கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
உனக்கு காக்க வைப்பதில் சுகமென்றால் எனக்கு காத்திருபதில் அதிக சுகம் உன் தூக்கம் கலைக்க விரும்பவில்லை உன் தூக்கம் கலையும் வரை காத்திருக்கத்தான் விரும்பவில்லை கவிதைக்காய் காத்திருபதில் கவிதை பிறப்பது எனக்கு மட்டும்தான் உனக்காய் காத்திருந்து என் எழுத்துக்களுக்கு கால் வலிக்கிறது தயவு செய்து வரும் போது வெறும் கையோடு வந்துவிடாதே என்னைக் காக்க வைத்து விட்டு வரும் போது கவனம் நீந்த நேரிடலாம் என் கவிதையின் கண்ணீரில் இன்றாவது காதலைச் சொல்லத்தான் தினமும் காத்திருப்பேன் இதுவரை சொல்ல விட்டதில்லை காதல் காதலனா கத்தான் காத்திருக்கிறேன் கவிதையே காதல் கவிஞனாய் கன நேரமாய் காத்திருந்தாலும் நீ கேட்டால் ஏன்தான் ச…
-
- 3 replies
- 1k views
-
-
உன் காதலுக்குதான் கண் இல்லை நீ இல்லாமல் என் கவிதைகள் அழுகின்றனவே அதாவது கேக்கிறதா? என்னை மறந்து வாழத்தான் இடம்பெயர்ந்தாய் என் நினைவுகளை மறந்து வாழ என்ன செய்தாய்... என் கண்ணைத்தான் அதிகம் பிடிக்குமென்றாய் உண்மைதான் அதை மட்டும்தான் என்னால அடக்க முடியவில்லை என்னை உண்மையாக காதலித்தாய் என்றால் என்னை மறந்துவிடு என்றாய் அப்போதுதான் பொய்யானது என் காதல் வாழ்க்கை ஒரு போர்க்களம் புரிந்து கொண்டேன் காதலி என்ற ஆயுதத்தை தொலைத்தபின் என்னை எனக்கே பிடிக்காத போதுதான் உன்னை மட்டும் பிடித்தது அதே என்னை எல்லாருக்கும் பிடிக்கும் போது எப்படி பிடிக்காமல் போனது உனக்கு மட்டும் என்னை என்னை ஞாபகப்படுத்த எந்த கவிதையும் எழுதியதில்லை எழ…
-
- 6 replies
- 1.8k views
-
-
'' போரை தொடங்கும் புலிகள்..'' உள்நுழைந்து உளவெடுத்து ஊந்துகணை தாக்குது பகையரனின் காவலரன் பலிகளமாயாகுது..... முன்னேற வந்த பகை முதுகுடைந்து சாயுது கண்ணு முன்னே தளபதிகள் களப்பலிகள் ஆகுது... எங்கள் புலி வீரமின்று ஏறியங்கு ஆடுது உலகத் தமிலெல் லாமின்று கை கொட்டி பாடுது.... வானமேறி வந்த பகை வானமது காவுது பாதி வழி போகுமுன்னே படை உயிர்கள் போகுது... நான்கு முனை திறந்தடிக்க நம்ம படை கூடுது வேண்டி கட்டி வந்தபடை வெளியேற போகுது... பரிட்சாத்த தாக்குதல்கள் பரவலாக நடக்குது பறையடித்து புலிகளணி போரை தொடுக்க போகுது....! ' -வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 1.3k views
-
-
காத்திருக்கு மனசு . நெஞ்சில் நீறு பூத்திருக்கு.. இதயம் வேர்த்திருக்கு நீ வந்து விசிறிவிட்டு போ..
-
- 4 replies
- 1.4k views
-
-
களத்துக்கு புதிதாக வந்திருக்கும் பிரம்மம் இணைத்திருக்கும் இணையத்தளங்களுக்குள் உலா வந்த போது சமுதாயத்தைச் சாடிய ஒரு பாடல் அடிக்கடி என் மனதில் ஞாபகம் வந்தது. அந்தப் பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்களேன். http://www.myspace.com/sujeethgs அதுசரி பிரம்மத்திடம் ஒரு கேள்வி நீர் தான் சுஜித்ஜியா? அல்லது உங்களுக்கு வேண்டப்பட்டவரா?
-
- 3 replies
- 1.1k views
-
-
ஆழக்கடல் அது அரபிக்கடல் அந்த நீளக் கடல் வழி நிரை நிரையாக எங்கள் சோழப் படை வீரர் செல்லும் பெரும் சேதி சொன்ன மைந்தன் வாழி கலிங்கம் வென்ற தமிழர் எம்மை செலிங்கோ வந்து சிதைத்தெறிந்து அழுங்கோ எண்டு விட்டுப்போனதை ஆராய்ந்து சொன்ன அண்ணன் வாழி உடல்கள் உரசும் விரசம் பரவும் - காம கடலில் எம்மை கலந்தவன் அண்ணன் விடலைப் பருப விரகம் அடங்கா விண்ணன் எங்கள் அண்ணன் வாழ்க சோம பானம் அருந்தி சுதியேற்றி வாசிக்க காம சாத்திரம் தந்தவன் - கலவியை கல்வியாய் சாம நேரத்துச் சங்கதிகள் சொல்லியே சரித்திரம் படைத்திட்ட மைந்தன் வாழி தண்ணியில் மிதந்தவன் விடிந்ததும் கனவினை எண்ணியே கவிபல எழுதிக் குவித்தவன் அண்ணைமாரே உங்களை ஆயுதம் ஏந்தச்சொல்லி தன்னை வருத்த…
-
- 120 replies
- 9.8k views
-
-
இந்த அமாவாசை உன் பௌர்ணமிக்காக ஏங்குகிறது - உன் இரத்தத்தினால் நெய்யப்பட்ட என் இதயம் உன் பெயர் சொல்லித்தான் துடிக்கின்றது - நான் சுவாசிப்பதே நீ விட்டுச் சென்ற மூச்சுக் காற்றினால் தான்... என் கண்கள் உன்னைக் காண்பதற்காக தான் இரவில் விழி மூடுகின்றது... உன் விரல்கள் பிடித்து நடக்காததால் - என் கை விரல்கள் நடக்கும் போது விரிய மறுக்கின்றன... நீ இல்லாது - நான் தனித்துப் போவேனென்று தெரிந்திருந்தால் உன் கருவிலேயே உன்னுடன் கலந்திருப்பேன்..!! நீ எனக்கு காட்ட வேண்டிய நம் உறவுகள் எல்லாம் உன்னை எனக்குக் காட்டுகின்றார்கள் - என் தவிப்புக்கள் உனக்குத் தெரியவில்லையா....? என் முதன் முதற் காதலியே......…
-
- 20 replies
- 3.2k views
-
-
உன்னை போல் ஒரு ஆணின் அருகிலே மௌனம் கொள்வது கடினம் தான்... பேசிக் கொள்ளாத எல்லா நிமிடமும் நஷ்டம் தான்... எனை விட இங்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்... உன்னை பார்த்தவுடன் எனை தொட்டுவிட்ட வெட்கத்தில் தலை குனிந்தேன்... அன்பே...உன்னை ஒரு நிமிடம் மறந்திருக்க என்னால் முடியவில்லை... இன்று இந்த நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க ஒரு போதும் அலுக்க வில்லை... உன் வெள்ளை உள்ளம் கண்டு விழுந்து விட்டேன்... விழுந்த இடம் உந்தன் நெஞ்சம் என்று புன்னகைத்தேன்...!!!! அன்பே... உன்னை நான் மறக்க்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தொல்வியிலேயே முடிகின்றன... ஏனெனில்... நான் மறப்பதற்கு உன்னை தானே நினைக்கிறேன்...!!!! நான் சிந்தும் புன்னகை கூட உன்னை …
-
- 9 replies
- 1.6k views
-
-
ஆரிடம் சொல்லியழ? தொலைபேசி வைத்திருப்போரே! தொலைந்து போங்கள்…. தாயகம்பற்றிப் பேசவா? யார் முந்தி நானா?...... நீயா? உணர்வெடுத்து, உரிமைக் குரலெடுத்து ஆகாய வெளிகளை அதிர வைப்போம்..!!!!! திட்டங்களும், கருத்தாடல்களும் கேட்கக் கேட்க உற்சாகம் பிறக்கும். ஆகா இனிக் கவலையில்லை எவ்வளவு குரல்கள்…! உலக அங்கிகாரம் எதற்கு? நாங்களே இராசாங்கம் இதோ தாயகம் எங்கள் கைகளில் இதனைச் சீராட்டுவோம் பாராட்டுவோம். சிரசின்மேல் சுமப்போம். வானலைகள் கதவுதட்டி வார்த்தைகளை குவித்தெறியும்! நம்பி நம்பிக்கை கொண்டேன் வானலை வந்த என்னருந் தோழருடன் பேச தொலைபேசி எடுத்தேன்.. ஆகா நான் கதைத்தது கேட்டீரா? எப்படி இருந்தது? உணர்வாய் இருந்ததா? என ஆயிரம்…
-
- 8 replies
- 1.7k views
-
-
-
நெற்றிப் பொட்டை கழற்றி எறிஞ்சா விடுதலை கட்டுற சேலைய கழற்றி விட்டா விடுதலை நீண்ட கூந்தலை கத்தரிச்சா விடுதலை பியர் போத்தலை முழுசா இழுத்தா விடுதலை கட்டின மனிசனை கழற்றிவிட்டா விடுதலை கலியாணம் ஆகாமலே கருத்தரிச்சா விடுதலை கருவில உள்ளத்தை கலைச்சிட்டா விடுதலை கைகோர்த்து திரிஞ்சிட்டு கைவிட்டு கைபிடிக்கிறது விடுதலை போய்பிரண்டு வைச்சிருந்து கறந்திட்டு விட்டா விடுதலை படிக்க என்று பள்ளிக்குப் போய் வம்பளந்தால் விடுதலை பஸ்ராண்டில கும்பலா லுக்குவிட்டு இழிச்சா விடுதலை ரேக் எவேயில சாப்பாடு வாங்க உழைக்க போனா விடுதலை அங்கங்க அங்கங்கள் தெரிய உடுப்புப் போட்டா விடுதலை பெண்ணும் பெண்ணும் கல்யாணம் முடிச்சா விடுதலை காங் கூட சேர்ந்து கஞ்சா…
-
- 33 replies
- 8.2k views
-
-
கையில்லாச் சட்டை! தணிக்கையில்லாத் தொடை! சாயச் சிவப்பில் சமாதியாகிப் போன உதடுகள்! புருவ மேட்டில் கருமேகக் குவியல்! இரவு உடையில் வீதி உலா! தேரொன்று நடப்பதாய் எம்மவர் கண்கள் இமையா(து) தவம் இயற்றும்! தடுக்கி விழும் இதயம் எடுக்கி அணைத்தால்(ள்) சொர்க்கத்தில் பயணம்! இளமை வெட்டி ஒட்டிய 'லேபிள்கள்' உற்றுப் பார்த்தால் எல்லாம் போலிகள்! உதடு பிரிந்தால் வார்த்தைகளுக்கு வலிப்பு எடுக்கும்! ஆங்கிலம் நிர்வாணம் ஆகும்! மூலையில் தமிழ் முக்காட்டுடன் மெல்ல விசும்பும்! பார்வை வண்டுகள் சிறகடிக்கும் ரோஜாவென யோசித்து மயங்கும்! குதிக்கால் உபயத்தில் உயர்ந்து விடுவார்கள்! …
-
- 2 replies
- 1.7k views
-
-
'' அஞ்சி வாழேன்..'' சிங்கள கூட்டு வைத்து சில காலம் வாழ வந்து சேர்த்து வைத்த பணமதையும் தெருவில் போட்ட கதை காணய்.... மாடாக இங்குழைத்து மாளிகைகள் வேண்டிவிட்டு தான் வாழ முடியாமல் தவிக்கின்ற நிலை பாராய்..... பகலிரவு தான் பாரா பட்டினிகள் தான்கிடந்து ஊன் உருகி உழைத்த பணம் யாருக்கு போகுது காண்... காட்டி கொடுப்பவர்கள் கரியாராய் இவராக்கி- இவர் வாய்க்கரிசியிட்டு - அவர் வாழ்கின்ற காலம் காண்... கொழும்பினில் வாழ்வதாய் கொழுப்பாக பேசிநின்ற எம் தமிழர் வாழ்வியலில் எறி வந்த இன்னல் கேள்... ஏறி வந்து வீதியிலே ஏற்றமுடன் உலவிடதான் முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கிய நிலை காணாய்.. முக மூடியணிந்தவர்கள் முன்னாடி தலையாட்டி …
-
- 1 reply
- 1.1k views
-
-
மும்மனி தந்தான் புத்தன் முப்பால் தந்தான் வள்ளுவன் மும்பழம் தந்தாள் ஒளவை முத்தொழிலுக்கு(காத்தல்,அழித்
-
- 29 replies
- 4.2k views
-
-
(முல்லை செஞ்சோலை வளாகத்தில் சிறீலங்காவின் வான் படையினரால் 61 சிறுமிகள் கொல்லப்பட்டதின் எதிரொலி... ) கண்மணிகள் சோலை மீது வான் பறவை பறந்தது! வடிவான வளர் இளம்பிறைகளை வாடி வதங்கச் செய்தது! தலைவன் அடி தாங்காது ஓடி மறையும் கோளைகாள்... பேடித் தனம் செய்தனீர்! - உம் கோர முகம் காட்டினீர்! கொலர் உயர்த்திக் கொக்கரிக்காதீர்... மலர்களைப் பறித்த உங்களுக்கு மரணப் படுக்கை ரெடி! 'கலர்' கனவு ஏதேனும் இருந்தால் தீர்த்துக் கொள்ளும்! உம் 'உயிர்'ப்பறவை பறக்குமடா சீக்கிரம்! அழுது வடிவதால் ஏதும் ஆகாது தோழரே! சர்வதேச அரச மேடைகளில் குருத்துகளில் குருதி பூசியவன் …
-
- 1 reply
- 1.4k views
-
-
நீ யற்ற போது February 21st, 2007 at 1:10 pm (காதல்) · Edit இலையற்ற மரம் நீர்யற்ற தோப்பு மண்பிடியற்ற வேர் கூடற்ற கிழை நிறமற்ற மரம் நிழல் கொடா நிலை உயிர்யற்று உறவற்று நீயற்று நின்ற மனம் காதல் வேர்றற்று சாந்து கரிசல் லாயிற்று ஆ நிலை யற்ற வாழ்வு இலை யற்ற மரம் நீர் யற்ற கடல் மரம் மற்ற காடு நிறமற்ற மலர் நீ யற்ற போது, நான் பெற்ற வலி Comments நகரும் காலமும், நகராத வாழ்வும் February 21st, 2007 at 1:00 pm (காதல்) · Edit நகரும் காலமும், நகராத வாழ்வும் நகர்ந்தது,நாட்கள் மிடங்கள் நாட்களாய் கனத்தை காதலித்தது நிமிடங்ள் வேதனையை கூட்டியது, நீ யின்றீ வாழ்க்கை வெறுமை கொண…
-
- 11 replies
- 2.2k views
-
-
எட்டடா தூரமில்லை - இனி முட்டுமெம் கைகள் வானை தட்டடா கைகள் சேர்த்து - எங்கள் வானிலே கொடியை ஏற்று தொட்டிடலாமோ பகைவர்- உயிர் தாயவள் மண்ணை யென்றும் முட்டவா வந்தான் மூடன் - வேங்கை மூச்சினால் அழிந்து போவான். கொட்டடா முரசு - எட்டு திக்கிலும் சேதி சொல்வோம் உருண்டிடும் உலகப் பந்தை ஒருமுறை நிற்கச் சொல்வோம். கட்டிலாப் புலமை பெற்ற - உலக கவிகளை கூட்டி வந்து மட்டிலாத் தீரம் செய்தான் - எங்கள் தலைவனைப் பாடச் சொல்வோம். பற்றினை விட்டு வந்தார் - புதுப் பரணிக்கு வழி சமைத்தார். இட்டிடும் தலைவன் ஆணை முடித்துயிர் தந்து போனார். பெற்ற…
-
- 4 replies
- 1.1k views
-
-
தேடித்தான் உன்னை கண்டு பிடித்தேன் இருந்தும் இன்னும் தேடுகிறேன் உனக்குள் என் காதலை நான் பேசிக்கொண்டே இருக்க உன் கண்களிடம் கற்றுகொள்ள வேண்டும் நான் பேசாமல் இருக்க உன்னிடம் கற்றுகொள்ள வேண்டும் நீ காட்டும் யார் என்றாலும் சண்டை பிடிக்க தயார் உன் கண்களை காட்டத வரை உன்னை சிரிக்கவைத்து பாக்க ஆசைதான் இன்னும் முழுசாய் பாக்க விட்டதில்லை உன் கன்னக்குழி ஐந்து என்று எழுத தெரியாது அஞ்சு என்று எழுதத்தான் தெரியும் எழுத்து பிழைவிடும் கவிஞன் நான் நீ கிடைக்கத்தான் கவிதை எழுதுகிறேன் இருந்தும் காட்டமல் மறைக்கிறேன் கிடைக்காமல் போய்விடுவாயோ என்று உன்னை ஒருதலையாக காதலிப்பது முட்டாள்தனமாக இருந்தாலும் உன்னைக் காதலிக்கிறேன் என்பதே …
-
- 4 replies
- 1.5k views
-
-
சின்ன வயசு எனக்கு அதைவிட சின்ன வயசு உனக்கு மீசை எனக்கும் ஆசை உனக்கும் வராத காலம் அதுவும் பசுமையான காலம் புத்தகங்களை சுமக்க இயலாத வயதில் உன்னை மட்டும் சுமந்ததில் சுகம் எனக்கு நாம் கை பிடித்து பொடி நடை போடுவதற்காகவே நம் பள்ளி வரவை அதிகரித்தோம் ஒரே விட்டில் வாழ்ந்தாலும் ஒரு வார்த்தை பேசியதில்லை பயத்தால் நானும் வெக்கத்தால் நீயும் ஊமையாய் ஊனமாய் வாழ்ந்தோம் இதில்தான் உண்டானது எனக்கும் உனக்குமான உறவு உன்னில் விழிக்க வேண்டும் என்றே தினமும் தூங்க போவேன் நான் அதற்காக நீ அதிகாலை எனக்கு முன் விழிப்பாய் உன்னில் விழிக்காமல் என்றாவது என் தூக்கம் கலைந்ததுண்டா பள்ளியில் விழுந்த எறிகணை என் உயிரை பறித்…
-
- 6 replies
- 1.4k views
-
-
ஈழ வேள்வி!.. சுதந்திரம் என்பது மஞ்சமா? -நாம் சிந்திய இரத்தங்கள் கொஞ்சமா? வீரர்க்கு எம்மிடை பஞ்சமா? நாம் வெகுண்டெழில் எதிரிகள் மிஞ்சுமா? சுதந்திரம் வேண்டிநாம் கூடினோம்-கையில் ஆயுதம் ஏந்தி ப்போராடினோம் சுடும் நெருப்பாகவே மாறினோம் நம்மை சூழ்ந்த பகைவரை சாடினோம்? வீரர்கள் சாவது இல்லையே -விழி நீரினை சிந்தாதே அன்னையே போரில் மடிவதை எண்ணியே -தமிழ் போராளி மகிழ்வது உண்மையே அன்னையே இன்னமும் கலக்கமா?-இனி மேலொரு துயரில்லை உனக்கம்மா அந்நியன் இனி இங்கு யாரம்மா? மகன் அரணாய் இருக்கிறான் பாரம்மா புலிகள் பசித்தாலும் புல்லையே -ஒரு போதும் புசிப்பது இல்லையே உலகினைத் தந்தாலும் அள்ளியே -நம் உரிமைகள் கைவிடார் உண்மையே!
-
- 5 replies
- 1.2k views
-
-
மாசி மாத விடுதலைப்புலிகள் 2007ல் வெளிவந்த வியாசன் எழுதிய கவிதை பலத்தோடு இருந்தால் மதிப்பார்கள் நிலத்தோடு கிடந்தால் மிதிப்பார்கள் சுற்றிச் சுழன்றேறி வருகின்றன நரமாமிச உண்ணிகள். சம்பூரைத் தின்று சமித்து, வாகரையை வளைத்து முடித்து, குடாநாட்டின் குரல்வளையை நெரித்தபடி முகமாலையின் முன்னரணேற முயல்கின்றன உண்ணிகள். வன்னிதான் உண்ணிகளின் ‘நம்பர்வண்’ இலக்கு பாதைகளை அடைத்துப் பட்டினி போடுவதால் விடுதலை இதயங்களின் துடிப்பை நிறுத்தலாமென உண்ணிகளை ஏவுவோர் உறுதியாக நம்புகின்றனர். கொட்டிக் குவிக்கும் ஆயுதங்களை மட்டுமல்ல பட்டினியையும் சேர்த்தே பயன்படுத்தப்போகின்றனர். விடுதலையின் விகர்சிப்பை விழுத்துவதற்கு பட்டினியையும் பயன்படுத்திய சிலர் முன்னர் வெற்றியும் …
-
- 2 replies
- 985 views
-
-
முதலிரவில், என் காலில் விழுந்து வணங்கிய அந்த கணங்களிலேயே நொறுங்கிப்போனது உன் மீதான என் ஒட்டு மொத்த மரியாதையும். ஒவ்வொரு நாள் காலையிலும், தாலியைத் தொட்டு ஒற்றிக் கொள்ளும் வேளைகளில், பொய்த்துக் கொண்டிருக்கிறது மீதமிருக்கும், என் கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்புகளும். புடவைக் கடைகளிலும், நகைக் கடைகளிலும், உன் முகம் அடையும் பிரகாசத்தை நம் வீட்டு படுக்கையறையில் கூட இதுவரை கண்டதில்லை. உப்புப் போட மறந்ததையும், சர்க்கரை அதிகமாய்ப் போட்டதையும், தாண்டி என்னிடம் பேச விஷயங்களே உனக்கு தோன்றியதில்லை. 'அவரு', 'என் வீட்டுக்காரர்' உன் உதடுகள் உச்சரிக்க மறுத்து கூசுமளவிற்கு என் பெயர் கெட்ட வார்த்தையாகிப் போனது உனக்கு. "ம்ம்ம்........ வந்து…
-
- 17 replies
- 3.3k views
-
-
என் காதலியின் இடை கடவுள் போல... இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்....!
-
- 10 replies
- 4.1k views
-
-
முன்னழகு முந்திவர பின்னழகு அசைந்து வர என்னருகே வந்தவளே காதல் கனிமொழி தந்தவளே எங்கையடி சென்றாய் நீ என்னை விட்டு? அசைந்துவரும் உன் இடையதிலே கட்டிவிட்டேன் என் மனமதையே மாயமாய் சென்று மறைந்தனையே நீ மங்கை தானா மறுமொழி கூறடியே தங்கம் என மின்னும் உடலோடு சொர்க்கம் எனச் சொக்கும் மன்மதக் கணையோடு அன்னம் என எழிலுறும் நடையோடு மொத்தம் இதுவென நித்தம் பருகிட கருவண்டு நானென ரோஜா நீயென - என் அர்ப்பணம் இதுவென தந்தனை நின் உடலினை பசியாற பணி செய்யும் பாவை நீயென மகிழ்ந்தனன் நான்... இதழதில் இதழ் வைத்து இன்பரசம் அருந்துகையில் மனமதில் கள்ளம் வைத்து நடித்தனையே நீயும் பாவி கொடும்பாவி என்னாவி துடி துடிக்க வைத்த மாபாவி என்னவாகி நான் போனேன்... …
-
- 6 replies
- 1.8k views
-
-
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் உண்மை தானடா புத்தன் நிற்கின்ற பூமியில்தான் இந்தப் படுகொலைகள் போதிச் சாமிக்கு வீதியெங்கும் தமிழ் பலிகள் ஒருவன் புலம் பெயர்ந்தது சென்றாய் ஒரு இனத்தையே புலம் பெயர்ந்து ஒடூகிறது அன்பை போதித்த நீ அடக்குமுறையை போதித்தது எப்போது ஆசையின்றி வாழ சொன்னாய் ஒசையின்றி ஒரு இனத்தை அழிக்கிறார்கள் உன் பெயரால் அண்டத்தின் அனைத்துயிர் பிண்டத்தை உண்டபின்தான் அடங்குமா உன் பசி…
-
- 3 replies
- 1.2k views
-