கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
.......'கலையாத கனவுகள்' கண்ணீரில் பிறந்தேனோ? மின்னல் போல் உதித்தாய் பின்...... திரைகள் போட்டு சூரியனை மறைத்தாய் காலம் கடந்தும் ......... --மீண்டும் மேகம் வடிவாய் பூத்தாய்....... உன்னை வாசலில் வந்து பார்த்தேன்....... ஆனால் மூச்சு காத்து தான் ....... அடித்தது ஏன் பனி வீசி பாளத்தை உடைத்து தேடும் விழியே வைத்து விட்டு சென்றாய்.......? விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 4 replies
- 1.8k views
-
-
எண்பது தமிழனை கொன்றுவிட்டு நான் அவனில்லை - என்றே சிங்களன் கால் கழுவு! குத்தரிசி சோறு வேணாம் ஈர பலாக்கை போதுமென்றே அலை- அலைந்து திரிந்து அசிங்கமாய் திரி! அப்பனையும் ஆத்தாளையும் ஐந்து பத்திற்காய் கொல்லு! கொன்றபின் பன்சலைக்கு சென்று சிங்களனுடன் சேர்ந்து ப்ரீதும் ஓது! புலியை அழித்தால் புது வாழ்வா உனக்கு? புலி அழிந்து போகும் ஒரு நாள் வந்தால் உன் குரல் வளையே சிங்களனுக்கு அடுத்த இலக்கு - இதை நம்பினால் நீ நம்பு! தமிழீழ விடுதலை புலியை அழிப்பதா அவன் குறி? அட தடுமாற்றகாரா தமிழன் தலை எடுப்பதுதாண்டா அவன் வெறி! மரத்தோடு மரமாய் ஒட்டி தேவாங்கு போல தூங்கு! செருப்புக்கு ஆசை படுறாய் உன் கால் மெதுவாய் அறுந்துபோகுது! கவனி- !…
-
- 15 replies
- 3.6k views
-
-
ஜனநாயகக் கோமாளிகள் கோவி. லெனின் சிங்கங்களுக்கு எலிப்பொந்தில் கிடைக்கிறது எல்லாவிதமான வசதிகளும். புலிகளுக்குப் பசி என்றால் புல்லுக்கட்டு வேண்டாம் புண்ணாக்கே போதும் தேர்தல் நேரமெனில் எதனையும் எதனுடனும் கூட்டிக் கொள்ளலாம். கழிக்க வேண்டியவை மானமும் வெட்கமும். கொள்கைகள்... கூவி விற்பதற்கே! தகையும் விலையென்றால் தன்னையே விற்கவும் தயார் எங்கள் தலைவர்கள். கூட்டணி மேடைகளில் கூடியும் கலைந்தும் கூத்தடிக்கிறார்கள் ஜனநாயகக் கோமாளிகள். எல்லாவற்றுக்கும் எம்மக்கள் கைதட்டிச் சிரிப்பார்கள் எனக் கணக்கிட்டுச் சிரிப்பாய் சிரிக்கிறார்கள் வாய்ச் சொல் வீரர்கள் குறிப்பு: யதார்த்தமாக இந்தப் பக்கத்தில் கவிதை வெளிய…
-
- 1 reply
- 826 views
-
-
நாலெழுத்து படித்து விட்டால் நானே ஊருக்கு நாட்டாமை என்பான் கோர்ட்டும்- சூட்டும் அணிந்து விட்டால் நான் கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை என்பான் அவன் பாட்டன் - கோவணத்துடன் திரிந்ததை ஒருவருக்கும் சொல்லான் மறைப்பான் -மகிழ்ச்சி வேறு கொள்வான்! ஏனடா நீ இப்பிடி? வெள்ளையும் சுள்ளையுமாகி நீ இங்கு திரிந்தாலும் வெள்ளைகாரனுக்கு நிகர் என்று சொன்னாலும் கிளிந்த சேலையுடன் இருந்த போதும் உன் அப்பன் இருக்க உன் தாய் தாலி அடைவு வைத்து தாயகத்தை பழிப்பவனே- உன்னை அனுப்பி இருப்பாள் உணர்ந்ததுண்டா-உறைக்காதா சீ போடா- மூடா !!
-
- 15 replies
- 2.5k views
-
-
மீண்டும்....எப்போ...? ****************************** அன்பே... தேடுகிறேன் உன்னை-இன்று நீ தந்த பொருழதனை திருப்பி நான் தருவதற்கு... என்னவென்று கேட்கிறியா...? அன்றொருனாள்.... நாமணைத்துக் கொள்கையிலே உன் தலையின் பேனொன்று... எந்தலையே தஞ்சமென்று.. என் தலையில் புகுந்ததுவே... அதை நீ அறியாயோ...? ஓ........ நீ அறிய நியாயமில்லை அன்றோ....... நாமறியும் நிலையிலில்லை.. இன்றதனை உணருகின்றேன்.. கடிக்கையிலே.. கதறுகின்றேன்... கொன்றிடவே எண்ணுகின்றேன் உன் தலையின் பேனதால் மனமேனோ வரவில்லை.... so அன்பே... நீ வந்திடுவாய்... அதை நீயே பெற்றிடுவாய்......
-
- 7 replies
- 1.5k views
-
-
புகலிடம் *********** அவள் ஒன்றும் இந்த மர மனங்களிடம் கனிகளுக்காக - காத்திருக்கவில்லை..... அது - தரும் நிழலுக்காகத்தான்...... காத்து நின்றாள் அவள்- கனத்த இதயத்தில்... நினைத்த எண்ணங்கள் சருகாகிப் போனதால்... அந்த சருகையே உரமாக்கி (மர)மனங்கள் ஓங்கி வழர்கின்றன அதனால்தான் -அவள் வெயிலினில் கூட... வெறுப்பின்றி நடக்கின்றாள் இனி- அவள் ஒதுங்கப் போவது எந்த(மர) நிழலிலோ....? இல்லை இந்த வெயில் தான் இவளின்...புகலிடமோ....???
-
- 7 replies
- 1.5k views
-
-
வாழ்க் ஈழத் தமிழகம், வாழ்க இனிது வாழ்கவே மலை நிகர்த்திவ்வுலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே முடிப்புகள் அமிழ்தை வென்ற மொழியினள் அருள் கனிந்த விழியினள் அரிய பண்பு நிதியினள் அவனி மெச்சும் மதியினள் மமதை கொண்ட பகைவரும் வணங்கும் அன்பு விதியினள் மக்கள் கொண்ட பதியினள் ... வாழ்க வானம் பாடி போல்மீன் கானம் பாடும் வாவிகள் மலர்க் கனி க்ய்லுங்கிடும் எழில் மிகுந்த சோலைகள் தேனும் பாலும் பாய்ந்திடச் செந்நெல் பொலியும் கழனிகள் உய்வ ளிக்கும் மாநிலம் ... வாழ்க பட்டிப் பளை, மகாவலி, பயில் அருவிமுத் தாறுகள் பல வனங்கள் பொலியவே எழில் நடஞ்செய் துலவிடும் மட்ட களப்பு, யாழ்நகர், மாந்தை, வன்னி, திருமலை, …
-
- 7 replies
- 2.3k views
-
-
-
- 7 replies
- 1.9k views
-
-
என் முகம் தீய்ந்து போனாலும் மோசமில்லை - மோட்சமே உழைக்காமல் வரும் ஊதியமே சொர்க்கம் என்று ஆனாயேடா மொக்கா மொக்கா! என்ன சொல்ல ........... எரியும் சிதையினிடையே கைவிட்டு ..தகனம் கொள் பிணத்திடையிருந்து தங்கம் உருவ நினைக்குது மானிடம்! காலை எழுந்தவுடன் தேநீர் வேண்டும் கை கால் அமுக்கவும்.. அவளே வேண்டும்.. அடடா அடடா கை கால் அலம்பியதும் துடைக்க துண்டும் தந்து நீ கலையாத அழகு கொள்ள சுருங்கா ஆடையும் தந்து... நீ கல்யாணம் கொள்கையில் காலில் விழவும் செய்து... யோசி ... யோசி மலரை கசக்கி எறிய மடி நிறைய .. பொருள் கேட்குது..மானிடம்!! அடுப்படியில் ஒருத்தியை குந்த வைக்க... முற்பணமாய்- ஐம்பது இலட்சம் கேட்பது …
-
- 3 replies
- 1.5k views
-
-
மறந்து விட்டாயா.........? கண்களால் கைது செய்து காதல் விதை விதைத்தவளே... ஏழேழு ஜென்மமும் உன்னோடுதான் என்றாயே.... இன்பத்திலும் துன்பத்திலும் என்னோடு உறவாடியவளே.... காலம் மாறினாலும் - என்றும் மாறாதது நம் - காதல் என்றாயே......! மொத்தத்தில் நீ இன்றி நான் இல்லை என்றாயே இது அத்தனையும் பொய்யாக்கிவிட்டு - நீ மட்டும் ஏன் என்னை மறந்து பிரிந்து சென்றாய் - இதுதான் உன் முதல் ஜென்ம பந்தமா.........! முகவரி தெரியாத காதலனாய் உன் முகம் காணாத ஏக்கத்தில் - ஊன் இன்றி உறக்கம் இன்றி - உயிரற்ற நிலையில் உருகிப் போய் கிடக்கின்றேன்......! கடைசியாக என்றாவது -என் மரணச் செய்தியை கேட்டால் ஒரு துளி கண்ணீராவது விடு - அதுவே நம் காதலுக்கு -…
-
- 8 replies
- 1.7k views
-
-
நண்பி..... நண்பி......... நட்பு.... சாதாரணமாகத்தான் இருந்தது எனக்கு உன்னை காணும் வரை ஏதேனும் எதிர்பார்ப்புக்களுடனே அன்பு காட்டும் உலகில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்-உன் அன்பை எண்ணி வியந்து போகிறேன்.... நண்பி......... மொழிகளோ.... தூரங்களோ........ வயதோ....... மற்ற எதுவுமே - நட்பை எதிர் பார்ப்பதில்லை... உன்னாலே புரிந்து கொண்டேன்.. என் வாழ்க்கைத் தோட்டத்தில் எத்தனையோ 'நட்பு" மலர்கள் - ஆனால் உன் நட்பைப்போல் எதுவும் மலர்ந்து மணம் வீசவில்லை கால வெள்ளத்தில் சிதறுண்டு போகும் உறவுகளில் நண்பி.............தொடர்வாயா உன் நட்பை இறுதி வரை..........?
-
- 14 replies
- 3.5k views
-
-
முற்றத்து மல்லிகையே முற்றத்து மல்லிகையே நான் எங்கே என்று தேடினாயா? வேலியோர மாதுளையே நான் விரும்பி நீர் வார்த்த குறோட்டன் செடியே நான் இல்லையென்றே நீ வாடினாயா? கிணற்றடி துலாவே கிணற்றடி துலாவே உன் கழுத்தில் கயிறு மாட்டி நாளும் இழுத்தவன் காணலயே என்று தேடினாயா? வேப்ப மரமே வேப்ப மரமே உன் தோழ்வலிக்க ஊஞ்சலாடி தொல்லை தந்தவன் இப்போ எங்கேயென்று எப்போதாவது எண்ணினாயா? குயிலக்கா - குயிலக்கா நீ ...............கூவ மறைந்திருந்து நான் குரலெழுப்ப உன் - உறவுதான் அதுவென்று எண்ணி ஓயாமல் கூவினாயே இந்த ஏமாற்றுகாரன் எங்கே என்று எண்ணி எபோதாவது ஏங்கினாயா? கருங்குயிலென்று ஆனாலும் சொந்த நாட்டிலிருந்தாய் சுத்த வெள்ளை - நீ! …
-
- 10 replies
- 2.1k views
-
-
இன்னுயிர்தன்னை நெய்யெனச்சொரிந்து இலட்சியத்தீச்சுடர் காத்தவரே-உங்கள் புகழுடல் உறங்கும் பூமியில்-வெற்றி மலர்களைத்தூவிநாம் வணங்கிடுவோம். விதையெனமண்ணில் வீழ்ந்தவரே-உங்கள் விதைகுழிகளில் வேர்பாய்ச்சி வான்வெளி எங்கும் கிளைபரப்பி விழுதெறிந்து வளர்வோம் இனியென்றும் வீழ மாட்டோம் காலக்கிண்ணமதில்-இனியும் கனவுகளையா குடிப்போம் இல்லை...இல்லை... தலைவனின் தடங்களில்-விடுதலை தேரிற்கு வடம் பிடிப்போம். நாமாண்ட மண்ணும் எமையாண்ட தமிழும் இனியொன்றும் மாழாது-எம் உறவுகளைக்கொன்றபகை இனியென்றும் வாழாது. இது....., தமிழ்த்தென்றலின் வீடு புலிப்புயல்கள் உலவும்காடு பகையே....நீ..., …
-
- 9 replies
- 2.9k views
-
-
யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கவிதை யாழ் இணையத்தின் எட்டாவது அகவையை முன்னிட்டு யாழ் இணையம் பற்றிய உங்கள் கவிதைகளை, வாழ்த்துக்கவிதைகளை இப்பகுதியில் இணையுங்கள்.
-
- 24 replies
- 4.2k views
-
-
என் காதலனே!! கவிதை வரைந்தேன் உண்மை மூடி காதல் கொண்டேன் கண்ணை மூடி படிக்கச் சென்றேன் பையை மூடி பட்டம் பெற்றேன் பைத்தியம் என்று என் காதலனே!! உன்னையே உலகமென நினைத்தேன் - ஆகையால் உன்மீது பாசத்தைப் பொழிந்தேன் உன்னையே வாழ்க்கையையென நினைத்தேன் - ஆகையால் உன்மீது ஆதரவாக நடந்தேன் என் காதலனே!! காதலிக்கும் போது உன் வயதை மறைத்தாய் - என்னைக் காண வரும் போது உன் நரையை மறைத்தாய் கதைக்க வரும்; போது உண்மையை மறைத்தாய் - என்னைக் காரில் ஏற்றும் போது கண்ணாடியை மறைத்தாய் என் காதலனே!! காதல் து}ய்மையானதென்று அடிக்கடி கூறுவாய் காதல் இனிமையானதென்று அடிக்கடி சொல்வாய் காதல் சுகமானதென்று அடிக்கடி அறிவாய் காதல் பலமானதென்று அடிக்கடி விளக்கினாய் …
-
- 3 replies
- 2.2k views
-
-
எச்சரிக்கை துன்பம் மனித வாழ்வில் ஓர் பக்கம் துன்பம் ஈழத்தமிழன் வாழ்வின் முழுப்பக்கம் அன்னையை அழிப்பினும் வேட்டுக்கள் தாலாட்ட வளர்ந்திவோம் பள்ளிக்கு குண்டு போட்டினும் பதுங்கு குழியில்ப் படித்திடுவோம் பட்டினி நீர் போட்டினும் பசியுடனே படித்திடுவோம் குண்டு நீர் போட்டினும் குப்பி விளக்கில் படித்திடுவோம் புத்தகம் நீர் அனுப்பாவிடினும் நம் தமிழ்ப் பண்டிதரிடம் படித்திடுவோம் வெட்டுப் புள்ளி அதிகரிப்பினும் வீறுடனே படித்திடுவோம் வேலை வாய்ப்பு அளிக்கா விட்டால் வேளாண்மையுடன் பிழைத்திடுவோம் மலையே நீர் போட்டாலும் மாய்ந்து நாம் மடிய மாட்டோம் துளசி
-
- 3 replies
- 1.4k views
-
-
வயிற்றுப் பசியை வாலிபப் பசி வென்றது கையில் குழந்தையுடன் இன்னொரு ஏழ்மை சமுதாயம்
-
- 3 replies
- 1.5k views
-
-
ஏக்கம் ஏக்கம் ஏக்கம் மனிதன் வாழ்வில் என்றும் ஏக்கம் தாய் நாட்டைப் பிரிந்த ஏக்கம் தாய் தந்தையைப் பிரிந்த ஏக்கம் தங்கை தம்பியைப் பிரிந்த ஏக்கம் வெளி நாடு போய் சேர்ந்து விட வேண்டும் என்ற ஏக்கம் வெளி மொழியைக் கற்று விட வேண்டும் என்ற ஏக்கம் வேலை ஒன்று கிடைத்து விட வேண்டும் என்ற ஏக்கம் வீடு ஒன்று வாங்கி விட வேண்டும் என்ற ஏக்கம் உறவுகளை மறந்து ஏக்கத்துடனே வேலைக்கு ஓட்டம் ஏக்கத்துடனையே எததனையோ மனதுகள் தூக்கம் ஏக்கம் ஏக்கம் மனிதனின் கடைசி மூச்சு வரை ஏக்கம் துளசி
-
- 11 replies
- 2.5k views
-
-
உதிக்கையிலே மெல்லெனச்சிரித்தது உச்சியிலே சுள்ளென முறைக்கும் சாய்ந்தாடும் மரஞ்செடியும் சலனமின்றி விறைக்கும். ஊரெல்லாம் புழுங்கும் உடல்களெல்லாம் வியர்வை வெள்ளம்விழுங்கும். அடர்மர முற்றமதில் சுற்றமொன்றாய்க்கூடும் சிறுசுகளும் பெருசுகளும் விசிறிகொண்டு வீசும் நாசியிலே புழுதிமணம் புதுச்சேதி ஒன்றுபேசும். காய்ந்த புல்லை மேய்ந்தபசு தாகசாந்தி தேடும் நட்டுவைத்த பயிர்களெல்லாம் தலைகுனிந்தே வாடும். வாய்பிளந்த பூமியது நீலவானை நோக்கும் பொறுமையன்றோ உனது பண்பு என்று வானம் கேட்கும். தூரவான இடியோசை காற்றின் சிறை உடைக்கும் சில்லென்றதென்றல் வந்து புதிய யுகம்…
-
- 3 replies
- 1.2k views
-
-
எனது கற்பனை மலர்ந்தது மலர்ந்தது தமிழ் ஈழம் தமிழ் மக்களின் மனதில் தனி ஈழம் முத்தென முத்தெனப் பிறந்தது அலை கத்திடும் கடலில் பிறக்கவில்லை செத்திடச் செத்திடப் பல உயிர்கள் அங்கே சினமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம் கொடியினில் கொடியினில் புூக்கவில்லை கொடுந்தீ என்னும் போரில் பிறந்தது தமிழ் ஈழம் துணையெனத் துணையென நாம் கண்ட பல சொந்தங்கள் எமைப் பிரிந்திடவே பலமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம் அரிதென அரிதெனப் பலர் சொன்னார் அதுவும் இன்று உருவாச்சு அரியணை அரியணை ஏறியது ஐ. நா சபையில் அமர்ந்திடவே துணையெனத் துணையென நாம் கண்ட துணைகள் மீண்டும் திரும்பாது துணையெனத் துணையெனத் தானிருப்பாள் என்றும் என்றும் எம் தமிழ் அன்னை. உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரை…
-
- 12 replies
- 2.6k views
-
-
விடிந்தும் விடியாததொரு காலை அம்மணமாய் கிடக்கும் என் சோதரி உடலை என் மேலங்கி கொண்டு போர்த்தி தரையில் அடித்து அழுதாலும்... உமது இறப்புக்காகவும் இரங்குகிறேன்! கல்லாகி போகாத மனிதனென்று நாம்...............ஆனதால்........... கல்லீரல் புற்று கணக்கு முடித்ததால் உம்...அற்ப ஆயுள் சோகம் எண்ணி மனசு - கனக்கிறோம்- ஆயினும் எலும்பெங்கும் வலிக்கிறது! அடி காயங்கள் ஆறுவதாய் இல்லை! இன்றும் உம் தோழர் - எம் அடிமடியில் தீ மூட்டுவதை எப்பிடி மன்னிக்க? மறக்க? வலிக்குது! தேரோடும் வீதியில் சேறள்ளி கொட்டிவிட்டு கோயில் வாசல் அது வருகையில் விடைபெறுகிறேன் ... புலிதான் எல்லாமென்றொரு புராணமா? கேவலம்... நீரல்ல...போய்விட்டீர் இன்னும் உம் காலடி தொழுப…
-
- 7 replies
- 1.8k views
-
-
மழை வரும்போதுதான் குடையை தேடுவான்! மூச்சு முட்டும்போதுதான் யன்னல் இருப்பதை நினைப்பான்! நாளை எப்பிடி- சிரிக்க வழியென்று எண்ணி இன்றைய பொழுதை அழுதே- தொலைப்பான்! உழைக்கும் காலத்தில் சேமிக்க நினையான்! உதிரம் செத்து போனதொரு காலத்தில்- காசை எண்ணி தேம்பி தேம்பி அழுவான்! படிக்கும் காலத்தில் சீ என்ன வாழ்க்கை என்று சினப்பான்! காலம் முடிந்தால் ஐயோ இனி என்னாகுமோ என் வாழ்க்கை என்று அழுவான்! அடை மழை பெய்யும் நாளில் - நீரை சேர்த்து வைக்க நினைக்கான்! அனல் வீசும் கோடை வந்தால் குடத்தை தூக்கி கொண்டு ஊர் ஊராய் திரிவான்! போர் செய்யும் வீரருக்கு ஐந்து சதம் கொடுக்கான்! ஊரெலாம் - குண்டுவீச்சில் ஒருமூலை சென்றொதுங்கினால் தமி…
-
- 16 replies
- 2.8k views
-
-
வீரக்காய் ஆயயிலே வீழாத வீரம் பேசி என்னையும் ஆய்ந்தவனே நாவல் காய் ஆயயிலே நல்ல நண்பி நீ எனக்கு என நா பிறழாது உரைத்தவனே! காரை முள் குத்தி கடுப்பில் நான் அழுது துடிக்கையிலே உன் நெஞ்ஞ்சு தச்சதைபோல் உருகி அழுதவனே! கார்த்த்ட்கை பூ பறிக்கையிலே காதோரம் வந்து சொன்னேன், பேதை என் மனதில் காதல் பூத்ததென்று. பூ போன்ற மென்மையான உன் மனதோ பூகம்பம் நிகழ்ததை போல ஈச்சம் பழம் ஆயயிலே இரும்பைப்போல் உரத்துச் சொன்னது. ஈழத்தை காதலிக்கும் காளை உன் மனதில் ஒருத்திக்கும் இடமில்லை என்று. இயம்பிய வார்த்தைக்கு ஒப்ப களமாடி நின்றாய். ஆனால் இன்று வீரம்பழம் பழுத்திருக்கு நாவல் பழம் நிறைந்திருக்கு கார்திகையும் படர்ந்திருக்கு. நீ மட்டு…
-
- 7 replies
- 2k views
-
-
பூவனமே பொன்மலரே மறந்தாயா என்னை? புருவமதில் என் உருவமதில் இருக்கின்றாய் பெண்ணே! சிறு கவியாய் பெரும் கனவாய் சிதைக்கின்றாய் என்னை -போ வழி விடவா வரம் தரவா? வாடுதடி நெஞ்சு! காதலனாய் உன் கால் கொலுசாய் இருந்தேனே ஒரு பொழுது காலமெலாம் போனதடி என் கண்களை இனி சுட்டு தள்ளு! இருப்பேன் டா உனக்காய் இருப்பேன் டா என்றாயப்பொழுது இருக்கேன்மா இருக்கேன்மா நீதான் எங்கே இப்பொழுது? சிறுமலரே -பனிமழையே செண்பகமே - நான் பாவமா இல்லையா சொல்லு? உன் பார்வையதால் இந்த பாவியெனை- அன்று ஏன் கொன்றாய் சொல்லு! கேளடியோ-மயிலழகே என் வாசலதை மண்மூடி போனாச்சு -ஏனடியோ வண்ண கோலம் இனி அது எதுக்கு சொல்லு! :wink:
-
- 19 replies
- 3.2k views
-
-