கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இளகுமா அந்த கல் நெஞ்சு? சுதந்திரமாய் திரிந்த எனக்கு எங்கிருந்து தான் வந்ததோ இந்த காதல்! உன்னை பார்த்தவுடன் வரவில்லை நிச்சயமாக பழகிய பின்பே வந்தது வயது தான் நமக்கு பிரச்சனையோ? அன்புக்கு வயது ஏது தடை - இல்லை உன் அன்னை தான் நமக்கு எதிரியோ? அன்னையிடம் என்னை பற்றி சொல்லவில்லையா அன்பே! உன் கொள்கை தான் முட்டுக்கட்டையோ? நாம் உருவக்கியது தானே இந்த கொள்கை - விட்டு விடு இல்லை இந்த சமூகம் தான் உன் கவலையோ? - வா நாம் வேறோர் உலகத்துக்கு போவோம் அன்புக்கு இலக்கனமாய் இருந்தாய் நட்புக்கு உதாரணமாய் இருந்தாய் தொழிழுக்கு நாணயமாய் இருந்தாய் காதலுக்கு மட்டும் ஏன் எதிரியானாய்? உன்னை காதலித்ததுக்கு பதிலாக மரணத்தை காதலித்திருக்கலாம் அது நம்பிக்…
-
- 20 replies
- 4k views
-
-
இணைந்தோம்! உலகத் தமிழராய் நாங்கள் இணைந்தோம்! நினைத்தோம்! எங்கள் தமிழ் உயிர் உயிரென நினைத்தோம்! (இணைந்தோம்) தமிழின் கலைகளும் தமிழின் பண்பாடும் தாங்கினோம் இன்பம் தாங்கினோம்! அமிழ்தமாய் எங்கள் நெஞ்சில் ஊறும் தமிழ் அன்பினால் உலகை வாங்கினோம்! (இணைந்தோம்) சிரித்த தமிழ் முகம் நிலைத்த வையகம் செய்வோம் என ஆணை ஏந்தினோம்! விரித்த சிறகோடும் தழைத்த புகழோடும் விடுதலை வானில் நீந்தினோம்! (இணைந்தோம்) மானமே வாழ்வாய் நின்றோம் மலைகளை மோதி வென்றோம்! இயற்றியவர்: உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
-
- 1 reply
- 944 views
-
-
எத்தனை அழகாய் சிரித்துவிட்டுப் போகின்றாய் நீ... இங்கே ஒருவன் சிறைப்பட்டதை அறியாமல்....! உந்தன் நினைவுச் சிலந்தியில் சிக்கிய என்னைக் கொஞ்சம் விடுவி... இரவுகளோடு நான் படும் அவஸ்தை போதும்! சிரிப்பில் கூட போதை இருப்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது! "களுக்" என நீ சிரிக்கின்றபோது மனசுக்குள் எங்கோ உளுக்கிக் கொள்கிறது! புன்னகை கூட இத்தனை அற்புதமாய் இருக்கும் என்று நான் அறிந்ததில்லை மயில்பீலியாற் மனதை வருடுகின்ற மகா சுகம் "ரெடிமேட்" சிரிப்பை உதடுகளில் ஒட்டவைத்துக் கொள்பவர்களும் உண்டு அதற்கு ஒரு சாமர்த்தியம் வேண்டும் நீ, எல்லாம் கடந்து புன்னகையால் உதடுகளில் புதுக்கவிதை எழுதுபவள்…
-
- 1 reply
- 1.1k views
-
-
மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடுதிரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை நாடு திரும்ப முடியலை மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடுதிரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடுதிரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை நாடு திரும்ப முடியலை சிங்களவன் படை வானில் நெருப்பை அள்ளிச் சொரியுது எங்களுயர் தமிழீழம் சுடுகாடாய் எரியுது சிங்களவன் படை வானில் நெருப்பை அள்ளிச் சொரியுது எங்களுயர் தமிழீழம் சுடுகாடாய் எரியுது தாய்கதறப் பிள்ளைகளின் நெஞ்சுகளைக் கிழிக்கிறான் தாயாகும் முன்னேயிளம் பிஞ்சுகளை அழிக்கிறான் தாய்கதறப் பிள்ளைகளின் நெஞ்சுகளைக் கிழிக்கிறான் தாயா…
-
- 1 reply
- 1.6k views
-
-
சிவனெனும் பெருமான் ஓர்நாள் நகர்வலம் போனார். நடந்து நடந்தே ஊர்உலாப் போனார். தாகம் மேலிட தாகம் மேலிட "தண்ணீர்" "தண்ணீர்" சைகையில் கேட்டார். பெருமான் என்பதை ஊரறிந்தது. பஜனைகள் செய்து பக்தி கொடுத்தது. நாவுலர்ந்து போகப் போக பெருமான் "தண்ணீர்" "தண்ணீர்" நடனம் செய்தார். பக்தி மிகுந்து பக்தி மிகுந்து காணிக்கை அள்ளி ஊர் கொடுத்தது. பொன்னும் மண்ணும் பொருளுமென்று பெருமான் காலில் ஊர் குவித்தது. தாகம் மேலிட தாகம் மேலிட முடியாப்பெருமான் முடிவாய்ச் சொன்னார்... கடவுள் என்றே ஆனபோதும் முதலில் கொடுங்கள் தாகம்தீர குவளையில் தண்ணீர். - தயா ஜிப்ரான் - 03.04…
-
- 7 replies
- 1.4k views
-
-
கைதட்டத்தானா உன் கை-தமிழா கைதட்டத்தானா உன் கை கைதட்டத்தானா உன் கை-தமிழா கைதட்டத்தானா உன் கை வையமெல்லாம் பகைவர் நமை மோதும் வேளை-உன் கையிரண்டும் களத்தில் ஏந்தாதா வாளை கையிரண்டும் களத்தில் ஏந்தாதா வாளை கைதட்டத்தானா உன் கை-தமிழா கைதட்டத்தானா உன் கை ஆட்சி இழந்தாய் திசைதோறும் அலைந்தாய்-வெறும் காட்சிப் பொருளாகி உயிர்வாழ்ந்து தொலைந்தாய் காட்சிப் பொருளாகி உயிர்வாழ்ந்து தொலைந்தாய் கைதட்டத்தானா உன் கை-தமிழா கைதட்டத்தானா உன் கை என்னடா உனக்கு என்றென்றும் உதையா-உன் முன்னவன் இமையம் வென்றானே கதையா முன்னவன் இமையம் வென்றானே கதையா கைதட்டத்தானா உன் கை-தமிழா கைதட்டத்தானா உன் கை கொடுமை மறந்தா உன் கையோசை வெடிப்பு-அட அடிமை உன் வாழ்வில்…
-
- 7 replies
- 1.3k views
-
-
பட்டென்று நினைத்தே பதறியே போனேன் தொட்டது பட்டறை இரும்பென்ற போது..! அணைக்க நினைத்தே எரிந்தே போனேன் அணைத்தது கொடுந் தீப்பந்தென்ற போது..! கவ்வ நினைத்தே மரணித்துப் போனேன் கடித்தது சயனைட் இதழென்ற போது..! மேகமென்று நினைத்தே சிறைபட்டுப் போனேன் சிக்கியது கூந்தலில் என்ற போது..! இசையென்று நினைத்தே செவிப்பறை இழந்தேன் பேசியது பெண் குரல் என்ற போது..! கலையென்றே நினைத்தே பாடம் படிக்கப் போனேன் படித்தேன் கன்னியவள் கலையெடுத்தாடிய போது..! பஞ்சணை என்று நினைத்தே நிலையிழந்து போனேன் உணர்விழந்தேன் படுக்கையில் அவள் என்ற போது..! வசந்தம் என்று நினைத்தே விவாகத்துள் போனேன் விக்கித்தேன் "வீணாப்போனவனே" என்ற போது..! …
-
- 7 replies
- 1.5k views
-
-
களத்தில் போராட்டம் கையிலே ஆயுதங்கள் புலத்தில் போராட்டம் கையில் உயிருடன் – பெயர்ந்த புலத்தில் போராட்டம் எதில் என்று தேடுகிறேன் எது எது என்று வரைந்து விட்டுப் பார்க்கிறேன் மாமனிதன் ஜெயக்குமார் உருதான் வரைந்துள்ளேன். மாமனிதர் பலர் கண்டோம் - மறைந்தபின் மாமலையாய் எழுந்ததைக் கண்டோம் மறையாது இருப்பதைக் கண்டோம் - எம் உயிரோடு கலந்ததைக் கண்டோம் அரசியலைத் தொழிலாகக் கொண்டவர் பலர் தலைவருக்கு வாழுமிடம் சமைத்தவர் சிலர் சட்ட நுணுக்கங்கள் கொடுத்தவர் சிலர் அம்மாமனிதர் பலருள்ளே தனித்தவர் இவர் ஊரைவிட்டு வேரோடு வந்தவரெல்லாம் ஊதியம் தரும் உழைப்புடனே மகிழ்ந்திடுவர் மண்ணிண் மணத்தின் சுகத்தில் மிதப்போரோ செய்தியைத் தேடி வெறு…
-
- 4 replies
- 1.4k views
-
-
இடமொன்று தருவாயா? ஈர்பத்து ஆண்டுகளாய் இடறாத என்மனதை அசைத்தவளே அகிலத்தை அழகாக்க வந்தவளே வாசமில்லா மலராகி வாடி நிலம்தொட்டு கசங்கிக் கிடந்தவனை கவர்ந்திழுத்த காரிகையே கானல் நீரென்று கனவெல்லாம் களைந்தகற்றிக் கடிமனதைத் திடப்படுத்தும் காலம்வரை காத்தனையோ ஆண்டைந்து பொறுத்(து)அன்னை அகிலத்தில் போட்டிருந்தால் துணையாக வாவென்று துணிவோடு கேட்டிருப்பேன் விதிவந்து விளையாடி விரிசல்கள் செய்யாமல் கற்றவனாய் இருந்திருந்தால் கன்னியுனைக் கேட்டிருப்பேன் எட்டாத கொப்பென்று என்மனது சொன்னாலும் என்னவளே உன்நினைவை எடுத்தெறிய முடியலையே அன்பென்ற வார்த்தைக்கு அழகூட்ட வந்தவளே - உன் இதயத்தில் உட்கார இடமொன்று தருவாயா?
-
- 10 replies
- 1.7k views
-
-
இராமயணத்திற்கு அபிநயம் பிடித்தாடும் புலத்தமிழா ஈழத்தின்னலுக்கு எப்பொழுது அபிநயம் பிடிதாட போகிறாய்? மகாபாரத போருக்கு அபிநயம் பிடித்தாடும் புலத்தமிழா மாவீரர்களின் சாதனைகளை சரித்திரங்களையும் எப்போது அபிநயம் பிடிதாடுவாய்? சீதையின் கற்பு பற்றி விவாதிக்கும் புலத்தமிழா சிதைக்கபட்ட எம் பெண்களுக்காக எப்போ வாதாடபோகிறாய்? கற்பனைக்கதையில்லை எம்மவர் கதை கண்ணேதிரே நடலக்கும் உண்மை கதை புலதமிழா அபிநயம் பிடித்தாடு எம்மவர் கதையும்
-
- 7 replies
- 1.5k views
-
-
-
உன்னுடைய முத்தங்கள் என் முகத்தில் கறுப்பாக உன் ஒளியில் நானும் என் நிழலில் நீயும் என் மூச்சுக்காற்று-உனை அணைக்கத்தூண்டியது கண்களின் காமத்துக்கு நீயும் ஒளியானாய்-அன்று என் ஆற்றல்களுக்கு தீணி போட்டாய் குப்பிவிளக்கே நன்றியடி.....
-
- 7 replies
- 1.5k views
-
-
நண்பா ஒரு நிமிடம்.... சட்டென திரும்பாதே வெட்டி விட வார்த்தைகளை தேடாதே இன்று மட்டும் தோல்வி உனக்கே........ குழப்பத்தில் ஆரம்பித்த நட்பினை.. நேசமாய் நீ மாற்றினாய்.. இல்லை மறைத்தாய்.... இந்த உறவிற்கு என்ன பெயர் வைத்தாயோ அறிந்ததில்லை நான், என்ன நினைத்திருந்தாயோ அதுவும் உணர்ந்ததில்லை... இப்போது உன் வார்த்தைகள் தெளிவுமில்லை..புரியவுமில்லை ஆனால் எங்கோ உனக்கு வலிப்பது புரிகின்றது! எனக்கும் தான்! நாடியில் கை வைத்து அமைதியாய் வாசித்த நீ நிமிர்ந்து உட்காருவாயே இப்போது... ஞாபகங்கள் மீட்கும் பழக்கம் உனக்கு இருக்கின்றதா? இல்லாவிடினும் எனக்காக ஒரு முறை... முயன்று பார் நண்பா! அர்த்தமறியாதது போல் உன…
-
- 7 replies
- 1.6k views
-
-
விட்டகுறை தொட்ட குறை..... நாடும் சொந்தமாயில்லை.. நாமும் நாமாயில்லை....... எங்கோ பிறந்தோம் எங்கோ வாழ்கிறோம்...... உடையாதா மனசு? ஈசல் இறப்பிற்கும் எல்லை .... இருக்குமாம் சொல்வார்........ ஈழத்தமிழன் எமக்கு??? நாடிழந்த பறவைக்கெலாம்.... ஒரு கூடு தந்தீர். சுய நலத்தில் ... பொது நலம் காணுமாம் உலகம்... மாறாய் உம் பொது நலத்தில்... நாம் சுய நலம் கொண்டோம்! எம் முகத்தை நாமறிய... எம் அறிவை நாம் அறிய...! விழுதுவிட்ட ஆலமரமே... குடை தந்தாய் ....! பழங்களை தின்றுவிட்டு ... எச்சம் போட்டாலும்... தாயென தாங்கி நிற்பாய்.... ஆதலால்.......... உம் உடலில்... ஓடி மகிழும் ஒரு அணிலாய்... என்றும் வாழ...... விரும்புகிறே…
-
- 3 replies
- 1.4k views
-
-
கங்காரு மண்ணில் ஒரு கடமை வீரன் விடுதலை நேசித்த வெள்ளைச் சிரிப்பு வீரத் தலைவனின் அன்பின் விரிப்பு இடர்களைச் சந்தித்தும் இயங்கிய நெருப்பு இழந்தோமே உங்களை எங்களில் தவிப்பு. நல்ல மனிதநேயம் தாங்கிய ஜீவன் வல்லமை உழைப்பினை வழங்கிய வடிவன் சொல்லிடும் முன்பே செய்திடும் தீரன் தில்லை ஜெயக்குமார் எங்களின் வீரன். அமைதியான தோற்றத்துள் அக்கினிக் குழம்பு அவுஸ்ரேலிய நாட்டிலே பணிசெய்த முனைப்பு இமைகள் மூடும்வரை ஈழத்தின் உழைப்பு ஏங்குது தமிழீழம் இன்றுமை நினைத்து. தாய்மண்ணின் விடிவிற்கு உங்களைத் தந்தீர் தமிழீழ நிலையினை உலகினில் சொன்னீர் வாய்கதறி அழுகின்றோம் ஏன் எமைப்பிரிந்தீர் வரலாற்றின் நெஞ்சினில் படமென்…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஹைக்கூ இதுவென நம்பி நான் எப்போதோ எழுதிய சில ஹைக்கூக்கள் (?!) -------------------------------------------------------------------------------------------- செருப்பு சகிப்புத் தன்மைக்கு சரியான சாட்சி ----------------------------- சீச்... சீ... வெட்கப்பட்டது குடை! உள்ளே காதலர்கள் ------------------------------- தீக்குச்சி தலைக்கவசம் இருந்தும் தான் தப்ப வழியில்லை! ------------------------------- கறுப்பு மேகத்தை கழுவ இயற்கைச் சேவகன் அள்ளித் தெளிக்கும் நீர் மழை! --------------------------------------- நன்றி -------------------- http://kaviyarankam.blogspot.com/
-
- 8 replies
- 9k views
-
-
நிலா முஸ்லீம் பெண்ணா? முகில் பர்தாவுக்குள் அடிக்கடி முகம் மறைக்கிறதே!
-
- 2 replies
- 1.1k views
-
-
மானுடத்தை நேசி உண்ண உணவின்றி உடுக்க உடையின்றிபடுக்கப் பாயின்றி தரிக்க நிழலின்றி சிதைந்த தேகமும் சிந்திய கண்ணீரும் கொண்டலையும் மானுடம் இரண்டு இலட்சத்தை தாண்டுதே தேனாட்டில்! துப்பாக்கி கலாசாரம் காறி உமிழ்ந்த எச்சிலின் காயங்கள் சிதைக்கின்றன இன்னும் எம்மவரின் தேகங்களையும் தடம் பதித்த எம் புனித தேசத்தையும்! காலனாம் பிணந்தின்னிக் கூட்டங்கள் சொந்த இலாபத்துக்காய் கந்தகக் குழாய் ஏந்தியதால் அப்பாவி ஜீவன்கள் அலைகின்றன தெருக்களில்! மௌனித்த உதடுகள் மீண்டும் திறக்க ஜனித்த சிசுக்கள் உரம்பெற சிவந்த எம்மண் சிலிர்க்க தமிழர் உரம்பெறு நாள்தான் எப்போ! துப்பாக்கி வேட்டும் குண்டுத் தாக்குதலும் தமிழர்களின் பசிக்கான தீனியா அழித்தது போதும் ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
கடலால் பிரிந்த தேசத்திலிருந்து - கண்ணீரின் பெயரால் சிதறினோம்........... கடலால் பிரிந்த கண்டத்துள்ளிருந்து........ ....... முடிந்ததெல்லாம் - முடித்துவிட்டு........... முடிந்தது கடமையென்றே ........... முற்றாய் விழி மூடினீரோ? காரிருள் .......... படகுப் பயணம்.............. கஸ்டப்பட்டு கரை நெருங்க துடுப்பு வலித்தோம்- கிட்ட வருகையில்......... துறைமுகமாய் - இருந்த நீர் ........ தொலைந்துபோனது - ஏன் தானோ? உம்மை அறிந்ததில்லை ......... உம் குரல் கேட்டதில்லை........ சுவாசமாய் - ஏதோ ஓரிடத்தில்............ எமக்காய் இருந்தீர்! அப்போ நன்றி சொன்னதில்லை ..... இப்போ சொல்கிறோம்.............! காற்றுக்கு உடனே நன்றி சொல்லி .…
-
- 5 replies
- 1.3k views
-
-
யாழ் இணையம் தனது ஒன்பதாவது அகவையில் காலடி எடுத்து வைப்பதையொட்டிய சிறப்பு நிகழ்வு! ***யாழ் கள கவிஞர்கள் வழங்கும் கவியரங்கு 01*** தலைப்பு: "தூ!" வெனத் துரோகிகளின் தலையில் காறித் துப்பிவிடு! கவியரங்கின் நடுவர்கள் விகடகவி நோர்வேஜியன் வன்னிமைந்தன் குறிப்பு1: யாழ் கள கவியரங்கில் எவரும் எத்தனை முறையும் பங்குபற்றமுடியும். ஆனால், மற்றைய யாழ் கள உறவுகளை தாக்காத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கவிதைகளை பாடவும்! குறிப்பு2: கவியரங்கின் நடுவர்களிற்கு கவியரங்கில் இருந்து ஏதாவது பொருத்தமற்ற கவிதைகளை அல்லது கருத்துக்களை அகற்றுவதற்கு அல்லது செல்லுபடியற்றதாக்குவதற்கு முழு உரிமையும் உண்டு! குறிப்பு3: கவியரங்கம் நிறைவு: மார்ச் 30, 2007 மாண…
-
- 29 replies
- 4.3k views
-
-
பல்லவி தமிழன் தமிழன் ஒருவன் தங்கத் தமிழன் ஒருவன்-எங்கள் தலைவன் தலைவன் மறவன் தமிழர் படைத்த பிரமன்- அண்ணன் பிரபா பிரபா பிரபாகரன் பிரபா பிரபா பிரபாகரன் சரணம் 1 தமிழ்த்தாய் கண்ட கனவுஇவன்-அந்தக் கனவோடு முளைத்த நனவுஇவன் அன்னை தமிழால் சிகரமிவன்-எங்கள் அன்பை மதிக்கின்ற தலைவன்இவன் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 2 பார்வையிலே தமிழ்ப்பூமியிருக்கும் பண்டார வன்னியனின் ஆசியிருக்கும் பாயும் விழிகளிலே தீயிருக்கும் படை விரட்டும் திறன் நெஞ்சிலிருக்கும் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 3 நாட்டை நம்மை நேசிப்பவன் தமிழ்விடுதலையை என்றும் யாசிப்பவன் போரிலே செந்தமிழைப் பேசுபவன்- அ…
-
- 3 replies
- 1.3k views
-
-
உன் தோழியின் கல்யாணவீட்டில் தாலிகட்ட உதவிசெய்த உன்னைப் பார்த்தபின் தான் எனக்கும் ஆசை வந்தது தாலிகட்டி கல்யாணம் செய்ய * உன்னோடு கூடவர ஆசையின்றி விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு கூடவர என் ஆசையை வளர்த்தது * நான் முதல்த் தடவை பயணித்த விமானத்தில்த்தான் உன் நினைவுகளை தரையிறக்கிவிட்டு முதன்முதல் உன்னை கனவு காண ஆரம்பித்தேன் * வருசையில் நின்று வாங்கப் போன மருந்துக்கடையில்தான் வாங்கி வந்தேன் மருந்தே இல்லாத காதல் நோயை * உன்னை பலமுறை சந்தித்த போதும் என்னால் உன் மெளனத்தை கலைக்க முடியாமல்ப் போன போதுதான் எனக்கு உதவிசெய்து உறுதிப்படுத்தியது உன் கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று * தன் பெயரை பிழையாக எழுதிக் கொண்ட…
-
- 4 replies
- 2k views
-
-
சுமையிழுக்கும் காளைகளுக்கு......... புல்லு கூட கொடுத்ததில்லை... வக்கணையாய் ............. காத தூரம் நடந்தே நொய்ந்துபோன அதன் - கால்களில் பிழை பிடிப்பார்..............! களிம்பு தடவ - நினைத்ததுண்டா? முகில்களுக்கு இறுதி அஞ்சலியாம்.............. மழைவந்தால்மட்டும் -பிறந்த நாள் வாழ்த்தாம்! என்னயிதுவோ -கருத்து கப்பலோ? வயிறுகிழிந்து கொட்டிய வான ....... குருதி உடலில் ஏனோ கறையான் கள் பெயரில் கப்பல்? தாய் தேசமது விடியலையே தந்தை தேசமெதுவென்று தெரிந்தாலும்....... அவர்களெமை நம்பலையே...........! போகயெண்ணிய வாகனம்............ விரைவு பாதை நடுவே உருளைகள் ........ செயலற்றதால் உடைந்ததாய் ஆச்சு வாழ்வு..! நீ வெட்டி வீரம் காட்டு ....... வெள…
-
- 2 replies
- 859 views
-
-
வான்படை வாளுருவியது... சிங்கள இராணுவம் சித்தம் கலங்கிட தமிழரின் வான்படை கொடுத்த அடியில் எங்கட மக்களை ஏதிலி ஆக்கிய சிங்கள படைகள் விழந்தது காண்.. தேன்மொழித் தமிழின் மானங்காத்த வீரர்கள் வான்படை கொண்டு வாளுருவியது காண்... எட்டி உதைத்து இறுமாப்பு கொண்ட சிங்கள வெறியரின் சீற்றத்தை தாங்கி உலக சமூகத்தின் பார்வைக்கு ஏங்கி எத்தனை வருடங்கள் கைக்கட்டி நிற்க ? சிங்களன் செய்தால் உள்நாட்டு போராம் சீற்றத்துடன் தமிழன் செய்தால் தீவிரவாதமா ? பாகிஸ்தான் தருகிறான் அமெரிக்கா தருகிறான் பார்க்காமல் விட்டால் இந்தியனும் தருகிறான்.. தமிழர் படைகண்டு தானாய் நடுங்கிஓடும் சிங்களன் ஆயுதமே போதுமடா தமிழ…
-
- 5 replies
- 2.6k views
-
-
'' அழிவு காலம் பிறக்குது..'' துள்ளி துள்ளி வானமேறி துள்ளி ஆட்டம் போட்டவரே கொள்ளி வைத்து வந்தனரே புலிகள் - உம் கொட்டகையில் போய் பாரும்... நள்ளிரவு ஏறி வந்து நர பலிகள் எடுத்தவரே கண்ணை திறந்து இன்று பாரும் கருமாதி செய்து விட்டோம்.... உம் மணியில் மூவரது உயிர்களையே பறித்து வந்தோம் ஈ...ரெட்டு மீதியரை படுக்கையிலே கிடத்தி விட்டோம்.. எங்கள் வானில் ஏறி வந்து ஏளனமா ஆடிப் போனாய் உந்தனது கோட்டையிலே உனக்கு அடி விழ்ந்தது காண்... எங்களது பறவைகளை எங்கே இன்று தேடி வந்தீர்...?? கோழைகளே உங்களது கோட்டைகளை போய் காரும்... வெள்ளித் தட்டு ஏந்தி வேண்டி வந்த எவுகணை தூக்கத்தில இருந்தது போல் துட்டர்களை எழுப்பி விடும்.. படுக்கையி…
-
- 3 replies
- 1.3k views
-