கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5133 topics in this forum
-
அம்மா சமாதி பன்னீர் வடிக்கும் கண்ணீரில் அம்மா சமாதியே அரை அடி உயரும். சசி துடைக்கும் கைக்குட்டையில் காவிரி டெல்டா ஒருபோகம் விளையும். அம்மாவை நினைத்தாலே அழத்தான் முடியும். அவர்களுக்கோ, அழுகை சிரிப்பின் முக்காடு சிரிப்பு அழுகையின் வேக்காடு. அழுகைப் போட்டியில் யாருக்கு முதல் பரிசு?. தடுமாறுது தமிழகம் அழுகாச்சி காவியத்தில் அமுக்கி எடுக்குது ஊடகம். சிரித்ததனால் நான் மனிதன் என்பது பன்னீரு சிரித்ததனாலேயே நீ மனிதனில்லை என்பது வெந்நீரு. நீ பெரிய குளமென்றால் நான் மன்னார் குடி! அம்மாவுக்கே நான்தான் ஆன்மா அடைக்கலம் தருமோ அம்மா ஆன்மா? மெரினா தியானத்தை கலைக்கும் சின்னம்மா! பேயைப் பற்…
-
- 5 replies
- 2.3k views
-
-
ஈகத்தின் சுடரே! மக்களுக்காக எரிதனலேந்தி மண்ணிலே சாய்ந்த மைந்தனே முருகா துன்பமே சூழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வினை மாற்ற தீயினைச் சூடிப் போரினைத் தொடுத்து பொன்னெழுத்துகள் சூடி மண்ணிலே சாய்ந்தாய்! தாய் மண்ணிலே இன்றும் துன்பங்கள் சூழத் துயரங்கள் ஆளத் துடிக்கிறார் மக்கள் வடிக்கிறார் உதிரம் உதிரத்தால் உறைந்த உயிரெனும் தாய்நிலம் அடிமையாய் இன்னும் அழிகின்ற நிலையாய் தொடர்வதும் ஏனோ! ஈகங்களாலே ஈன்ற எம் தேசம் வேடங்களாலே வேற்றவராள மாற்றான் போன்று மகுடிக்கு ஆடும் பாம்புகளான தலைமைகளாலே விடையென்று வருமென்று வானகம் இருந்தே முருகதாசனோ தவிக்கின்றான்! ஈகத்தின் சுடரே தலைகுனிகிறோம் தம்பி அங்கிங்கொன்றாய் எழுகின்ற தமிழனம் …
-
- 1 reply
- 719 views
-
-
கிளிசரின் வெட்கப்படுகிறது ! அழகின் உயிர்ப்பு கண் என்றால் உணர்ச்சியின் துடிப்பு கண்ணீர்… கண்ணீர் எனப்படுவது இரண்டு வகைப்படும். செந்நீரை பறிகொடுத்தும் கண்ணீரை பரிதவித்தும் சோகத்தில் குடியிருக்கும் மாந்தருக்கு காலந்தோறும் உடனோடும் ஜீவநதி கண்ணீர்… வேடிக்கை பார்ப்போர் அழுதாலொழிய வேஷம் கட்டியோருக்கு வயிறு நிரம்பாது! அந்தக் கூத்தாடிகள் பிதுக்கும் கண்ணீர் ஒரு நடிப்புக் கலை! சினிமாவில் கண்ணீர் அருவியை திறக்கும் மந்திரப் பொருள் கிளிசரின். பிகினி காலத்து மாடல் பொம்மைகளுக்கு கிளிசரின்கள் டன் கணக்கில் தேவைப்படும். கிளிசிரினுக்கு செலவு வைக்காமல் கண்ணை குழாயென திறந்து விட…
-
- 0 replies
- 781 views
-
-
எழுக தமிழ்- பூவரசம் பூ! தீபச்செல்வன் குருதி நிணம் தீரா மண் பிணங்களும் எஞ்சாத தேசம் சிதைமேடுகள் மீதும்குருதி சிதலுறூம் காயம் இராணுவ சப்பாத்துக்களின் கீழ் எல்லாமும் ஆனாலும் எழுந்தது தேசம் அதனாலும் எழுந்தது தேசம் சிறகுடைத்து வீசப்பட்ட ஒரு பறவையின் சிறகசைப்பைப்போல கால்களற்றவரும் நடந்தனர் கைகளற்றவரும் ஏந்தினர் கொடியை விழிகளற்றவரும் ஏற்றினர் சுடரை சொற்களற்றவரும் எழுதினர் பதாகையை இல்லாதவர்களின் இருதயங்களைச் சுமந்து தொண்டைக் குழிகளில் நெடுநாளுறைந்த பெருங்குரல் காட்டாற்றைப்போலப்…
-
- 1 reply
- 904 views
-
-
மல்லுக் கட்டி நிற்கின்றோம் ஜல்லி கட்டை நடத்திவிட கொள்ளிக் கட்டை கொண்டு வந்து தமிழ் குல தொன்மம் அழித்துவிட மல்லுக் கட்டும் உலகமயமாக்கலோடு நாமும் மல்லுக்கட்டி நிற்கின்றோம். புல்லுக் கட்டு போல எங்கள் புராதன தொன்மைகளை புதைத்துவிட்டு பல்லுக்காட்டி நிற்கச் சொல்லி பாடம் சொல்லும் கயவரோடு மல்லுக்கட்டி நிற்கின்றோம் #ஈழத்துப்பித்தன் 19.01.2017
-
- 0 replies
- 839 views
-
-
-
- 1 reply
- 750 views
-
-
தக்காளி ,வெங்காயம் விளை நிலம் எங்கே உண்ணும் உணவும் உடை இல்ல நிலை இங்கே மறந்து மறைத்து போனது எங்களின் நிலைமை மூன்று மாதத்தில் நெல் சாகுபடி வருமானமோ நாங்கள் சாகும் படி ..... மாறும் எங்கள் காலம் தங்கம் இப்போ உங்க காலம் வரும் நெல்லை தேடி அலையும் காலம் சிறிய வீடு சிறிய காரும் போதும் எனக்கு இது தான் உன் எதிர்பார்ப்பு இயற்கை சீற்றம் வந்தால் இதில் இல்லை பாதுகாப்பு உண்ணும் உணவு நாங்கள் தயாரிப்பது உங்களுக்காக இதை நீ புரியாதவனாக இருக்கிறாய் வழி விடு வழி விடு உன் சங்கதி வாழ்வதற்கு புதிய இயந்திரம் வந்தாலும் இதில் அனைத்தும் கிடைத்து விடுமா ....... சிந்தனை என்னும் வார்த்தைகளை சிந்திக்க மறந்து விட்டாய் என் தோழா …
-
- 1 reply
- 878 views
-
-
பாராட்டு பாராட்டு மத்திய அரசுக்கு பாராட்டு ஜல்லிக்கட்டை பரணி எங்கும் தொரியப்படுத்திய அரசுக்கு பாராட்டு விளையாட்டு விளையாட்டு விளையாட்டை மாறிப்போனதா எங்கள் ஜல்லிக்கட்டு திமிரை கொண்டு திமில் பிடிக்கும் தமிழரின் வீரம்டா காளைகளையும் அடக்குவேம் தடையையும் உடைப்போம் விளையாட்டை மாறிப்போனது உங்களுக்கு தமிழரின் வீரத்தை மீண்டும் பதிப்போம் ஜல்லிக்கட்டுக்கு நடக்கும் இதை யார் தடுக்கும் மு.க.ஷாபி அக்தர்
-
- 0 replies
- 764 views
-
-
உதட்டில் ராக்கெட்டை வைக்கிறேன் அதன் புகை உள்ளே செல்லுதே நுரையீரலையும் தாக்குதே என் மூளைக்கு இது தெரிகிறது இதை வேண்டாம் என்கிறேன் ஆனால் மனம் ஏற்க மறக்குதே..... காற்றை கொண்டு அடைக்கப்ட்ட பையில் புகையை அடைகிறேன் காற்றை வெளியில் ஏற்றுகிறேன் கூடவே என் உயிரையும் ஏற்றுகிறேன் நீ மெதுவாய் கரைகிறாய் என்னையும் மெது மெதுவாய் கரைகிறாய் நீ முன்னாடி செல்கிறாய் என்னையும் பின்னாடி அலைகிறாய் ... நான் தீயால் உன்னை கொள்ளுகிறேன் நீ என்னை புகையால் கொள்ளுகிறாய் கடைசியில் நீயே வெல்லுகிறாய் ...... என் புகையில்லையே ............... எங்கள் உயிருக்கு இல்லை விலையே ...... மு.க.ஷாபி அக்தர்
-
- 0 replies
- 656 views
-
-
வெளிநாட்டின் இன்பம் துன்பம் இங்கு இன்பமே துன்பம் ,துன்பமே இன்பம் முதல் முதலில் விமானப்பயணம் வாழ்நாளின் சாதனைப்பயணம் என தேன்றும் வந்த பிறகுதான் இது சாகவந்த பயணம் என்று தெரியும் இங்கு நான்கு சுவத்துக்குள் சிறை அது தான் எங்களின் அறை அது உள்ளவே சமையல் அறை சிக்கன்,மீனு எல்லா பொருளும் கிடைக்கும் குளிர்சாதன கிடங்குல அந்த ஏதிலிலும் சத்துயில்ல நாங்கள் உண்ணுவது தான் உணவு நாக்கு சுவைக்கு இல்லை என பழகு இது தான் எங்கள் முதல் மந்திரம் இங்கு ஜன்னல் என்ற ஒரு பெயருக்கு ஒன்று இருக்கு அதை திறந்தாள் புழுதிக்காற்று அடிக்கும் இதை யாருக்குத்தான் பிடிக்கும் சுவாசிக்க காற்று தேவை இங்கு சுவாசிக்கவே நல்ல ஒரு காற்று தேவை அனைத்து காய்ச்சலுக்கும் ஒருமாதிரி மாத்திரை கம்பெனிக்கு எங்கமேல இல்ல அக்கறையும் …
-
- 0 replies
- 1k views
-
-
களம் களமிது யாழ்க்களம் வந்து பாருங்கோ உளங்களிக்க உள்ள எழுதிப்பாருங்கோ வந்து நீங்க எட்டிப்பாத்து வணங்கிட்டா…. உங்க வண்ட வாளம் அலச ஒரு கூட்டங்கோ நாரதரும், சாத்திரியும் நாத்தீக இளங்கோவும் தூயவனும், ஈழவனும், டங்குவாரை அறுத்தெறிய, நெடுக்கால போறவரும், குறுக்கால வாறவரும் கந்தப்பு இறைவனுக்கு காவடி எடுத்தாட சின்னாவும், வடிவேலும், சிலுக்கோட கூத்தாட குத்தாட்டம் போட்டபடி கு. சாவும் தள்ளாட கானத்துப் பிரபாவும், கதை எழுதும் மணிப்பயலும் கதவோரம் நின்று நின்று களத்துக்குள் கல் பொறுக்க வானவில்லும் வெண்ணிலாவும் வக்கணையாய் பேச்செடுக்க பொக்கைவாய் திறந்து யம்மு போயிலை சாறுமிழ விண்ணான டங்குவுடன் விம…
-
- 5 replies
- 1k views
-
-
ஈழத்திலிருந்து, காலத்துக்குகேற்ப அற்புதமான கவிதை. - திரு ராஜேஸ்வரன்.-
-
- 2 replies
- 1.2k views
-
-
அன்பின் சிறிய நிமிடங்கள் - கவிதை மனுஷ்ய புத்திரன் - ஓவியம்: செந்தில் கடற்கரையில் தோளோடு தோளாகச் சாய்ந்துகொள்வதில் அப்படி என்ன கிடைத்துவிடும்? இருசக்கர வாகனப் பயணத்தில் தோளைப் பிடித்துக்கொள்வதில் என்ன நிறைந்துவிடும்? அவ்வளவு அவசரமாக பத்து விநாடிகள் கைகளை இறுகப் பற்றிக்கொள்வதில் எதை நாம் கடந்துவிடுவோம்? எல்லா கதவுகளும் திறந்துகிடக்கும் முற்றத்தில் மின்னலென அணைத்து விலகும் பொழுதில் அப்படியென்ன சாகசம் இருக்கிறது? லிஃப்ட்டின் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு முத்தமிட்டுக்கொள்வதில் என்னதான் நிகழ்ந்துவிடும்? அன்பின் சிறிய நிமிடங்கள் நம்மை ஆட்கொள்கின்றன அவை நிகழ்கிறபோது அப்படியொன்றும் அவை அவ்வளவு சி…
-
- 0 replies
- 1.3k views
-
-
2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!! ------------------------------------------------------------------ அழிவை ஏற்படுத்தாமல் ..... அன்பை பெருக்கிட..வருக வருக ....!!! ஆக்ரோயத்தை காட்டாமல் ..... ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....!!! இழப்புகளை ஏற்படுத்தாமல் .... இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!! ஈனச்செயல் புரியாமல் .... ஈகையை வளர்த்திட ..வருக வருக ....!!! உலகை உலுப்பாமல்.... உள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....!!! ஊனங்களை ஏற்படுத்தாமல் .... ஊர் செழிக்க ..வருக வருக .....!!! எதிரிகளை தோற்றுவிக்காமல் .... எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!! ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் .... ஏற்றங்களை தந்திட ..வருக வருக ...…
-
- 1 reply
- 1.2k views
-
-
"அலைமுறியும் கடற்காற்றில்" நான் கவிதைகளை எழுத ஆரம்பித்த காலங்களில் எனக்கு முந்தைய தலைமுறையில் எழுதியவர்களில் நட்சத்திரன் செவ்விந்தியனை மட்டும் தான் முக்கியமானவராக கருதினேன், இன்றும் அப்படித் தான் . சேரன்,வ .ஐ. ச ஜெயபாலன் , ஊர்வசி, சிவரமணி எல்லாம் ஏதோவொரு புள்ளியில் வேறு விதமான அனுபவங்களைத் தருபவர்களாக இருந்தார்கள். நட்சத்திரன் செவ்விந்தியன் செவ்விந்தியனின் "வசந்தம் 91" தமிழில் வந்த முதல் தொகுப்புகளில் முக்கியமானதொன்று. அதன் மொழியமைப்பு மிகவும் சரளமான , நதியின் மேல் எறியும் கல்லைப் போன்று தாவிச் சென்று மறைவது. * ரமணன் அண்ணாவின் வீடு தான் எனக்கு ஏராளம் புத்தகங்களைக் காட்டித் தந்த வீடு . குறைந்தது ஆயிரம் புத்தகங்கள் ,ஆயிரமும் தேர்ந்தெ…
-
- 0 replies
- 1.2k views
-
-
கை தவறிக் கீழே விழுந்த கடலை எல்லாம் சாமிக்கு. துறட்டிக்கு எட்டாமல் தூரப்போன முற்றல் முருங்கைக் காயெல்லாம் கிளிகளுக்கு. கறவைகளுக்குச் சுருக்காமல் காம்பில் எக்கின பால் எல்லாம் கன்றுக்கு. திருவினை ஆகாத முயற்சித் திராட்சை எல்லாம் பந்தலுக்கு. எட்டுவது....கிட்டுவது எல்லாம் எனக்கு. முடியாதது....படியாதது முழுவதும்... உனக்கே உனக்கு. ******************************************************* தண்ணீர்த் தொட்டியில் செத்துக் கிடந்த காக்கைக் குஞ்சுகளுக்கு மனதார வருத்தப் பட்டாயிற்று. வாசலில் நிற்கும் வயசாளிக்கு ..... "ஒன்றுமில்லை" என்று அனுப்பிவிடலாம். இன்றைக்கு ..... என்னால் முடிந்தது இவ்வளவே. **********************************…
-
- 0 replies
- 14.6k views
-
-
தேநீர் கவிதை: மழை மழை நனைதல் தவம். குழந்தைகளுடன் நனைதல் வரம். பகல் முழுதும் மழையுடன் விளையாடிக் களைத்த குழந்தை தூங்கிப் போனாள். மழையும் ஓய்ந்து தூங்கியது. அதன் பின் தொடங்கிற்று பிறிதொரு சிறுமழை - கிளைகளினூடே துளிகளாகவும் கனவு காணும் குழந்தையின் இதழ்களில் புன்னகையாகவும். இங்க செம மழ. ஜாலியா நனையிறோம் அங்க மழயா என்ற ஒரு குழந்தையின் …
-
- 1 reply
- 1.7k views
-
-
-
- 6 replies
- 1.1k views
-
-
நினைவுகள் வலியிருக்கும்-உன் நினைவுகள் என்னவோ.... அப்படியில்லை இதுதான்..... உண்மை காதலின் ...... அடையாளம்....!!! வாழ்க்கையில் .... எல்லாம் இழந்துவிட்டேன்..... உன் நினைவையும் இழந்தால்...... அனாதையாகி விடுவேன்...... ^^^ நினைவுகள் இல்லாத காதலே தோற்கும் ^^^ கவி நாட்டியரசர் இனியவன்
-
- 3 replies
- 968 views
-
-
நாசமாக்கிய நாகரீகம் !!!!!! மண் வெட்டிய மண்வெட்டிகளும் இல்லை உழுது உண்ட கலைப்பைகளும் இல்லை வெட்டுமண் சுமந்த பின்னல் கூடைகளும் இல்லை குடிநீர் சேகரித்த குளங்களும் இல்லை கால்கிலோ தங்கத்தை கடுக்கானாய் சுமந்த காதுகளும் இல்லை கோபுரங்கள் கண்ட சிற்பங்களும் இல்லை விடியலில் ஒலிக்கும் பாகவதர் ராகங்களும் இல்லை குளங்களில் குளித்த கோமனங்களும் இல்லை வெத்திலை பாக்கு பரிசங்களும் இல்லை நல்லது கெட்டதை சொல்ல பெரியோர்களும் இல்லை தோழிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டுகளும் இல்லை நியாங்கள் சொன்ன பஞ்சாயத்து அரச ஆலமரங்களும் இல்லை நல்லதையும் கெட்டதையும் கட்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
" அ " முதல் " ஃ" வரை காதல் - ( அ ) ...!!! ------ அ கிலத்தில் உனக்கான .... அ ன்புக்காதலி பிறந்து விட்டாள்... அ வள் யார் எப்போது கிடைப்பாள்....? அ வதிப்படாதே அவஸ்தை படாதே .... அ வதார புருஷர் போல் தோன்றுவாள் ...!!! அ வளிடம் இதயத்தை கொடு .... அ வளையே இதயமாக்கு ..... அ வளிடம் நீ சரணடை .... அ வள் தான் உன் உயிரென இரு அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!! " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
-
- 4 replies
- 2.3k views
-
-
தேநீர் கவிதை: அலைகள் மாறுவதில்லை! மு.மேத்தா காகிதம் பணம் ஆனது... பணம் மீண்டும் காகிதமாகிவிட்டது! பணத்தை என்ன செய்வதென்ற கவலை - அதிபர்களுக்கும் அதிகாரங்களுக்கும்! பணத்திற்கு என்ன செய்வதென்ற கவலை - அப்பாவிகளுக்கும் அபலைகளுக்கும்! கொள்ளை நோட்டுகளும் கள்ள நோட்டுகளும் குளிர் சாதன அறைகளில் கூடிப்பேசுகின்றன... பாவம் - நல்ல நோட்டுகள்தான் அலைகின்றன நடுத்தெருவில்! வங்கி வங்கியாய் …
-
- 1 reply
- 730 views
-
-
தமிழக ........ இறவாத தலைவியே...... உம்மை எனக்கு பிடிக்கும்..... காரணம் நீங்கள் அம்மா.......!!! அரசியல் ................. எனக்கு தேவையில்லை...... அம்மாவாக நீங்கள் எனக்கு ....... தேவை .....................!!! அம்மா என்றால் உருகாத........ உயிரினம் உண்டோ............. அம்மாவுக்கா கண்ணீர் விடாத...... மனிதன் உண்டோ........? தமிழகத்தின் தலைவியாகி...... தமிழ் மக்களின் மனதில்....... தலைவியாகிய தாயே.........!!! உலகெங்கும் இருந்து கண்ணீர்...... விடும் தமிழ் உள்ளங்களில்...... என் கண்ணீரும் கலந்திருக்கும்....... அம்மா என்றால் கண்ணீர் விடாத...... உயிரினம் உண்டோ...........??? & கவிப்புயல் ,கவி நாட்டியரசர் இனியவன்
-
- 0 replies
- 1.6k views
-
-
தன்மானமே தமிழ் மானம் --------- ஏன் இந்த மாற்றம்........? யார் தூண்டிய மாற்றம்.....? மாற்றம் என்பது தேவையே..... வாழ்க்கையின் முன்னேற்றத்தை..... ஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை...... வாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை...... உனக்கு யார் தூண்டிய மாற்றம்.........? பூட்டன் காலத்தை நோக்கு........ படிப்பறிவு கிடையாது ........ பட்டறிவே பெரும் படிப்பு ....... பட்டறிவை வைத்தபடி.......... தலை நிமிர்ந்து வாழ்ந்தவர்கள்...... அனுபவத்தால் வாழ்க்கையை...... அனுபவித்த அனுபவசாலிகள்.........!!! பாட்டன் காலத்தை நோக்கு...... படித்தது சொற்பம்- படித்தமேதைகளுடன்..... சவால் விட்டு வாழ்ந்துகாடியவர்கள்....... படிகாத மேதைகள் என்று வாழ்ந்து....... கட்டிய அற…
-
- 0 replies
- 800 views
-
-
எழுதியதெல்லாம் மொழிபெயர்ப்புத்தான். இளைஞர் விழிகளில் எரியும் சுடர்களையும், போராடுவோரின் நெற்றிச் சுழிப்புகளையும் இதுவரை கவிதையென்று மொழிபெயர்த்திருக்கிறேன்! ******* உயிர்ப்பின் முதல் நொடியை உணர முயல்கிறேன் மீண்டும் பொருளில் உணர்வு தோன்றிய கணம் ஓடுவரா முட்டையின் முதல் அசைவு வித்தின் மண்தேடும் ஆதி விழைவு நரைத்து ஒரு முடி உதிர்ந்த சமயம் உணர்ந்தேன் அது என் மறதியின் முதல் நொடி ****** மனுசங்கடா நாங்க மனுசங்கடா உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா எங்களோட மானம் என்ன தெருவில கிடக…
-
- 0 replies
- 823 views
-