Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கந்தகத்தூள் வாகனத்துடன் கலகலப்பாய் சென்றவரின் தூல உடம்பு சுக்கு நூறானது. விடுதலைத் தாகத்தால் வீறுகொண்டெழுந்து வெளியேறியது ஆன்மா காடு மேடெல்லாம் கடந்து களிப்புடன் மிதந்தது. எம்; மக்களைக் கொன்றவரை நான் கொன்றேன். என் இனம் விடுதலை பெறும் வரை நான் சாந்தியடையேன் என சபதம் எடுத்துச் சத்தியம் செய்தது. ராசபக்சாவின் இரத்தப் பிசாசுகள் முள்ளி வாய்க்காலை முற்றுக்கையிட்டு தமிழரின் இரத்தத்தால் தனக்குத் தானே அபிசேகம் செய்த வேளை பதபதைத்துத் தவித்து பற்பல ஆன்மாக்கள் கிழம்பின. எங்கள் தவிப்புப்போல், எங்களை அழித்தவன் தவிப்பான்; இதுதான் நியதி எனச் சாபம் போட்டு, துயிலும் இல்லத்தை சுற்றிய ஆன்மாக்களைக் கட்டித் தழுவி தங்கள் தவிப்பைக் கொ…

    • 0 replies
    • 594 views
  2. [size=1]இது தான் காதலா ..........[/size] [size=4]மணமேடையில் சமய முறைப்படி கட்டிய தாலி கழற்றி எறியும் உலகிலே கணவன் இறந்ததும் உண்டியலில் போட்டு அடுத்த கணவனை தேடிபோகும் காலம் இங்கே இருப்பினும் இது போன்ற காதலும் வாழ்கிறது நாட்டிலே [/size] [size=1]படமும் பகிர்வும் [/size]

  3. [size=5]மண்ணின் வாசனை,[/size] [size=5]மனதை நெருடுகின்றது![/size] [size=5]நினைவுகள் பின்னிப் பிணைந்து,[/size] [size=5]கண்ணாமூச்சி விளையாடுகின்றன![/size] [size=5]உப்புக் கலந்த காற்றின் நினைவில்,[/size] [size=5]நாசித் துவாரங்களின் அடைப்புக்களும்,[/size] [size=5]விலகி வழி விடுகின்றன![/size] [size=5]ஏனிந்தப் பிணைப்பு என்பதை,[/size] [size=5]அறிய மனது துடிக்கிறது?[/size] [size=5]அந்த மண்ணின் நினைவில்,[/size] [size=5]உடம்பின் உழைவுகள் கூட,[/size] [size=5]ஒவ்வொன்றாய் விடை பெறுகின்றன![/size] [size=5]காலைப் பொழுதின் புதுமையில்,,[/size] [size=5]கெக்கலித்துச் சிரிக்கும் பறவைகளே![/size] [size=5]உங்கள் கீதங்களில் உயிர்ப்பு இல்லை![/size] [size=5]எங்கள் குயில…

    • 40 replies
    • 3.5k views
  4. அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! வசதியாகத்தான் இருக்கிறது மகனே… நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம் பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது! முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்! இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் …

  5. Started by meelsiragu,

    அ ஃ றினை [size=3] படுக்கை விரிப்பு[/size][size=3] சரி செய்யப்பட்டு விட்டன[/size][size=3] மற்ற வாசனை திரவியங்கள்[/size][size=3] எல்லாம் சரியாக பரந்து உள்ளன[/size] [size=3] குளியல்களை இருவரும்[/size][size=3] சரி செய்து விட்டோம்[/size][size=3] பிறகு என்ன[/size][size=3] என்ற பொழுதில்[/size] [size=3] ஒரு அழைப்பு அவளுக்கு[/size][size=3] பொறுமையுடன் நான் பால்கனியில்[/size][size=3] நேரம் ஆக ஆக[/size][size=3] பற்ற வைத்த சிகரெட்[/size] [size=3] அழைப்பை அணைத்து விட்ட[/size][size=3] அவளுக்கு சிகரெட் நெடி[/size][size=3] மூச்சை முற்ற[/size][size=3] ஆஸ்பத்திரிக்கு அவளும்[/size] [size=3] பாருக்கு நானும்[/size][size=3] என்று கழிந்தது[/size]…

  6. Started by meelsiragu,

    [size=3] கவிதை அல்ல...![/size] [size=3] பேப்பரும் ரெடி[/size][size=3] பேனாவும் இருக்கிறது[/size][size=3] நல்ல சாய்வு நாற்காலியில் தான் உள்ளேன்[/size][size=3] பக்கத்தில் சூஸ் இருக்கிறது..![/size] [size=3] இடது பக்கம் சாம்பல் கிண்ணம்[/size][size=3] அதன் அருகில் சிகரெட்[/size][size=3] மற்றும் போத்தல்[/size][size=3] சோடா...தண்ணீர் கூட இருக்கிறது...[/size] [size=3] என்னை சரி செய்து கொண்டு[/size][size=3] துண்டை போர்த்திய படி[/size][size=3] முகட்டை நோக்கிய சிந்தனைகளுடன்[/size][size=3] பிள்ளையார் சுழி கூட போட்டு விட்டேன்...[/size] [size=3] பறவைகளின் இடைவிடாத கூக்குரல்[/size][size=3] காதுகளை துளைக்கும் சிள்வண்டுகள்[/size][size=3] தவளைகளின் க…

  7. Started by meelsiragu,

    [size="2"]அன்றும் இன்றும்[/size] [size="2"]கூடி கூடிப் [/size] [size="2"]பேசினார்கள்[/size] [size="2"]எப்பொழுது [/size] [size="2"]பிரிவோம் [/size] [size="2"]என்று...![/size] [size="2"]எதிர் எதிர் [/size] [size="2"]பேசுகிறார்கள் [/size] [size="2"]எப்பொழுது [/size] [size="2"]ஒன்றாவோம் [/size] [size="2"]என்று.[/size] [size="2"]சங்கிலிக்கருப்பு[/size]

  8. " இப்பொழுது நாங்கள் இல்லை...! உங்களுக்குத் தொல்லையில்லை...!!" செத்துப்போ என்று தள்ளிவிடப்பட்ட தரித்திரங்களின் குழந்தைகள்! இத்தனை நாளும் பக்கமிருந்து அல்லல் கொடுத்த தொல்லைகள்! சேர்த்துவைத்த செல்வங்களை வாரிச் சுருட்டிய பிடுங்கிகள்! செங்குருதி தெளித்து வல்லூறுகளை வரவழைத்த வல்லூறுகள்! வீணான ஒன்றுக்காய் வில்லாடிய வீணர்கள்! மண்ணோடு மண்ணாக குடியழித்த கொடூரர்கள்! தீவிரவாதிகளென தீர்ப்பெழுதப்பட்ட தீராத போர்வெறி வியாதிகள்! முப்பதாண்டு காலமாய் முன்னேறவிடாத தடைக்கற்கள்! அப்பாவிப் பிஞ்சுகளை பலிகொடுத்த பாவிகள்! சாதிப்போம் என்று சொல்லி சாகடித்த சனியன்கள்! இப்படியெல்லாம் எங்களைத் திட்ட, நிறைய வார்த்தைகள் இருக்கும் உங்களிடம்!!! …

  9. நாட்கள் பத்தும் நம்மைத் தாண்டியது [size=4]நாடி நரம்புகளும் ஓயத் தொடங்கியது[/size] [size=4]நாதியின்றி இதயம் மட்டும் இயங்கியது[/size] [size=4]துளித்துளியாய் உன் இரத்தம் அடங்கியது[/size] [size=4]நல்லூர் கந்தன் பவனி வந்த வீதியிலே [/size] [size=4]அலையாய் வந்த மக்கள் வெள்ளத்திலே[/size] [size=4]சிலையாகி நின்றேன் _ நான்[/size] [size=4]உனைப் பார்க்கையிலே [/size] [size=4]சிந்தியது கண்ணீர் வெள்ளம் [/size] [size=4]உருகியது உன்னருகில் மக்கள் வெள்ளம்[/size] [size=4]ஒலித்தது ஈழப்பாடல் ஒன்று[/size] [size=4]மரணித்த வீரா உன் ஆயுதத்தை எனக்கு தா[/size] [size=4]உன் ஆடையையும் எனக்கு தாவென்று[/size] [size=4]இன்றும் ஒலிக்கின்றது [/size] [size=4]உடல்[/size]…

  10. Started by சொப்னா,

    அக்காங்களா அண்ணனுங்களா!! இது என்னோட முதல் கவிதைங்க :) . ரெம்ப பயமா இருக்குங்க என்ன சொல்லவீங்களோன்னு :( . என்னோட கவிதய படிச்சு பாத்து கொமன்ஸ் குடுங்க ஓக்கேயா?? சொப்பனா ஜூட் . தமிழ் மீது மையல் கொண்டே தட்டுத் தடுமாறித் தடுக்கி விழுந்தே முதல் கவி பாட வந்தாள் சொப்ப (னா )ன சுந்தரி யாழ் களத்தில். பல வித்தகர் கண்ட களத்தில் பவ்வியமாகவே பா படிப்பேன் , இரவல் கொடுங்கள் உங்கள் செவியிரண்டையும் . சொல்லில் சிறுபிள்ளை நான் சொற்குற்றம் கண்டால் , செருப்பால் அடிக்காதீர் சொப்பனாவை...... பெண்ணுக்கு பெண் எதிரி நிலை மாற வேண்டும்! பெண்ணை ஆண்கள் மதிக்க வேண்டும்! அன்பால் கொண்ட திருமணம் வாழவேண்டும்! பணத்தால் கொண்ட திருமணம் அழியவேண்டும்! தீண்டாமை தீ…

  11. [size=3]அட[/size] [size=3]யாருங்க இப்ப [/size] [size=3]சாதி பார்க்கிறா?"[/size] [size=3]"ஆமா![/size] [size=3]யாரு இப்ப [/size] [size=3]சாதி பார்க்கிறா!!"[/size] [size=3]சங்கட மடத்துக்கு [/size] [size=3]அக்னி கோத்திரம்[/size] [size=3]சைவ மடத்துக்கு [/size] [size=3]பிள்ளைவாள் மாத்திரம்[/size] [size=3]பேரூருக்கு [/size] [size=3]வெள்ளாளக் கவுண்டர்[/size] [size=3]கோவிலூருக்கு [/size] [size=3]நாட்டுக்கோட்டைச் செட்டி[/size] [size=3]சாமித்தோப்புக்கு [/size] [size=3]நாடார் அய்யா[/size] [size=3]"அட[/size] [size=3]யாருங்க இப்ப [/size] [size=3]சாதி பார்க்கிறா?" [/size] [size=3]"ஆமா![/size] [size=3]யாரு இப்ப [/size] [size=3]சாதி பார்க…

  12. [size=4]திலீபனிற்கு தீபம் ஏற்றுவோரே பார்த்தீபனின் பாதம் தொழுவோரே ஈகச் சிகரத்திற்கு மாலை தொடுப்போரே அதிசய வள்ளலுக்காய் கசிகின்ற நெஞ்சோரே மனதிலேற்றுங்கள்... எங்கள் பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்[/size] [size=4]சிறுகச் சிறுகச் சேர்த்து நிமிரக் கட்டிய மனையும் உயிரைப் பிரியும் பொழுதில் தந்தை உயிலாய்த் தந்த வளவும் இன்பம் பெருகப் பெருக நாங்கள் ஓடித்திரிந்த தெருவும் உள்ளம் உருக உருகக் கண்ணீர் விட்டுப்பிரிந்த ஊரும் திரும்பக் கிடைக்கும் காலம் வரைக்கும், எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான்[/size] …

  13. Started by Sembagan,

    [size=5] இயற்கை அழகி [/size] காட்டுக்குப் போனாலும் அவள் நினைவு கடலுக்குப் போனாலும் அவள் நினைவு தோட்டத்துக்குப் போனாலும் அவள் நினைவு துரத்துதே எப்போதும் அவள் நினைவு துள்ளிவரும் மானில் அவள் கண்கள். தோகைமயில் நடக்கயிலே அவள் சாயல் பேசும் கிளிமொழியில் அவளின் குரல் பேதையாய் அலைக்குதே என மனதை. மூழ்கி முத்தெடுத்தால் அவள் பற்கள் முன் கிடக்கும் சங்கோ அவள் கழுத்து புடர்ந்து நிற்கும் பவளத்தில் அவள் உதடு பார் மோதும் அலைபோலே என் நெஞ்சு. வெண்டைக்காய் தொடுகையிலே அவள் விரல்கள் வெண் புடலங்காய் பார்த்தாலே அவள் உருவம் பூசணியும் செவ்விழநீரும் பின்முன் அழகுசொல்ல பூரிப்பால் துள்ளுதே என் உள்ளம் நான் மட்டும் அவள் நினைவில் மிதக்கின்றேன். அவள…

  14. [size=5]விதையாகிப் போன நம் வீரத்தியாகிகளே,[/size] [size=3][/size] [size=3][size=4]தன்னை உருக்கி –இத் தரணிக்கு ஒளி கொடுக்கும் சுடர்போல் தமிழ் தாயவளின் உறவுகள் வாழ விதையாகி போன நம் விடுதலையின் வீரத்தியாகிகளே கார்த்திகை இருபத்தி ஏழு மட்டுமல்ல காலமெல்லாம் உம்மை கைதொழுவோம் நாம்[/size] [size=4]அடக்குமுறை, ஒடுக்குமுறை அதிகரிக்க அதிகரிக்க அமைதிக்கு பெயர் பெற்ற அழகிய நம் தேசம் வனப்பிழந்து வாடுவது தாங்காமல் –புது வலிமையுடன் புறப்பட்ட வாலிப நெஞ்சங்களே, கரத்தில் கனலுடனும் மனத்தில் அனலுடனும் களமாடி பகை வெல்ல புறப்பட்ட தோழர்களே, வெற்றி மேல் வெற்றியாக பல வெற்றிகள் எமக்கீந்து வெஞ்சமரில் உயிரீந்த மாவீரர்களே, வாசனை வீசிடும் வாலிப வயதினிலே வளர்…

  15. [size=5]" ஈழ மரத்தடித் தேனீ "[/size] [size=5][/size] வாடி விழுந்த பூவுக்குள் சிறுதேனீ தேன்குடிக்க முயல்கிறது! தேடி வைத்த தேன்கூடு ஏதுமன்றி தனிமையில் காய்கிறது! செத்து விழுந்த சருகுகளுக்குள் சில காலூன்றி எழும்பி விழுகிறது! பறக்க முனைந்து பாதி சிறகுகளை வலிய விரித்து தவழ்கிறது! பல்லிகளுக்கும் ஓணான்களுக்கும் அழையா விருந்து நடக்கிறது! ஆடிப்பாடி பறந்து திரிந்த கூட்டம்… சிறுகச் சிறுக வருடங்களாய் சேர்த்து வளர்த்த தேன்வதை… ரீங்காரத்தோடு நிமிர்ந்து நின்ற கூடு… யாருடைய அகங்காரத்தால் வதைபட்டு அழிந்ததுவோ…? நன்றி : கவிதையின் கவிதைகள்

  16. விடியல் விரியும் உன் தோழமைப் பேச்சு இவ்வளவு விரைவில் சுருங்குமென்று எவரும் எதிர்பார்க்கவில்லை..! உன் அரிமா மூச்சு இத்தனை முந்தி அடங்குமென்று எள்முனை அளவும் நம்பவில்லை..! செங்கொடியில் ஆடிய உன் உயிர்க்கொடி நின்று போனது கடைசி நொடி..! தத்துவ நூல்களைப் படி..படி..எனத் தரமான நூல்களை தந்தாய் தொடர்ந்தபடி..! உன் தடம் பார்த்து நாங்கள் இனி நடப்பதுதான்...எப்படி..? இரும்பை உருக்கிய எக்கு நெஞ்சம் தோழமை உறவுகளைத் தூக்கிச் சுமந்த மார்பு..! சிவா...சிவா...! எல்லோருக்குமே சிவா போல...ஆக அவா...! எப்படி மறப்போம் தோழனே..! முறுக்கேறிய முரட்டுக் காளை நீ...! இருட்டைப் போர்த்திய …

  17. [size=5]எந்தன் வாழ்வு உங்கள் கையில்…[/size] முடியாட்சி அதிகாரதில் முடங்கிய நான் குடியாட்சிக் காலத்தில் குதூகலமடைந்தேன் ஆதிக்க வெறியர் அதிகாரம் ஓங்க ஆளுமையிழந்து அவதிப்பட்டேன். இலங்கைக்கு வந்த அன்னியர் பிடிக்க இழுபட்டுத் தவித்தேன் பல காலம் இனத்துவேசிகளிடம் அவர் விட்டுச் செல்ல இன்னல்கள் பட்டேன் சில காலம் நாடுகள் தோறும் புரட்சிகள் ஓங்க நானும் அங்கே மறுபிறவி எடுத்தேன் விடுதலை என்று நாமம் சூட்டி விருப்புடன் என்னை வளர்த்தனர் மக்கள். சுயநலம் காத்து அரசியல் பேசியோர் சுதந்திரமென்று கோசமிட்டார்கள் தமிழீழம் என்று பெயரை வைத்து தரணியிலே அவர்தம் புகழ் சேர்த்தார்கள். உணர்வுள்ள தொண்டர்கள் ஒருசிலர் சேர்ந்து உணர்ச்சியுடன் என்னைத் தத்தெடு…

  18. அமைதியின் நிழல் மரணம் கொன்றடக்கப்படும் ஆயுதமாகும் பொழுது யார் யாரோ போராடத் தொடங்குகிறார்கள் சனங்கள் அமைதியின் நிழலை இப்பூமியில் என்றாவது ஒரு நாள் மீளவும் உருவாக்குவார்கள் இருள் கவிழந்த பொழுதில் இந்த வார்த்தைகளை எழுதி வைக்கிறேன் உனது போரைத் துடைத்து அதிகார நிழலை அடித்து விரட்டுகையில் இப்பூமியில் வெளிச்சம் படரும் இரத்தமும் காயமும் இல்லாத பூக்கள் பூத்துக் கொட்டும் அமைதியின் நிழலைப் பார்க்காது முடிக்கிறது இந்தக் காலம் அது எவ்வளவு அழகாயிருக்கும்? http://deebam.blogspot.in/2011/10/blog-post_05.html

  19. [size=5]குரலிழந்த குயில்கள்.[/size] கூடித் திரிந்த குயில்கள் குதுகலமாய் பறந்த குயில்கள் பார்த்துச் சிரித்த குயில்கள் பாசமாய்ப் பழகிய குயில்கள் வீறுநடைபோட நாங்கள் வியப்பாகப் பார்த்த குயில்கள் காடுமேடெல்லாம் கம்பீரமாய் திரிந்து வீட்டுக்கும் நாட்டு;க்கும் வியத்தகு சேவை செய்து சுதந்திரதாகம் பற்றி சுருதிமாறாமல் பாடியகுயில்கள்;. வல்லாதிக்க வஞ்சகர்கள் வலைவிரித்து வீழ்த்தியதால் வாழ்விழந்து வலுவிழந்து வனப்புமிகு சிறகிழந்து காலிழந்து கருத்துமிழந்து கனத்த மனத்துடனே கூவும் குரலும் இழந்து கூட்டுக்குள் அடைபட்டு வாடித் தவிக்கின்றனவே வதைமுகாம் நடுவினிலே… பார்ப்பாரும் இ;லை கேட்பாரும் இல்லை தேசியச் சொத்துக்கொண்டோர் கூட திரும்பியும் பார…

  20. தாரிலும் சுண்ணாம்பிலும் குறியிட்டு செத்த கிளுவங் கதியாலிலும் பனைமட்டை வேலி இடுக்கிலும் கொழுவிவைத்த மூக்குப்பேணியெல்லாம் ஒரே உலோகத்தினால் ஆனவைதான். திசைகள். வடக்கென்றும், கிழக்கென்றும் என்னதான் கதியால் போட்டுக் கூத்தாடினாலும் ஆண்ட பரம்பரை மகுடக் கனவு எல்லா தரப்புக்கும் அழிந்து போகாதவைதான். யாழாதிக்க வசந்தமும் கிழக்கு மேட்டின் முல்லையும் ஏகபோக ஆளுகையின் வெண்புறாவும் கறுப்பு வெள்ளைக் காலத்துக்கும் முன், வெளியிலாடிய வட்டக்களரி, வரப்பிலாடிய கும்மி, கோல், அலையில் பாடிய அம்பா காலத்துக்கு முன்பிருந்தும் இன்றைய உய்யிலாலா வண்ணங்கள் வரை ஒரே தோலினாலானவைதான். வசந்த முல்லை போலே வந்து எத்தனை புறாக்கள் சதிராடினாலும், நடை மாற்றினாலு…

  21. ( படம் முகநூல் ) இன்பத்துக்கும் துன்பத்துக்கும் வித்தியம் தெரியாத விடலைக் குழவி நான் . இயற்கை அன்னை அள்ளித் தெளித்த அகண்ட நீர்வீழ்சியில், இன்று நான் பட்ட இன்பம் என் வாழ்வில் கண்ட முதல் இன்பம் . அம்மாவும் அப்பாவும் எனக்கில்லை இயற்கையே எனக்கு அம்மா . அவள் மடியில் செல்லக் குழவி நான் . என்ற போதிலும் !!!!!!!!! மனிதன் கையில் நான் பட்டால் என் இன்பம் தொலைந்து விடுமே !!!!!!!!

  22. Started by துளசி,

    இதயம் பட படவென துடிக்கிறது பெண்ணே நெருங்கிடவேண்டும் உன் நிழலையாவது நான் பார்த்திட வேண்டும் .. காலம் கடந்து விட்டது காத்திருக்க நேரமில்லை கனவுகள் கலைந்து போனாலும் நினைவுகளை நிலைக்க விடமாட்டேன் என் சுவாசம் சிறைபடும்முன் உன் வாசத்தில் நானும் வசப்பட வேண்டும் உன் பார்வை கணைகளால் நான் ஊனமாக வேண்டும் ... உன் இதழ் தரும் தீண்டல்களே அதற்கு மருந்தாக வேண்டும் ... மஞ்சமாக மலர் நீயும் மடி தரவேண்டும் தஞ்சமாக நானும் அதில் தலை சாய்க்க வேண்டும் உன் மார்போடு முகம் புதைத்து நான் அழ வேண்டும் மலர் உந்தன் கைகள் எனைத் தழுவ வேண்டும் என்றுமே என்னவளாய் நீ இருக்க வேண்டும் ... உனை பிரியும் நாள் அன்…

  23. Started by Sembagan,

    புரியாத ஏக்கம்… என் கண்கள் அவனையே கூர்மையாக நோக்கின… வாட்ட சாட்டமான உடல் ஆடை அணியும் அழகாகத் தெரிந்தன. ஆனால்… அவனின் செயற்பாடு… அவன் போடும் சத்தம்… என்னைத் திடுக்கிட வைத்தது… இந்த வயதில்… இப்படியான தோற்றத்தில்… இப்படி ஒரு நிலையா! கடவுளே!!! ஊரில்… மருத்துவ வசதியிலாத இடத்தில்… பொருளாதர பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழும் மக்களிடையே… ஒரு சிலர்தான் இப்படியான நிலையில்… தனிமையிலே கதைப்பார்கள்… தனிமையிலே சிரிப்பார்கள்… தன்பாட்டிலேயே துள்ளிக் குதிப்பார்கள்.… ஆனால்… இங்கே …. எல்லா வசதிகளும் உள்ள மருத்துவ வசதி மிக்க நாட்டில்… அவர்களைப்போல்தான் இவர்களுமா?; ஒரு நேரத்தில் எத்தனை பேர்! சனத்தொகை வீதத்தில்… எ…

    • 6 replies
    • 1k views
  24. பெட்டி நிறைய பணம் இருந்தும் பெருமூச்சு விட்டு காத்திருக்கிறாள் அக்கா.. அழகும் அறிவும் இருந்தும் கண்ணீரோடு காத்திருக்கிறாள் பக்கத்து வீட்டு தோழி.. 'தோசம்' எனும் மூடநம்பிக்கையும் 'சீதனம்' எனும் சம்பிரதாயமும் அழியும் வரை வீட்டுச் சிறையில் காத்திருக்கும் கன்னிப் பறவைகளாக பெண்கள்... http://pirashathas.blogspot.fr/

  25. கரடிக் குகை (Bärenhöhle) இயற்கை என்னும் சிற்பி செதுக்கி வைத்த சிற்பங்கள். காலங்கள் பல கடந்தும் கண்கொள்ளாக் காட்சி. பானை அடுக்கியதுபோல் கொஞ்சம் பவளப்பாறைகள்போல் கொஞ்சம் தொங்கும் அழகுவிளக்குகள்போல் கொஞ்சம் தோரண மாலைகள்போல் கொஞ்சம் ஆலம் விழுதுகள் போல் கொஞ்சம் ஆவின்பால்மடிபோலே கொஞ்சம் கோபுர கலசம்போல் கொஞ்சம் கொடிமரம் அமைத்ததுபோல் கொஞ்சம் சுயம்புலிங்கங்கள் சுற்றி அமர்ந்திருக்க சிற்பக் கோயில்களைச் சிறிதாக அமைத்ததுபோல் பார்க்குமிடங்களில் பளிச்சிடும அருங்காட்சி. இருபது மீற்றர் ஆழத்தில் இருநூற்றித் தொண்ணு+ற்றி இரண்டு மீற்றர் நீளத்தில் புத்தொன்பது மீற்றர் அகலத்தில் பல இலட்சம் வருடங்களுக்கு முன் பளபளக்கும் கல்லுகளால் பாதாளத்தில் அமைந…

    • 9 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.