Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மானுட வேட்டை போலில்லை புலிகளின் வேட்டை. அச்சுறுத்தலின்றி அவை தூக்குவதில்லை தம் நக ஆயுதங்களை. புலிகள் அமைதி விரும்புபவை... தனித்து இருப்பவை... தனக்கென எல்லைகள் வகுத்துக் கொள்பவை... தன் எல்லை தாண்டி வராது புலிகள் எப்போதும்... புலிகளுக்கும் உண்டு எல்லை தாண்டா இறையாண்மை புலி இனம் அழிந்து வருவதாக யாரும் சொன்னால்கூட நம்பாதீர்கள்... காடுகளின் கம்பீரம் புலிகள். புலிகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. சிங்கமும் புலியும் ஒரு வனத்தில் வாழ்வதில்லை. சிங்கமும் புலியும் ஒரு போரில் மோதுவதில்லை. மோதினால்... புலிதான் வெல்லுமென்கிறது வனங்களின் வரலாறு. -தாமிரா http://forwardeded.blogspot.com/2008/11/blog-post.html வலைப்பூவில் படித்தேன்…

  2. ஓ... கனடா ..உங்களை வரவேற்கின்றது -------------------------------------- மார்கழிப் பனிமழையில் மனங்களை இணைத்து வைக்கும் கனடிய நட்பு வட்டம் கன இதயத்தை நெகிழ வைக்கும் சொல்வதைச் செய்து வைக்கும் சாகராவின் சாகசங்கள் மனிதத்தை தேடியலயும் மனிதனின் நேசங்கள் புயலைப் போல புகுந்து சுழட்டும் ஆதியின் வா(ய்)ல் வீச்சுகள் முயலைப்ப்போலப்பதுங்கி புயலைப் போல புரட்டியெடுக்கும் முரளியின் வாய்வீச்சுக்கள் புயலைப்போல எழுந்து மலரைப்போல தழுவும் இரசிகையின் வரவேற்பு கைப்பிடித்த மணிவாசகனின் வரவில் நிகழும் லயிப்பு பாடவென்றே அடம் பிடிக்கும் நிழலின் நிஜம் இன்னும் என்னை கதற வைக்கும் உறவுகள் காத்திருக்க வைத்து கவிதை கொண்டு வரும் எல்லாள மஹாராஜா(அ…

  3. இவர்கள் ராஜீவுக்காக அழ மாட்டார்கள் ! 1991 ஆம் ஆண்டு ராஜீவின் கொலையின் பின்னான நாட்களில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நடத்திய கொலை வெறியாட்டத்தையும், காலம் காலமாக அக்கட்சி நடத்திவரும் கொடுன்கோல் அரசியலையும் கண்டித்து எழுதப்பட்ட கவிதை இது. அண்மையில்த்தான் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்! பரோவா. எகிப்திய மன்னன். தான் இறந்தவுடன் தனது பட்டத்தரசியையும், ஆசை நாயகிகளையும், மந்திரிப் பிரதானிகளையும், தனது ஆடை ஆபரணங்களையும், பொக்கிஷங்களையும், அடிமைகளையும் தன்னுடன் சேர்த்துப் புதைக்கச் சொன்னான் அந்த மன்னன். பூவுலக வாழ்வைச் சுவர்க்கத்திலும் தொடரவேண்டுமென்பது அவன் ஆசை. ஆசை நி…

  4. பிறந்தநாள் திருவிழா பேருவகையின் ஒளிவிழா காரிருள் அகன்றது பேரொளி பிறந்தது- அவ் ஓரொளி மகிமையில் உவகையே நிறைந்தது வானமும் வையமும் வாழ்த்தியே மகிழ்ந்தது விண்ணக வேந்தனை மண்ணதில் வாழ்த்திடும் பிறந்தநாள் திருவிழா பேருவகையின் ஒளிவிழா தீபங்கள் கரமேந்தி தெய்வீக மனமேந்தி ஆனந்த உணர்வேந்தி அகமெங்கும் மகிழ்வேந்தி மனங்களில் அன்பேந்தி மனிதத்தை அகத்தேந்தி மழலையாய் மலர்ந்தநம் மகிமையின் தேவனின் பிறந்தநாள் திருவிழா பேருவகையின் ஒளிவிழா எதிர்காலம் சிறந்தோங்க எம் மண்ணும் தளைத்தோங்க வருங்காலம் வளமோங்க எம்வாழ்க்கையும் நலமோங்க வழியதன் வெளிச்சமாய் வாழ்வுக்கே அர்த்தமாய் ஒளியதன் மைந்தனின் உண்மையின் வேந்தனின் பிறந்தநாள் …

  5. குண்டு மழையோடு மாமழையும் பொழிகிறது மகிந்தாவின் அநியாத்தால் குண்டு மழையும் வான்பிதாவின் புண்ணியத்தால் மாமழையும் பொழிகிறது ஒரு குடையின் கீழே குடியிருந்த எங்கள் வாழ்வு வன்னிக் காட்டில் வெள்ளக்காடாய் மிதக்கிறது நேற்றிருந்த வீட்டையும் இன்றிருந்த குடிலையும் இழுத்துப் போனது வெள்ளம் இனியென்ன செய்வது? முன்னேறி வரத்துடிக்கும் எதிரிகளின் காலடிச் சத்தம் முன்னரங்க முறியடிப்பில் பிள்ளைகளின் யுத்தத்தால் தொலைகிறது ஆயிரம் அர்பணிப்புகள் அடைமழை போல் புரட்சிகள் ஆடு நனையுது என்று ஓநாய்களும் அழுகிறது தூக்கிப் போக முடியாத சொத்தாக நிமிர்ந்து நின்ற தென்னையும் பனையும்கூட சரிந்துபோய்க் கிடக்கிறது எத்தனை முறை இடம்பெயர்ந்தாலும் …

  6. பாசத்திற்குரிய முரளிக்கு: வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். இந்தப்பாடல் உங்களுக்கான படையல். அசல்: நா.முத்துக்குமார் நகல்: வசீகரன் பல்லவி: நினைத்து நினைத்துப் பார்த்தேன் விலகி நெருங்கி பார்த்தேன். உங்கள் எழுத்தினாலும் யாழும் மகிழுதே உங்கள் பதிவை எண்ணி நானும் வியக்கிறேன். முகமூடி அணிந்து யாழில் இன்னும் எழுதும் பதிவும் எதற்கு நண்பனே? (இது உங்களுக்கல்ல ஏனைய உறவுகளுக்கு!) சரணம்-1 அமர்ந்து எழுதும் அறையின் ஒளியும் உங்களைக் கேட்கும் எப்படிச் சொல்வேன்? யாழ் உறவுகளின் முகங்கள் தெரியுமா? தொடர்ந்து எழுதும் விரலின் வலியை மயிலிறகு கேட்கும் எப்படிச் சொல்வேன்? தொலைந்துபோன உறவுகள் சேருமா? கருத்துக்களத்தில் ஆக்கம் சேர்க்கும் கைகள் இன்று எங்…

  7. என் கல்லறைச் சினேகிதியே...... கவிதை....... என் கல்லறை சினேகிதியே உன்னை காணவென்று வந்தேன் உனை காக்க வரவில்லை....! நீ சொல்லிவிட்டுச் சென்ற என் கடமைகள் ஏராளம் அதிலும் சில நிமிடங்கள் உனக்காய் தருகிறேன்... அதுவே ஏராளம்....! பல வருங்களாய் நம் தேசத்துக்காய் போரிட உன் தூக்கம் இழந்தாய்.... உன் தாமரை விழியிரண்டும் செண்பக விழியானாய்.... உன் பஞ்சுப் பாதங்களால் பாறையிலும் நடந்தாய்.... எதிரியை எதிர்த்து மண் காக்கும் சமரில் விதையாக விழுந்து என் விழியையும் திறந்தாய்..... கல்லூரிக் காலத்தில் நீ என் கண்கவரும் காதலி நானோ உன்னைத் தேடுவேன் ; நீயோ விடுதலையைத் தேடிச்சென்றாய்... மூடிய சிறையில் உலவும் சுத…

  8. (கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட வாணிவிழா - 2008 கவியரங்கில் இடம்பெற்ற எனது நண்பன் கி.குருபரனுடைய கவிதை இது) தூயதாய் நூல்கள் கற்று துலங்கிவரும் இச்சபையில் பாலகன் நான் வந்து பாடுவதோ? – யாரிவரோ? தொக்கிநிற்கும் கேள்வி துவங்கின் எனைக்காக்க விக்கினேஸ்வரா சொல்லு விடை! வள்ளியை மணமுடிக்க வயோதிபனாய் வந்த வெள்ளி மயில் வாகனனே வேலவனே – நல்லூரின் உள்ளிருந்து கொண்டே உயிர்காப்பாய் என் கவிக்கு கல்லெறி சேராமல் கார்! பெற்றுப் புரந்தந்து பேணிப்பல செய்து உற்ற தேவைகளை உடன்முடித்து- கற்கவைத்து நாலுபேர்முன்னே நடமாட வைத்த வைத்த அம்மா நீ போனாலும் மறவேன் புகழ்! எதுகை மோனை இலட்சணங்கள் கற்பித்து புதுமை செய்கின்ற புரட்சியனே – ச வே ப பா வாடை பிடிக்க வைத்…

    • 7 replies
    • 2.7k views
  9. மார்கழிப்பனி மழையில் யேசு பிறந்து வந்தார் மானிலம் பூச்சூட புது அழகினைப் படைக்க வந்தார்

  10. மாமரி அன்னையின் குழந்தையே ஏசுவே மாநிலம் யாவும் மாதவன் பிறப்பில் மகிழ்வும் ஆரவாரமும் மறுவாழ்வும் ஈழத்தமிழனுக்கு அவலம் மட்டுமா ? கண்ணீரும் செநீரும் , கொட்டும் மழையும் போதாதென்று ,எதிரியின் செல் மழையும் என்ன பாவம் செய்தாள் தமிழீழ தாயவள் வீதி எங்கும் மின் விளக்கு , விழா கோலம் நாதியற்ற தமிழன் மட்டும் நாய் படா பாடு , உண்ண உணவில்லை , உடையில்லை படுக்க பாயில்லை ,மண் தரையும்,மழைவெள்ளம் ஏனையா ஏசுவே எமக்கு இந்த கோலம். நேசக்கரம் நீட்ட , புது யுகம் பிறக்கவேண்டும் தமிழர் வாழ்வு மலர மாண்ட மண் வேண்டும் ஏசு பிறக்கவேண்டும் ,மக்கள் மகிழவேண்டும் புது வருடத்தோடு புது வாழ்வு பூக்க வேண்டும்.

  11. எங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு ஏணையில் உறங்கும் பச்சிளம் குழந்தையைக்கூட ஏவுகணை வீசி கொல்லும் எதிரிகளே உங்கள் உலக சாதனையை அம்மணமாய் நின்று கொண்டு உலகம் வாழ்த்தட்டும் எங்கள் வலிகள் உங்களுக்கும் புரியவில்லை இன்னும் இந்த உலகத்திற்கும் புரியவில்லை மனிதம் தொலைத்து வெறிபிடித்த மிருகங்களாய் கொடிய முகம் கிழித்து வாருங்கள் எங்கள் எல்லைகள் எங்கும் உங்களுக்காய் மரணக்குழிகள் காத்திருக்கிறது எங்கள் குருதி உறைந்த செம்மண் பூமி எழுந்து உங்களைத் திண்டு விழங்கும் வெறும் எலும்புக் கூடுகளாய் உக்கிப்போன எச்சங்களை பொறுக்கி உங்கள் வீட்டின் முற்றத்திலே கொண்டுபோய் கொட்டுவோம் கனரக வண்டிகள் சுவர்களை உடைக்க பறந்திடும் விமா…

  12. தாமரை இலையின் நீர்த் திவலை...! எத்தனை முறை தான் நீர் நினைத்தாலும் ஒட்டிக்கொள்ள முடிவதில்லை - இலையுடன்; நீர் பலமுறை சினந்திருக்கின்றது இலைக்கு புரியவில்லையே என்று...! பாவம் இலை...! அதனால் என்ன செய்யமுடியும் அதன் நெஞ்சுக்குள்ளும் ஈரமுண்டு... அதைவிட அதிகமாய் வலிகளும் நிறையவே உண்டு தடாக நீருக்கும் நீர்த் திவலைக்குமிடையே தடுமாறுகின்றது - இலை எத்தனை முறைதான் நீர்த்திவலைதனை அணைத்துக்கொள்ள நினைத்தாலும்... அதன் ஸ்பரிசத்தை மட்டுமே இலையால் கைது செய்ய முடிகின்றது. இலை அழுதகண்ணீரில் தான் தாமரைக் குளமே நீர்பெறுகின்றதென்பது எத்தனை பூக்களுக்குத் தெரியும் இருந்தாலும் என்ன... நீர் இருக்கும் வரை அதனைத் தன்மீது தாங்கி..…

  13. ஈழம் எங்கள் தாயகம் என்றும் வாழும் ஆலயம் வாழும் காலம் யாவும் எங்கள் உயிரைத் தந்தும் காத்திடுவோம் வீரர்கள் என்றும் சாவதில்லை சாவுக்குப் பயந்தவர் வீரரில்லை தோல்வியைக் கண்டு துவள்வதுமில்லை தமிழ் இனம் வெற்றியின் படியில் ஏறுகின்றோம் எங்களின் தியாக வித்துக்கள் நிட்சயம் ஒரு நாள் பயிராகும் எங்களின் கனவுகள் நனவாகும் ஈழத்தில் எங்கள் கொடி பறக்கும் தடைகள் கோடி என்றாலும் சிங்கள படைகள் தேடி வந்தாலும் விடைகள் எங்கள் தோள்களிலுண்டு விடியும் ஒரு நாள் வாருங்கள் நாளை மலரும் ஈழத்திலே சுதந்திர மலர்கள் மொட்டவிழும் இன்றைய எங்கள் போராட்டம் முடிவாய் இதற்கொரு பதில் சொல்லும். ஈழ வீதியிலே புலிக்கொடி தினம் பறக்கும்..அதை நாம் தினம் பாப்போம்

  14. நீ நினைத்திருக்கலாம் நான் அதுபற்றி கதைக்காமலே இருந்திருக்கலாம் என்று...! ஒரு வகையில் நீ நினைப்பது சரியாகப் பட்டாலும்...! ஒருவகையில் நான் பேசியதும் சரியாகத்தான் படுகின்றது....! ஒருவகையில் அது விழிச் சந்திப்புகளில் வெளிப்பட்டிருக்கலாம்...! அது புனிதமானது புனிதத்தின் நிழலைக்கூட தீண்டும் தகுதி எனக்கில்லை நீ.... இத்துணை ஆண்டுகளில் நான் கண்டெடுத்த அழகு பொக்கிசம்...! நானாக நினைத்தாலும் உன்னை இழக்கும் சக்தி... எனக்கில்லை...! இருந்தாலும்... விளக்கைக் காதலித்து அதன்நூடே மரணிக்கும் ஈசல் வாழ்க்கை என்னுடையது....! கடலைப் பார்த்திருப்பாய்...! எத்துணை முயன்றாலும் கரைகடக்க முடிவதில்லை அதனால் அலை கரை…

  15. உதயப் பொழுதில் கானத் தமிழில் காதோரம் நனைய களிப்பில் என்மனம்! உலகில் பரந்த தமிழின் செழுமை நிலைத்து நிற்க இறைவா பாராய்!! http://www.esnips.com/doc/15947adc-758f-4b...2256/kavikkuyil கவிக்குயில் பாடுது - குரல்:சங்கீதபூஷணம் (அமரர்) எம்.ஏ.குலசீலநாதன் - இசை: எஸ்.கே.பஞ்ச் - வரிகள்:தீரன் - நாடு: பிரான்ஸ் கொழும்பைக் காட்டிய இரதமே இன்று நீ எங்கே? சமத்துவம் சொன்ன சடப்பொருளே சட்டென நீயும் மறைந்ததென்ன? தினமொரு காட்சி நிதமொரு உணர்வு எவ்வளவற்றைக் கண்டிருப்பாய் அன்றைய பொழுதுகள் உன்னுள் நானும் உறைந்ததும் இன்றும் மனச்சுமையாய்!! http://www.esnips.com/doc/effe271b-e9fe-45...6b/Yarltheviyil யாழ்தேவி - குரல்:சாம் பி.கீர்த்தன் -…

    • 14 replies
    • 2.4k views
  16. மாலையில் மரணமென்று தெரிந்தும் காலையில் அழுவதில்லை மலர்கள். நீ மட்டும் சோகங்களை நினைத்து வாடுவதா அழகு?

  17. உன் நினைவால் வாடுகிறேன்...... கவிதை.... காலையிலே எழுவதற்கு மறுக்கும் கண்கள்... சில நாளாய் அதிகாலை விழிக்கிறது.... மனதெல்லாம் லேசாகி பஞ்சாகப் பறக்கிறது.... இந்த மாற்றம் என் மனதில் சில நாள்தான்.... என் மனதை வாடகைக்கு எடுத்துக்கொண்ட வஞ்சிமகள் நினைவால்தான்.... வாடகை தராதே நிரந்தரமாய் வந்துவிடு... சொல்ல நினைக்கிறேன் முடியவில்லை; காரணம் நான் அவளின் முகமின்னும் பார்க்கவில்லை.... என் காதலை சொல்வதா விடுவதா...? அவளின் கண்பார்த்தால் தெரிந்துவிடும்... இல்லையேல் அவள் கதை கேட்டால் புரிந்துவிடும்... அவளின் கண்ணும் பார்க்கவில்லை... அவள் பேச்சும் கேட்கவில்லை... ஆனாலும் அவளின் கண்ணாடி உருவம…

  18. " உனக்கென இருப்பேன்" என்னை விட்டுச்செல்லாதே எந்தன் பூமி சுற்றாதே உன்னை நீங்கிப்போனாலே உயிரும் என்னில் தங்காதே! காணும் காட்சி உன்னோடு! கவிதைச்சொல்லும் உன்னோடு! வாழும் காலம் எல்லாமே அன்பே நானுன் நெஞ்சோடு! இருளைக்கிழித்த சூரியனாய் எனக்குள் வந்து கதிர் விரித்தாய்! எழும்பி நடக்க நீதானே அன்பே உந்தன் விரல் தந்தாய்! எனக்கே எனக்கென புது உலகம் உன்னால்தானே உண்டாச்சு?! உன்னைச் சேர்ந்த பின்னால்தான் வாழ்வே அர்த்தம் என்றாச்சு?! காதல் என்றெ சொல்லுக்கே உந்தன் பெயரே பொருளாச்சு! இருக்கும் காலம் வரையிலுமே உனக்கே எந்தன் உயிர்மூச்சு! உயிரில் வந்து கலந்தவனே என் உணர்வாய் என்றும் நிறைந்தவனே! இமைபோல் காக்கும் க…

  19. நினைவுகளின் எச்சங்கள்...... கவிதை..... வானத்தை பார்த்தவண்ணம் மறைவுக்காய் இடம்தேடி கால்வலிக்க ஓடுகிறேன்..... என் தலைமேலாய் விமானங்கள் பறந்து குண்டுமழை பொழிகிறது..... உயிர்காக்கும் பந்தயத்தில் ஒலிம்பிக்போட்டி வைத்தால் தங்கப்பதக்கம் வெல்லும்; முதல் தமிழீழத் தமிழன் நான்; ஆனாலும் ஈழத்தின் கொடியின்னும் ஒலிம்பிக்கில் பறக்கவில்லை இளவயதுக் காரணத்தால்; அங்கே அனுமதியும் எனக்கில்லை..... கல்லுத் தெருக்களிலே நான் ஓடும் வேகத்தால் காலில் குருதிவந்து வெள்ளைமண் கூட செம்மண்ணாய் மாறிவிட.... நெருஞ்சி முள்ளெல்லாம்; கால் நிகங்களிலே வேல் பாய்ச்சி விட முடிவில்லாத் தூரத்துக்கு முடிந்தவரை ஓட்டம்.... எ…

  20. உதயப் பொழுதில் கானத் தமிழில் காதோரம் நனைய களிப்பில் என்மனம்! உலகில் பரந்த தமிழின் செழுமை நிலைத்து நிற்க இறைவா பாராய்!! http://www.esnips.com/doc/15947adc-758f-4b...2256/kavikkuyil கவிக்குயில் பாடுது - குரல்:சங்கீதபூஷணம் (அமரர்) எம்.ஏ.குலசீலநாதன் - இசை: எஸ்.கே.பஞ்ச் - வரிகள்:தீரன் - நாடு: பிரான்ஸ் கொழும்பைக் காட்டிய இரதமே இன்று நீ எங்கே? சமத்துவம் சொன்ன சடப்பொருளே சட்டென நீயும் மறைந்ததென்ன? தினமொரு காட்சி நிதமொரு உணர்வு எவ்வளவற்றைக் கண்டிருப்பாய் அன்றைய பொழுதுகள் உன்னுள் நானும் உறைந்ததும் இன்றும் மனச்சுமையாய்!! http://www.esnips.com/doc/effe271b-e9fe-45...6b/Yarltheviyil யாழ்தேவி - குரல்:சாம் பி.கீர்த்தன் -…

    • 0 replies
    • 627 views
  21. காதலில் கவிதையில்லை... திங்கள்கிழமை, டிசம்பர் 8, 2008, 12:53 -ரிஷி சேது உன் கவிதை வரிகளால் கட்டிப்போட்டாய் நான் மயங்கிக்கிடந்த ஓர் வேளையில் நீ காதலைச் சொன்னாய்- நான் சிறு பறவையாய் தலையசைத்தேன்... நீ கொஞ்சம் கொஞ்சமாய் உன் கவிதைகளிலிருந்து மாறுபட்டாய் உன் பொய்முகம் ரசிக்கமுடியவில்லை காதலிலிருந்தும் வெளிவரமுடியவில்லை அதுவும் தேவைப்பட்டது- நீ சந்தர்ப்பங்களுக்காய் காத்திருந்தாய்.. நான் பருந்திடமிருந்து தப்பிக்கும் ஓர் சிறுகுஞ்சாய்.... ஓர் எச்சரிக்கை உணர்வோடே நாம் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம் ஆது- தேர்ந்த சதுரங்க விளையாட்டை ஒத்திருந்து நீ நேர்த்தியாய் அதைச்செய்தாய்.. நான் பலமுறைதோர்க்க ஆரம்பித்தேன்.. நான் எதி்ர்பார்…

    • 3 replies
    • 1k views
  22. அவைக்கஞ்சா சிங்கமே! அண்ணன் பாலசிங்கமே! இதயத்தில் இடி விழுந்தது! எம் தேசத்தின் குரல் ஒடிந்தது! விடியும் வேளையில் விளக்கு அணைந்தது!-புலிக் கொடியும் இறங்கி அரைக் கம்பத்தில் பறந்தது! ஈழத்தின் அரசியல் யாப்பை எழுத வேண்டியவனே! எப்படித் தாங்குவோம் உன் இழப்பை! தமீழீத்தில் இன்னொரு சுனாமியாய் உன் இழப்பு! நீ இல்லாத பேச்சுவார்த்தைக் களம்!-அது நீர் இல்லாத குளம்! நோய் வந்த போதும்-புலிக்கு ஓய்வு மரணத்தில் தான்!-என்று சிரித்தபடியே நீ செப்பியதை! நினைத்துப் பார்க்கவே முடியவில்லை!-நான் நினைக்கிறேன் இனிப்பேச்சு வார்த்தை இல்லை! பேச வேண்டியதெல்hம் நீ பேசி விட்டாய்! பேச்சுக்கு இனி ஓய்வு-அதனால் தானோ-நீ எடுத்து விட்டாய் ஓய்வு!-நீ பேச வருகின்றாய் என்றால் எ…

  23. தமிழீழத்தின் சிதைந்த அழகுகள்..... கவிதை...... சிதறிடும் சில்லறைபோல் சிரிக்குமெங்கள் மழலைகள்; இன்று மிக்’ குகளின் இரைச்சலிலே சிரிப்பெல்லாம் இழந்து; பிஞ்சுகளின் முகமெல்லாம் விறைத்து தாயின் முகம்பார்த்து விக்கி விக்கி அழுதிடுமே..... அதைப் பார்த்து;நம் மூச்செல்லாம் நின்றிடுமே..... இது நாம் இன்றுகாணும் உயிர் வாட்டும் துன்பம் எமது ஈழத்தின் விடியல்வரை நாமிழந்துவிட்ட இன்பம்....! வெள்ளை ஆடைகளுக்கு திருஸ்ரிப் பொட்டு வைச்சால் போல் தங்கள் கறுப்பு முகங்களிலே முத்துப்போல் பல் காட்டி வெக்கத்துடன் சிரித்திடும்; எங்கள் கருப்பு எலிசபத்துக்களின் கண்களெல்லாம் ஒளியிழந்து கருவாட்டுக் கண்களுடன் தங்கள் கற்பும் அழிந்துபோகும்.... மற…

  24. கொத்தணிக் குண்டுகள் -Cluster bombs உலகம் எங்கும் தடைசெய்யபட்ட எமக்கு 29.11.2008 இன்று விடுதலைநாள்! பறந்து பறந்து வெடிக்கும் எமக்கு பிடித்த நகரம் தமிழீழத்தில் கிளிநொச்சி! எம்மைக் கட்டுப்படுத்த முடியாது. எம்மைக் கொச்சைப்படுத்த முடியாது. சோவியத் சிறைகளில் அடைபட்டுக் கிடந்தோம் சிறிலங்கா வந்து மீட்டெடுத்து தமிழர்களின் தலைவாசலில் கட்டிவைத்து விளையாடுகிறது. ஈழத் தமிழருக்காக உலகத் தமிழர்கள் மட்டுமில்லை நாங்களும்தான் கொத்துக் கொத்தாய் கண்ணீர் வடிக்கிறோம்! நாம் என்ன செய்வது? எம்மை உருவாக்கியவனும் பயங்கரமானவன் நாமோ அவனைவிடப் பயங்கரமானவர்கள் எம்மை இலகுவில் அழித்துவிட முடியாது ஒருமுறையல்ல இருமுறையல்ல…

  25. வன்னி வான்பரப்பு நீலமில்லை. கூரைகள் இல்லை படுத்துறங்கக் குடிசையுமில்லா மரத்தடி வாழ்வு மடுவிலிருந்து ஆரம்பம் கற்காலம் இதுவல்ல கடந்த காலத் தொடர். சமாதானம் சமாதானமென்று சொன்னோர் பிணதானம் வாங்கி உயிரெடுக்கும் பலிகால ஆரம்பம். போனது பாதி போகாதது மீதியென பதுங்குளி வாழ்வு மீளவும். பலாலியில் ஆரம்பித்து வலிகாமம் வடமராட்சி தென்மராட்சி வன்னியென போர்க்கதவுகள் திறபட தசாப்தங்களைத் தின்கிறது தமிழர் கதை. வன்னி வான்பரப்பு நீலமில்லை தமிழர் குருதியின் நிறமாக வானும் தரையும் ஒளிவர்ணக் கலவையின்றி உடைவுகளும் சிதைவுகளும் ஒவ்வொன்றாய் தொலைகிறது. கூரைகளற்று விமானக் குண்டுகள் தாங்கும் நிலமாக வன்னிமண். உதவிக்கும் ஆ…

    • 2 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.