Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதுடில்லி: உலகின் மிகப் பெரிய விமானமான ஏ380, சிங்கப்பூரில் இருந்து புதுடில்லிக்கு இன்று இரவு வந்து சேர்கிறது. டபுள் டெக்கர் விமானமான இதில் 500க்கும் மேற்பட்டோர் பயணிக்கலாம். சிங்கப்பூர்-புதுடில்லி இடையே, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்த ரக விமானத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. உலகின் மிகப் பெரிய இந்த விமானம் இன்று இரவு தான் வர்த்தக ரீதியாக இந்தியாவில் முதன் முதலாக தரையிறங்குகிறது. இதைத் தொடர்ந்து, எமிரேட்ஸ் விமான நிறுவனமும் மும்பையில் இருந்து அரபு நாடுகளுக்கான சேவையில் ஏ380 ரக விமானத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=987029

    • 0 replies
    • 497 views
  2. ஹிரோஷிமா மீது வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டு - புகைப்படத் தொகுப்பு 6 ஆகஸ்ட் 2018 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1945 ஆகஸ்ட் இதே நாளில்தான் ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அது குறித்த ஒரு புகைப்படத் தொகுப்பு. பட மூலாதாரம்,GETTY IMAGES ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட 6ஆம் தேதி, உலகின் முதல் அணுகுண்டை வீசியது அமெரிக்கா. பட மூலாதாரம்,GETTY IMAGES குண்டு வீசப்பட்ட தகவலை, அட்லாண்டிக் கடலில் இருந்த அமெரிக்க …

  3. நான் இங்கிலாந்தில் மிகப் பிரபலம்; நான் பெண்ணியவாதி இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சுவராஸ்ய பதில்கள் டொனால்டு ட்ரம்ப் - REUTERS அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் இங்கிலாந்தில் மிகவும் பிரபலம் என்றும், தான் ஒரு பெண்ணியவாதி கிடையாது என்றும் லண்டனைச் சேர்ந்த தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். லண்டனை தலையிடமாகக் கொண்டு செயல்படும் ஐடிவி தொலைக்காட்சியின் நேர்காணலில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல சுவாரஸ்யமான பதில்களை அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரிஸ் மோர்கனுக்கு அளித்திருக்கிறார். இங்கிலாந்து மக்களிடையே ட்ரம்ப்பின் புகழ் குறித்த கேள்விக்கு, “நான் …

  4. கோட்டா தாய்லாந்தில் தங்கியிருக்கும் நிலையில் தாய்லாந்து பிரதமரின் பதவியும் பறிபோனது! தாய்லாந்தின் பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவின் பதவிக்காலத்தை இடைநிறுத்த அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று (24) தீர்மானித்துள்ளது. பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவின் பதவிக்காலம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த மனு மீது அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த மனுவை விசாரித்த அரசியல் சாசன நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகள் பிரதமருக்கு எதிராக 5:4 என்ற விகிதத்தில் வாக்களித்தனர், அதன்படி பிரதமரின் பதவிக்காலம் நேற்று செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 23, 2022 உடன் முடிவடைந…

  5. கிர்கிஸ்தான்- தஜிகிஸ்தான் எல்லை மோதலில்... 94பேர் உயிரிழப்பு: ரஷ்யாவின்... தலையீட்டால், போர் நிறுத்தம்! கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையில் நடந்த மோதலில் குறைந்தது 94 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இரண்டு மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையேயான வெடித்த சண்டை, ரஷ்யாவின் தலையீட்டால் வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில், இரு தரப்பினரும் வெள்ளிக்கிழமை போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரு த…

  6. உலகின் மிக ரகசியமான அமெரிக்க உளவுத் துறை அருங்காட்சியகத்தில் என்ன உள்ளது? கோர்டன் கொரேரா பாதுகாப்பு நிருபர், வர்ஜீனியாவில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,POOL/GETTY IMAGES அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வின் அருங்காட்சியகம், உலகின் அசாதாரணமான மற்றும் பிரத்யேகமான அருங்காட்சியகங்களில் ஒன்று. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களால் நிரம்பியுள்ள இந்த அருங்காட்சியகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. சதாம் உசேனின் லெதர் ஜாக்கெட்டையும், ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டபோது அவரிடம் இருந்த துப்பாக்கியையும் இங்கு மட்டும்தான் பார்க்க முடியும். வர்…

  7. ஜப்பான் மீது ஏவுகணை ஏவியது வடகொரியா! ஜப்பானின் வடக்குப் பகுதியின் மீது வட கொரியா, பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி 07:29 மணிக்கு ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து வெளியான எச்சரிக்கையில், ஹொக்கைடோ தீவில் உள்ள மக்களுக்கு விமானம் மற்றும் ரயில் பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. வடகிழக்கு ஹொக்கைடோ மற்றும் அமோரி பகுதிகளில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஜப்பானில் இருந்து சுமார் 3,000 கிமீ (1,860 மைல்) தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை விழுந்ததாகவும், இது தொடர்பாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானிய கடலோ…

    • 3 replies
    • 745 views
  8. முகநூல் வலைத்தளத்தை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இணைத்தது ரஷ்யா முகநூல் வலைத்தளத்தை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷ்யா இணைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் பிரஜைகள் ரஷ்யர்களுக்கு எதிராக வெளியிடும் வன்முறைத் தகவல்களை பேஸ்புக் அனுமதிக்கிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவ்வாறு குறித்த பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிறுவனத்திற்கு மொஸ்கோ நீதிமன்றம் விதித்து இருந்த தடையை மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷ்ய அரசாங்கம்…

  9. சேலத்தில் விழிப்பு உணர்வுக் கூட்டம் என்ற பெயரில் அ.தி.மு.க. நடத்திய கூட்டத்தில், தி.மு.க. புள்ளிகள் அத்தனை பேருக்கும் அர்ச்சனை. ஆபாசத்தை சென்சார் செய்தே வாசகர்களுக்குக் கொடுக்கிறோம். அ.தி.மு.க-வின் அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் மாவட்டச் செயலாளர் கிரிநடராஜன் டாப் கியரில் ஆரம்பித்தார். ''எட்டாம் வகுப்பு படித்து இருந்தால்தான் லாரி ஓட்ட ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று கருணாநிதி அரசு சட்டம் போட்​​டுள்ளது. நான்காவது படித்த கருணாநிதி, முதலமைச்சராக இருக்கலாம். படிக்காதவன், டிரை​வராக இருக்கக் கூடாதா? எந்த ஊரு நியாயம் இது?'' என்று பேசிக்கொண்டு இருந்தபோதே, மைக்கைப் பிடுங்கினார் எம்.பி-யான செம்மலை. '' 'தோல் இருக்க, பழம் முழுங்கி!’ன்னு சொல்வாங்க. ஆனா, ராசாவோ பழத்தோடு சேர்த…

    • 0 replies
    • 411 views
  10. தமிழர்களே, பிப்ரவரி 4 (நாளை) இலங்கையில் சுதந்திர தினம்... தமிழர்களுக்கு....?...இன்றைய தமிழர்களின் நிலை முள்வேலி முகாமில்... போர் முடிந்து இரண்டு வருடம் நிறைவுபெற இருக்கிறது. அவர்கள் வாழ்வில் எந்தவித மாற்றமும் இல்லை. இன்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பெரும் கேள்விகுறியோடு அவர்கள் வாழ்வு கடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் இலங்கை சென்று வந்த வழக்குரைஞர் கயல் (எ) அங்கயற்கன்னி கூறியது. மீதமுள்ள மக்களை நாம் காப்பாற்றவில்லையென்றால் இன்னும் ஐந்து வருடத்தில் தமிழினம் இலங்கையிலிருந்து அழிக்கப்பட்டிருக்கும். இதே கருத்தைதான் சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில் காசி ஆனந்தன் அவர்களும் கூறியது...என்ன செய்யபோகிறோம் நாம்...? வரும் வெள்ளி இலங்கையில் சுதந்திர தினம் அன்றைய நாளில் உல…

  11. கைதான ஹார்வி வைன்ஸ்டீன் மீது பதிவான பாலியல் குற்றச்சாட்டுக்கள் என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS இரண்டு பெண்கள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் மீது நியுயார்க்கில், பாலியல் வன்புணர்வு மற்றும் பல்வேறு வகையான பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக ஹ…

  12. இஸ்ரேலின் கடும் எதிர்ப்புகளையும் மீறி பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு, சுவீடன் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கட் வால்ஸ்டிரம் கூறுகையில், பாலஸ்தீன நாட்டுக்கு அங்கீகாரம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.பாலஸ்தீனர்கள், தங்களது சுய நிர்ணய உரிமையைப் பெறுவதற்கு இந்த நடவடிக்கை உதவும். எங்களைப் பின்பற்றி, பிற நாடுகளும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் என நம்புகிறோம் என்றார் அவர். அண்மையில் சுவீடனின் பிரதமராகப் பதவியேற்ற ஸ்டெஃபான் லோஃப்வென், நாடாளுமன்றத்தில் தொடக்க உரையாற்றுகையில், பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் விசயத்தில், மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த முதல் ஐரோப்பிய யூனியன் நாடாக சுவீடன் இருக்கும் என்று அறிவித்திருந…

    • 12 replies
    • 1.1k views
  13. ஈரான் நீதிமன்றத்தால் ஓர் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட கான்ச்சே கவாமி. | கோப்புப் படம்: ஏ.பி. ஈரானில் ஆண்கள் பங்கேற்ற வாலிபால் போட்டியை பார்த்ததற்காக ஓராண்டு சிறைத் தண்டனை பெற்ற பெண் நேற்று முதல் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். கான்ச்சே கவாமி (25) என்ற அந்த பெண் ஈரான் வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் பிரஜை ஆவார். கான்ச்சே கவாமி கடந்த ஜூன் மாதம் ஈரான் - இத்தாலி இடையே நடந்த வாலிபால் விளையாட்டு போட்டியை பார்க்க சென்ற குற்றத்துக்காக விளையாட்டு மைதானத்திலேயே கைது செய்யப்பட்டார். அவருடன் பெண் நிருபர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அடுத்த 2 நாட்களில் கவாமி விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். பெண்கள் கலந்து கொள்ள கூடாது இது குறித்து ஈரான் …

  14. அமெரிக்க பொருட்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள்: இன்று முதல் அமல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSCOTT OLSON அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக கொள்கைக்கு எதிராக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன. 2.8 பில்லியன் யூரோ…

  15. கனடா, அமெரிக்காவைப்போன்று இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிப்பீர்களா ? - பின்லாந்து அரசாங்கத்திடம் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி Published By: T. SARANYA 17 FEB, 2023 | 04:28 PM (நா.தனுஜா) இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கனடா மற்றும் அமெரிக்காவைப்போன்று தமது நாடு தடைகளை விதிக்குமா? என்று பின்லாந்து அரசாங்கத்திடம் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பான கேள்விகளை பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ அந்நாட்டு அரசாங்கத்திடம் எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளார். அதுமாத்திரமன்றி இலங்கை அரசாங்கத்தினால் தம…

  16. தொகுதிப் பங்கீடுகள்: பல குழப்பங்களும், சில தெளிவுகளும் தமிழக தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடந்திருக்கும் நிகழ்வுகளை கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால், சிரிப்பாகவும், வேதனையாகவும், எரிச்சலாகவும் இருக்கிறது. இந்தத் தேர்தல் முறை எவ்வளவு பெரிய ஜனநாயக ஹம்பக் என்பதை அதன் நீள அகலங்களோடு படுதா விரித்துக் காட்டியிருக்கிறது. முதலில் திமுக அணியில் அது ஆரம்பித்தது. தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸுக்கு அறுபதா, அறுபத்துமூன்றா என்ற கணக்கில் தன்மானம், சுய கவுரவம் என்ற வார்த்தைகளைக் கொட்டி வெடித்தது. இதுதான் சமயம் என ஜெயலலிதாவோ காங்கிரஸோடு கூட்டணி சேர ஆட்களை அனுப்பினார். டெல்லி போன தி.மு.க பொத்திக்கொண்டு வந்து நல்லபிள்ளையாக ‘அறுபத்து மூன்று’ என்று கீச்சுக்கு…

    • 0 replies
    • 738 views
  17. இந்தோனேசியாவின் எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் பாரிய தீ விபத்து ; 17 பேர் பலி; 50க்கும் அதிகமானோர் படுகாயம் இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தோனேசியாவின் தெற்கு பபுவா மாகாணம் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்குச் சொந்தமான மிகப்பெரிய எரிபொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்தோனேசியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 25 சதவீதம் இங்கிருந்து தான் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த சேமிப்புக் கிடங்கில் நேற்று பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்தக் கோர தீ விபத்தில் சேமிப்புக் கிடங்கில் இருந்த எரிபொருள் தீப…

    • 0 replies
    • 506 views
  18. புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தனியார் நர்சரி பள்ளிக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 25 குழந்தைகள் காயமடைந்தனர். திருக்கோகணம் பகுதியில் ஒரு தனியார் நர்சரிப் பள்ளி உள்ளது. எல்.கே.ஜி, யு.கே.ஜி. ஆகிய வகுப்புகள் ஓட்டுக் கொட்டகையின் கீழ் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஓடுகள் நீண்ட காலத்திற்கு முன்பு போடப்பட்டவையாகும். திங்கள்கிழமை திடீரென ஓட்டுக் கொட்டகையை தாங்கி நின்ற மூங்கில் கம்பு உடைந்து விழுந்தது. இதையடுத்து ஓடுகள் சடசடவென சரிந்து விழுந்தன. இதில் 25 மாணவ, மாணவிகள் இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்தனர். இவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்தது அவர்கள் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் சீரு, ஆர்.டி.ஓ தமி…

  19. 2014 காஸா போருக்கு பிறகு ஹமாஸ் மீது ’மிகப்பெரிய தாக்குதல்’ - இஸ்ரேல் பிரதமர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2014ஆம் வருட போருக்கு பிறகு, காஸாவில் ஹமாஸ் தீவிரவாத குழுவுக்கு சொந்தமான இடங்கள் மீது இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை தொடுத்துள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைAFP இந்த தாக்குதல், இஸ்ரேல் மீது ர…

  20. முகத்தை இழந்தவருக்கு புதிய முகம் பொருத்தப்பட்டது ! உலகின் முதலாவது முகம் உருவாக்கும் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியது.. 26 வயதுடைய அமெரிக்கரான டாலாஸ் வைன் விபத்தில் தனது முகத்தையும் பார்வையையும் முற்றாகப் பறி கொடுத்தார். இவருடைய கண்கள், மூக்கு முதலியன தீயில் எரிந்துவிட்டன. கடந்த 2008ம் ஆண்டு தேவாலயம் ஒன்றிற்கு மை பூசிக்கொண்டிருந்தபோது தவறுதலாக உயர் மின்னழுத்தம் உள்ள இடத்தின் மீது விழுந்து முகத்தை எரித்துக் கொண்டார். இந்த நிலையில் இவருக்கான புதிய முகம் மாற்றும் சத்திர சிகிச்சை சென்ற மார்ச் மாதம் நடைபெற்றது. இப்போது இவர் படத்தில் காணும் புதிய முகத்தைப் பெற்றுள்ளார். பார்வையை மறுபடியும் பெற முடியாவிட்டாலும், மனித உருவில் நடமாடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.…

  21. அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்துவோம் -வடகொரியா எச்சரிக்கை வடகொரியாவின் கிழக்கு வான்வெளியில் அமெரிக்க உளவு விமானம் இரண்டு முறைகள் அத்துமீறி நுழைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் ‘இனிமேல் அவ்வாறு நடந்தால் அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்துவோம்‘ என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே நீண்டகாலமா மோதல் போக்கு காணப்படுகின்றது. குறிப்பாக தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகின்றது. இந்நிலையில் தங்களது வான்வெளிக்குள் அமெரிக்க உளவு விமானம் அத்து மீறி நுழைந்ததாக…

  22. ரஷ்யாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் பதட்டம் நீடித்தால் அது போராக வெடிக்கும் அபாயம் உள்ளதாக முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் கோர்பசேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ரஷ்யாவை மீண்டும் ஒரு பனிப்போருக்கு மேற்கத்திய நாடுகள் இழுத்துள்ளன. இந்த பனிப்போர் முழு போராக வெடிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றார். கிழக்கு உக்ரைனில் அரசு படையினருக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் 5,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சண்டையில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவியளித்து வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளை…

  23. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை DHA/Youtube வடகிழக்கு துருக்கியில் உள்ள ஒரு கிராம மக்கள் 300 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று காணாமல் போயுள்ளதாக கூறி உள்ளனர். புதையல் தேடும் கொள்ளையர்களால் அந்த வளைவுப்பாலம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று அர்ஸ்லான்ஸா கிராம மக்கள் அச்சப்படுகிறார்கள். இந்த பாலம்தான் மேய்ச்சல் நிலத்துடன் மேட்டு பகுதிகளை இணைத்தது என டெமிரோரென் செய்தி முகமை தெரிவிக்கிறது. பலஹோர் ஓடையின் குறுக்கே இருந்த இந்த பாலத்தை கடந்தவாரம் கூட பார்த்ததாக மக்கள் கூ…

  24. முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம் செக்ஸ் தொழிலாளர்கள் நடத்தும் வங்கியின் சாதனை மே 05, 2007 கொல்கத்தா: விபச்சாரப் பெண்களால் நடத்தப்படும் ஒரு வங்கி ரூ. 9 கோடி அளவுக்கு முதலீடுகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. கொல்ககத்தாவில் கடந்த 1995ம் ஆண்டு உஷா பன்னோக்கு கூட்டுறவு சங்கம் என்ற கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது. மேற்கு வங்க மாநில கூட்டுறவு வங்கியின் ஆரவுடன் இந்த வங்கியை, தர்பார் மகிளா சம்மனய் சமிதி என்ற அமைப்பு தொடங்கியது. இந்த வங்கியை முழுக்க முழுக்க விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களே தொடங்கி நிர்வகித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தின் 5 மாவட்டங்களில் 8500 உறுப்பினர்கள் இதில் சேர்ந்துள்ளனர். இதன் முதலீடு ரூ. 9 கோட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.