த அளவு இது. இந்தக் காலாண்டுக்கான தொழில் துறை வளர்ச்சி 3.3 சதமாகக் குறைவு. கடந்த 21 மாதங்களில் மிகக் குறைந்த அளவு இது. கடந்த 17-ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தின்படி, உணவுப் பணவீக்கம் 9.13 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது இன்றைய தகவல். பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொடப்போவது தவிர்க்க முடியாததாகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு. கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசமான சரிவு இது. - இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒரு நிதியமைச்சர், "நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சிக்கான நல்ல அறிகுறிகள் தோன்றுகின்றன," என்று சொன்னால் எப்படி இருக்கும்? அண்மையில்…

  13. ஸ்பானியாவில் எருமை மாட்டு போர் முடிவடைகிறது ஸ்பானியாவில் நடைபெறும் மாடுகளை நோக்கி சிவப்புச் சீலையை காண்பித்து கூரிய ஈட்டியால் குத்தி வதைத்துக் கொல்லும் முறை இன்றுடன் முடிவடைவதாக ஸ்பானிய செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று ஸ்பானியாவின் பார்சிலோனாவில் நடைபெற்ற இறுதி எருமைமாட்டு போர் விளையாட்டில் ஆறு எருமைகள் கொல்லப்பட்டன. எருமைக் கொலைக்கு பெயர்போன வடகிழக்கு ஸ்பானியாவின் கற்றலோவில் மேற்கொண்டு இந்தப் போட்டி நடாத்தப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 180.000 பேர் இந்த மிருகவதை செயலை நிறுத்துங்கள் என்று கேட்டு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து நிறுத்தப்படுகிறது. அதேவேளை மற்றய பகுதிகளில் இந்த எருமை அடக்கும் விளையாட்டு தொடர்ந்து நடைபெறும் என்ற…

  14. சீனாவுடன் படைஒப்பந்தங்களை செய்துகொள்ள இரகசியமாக முயற்சிமேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான உறவினை முறித்துக்கொள்ள பாக்கிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வாறு நடந்தால் பாக்கிஸ்தான் மீது அமெரிக்கா போர்தொடுத்தால் அதனை எதிர்கொள்ளும் விதமாக சீனாவின் உதவியினை நாடுவதை தவிர வேறு வளியில்லை என பன்னாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாக்கிஸ்தான் மீது இன்னொரு நாடுதாக்குதல் தொடுத்தால் அதனை முறியடிப்பதற்காக சீனா முன்வரவேண்டும்என்று ஒப்பந்தம் செய்துகொள்ள பாக்கிஸ்தான இரகசிய முயற்சிகளை மேற்கொண்டுவருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.c.../18610/57/.aspx

  15. அடுத்த மாதம் உலக ஜனத்தொகை 7.000.000.000 ஆகிறது உலக ஜனத்தொகை இந்த இலையுதிர் காலத்துடன் ஏழு பில்லியனாக உயர்ந்துவிடும் என்று ஐ.நா அறிவித்துள்ளது. இன்று உலகில் ஒவ்வொரு செக்கனுக்கும் சராசரி 2.6 பிள்ளைகள் பிறக்கின்றன. இந்த வேகம் இந்த மாத முடிவில் உலக ஜனத்தொகையை 7 பில்லியனாக உயர்த்துகிறது. தற்போது 1.3 பில்லியன் ஜனத்தொகை கொண்ட சீனாவை விரைவில் இந்தியா முந்திச் சென்று உலகில் ஜனத்தொகை கூடிய முதலாவது நாடு என்ற பட்டத்தை பெற்றுவிடும் என்றும் கணிப்புக்கள் கூறுகின்றன. வரும் 2050ம் ஆண்டு உலக மொத்த ஜனத்தொகை 9 பில்லியனாக உயர்ந்துவிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் இந்த நூற்றாண்டு புவி வெப்பமடைவதால் கடல் மட்டம் அரை முதல் ஒரு மீட்டர் உயரப்போகிறது. இதனால் …

  16. வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா ஆதிக்கம் வளைகுடாவில் வாழும் பணக்கார இந்தியார்கள் பத்து நபார்களை பிரபல அமீரக நாளிதழ் வெளியிட்டுள்ளது. வளைகுடாவின் பணக்கார இந்தியர்களின் பட்டியலை துபாயிலிருந்து வெளியாகும் பிரபல வர்த்தக ஏடு ஒன்று வெளியிட்டுள்ளது.இப்பட்டியலில் உள்ள பத்து நபர்களில் எட்டு நபர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில் செய்பவர்களாகவும் நான்கு நபர்கள் மலையாளிகளாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 1.மிக்கி ஜகதியானி – 3.2 பில்லியன் டாலர் மும்பையை பூர்விமாக கொண்ட மிக்கி ஸ்பால்ஷ், உள்ளிட்ட பல பேஷன் பிராண்டுகளை கொண்ட லேண்ட் மார்க் ரீடெய்ல் ஸ்டோர்களை நடத்தி வருகிறார். துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இவரின் சாம்ராஜ்யம் வளைகுடா, ஐரோப்பா, ஆசியா என பல இட…

  17. மத்திய அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களாக உள்ள பிரணாப் முகர்ஜிக்கும், ப.சிதம்பரத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல், ப.சிதம்பரத்தின் பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு நெருக்கடி முற்றியது. . ப.சிதம்பரத்தின் மதிப்பை குறைக்கும் அளவுக்கு நிகழ்ச்சிகள் அரங்கேறி உள்ளன. 2ஜி அலைக்கற்றை முறைகேட்டில் திடீர் திருப்பம் ஏற்பட்டு தற்போது ப.சிதம்பரத்தின் பெயர் பலமாக அடிபடுகிறது. நிதி அமைச்சராக இருந்தபோது அவர் நினைத்திருந்தால் 2ஜி அலைக்கற்றை முறைகேட்டை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அமைச்சகம் அனுப்பிய கடிதம் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய நிதி அமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய ரகசிய அறிக்கையை பிரதமர் அலுவலகம் ந…

    • 6 replies
    • 1.4k views
  18. பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்க நேரம் வந்துவிட்டது – ஒபாமா இஸ்ரேலிய அதிபர் சீமொன் பெரசை நேற்று செவ்வாய் வெள்ளை மாளிகையில் வைத்து பேச்சுக்களை நடாத்தினார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அதன் பின் பத்திரிகையாளருக்கு கருத்துரைத்த அவர் பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென அவரிடம் தெரிவித்தார். இஸ்ரேல் – பாலஸ்தீனம் ஆகிய இரு தரப்புக்களும் முதலில் கை கொடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரம் தீர்க்கப்பட வேண்டிய விவகாரம் என்ற நியாயமான புரிதலோடு கதைக்க ஆரம்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தற்போது வடக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்கில் ஆரம்பித்துள்ள ஜனநாயகத்திற்கான போராட்டங்கள் சிறந்ததோர் இலக்கை அடைய வேண்டுமானால் பாலஸ்தீன பிரச்சனை தீர்க்கப்பட வேண்டியதே முத…

    • 26 replies
    • 2.4k views
  19. ஸ்பெக்ட்ரம் ஊழல் : ஆ.ராசா, கனிமொழி மீது புதிய வழக்கு : ஆயுள் தண்டனை பிரிவில் பதிவு! [ Monday, 26-09-2011 16:27 ] 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் காரணமாக ரூ. 1.76 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை துறை அறிவித்தது. இதையடுத்து இந்த ஊழலில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதி மன்றத்தில் நீதிபதி சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த விசாரணை தகவல்களை சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. அவ்வப்போது தெரிவித்து வருகிற…

  20. ரகுராம், ஒரு ஊடகவியலாளரின் ஓய்வு ! அவுஸ்த்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிரபல தமிழ்ச் செய்தியாளர் ரகுராம் பற்றிப் பலரும் அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு செவ்வாயிரவு தோறும் வலம்வரும் செய்தியலைகள் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதைப் பிடித்தவர். பல தரமான செய்தி ஆய்வுகள், பேட்டிகள் என மக்களின் ரசனைக்கு ஏற்ப வழங்கி வருபவர். அந்த ரகுராம், தனது குடும்ப நலனுக்காக தான் வானொலியிலிருந்து விலகியிருக்கப்போவதாகபாறிவித்திருக்கிறார். ஆனால், அண்மையில் சிங்கள அரசின் விருந்தினராகவும், அரசின் போர்க்குற்றங்களை மறைக்கும் ஒரு கருவியாகவும் பயன்பட்டு வரும் புலிகளின் முன்னால் ஆயுத முகவரான கே.பீ என்பவரைப் பேட்டி கண்டதன் மூலம் ரகுராம் அவர்கள் மேலான நெருக்குதல்கள் ஆரம்பித்தன என்ற…

  21. சவுதி மன்னர் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவுள்ளார் சவுதி மன்னர்கூட பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். பெண்களை ஒடுக்குமுறைக்குள்ளேயே இதுவரை காலமும் வைத்திருந்த சவுதி மன்னர் எதிர்காலத்தில் நடக்கவுள்ள சவுதி நகரசபை தேர்தலில் பெண்கள் போட்டியிடலாம் என்று தெரிவித்தார். மன்னரின் இந்த அறிவிப்பு உலக நாடுகளில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. சவுதியில் கடந்த வியாழன் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் 285 நகர சபைகளுக்கு 5000 ஆண்கள் போட்டி போட்டனர். இவர்கள் அரைப்பங்கு பதவிகளை பூர்த்தி செய்வார்கள், ஏனைய அரைப்பங்கு உறுப்பினர்கள் சவுதி மன்னரால் நியமனம் செய்யப்படுவார்கள். இந்தத் தேர்தலில் பெண்கள் பின்தள்ளப்பட்ட காரணத்தால் 60 கல்வியியலாளர் தேர்தலில் இருந்து விலத…

  22. நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் பலியான 8 தமிழர்களின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ரகுபதியின் உறவினர் மீனாட்சி சுந்திரம் எனத் தெரிய வந்துள்ளது. அதேபோல இன்னொரு முன்னாள் அமைச்சர் செல்வராஜின் உறவினர் ஒருவரும் இதில் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து நேபாளத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு வாகன வசதிகள் உள்ளன. அதில் ஒன்று விமான பயணம். சிறிய ரக விமானம் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை சுற்றிக் காட்டுவார்கள். சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது இது. எவரெஸ்ட் சுற்றுலா புத்தா ஏர் என்ற தனியார் விமானம் இதுபோல சுற்றுலாப் பயணிகளுக்கு எவரெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சுற்றிக் காட்டுவதற்காகக் கிளம்பியது. அந்த சிற…

  23. சென்னை: மக்களுக்கு அச்சம் தரும் எந்த ஆபத்தான திட்டத்தையும் எனது அரசு ஊக்குவிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்புதான், கூடங்குளம் திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். இந்த நிலையில் இந்தத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோருக்கு தேமுதிக தலைவர் விஜய்காந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்துக்கு தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாலும், அந்தப் பகுதி மக்களின் வாக்குகளுக்கு தேமுதிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் குறி வைக்க ஆரம்பித்துள்ள நிலையில், கூடங்குளம் திட்டத்துக்கு இன்று திடீரென ஜெயலலி…

  24. Published By பெரியார்தளம் On Saturday, September 24th 2011. Under சென்னை, பெரியார் திராவிடர் கழகம், முதன்மைச்செய்திகள் தோழர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத்தண்டனை தொடர்பாக தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பார்ப்பன எஸ்.வீ.சேகர் வீட்டை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு கைதான பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் இன்று விடுதலையானார்கள். Federation of Brahmin Associations Southern region என்ற பெயரில் பார்ப்பனர் சங்கம் நடத்திவரும் எஸ்.வி.சேகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேந்த தோழர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இன்று (24.09.11) விடுதலையாகி வந்த அவர்களுக்கு ராயப்பேட்டையில் ப​றை முழக்கத்துடன் வரவேற்பு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.