உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
“நடுத்தர வயதில் உடல் குண்டடித்து, பெரிய தொந்தியுடன் இருப்பவர்களுக்கு, வயதான பின்,மனநல பாதிப்பு ஏற்படும்’என, ஆய்வில் தெரியவந்துள்ளது. நொறுக்கு தீனிகளை கண்டபடி உள்ளே தள்ளி,குண்டடித்துப் போய் இருப்பவர்களுக்கு, பல்வேறு நோய்கள் ஏற்படும் என்பது, ஏற்கனவே தெரிந்தது தான். அதிகமான உடல் எடை உள்ளவர்களுக்கு, நீரிழிவு நோய், இதய நோய் ஏற்படும் என்பதும் தெரிந்தது தான். அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், “நடுத்தர வயதுடையவர்களுக்கு, தொந்தி பெரிதாக இருந்தால், 70 வயதை எட்டும்போது, அவர்களுக்கு “டிமென்ஷியா’என்ற மனநல பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது’என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த ராக்கெல் ஒயிட்மெர் கூறியதாவது................................. தொடர்ந்து வ…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஒகேனக்கல் உரிமையை காக்க மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நாளை மறுநாள் திங்கட்கிழமை (07.04.08) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அகட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 647 views
-
-
ஈராக்கில் இருந்து அமெரிக்காவின் 5 படைபிரிவுகள் வாபஸ் திகதி : Friday, 04 Apr 2008, [saranya] ஈராக் நாட்டில், அமெரிக்கா மற்றும் நேச நாட்டு படைகள் முகாமிட்டு, அதன் அதிபர் சதாம் உசேனை கைது செய்தது தெரிந்ததே. அதன்பின், கோர்ட்டு தீர்ப்பு படி அவர் தூக்கில் போடப்பட்டார்.தற்போது அங்கு இருக்கும் ஆட்சிக்கு துணையாக, சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட, அமெரிக்க ராணுவம் உதவி செய்து வருகிறது. ஈராக்கில், இந்த பணியில் ஈடுபடும் அமெரிக்க ராணுவத்தினர், உயிர் இழக்கும் சம்பவங்களும் நடக்கிறது. இதற்கிடையில், ஈராக்கில் இருந்து அமெரிக்க படையை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை, அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. இதுபற்றி வாஷிங்டன் நகரில் உள்ள ராணுவ தலைமை இடமான பென்டகன் அலுவலகத்தில், ராணுவ…
-
- 0 replies
- 554 views
-
-
போராட்டத்தில் ஈடுபட்ட 8 திபெத் நாட்டுக்காரர்களை சீன ராணுவம் சுட்டு கொன்றது திகதி : Saturday, 05 Apr 2008, [saranya] திபெத்தை தன் மாகாண பகுதிகளில் ஒன்றாக மாற்ற அது பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.சீனாவுக்கு எதிராக திபெத் நாட்டுக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை சீனராணுவம் அடக்கியபடி உள்ளது. கடந்த மாதம் 14-ந் தேதி திபெத்தில் உள்ள லசா பகுதியில் வெடித்த பயங்கர கலவரத்தில் 15 பேர் பலியானார்கள். இதற்கு உலகின் பல நாடுகள் சீனாவை கண்டித் தன. இதையடுத்து பிஜீங்கில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை சீர் குலைக்க திபெத் புத்த மத குருக்கள் கலவரத்தை தூண்டி விடுவதாக சீனா கூறியது. இந்த நிலையில் திபெத்தில் உள்ள டோன்கோர் எனும் நகரில் போராட்டம் நடந்தது. …
-
- 0 replies
- 618 views
-
-
சென்னை: கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை ஒத்தி வைப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ. 1,334 கோடி செலவில், ஓகேனக்கலில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அமல்படுத்த சமீபத்தில் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். காமராஜர் ஆட்சிக்காலத்தில் பேசப்பட்ட இந்தத் திட்டம் இப்போதுதான் நனவாகும் சூழ்நிலை உருவானது. ஆனால் இந்தத் திட்டத்தை எதிர்த்து கர்நாடகத்தில் வன்முறை மூண்டது. இந் நிலையில் திடீர் திருப்பமாக கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடியும் வரை திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அதே நேர…
-
- 0 replies
- 639 views
-
-
மோனாலிஷா ஓவியம் பேசுகிறது(வீடியோ இணைப்பு) new tecnology மோனாலிஷா ஓவியம் பேசுகிறது(வீடியோ இணைப்பு) வீடியோவை பார்பதற்கு....................... http://isoorya.blogspot.com/2008/04/new-tecnology.html
-
- 0 replies
- 919 views
-
-
விடுதலைப்புலிகளுக்கு பீடி புகையிலை கடத்தினவர்கள் பிடிபட்டுள்ளனராம்.. கோமாளி தினமலரின் செய்தி கீழே.... இன்னுமொரு செய்தியும் அடியில இருக்கு பாருங்கள். http://www.dinamalar.com/2008apr04/final.asp#1
-
- 5 replies
- 1.3k views
-
-
மதுரை: கன்னடர்களின் வன்முறைக்குப் பதிலடியாக தமிழகத்திலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல்வேறு இடங்களில் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக (கே.எஸ்.ஆர்.டி.சி) பேருந்துகள் தாக்கப்பட்டன. மதுரையில் கே.எஸ்.ஆர்.டி.சி புக்கிங் அலுவலகத்தைப் பூட்டி, ஊழியரை சிறை வைத்து வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். ஓகனேக்கல் பிரச்சினையைக் காரணம் காட்டி கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் கன்னட வெறியர்கள் வன்முறையை அரங்கேற்றி வருகின்றனர். தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழக பேருந்துகளும் வழிமறிக்கப்பட்டன. தமிழ் டிவி சானல்களும் முடக்கப்பட்டுள்ளன. இதற்குப் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டுள்ளன. கும்பக…
-
- 7 replies
- 2.1k views
-
-
உக்ரைன், ஜோர்ஜியாவை நேட்டோவில் இணைக்கும் திட்டம் தோல்வி [04 - April - 2008] நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் மற்றும் ஜோர்ஜியாவை இணைத்துக் கொள்வதற்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாடுகளுடனான உறவை தொடர்ந்தும் எவ்வாறு பேணுவது என்பது குறித்து நேட்டோ ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரோமானியாவில் நடைபெற்றுவரும் நேட்டோ உச்சி மாநாட்டில் எதிர்காலத்தில் இந்நாடுகளுடன் நெருங்கிய உறவை பேணுவதற்கு மட்டுமே இதில் கலந்து கொண்டுள்ள பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இவ்விரு சோவியற் குடியரசு நாடுகளையும் நேட்டோவில் இணைப்பதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான அழைப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் விடுத்திருந்த போதும் ஜேர்மனியும் பிரான்ஸும் இதற்கு கடும…
-
- 0 replies
- 597 views
-
-
ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வந்த அகதிகளுடன் ஊடுருவிய ஈரானியர்கள் குறித்து புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இலங்கை வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த 14 அகதிகள் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் வந்தனர். தனுஷ்கோடி போலீசார் விசாரித்ததில், "அகதிகளுடன் ஈரான் நாட்டைச் சேர்ந்த இருவர், இலங்கையிலிருந்து படகில் வந்தது தெரியவந்தது. இதில் ஒருவர் கிட்னி பாதிக்கப்பட்டு வீல்சேரில் வந்துள்ளார். இருவரையும் போலீசார் விசாரித்தனர். ஈரான் நாட்டில் உள்ள கரேஜ் பகுதியைச் சேர்ந்த அசிசுல் சுல்லா குஸ்நிஷான்(75), முகமது உசேன் காதீர்(58) என்பது தெரியவந்தது. பாகிஸ்தான் வழியாக இந்தியா வந்து இலங்கை சென்றதாக கூறினர். இவர்கள் கொண்டு வந்த சூட்கேஸ் மற்றும் பைகளை போலீசார் சோதனை செய்தத…
-
- 3 replies
- 1.3k views
-
-
அத்வானி, மோடியை கொல்ல சதி . இந்தூர், மார்ச் 31: மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சிமி அமைப்பின் தீவிரவாதிகள் பிஜேபி மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது. . தடை செய்யப்பட்ட சிமி அமைப்பை சேர்ந்த 5 பேர் இன்று இந்தூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 13 தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அத்வானி, மோடி, உமா பாரதி, வி.எச்.பி. தலைவர்கள் அசோக் சிங்கல், பிரவீன் தொகாடியா ஆகியோரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. இதனை இந்தூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அன்ஷýமன் யாதவ் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த விச…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிகேகே எனும் குர்திஸ் மக்களுக்கு தன்னாட்சி அதிகாரம் கேட்டு ஆயுத வழியில் போராடும் அமைப்புக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட நடவடிக்கைகள் (குறிப்பாக அவற்றின் சொத்துக்களை முடக்கி உறையவைத்தமை + பயங்கரவாதப்பட்டியலில் இட்டமை) சரியானதல்ல என்று ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் Basque separatists, Eta, Tamil Tigers மற்றும் Hamas போன்ற போராளி அமைப்புக்களும் குறித்த செயற்பாட்டுக்கு எதிராக தடை நீக்கம் கோரக் கூடிய சாத்தியம் உள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. EU court annuls PKK terror ruling A ruling to blacklist Kurdish rebel group the PKK as a terrorist organisation and freeze its assets has been overturned b…
-
- 1 reply
- 974 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையானது இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரி - அல் கொய்தாவின் பிரதித் தலைவர் வீரகேசரி இணையம் 4/3/2008 7:01:06 PM - ""ஐக்கிய நாடுகள் சபையானது இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரியாகும்'' என அல் கொய்தாவின் பிரதித் தலைவர் அய்மான் அல் ஷவாஹ்ரி தெரிவித்துள்ளார். இஸ்லாமிய இணையத்தளம் மூலம் நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிட்ட செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எகிப்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அல் ஷவாஹ்ரி, ஆப்கானிஸ்தானிலோ அன்றி பாகிஸ்தானிலோ மறைவிட வாழ்க்கை நடத்தி வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. ""யூத தேசமான இஸ்ரேலின் உருவாக்கம் மற்றும் முஸ்லிம்களின் நிலப்பகுதியை ஆக்கிரமித்தமை என்பனவற்றை ஐக்கிய நாடுகள் சபை நியாயப்படுத்தியுள்ளது. மேலும் ஆப்கானி…
-
- 0 replies
- 569 views
-
-
தமிழர்களை அவமதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சிங்களத் திரைப்படத்துக்கு தமிழ்நாடு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. "பிரபாகரன்" என்ற பெயரில் தமிழர்களை அவமதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு தமிழ்நாட்டின் சென்னையில் பதனீட்டுப் பணிகளை மேற்கொண்டிருந்த சிங்களத் திரைப்படத்தை முடக்க வேண்டும் என்றும் அப்படத்தின் பிரதிகளை இந்திய அரசுக்கு அழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை மாநகர முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று செவ்வாய்க்கிழமை வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று புதன்கிழமை நீதிபதி சேதுமாதவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தொல். திருமாவளவனின் சட்டவாள…
-
- 1 reply
- 707 views
-
-
மலேசியாவில், அடுத்தடுத்து இரண்டு திருப்பங்கள் ஏற்பட்டுள் ளன. இதுநாள் வரை, பிளவுப்பட்டு இருந்த மூன்று முக்கிய எதிர்க்கட்சிகள், ஓர் அணியில் நின்று செயல்பட முடிவு செய்துள்ளன. மலேசியாவில், `ஐக்கிய மலாய் தேசிய கழகம்’ என்ற கூட்டணி ஆட்சி, 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பிரதமராக, அப்துல்லா படாவி உள்ளார். சம உரிமை கேட்டு, இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டது, பொருளாதார சிக்கல் ஆகியவை, மலேசிய அரசுக்கு கடும் நெருக்கட........................ தொடர்ந்து வாசிக்க............................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7003.html
-
- 0 replies
- 659 views
-
-
பிறமொழிப் பெயர்களுக்குத்தடை தமிழ்நாட்டில் அல்ல-சீனாவில் சீனாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு எந்தப் பெயரையும் சூட்டிவிட முடியாது. குழந்தைகளுக்கு பெயர்சூட்டும்போது வெளிநாட்டு மொழிகளின் எழுத்துக்களும், குறியீடுகளும் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என சீன அரசு பிறப்பித்துள்ள சட்டம் மிகக்கடுமையாக செயல்படுத்தப்படுகிறது. சீன மொழி, பண்பாடு ஆகியவற்றுக்கு இசைவான பெயர்களை மட்டுமே சூட்டமுடியும். பிறமொழிப் பெயர்களை ஒருபோதும் சீனக்குழந்தைகளுக்குச் சூட்ட முடியாது. சீனாவில் மட்டுமல்ல, ஜப்பான், டென்மார்க், ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா போன்ற பல நாடுகளில் அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பெயர்ப் பட்டியலில் உள்ள பெயர்களில் ஏதாவது ஒன்றைமட்டுமே குழந்தைகளுக்குச் சூட்டவேண்டும். …
-
- 0 replies
- 629 views
-
-
தமிழக மீனவர்களைக் காக்கும் கடமை தவறியது ஏன்? பிரதமர் மன்மோகனுக்கு வைகோ கேள்வி? இலங்கை தீவில் இலங்கைத் தமிழர்களை அடியோடு அழித்துவிட வேண்டும் என்று செயல்பட்டுவரும் இலங்கை அரசின் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் வருவதைக் குறிப்பிட்டு, எனது வேதனையையும், கவலையையும் வெளிப்படுத்தி, நான் தங்களுக்கு 9-12-2007, 18-12-2007, 25-01-2008 ஆகிய நாள்களில் எழுதிய கடிதங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், தாங்கள் 5-03-2008 தேதியிட்டு எனக்கு எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றேன். தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளபடி, இலங்கைக் கடற்படையினரால் மிருகத்தனமாக கொலைசெய்யப்பட்டு வரும் தமிழக மீனவர்களின் உயிர்ப்பிரச்சினையை, இந்திய அரசு மிகவும் மெத்த…
-
- 0 replies
- 620 views
-
-
ஒலிம்பிக் தீபத்திற்கு சீனாவில் பெரும் உற்சாக வரவேற்பு ஒலிப்பிக் தீபத்திற்கு சீன மக்கள் பெரும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இன்று ஒலிப்பிக் தீபம் சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு விமான மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. விமான மூலம் சென்றடைந்த ஒலிம்பிக் தீபம் சீனாவின் தியனமென் சதுக்கத்தில் வைத்து சீன மக்களால் பெரும் உற்சாக வரவேற்ற அளிக்கப்பட்டது. சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ ஒலிம்பிக் தீபத்தைக் கொண்டு, அங்கிருந்த ஒலிம்பிக் சுடரை ஏற்றினார். மார்ச் 24ம் நாள் ஏதென்ஸின் ஒலிம்பியாவில் உள்ள ஹீரா (Hera) கோயிலில் பாரம்பரிய முறையில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் தீபம், கடந்த ஒரு வாரமாக அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் வலம் வந்த பின்னர் பீஜிங்கை வந்தடைந்துள்ளது. நாளை கசகஸ்தான் …
-
- 0 replies
- 580 views
-
-
சிப்பாவே தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி சிப்பாவேயில் நடைபெற்ற அந்நாட்டுக்கான அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோர்கன் சவான்கிராயுக்கு சிம்பாவேயின் அதிபராக வருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் ரொபேர்ட் முகாபே தோல்வியடைந்துள்ளார். 210 தொகுதிகளில் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. தேர்தல்களில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. pathivu.com No reason why Zimbabwe election results should be delayed: US The United States said Wednesday the Zimbabwean authorities had no reason to postpone announcing all the results for the country's weekend general election. "We don't think that th…
-
- 0 replies
- 543 views
-
-
இந்தியா, 1974ம் ஆண்டு உலகமே வியக்கும் வண்ணம் அணுகுண்டு சோதனையை நடத்தியது. அதன்பின்னர் 1994ம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோதனையை நடத்த திட்ட மிட்டிருந்ததாகவும், ஆனால் அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாக, இத்திட்டம் கைவிடப்பட்டதாக, அணுசக்தி விஞ்ஞானி திரு.சந்தானம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். அணுகுண்டு சோதனை முயற்சி அமெரிக்க செயற்கைக் கோள்களால் உளவு பார்க்கப்பட்ட........... தொடர்ந்து வாசிக்க.................... http://isoorya.blogspot.com/2008/04/1994.html
-
- 0 replies
- 970 views
-
-
தமிழர்க்கு இன்னல் விளைவித்தால் சம்ஹாரம் நிஜம்-சரத் சென்னை: வந்தாரை வாழவும், ஆளவும் வைத்த தமிழர்களின் பரந்த மனப்பான்மையை ஏமாளித்தனம் என்று நினைத்தால் பிற மாநிலத்தினர் நினைத்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என இந்திய மக்கள் சமத்துவக் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக குரல் கொடுக்கும்போதெல்லாம் கர்நாடகாவில் வாழக்கூடிய தமிழர்கள் அச்சுறுத்தப்படுவதும், தாக்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலை நீடித்தால் பிராந்திய உணர்வு, வெறியாக மாறி தேச ஒற்றுமைக்கே குந்தகம் விளைந்து விடும் அபாயம் இருக்கிறது. மத்திய அரசு நடுநிலை தவறி தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கும், தங்…
-
- 0 replies
- 693 views
-
-
நெருங்கிய உறவினர்கள் இறந்து விட்டால், அவர்களின் அஸ்தியை, இமய மலையில் தூவுவதும், புண்ணிய நதிகளில் கரைப்பதும் வழக்கம். இனி அஸ்தியை, நிலவுக்கே அனுப்பி வைக்கலாம். இதற்கு ரூ.4 லட்சம் கட்டணம். அமெரிக்காவில், ஹூஸ்ட......................... தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/04/4.html
-
- 0 replies
- 730 views
-
-
வரும் மே மாதத்தில் உலகம் அழியப் போவதாகவும், அதுவரை தனிமையில் பிரார்த்தனையில் ஈடுபடப் போவதாகவும் ரஷ்யாவில் ஒரு அமைப்பு, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும், “டூம்ஸ்டே’ என்ற வழிபாட்டு அமைப்பு, ரஷ்யாவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள், வரும் மே மாதத்துடன் உலகம் அழிய............................ தொடர்ந்து வாசிக்க+வீடியோவைப் பார்க்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_01.html
-
- 2 replies
- 1.6k views
-
-
பெங்களூர் தமிழ்ச் சங்கம் மீதும் தாக்குதல் பெங்களூர்: பெங்களூர் அல்சூரில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் மீதும் கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். ற்கு நேற்று 20 பேர் கொண்ட கும்பல் வந்தது. வெளியில் உள்ள தட்டிகள் மற்றும் போர்டுகளை அவர்கள் தாக்கி சேதப்படுத்தினர். இரண்டு பேர் உள்ளே வந்து சில பிட் நோட்டீஸ்களை போட்டு விட்டுச் சென்றனர். ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் நேற்று தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட 2 தியேட்டர்கள் சூறையாடப்பட்டன. இதி்ல் நடராஜ் தியேட்டருக்குள் புகுந்து நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். இந்த தியேட்டர்களின் முன் வைக்கப்பட்டிருந்த சினிமா படங…
-
- 6 replies
- 1.5k views
-
-
இந்திய - சீன எல்லைப் போரில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து பல ஆண்டுகளுக்கு முன்னர் முறிந்து போன இந்திய - சீன உறவுகள் தற்போது சீர்பெற்று வரும் நிலையில்.. இந்தியாவின் தயவில் சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து வந்த தலை லாமாவை இந்தியா இன்று தனது நலனுக்காக எச்சரித்துள்ளது. இதன் படி தலை லாமாவின் சீன அடக்குமுறைக்கு எதிரான செயற்பாடுகளை அவர் இந்தியாவில் இருந்து செய்ய முடியாத நிலை தோன்றி வருகிறது. ஆனால் அவருக்கு இந்தியா தனது நல்வரவை அளிக்கும் எங்கின்றார்.. இந்திய பாதுகாப்பமைச்சர் குழப்பமாக..! ஈழத்தமிழர் விவகாரத்திலும் தனது நலனுக்காக சிறீலங்காவை பாவிக்கும் பொருட்டு ஈழப்போராட்டத்துக்கு ஆதரவளிக்க முன் வந்த இந்தியா தற்போது அதை விலக்கி.. சிறீலங்காவுடன் நெருங்கிச் செயற்படுவதும் குறிப…
-
- 2 replies
- 912 views
-