கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
உலகினினில் இழிய நாடு சிறீலங்கா - மனித உரிமையை மதியா நாடு சிறீலங்கா ஞாலத்தில் இழிய நாடு சிறீலங்கா - புத்த ஞானத்தை மறந்த நாடு சிறீலங்கா பாரினில் இழிய நாடு சிறீலங்கா -கொலைப் போரினை நாடும் நாடு சிறீலங்கா புவியினில் இழிய நாடு சிறீலங்கா - பல புதைகுழி கொண்ட நாடு சிறீலங்கா வையத்தில் இழிய நாடு சிறீலங்கா - இன வெறியர் வாழும் நாடு சிறீலங்கா அவனியில் இழிய நாடு சிறீலங்கா - சில அரக்கர்கள் ஆளும் நாடு சிறீலங்கா தரணியில் இழிய நாடு சிறீலங்கா -அப்பாவித் தமிழர் சாகும் நாடு சிறீலங்கா http://gkanthan.wordpress.com/index/izhiya-naadu/
-
- 0 replies
- 565 views
-
-
சுஐப் எம். காசிம்- ஒவ்வொரு வருடத்தின் ஒக்டோபர் இறுதிதினம் நெருங்கி வரும் நாட்களிலே நெஞ்செல்லாம் வலியெடுக்கும் நினைவெல்லாம் தடுமாறி நீர் நிறையும் கண்களிலே உணர்வெல்லாம் தத்தளித்து உதிரம் அலையெழுப்பும் தாயகத்தின் நினைவெழுந்து தவிதவித்து மனம் கதறும் வேகாத உடலோடு வெந்த உயிர் தொங்கி நின்று பிறந்த தாய் மண்ணினைவில் பிரிவில் துடிதுடிக்கும் "இன்னுயிர்த் தாய் ஈன்றெடுத்த இரட்டைக் குழந்தைகள் போல் நூறு பலஆண்டுகளாய் நோகாதும் நொடியாதும் ஒருயிராய், ஈருடலாய் ஒன்றிணைந்து வாழ்ந்த அந்தக் காலத்தின் நினைவெழுந்து கண்கள் குளமாகிவிடும் ஓர் புலத்தில் தான் வாழ்ந்…
-
- 0 replies
- 661 views
-
-
அண்ணனின் அருகமரும் அதிகாரம் உடையவரே சிங்களத்தை சிதறடித்த சூறாவளியே சுற்றும் பூமிக்கும் சுழலும் காற்றுக்கும் பேசக்கற்றுக்கெடுத்த ஆசானே பார் முழுதும் புலிக்கொடி பறக்க தேசமெங்கும் தமிழர் குரல் ஒலிக்க தண்ணீரில் வந்து தாயகம் தொட்ட தனையனே என் களதில் சிங்களம் எம் குரல்வளை நசுக்கி சூதுரைத்து நிண்றபோது உன்மைய்காய் ஒலித்தகுரலே பாலா அண்ணா திரைகடலோடியும் தமிழீழம் காண்போம் எண்றுரைத்த தமிழே கொடிய நோய் வந்து தேகத்தை வாட்டினாலும் வேகத்தைக்குறைக்காமல் கொடிது கொடிது மண்டியிடும் தமிழன் வாழ்வெண்ற வரிப்புலியே வெள்ளைத்தலைகளுக்குள் சரியாசனம் பெற்ற தளபதியே பாலா அண்ணா வஞ்சகரெல்லாம் வாழ்வாங்கு வாழ ஆழப்பிறந்த அண்ணன் தளபதியே கொடிய புற்றுநோயுங்களை காவு கொள்வதா …
-
- 0 replies
- 739 views
-
-
மகாவலி – தீபச்செல்வன்… உடலெங்கும் சிங்கக் கோடுகளில் இராட்சத பாம்புபோல காவி நிறத்துடன் நுழையுமொரு நதி மென்று விழுங்கியது என் காடுகளை நதியின் பெயரால் துடைக்கப்படும் தேசத்தில் முளைத்துச் சடைக்கின்றன களை வீடுகள் தெற்கிலிருந்து பண்டாவையும் புத்தனையும் யுத்த டாங்கிகளையும் அள்ளி வரும் நதி எம் தலைநகரிலிருந்து ஒரு வார்த்தையேனும் எடுத்துச் சென்றதில்லை எம்மீது நதியின் ஒரு துளியும் பட்டதில்லை பீரங்கியிலிருந்து பாயும் குண்டுகளைப் போன்ற பேரலையின் எதிரே சிவந்த கண்களுடனிருக்கும் மாவிலாறு போலொரு சிறுவனும் முகம் மறைக்கப்பட்…
-
- 0 replies
- 1.5k views
-
-
நீ தானே நாள் தோறும் நான் கவி எழுதக் காரணம் உன் நினைவெல்லோ என் கவிதை சுர ராகம் உன் பாடல் கேட்டு எல்லோ என் இதயம் எழுதும் கவிதை எங்கெல்லாம் காற்றோடு எதிலும் உந்தன் ராகம் வாழ்வு எல்லாம் வர்ணங்கள் வரைந்த உந்தன் சுரங்கள் பொன்வானம் தன்னாலே பாடும் உந்தன் இசைகள். போய் வாருங்கள் எம் புல்லாங்குழலே இசையும் தமிழும் உள்ளவரை இந்த உலகு உம்மை நினைவு கொள்ளும் 🙏
-
- 0 replies
- 491 views
-
-
வேண்டாம்... - கவிதை கவிதை: லிவிங் ஸ்மைல் வித்யா, ஓவியம்: ரமணன் சிற்றாறு எதிரிலிருக்க, காம்பௌண்ட் சுவருக்குள், தோட்டமும், தோட்டத்திற்கு நடுவேயான பாரம்பர்யமான உங்கள் வீட்டில், தலைவாழை விருந்துக்கு என்னை அழைக்க வேண்டாம்... நகரின் மையமான பகுதியில், ஆடம்பர அப்பார்ட்மென்ட்டில் ``கம் ஓவர், லெட்ஸ் ஹேவ் எ பியர்’’ என்றும் அழைக்க வேண்டாம்... கருங்கற்களால் வேய்த, செவ்வண்ணம் பூசிய, சிறிதும், பெரிதுமாய் டெரகோட்டாக்கள் நிரம்பிய, கலைவண்ணமான உங்கள் இல்லத்திற்கு கவிதை விவாதிக்க அழைப்பு விடுக்க வேண்டாம்... ``வாங்க, எங்கூருக்கு, நம்ம தோப்பு எளநிக்கும், அம்மா வக்கிற நாட்டுக்கோழி வறுவலுக்கும் ஈடே கிடையாது’’ எனத் தூண்டில் ப…
-
- 0 replies
- 1.7k views
-
-
மிக மிக எளிதாக சிந்தவைக்கப்பட்டதுபோல மிக மிக எளிதாக துடைக்க முடியாத குருதி யாரும் அறிந்திரா விதமாய் உறிஞ்சினர் வாழ்பவர்களின் குருதியையும் மாபெரும் சவக்கிடங்கைமூடும் மாபெரும் இரத்தப் பெருவெளியை துடைக்கும் உதவிக்கு மாபெரும் சனங்களை வீழ்த்திய அதே கரங்கள் வெடிலடிக்கும் கொடிகளோடு எலும்புக்கூடுகளால் அலங்கரிக்கப்பட்ட ஐ.நாவில் பேரம் பேசும் கொலையாளிகள் இடைவேளையில் அருந்தினர் ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் குருதியை இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர் கொன்று தின்றவனே தன் வாயினை துடைக்கட்டுமென பூமியெங்கும் நீங்க மறுக்கும் குருதிக்கறைகள் அது அவ்வளவு எளிதல்ல மிக மிக எளிதாக சிந்தவைக்கப்பட்டதுபோல மிக மிக எளிதாக துடைக்க முடியாத குருதி எளிதாக மறைக்கப்பட்ட ஒன்றரை லட்சம் உட…
-
- 0 replies
- 477 views
-
-
காதலித்து கெட்டு போ.அதிகம் பேசுஆதி ஆப்பிள் தேடுமூளை கழற்றி வைமுட்டாளாய் பிறப்பெடுகடிகாரம் உடைகாத்திருந்து காண்நாய்க்குட்டி கொஞ்சுநண்பனாலும் நகர்ந்து செல்கடிதமெழுத கற்றுக்கொள்வித,விதமாய் பொய் சொல்விழி ஆற்றில் விழுபூப்பறித்து கொடுமேகமென கலைமோகம் வளர்த்து மிதமதி கெட்டு மாய்கவிதைகள் கிறுக்குகால்கொலுசில் இசை உணர்தாடி வளர்த்து தவிஎடை குறைந்து சிதைஉளறல் வரும் குடிஊர் எதிர்த்தால் உதைஆராய்ந்து அழிந்து போமெல்ல செத்து மீண்டு வாதிகட்ட,திகட்ட காதலி..~ முனைவர் டாக்டர் நா.முத்துக்குமார்----------------------------------------------------------------------------------------------------------------------------------------------நா.முத்துக்குமார் "" துளிப்பாக்கள் ""உள்ளாடைக் கடைகளில்அளவு கு…
-
- 0 replies
- 148.4k views
-
-
கடல் சீறி எழுவது போல் நீயும் சீறிய் எழுந்துடு தமிழா.... தமிழ் இனத்தவரின் சீற்றத்தை கண்டு உலக நாடுகள் அஞ்சி நடுங்கட்டும் நம்மை கண்டு சிங்கள வெறியர்கள்.. நாடு விட்டு நாடு செல்லட்டும் எழுந்து வா தமிழா..... களத்தில் போராடும் நம்ம சாகோதரர் சாகோதரிக்கு தோள் கொடுப்போம் எழுந்து வா தமிழா.... நம் இனத்தவரை அழிக்கும்... சிங்கள வெறியர்களை நாம் கூண்டோடு அழித்து நம் தழிழ் ஈழத்தை நாமே கட்டி எழுப்புவோம்.. நம் வீரத்தை கண்டு மகிந்த அரசு பயந்து நடுங்கி காடு காடாய் இரவோடு இராவாய் முட்டை முடிச்சுகளுடன் நாடு விட்டு நாடு செல்லட்டும் தமிழனின் வீரத்தை உலகம் எங்கும் பறை சாற்றி தமிழன் என்று சொல்லடா தலை நிமிந்து நில்லடா என்று பெயர் கே…
-
- 0 replies
- 1.4k views
-
-
காலாறத்துடிக்கும் மீட்பர்களும்...கண்டுகொள்ளாத மந்தைகளும்.... காலையும் மாலையுமாய்க் கனவுபோல முடிந்துபோன நாட்களில் முடிவின்றிப் பயணித்தன விடுதலைக்காய் அவர்கள் கால்கள் சுதந்திரத்திற்கான கனவுகளைச் சுமந்துகொண்டு எப்போதும் நிழலைப்போலக் கூடவே தூப்பாக்கிகளைச் சுமந்தன அவர்கள் தோள்கள் மாதங்களையும் ஆண்டுகளையும் மறந்துவிட்டு வயதுகளைத் தியாகம் செய்தவாறு போர்க்களத்தில் கரைந்துபோயின அவர்கள் வாழ்க்கை எல்லாச் சிலுவைகளையும் எங்களுக்காய்ச் சுமந்துவர்கள் இன்று ஆயிரம் ஆயிரம் இயேசுநாதர்களாய் அறையப்படுகின்றனர் தடுப்புமுகாம்களில் கனவுகளையும் இளமையையும் தொலைத்தவர்கள் காலநதியின் நீள ஓட்டத்தில் …
-
- 0 replies
- 862 views
-
-
நீ கவனமாக இரு……… போராட்டம் வீண் போகாது.” Posted by: on Jul 24, 2011 தமிழீழ விடுதலைப் புலிகள் உலகம் முழுமையும் விழுது பரப்பி நிற்க்கும் பெரு விருட்ச்சம். குருவிச்சைகளும் மாயமான்களும் மாவீரர் தடம் பற்றி ஒருபோதும் தலைதூக்க முடியாது. எவரேனும் ஆணிவேரை அழிக்க நினைத்தால் விழுதுகள் வீரியம் கொடுக்கும ; கறுப்பு யூலைகளும் சிவந்த மேய்களும் உலகின் மனச்சாட்சியை தட்டத் தொடங்கிவிட்டது சாட்சியங்களை ஒப்புவிப்போம். அன்று சிங்களத்தின் சிறைக்கூண்டில் - குட்டிமணி நெஞ்சை நிமிர்த்தி சொன்ன வார்த்தைகள் எங்கோ ஒரு மூலையில் உள்ளுணர்வாய்…. ”ஒரு குட்டிமணியைக் கொல்வீர்களனால் பல்லாயிரம் குட்டிமணிகள் தோற்றம் பெறுவார்கள.;” நான் ஓர் விடுதலைப் போராளி இறுதியா…
-
- 0 replies
- 914 views
-
-
உனக்காக எதையும் தாங்குவேன் நான் சுயநலவாதி இல்லை உன் இன்பத்தில் மட்டும் பங்குகொள்ள ......!!! நீ காதலில் ஒரு நாணயம் இரண்டு பக்கமும் விழுகிறாய் நீ எந்த பக்கம் விழுவாய் என்ற ஏக்கத்துடன் வாழ்கிறேன் அதிலும் சுகமுண்டு ....!!! உன்னுடன் பேச வேண்டும் உன்னுடன் மட்டும் பேச வேண்டும் உள்ளத்தில் இருப்பதை எல்லாம் உள்ளதை உள்ளபடி பேசவேண்டும் உண்மையுடன் பேசவேண்டும் ...!!! என்ன பேசப்போகிறாய் ..? என்கிறாயா ..? எப்போது ..? என்னை பற்றி பேசியிருக்கிறேன் ..? எல்லாம் உன்னை பற்றி தானே எப்போதும் பேசுவேன் என் உயிர் நீ தானே உயிரே ...!!! படையில் எல்லாம் இழந்து ... நிற்கும் வீரனைப்போல்... உன்னிடம் எல்லாவற்றையும் ... வழங்கி இப்போ ஒன்றும் இல்லாமல் நிற்கிறேன் ...!!! என்று இழக்கமாட்டேன…
-
- 0 replies
- 51.7k views
-
-
உயிர் .... தந்து உயிர் காத்து ... எந்த உயிருக்கும் ... அவதாரம் கொடுக்கும் ... அவதார பிறப்பே தாய் ....! அவதரிக்க அவதாரம் ... எடுத்து உலாவிவரும் ... உயிராய் இருப்பாதால் ... தாயே உம்மை "தாயாய் " வணங்குகிறேன் ....!!! பெற்ற பிள்ளை படும்பாடு .... பார்க்கமுடியாமல் தன்னை ... வருத்தி பாலூட்டி உணவூட்டி .... இரக்கத்தோடு அரவணைத்து ... இரத்தத்தோடு இரக்கத்தையும் .... வளர்க்கும் ஆன்மீக உறவே ... "அம்மா" உம்மை "தாயாய் " வணங்குகிறேன் ....!!! தன் பிள்ளையை போல் ... பிறர் பிள்ளையையும்.... அரவணைக்கும் ஒரே ஒரு .... பிறப்பாய் சேவைசெய்யும் .... உனந்த உள்ளம் கொண்ட ... உலக சேவகியாய் உம்மை .... பார்கிறேன் தன் பிள்ளைக்கு .. மட்டுமல்ல பிற பிள்ள…
-
- 0 replies
- 1.4k views
-
-
இரவல் உணர்வுக் கவிஞனின் கண்ணீர்..... கவிதை - இளங்கவி.... இரவல் உணர்வுக் கவிஞனின் இதயத்து வலிகள் சில வரிகளாய்....... சுமங்களாவின் தங்கையின் சோகத்தில்... அமங்களமான எங்கள் தங்கைகளைப் பார்க்கிறேன்..... மாலைச் சூரியன் மறையும் நேரம் நம் தங்கைகளின் இதயங்களோ இடைவிடாமல் படபடக்கும்.... மரணத்தின் வாசலில் கழியப்போகும் பல மணி நேரங்கள் வந்து நிற்கும்..... நிமிடங்கள் செல்லச் செல்ல அவள் நிழலே தன்னைப் பயமுறுத்தும்.... நீண்ட ஓர் இரவுக்காய் அவள் நெற்றியோ வியர்த்து நிற்கும்..... எம் தங்கைகளின் அம்மணக் கிடக்கைகள்.... அவன் மதுவெறியில் கிடக்கும் சந்தனப் படுக்கைகள்.... தற்காலிக விடுதலையின் பின் அவள் உடையெல்லாம் இரத்தங்கள்...... போருக்கு…
-
- 0 replies
- 603 views
-
-
ஆனால் நீங்கள் துரோகிகள். (சாந்தி நேசக்கரம்) ----------------------------------------- வீரமென்போம் விடுதலை தாகமென்போம். போராடிக்களம் வென்ற வேங்கைகள் கதைகள் சொல்வோம். ஓயாத எம் போர்க்குணத்தை உலக அரங்கில் ஒலிக்கச் செய்வோம். நினைவு தினங்கள் ஒன்றையும் மறக்க , தவற விடோம். கவனமாய் கவிபடித்துக் கண்ணீர் வடித்து தேசியத்தின் பொருளைரைப்போம். செல்பியெடுத்துச் செல்லுலாபேசிக்குள் சேமித்து முகங்களை சமூகவலைகளிலே பகிர்ந்து சத்தியம் செய்வோம். வெல்வோம் வீரம் எங்கள் முகம் போராட்டம் எங்கள் பெருங்கொள்கை. புலத்திலிருந்து போராடுவோம். குடியெல்லாம் போர் தின்னக்கொடுத்து கடன்பட்டு கப்பலேறி புலம்பெயர்ந்…
-
- 0 replies
- 1.5k views
-
-
மாய வித்தைக்காரனின் புறாக்கள் - கவிதைகள் கவிதை: சுகுணா திவாகர், ஓவியம்: ரமணன் மாய வித்தைக்காரனின் புறாக்கள் அந்த மேஜிக் நிபுணர் எப்போதும் வெள்ளைக் கைக்குட்டையைத் தன் தொப்பிக்குள் நுழைத்து புறாக்களை வெளியே எடுப்பார். தாங்கள் பிறந்ததே இந்தத் தொப்பிக்குள்தான் என்று நம்ப ஆரம்பித்தன புறாக்கள். கொறித்துக்கொண்டிருந்த தானியங்களில் எல்லாம் கீறிக்கீறி மேஜிக் நிபுணரின் பெயரை எழுதிவைத்தன. பிறகு அவர் கைவித்தை அனைத்திலும் ஊடாடிப் பறந்து திரிந்தன. அழகான யுவதியை மேஜையில் கிடத்தி கத்தியால் இரண்டு துண்டாக்கிப் பின் ஒன்றாக்கவேண்டும். ஆனால், அவள் வயிற்றிலிருந்து சிறகடித்தபடி புறாக்கள் வந்தபோது மேஜிக் நிபுணரும் மலைத்துதான் போனார். காற்றிலிருந்த…
-
- 0 replies
- 834 views
-
-
மாவீரரே! உங்கள் நினைவாக கனத்த மனத்துடன் - என் கரங்களில் தீபம் ஏற்றி வந்தேன். இதனை எங்கே ஏற்றிடுவேன்! ஏற்றுமிடம் தெரிய வில்லை ஏங்கித் தவிக்கிறேன். மாவீரரே! உங்களுக்கு தீபம் எங்கே ஏற்றுவேன்? ஏற்றுமிடம் தெரிய வில்லலை ஏங்கித் தவிக்கிறேன். கொஞ்சம் பொறுங்கள் யாரோ… கூவி அழைக்கும் சத்தம் கேட்கிறது. இங்கே வாருங்கோ நாங்கள் இருபது வருட அனுபவம் மிக்கவர்கள் நாங்கள்தான் மாவீரை நேசிப்பவர்கள் இங்கே வாங்கோ… மாவீரரே! இன்னும் கொஞ்சம் பொறுங்கள் மேலும் ஒரு திசையிலிருந்து சத்தம்… நாங்கள் புண்பட்ட காரணத்தால் புலம்பெயர்ந்து வந்தவர்கள். உண்மையின் வழி நின்;று உரிமைக்கு குரல் கொடுப்போம். தனிபட்டோர் நலம் பேணாத் தமிழீழ நலன் …
-
- 0 replies
- 587 views
-
-
பொய் சொல்லவத்தில்லை உண்மையை மறைத்திருகிறோம் இதை விட கொடுமை பாதி உண்மை பேசியிருக்கிறோம் - கொடுமையில் கொடுமை பாதி உண்மை பேசுவதுதான் -இதை எல்லாம் செய்து விட்டு நல்லவனாக வேஷம் போடுகிறோம் நடிக்கிறோம் .....!!! @@@@@@ தப்பு என்று தெரிந்து கொண்டு தப்பு செய்திருக்கிறோம் -ஆனால் மற்றவர்கள் செய்யாத தப்பையா நான் செய்கிறேன் என்று சமுதாயத்தை அடமானம் வைத்து தப்பு செய்கிறோம் நல்லவனாக நன்றாக நடிக்கிறோம் .....!!! @@@@@@@ திட்ட மிட்டு பிறர் காசை திருடியது இல்லை ஆனால் வழியில் கிடந்த பணப்பையை யாரும் உரிமை கோராதபோது எம் பணமாக்கி செலவு செய்கிறோம் மனட்சாட்சிக்கு பதில் சொல்கிறோம் வழியில் கிடந்த காசு பொது சொத்து யாரும் பயன்படுத்தலாம் என்று நமக்கு நாமே நியாயம் சொல்கிறோம் ... நன்றாக நடிக்கிறோம் .…
-
- 0 replies
- 782 views
-
-
[size=4]வீரவணக்கம் வீரவணக்கம் [/size] [size=4]தமிழினத்தின் குறியீடுகளே [/size] [size=4]தன்மானத்தின் நாயகர்களே![/size] [size=4]வீரவணக்கம் வீரவணக்கம்[/size] [size=4]சங்க காலத் தமிழினத்தின்[/size] [size=4]புறநானூற்றைப் புதுப்பித்தவர்களே![/size] [size=4]தமிழன் என்ற இனத்தை[/size] [size=4]உலகிற்கு அடையாளங் காட்டியவர்களே![/size] [size=4]மண்ணை மீட்க[/size] [size=4]மண்ணில் கலந்த மாவீரர்களே![/size] [size=4]மானமும் வீரமும் விளைய[/size] [size=4]எருவாகிப் போனவர்களே![/size] [size=4]மீண்டும் பிறப்பீர்; பகை அழிப்பீர்[/size] [size=4]அதுவரை[/size] உங்கள் உயிர்காற்றை [size=4]நாங்கள் உட்கொண்டிருப்போம்;[/size] [size=4]உங்கள் தடந்தோள்களில்[/size] …
-
- 0 replies
- 451 views
-
-
என் கவிதையின் சொற்களைக் கொண்டு பழைய காலத்தை மீட்க முடியுமாவென்று கேட்கிறார்கள் பசித்த நிலங்களுக்கு நீர் வார்க்க முடியுமாவென கேட்கிறார்கள் ஒரு நாட்டின் விடுதலையை கவிதையின் சொற்கள் வாங்கித்தருமா என்கிறார்கள் எனக்கும் என் கவிதைக்குமிடையே எவ்வித கடிதத் தொடர்புமில்லை ஒரு கவிதையின் வேலை என்னவென்று கவிதைக்குத்தான் தெரியும் சொற்களை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியுமென்று யாரும் மதவாதிகளைக் கேட்டதில்லை வேதங்கள் புராணங்கள் புனித நூல்கள் இறைவசனங்கள் இன்ன பிற இத்தியாதிகள் எல்லாவற்றிலும் சொற்கள் அந்த சொற்களின் ஆயுள் நீளம் எவ்வளவோ அவ்வளவு காலத்திற்கு உண்மை போராட வேண்டியிருக்கும் கவிதைகள் எலி வலையல்ல; யுத்த கால முகாம்கள் கனவுகளை கவிதையில் வைக்கப் பழகியிருக்கிறோம் போராட்ட…
-
- 0 replies
- 684 views
-
-
[Wednesday, 2011-06-15 21:36:15] முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முயலும் சிறிலங்கா அரசு:செனல்-4 வினால் அல்ஜெஸீராவிடம் மாட்டிக் கொண்ட ரஜீவ் விஜயசிங்க எம்.பி அறிவிப்பாளரைக் கேள்வி கேட்கவிடாமல் கதையளக்கும் காணொளி.. http://youtu.be/sdrCR-X4iH0 http://www.seithy.com/breifNews.php?newsID=44922&category=TamilNews
-
- 0 replies
- 972 views
-
-
உயிருடன் இறந்து விட்டேன் ஒரு நொடி கண் சிமிட்டல் ...!!!sms கவிதை ///////சின்ன சின்ன வலி வார்த்தைகள் பழகிவிட்டேன் வலியை தாங்க sms கவிதை சந்தோசம் நீ நினைக்கும் இடத்தில் இல்லை..நீ இருக்கும் இடத்தில் உண்டும் +sms கவிதை காதல்எல்லோருக்கும் வரும்எனக்கு போய்விட்டது +sms கவிதை பூக்கள் வாசனைக்காக பூக்கவில்லை தன் வாழ்க்கைக்காக பூக்கிறது - காதலும் அப்படித்தான் ....!!!+sms கவிதை நீ காதலிக்காதுவிட்டாலும் எனக்குகாதல் வந்திருக்கும்உன்னை பற்றிய கவிதை ...!!!+sms கவிதை கவிதைக்கு கற்பனை.....வேண்டும் -உன்னை....நினைத்தால் கற்பனை.....வரமுன் கண்ணீர் ....வருகிறது ....!!!+sms கவிதை
-
- 0 replies
- 517 views
-
-
இணையம் கண்டெடுத்த இதயம் (சும்மா ஒரு எதுகை மோனைக்காக!) எப்போதோ சந்தித்த ஒருவர் உலகத்தின் இன்னொரு மூலையில் வந்தபின் மீண்டும் ஹலோ சொல்வதால் வரும் சந்தோசம் பெரிது! கணினித் திரை வழி கைகள் சொடுக்கி இணையத்தில் தேடினேன் சந்தை நிலவரம் முதற்கொண்டு சாதிக் கலவரம் வரை உலகத்தின் வினையத்தனையும் விபரமாய்த் தரும் இணையத்தில் முந்தை ஒரு நாள் வீதியில் புன்னகைத்துச் சென்றவளும் சேதிகள் பலகொண்டு தேடியே வருவாள் என்று என்றேனும் நினைத்தேனா? விந்தையிது வென்று கூத்தாடி நான் மகிழேன்... இணையத்தின் அகன்ற கைகளில் உலகம் வெறும் எள்ளுருண்டை! http://kaviruban.spaces.live.com/blog/cns&...B!170.entry அண்ணா சும்ம…
-
- 0 replies
- 721 views
-
-
கேணல் ராயூ நினைவாக… வெற்றிகளின் பின்னால் இருந்த பேராற்றல்… இடிவிழுத்திப்போகும் இச்செய்தி வருமென்றா உன்னை வழியனுப்பி வைத்தோம் போர் ஓய்ந்த நாளிலும் எமக்கேன் இடி விழுகின்றது குருதி நரம்புகள் உறைந்துபோக நெஞ்சில் குத்தீட்டி ஏறுகின்றது கேணல் ராயூ குயிலலெனவும் இவன் குறிக்கப்பட்டான் அதிகம் பேசாமல் அதிகம் சிரியாமல் அதிக அதிசயம் நிகழ்த்திய அதிசயன் . தலைவருகில் தன்னை தயார்படுத்தியதால் கதிரவன் ஒளிகசிந்து ஊறியகாளை நுட்ப மதி நிறைந்த நுாதனன். விடுதலையன்றி வேறொன்று சிந்தியா விவேகன். புதிய அரும்புகள் முளைகொள்ள நாற்றங்கால் போட்ட நாயகன். பெருவெற்றிகள் ஒவ்வொன்றின் பின்னாலும் இந்தபுலிமகனின்பேராற்றலும் இருந்தது பகை நெஞ்சேறிய குண்டுகள்…
-
- 0 replies
- 742 views
-
-
விடியல் வன்னியில் போர்மேகம் புலத்தில் மக்களின் எழுச்சி .... வீதியில் தாய் தமிழககத்தில்...அரசியல் சித்து சிலபேரின் தற்கொடை தவிர வெறீயின் விளின்பில் தமிழீழம் புலம் மக்களோ வீதியில் எழுச்சியில்... சர்வதேசம் பாராமுகம் விடியல் தூரம் இல்லை விழித்திரு விடியலுக்காக இளையோன்
-
- 0 replies
- 773 views
-