கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நட்பு நாளொரு பொழுதாய் நடைமுறை உலகை நானும் அவளும் காணப் புறப்பட்டோம். நல்ல நண்பர்களாய்… ஒரு நாள்… நிலவை ரசிக்க நினைத்தோம். ஆனால்.. இரவுவரை தனித்திருக்கும் தைரியம் நமக்கிருக்கவில்லை. நிலவு வரும் வரை நாமிருக்க நம் கலாச்சார கண்களும் நம்மை விட்டுவைக்கவில்லை. இன்னொரு நாள்… கடற்கரை சென்று காலாற நடந்து காற்று வாங்க நினைத்தோம். ஆனால்… நம் கைகளைக் கோர்த்தபடி காலடி பதித்து அலை நுரை ரசிக்க முடியவில்லை. அவள் தடுமாறி அலைக்குள் விழுந்த போதும் என்னால் அவளை அணைக்க முடியவில்லை. கடலோ அவளை நனைத்துப் போனது. மூழ்கப் போனவளை மீட்டு வந்தது கண்டும் எங்களுக்குள் ஊடல் என்று ஊர் சொன்னது. அலை கூட அ…
-
- 6 replies
- 2.3k views
-
-
நம்பிக்கை கொண்டு நடவுங்கள் ஏய்! முணு முணுக்கும் வாய்களே! கொஞ்சம் நிறுத்துங்கள். படலைக்கு உள்ளே தெருநாய் வருவதால் உன் முற்றம் தொலையுதென்று எவன் சொன்னான்? தெருக்கள் எங்கும் நீ கை வீசி நடக்கணும். உன் இருப்பை எப்போதும் உறுதி செய்யணும். உண்மைதான் உருப்படியாய் என்ன செய்தாய் இதற்கு? ஊருக்கு சொல்ல உன்னிடம் நிறைய உண்டாயினும் உன்னிடம் சொல்ல ஏதேனும் உண்டாவென உன் மனச்சாட்சியைக் கேள் ஆமெனில்.. நீ கரைவதை தொடர் ஆயினும் சில வார்த்தைகளைத் தவிர் அதைப் பின் காலம் சொல்லும் இல்லையெனில்.. இனியாவது சிந்தனைகொள் மானிடப் பேரவலம் கண்டாவது உன் மனக்கதவு திறக்கட்டும் இரும்புச் சிறையுடைத்து புது மனிதனாய…
-
- 11 replies
- 1.9k views
-
-
முதல் இரவின் சங்கமத்தில்....... நம் காலைப்பொழுது இவர்களுக்கு முதலிரவு எங்கே தெரியுமா ! கோடி கண்கள் பார்த்திருக்கும் ஓர் வெட்ட வெளியில் ! அவளின் வருகைக்காய் நீண்ட நேரம் காத்திருந்தான் ? நேரமும் நெருங்கியது காத்திருந்து காத்திருந்து கலங்கிவிட்டான் - காரணம் இவர்கள் பொருத்தமில்லா யோடிகள் நிறத்திலும் ஏன் குணத்திலும் தான் ! இவளோ பால் வெள்ளை அவனோ கறுப்பின் மறு உருவம் அவளும் வந்துவிட பறவைகளின் இன்னிசை பூச்சிகளின் ரீங்காரம் மரத்தின் இலைகளின் சல சலப்பு கடல் நீரின் அலையோசை இத்தனையும் சேர்ந்தொலிக்க இணைகிறது முதலிரவில் இவர்களின் உடல் இரண்டும் ! இவளின் ஆதீக்கம் அவனை அடியோடு மறைத்துவிட பார்த்தோர்கள் பர…
-
- 8 replies
- 2.5k views
-
-
கடவுளுக்கு ....கேட்குமா ?.... என் குஞ்சுகளும் நானும் பசியால் துஞ்சுகின்றோம் பாவி படுபாதகன் ,குண்டு மழையாக பொழிகின்றான் இரவினில் ,காடுகளில் ,பாம்பு பூச்சிகள் நடு , நடுவே உறக்கமோ , கோழியுரக்கம் ,குடிநீருக்கும் தொலை தூரம் என்னவனை கொன்றது உன் கொடிய செல்வீச்சு ஊர்விட்டு ,ஊர் மாறி , நடந்த காலும் சோர்ந்து போச்சு அக்கினி பிழம்பாக ,கொட்டும் வான வேடிக்கை கண்டு குஞ்சுகள் கலங்கி அழ ,என் நெஞ்சம் படும் பாடு உண்ணவும் முடியவில்லை ,உறங்கவும் முடியவில்லை இன்னும் தான் விடிவுமில்லை ,கொஞ்சமும் இரக்கமில்லை ஏனிந்த வேதனையோ ? எவ்வளவு காலத்துக்கோ இந்த நெஞ்சு கூடு வேகமுன் ,கொஞ்சமேனும் இரக்கம் உண்டா தாய் இழந்தேன் தந்தை இழந்தேன் ஊர் இழந்தேன் உற்றார் …
-
- 7 replies
- 1.4k views
-
-
என் காதல் தேவதை மனதுகளின் சங்கமத்தில் மலர்ந்திடும் ஓர் உறவு குருவிகளின் கொஞ்சல்களில் கொஞ்சமாய் கண்விழித்து ஜன்னலோரம் பார்க்கிறேன். பூ மரங்கள் மேல் பனித்துளியில் தங்க நிற வளையங்களாய் மினுங்கிடும் நீர்துளிகள். அரைத்தூக்கம் கண்களிலே ஆசையாய் இருந்துவிட அவசரமாய் ஜன்னல் கதவுகளை திறக்கின்றேன் பளீரென்று ஓர் வெளிச்சம் என் பார்வையதை பறித்துவிட்டு சில வினாடிகளில் மறைகிறது மறுபடியும் பார்த்தால் புரிந்தது என் புத்திக்கு ஆம்! சூரியனின் விம்பம் சோடி வளையல்களில் எதிரொலித்து ஜன்னல்களின் இடைவெளியால் என் கண்களை தாக்கியது முகம் பார்ப்போம் என்றால் முடியவில்லை பூமரத்தால் அன்று முடிவெடுத்தேன் ஓர் கொள்கை மரம் வளக்கும் கொள்கைவிட்டு மர…
-
- 8 replies
- 1.5k views
-
-
தூயவன் அழைப்பு..! யாழினில் ஒரு பகலவன் கலகங்களின் தலை இவன் அரிச்சகர்களின் துணை இவன் அவனே நம் தூயவன் சிறு ஊடல்கள் சில சில பெருஞ்சமர்களோ பலப்பல சினமது மிக வெளிப்பட வெளியேறினான் தனிப்பட வானவரில் நம்பிக்கை மதமது உன் தும்பிக்கை உன் தெய்வம் கணேசனோ கடுப்படித்தவன் சபேசனோ அடிக்கடி நீ வருபவன் அடிக்கு அடி நன்கு தருபவன் கெடுத்தவன் எந்த அரக்கனோ கொடும் நாரதக் கொடுக்கனோ களத்தில் கடுப்பு என்னையா நீ குளத்தில் எறிந்த கல்லையா நீ வருவதெப்போ சொல்லையா உன் மறுபிறப்போ பொன்னையா வருந்திப் பெறவில்லை தடை வெளியேறக் கிடைக்க இல்லை விடை உனக்கு இடம் இருக்கையா உடனிருப்பார் நம்ம தயா…
-
- 50 replies
- 7.6k views
-
-
விடுதலை போராளிகள் எதிரியின் சிம்ம சொப்பனங்கள் நம் தமிழீழ எல்லைகளில் எமை தாக்கவரும் எதிரியினை வீரம் எனும் வேல் கொண்டு வீழ்த்திடும் வேங்கைகள். சிந்தனையில் நம் விடுதலையும் சிரத்தினிலே எதிரியினை வீழ்த்தும் பொறிமுறையும் தம் கடமையென நினைத்து கண்ணியமாய் நடப்பவர்கள். துப்பாக்கி ரவைகள் இவர்களின் சொல் கேட்கும் குழந்தைகள் கிரனேட் குண்டுகள் இவர்கள் கைகோர்த்த நண்பர்கள் ஆர் பி ஜி குண்டுகளோ இவர்களின் அடியாட்கள் எதிரியை அழியென்றால் அழித்துவிடும் இவர் அனுப்பும் வெடியாட்கள் ! தமிழ் போராளிகள் ! இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் போரிட மட்டும்தான் - ஆம் எதிரி புற முதுகு காட்டி ஓடும் வரை அவர்களுடன் போரிட மட்டும் தான். துப்பாக்கி …
-
- 0 replies
- 783 views
-
-
ஓய்வு நாள் ஒன்றின் மாலை நேரம் சோகச் சுமைகளால் மனதில் பாரம் இரு மருங்கும் மரங்கள் நிறைந்த வீதி ஓரம் என் கால்கள் நடந்தன வெகு தூரம். 'ஏ... கால்களே, நாம் போகும் இடம் எதோ?' வேதனையான மனம் கால்களைக் கேட்டது. 'ஏதுமறியா என்னை மூளை தான் ஏவியது' வேலையாள் கால்கள் சொன்ன பதிலிது. எண்ணிவிட்ட கருமத்தில் மூளை முழு மூச்சாக, புண்பட்ட மனமோ வேதனையில் சோர்வாக, நீண்ட தூர பயணத்தால் கால்களும் தடுமாற விண்ணுயர்ந்த மலைச்சாரலை அடைந்தது என் பயணம். நுரை ததும்ப சலசலத்துப் பாயும் மலையருவி, இலையுதிர்த்து பூக்களை மட்டும் தாங்கி நிற்கும் மரங்கள், இவற்றிடையே மனதை வருடும் சிரு குருவிகளின் இனிய கானம் இயற்கையின் இவ்வெழிலில் தனை மறந்தது எந்தன் மனம்! 'என் சோகத்தை மறக்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
பட்டும் படாமல் இருப்போரை எல்லாம் தட்டிக் கொடுத்து தன் பக்கம் ஈர்க்காமல் - தலைகனத்து கொட்டிடும் தேல் எனவே கொட்டி கொட்டி வெட்டி விடுவதுதான் விடுதலைக்கு பங்களிப்பா? பெயருக்கு தலைவராக இருப்போரெல்லாம் பெரிய தலைவர்களை எல்லாம் சரியாக பகைத்து கொண்டே இருந்தால் யார் பக்கம் சாய்வார் அவர்? பட்ட மரமென்று ஒன்று இருந்தால் விட்டு வெட்டினால், வேர் விட்டு வெட்டினால் சட்டெனெ பெய்யும் மழையில் சடுதியில் துளிர்த்துவிடும் ஒட்ட வெட்டினால் நட்டம் நமக்கல்லவா? உயிர் காக்கும் பிரச்சனைகள் இருக்கும் போது மயிர் காட்டி கட்டுரை வரைவதும் - பதிலுக்கு வயிற்று பிழைப்பிற்க்கெ வக்காலத்து வாங்குகிறார் என்பதும் உயிர் காக்குமா? நம் தமிழர் உயிர் காக்குமா? எலி கூட்டமல்ல க…
-
- 10 replies
- 2.9k views
-
-
[url=http://g.imageshack.us/g.php?h=177&i=flower1yp8.jpg] பூவே உன் வயது என்ன....? சற்று முன் பிறந்த குழந்தை போல் அழகாக சிரிக்கிறாய் ஆனால் நான் சொல்கிறேன் உன் வயதோ பதினைந்து எப்படி என்று கேட்டால் காரணமும் நான் சொல்கிறேன் என் ஒளிப்பெட்டியில் பதினைந்து வருடங்கள் முன் உன்னை குழந்தையாய் பெற்றெடுத்தேன் - ஆனால் இன்றோ குமரியாய் மாறிவிட்டாய் உன் குழந்தை சிரிப்பு இன்னமும் மாறவில்லை. இளங்கவி
-
- 4 replies
- 1.3k views
-
-
வன்னிக் குழந்தைகளின் கதறல்கள் தாய் நாட்டில் உதவி வேண்டி நிற்கும் உறவுகளுக்காய்...... அனைத்துலகம் எங்கிருக்கும் எம் அனைத்துலக உறவுகளே ! எங்கள் வன்னியின் அவலங்களை இன்று உலகமெங்கும் அறிவீர்கள் வாழ்விழந்து போன எங்கள் நிலைமையையும் அறிவீர்கள் இன்று மரங்கள்தான் நம் வீடு மணல்தரை தான் நம் படுக்கை காட்டு மிருகங்கள் தான் நம் உறவு குண்டுபோடும் கழுகுகள்தான் நம் எதிரி. எமக்கு வீடு இருந்தும் எம் வாழ்வை காட்டில்தான் வாழ்கின்றோம் காரணம் புரியவில்லை கண்டபடி ஓடுகின்றோம். காலையில் எழுந்தபின்னர் தண்ணீர் தான் நம் உணவு அதன் பின்னர் பசிக்காய் அழுவதுதான் நம் கவலை. பசியின் கொடுமையினால் பழைய உணவை உண்டுவிட்டு புசித்த பின்னர் சிலவேளை …
-
- 12 replies
- 1.7k views
-
-
மறுத்ததேன்....? பலமுறை தொலைவில் பார்த்தேன் பார்வைகளால் ரசித்தேன் ஆர்வத்தில் தொடர்ந்தேன் தினம் உன்னையே சிந்தித்தேன் காதலை வளர்த்தேன் ஆதலால் சிலிர்த்தேன் ஆசையோடு இருந்தேன் திசை எங்கும் நடந்தேன் கற்பனையில் மிதந்தேன் பற்பல கவிதைகள் வடித்தேன் வானளவு உயரந்தேன் கானம் பாடி திரிந்தேன் கனவுகளில் உன்னோடு பறந்தேன் நினைவுகளை எனக்குள் சுமந்தேன் ஊன் சுவைதனை மறந்தேன் உறக்கத்தையும் துறந்தேன் உன் உருவை வரைந்தேன் கண்களுக்குள் காத்தேன் வெட்கத்தில் சிவந்தேன் துக்கத்திலும் சிரித்தேன் இன்றுனை சந்தித்தேன் தெத்திப்பல் தெரிய சிரித்தேன் காதல்மனசை திறந்தேன் அன்பே நீ மறுத்ததேன் என்னையும் வெறுத்ததேன்..?
-
- 25 replies
- 3.5k views
-
-
பச்சைக் குழந்தை அங்கே பாலுக்கு அழுதிருக்க பாற்குட அபிசேகம் நீயிங்கு செய்தால் என்னைக் கடவுளென்று மனிதன் வணங்குவானோ சொல்? சத்தியமாய் அந்தக் கல்லுக்குள்ளே நான் இல்லையெடா! மானிடா! நான் கருணையுள்ளவன். ஏழை நெஞ்சுக்குள் தான் எப்போதும் இருப்பேனடா! உன் இரத்த உறவுக்கங்கே பாதி உயிர் போகையிலே எப்படி நான் கொலுவிருப்பேன்? நீயமைத்த மஞ்சத்திலே! எப்போதடா நான் கேட்டேன்? இப்போது நீ எனக்கென்று செய்வதெல்லாம்.. வானமே கூரையாய் உன் உறவு வாழ்வுக்கு வரமிருக்க கோபுரக் கோயில் கட்டி என்னை குடியிருக்க நீ கேட்டால் எப்படி இருப்பேனடா சொல்? அப்படி நான் இருந்தால் மனிதன் வணங்கும் தெய்வம் எனும் தகுதி எனக்கிருக்குமோ சொல்? மானிடா! ந…
-
- 14 replies
- 2.4k views
-
-
நம் தமிழீழ மண் வீரம் விழைந்த மண் வீரம் விழைந்த மண்ணிது வீரமறவரும் வாழ்ந்த மண்ணிது அம் வீர மன்னர்களின் வீர சாம்ராச்சியம் அன்னியன் சதியினால் வீழ்ந்த போது எம் வீரச்சரித்திரம் சாய்ந்த மண்ணிது. ஆங்கிலேயர் நம் மண்ணைவிட்டு அகன்ற போது ஆட்சி உள்ளூர் எதிரிக்கு மாறிய மண்ணிது. ஐம்பது வருட அடக்கு முறைக்கு அப்பாவி உயிர்கள் பலியான மண்ணிது. எம் அடிமைச் சரித்திரம் மாற்றி எழுதிட சூரியத்தேவன் தோன்றிய மண்ணிது. சூரியத்தேவன் தோன்றியததனால் சாய்ந்த வீரமும் நிமிர்ந்த மண்ணிது. எதிரியின் பிடியிலுள்ள் எம் சரித்திரம் மீட்டிட வேங்கைகள் பாய நம் எதிரியும் வீழ நம் வீரமும் உலகின் கண்களில் தெரிய உலகமே பார்த்து வியந்த மண்ணிது. …
-
- 7 replies
- 1.6k views
-
-
இங்கு இணைந்திருக்கும் பலரைப்போல நானும் தமிழீழ பாடல்கள் விரும்பி கேட்பேன்.. சில பாடல்கள் எழுதியும் வைப்பேன்.... சினிமா பாடல்வரிகள் தான் முழுதும் எழுதி நிறைய இணையத்தளங்கள் உள்ளன. இது போல் தமிழீழ பாடல்வரிகள் உள்ள எந்த இணையத்தளமும் யாருக்கும் தெரிந்தால் எனக்கும் அந்த இடத்தை காட்ட முடியுமா? நான் றொம்ப தேடிப் பார்த்தேன்...எனக்கு எங்கயும் கிட்டுது இல்லையே...
-
- 3 replies
- 1.6k views
-
-
பள்ளி காதலை நினைத்துப் பார்க்கிறேன் அமைதியான ஒடையின் - சிறு அலையெழுப்பும் சத்தங்களாய் என் மனதில் சிறு சலனங்கள். ஆரம்ப கல்வியின் பின் அடுத்ததாய் ஆறாம் வகுப்பு முதல் சில நாட்களில் முன் அறியா பல முகங்கள் பல்வேறு திசையிருந்தும் பாடசாலையை மொய்த்திருக்க என் வகுப்பிலே பளிச்சென்று ஒர் முகம் பட்டாம் பூச்சிபோல் என்கண்களில் ! பயமொரு பக்கம் மீண்டும் பார்க்க துடித்தது என் முகம் காரணம் புரியவில்லை அவளை பட்டாம் பூச்சியென்பதா பால் நிலவு என்பதா பயமறியாது துள்ளி ஓடும் மான்குட்டி என்பதா? அவளின் பார்வையொன்று என்மேல் விழுவதற்கு கண்களை மூடிக்கொன்று கணபதிக்கு கற்பூர நேத்தி வைக்கிறேன் மூடிய கண்களை மறுபடியும் திறப்பதற்குள் உணர்கிறேன…
-
- 7 replies
- 5.3k views
-
-
கருணாநிதியின் 'அவாள்' கவிதையால் சலசலப்பு புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2008 சென்னை: முதல்வர் கருணாநிதி பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் குறித்து பூடகமாக எழுதியுள்ள கவிதை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி தனது கவிதையில் சாடியிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜனைத்தான் என்ற கருத்தும் எழுந்துள்ளது. முதல்வர் கருணாநிதியின் கவிதைகள் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்துவதுண்டு. ஆனால் நேற்று அவர் வெளியிட்டுள்ள கவிதை ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அந்தக் கவிதையில் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் குறித்து கருணாநிதி பூடகமாக சாடியுள்ளார். யார் அந்தத் தலைவர் என்பது யாருக்குமே புரியவில்லை. இதனால் இந்தக் கவிதை பரபரப்பை ஏற்…
-
- 7 replies
- 2.8k views
-
-
அக்கினி குஞ்சுகள் காலத்தை வென்ற கதாநாயகர்கள் நம் தமிழினத்தை காக்கும் காவல் தெய்வங்கள்; கப்டன் ------- எனும் முதல் விதையில் முளைத்த அரும்புகள் இன்று எதிரியின் மூச்சையே திணறடிக்கும் முழு விருட்சங்கள். பெரும் கடலையே விழுங்கிவிடும் கருப்புச் சூரியர்கள் பெரும் தணலில் கூட உயிர்வாழும் ஃபீனிக்ஸ் பறவைகள் உங்கள் கண் முன்னே ஒர் தெரிவு மரணமா எதிரியா? மரணத்தை வென்று எதிரியை அழித்திடும் இரும்பின் உறுதிகொண்ட இரும்பு பாறைகள். புற்றீசலாய் புறப்படும் எதிரியின் படைகளை பூண்டோடு அழித்திடும் புயல் காற்று நீங்கள் எதிரிகளை நடுங்கவைக்கும் தமிழ் ஈழத்தின் பிரம்மாஸ்திரம் தமிழ் மக்களின் உயிர்காக்கும் மார்புக்கவசங்கள். ஐம்பது…
-
- 5 replies
- 1.3k views
-
-
நெஞ்சிலே ஈரம் கொஞ்சம் இருக்கா ? நம் தாயகத்தில் ,பாலுக்கு அழும் பாலகனை எண்ணிப பார் ,நீ சாப்பிடும் கேக்கு வேண்டாம் ஒரு நேர கஞ்சி யாவது ,கிடைக்கிறதா ? இங்கு அலங்கார கோவில்களுக்கு ,தினந்தோறும் அபிஷகம் , விசேட தினத்தில் விசேடமாக , அங்கு குடியிருக்க குடிசை இல்லை இங்கு பசி வர மாத்திரைகள் அங்கு பட்டினியால் யாத்திரைகள் நீ எதோ தப்பி வந்து விட்டாய் என்று எண்ணாதே , கோழை நீ ? , என்ன செய்வாய் ? போராடி பெறும் தாயகத்தில் என்ன உரிமையிருக்கிறது உனக்கு ? ஒவொரு துளி வியர்வையும் அவன் சிந்தும் ரத்தம் அல்லவா ? அள்ளி கொடுக்க வேண்டாம் கிள்ளியாவது கொடுத்தாயா? ,ஒரு நாள் என் அக்காவின் பேரன் ,என் தாயக திரை படத்தை பார்த்து ,கேள்விகளை கேட்டுவிடு , தன் உண்டியலை (piggy …
-
- 0 replies
- 746 views
-
-
நினைவு இருக்கிறதா ? உனக்காக ஒருத்தி ,காத்திருந்தாள் , உனக்கு எழுதிய கடிதம் ,உன் அசட்டையினால் பாடசாலை அதிபரிடம் பிடிபட்டு ,அசம்ப்ளியியில் தலை கவிழ்ந்து நின்றது , பஸ் வண்டியால் இறங்கி நீ மழையில் நனைவாய் என்று குடையுடன் காத்திருந்தது , உன்னை ஒரு நாள் காணவிட்டால் தோழி மூலம் கடிதம் சேர்ப்பது . நீ பந்து விளையாடிய போது ,தோழியருடன் உனக்காக கர கோசம் செய்தது ,பாட சாலை இல்ல விளையாடில் ,உனக்காக நண்பிகளுடன் தோரணம் செய்து தந்தது. காலிலே காயம் பட்ட போது என் துப்பட்டாவில் ,கிழித்து தந்தது . ரசாயயான கூடத்தில் பதிவை தவற விட்டு ,மறுநாள் நீ தேடிய போது ,இரு நாள் தேட விட்டு ,மறு நாள் நான் தந்தது . ன் லேடி பைக் காற்று போனதும் ,அதை நான் உருட்ட கூடாதென்ற…
-
- 6 replies
- 1.6k views
-
-
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே நீயும் நானும் என்றும் ஓர் உயிராக பத்து மாத பந்தத்தில் இனத்தோடு ஆறாவதாய் ,பெற்ற இந்த உயிர் அரக்கரின் நுழைவால் சிதறியோடி அடைக்கலம் புகுந்த கோவில் உனக்கு எயமனின் பாச கயிறுஎனும் செல் விழும் இடம் என்று அறிந்திலேன் . உன் கடை குட்டியுடன் நீயும் என் குஞ்சுகளுடன் நானும் சிதறியோடிய அந்த நாள் பசி, பட்டினி ,யுடன் நான் இருந்தாலும் ,என் குஞ்சுக்கு மாப்பால் பருக்க கெஞ்சி நான் சுடு நீர் வைத்து பால் கொடுக்க , பிஞ்சு என் முகம் பார்த்து முறைத்து ,அடம் பிடிக்க , அம்மம்மாவின் கோமதியின் பசுப்பாலுக்கு ஏங்க ....நான் பட்ட துய்ர்கொஞ்சமா ? ஓடியும் நடந்தும் . பதுங்கியும் நானும் என் குஞ்சுகளும் ,என் மாமா மாமியும் தள்ளாத அவர் வயதில் தடுமாறி…
-
- 1 reply
- 1.9k views
-
-
என் தேசத்தில் இது கிளையுதிர்காலம்... -------------------------------------------------------------------------------- இலையுதிர் காலம் முடிந்து இப்போது இங்கே கிளையுதிர்காலம்... தினமும் இயற்கை மரணத்தை விட செயற்கை மரணம் மலிந்து போன மண் இது... சுவாசப்பைகளும் இருதயத்துடிப்பும் பலவந்தமாய் பிதுங்கியெறியும் கைகளை குலுக்கிக்கொண்டிருக்கின்றன சில ராட்சசக்கைகள்.. எம்மண்ணுமே இங்கே செம்மண்தான் குருதித்துகள்கள் கலந்து போனதால்... குழந்தைகள் தாலாட்டு தொட்டில் மூன்றும் தலைகீழாகி இப்போது சடலங்கள் ஒப்பாரி பாடை எங்கள் ரணங்களை உங்களுக்கெல்லாம் புரிய வைக்க எந்த உவமைகளை தேடிப்பிடிப்பது...? ஆயுதங்களும் ஆயுதங்களும் ம…
-
- 2 replies
- 1.1k views
-
-
வாழ்க்கை அழகான வாழ்க்கையது கடவுளின் வரம் அழகுற மாற்றுவது மானிடத்திறம் துன்ப இன்பம் விதியின் திடம் நம்பிக்கைதான் வாழ்க்கையின் பலம் அன்பான மனைவி குழந்தை வாழ்க்கையில் சுகம் ஆனால் பணமே தேடுவது மானிட மனம் கடவுள்தான் வாழ்க்கையின் மூலம் இதை மறந்தால் நாமெல்லாம் மடம் காதல் பிரிவு காயானது கனியாகும் வேளைதனில் கருவண்டு துளைத்தால் போல் - என்மனது ஏங்குகிறேன் உன் நினைவால் ஒருமுறை தான் பேசிவிடு - - என்னோடு நண்பர்களே உங்களிடம் இருக்கும் இப்படியான குறுங்கவிதைகளை…
-
- 80 replies
- 8.8k views
-
-
நதி என்றோ? ஆரம்பித்து விட்டேன். என் பயணத்தை.. பல தேசங்களின் எல்லைகள் தாண்டி எங்கோ? சென்று கொண்டிருக்கின்றேன். எப்போது போவாய்? என்று ஏசுவோரை கடந்து.. எப்போது வருவாய்? என்று ஏங்குவோரின் வாசலில் இப்போது நான். என் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு கூட்டம் தெரிகின்றது. அதோ! அதில் ஒருத்தி உறவையெல்லாம் பிரிந்து வந்து உள்ளத்தில் கனவுகள் சுமந்தபடி வெற்றுக் குடத்தோடு வெயில் கொல்லும் காலப் பெரு வெளியில் கால் கடுக்க காத்து நிற்கின்றாள். என் வருகைக்காக.. இதோ! அவளின் காலடித் திடலில் இப்போது நான்.. நன்று உண்டு உடுத்து உறங்கி நாளாச்சு என்பது நன்றாய் தெரிகின்றது. என்னால் என்ன செய…
-
- 6 replies
- 1.2k views
-
-
காலம் இன்னும் கொஞ்சக்காலம் ........ . கதை முடியும் ...ஒரு நாள் மதி கெட்ட கயவர் கூட்டம் ஒன்று புத்தி பேதலித்து கதை பல கூறும் விதி என்று ஓர் இனம் ,கேட்டு, கலங்கி கை கொட்டி சிரிக்கும் போது..... இடி ஒன்று முழங்கும் ,கதி கலங்கி விழி பிதுங்கி , சில பெரிய தலை நோக்கி ஓடும் தலை சொல்லும் வழி ,இனி பலிக்காது புலிபசித்தாலும் ,புல்லை நாடாது ,ஒரு வேளை..........
-
- 3 replies
- 1.5k views
-