உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
இனப்பிரச்சனைக்கு இராணுவ தீர்வு காண்பது கடினம்: அமெரிக்க தூதுவர் மீண்டும் வலியுறுத்தல் [ புதன்கிழமை, 07 சனவரி 2009, 09:34.24 AM GMT +05:30 ] இலங்கையின் இனப்பிரச்சனைக்கு இராணவத் தீர்வைக் காண்பது மிகவும் கடினமானதாகும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார்.இலங்கை இதழியல் கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை இராணுவம் கிளிநொச்சி நகரைக் கைப்பற்றியதையடுத்து அரசியல் தீர்வின் அவசியம் குறித்து அமெரிக்கா அறிக்கையொன்றை விடுத்தது இந்நிலையில் தீர்வு எவ்வாறு அமையவேண்டுமென்றோ அன்றேல் எவ்வளவு காலத்திற்குள் முன்வைக்கப்பட வேண்டுமெனவோ அமெரிக்க வலியுறுத்துமா என அமெரிக்க தூதுவரிடம் வினவியபோது அமெரிக்க தூ…
-
- 1 reply
- 708 views
-
-
கிளிநொச்சியை கைப்பற்றியமை அரசியல் தீர்வின் அவசியத்தை விரைவு படுத்தியுள்ளது: பிரிட்டன் அறிக்கை [ புதன்கிழமை, 07 சனவரி 2009, 05:10.38 AM GMT +05:30 ] கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டிய அவசியம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் மலோ பிரவுண் பிரபுவும் பொதுநலவாய அலுவலகத்தைச் சேர்ந்த டக்ளஸ் அலெக்சாந்தரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் அரச படையினரால் புலிகளின் முன்னாள் நிர்வாகத் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது தொடக்கம் அனைத்து விடயங்களையும் நாம் உன்னிப்பாக அவதா…
-
- 2 replies
- 964 views
-
-
மன்மோகன்சிங்கின் தமிழக வருகையை கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணியினர் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் [ புதன்கிழமை, 07 சனவரி 2009, 11:22.49 AM GMT +05:30 ] 'இந்திய' பிரதமர் மன்மோகன்சிங்கின் தமிழக வருகையை கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணியினர் காலை 11 மணி அளவில் சென்னை நினைவரங்கம் (மெமோரியல் ஹால் ) அருகில் மன்மோகன்சிங் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் இலங்கை அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்து வருகிறது. இவ்வினப்படுகொலையை எதிர்த்து ஈழத்தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிங்களஅரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்திய அரசின் விரிவாதிக்க கண்ணோட்டமும், தேசிய இன ஒடுக்குமுறையை உறுதிபடுத்த தொடர்ந்து சிங்கள அரசுக்கு அனைத்து உதவிகளையும் …
-
- 0 replies
- 528 views
-
-
மும்பைத் தாக்குதல் தொடர்பான ஆதாரத்தை பாகிஸ்தானிடம் கையளித்தது அமெரிக்கா மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் அமெரிக்கா கையளித்துள்ளதாக லண்டன் சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மும்பைத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர்கள் பாகிஸ்தானில் இருந்தவாறே தாக்குதலுக்கு வழிகாட்டினர். அத்துடன், அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ஸாரர் ஷா பயங்கரவாதிகளுக்கு நிமிடத்துக்கு நிமிடம் தொலைபேசி மூலம் வழிகாட்டிக் கொண்டிருந்ததுடன் தாக்குதலையும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதும் இந…
-
- 0 replies
- 728 views
-
-
மனிதநேயம் எங்கே....? இஸ்ரேலின் இனவெறி படுகொலையின்போது மரணத்தருவாயில் நிகழ்ந்த பாசப்போராட்டம். மரணவேலையில் என்ன சொல்லத்தோன்றியதோ இந்த சிறுவனின் தாய்க்கு... வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு... புகைப்படங்கள் மட்டுமே சொல்லும் ஆயிரமாயிரம் உண்மைச்சம்பவங்கள் மெளனமொழியில்....
-
- 12 replies
- 2.6k views
-
-
- டாக்டர் ராமதாஸ் வீரகேசரி நாளேடு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு, தமிழக அரசையும் தமிழக மக்களையும் ஒட்டுமொத்தமாக அவமதித்து தலைகுனியச் செய்துவிட்டது என்று பா.ம.க. நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, தமிழர்கள் அனைவரும் வெட்கி தலைகுனிந்து நிற்கிறோம். இங்குள்ள தமிழர்களின் சுயமரியாதைக்கும், தன்மானத்திற்கும் மிகப்பெரிய சோதனை ஏற்பட்டு நாம் தலைகவிழ்ந்து நிற்கும் நிலையுருவாகியுள்ளது. எனக்கு கிடைத்த தகவலின் படி இலங்கையில் போரை நிறத்த வலியுறுத்துவதற்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பயணிகள் தவிர வேறு யாரும் செல்வதற்கான அறி…
-
- 0 replies
- 771 views
-
-
தமிழர்கள் பிரிந்து போக விரும்புகிறார்கள். http://news.yahoo.com/s/prweb/20090101/bs_...t317AAiIC3NybYF
-
- 5 replies
- 3.3k views
-
-
கமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் உற்பட அவரது குடும்ப அங்கத்தவர்கள் 9 பேர் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் பலி ! அவ்வியக்கத்தின் 49 வயதான அரசியல் பிரிவுத் தலைவர் அவரது குடும்பத்தார் 9 பேருடன் சேர்த்து நெற்று மாலை நடந்த ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். மிகச் சிறந்த போதகரும், உணர்ச்சியூட்டும் பேச்சாளருமான இவர் தற்கொலைத் தாக்குதல்களை உக்குவித்து வந்ததுடன், காசாவில் உள்ள "மாவீரர்களின் மசூதி" என்பதற்கும் பொறுப்பாக இருந்தவர். அவரது வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடம் ஒன்றிற்கு வருமாறு கமாஸ் இயக்கத்தால் பலதடவைகள் இவர் கேட்கப்பட்ட போதும், இவர் தனது இல்லத்திலேயெ விடாப்பிடியாக இருந்துள்ளார். இவரின் கொலையை அடுத்து, அவ்வியக்கத்தின் முக்கியஸ்த்தர்கள் பலர் தலைமறைவாகியுள்ளனர். கம…
-
- 5 replies
- 1.7k views
-
-
Wednesday, 31 Dec 2008 ஆந்திராவில் கடந்த 13-ம் தேதி ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவி ஸ்வப்னிகா சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.ஆந்திர மாநிலம்,வாரங்கல் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தவர்கள் ஸ்வப்னிகா மற்றும் பிரானிதா. சீனிவாஸ் (25) என்பவரின் காதலை ஸ்வப்னிகா ஏற்க மறுத்துள்ளார்.இதனால்,ஆத்திரம டைந்த சீனிவாஸ்,தனது நண்பர்கள் சஞ்சய் (22),ஹரிகிருஷ்ணா (24) ஆகியோருடன் சேர்ந்து,மாணவிகள் இருவரும் மொபெட்டில் சென்ற போது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் பார்வை பறிபோய்,கவலைக்கிடமாக இருந்த ஸ்வப்னிகா சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த தாக்குதலை நடத்திய இளைஞர்கள் மூவரையும் போலீஸார் என்கௌன்டரில்…
-
- 1 reply
- 1.4k views
-
-
அதிசய முட்டை முட்டைகளை விரும்பி உண்பது நாமறிந்த உண்மை. நாகமொன்று படமெடுப்பது போல் தோற்றமுடைய முட்டையொன்றை இங்கு காண்கின்றீர்கள். ஏறாவூர் பொதுச் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட கோழி முட்டைகளில் ஒன்றிலேயே இந்த அதிசய வடிவம் காணப்பட்டுள்ளது. கோழி முட்டையின் முனைப் பகுதியில் மலரொன்றின் நடுவே பாம்பு படமெடுத்தவாறு சுருண்ட நிலையில் படுத்திருப்பதே இந்த வடிவமாகும். http://www.virakesari.lk/
-
- 6 replies
- 3.6k views
-
-
காஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் [31 - December - 2008] மத்திய கிழக்கில் காஸா பள்ளத்தாக்கு மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் கடந்த சில தினங்களாக மேற்கொண்டுவரும் குண்டு வீச்சுகள் 1967 அரபு இஸ்ரேல் போருக்குப் பின்னர் இடம்பெற்றிருக்கக்கூடிய மிகப் பெரிய தாக்குதல்கள் என்று வர்ணிக்கப்படுகின்றன. பெண்கள், சிறுவர்கள் உட்பட 300 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் இதுவரை இத்தாக்குதல்களில் கொல்லப்பட்டிருப்பதுடன், ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். தரைமார்க்கமாகவும் இஸ்ரேலியப்படைகள் காஸாவை ஆக்கிரமிக்கப் போவதாகவும் பேசப்படுகிறது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக புதிய இன்ரிபாடா (மக்கள் எழுச்சி) யை ஆரம்பிக்குமாறும் தற்கொலைத் தாக்குதல்களில் இறங்கி உயிர்த…
-
- 0 replies
- 571 views
-
-
அமெரிக்க வீராங்கனையை சுண்டிப் பார்க்கும் அதிபர் புஸ் http://latimesblogs.latimes.com/washington...h-olympics.html
-
- 3 replies
- 4.4k views
-
-
தாய்லாந்து கடற்படை அட்டூழியம்: 310 பேர் கடலில் மூழ்கி பலி திங்கள்கிழமை, டிசம்பர் 29, 2008, 12:06 [iST] போர்ட்பிளேர்: தாய்லாந்து நாட்டு கடற்படையின் முட்டாள்தனமான செயலால் 310 பேர் அந்தமான் அருகே கடலில் மூழ்கினர். அவர்கள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 102 பேரை இந்திய கடலோரக் காவல் படை பத்திரமாக மீட்டுள்ளது. வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 412 பேர், வங்காளதேசத்தின் சிட்டகாங் நகரத்தில் இருந்து, 6 விசைப்படகுகளில் மலேசியா நாட்டுக்கு கள்ளத்தனமாக புறப்பட்டனர். அவர்களை வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒரு ஏஜெண்டு 45 நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைத்தார். இதற்காக ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் அவரை அவர் வசூலித்தார…
-
- 2 replies
- 2.5k views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2008, 09:47 பி.ப ஈழம்] [ப.தயாளினி] பாகிஸ்தானுக்கான பயணத்தை தமது நாடு இரத்துச் செய்துவிட்ட நிலையில் சிறிலங்கா அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது குறித்த கவலையை சிறிலங்காவுக்கு இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கொழும்புத் தகவல்கள் தெரிவிப்பதாவது சிறிலங்காவின் பாகிஸ்தான் பயணம்: இந்தியா கவலை முழுமையான செய்திக்கு
-
- 1 reply
- 1.1k views
-
-
வீடியோ இணைப்பு - இஸ்ரேல், காசா மீது நேற்று மேற்கொண்ட தாக்குதல் இடம்பெற்ற சுமார் 24 மணித்தியாலங்களில் மீண்டும் இன்று பாரிய தாக்குதல்களை தொடுத்துள்ளது. இதனால் 255 பேர் வரை பலியாகியும் 600 பேர் வரை காயமடைந்ததாகவும் CNN செய்திகள் தெரிவிக்கின்றன. 60 வருடங்களின் பின் பலஸ்தீனியர்களுக்கு ஏற்பட்ட மிகவும் இரத்தம் தோய்ந்த நாளாக இது அமைவதாக வருணிக்கப்படுகிறது.வீடியோ இணைப்பு
-
- 2 replies
- 1.4k views
-
-
பலஸ்தீன காசாப் பகுதியில் இஸ்ரேலிய எப் 16 போர் விமானங்கள் கண்மூடித்தனமான ஏவுகணைத்தாக்குதல் நடத்தியதில் சுமார் 155 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் (400க்கும் மேல்) காயமடைந்துள்ளனர். கமாஸ் அமைப்புடன் போர் நிறுத்தம் முடிவடைந்ததை அடுத்து இஸ்ரேல் கண்மூடித்தனமான விமானத்தாக்குதலை தொடர்ச்சியாக காசா பகுதியில் மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் மிக மோசமாக மனித உரிமைகளை மீறும் நாடு என்பது பல காலமாக அறிக்கைகளின் வழி சொல்லப்பட்டு வந்தாலும் அதனை யாரும் உலகில் கட்டுப்படுத்த முனைவதில்லை. இஸ்ரேலிய யுத்த விமானங்கள்.. சிறீலங்காவிலும் பொதுமக்கள் இலக்குகள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்த சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்றும் இஸ்ரேலிய தயாரிப்ப…
-
- 5 replies
- 1.9k views
-
-
டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் போர் வருமா என்ற எதிர்பார்ப்பில் உலக நாடுகள் உள்ளன. இந்த நிலையில் இரு நாடுகளின் பலம் என்ன என்பதை சற்று பார்ப்போம் ... விமானப்படை: இந்தியா விமானங்கள் - 1007 ஹெலிகாப்டர்கள் - 240 போக்குவரத்து விமானங்கள் - 220 வானிலிருந்தபடி எரிபொருள் நிரப்பும் விமானங்கள் - 6 பாகிஸ்தான் விமானங்கள் - 710 ஹெலிகாப்டர்கள் - 31 போக்குவரத்து விமானங்கள் - 30 வானிலிருந்தபடி எரிபொருள் நிரப்பும் விமானங்கள் - 0 ராணுவம்: இந்தியா ராணுவ வீரர்கள் - 10.3 லட்சம். ஆயத்த நிலையில் உள்ள ரிசர்வ் வீரர்கள் - 4,95,000 ஆயத்த நிலையிலான பாரா மிலிட்டரி வீரர்கள் - 10,89,7000 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் - 5,50,000 ரிசர்வ் வீரர்க…
-
- 18 replies
- 14.7k views
-
-
இத்தாலியில் பூகம்பம் 2 தேவாலயங்கள் சேதம் அடைந்தன (தினத்தந்தி) Font size: மிலன், டிச.25- இத்தாலியில் பார்மா நகரில் பூகம்பம் ஏற்பட்டது. அதன் வீரியம் ரிக்டார் அளவில் 5.1 ஆக இருந்தது. இதனால் மிலன் நகர் முதல் பிளாரன்ஸ் நகரம் வரை உள்ள பகுதிகளில் இது உணரப்பட்டது. சில நகரங்களில் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டது. 2 தேவாலயங்கள் தேசம் அடைந்தன. சில வழித்தடங்களில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெலிபோன்கள் பாதிக்கப்பட்டன. பூகம்பம் காரணமாக அந்த நாட்டு மக்களிடம் பீதி நிலவியது. மாலையில் ஏற்பட்ட பூகம்பத்தை தொடர்ந்து 2-வது பூகம்பம் இரவு நேரத்தில் ஏற்பட்டது. அதன் வீரியம் 4.7 ஆக இருந்தது.
-
- 0 replies
- 846 views
-
-
டெல்லி: பாகிஸ்தானுக்கு இந்தியா விதித்துள்ள கெடு நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து எந்தவித நடவடிக்கைக்கும் தயாராக இருக்கும் வகையில், இந்திய வி்மானப்படை முழு ஆயத்த நிலையில் உள்ளது. தலைநகர் டெல்லியைக் காக்க, மிக்29 ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியா தாக்கும் என்ற அச்சம் பாகிஸ்தானில் அதிகரித்து வருவதால் பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்நாட்டு விமானப்படை விமானங்கள் முக்கிய நகரங்கள் மீது அடிக்கடி பறந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவுடனான மேற்கு எல்லைப் பகுதி விமான தளங்களில் போர் விமானங்களை விமானப்படை நிறுத்தியுள்ளது. எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்களையும் அது குவிக்க ஆரம்பித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த ந…
-
- 1 reply
- 2.3k views
-
-
இஸ்தான்புல்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எறியப்பட்ட ஷூவைத் தயாரித்த நிறுவனத்திற்கு பயங்கர கிராக்கி ஏற்பட்டுள்ளது. அந்த கம்பெனிக்கு திடீரென ஆர்டர்கள் வந்து குவிந்துள்ளனவாம். இதனால் 100 பேரை புதிதாக வேலைக்குப் போட்டு விறுவிறுவென ஷூக்களைத் தயாரித்துத் தள்ளுகிறதாம் அந்த நிறுவனம். துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லைத் தலைமையிடமாகக் கொண்ட ஷூ நிறுவனம் பெய்டன் ஷூ கம்பெனி. இந்த நிறுவனத்தின் ஷூக்களைத்தான் பத்திரிக்கையாளர் முன்டாசர் அல் ஜெய்தி அணிந்திருந்தார். இதைத்தான் புஷ் மீது அவர் வீசினார். குவியும் ஆர்டர்கள் இதையடுத்து பெய்டன் ஷூக்களுக்கும் படு கிராக்கி ஆகி விட்டது. இதனால் உச்சி குளிர்ந்து போயிருப்பவர் பெய்டன் ஷூ நிறுவனத்தின் உரிமையாளரான ரமஸான் பெய்டன்தான். அவரது…
-
- 0 replies
- 974 views
-
-
லண்டன்: லண்டனிலிருந்து மும்பை வரவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தை செலுத்துவதாக இருந்த விமானி, குடிபோதையில் இருந்தது கடைசி நிமிடத்தில் தெரிய வந்து அவர் கைது செய்யப்பட்டார். அதிர்ஷ்டவசமாக விமானமும், பயணிகளும் பேராபத்திலிருந்து தப்பினர். ஜெட் ஏர்வேஸுக்குச் சொந்தமான அந்த போயிங் 777 ரக விமானம் பயணிகளுடன், ஹீத்ரூ விமான நிலையத்தில் கிளம்பத் தயாராக இருந்தது. விமானத்தை 62 வயதாகும் மைக்கேல் ஹார் என்பவர் ஓட்டுவதாக இருந்தார். இவர் அமெரிக்க கடற்படையில் விமானியாகப் பணியாற்றியவர். விமானம் கிளம்புவதற்கு முன்பு விமான நிறுவன ஊழியர்கள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விமானத்தின் காக்பிட்டுக்குள்ளிருந்து மது வாடை வந்ததையடுத்து உள்ளே வந்து பார்த்தபோது, விமானி ஹார் கு…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளிலும், சியாச்சின் பகுதியிலும் இந்தியத் துருப்புகளின் ஆயத்த நிலை குறித்து அறிவதற்காக ராணுவ தளபதி ஜெனரல் தீபக் கபூர் அங்கு விரைந்துள்ளார். இன்று காலை கபூர் சியாச்சின் புறப்பட்டுச் சென்றார். அங்கு இன்று முழுவதும் அவர் தங்கியிருப்பார். அங்குள்ள படைப் பிரிவுகளின் கமாண்டர்கள், மூத்த ராணுவ அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவார். பின்னர் ஸ்ரீநகர் திரும்பி, ஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளின் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியா தாக்குமோ என்ற பெரும் பீதி பாகிஸ்தானில் நிலவுகிறது. இதையடுத்து பாகிஸ்தான் விமானப்படை, ராணுவம் மற்றும் கடற்படையினர் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எல்லைப் பகுதியில் ரேஞ்சர்களின் எண்ண…
-
- 0 replies
- 913 views
-
-
தமிழகத்தைப் பிடித்திருக்கும் சாபக்கேடுகளில் ஒன்று காங்கிரசுக் கட்சி. நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தக் கோமான்களின் கட்சி துவங்கப்பட்டதே வெள்ளைக்காரர்களின் பிச்சையில்தான். அடிமைத்தனத்தோடு பொறுக்கித் தின்பதற்கு இங்கிலாந்து ராணியிடம் மனு கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே இக்கட்சியின் புல்லரிக்கும் வரலாற்றுப் பெருமை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இக்கட்சிக்கு தலைமை தாங்கிய திலகர்தான் இந்துத்வ விசமத்தனங்களுக்கு சுளி போட்டவர். விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் யானை முகத்தோனை பிரம்மாண்ட சைசில் பல கெட்டப்புக்களில் வடித்து கடலை நாசமாக்கும் விதத்தில் கரைத்து, இந்த எழவு மும்பையோடு நிற்காமல் எல்லா புண்ணியஸ்தலங்களுக்கும் பயணம் செய்து இப்போது தமிழகத்திலும் ஊன்றிவிட்டத…
-
- 7 replies
- 4.3k views
-
-
நியூயார்க்: பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் அவதிப்படும் பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மைக்கேல் ஜாக்சன், சில ஆண்டுகளாக மூச்சுக்குழாய் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை மேற்கொண்டும் பலன் இல்லை. இந்த நிலையி்ல தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இது பற்றி லண்டன் பத்திரிக்கை ஒன்றுக்கு மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வரும் முன்னாள் புலனாய்வு நிருபர் இயான் ஹால்ப்ரீன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில…
-
- 6 replies
- 2.1k views
-
-
சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக அலுவலகம் மீது செருப்பை வீசியதாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். குடிபோதையில் அவ்வாறு அவர் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. பாக்தாத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது பத்திரிக்கையாளர் ஒருவர் ஷூ வீசிய சம்பவமே இன்னும் மறக்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்க துணைத் தூதரக அலுவலகம் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் சென்னை போலீஸாரை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் அமெரிக்க தூதரகம் உள் ளிட்ட முக்கிய இடங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமையன்று நள்ளிரவில் வா…
-
- 0 replies
- 916 views
-