Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஈழத்திரு நாட்டில்.. பூர்வீகமாக வாழ்ந்த மண்ணில்.. அடிமைப்பட்ட மந்தைக் கூட்டம் ஒன்றின் விடுதலைக்காய் புலி ஒன்று சொந்த வாழ்வை சொத்தாக்கி உழைத்தது. கூட இருந்த குள்ள நரிகளும் எட்ட நின்ற ஓநாய்களும் மந்தைகளின் வளர்ச்சி கண்டு வாயூறி நின்றன. சில கறுப்பாடுகளும் பட்டியில் காட்டிக்கொடுக்க தயாராகி நின்றன. அப்பப்ப திருடித் தின்றதை விட... ஒட்டுமொத்தமாய் தின்று தீர்க்க தீனியாக்கிட கூட்டுச் சேர்ந்து கும்மாளம் அடிக்க ஓநாய்கள்.. சிங்கத்தின் குகையதில் கழுகுகளின் காலடியில் தவம் கிடந்தன. கால நேரம் வாய்ப்பாகிப் போக சிங்கம் ஒன்றின் பேரினக் கோரப் பசிக்கு மந்தைகள் இரையாகின. சுற்றித் திரிந்த காகம்..கழுகுகள் மிச்சம் தூக்க.. ஓநாய்கள் எலும்பி பொறுக்கி …

  2. ஆரியச் சக்கரவர்த்தி ஆசோகனின் காடைக் கடையன் விஜயன் பரம்பரையில் உதித்த சிங்கள தேசத்தில் 50 களில் தமிழ் பெண்கள் மார்பறுத்து கொதி தார் ஊற்றி... அனல் தணல் மீது விட்டெறிந்து கொடுமை செய்து.. கூடி நின்று கேலி செய்து வெற்றிக் கோசம் போட்டு மகிழ்ந்த கூட்டம்... 83 இல் அதையே அகலப்படுத்தி தமிழச்சிகள் சேலை களைந்து மானபங்கப்படுத்தி தமிழர் குடியையே ஆடை இன்றி விரட்டி அடித்து மகிழ்ந்து நின்று.. மகாவம்சம் வழி வீரம் பேசிக் கொண்டது. அந்தக் காடைக் கழுதைகளை காட்டேரிகளை.. இராணுவம் என்ற பெயரில் உலக நாடுகள் அள்ளி வழங்கிய கொலைக்கருவி கொடுத்து தமிழர் பகுதிக்கு அனுப்பி வைத்தான் ஜே ஆர்..! ஒப்பரேசன் லிபரேசன் முன்னாடி தொடங்கி ஒப்பரேசன் லிபரேசனில் தமிழ் பெண்கள் …

  3. Started by தாரணி,

    இனியவனே! சிரிப்பை சிக்கனப்படுத்தாதே! நீ இதழ்களால் சிரிக்கும் போது நான் இதயத்தால் சிரிக்கிறேன்! நீ சிரிக்காத நாள் எனக்கு துக்க நாள்! அன்றைக்கெல்லாம் என் இதயம் கறுப்பு சட்டை அணிந்து கண்ணீரில் மிதக்கிறது.

  4. Started by தாரணி,

    வசந்தம் கண்ணா! இது நமக்கு இலையுதிர்காலம் இனிவரப்போவது வசந்தகாலம்! பிரிவுகள்-வேதனைகள் உதிர்த்தாலே இணைப்புக்கள்-இனிமைகள் துளிர்க்கும் இதயங்கள் சிலிர்க்கும் காத்திருப்போம் கடைசி இலை உதிரும் வரை! நன்றி

    • 9 replies
    • 1.9k views
  5. உலகை வளைத்து உள்ளே நாட்டை துளைத்து நுரைத்து பொங்கும் நாலு பெருங்கடல்!! பவளப்பாறைகள் அதை உண்ணும் மீன்கள் மீன் பிடிக்கும் மீனவன் என ஒரு சங்கிலி தொடருக்கு ஆதாராம்!! கட்டுமரம் முதல் கப்பல் வரை கட்டிக் காத்திடும் கடல்ராஜா இந்த பெருங்கடல்கள்!! நீலத்திமிங்கலம் நீந்தி பழகிடும் பென்குவின்களும் நடந்து சென்றிடும் டிஸ்கவரி காட்டாத இன்னும் பல உயிரினங்களை உள்ளே வைத்து ஆச்சர்யம் காட்டும் ஆழி பெருங்கடல்!! தண்ணீர் கொண்டு நாட்டை பிரிக்கும் எல்லை என்றனர் சிலர்!! ஆனால் தண்ணீர் கொண்டு நாட்டை இணைக்கும் பாலம் என்றனர் பலர்!! கடலின் அழகை ரசிக்க நினைத்தால் மகிழ்ச்சி பொங்கிடும்!! மாசுபடுத்தி அழிக்க நினைத்தால் …

  6. நெய் வடியும் அழகு வதனங்களா.. பொட்டு நிறை பிறை நுதல்களா.. ஓடை நீரோட்டம் கோலம் போடும் பின்னல்களா.. அள்ளி போர்க்கும் மாராப்பு குரும்பைகளா... சங்குக் கழுத்தில் மின்னும் பசும் தங்கங்களா.. வளையல் போட்ட வளைக் கரங்களா.. தொடப் பூரிக்கும் மென் விரல் பூக்களா... மெல்லப் புன்னகையில் மெத்த பேசும் பதுமைகளா.. ஐந்தடி என்றாலும் ஐஸ்வரியம் ஆளைக் கவரும் வர்ணங்களா.. நேர் நோக்கையில் விழி தரைநோக்கும் நாணல்களா.. உங்கள் வாய்மொழி தமிழ் மொழி தேன் சுரக்கும் கொவ்வைகளா.. அந்த தகுதி ஒன்றே போதும்... நீங்கள் தானடி எங்கள் இதயம் கிள்ளும் தமிழச்சிகள்..! (படம்: முகநூல்)

  7. கூடாரத்திலும் மலர்கின்ற மலர்கள் இளங்கவி - கவிதை வதைமுகாம் கூடாரங்களில் அடைபட்டுக்கிடக்கும் குடும்பத்தின் குரலொன்றாய் இந்தக் கவிதை அந்த இருண்ட இரவின் இருளடைந்த கூடாரத்தில்.... சிறிதாக முனகிடும் சிறுமியின் குரலொன்று.... ''அம்மா வியர்க்கிறது வெளியில் நிற்போம் வா....'' சும்மா கிடவடி சிங்காரி சிலிர்த்துக்கிட்டு போறாவாம் சிங்களவன் காத்திருக்கான் உன்னை தூக்கிகிட்டே போவானாம்..... நான் சின்னப்பொண்ணு தானே எனக்கேது பயமம்மா.... உள்ளே கிடப்பதனால் என் சட்டை நனையுதம்மா... அடியேய்.. சொல்லுக் கேள் உன் சட்டை வியர்வைக்காய் சட்டென்று நீ வெளியே போனால்..... சிறு பெட்டையென்றும் பார்க்காமல் பிச்சிடுவான் ரொட்டியை போல்.... …

  8. தள்ளாத வயதில் ஊண்டும் தடியை - முதுமை இல்லாத வயதில் ஊண்டியவன். தள்ளாடி சாகத் துடிப்போர் உலகில் - களத்தில் மல்லாடி சாகத் துணிந்தவன். அமைதி விளக்கு அணைந்த உலகில் - அமைதி காண நடந்த வீரன். குண்டு விழாத தேசம் காண - விமான குண்டேந்தி விழுந்த வேங்கை. நால்வர் வேண்டும் தூக்கி செல்ல - இவனோ ஐவரோடு சேர்ந்து நடந்தவன். காந்திக்குப் பின் கைத்தடி ஏந்தி - அமைதிக்கு பாடுபட்ட அழிவில்லா வேங்கை. பேசத்தெரியா சிங்கள அரசுடன் பேசுவதில் - இனி பயனில்லை என்று கண்டவன். பேச்சுக்கள் முடிந்துவிட்ட செய்தியை உலகிற்கு - தன் பேச்சற்ற முடிவால் சொன்னவன். அவன் பெயரைச் சொன்னால் எதிரியின் - வாய்க்குள்ளும் தமிழ் நுழைந்து போராடும். …

    • 0 replies
    • 1.9k views
  9. அம்மா யாரென்று தமிழனை கேட்டால் ஜெ என்கிறான் அப்பா யாரென்று தமிழனை கேட்டால் கருணாநிதி என்கிறான் அண்ணன் யாரென்று தமிழனை கேட்டால் வைகோ என்கிறான் அரசியல்வாதிகள் குடும்பமாக நிற்க நீ அநாதையானாயே தமிழா -------------------------------------------------------------------------------- கலர் டிவி கண்டதும் பசித்த வயிறு மறந்தது சமத்துவ பொங்கலில் உடம்பில் பட்ட கறை மறைந்தது பள்ளிகள் இணையத்தில் இணைய பேரன் கலாம் ஆனான் துண்டுபிடி குடித்த உதடுகள் 555க்கு ஏங்க, சே என்ன ஆட்சி இது -------------------------------------------------------------------------------- ஆங்கிலம் பேசினால் பாவம் சும்மாவிடாது ஹிந்தி பேசினால் கடவுள் உன்னை தண்டிப்பார் கோவிலுக்கு போனால் நீ …

    • 7 replies
    • 1.9k views
  10. Started by prasaanth,

    sorry

    • 10 replies
    • 1.9k views
  11. அவளின் அன்பு என்றும் மறக்கமுடியாது.... அவள் என்னுடன் இருந்த நாளில் துக்கம் என்பதே தெரியாது. அவளின் குறும்பு ஒரு மகிழ்ச்சி அவளின் கள்ளத்தனமான வெறுப்பு ஒரு சுகம்.............. என்று அவளை பிரிந்தேனோ-அன்றே நான் என்னை இளந்தேன்.. அவள் எனக்கு அவளின் அன்பைத்தான் விட்டுச் செல்லவில்லை-ஆனால் பசுமையான அவள் நினைவுகளை விட்டுச்சென்றுள்ளாள்.... அவள் நினைவுகளுடனே என் நாளை களித்துடுவேன் அவள் விட்டுச் சென்ற நினைவுகள் என்றும் அழியா சுவடுகள் எத்தனை காலம் ஆனாலும்-அது மாறாத காதல் வடுக்கள்.................... >>>>***டினேஸ்***<<<< >>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று ந…

    • 2 replies
    • 1.9k views
  12. என்னவளாம் இன்னவள் அன்பின் சிகரமாம், அறிவின் ஒளிமயமாம், அழிகின் சிலைவடிவாம், என்னவளாம் இன்னவளின் செவ்விதழின் சிரிப்பொலியாம், பிரம்ம தேவன் படைப்பின் விசித்திரமாம், கலைத்தாயாம் கலைமகளையும் கவர்ந்த அந்த புன்னகையாள் கவியருளும் கவிமொழியும் அவள் நாவில் நற்றுணையானது.. நான் எதிர்பார்த்த அத்தனையும் அவளிடத்தில் இருக்கையிலே என்னவளாம் என்னவளை, என்னிடத்தில் சேர்ப்பதற்கு தூது சொல்லச் சென்றவளும் துணைவனிடம் சென்று விட்டாள். என்னவளாம் இன்னவளை என்னிடத்தில் சேர்ப்பதற்கு என்மனதில் துணிவில்லை, அவள் நாவின் வல்லமையால் என் நாவும் மௌனித்தது.. மௌனத்தின் மௌனத்தால் காத்திருக்கும் வேளையிலே காலங்கள் கரைந்தோடி கறுப்பினிலே நரை தட்டினாலும் காத்திருப்பேன் காத…

    • 11 replies
    • 1.9k views
  13. கொழும்பு நகர (நரக) வாழ்க்கை... மனிதம் என்பதே இங்கு இல்லை மனிதரோ கோர உணர்வுகளுடன் மண்ணில் வாழ முடியா தமிழர் மரத்துப்போய் இங்கு வருகின்றனர் மரணத்துக்கு தள்ளும் வண்ணம் மனிதர்கள்(சிங்களவர்) நடக்கின்றனர் செல்லும் இடங்களிலெல்லாம் செல்லாத சோதனை செய்வர் செல் குண்டு வீச்சுக்களை தாங்கியவர்கள் சொல் வீச்சுக்களை கேட்டு தவிக்கின்றனர் செருப்பாக கூட இருந்து உதவுவார்கள் செருப்பாகவும் மதிக்கான் சிங்களவன் சிந்தனைகளின் ஊற்றாக திகழ்பவர்கள் சிந்தனை வாதிகள் எம்மக்கள் என்றும் சிந்தனை ஆமாம் மகிந்த சிந்தனை சிந்திக்க வைக்கவில்லை எம்மவரை சிதறடிக்க வைக்கின்றது இங்கே சிறுமையாக்க படுகின்றார்கள் எம்மவர்கள் பொருளுக்கு ஏற்ப விலையில்லை …

    • 7 replies
    • 1.9k views
  14. மாட்டுப்பொங்கல் வாய்க்கு ஒழுங்கா தீனி போடலை என்றாலும் வாய் நிறையா அம்மா என்று அழைக்கிறேனே உழைச்சு உழைச்சு ஓடா தேய்ஞ்சேனே எலும்பும் தோலுமா நிக்கிறேனே வருஷம் பூராவும் உழைக்கிற எனக்கு பொங்கலுக்கு மட்டும் என்னை கவனிச்சா போதுமா கதறி கதறி கண்ணிர் விடுற இந்த ஐந்தறிவுள்ள வாயில்லா ஜீவனை ஆறறிவுள்ள மனிதன் வருடம் பூரா கவனிக்க மாட்டானோ (இலங்கைப்பெண் கவிதைகளில் இருந்து)

    • 1 reply
    • 1.9k views
  15. Started by nunavilan,

    அனைத்துலக பெண்கள் நாள் பங்குனி 8. மகளிர்தினத்தை முன்னிட்டு நான் ரசித்த இந்த கவிதை இதோ. 'பெண்' பெண்ணே உலகின் ஆதாரம் அவளற்ற ஆண் வெறும் தளமற்ற கட்டிடம் உள்ளத் தவிப்புக்கு மருந்தும் உயிரின் துடிப்புக்குச் சமாதானமும் பெண்ணே இன்றி பெறுவதுதான் எப்படி கலையா கணினியா இலக்கியமா இராணுவமா நாட்டுத் தலைமையா விண்வெளிப் புரட்சியா எங்கே இல்லை அவள் சொல்லுங்களேன் உயிரைச் சுமக்கும் ஒரே உயிர் உலகில் பெண்தானே? துவண்ட மனதுக்கு மடிதந்து தலைகோத ஒரு பெண்ணற்றுப் போயின் மனித இனம் மொத்தமும் சுடுகாட்டுப் பிணங்கள்தானே எல்லாச் சுகங்களும் எங்கும் கிடந்தாலும் ஒரு பெண்ணில்லா பூமியில் சிறு பொழுதேனும் நகருமா அந்தப் பூமியும் கூட ஓர் …

  16. பனி படர்ந்த வயல்களும் பசுமாட்டுத் தொழுவமும் பனம்பழம் பொறுக்கிய பனங்கூடலும் பசிமறந்து பட்டாம் பூச்சியாய் திரிந்த பள்ளிக்கூடக் காலமும்_இன்று பகலின்றி இரவின்றி பாதகனின் கொடுஞ்சிறையில் பசி போக்க வழியின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதவிக்கிறோம் அநாதைகளாய்... குண்டுமழை நடுவினிலும் குருதிமழை நடுவினிலும்_நின்று வெஞ்சமராடிய வேங்கைகளை வஞ்சகத்தால் கொன்றுவிட்டு நெஞ்சுரத்தோடு பேசுகிறான் வடக்கின் வசந்தமென்று..... பி.கு_ எனக்கு கவிதை என்ன என்பதே தெரியாது. இளங்கவி அண்ணாவின் கவிதைகள் ரொம்ப பிடிக்கும். அவருடன் கேட்கும் போது அவர்தான் கவிதை பற்றி சொல்லி எழுத ஊக்கம் தந்தார். எனது முதல் கவிதை இளங்கவி அண்ணாக்கே.

    • 13 replies
    • 1.9k views
  17. புத்தனின் போதிமரத்தில் தொங்கும் உடல்கள்! - வித்தகக் கவிஞர் ப. விஜய் இந்தியா வித்தியாசமான நாடு! உள்நாட்டுத் தொழிலாளர்களைப் பிச்சைக் காரர்களாக்கும்! வெளிநாட்டு முதலாளிகளைப் பணக்காரர்கள் ஆக்கும்! அமெரிக்கா விவரமான நாடு! வெளிநாட்டு தொழிலாளர்களை பிச்சைக் காரர்களாக்கும்! உள்நாட்டு முதலாளிகளைப் பணக்காரர்கள் ஆக்கும்! இலங்கை விபரீதமான நாடு! சவப்பெட்டிகளை தயாரித்து சமாதானம் பேசும்! சமாதானம் பேசிக் கொண்டே ஏவுகணை வீசும்! புத்தனின் போதிமரத்தில் - இன்று செஞ்சோலை சிறுமிகளின் உடல்கள் தொங்குகின்றன செஞ்சோலை வளாகத்தின் மேல் குண்டு வீசிப் பறந்தது விமானம் அல்ல சிங்கள ராணுவத்தின் மானம்! ஒரு ராணுவம் எதிரி ராணுவத்தை…

  18. Started by சுஜி,

    அன்பே நீ இருக்கும் போதுதான் எனக்கு உன் மனதில் இடம் தர வில்லை நீ இறந்த பிறகு ஆவது உன் கல் அறயில் ஆவது எனக்கு இடம் தருவயா?

  19. கிழக்கு வெளிப்பது எதற்காக? இரவின் யாத்திரை உரைப்பதற்கா? - பனிக் கதவின் கண்கள் திறப்பதற்கா? - ஒரு கனவின் மையல் முடிப்பதற்கா? - பல விழிகள் ஒளியைப் பெறுவதற்கா? கிழக்கு வெளிப்பது எதற்காக? உடுக்கள் ஓய்வு எடுப்பதற்கா? உதயன் கரங்கள் விரிப்பதற்கா? துடுப்பு ஊர்தி ஓய்வதற்கா? துறைகள் மௌனம் கலைப்பதற்கா? கிழக்கு வெளிப்பது எதற்காக? பாடும் பறவைகள் இசைப்பதற்கா? பாரும் அதனை இரசிப்பதற்கா? வாடும் உயிர்கள் புசிப்பதற்கா? - பல வர்ணம் உலகை வசைப்பதற்கா? கிழக்கு வெளிப்பது எதற்காக? உரிமை நிறைந்த போருக்கா? - கலி உக்கிரம் தணிக்கும் பேருக்கா? வறுமை அகற்றும் தீர்வுக்கா? - நீல வண்ணம் தீட்டும் வானுக்கா? கிழக்கு வெளிப்பது எதற்காக? கலைஞர…

  20. சாகத் துணிந்தவர் கூட்டம் சாகத் துணிந்தவர் கூட்டம், ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம். சாகத் துணிந்தவர் கூட்டம், ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம். வேகமுடன் பகை வீடு எரித்திடும் வீரப் புலிகளின் கூட்டம். வேகமுடன் பகை வீடு எரித்திடும் வீரப் புலிகளின் கூட்டம். சாகத் துணிந்தவர் கூட்டம், ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம், ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம். தூங்கிடும் கூட்டம் என்று எம்மை நினைத்தனர், வேங்கைகள் கூட்டமடா, தமிழ் வேங்கைகள் நாங்களடா. தூங்கிடும் கூட்டம் என்று எம்மை நினைத்தனர், வேங்கைகள் கூட்டமடா, தமிழ் வேங்கைகள் நாங்களடா. ஆண்டி பரம்பரையாக்கவோ எங்களை, ஆண்டி பரம்பரையாக்கவோ எங்கள் - ஆண்ட பரம்பரை நாங்கள் - ஈழம் ஆண்ட பரம்பரை நாங்கள், ஆண்ட பரம்ப…

    • 3 replies
    • 1.9k views
  21. கிழவியும் அவள் புருஷனும் - கவிதை கவிதை: கார்த்திக் நேத்தா, ஓவியம்: ஹாசிப்கான் மலை மாடு சாய்வதாய் வெளியில் சரிகிறது இரவு. முதுகில் ஒட்டிய மணல் உதிர்வது போல மழை விழுந்து கொண்டிருந்தது. அந்தி பத்திக் கொண்டு போகும் வெள்ளாட்டங்குட்டியாய் நிலவு. தூரத்துக் குடிசையில் விளக்கு விடும் எச்சில் முட்டையாக சுடர். சுடரின் விரிந்த கூந்தலாக சுற்றிலும் அலையும் இருள். பரதேசம் போன புருசனுக்காக பணியாரம் சுட்டு வைத்து வாசலில் செத்தக் குந்துகிறாள் கம்பூணிக் கிழவி. குளிரில் நடுங்கும் ஆட்டு வால் போல அவள் உதடு எதையோ முணுமுணுத்தது. சாராய கவிச்சியோடு வந்து சேர்கிறான் அவளின் புருஷன். கிண்ணியில் பணியாரம் அடுக்கித் தந்து விட்…

  22. Started by Athavan CH,

    தியாகம்.. கார்த்திகை பூ எடுத்து வாடா.! கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.! இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.! உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமரே..! உங்கள் 'உயிர்விலைக்கு' எது இங்கே ஈடாகும்? உமைக்கருவில் சுமந்த தாய் வயிற்றில் நெருப்பெரியும்..! அந்த நெருப்பினில் விடுதலைத்தீ மூண்டெரியும். ஆறடிக்குள் துயிலும் அற்புதங்களே-எங்கள் ஆணிவேரான ஆலமரங்களே..! வாழ்ந்தாலும் ம(வ)ரமாக... வீழ்ந்தாலும் விதையாக மாவீரன் மறைவதில்லை மாவீரம் அழிவதில்லை ஆண்டுக்கொருமுறையா உமை நினைக்கிறோம் இல்லை தீயெரியும் தேசத்தில் தினம் தினம் உம் நினைவும் சேர்ந்தெரியும். கல்லறைக்கு வருகையிலே கால் கூசும்-உமைக் கண்டவுடன் கட்டியணைத்து மெய் சோரும். மணியோசை க…

  23. தரையில் தமிழன் வீழ்ந்திட்ட நாள் இது அல்ல தன் நாடு மீட்க தன் உயிரை தமிழன் ஈய்ந்த நாள் இது மீண்டும் நாம் நிமிர்வோம் எப்போதும் நிமிர்ந்து நிற்போம் ஏகாதிபத்தியத்தின் எமாற்றலில் எமக்கானவை எல்லாம் இழந்தோம் தன் மானத்தை மட்டும் இழக்கவில்லை காத்திருக்கின்றோம் எம்மைக்கான காலம் வரும் வரை செருக்கிழந்து உருக்குலைந்து செல்வமெல்லாம் இழந்தபின்னும் சேர்ந்திடாதிருக்கிறோம் நாம் சேரும் நாளதனில் செழித்து வாழ்வோம் நாம் கொலைக்களங்கள் பல கண்டும் கொடுமைகள் நிதம்கொண்டும் அடிமைகளாய் வாழ மாட்டோம்.... விடுதலைத் தாகம் உண்டு... அதற்கான குரலும் உண்டு... கோழைகளாய் வீழ மாட்டோம்... …

    • 14 replies
    • 1.9k views
  24. Started by Tholan,

    அம்மா............... இப்பூமியில் நான் விழும் முன்னே, உன் பாசத்தை அறிந்தவன் நானே....அம்மா...! இவ்வுலகம் காணும் முன்னே, என்னை முதலில் அறிந்தவள் நீயே......அம்மா...! உன் கரு அறையின் இருளில் என்னை, நிம்மதியாகவும்,சீறாகாவும், உறங்க வைத்தவள்........நீ அல்லவா.......! அக் கருவில் நான் உட்கி கிடந்தபோதும், எந்த வசதியும் இல்லாத போதும், அக் கருவிலே பாதுகத்தவள் .......நீ அல்லவா......! உன் உயிர் துடிப்பின் தொப்புல் கோடியிலிருந்து...என்னை, உயிரோடு இப்பூமியில் ஈன்றவளே.......என் அன்னயே.....! உன் தூக்கம் துறந்து, என் உறக்கம் தந்தவளே...........என் தாயே......! உன் மடியில் உறங்கும் தருணம், அந்த வானத்தை கொண்டும், இப்பூமியை கொண்டும், அந்த நிலவை கொண்டும், அந்…

    • 4 replies
    • 1.9k views
  25. Started by கஜந்தி,

    ஏழையவன் பசியால் துடிக்க சீபோவென துறத்தி விட்டு துடிக்கம் ஏழை தனை ரசித்துக்கொண்டு கற்பனையுருவத்திற்கு பக்தியென்னும் உயிர் கொடுத்து தன் மனக்கல்லில் பதித்தான் மூடநம்பிக்கை பயத்தை பக்தியென்று.. புரணங்கள் புதைத்து அன்பை சிதைத்து ஆடம்பர வாழ்வை கடவுளுக்காய் கொடுத்து பக்தியென்னும் உச்சம் சொல்ல ஏழையவன் சிரிந்தான் படைத்தவன் தத்துவம் என்னிடத்தில் தீண்டாத ஜென்மங்களாய் நானிருக்க எத்தனை எத்தனை கற்பனைகள் இவ்வுலகில் கடவுளக்காய்....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.