கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இன்று இணையப்பக்கங்களில் மேய்ந்து கொண்டிருந்த பொழுது http://veyililmazai.blogspot.com என்கிற வலைப்பூவில் ஒரு கவிதையை படித்தேன் பிடித்திருந்தது. நமக்குத்தான் சொந்தமாய் எழுதவராதே அதனாலை நீங்களும் படித்துப்பார்க்க இங்கு இணைக்கிறேன்.நன்றிகள். தீக்குச்சி இரவுகள்... பௌர்ணமி இரவில் நிலவைத் தொலைத்திருந்தது வானம்... உலக வெப்பமயமாதலின் விளைவென்கிறார்கள், எங்கள் உயிர் குடித்தத் துப்பாக்கிகளின் முனையிலிருந்து எழுந்தப் புகைமூட்டத்தில் கருகிவிட்டதென்பதை அறியாமல்... நாளை மாந்தோப்பில் சந்திக்கலாமென்று கையசைத்துச் சிறகுமுத்தம் கொடுத்தனுப்பிச் சென்ற காதலி, சீர்கெட்டச் சீருடைக்காரர்களின் குதம்து…
-
- 2 replies
- 1k views
-
-
உங்கள் வீடுகளில் 3 மணி நேர மின்வெட்டாமே! எமக்கு அந்த பிரச்சினை இல்லை! உங்கள் தெருக்களில் உள்ள குழாய்களில் நல்ல குடிநீர் வருவதில்லையாமே! எமக்கு அந்த பிரச்சினை இல்லை! உங்கள் கிராமங்களில் உள்ள தெருக்கள் குன்றும் குழியுமாமே! எமக்கு அந்த பிரச்சினை இல்லை! உங்கள் நகரங்களில் வாகன நெரிசல் அதிகமாமே! எமக்கு அந்த பிரச்சினை இல்லை! மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்காக 50 ரூபாய் எரியவைக்கும் ஒரு தீப்பெட்டிக்கும் , ஆறடி ஆழத்தில் தோண்டிய பின் கிடைக்கும் அரைச்சொட்டு தண்ணீருக்கும், பதுங்கு குழி அமைப்பதற்கு வேறிடமில்லாமல் கைவைக்கும் மண் பாதை ஹைவேக்களுக்கும் சைக்கிள்களையும், செல்ல நாய்க்குட்டிகளையும் ஏற்றிச்செல்லவதற்காகவாவது, இடம் தரு…
-
- 0 replies
- 803 views
-
-
வான் புலி வலம் வான் புலி வலம் வரும் வானம் இதுவல்லவோ வாழ்த்து தமிழா எம் வான் புலி வருகிறான் வான் புலி தந்த எம் தலைவா வாழ்வாய் பலகாலம் வடக்கில் எழுந்திடுவார் ஓர் சொடுக்கில் முடித்திடுவார் இடரினை நீ தந்தாலும் தொடராக தொடுத்திடுவர் சப்புகஸ்கந்தை எரிகிறதாம் கட்டுநாயக்க நடுங்குகிறதாம் தூங்காது அவர் விழிகள் துயரங்கள் உனக்கு நிரந்தரம் வானவேடிக்கை காட்டி எம்மவரை நீ வாழ்த்திடுவாய் விரட்டிவரும் விமானம் வீணாக பறந்திடும் பின்னே நீ விலங்கிட்ட தமிழன் விலங்குடைத்து பறக்கிறான் ஈழம் மலர்கின்றதே எம் தேசம் விடிகின்றதே இந்திரா தூங்கிடும் எம்மவர் வான் வலம் வந்தால் ஒலிகனும் கனனும் நண்பர்கள் வான் புலிக்கு பசூக்கா நீ அடித்தாலும் பதுங்கிடார் எம் புலிகள் …
-
- 10 replies
- 5k views
-
-
தமிழீழத்துக்கு ஓர் பயணம்.......... கவிதை.... சிறுவனாய் அன்று சிட்டுக்கள் வால் பிடித்து சுற்றிவந்த தெருக்களெல்லாம் வசந்தமாய் நினைவில் வர வானூர்தியில் அமர்ந்து வாழ்ந்த நிலம் செல்கிறேன்.... வட்ட நிலவுகளாய் வண்ண நிறங்களாய் குருவிக் கூட்டங்களாய் குளிர்விக்கும் வசந்தங்களாய் கூடி நின்ற எங்கள் சின்னஞ்சிறு காதலிகள் கூடிவந்த தெருக்கள் என்றும் எந்தன் நினைவுகளில் இன்பக் கனவுகளாய் அன்று நான் நண்பனிடம் அவள் என் கிளியென்பேன் அவளோ தன் தோழியிடம் அவன் என் புலியென்பாள் இப்படியாய் பல பல பள்ளிக் கால விளையாட்டு இவையெல்லாம் மனங்களில் மறையாத இன்பத் தேனூற்று.... சிட்டுக்களைச் சிறைபிடிக்க அவசரமாய் செல்வதென்றால் அம்மா…
-
- 8 replies
- 1.6k views
-
-
எப்படி மறப்பேன் என் தாய் நிலத்தை ? - நிர்வாணி - எங்களின் தாய்நிலத்தை அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியாது காலங்கள் எத்தனை கடந்தாலும் இந்த உடல் கோலங்கள் எத்தனை கண்டாலும் சொந்த மண்ணை மறந்திடமுடியாது மறந்துவிடச் சொல்கிறாள் என் காதலி கனடாவில் குடியேறிவிட்டோம் கனடியனாய் வாழ்ந்திடுவோம் வா என்கிறாள் எனதருமைக் காதலியே எதை மறந்துவிடச் சொல்கிறாய் ? தை பிறந்தால் பட்டம் விட்ட நாட்களையா ? அத்துளு வெளியில் பந்தடித்த நாட்களையா ? கோயில் திருவிழாவில் அழகான பெண்களைப் பார்த்து ஏங்கி நின்ற நாட்களையா? எதை மறந்துவிடச் சொல்கிறாய் ? சொல்லடி பெண்ணே எத்தனை காலமடி ? இன்று நினைத்தாலும் நெஞ்சம் இனிக்குதடி எப்…
-
- 10 replies
- 1.7k views
-
-
உங்களின் நினைவுகள்.....! காற்தடம் கரைத்து உப்பளக் காற்றிடை மிதந்து போர்த்தடம் தேடி உப்புக்காற்றின் உதைப்பில் உங்களின் நினைவுகள்..... நெஞ்சினில் நிறைந்த நண்பரின் ஞாபக ஊற்றினில் நாட்குறிப்பினில் காற்றழுத்தக் காற்றழுத்தக் கரைதொட்ட அலையின் கரைமணலில் உங்களின் நினைவுகள்..... நேற்று இவ் வெளியினில் நெஞ்சுயர்த்திப் போகிறோம் என்ற என் தோழியர் முகங்களில் பூத்திருந்து அப் புன்னகை அரும்பலில் உங்களின் நினைவுகள்.... காற்றில் நுளைந்து கடலில் கரைந்து - என் மூச்சில் நிறைந்து முகவரி மறுத்துப் பெயருமில்லாப் பொருளுமில்லா மெளனக் கிடக்கையில் மாவீரப் பெருமைகள் குவிய போனவென் தோழமைக் குரல்களில் உங்களின் நினைவுகள்...…
-
- 2 replies
- 900 views
-
-
உடன் பிறப்புக்களே என் முயலாமை நான்கெழுத்து தள்ளாமை நான்கெழுத்து இயலாமை நான்கெழுத்து ஈழத்தமிழா மரணம் நான்கெழுத்து அதுதான் உனது தலையெழுத்து
-
- 11 replies
- 1.5k views
-
-
நீ என் தோழியா..? இல்லை காதலியா...? கவிதை........ உன்னுடன் நட்புக்காய் உனைச் சுற்றும் பக்தனானேன்..... உன் நட்பை பெறுவதற்காய் என் நாட்கள் பல தொலைத்தேன்....! என் நீண்ட போராட்டத்தில் மெது மெதுவாய் என் நண்பியானாய் அதன் பின் என் நேரங்களில் பல மணிகளைத் தின்றாய் எனை நடு சாமத்தில் எழும்ப வைத்தாய் நடு வீதியிலும் நடக்க வைத்தாய்..... எனை தெரு நாய்கள் பார்த்து தினம் தினம் குரைக்க வைத்தாய்...... நீ என்னை நெகிழ வைத்த நண்பியாய்...! என் இதயத்தின் இடங்களெல்லாம் முழுதாக வல்வளைத்தாய்...! நாம் சந்திக்கும் பொழுதுகளில்... அந்த சந்தோச வேளைகளில்.... உன் சிரிப்புக்காய் சொல்லும் …
-
- 20 replies
- 4k views
-
-
அபயக் குரல்.... ஈழத்தில் கேட்கிறது ...... அனைத்துலக அபய நிறுவனம் எங்கே .?.... என் இனமே ஜனமே .எம்மை உனக்கு தெரிகிறதா ? . குண்டுகள் தலை மீது மழையாக பொழிகிறது பிஞ்சுகள் ,குரல் கண்ணீருடன் கதறிக்க்கேட்கிறது .... உலகே கண் இல்லையா ..தமிழ் ஈழ மண் உனக்கு இழிவானதா ? உன் உயிர் தான் உயிரா , உணவின்றி நீருடன் வாழ்வா ? குண்டு மழையை .. போரை நிறுத்து ...மனிதர் மட்டுமா உன் இலக்கு மாடுகள் ஆடுகளும் தான் ..பாலகர் பசி தீரவில்லை , பள்ளியில் பாடம் நடக்கவில்லை ..பரீட்சையும் .முடியவில்லை ? .பதட்டத்துடன் வாழும் எமக்கு ஏனையா இந்த வேதனை ? எம் குரல் கேட்க யாருமே இல்லயா ? ஏன்.... இந்த நீள் மெளனம் ? நிறுத்துக ....உடனே ......போரை .........குண்டு மழையை ........…
-
- 0 replies
- 880 views
-
-
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! http://www.worldtamilnews.com/ - Kural vadivam ingee. Kavithai Kelungal (new)-20.10.2008 உங்களைச் கொஞ்சம் உலகம் தேடும் முத்தமிழ் சிவப்பாகும் போர் மேகங்கள் சூழும் உங்களுக்கும் வலிகள் புரியும் இயந்திரப் பறவைகள் எதிரியாகும் ஆமிக்காரன் இயமன் ஆவான் உயிர் வெளியேறிய உடல்களை காகம் கொத்தும் விழிகளிலே குருதி கசியும் ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! தொப்புள் கொடியில் பலமுறை தீப்பிடிக்கும் பார்த்துக் கொண்டே இருப்பீர்களா? ஒரணியில் திரண்டு ஒரே முடிவு எடுப்பீர்களா? உங்கள் அரசியல் விளையாட்டில் எங்களைத் தோற்கடிக்காதீர்கள்! எந்த இனத்தவனும் உங்களை மன்னிக்கமாட்டான் சொந்த இனத்தவனைக் நீங்கள் காத்திட …
-
- 22 replies
- 5.3k views
-
-
ஓர் வெள்ளைப் புறாவின் இறகுகள் ஒடித்து........ தமிழ் செல்வனின் கண்ணீர் அஞ்சலிக்காய்..... கடந்த வருடம் கார்த்திகை இரண்டில் சமாதானம் கேட்டு பறந்து திரிந்த வெள்ளைப் புறாவின் இறகை ஒடித்து வீதியில் போட்டு புத்தரின் மைந்தர்கள் மகிழ்ந்த இன் நாள்..... உலகம் முழுவதும் வெட்கத்தால் தலை குனிந்த ஓர் நாள்....... தமிழன் இறுதி அமைதி முயற்சியும் அரை நொடிப்பொழுதில் அழிந்திட்ட கரி நாள்....! அகிம்சைக்காய் முதல் பலி எம் உயிர் திலீபன்...... அதன் பின் ஓர் வலி அன்னை பூபதி.... அரசியல் பேசி அமைதியை நாடிய அண்ணா நீயும் இறுதியாய் ஓர் பலி....! தமிழர் இனத்தின் விடுதலை வேண்டி வீரியம் கொண்ட வே…
-
- 8 replies
- 1.6k views
-
-
தமிழ் செல்வன் வான் செல் தமிழ் சமர்களில் சிலிர்த்தான் சமாதானத்தில் சிரித்தான் நீ சிலிர்த்த போதெல்லாம் சிங்களம் மரித்தது. சிரித்த போதெல்லாம் - புறா சிறகு விரித்தது. தமிழீழத்தின் பிரமாதம் அவர் - நீ பிரதமர். சிரித்தே சிகரம் தொட்ட உத்தமர். பல களம் வென்ற போரியல் வித்தகர். தமிழீழ அரசியல் துறை - தரணி அரசியலில் துரை - உலகில் தமிழ் உள்ள வரை - தமிழா இவர் புகழ் பறை. சமாதான செயலகத்தில் சமாதான செயல் அகத்தில் - அதனால் ஆயுதம் இல்லை கரத்தில் - இன்றேல் எதிரி வீழ்ந்திருப்பான் கணத்தில் எங்கே? எங்கள் சமாதானத்தின் சமாதி. புலியும் புறாவும் சரி பாதி - புவி வல்லரசுகளின் போதி - புத்தா உன் மக்களுக்கு சமாதானத்தை போதி. …
-
- 3 replies
- 1.3k views
-
-
வன்னிக்குச் சோறு கொடு இலங்கை வான்படைக்குக் குண்டு கொடு திண்டுவிட்டுச் சாகட்டும் தமிழினம் எண்டந்தப் பாவி சொன்னான் முண்டப் பேதைகளாய் இன்னும் முடங்கிக் கிடப்பாரோ தமிழர் தமிழகத்தில் இல்லை முண்டு பிடித்துத் தொடர்வாரோ தம்போரை பார்ப்பனியம் பணிவதில்லை அது பணியவைத்து ஆழ்வதுவே என்றந்தப்பாவி சொன்னான் இன்னமும் பொறுத்திடுமோ தமிழிதை இந்து மகாசதியும் பெளத்த மதவெறியும் இணைந்து நின்று தமிழைக் கொல்வமெனச் சொல்கிறதே இன்னும் என்ன தூக்கம் என்னருமைத் தமிழகமே நீ பொங்கியெழுந்தாலன்றி மழையில் நனைந்ததிலே பயனுண்டோ எண்ணிப்பார். 27.10.2008.
-
- 15 replies
- 2.2k views
-
-
ஒன்றென எழுவோம் வாடா! ஈழம் விடுதலை பெறும் வரை வேறு சிந்தனை எனக்கில்லை! சூழும் கலி யாவுமே மாளும்! "ஈழம்" மீளுமே!. பாழும் பிரிவினை கொண்டதால் எம் இனம் பட்ட பாடுகள் போதுமே! இனி! வீழும் துன்பம்" சொல்லியே இணைவோம் வா என் தோழனே! கொத்துக்கொத்தாய் உன் இனம் செத்து மடிதல் கண்டுமே! வேறு திசை நீ பார்க்கின்றாய் வரலாற்றில் ஏன் பழி ஏற்கிறாய்?!! தனி ஒரு மனிதனுக்கிங்கே உணவில்லை என்று கொண்டால் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான்" அந்த பாரதி எங்கே சென்றான்?! உணவில்லை, உடையில்லை உறையுளும் நிலையில்லை! தினம் தினம் பொழிகின்ற குண்டுக்குள் எம் உயிர்!!. இனம் என் தமிழினம் வோரொடு அழிக்கினம் இதைக் கண்டுமா சோதரா கண் மூடிக்கிடக்கினம்?! விடு விடு பகைமைகள் …
-
- 2 replies
- 961 views
-
-
எம் மண்ணின் அவலங்கள்......... கவிதை...... தினம் தோறும் காலைமுதல் மாலைவரை கால்தெறிக்க ஓடுகிறோம் அதனாலே நம் உடம்பு நூலாக இளைத்தும் விட்டோம்....... இனிமேலும் ஓட எங்களால் முடியவில்லை இதைக் கேட்டபின்னும் எங்களுக்கு நீங்கள் உதவி செய்ய மாட்டீரா ? காலை எழுந்ததுமே கதறல் சத்தங்கள் அதன் பின்னால் நம் காதுகளில் கிஃபீரின் இரைச்சல்கள் இரைச்சல் சத்தங்களால் பதுங்கு குழிகள் நிரம்பிவிடும்.... பதுங்கு குழிகளிலே பச்சிளம் குழந்தை கூட பயந்த வண்ணம் பால் குடிக்கும்........ இதைக் கேட்ட பின்னும் எங்களுக்கு நீங்கள் உதவி செய்ய மாட்டீரா ? பலகுழல் எறிகணைகள் எம்மை பலிகொள்ளும் அரக்கர்கள்.... வி…
-
- 6 replies
- 1.4k views
-
-
எச்சரிக்கை மடல் மனதால்த் தன்னும் தாய்மை வலியுணராப் பெண்டிரும், தாவி அன்னை திருமடியில் தவழ்ந்து மகிழா ஆடவரும் தயவு செய்து மேற்கொண்டு, இக்கவியின் இரத்த ஓடையை இரணமாக்கி இரசிக்க உள் நுழையாதீர்! ஓர் பிரசவத்திற்கான இறுதி வலியில் தேசத்து ஆன்மா துடிக்கிறது. நீண்ட நேரம் உயிர்ப்பின் வாசலில் தங்கிவிட முடியாது. உந்தும் வலு உறுதியாக வேண்டும். ஒவ்வொரு மணித்துளியும் வலியின் வேகம் வரப்புடைத்து பெருகி எல்லாப் பாகத்திலும் விரிகிறது. பனிக்குடம் உடைந்தபின், முக்குதற்கு நீண்ட நேரம் எடுத்தால் எல்லாமே உறைந்து போகும்., உலர்ந்தும் போகும். வலியின்றி வளர்ச்சி இல்லை. வலுவின்றி வலியைச் சந்தித்தால் பலவீனம் பாயில் கிடத்தும். வலுவினூடே வலியைச் சந்தித்தால் நலிவு…
-
- 20 replies
- 5.4k views
-
-
உண்மை ஒளி குன்றா உறவின் பெருங்கொடியே! கருணைப் பெருங்கடலே! கன்னல் சுவையூறும் தமிழ் பூத்த திருநாடே! உண்மை ஒளி குன்றா உறவின் பெருங்கொடியே! திண்மை கொண்டெழுந்த உங்கள் திடல் தோளில் சிறிது சாய்ந்து இளைப்பாறிக் கொள்கிறோம். தாயின் மடியில் தமிழ்ப் பாலுண்ட கோடி நெருப்பொன்றாய் தகிக்கக் கண்டோம். வீசும் தமிழ் காற்றும், உணர்வின் அலையும் தீய்ந்து கருகும் எங்கள் வாழ்வை ஆற்றும். உக்கித் தனிமரமாய் துயர் சுமந்த எங்களுக்கு உயிர்ப்பின் கொடி பிடித்து அரவணைக்கும் உறவுகளே! தெக்கும் உணர்விடையே உயிர்ப்பூ கசிகிறது. தேம்பும் விம்மலொலி சிறிதடங்கிக் கிடக்கிறது. பால் வாசம் வீசும் மார்பிடையே அணைத்தவளே! பனித்த விழிகளால் பாசத்தைப் பொழிபவளே! மனித்த…
-
- 5 replies
- 1.3k views
-
-
தமிழகத்தை நனைக்கும் ஈழத்தின் கண்ணீர் மழை! தமிழீழம் எங்கும் கேட்கிறது மரணத்தின் ஓலம்! தமிழகம் எங்கும் ஒலிக்கிறது உறவுகளின் பூபாளம்! உலகத் தமிழரின் ஒற்றைத் தலைவனாய் கருணைக் கடலில் மீண்டும் உயர்ந்து நிற்கிறார் கலைஞர் ஐயா! ஒன்றன் பின் ஒன்றாய் உணர்வுகளின் சங்கமத்தில் ஒரே குடையில் நகர்கிறது தமிழர்களின் ஊர்வலம்! புரட்சிக் கொடியின் கீழ் அடக்கி வைத்த நெருப்பின் உணர்வுகள் கொப்பளித்து தமிழ்த் தாயின் பிள்ளைகள் ஒர் அணியில் திரள்கிறது! குண்டு மழையின் குருதியில் குளிப்பது எங்களின் நிலையானதால் வான் மழையின் கண்ணீரில் குதிக்கவும் நீங்கள் துணிந்துவிட்டீர்கள்! தமிழினக் கொலையே தாரக மந்திரமாய்க் கொண்டு தலைகீழாய்த் தொங்கும்…
-
- 0 replies
- 833 views
-
-
நினைவழியா பயணம் நீண்ட நெடிய பயணங்களின் பின்பு அங்கே தரித்து நின்றோம் செம்மண்ணின் வாசனையும் வேலி கதியால்களில் பூத்திருந்த முள் முருக்குகளின் பூக்களும் தொலைந்து போயிருந்த நினைவுகளில் உயிர் தடவிற்று கரிய நிற மாடு பூட்டி வண்டில் ஒன்று கடந்து போனது இருளும் நினைவும் நிலவின் ஒளியுடன் கலந்த இருந்த பொழுதில் தான் நாம் அந்த வீதியில் அமர்ந்து கொண்டோம் நேற்றும், முந்த நாளும் அதற்கும் முன்பாகவும் என் தோழர்கள் உயிர் சரிந்து வீழ்ந்த வீதி அது ஒவ்வொரு அங்குல நிலத்திற்காகவும் ஓர்மம் கொண்டு போராடி களம் வென்ற என் தோழர்களை தாங்கி நின்ற வீதி அது என் பாட்டனின், அவனதும் பாட்டனின் காலடிகளின் தடம் காக்க, அவ…
-
- 11 replies
- 1.8k views
-
-
மன்னிக்க நண்ப....! வாசல் தாண்டி உன் மிதிவண்டி வைரவர் கட்டில் கால் தாங்கி நிமிரும். எங்கோ பார்வைகள் போவதாய் கொள்ளையிட்ட உன் மெளனப் புன்னகை இன்னும் விடுபடாமல்.... கண்ணுக்குள் கவிதையெழுதிய - நீ நெஞ்சுக்குள் இருந்த நினைப்பை ஏனோ நெடுங்காலம் அடைகாத்தாய் ? நேரம் வருமென்று காத்திருந்தா இல்லை நெருப்பிது சுடுமென்றா போகவும் வரவும் புரியாத பார்வை தந்தாய் ? கனவுக்குள் காதல் நினைவுக்குள் கரைந்த உன் பார்வைகள் நினைவுக்குள் அறுபடாமல்.... இன்னும் நினைவில் இருக்கிறாய்.... காலம் தந்தது உனக்காய் ஒரு கவிதை மட்டும் தான். மன்னிக்க நண்ப, மறுபடி ஒரு கவிதை உனக்காயில்லை மன்னிக்க நண்ப..... 20.12.2001
-
- 6 replies
- 1.8k views
-
-
மரணத்தின் முதல் படியில்...... தூக்கம்......... மரணமெனும் வீட்டின் கனவு எனும் ஜன்னல் கொண்ட கவலை மறந்து களைப்பு ஆறும் தங்குமிட விடுதி......! உள்ளே செல்வதற்கு அனுமதி உனக்கு மட்டும் தான்.... உன் எந்த உறவும் உன்னுடன் செல்வதற்கு அங்கே அனுமதி மறுப்பு...... தனிமையிலே இனிமை காணும் மாய மண்டபம்...... ஒவ்வொரு நாட்களும் உனக்கு அங்கிருக்க அனுமதி சிலமணி நேரம் சில வேளைகளில் வெளியே வரும் கதவுகள் மூடப்பட்டால் உன் ஜன்னல்களும் சாத்தப்படும் அன்றுடன் உன் வெளியுலகத் தொடர்புகள் அனைத்தும் துண்டிப்பு உனக்கும் நிரந்தர விடுமுறை அதுதான் உன் மரணம்..... வாழ் நாளில் பெருமளவை சிலர் இங்கே கழித்திடு…
-
- 2 replies
- 867 views
-
-
வான் பரணி -வ.ஐ.ச.ஜெயபாலன் மழையே வா என்கிறது என் தாய் மண். வருணா வருணா என்ற பாடல்களுடன். ஓடைகள் வற்றி வரால் மீன்கள் மூக்குளிக்கும்போது எதிரி தாங்கிகளில் நுழைந்துவிட்டான். ஜாதிய அரக்கனுக்கெதிராக நானும் தோழர்களும் எழுந்த ஊர்களில் காவல் தெய்வங்களாய் எம் பிள்ளைகள், நாம் தரத் தவறிய இரத்ததுக்கு அவர்களிடம் கந்து வட்டியும் கேட்கிறது வரலாறு, கூந்தலுட் பேனாய் யானைகள் ஊருமென் வன்னிக் காட்டு வழிகளில் தூங்கும் மலைப்பாம்புகளாய் கிடக்கும் கோடை ஆறுகள் மீது அதிருது வானம், தட்டி எழுப்புது மின்னல். இனி பறங்கி, பாலி ஆறுகள்கூட விழித்திடும். போர்கள் வென்ற கும்பகர்ணனாய் வாகைகள் பூத்த கனகராயன் ஆறு சோம்பல் முறிப்பதை போருக்கெழுமென் பிள்ளைகள…
-
- 11 replies
- 2.8k views
-
-
அழகிய கனவு.....! கிழைகளைக் குடையக் காற்றுத் தரையில் மிதக்கிறது இலைகள். மஞ்சள் இலைகளின் அழகு போய் மார்களி வருதல் சாத்தியமாய் மரங்கள் வெறித்துப் போகிறது. குளிர்கால ஆரம்பம் மந்தப் பொழுதாக மழையிருள் வானமும் மாரியின் வருகையும் மனசுக்குள் இதமாயில்லை... வசந்தம் வரும்வரை இரவினி நிரந்தரம் ஒளிக்குமிழின் துணையின்றி இந்த நாட்கள் விடியாது. நள்ளிரவும் நாய்களின் ஊளையுமற்ற பின்னிரவில் எழுந்து வேலைக்கு ஓடும் அவசரம் இவ்விரவுகள் மிகக்கொடுமையானவை. கைவிறைக்க கால்கள் நடுங்கும் உறைபனிக் காலத்திலும் ஓய்வில்லை. பணமரமாய் நான் பெற்றவர்க்கும் மற்றவர்க்கும் வெளிநாடு மிகவும் அழகான கனவு. கழுவுதலும் துடைத்தலும் கோப…
-
- 2 replies
- 984 views
-
-
ராமன் தேடும் சீதை....... கவிதை..... மலர்களின் மணம்வீசும் இளவேனிற் காலத்தில் இனிய மாலைப் பொழுதொன்றில் நண்பனின் திருமண அழைப்பிற்கு தனிமையில் செல்கின்றேன்..... அழகான மண்டபத்தில் மிக அழகான சோடினைகள்..... என் மனதின் மகிழ்ச்சிக்கு இயற்கையின் அழகுடன் செயற்கையும் அழகுசேர்க்க காதலெனும் நினைவு என் கண்களால் வெளிவந்து என் பார்வைக்கு இறகுகள் பலமாக முழைத்துவிட.... தேடினேன் என் சீதையை...! கண்டு கொண்டேன் ஓர் அழகை என் அந்தபுற(ர)த்தில்...! ஆகா..! என்ன ஆச்சரியம்.. அம் மானின் அழகில் மயங்கிவிட்டு அம் மானை எனதாக்க விழி அம்பை தொடுத்ததும்... பதிலுக்கு ஓர் அம்பு பாய்ந்து வருகுறது..! என் பார்வை…
-
- 20 replies
- 8k views
-
-
இவளும் இரவும்..!! விண்மினி வானை கண் சிமிட்டி தாலாட்டிட வான் மெல்ல கண்ணயர கனவில் நிலா வந்து செல்லமாக வானை அணைத்திட... இவள் மட்டும் மெழுகு விளக்கேற்றி சாரளம் வழியே வானை ரசித்தாள் தனிமையில்... நம் இரவுதான் மின்மினியின் பகலோ எவ்வளவு ஆனந்தமாக சுதந்திரமாக பறந்து இரவை அழகூட்டுகிறது என அதிசயித்தாள்.. மின்னி மின்னி ஒளிர்வதால் இவை மின்மினி ஆயினவா என் கேள்வி எழுப்பினாள்..!! விடைதெரியாது தோற்றுப்போய் கடைக்கண்ணால் நோக்கினாள் இவள் அழகை ரசித்த வானிலாவை பரந்த வானில் தவழும் வட்ட நிலாவை நினைத்து பெருமூச்சு விட்டாள் என்ன அழகு என்ன ஒளி எல்லாம் இயற்கையே என்று எண்ணியவள் நட்சத்திரங்களோடு கதைபேச எத்த…
-
- 21 replies
- 3.3k views
- 1 follower
-