கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நட்சத்திரங்கள் உதிர்த்த கண்ணீர்த்துளிகள் காற்றினை நடுக்கமுற வைத்த இரவொன்றில் தனிமையின் பயத்தால் உனைப் பற்றிப் பேசத்தொடங்குகிறேன். பிரிய தோழி, நீ யன்னல் சீலைகளில் இருந்து இறங்கி அறியப்படாத வர்ணமொன்றாகி அறையெங்கும் நிறைகிறாய். வெட்கமகற்றிக் கூந்தல் கலைத்து இயல்பாயென் போர்வைக்குள் நுழைகிறாய். பரவும் வெப்பம் பெருமூச்சினை நினைவூட்ட என் தனிமை நிர்வாணத்துள் ஒளிந்து கொள்கிறது. குறிப்புணரா பொழுதொன்றில் நிறைகாமம் அழிந்துபோக ஆழியின் பெருமௌனத்துடன் அடங்கி விழித்துக்கிடக்கிறேன். அன்றொருநாள் உன், இதழ்களிலிருந்து இறங்கிய சாத்தான் மூன்றாம் இரவிலும் உயிர்த்தெழ, எதிர்கொள்ளத் துணிகிறேன் தற்கொலை ஒன்றுக்கு முன்னான அமைதியுடன்.
-
- 9 replies
- 873 views
-
-
தமிழன் இராவணன் ஆண்ட புரி ஹிந்திய இராமன் ஆக்கிரமித்த புரி தமிழிச்சி குவேனி பூர்வீகமாய் குடியேறிய புரி கள்வன் விஜயன் குடி அமர்ந்த புரி..! மொழிப் பிசையல் சிங்களம் உதித்த புரி செந்தமிழ் உதிர்ந்த புரி சிங்கம் - மனிதக் கலப்பு கதை தலையெடுத்த புரி சோழப் பரம்பரை புலி தலை சரிந்த புரி..!! மேற்கு ஐரோப்பியர் விரும்பிய புரி வடக்கு ஹிந்தியர் அரவணைத்த புரி பெருஞ்சுவர் தாண்டி சீனர் கொண்டாடும் புரி கிரம்ளின் கண்ட ரஷ்சியர் அதிசயத்த புரி..!!! கடலலை கொட்டும் மணற்திட்டால் இணைந்த புரி பல கடற்கோள் கண்ட புரி மகிந்த எனும் மந்தியால் சிதையும் புரி ஆண்ட தமிழர்களுக்கு புதைகுழியாகி நிற்கும் புரி..!!!! கழனியும் காடும் கண்ட புரி மலையும் மடுவும் கொண்ட புரி இனக் குரோதம் வளர்த்…
-
- 13 replies
- 1.6k views
-
-
நாலு நாள் சுற்றுலாவும் நரிகள் அடைந்த புளுகும்..! நரிகளை பரிகளாகினார் மாணிக்கவாசகர்,புலிகளை நரிகளாக் 19.10.2014-கினார் மகிந்தரும்,பிரபாவும்.அடுத்த கட்டத்தை தாண்டும் தமிழினம் மீதான அழிப்பு -துலாத்தன். இருந்திருந்து பார்த்தேன் எழுதாமல் இருக்க முடியவில்லை. மனசுக்குள் குபீர் என்று ஒரு சிரிப்பு குமைவதாய் பரபரப்பு. உலையில் அரிசி ஏறாவிட்டாலும் பரவாயில்லை. உலைக்களத்தை திறக்காமல் உட்கார முடியவில்லை. மன்னாதி மன்னர் வந்துபோன கொட்டகைகள் இன்னும் கழற்றி முடியவில்லை. கொஞ்ச நாளுக்கு முதல் ஒரே கொலைவெறி கோழிக் கூட்டுக்குள்ளும் புகுந்து பதிவெடுத்தார்கள் படைத்தம்பிகள். புலி இருந்த குகைக்கே இந்தனை பயமா? அங்குமிங்கும் பார்த்துவிட்டு எங்கள் சனம் எள்ளி நகையாடியது. கடித்து குதறி கபளீகரம் செ…
-
- 0 replies
- 725 views
-
-
கையில் நெருப்பிருக்கு என்னிடம் .. பற்றவைக்க தான் திரி இல்லை .. ஆடைக்கடை முன் நின்று பார்த்தால் .. ஆடை யாரு கொடுப்பார் இலவசம் .. ஆயிரம் கேள்வி எழும் மனதில் .. ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் வேணும் .. என்னை துறந்து பார்க்க விரும்பி .. அதுக்கான படிப்பை ஏன் நான் படிக்கவில்லை .. வீழ்த்தவர் எல்லோரும் அரக்கராம் பூவியில் .. அதுவும் தமிழாரம் வரலாற்றில் எப்ப மாறும் .. ஆரியன் கொன்றது தமிழனை என்றால் .. முருகன் வதைத்தது யாரை என்னும் கேள்வி .. தமிழ் மொழியா அல்லது தனி இனமா .. யாரு பிரித்தார் ஏற்ற தாழ்வை .. ஆண்டாண்டு காலம் கடைபிடித்த எல்லாம் .. நவீன யுகத்தில் மட்டும் எப்படி பிழையானது .. என் பாட்டன் சிந்திக்கவே இல்லையா .. எனக்கு மட்டும் எப்படி வந்தது …
-
- 6 replies
- 854 views
-
-
மனதெங்கும் எத்தனையோ மாயங்கள் அலைகளாய் எண்ணத்தில் தோன்றுவது எழுத்தில் வடித்திட முடியாததாய் காணும் காட்சிகள் கண்விட்டுப் போவதுபோல் நினைவுகளின் நீட்சிகள் தொடராதிருந்தால் எத்தனை இன்பம் மனம் எப்போதும் கொண்டிடும் காலத்தின் பதிவுகள் கனவின் கோலங்களாய் மனதில் மகிழ்வு தொலைத்து கண்கட்டிவித்தையில் கபடியாடுகின்றன கண் மூடும் வேளைகளில் கூட பகுக்க முடியாத எண்களாய் பகிரப்படும் நாட்கள் பம்பரமாய் சுழன்று மீண்டும் பரிதவித்து நிற்பதுவாய் நிமிடங்கள் நகர்த்தும் நாட்களாய் நெடுந்தூரம் செல்கின்றன தவிர்க்கவும் மறுக்கவும் மறக்கவும் முடியாததான பிணைப்பின் வலிமையில் மறுதலிக்கும் மனதின் செயல் எத்தனை கடிவாளமிடினும் எதுவுமற்றதாய் ஆகிவிடுகையில் எப்போதும் போல் என்னிலை ஏக்கங்…
-
- 1 reply
- 634 views
-
-
வரலாற்றில் எங்களை அவர்கள் அரக்கன்கள்களாக சித்திரித்தனர் எங்கள் வரைபடத்திலும் எங்கள் கதைகளிலும் இருளை நிரப்பி தீபாவளி என்றனர் எங்களை அடக்கி எங்களை ஒடுக்கி எங்கள் அசுரர்கள் என்றழைத்து தாங்கள் செய்தனர் மாபெரும் அநீயை எங்கள் இனத்தை அழிக்க மகிந்த நடத்திய மனிதாபிமானப் போரைப்போலவே வீரன் என்றும் தர்மத்தின் தலைவன் என்றும் மகிந்த மார்தட்டுவதைப் போலவே வல்லமைகளைப் பயன்படுத்தி அதிகாரங்களை பயன்படுத்தி மக்களை கொடுமைப்படுத்துபவர்கள் கொல்பவர்கள்தான் அரக்கர்களாம்... அப்படி என்றால் எம்மை வதம் செய்து எம்மை கொன்று எம் இரத்தம் குடித்து சதை தின்று பேய்க் கூத்தாடுபவர்கள்தான் அரக்கர்கள் அந்த அரக்கர்கள் இன்னும் அழியவில்லை எங்கள் மண்ணில் இன்னும் எந்த ஒளியுமில்லை http://gl…
-
- 0 replies
- 612 views
-
-
மழை பின்னிப் பெருமழையெனப் பொழிகிறது மரங்களும் இலையுதிர்த்தலுக்காய் வண்ணம் பூசத் தொடங்கிவிட்ட இம்மண்ணில் இருத்தலுக்காய் இயந்திரமாகாவிடின் அன்னியமாகி தொலைந்தேவிடுவோம் என்னும் துயராய் வாழ்வு அசைகிறது சலனமின்றி மழையை ரசித்தலில் காற்றில் துகள்களாகி கரைந்துபோகும் தேசம் அது ஒரு கோடைத் துலம்பலில் பிரிந்துவந்த என் மண்ணில் இன்னமும் புதைந்திருக்கிறது மௌனத்துள் மழை தடுமாறிக் கருக்கொள்ளும் மேகங்களும் காற்றள்ளப் போய்த் தொலைகிறது... வெள்ளிகள் முளைக்காத இருண்ட இரவுகளில் கடந்துபோகிறது துயர நிலவு தடுமாறி உயிராகும் வார்த்தைகளை கண்களில் நீர் அள்ள, கடந்துபோகும் காலத்துடன் மேற்கில் வீழ்ந்தணைகிறது சூரியன். ஆழக்கடலில் கலந…
-
- 4 replies
- 646 views
-
-
-
- 2 replies
- 1.8k views
-
-
-
கால்களில் கிடந்த மண் பொருக்குகளை தட்டிக் கொண்டிருக்கையில் சிதைந்து ஓலமிடத் தொடங்கின விளையாதுபோன பாட்டனின் கனவுகள். கதைகளில் சொல்லாத ரேகைகளில் கூறாத விரல்களால் தீட்டாத பாட்டனின் கனவுகள் கூடி மொய்க்கத்தொடங்கின, விளைந்த நெருக்கத்தில் நான் அறியாத பாட்டனின் முத்தமொன்றை பரிசளித்தன, உடல் சிலிர்க்க நடுக்கத்தோடு முத்தம் வெளியேற்றிய கண்ணீரை முகர்ந்தவை, கால நாற்றங்களால் உணர்வடக்கிக் கொண்டன, கண்ணீர் வெளியேறிய வெற்றிடத்தில் பாட்டனின் வயல் வளரத்தொடங்கியது. விளையாத கனவுகள் உணர்வுடைத்து இனி வேர்விடக் கூடும். எனிலும், நான் இன்றே எனது வயலை கொலை செய்துவிடப் போகிறேன்.
-
- 3 replies
- 914 views
-
-
காவல் தேவதை மாலதி. வீரம் தந்தவள் விடுதலைப் பயணத்தின் வீரியம் சொன்னவள் எங்களில் ஓர்மத்தை விதைத்த எழுச்சியின் குறியீடு எழுதிய வரலாறு மாலதி. சுதந்திரப் பொருளுரைத்துப் பெண்ணின் பெருமையை பேறாக்கிய பெருமை பெரும் பேறாய் எம்மினத்தில் பிறந்த பெருந்தீ. கோப்பாய் வெளிக்காற்று ஈரம் சுமக்கும் இன்றுமுன் வீரம் கண்ணகை தெய்வமாய் அங்கெல்லாம் மாலதி காவல் தேவதையாய்....! காலநதி உன் கலையா நினைவோடு கரைகிறது தோழி மாலதியென்றெம் மனங்களில் மூட்டிய தீயின் அடையாளம் மாலதி படையணியாய்....! 10.10.2002 (11வருடங்கள் முதல் எழுதிய கவிதை அல்லது அந்த நேரத்து உணர்வு. மீளும் நினைவாய் ) http://mullaimann.blogspot.de/2013/10/blog-post_10.html
-
- 13 replies
- 3.8k views
-
-
யாழ்க்கள உறவுகளே! இது ஒரு ஆரம்பம். வாருங்கள் எதிர்ப்பாட்டு எடுக்கலாம். ஏற்கனவே இத்தகைய பாடல்கள் இங்கு உலா வந்திருக்கின்றன. உதாரணத்திற்கு உங்களுக்குப் புரியும் வகையில் சில ஆக்கங்களை இங்கு இடுகின்றேன். இந் நிகழ்வு கவிதை அந்தாதி போன்று விரும்பியவர்கள் எழுதலாம். உதாரணம்1 ஆதி, காப்பாய் வெண்ணிலா கடம்பவன புூங்கொடியே பார்ப்பாய் பாவியேன் படும்பாட்டை பரிதவிக்கும் நிலைப்பாட்டை கேட்பாய் என் அழுங்குரலை கிடந்து உழலும் யாழ்க்களத்து வால்களின் வலியிருந்து தண்நிலவே ஆதியின் உயிர் காப்பாய். சுயிந்தன், காக்காய் வெண்ணிலவே காக்காய் பிடித்திடினும் பார்க்காய் பாவியரை பகடைக்காய் ஆக்கிடுவார் கேட்காய் அழுங்குரலைக் கேள்வியிலே காய்த்திடுவார் வால்வலியே வாழ்வாகட்டும்…
-
- 45 replies
- 6.3k views
-
-
வானம் இன்று வண்ணமிழந்து அழுகிறது மேகம் கூட நிறமிழந்து பொழிகிறது ஊசிக் காற்று உடலை வருத்த உணர்வுகள் எல்லாம் உடல் சுருக்கி ஒன்றுமற்று ஓடியே செல்கின்றன இளவேனில் மழை இதமாய் நனைத்திடும் கோடையில் மழை குதூகலம் தந்திடும் மாலை மழை மனதை மயக்கிடும் குளிர்கால மழையோ குலை நடுங்கிக் கூதல் ஓடக் கொட்டமடக்கிடும் கோடையை நனைக்க மழை வேண்டும் குழந்தைகள் நனைய மழை வேண்டும் காதலர்களுக்கும் மழை வேண்டும் கனவுகள் கடந்து காலம் காட்டவும் நினைவுகள் களைந்து நின்மதியுறவும் நினைந்து நினைந்து நீ வாராது மழையே நினைக்கும் பொழுதில் மட்டும் நீ வா
-
- 3 replies
- 647 views
-
-
மின்சார ரயில் மெல்ல மெல்ல .. வேகம் கொள்ளும் நிலை போல் .. உன் மின்சார பார்வை என்னையும் .. லேசா லேசா திரும்பி பார்க்க தூண்ட ... உடைந்து விழும் கண்ணாடி போல் .. மனதில் ஒரு சிதறல் கோடு .. நீ பாடல் கேட்டு தலை அசைப்பது .. எனக்கு ஏனோ சம்மதம் சொல்வதாய் .. உன் விரல்கள் கோலம்மிடும் கைபேசி திரை .. என் மூச்சு காற்றின் வெப்பம் அறியும் .. நீ பாடல்களை மாற்றிக்கொண்டு இருக்கிறாய் .. நான் வாழ்வின் பல படியை உன்னோடு கடக்கிறேன் .. ஒவ்வெரு தரிப்பிடமும் மூச்சு வாங்குது .. நீ எழுத்து போகக்கூடாது என்று வரம் கேட்குது .. நீ நிமிர்த்து பார்க்கும் நொடிகள் தான் .. நான் வாழ்தலின் பலனை எண்ணுகிறேன் .. என்றாவது ஒருநாள் உன் அருகில் நான் .. சேர்த்து பயணிப்பேன் என் காத…
-
- 9 replies
- 1.6k views
-
-
மாட்டுக்கறி எங்கள் பண்பாடு மாட்டுக்கறி - எங்களது வாழும் பசுமை வாழ்க்கையின் பன்முகம் எங்கள் ஆன்மாவின் உயிர்மூச்சு "மாட்டுக் கறி உண்ணாதீர்கள்" நான் உன்னை கேட்கிறேன் - "எப்படி உண்ணாமல் இருப்பது?" நீ யார் எனக்கு அறிவுரை கூற, எங்கிருந்து வந்தவன்? எனக்கும் உனக்கும் என்ன உறவு? நான் கேட்கிறேன். இன்று வரைக்கும் நீ ஒரு ஜோடி காளை மாடுளை வளர்த்திருப்பாயா? ஒரு ஜோடி ஆடுகளையாவது? ஒரிரண்டு எருமைகளை? அவைகளை மேய்த்த அனுபவமுண்டா? குறைந்தபட்சம் கோழியாவது வளர்த்ததுண்டா? இவைகளுடன் ஆற்றில் இறங்கி அவற்றை தேய்த்துக் குளிப்பாட்டியதுண்டா? காளையின் காதை அறுத்து துளையிட்டதுண்டா? இல்லை, அவற்றின் பற்களைப் பிடித்து பார்த்திருக்காயா? அவற்றுக்கு பல்வலி வந்தால் என்…
-
- 3 replies
- 2.7k views
-
-
கதிரவன் கதிர்களைத் தூரிகையாக்கி வானில் வண்ணம் தீட்டுகிறான் சித்திரமாய் வானம் சிவப்பின்றி வசந்த காலத்தை விரட்டியபடி சோர்வுடன் சொல்லிழந்து நிற்கின்றது புள்ளினங்கள் கூடப் புதர்களில் மறந்துவிட புரிந்துகொள்ள முடியாக் கோடுகள் பார்க்குமிடமெங்கும் பரவிக்கிடக்கிறது பகட்டாய்க் கிளை பரப்பி நின்ற பாதையோரத்து மரங்கள் கூடச் பச்சை தொலைத்த இலைகளுடன் செருக்கிழந்து நிற்கின்றன பாதை நிறைத்துக் கிடக்கும் பழுத்துப் பழுப்பான இலைகள் பரிதவித்து நிலை மறந்து பக்கம் பக்கம் கிடக்கின்றன குளிர் கலந்து வீசும் காற்று என் குதூகலம் கொஞ்சம் கலைத்து கூதல் கொள்ளும் உடலசைத்து குளிர் உதற முனைகிறது கண்மூடி ஒருகணம் காலக் கணக்கை வியந்தபடி கனக்கும் மனம் சுமந்து கால்வீசி நடக்கின்றேன்
-
- 11 replies
- 1.4k views
-
-
நல்லூர் முன்றலில் எழுந்ததோர் வேள்வித் தீ கருகிப்போனதோர்... உன்னத தியாகம்! பசியை வென்ற எங்கள் பாலகனுக்கு... அன்று, பாரதம் செய்ததோர் மகா பாதகம்!! ஆறுநாள் விரதத்துக்கே வரமருளும் வேலவன் கூட அவன் கண்மூடும்வரை... கண்திறக்கவில்லை ! நல்லூர்க் கந்தனும் கருணையற்றவனானான் !! இந்திய வல்லூறுகள் செய்த பொல்லாத சதி தியாக தீபமொன்றை அணைத்தது விதி சிந்திய கண்ணீரில் மூழ்கியதே நல்லூரான் வீதி அகிம்சையே அறமென்ற இந்திய தேசம்... ஈழத்தில் செய்த முதல் நாசம் ! பார்த்தீபனின் பட்டினிப்போரால்... வெளுத்துப்போனது... பாரதத்தின் அகிம்சை வேஷம்! 'பஞ்ச வேண்டுதலோடு' பட்டினி கிடந்து போராடி... பார்த்தீபன் மடிந்த போதுதான்... மகாத்மாவுக்கும் புரிந்திருக்கும், கோட்சேயின் துப்பாக்கி…
-
- 5 replies
- 1.9k views
-
-
இலை உதிர்காலத்தின் சாலையில் செல்கின்றேன் பச்சையான மரங்கள் மஞ்சளாகிக்கொண்டிருக்கின்றது நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் இலைகள் உதிர்ந்துகொண்டிரக்கின்றது உணவின்றி கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருந்த ஒருவன் நினைவுக்கு வந்தான் குளிர்காலம் முடிந்ததும் இந்த மரங்கள் மீண்டும் துளிர்விடும் உயிர் உதிர்ந்த மரத்தை கொத்தி விறகாக்கி சோறாக்கி தின்று தேசீயம் என்று ஒரு ஏவறை விட்ட ஞாபகங்கள் வந்துபோயின. கால்களுக்குள் இலை உதிர்காலத்து சருகுகள் கேவலமாகப் பார்த்தபடி காற்றில் சலசலத்துச் சென்றது மண்ணோடு மக்கி மீண்டும் மரத்தில் துளிர் விடுவேன் என்ற என்னிடம் இல்லாத உண்மை அதனிடம் இருந்தது. இயற்கையின் விதிவிலக்குகளில் நானும் ஒருவன் என்ற பெருமூச்சு என் காதுகளுக்கு கேட்காதபடி சருகுகள…
-
- 0 replies
- 1.3k views
-
-
வாழும் வயது அது பார்த்தீபா .. வண்ணங்கள் கோடி உண்டு உலகில் .. எண்ணங்கள் சுமந்து நீயும் .. எம்மைப்போல் வாழ்த்திருக்கலாம் .. திண்ணமாய் நீர் எடுத்த முடிவு .. கொள்கையின் பற்றும் பிணைப்பும் .. இலக்கினில் கொண்ட உறுதியும் .. எம்மைப்போல் மாறுது இருந்ததால் .. மரணித்து எம் மனங்களில் நிறைந்தாய் .. விடுதலை போரில் நாம் இழந்திருக்க கூடா புலி .. உன்னைப்போல் அரசியலின் தீர்க்கதர்சி எவர் .. மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று அன்று... சொல்லிப்போன உன் வாய்மொழி இன்று .. வெடித்து நிக்கு ஐநா முன்றலில் கூட்டமா ... பார்த்தீபன் என்னும் விடிவெள்ளி எம்மை .. ஈழம் என்னும் நாடு நோக்கி அழைக்கும் .. தாகம் என்னும் சொல் இனி திலீபன் ஆகும் .. தவித்து வந்தது எமக்கு கண்ணீர் .. தாகத…
-
- 0 replies
- 749 views
-
-
முதல் வெடியோசையில் பிறக்கிறது காதல் .. பக்கத்துக்கு கூடாரம் யாராக இருக்கும் .. எண்ணிய வேளையத்தில் பிள்ளை வேகமா வா .. என் அழைக்கும் அவள் அம்மாவின் சத்தம் .. நிலா ஒளியில் அவள் நிலா முகம் பார்க்கிறேன் .. ஓடி சென்று மாமர அருகில் இருந்தவாறு .. ஒன்னை பெத்து வைத்திருக்கிறேன் .. கட்டிகாக்க நான் படும் பாடு பெரும்பாடு . . என்னும் ஏக்க பெரும்மூச்சு விடும் அவள் அம்மா .. கற்பூர வள்ளி போல வாடாமல் இருக்கிறாள் .. கண்களில் மட்டும் சிறு நீர் நிரம்பி இருக்கு .. அது ஒரு வயது பார்த்தவுடன் வாழ்க்கை கொடுக்கும் .. கட்டினால் இப்படி ஒரு பிள்ளையைத்தான் .. என்னும் மன ஓட்டத்தில் இயங்கும் நிலை .. எம்மை பற்றி சிந்தித்ததை விட அவளை பற்றி அதிம் .. அடிக்கடி பவுடர் போடும் …
-
- 7 replies
- 907 views
-
-
விழியோரங்கள் அரும்பிய நீர் துடைத்து கயிற்று நிரைகளுக்குள் அடங்கி இருக்கும் மக்கள் கூட்டம் நடுவிருந்து கண்கள் அவனையே நோக்குகின்றன..! பின்புலத்தில் சீறிப் பாயும் புலியா யாழ் இந்துவின் உண்மைப் புதல்வனா தாய் தமிழீழத்தின் செல்லப் பிள்ளையா மக்கள் விடுதலையின் ஒற்றைக் குரலா... கேள்விகள் அவன் கோலம் கண்டெழுகின்றன..! சின்னஞ்சிறுசுகளின் மாமா.. எங்கள் அண்ணா உங்கள் தம்பி பலரின் பிள்ளை சிலரின் எதிரி சிந்தனை ஒன்றை வைத்து உண்ணா நோன்பிருந்து மக்களை துயில் எழுப்பிக் கொண்டிருந்தான்..!! கனவுகள் அவன் தனக்காக கண்டதில்லை..! சனத்துக்காக தன் சாவிலும் கூட மேலிருந்து விடுதலையை காண்பேன் என்றே மொழிந்தவன்... தேகத்தையே தேசத்தில் பிள்ளைகள் படிக்க கொடுத்தவன…
-
- 9 replies
- 937 views
-
-
எனது அறையில் எனது இரவுகளில் எல்லாம் உயிர்பித்திருக்கிறது உனது அன்பின் கிருபையால்... உன் கூந்தலின் கருந்சாந்தெடுத்து பூசிய மேற்கூரையின் இருண்ட வெளியின் தனிமை தீர்க்க உன் வெண்பற்கள் வெண்மைகொண்டு வரைந்த நட்சத்திரங்கள் போதாதென்று சமைந்தது பிறைநிலா நீ வெட்டியெறிந்த நகத்துண்டுகள் சேர்ந்து கோள்கள் சில செய்தேன் முகப்பருக்கள் அளவு கொண்டு புருவங்கள் இணைந்து வானவில் பிறந்தது சுவற்றில் கண்ணீர் பெருக்கில் சமுத்திரங்கள் கலந்தது நதிக்கு வடிவம் தராது திகைத்தேன் சுழித்தாய் உதட்டை மார்பு குவியம் மலைத் தொடரானது வேர்வையில் நனைந்த ரோமங்கள் மழைக் காடுகளாய் மாறியது நெற்றிப் பொட்டை சூரியனாய் தந்துவிட்டு போர்வையினுள் புகுந்தாய் மெல்லினம் வல்லினமாய் மிகுந்து உன் பெண்மையி…
-
- 28 replies
- 2.3k views
-
-
மக்கள் புரட்சிக்கு வித்திட்ட மனுநீதிச் சோழன். பட்டினித் தீ மூட்டிய பெருந்தீ பாரதப் பேரரசின் பாராமுகம் பலியெடுத்த பெரு வீரன். மக்கள் புரட்சிக்கு வித்திட்ட மனுநீதிச் சோழன். எங்கள் மனமெங்கும் எரிகின்ற அணையாச்சுடர். ஆண்டுகளாய் அடிமையின் மீதமாய் நீண்டு போன வரலாற்றில் தமிழர் நிலைமாற்றப் பிறந்த நியாயத்தின் சுடர். நிலம் வாழும் வரையுந்தன் வரலாறும் வாழ்வின் அர்த்தமும் வீரமும் ஈகமும் - என்றும் வாழ்ந்து கொண்டேயிருக்கும். - சாந்தி - rameshsanthi@gmail.com http://mullaimann.blogspot.de/2014/09/blog-post.html
-
- 0 replies
- 682 views
-
-
-
- 13 replies
- 5.8k views
-
-