Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. அஜீத்துடன் ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் - ஹன்சிகாவுக்கு ஆசை! [saturday 2014-09-20 15:00] அஜீத்துடன் ஜோடி சேர ஆசைப்படுவதாக ஹன்சிகா கூறினார். தமிழ், தெலுங்கில் ஹன்சிகா முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் விஜய், சூர்யா, ஆர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம்ரவி, கார்த்தி, உதயநிதி போன்றோருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். ஆனால் இதுவரை அஜீத்துடன் நடிக்கவில்லை. அஜீத்துடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது முன்னணி நடிகைகளின் கனவாக இருக்கிறது. இதில் பல நடிகைகளின் ஆசை நிறைவேறிவிட்டது. நயன்தாரா, திரிஷா, தமன்னா, அசின் உள்ளிட்ட பலர் ஜோடியாக நடித்து விட்டனர். தனக்கும் அஜீத் ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது என்று ஹன்சிகா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியி…

  2. கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? அ அ மிஷ்கின் படத்தில் குத்துப்பாட்டு என்றாலே மஞ்சள் சேலை என்று முடிவுக்கு வந்துவிடலாம். யோசித்துப்பார்த்ததில் கிளாமர் பாட்டுகள் பலவற்றில் மஞ்சள் சேலை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அதையும் தான் ஆராய்ச்சி செஞ்சிப் பார்த்திடுவோமே... இந்த மஞ்சள் மேனியா பாலிவுட்டில் 80களின் துவக்கத்திலேயே ஆரம்பித்து விட்டது. அனில் கபூருடன் மாதுரி தீட்ஷித் ஆடிய 'தக் தக்’ பாடலை மறக்க முடியுமா என்ன? மிஷ்கினுக்கு இந்த விஷயத்தில் பாலிவுட் முன்னோடிகள் அக்‌ஷய் குமாரும் அனில் கபூரும். பெரும்பாலும் தாங்கள் நடிக்கும் படங்களில் ஹீரோயினை மஞ்சள் புடவை கட்டவைத்து மழையில் ஒரு ரொமான்ஸ் பாடல் நிச்சயம். உதாரணத்துக்கு ரவீனா டாண்டனுடன் அக்‌ஷய் ஆடிய 'டிப் டிப் பர்…

  3. காக்கிச் சட்டை மீது வெறுப்போடு இருக்கும் ஹீரோ, பின்னர் காவல் துறையில் சிகரம் தொடும் அதே போலீஸ் கதை! கடமை தவறாத போலீஸ் சத்யராஜ். குழந்தை பிறந்தவுடனேயே அவனுக்கு கற்பனையில் போலீஸ் யூனிஃபார்ம் மாட்டி ரசிக்கும் அளவுக்கு காவல் துறை மீது அவருக்குக் காதல். ஆனால் மகன் விக்ரம் பிரபு, அப்பாவுக்காக போலீஸ் வேலையில் சேருவதுபோல நடிக்கிறார்; திடீர் திருப்பத்தில் போலீஸும் ஆகிவிடுகிறார். ஒரே மாதத்தில் வேலையில் இருந்து விலகிவிடலாம் எனத் திட்டமிட்டிருக்கும்போது, ஏ.டி.எம் கொள்ளையர்கள் பற்றிய வழக்கு விக்ரம் பிரபுவிடம் வருகிறது. அது, அவர் உடலில் போலீஸ் யூனிஃபார்மை எப்படி கவசகுண்டலம்போல ஒட்டவைக்கிறது என்பதுதான் மீதிக் கதை! காதலும் காக்கியும் கலக்கும் 'காக்கிச் சட்டை போட்ட மச்சான்’ வகைக் கதைதான…

  4. சென்னை: பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் சென்னையில் இன்று காலமானார். 45 வயதான இசைக் கலைஞர் ஸ்ரீநிவாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் இன்று காலை 9.30 மணிக்கு காலமானார். ஆந்திர மாநிலம் பாலகோலில் 1969 பிப்ரவரி 28 ஆம் தேதி பிறந்த ஸ்ரீநிவாஸ், பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். http://news.vikatan.com/article.php?module=news&aid=32536

  5. தமிழ் சினிமாவைப் பற்றி யார் பேசினாலும் ‘அவள் அப்படித்தான்’ படத்தைப் பற்றிப் பேசிவிடுகிறார்கள். இரண்டே படங்களை எடுத்துவிட்டு, தமிழ் சினிமா சரித்திரத்தில் இவ்வளவு அழுத்தமாகப் பெயரைப் பதித்துக்கொண்ட இயக்குநர் ருத்ரய்யா ஒருவர்தான். 1978-ல் வெளிவந்த படம் இது. படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே கமலும் ரஜினியும் வெற்றியின் ஏணியில் வேகமாக ஏறிக் கொண்டிருந்தார்களாம். ஸ்ரீப்ரியாவும் டாப்தான். ஆனால், இந்தப் படத்துக்கு மூவரும் சம்பளம் வாங்கினார்களா என்று தெரியவில்லை. அதனால், இந்தப் படத்துக்கு கால்ஷீட் என்றெல்லாம் எதுவும் இல்லை. ஓய்வு கிடைக்கும்போது வந்து நடித்துவிட்டுப்போயிருக்கிறார்கள். மூவருக்கும் படத்தின் கதை மீது அவ்வளவு நம்பிக்கை. ஸ்ரீப்ரியா ஏற்றுக்கொண்ட மஞ்சு என்ற கேரக்டர்,…

  6. விரைவில் திருமணமாம் - புதிய வாய்ப்புகளை தட்டிக்கழிக்கும் அனுஷ்கா! [Wednesday 2014-09-17 22:00] அனுஷ்காவுக்கு முப்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்னவோ உண்மைதான். ஆனால் முன்னெப்போதையும் விட இப்போதுதான் கவனமாக அதற்கேற்ற மாதிரி கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிப்புக்கு தீனிபோடுவது போல தொடர்ந்து சரித்திரப்படங்களாக அவரைத்தேடி வருகின்றன. ஏற்கனவே. தெலுங்கில் குணசேகர் இயக்கத்தில் ‘ராணி ருத்ரமாதேவி’ என்ற படத்திலும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ‘பாஹுபாலி’ என்ற சரித்திர படத்திலும் நடித்து வருகிறார் அனுஷ்கா. இதுதவிர சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக ‘லிங்கா’ மற்றும் அஜித்துக்கு ஜோடியாக அவரது 55வது படங்களில் நடித்துவருகிறார். இந்தப்படங்களுக்குப்பின்..? நிச்சயமாக டு…

  7. பத்து சதவீதம் மட்டுமே மூளையை பயன்படுத்தும் மனிதன் நூறு சதவீதம் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்னும் கற்பனையே லூசி. ஜாலியாக பார்ட்டி, பாய் ஃப்ரண்ட் என சுற்றி வந்த லூசியிடம் ஒரு பெட்டியை கொடுத்து ஒருவரிடம் ஒப்படைக்கும் படி வற்புறுத்துகிறார் லூசியின் பாய் ஃப்ரண்ட்.ஹோட்டல் வாசல் வரைக்கும் வந்து விட்ட நீயே அதை செய்யலாமே என கேட்க வற்புறுத்தி பெட்டியை லூசியின் கைகளில் மாட்டி விடுகிறார் நண்பர். பெட்டியை கொடுத்தால் வேலை முடிந்து விடும் என நினைத்த லூசியின் கண் முன்பே பாய் ஃப்ரண்ட் சுட்டு கொல்லப்பட்டு, அதே இடத்தில் லூசியும் அந்த மர்ம கும்பல் கையில் சிக்குகிறாள். லூசியை சக்திவாய்ந்த போதைபொருள் கடத்த பயன் படுத்துகிறது மர்ம கும்பல், வயிற்றில் போதைபொருள் பாக்கெட்டுகளை வைத்…

  8. வில்லன் ராஜபக்ச: பட்டையை கிளப்புகிறது கத்தி! கத்தி படம் தொடர்பாக தமிழ் அமைப்புகளுடன் பேச தயார், எனக்கும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது என லைகா படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் கரண் அல்லிராஜ், சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். துப்பாக்கி படத்திற்கு பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ”கத்தி”. விஜய் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். லண்டனை சேர்ந்த லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய்யின் சமீபத்திய படங்ளை போன்று ”கத்தி” படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தமுறை கிளம்பியிருக்கும் எதிர்ப்பு சற்று சிக்கலானது. அதாவது படத்தை தயாரித்திருக்கும் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரண் அ…

  9. நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (15:36 IST) நடிகர் கமலஹாசன் இன்று காலை 11 மணி அளவில் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரம்பியல் பிரிவு மருத்துவர்கல் அவருக்கு பரிசோதனை செய்தனர். பின்னர் அவருக்கு நரம்பு கோளாறு தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். கமலஹாசன் தொடர்ந்து சில நாட்கள் நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்தது. தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றதால் அவருக்கு நரம்பு தொடர்பான …

  10. தனி விமானம் மூலம் சென்னை வந்தார், நடிகர் அர்னால்ட் ( படங்கள்) "ஆஸ்கர் பிலிம்ஸ்' நிறுவனத்தின் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருள் செலவில் உருவாகி வரும் படம் "ஐ'. விக்ரம், எமி ஜாக்சன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக படப்படிப்பில் இருந்துவரும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திங்கள்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்று ஆடியோவை வெளியிடுகிறார் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். இதற்காக ஹாங்காங்கில் இருந்து தனி விமானம் மூலம் இன்று திங்கள்கிழமை காலை சென்னை வந்தார் அர்னால்ட்.…

  11. நடிகை ரோஜாவை கத்தியால் கிழித்த மர்ம நபருக்கு வலை வீச்சு! [saturday 2014-09-13 20:00] ஆந்திர மாநிலம் நகரியில் கங்கை அம்மனை கொண்டாடும் வகையில் ‘ஜாத்திரை திருவிழா’ ஆண்டு தோறும் நடப்பது உண்டு. ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த விழாவில் நேற்று கிராம தெய்வமாக வணங்கப்படும் தேசம்மா, ஓடு குண்டலம்மா வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள ஈஸ்வரன் கோவிலில் 2 அம்மனையும் அலங்கரித்து வீதி வீதியாக ஊர்வலமாக எடுத்து வருவார்கள். விடிய விடிய இந்த வீதி உலா நடைபெறும். விழாவில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா கலந்து கொண்டார். இதற்காக அவர் 500 பெண்களுடன் சீர்வரிசை தட்டு ஏந்தி கோவிலுக்கு சென்றார். 2 அம்மனுக்கு அணிவிக்க விலை உயர்ந்த பட்டுப்புடவையை நடிகை ரோஜா சீர் தட்டில் எடுத்துச் சென்றார். இதி…

  12. தமிழக முதல்வரை சந்திக்க விரும்பும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சென்னையில் வரும் 15ஆம் தேதியன்று பிரபல டைரக்டர் ஷங்கர் இயக்கியுள்ள 'ஐ' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதன் சிறப்பு விருந்தினராக பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னருமான அர்னால்ட் ஷ்வாஸ்நெகர் கலந்துகொண்டு ஆடியோவை வெளியிடுகின்றார். தமிழக முதல்வரைப் பற்றிக் கேள்விப்பட்ட அர்னால்டு ஷ்வாஸ்நெகர், அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்து அவரது குழுவின் மூலம் தலைமைச் செயலகத்திற்கு ஒரு கோரிக்கையை அனுப்பியுள்ளார் என்று 'ஐ' படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனிடையில், இந்தியாவின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த்தும் இந்த விழாவில் கலந்துகொள்ள சம்மதித்த…

  13. வணக்கம் அண்ணா.. நான் மஹாவிஷ்ணு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை மகிழ்விக்கும் நகைச்சுவை கலைஞன்.. உங்கள் புகழ் ஊரெங்கும் பேசப்பட, நான் தங்களை புகழ விரும்பவில்லை. அமரகாவியம் என்னுள் ஏற்படுத்திய நெருடல்களை உண்மை குறையாமல் பரிமாறிக்கொள்ள விழைகிறேன்.. * எத்தனை முறை ரீடேக் போனது, இல்லை எவ்வளவு முறை வசனங்கள் மாற்றப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் உங்களால் எழுதப்பட்ட வசனங்கள், நீங்கள் வசனங்களை திரையில் உபயோகப்படுத்திய விதம் அனைத்தும் இதுவரை நான் திரையில் கண்டிராதது ! அவ்வளவு ஆத்மார்த்தமாக இருந்தது, காணும்போதே கதாபாத்திரங்களின் மீது ஆழமான மரியாதையை ஏற்படுத்தியது.. * நடிகர் நடிகைகளை நடிக்க தேர்வு செய்வதில் “ஜீவா” ராஜதந்திரன் என்பதை நிரூபித்து விட்டீர்கள். காரணம், கதாநாயகன் ச…

  14. பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே வாழ்க்கை படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சுயசரிதை திரைப்படமாகத் தயாராகின்றது. இந்தப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஹாலிவுட் பிரபலங்களான ஜெப் சிம்பாலிஸ்ட் மற்றும் மைக்கேல் சிம்பாலிஸ்ட் பீலே படத்தை எழுதி இயக்கியுள்ளார்கள். கெவின் டி பவுலா, வின்சென்ட் டி ஓனோபிரியோ, ரோட்ரிகோ சன்டோரோ, டியாகோ போனேடா, கோல்ம் மியானே ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை பீலே படத்திற்கு இசையமைக்கும் பணி இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்றுள்ள ஏ.ஆர். ரகுமானுக்குக் கிடைத்துள்ளது. இதை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ரிலீஸ் பிரேசில…

  15. - சென்னை உயர் நீதிமன்றத்தில் நாட்டுக்கு மிக முக்கியமான ஒரு வழக்கு போடப்பட்டது. “இனிமேல் 18 வயதுக்குக் குறைவான பெண்களை ஹீரோயினாக போட்டு படம் எடுக்கக் கூடாது’ என்பதே அது. அந்த ஹீரோயின்களை முத்தக் காட்சிகளில் நடிக்க வைப்பதும் கிளாமர் காட்ட வைப்பதும் “பெண்களை தவறாகக் காட்டுவதை தடை செய்யும் சட்டத்தின்’ கீழ் வருமாம் (என்னமா யோசிக்கிறாங்கப்பா?) - ஆனால் அந்த வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. சரி, அதெல்லாம் நமக்கு எதுக்கு? நம்ம ஹீரோயின்களோட பர்த்டேட் என்னனு ஆராய்ச்சி பண்ணினோம். (வேற வேலையே இல்லையானு கேட்கக் கூடாது. வேணா ஒரு பேங்க் வெச்சுக் கொடுங்க பார்த்துக்குறோம்.) - லட்சுமி மேனன்: 19.05.1996 (18) கார்த்திகா: 27.06.1992 (22) துளசி: 25.10.1997 (17) (இவர்கள் மூவர் பேரும…

  16. PAYCHECK - விமர்சனம் தற்செயலா ஒரு நாள் டிவில இந்தப் படத்தோட ட்ரெய்லர் பார்த்தேன். ஏதோ வித்தியாசமாத் தெரிஞ்சது. அப்புறம் டவுன்லோட் பன்ணிப் பார்த்தா, புத்திசாலித்தனமான ஆக்சன் பிலிம்! இங்கிலிபீஸ் படமாப் பார்த்துட்டு பீட்டர் விடற சில லோக்கல் நண்பர்கள்கிட்ட இந்தப் படத்தைப் பத்தி கேட்டப்போ, யாருக்கும் இப்படி ஒரு படம் வந்ததே தெரியலை..’அட அப்ரெண்டிஸ்களா, இன்னும் நீங்க ஜுராஸிக் பார்க்கத் தாண்டி வரலையா’ன்னு நினைச்சுக்கிட்டேன்..அதனால இங்க இப்போ Paycheck. பென் அஃப்லெக் ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினீயர். சாஃப்ட்வேர்னா நம்மூர்ல காப்பி-பேஸ்ட் பண்ணியே காலத்தை ஓட்டுவாங்களே, அவங்களை மாதிரி நினைச்சுடாதீங்க. இவர் பெரிய மண்டைக்காரர். பெரிய கம்பெனிகளுக்கு சில சீக்ரெட் ப்ராஜெக்ட் செஞ்சு கொடுத்…

  17. குழந்தைகளைக் கவரும் வகையில் அவர்களுக்காகவே தயாரித்த ஸ்டீபென் ஸ்பீல்பெர்க்கின் மற்றுமொரு மிகச் சிறந்த படம் "ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ்". ஒரு அம்மாவுக்கும் - பத்து வயது மதிக்கத்தக்க இயந்திர மகனுக்கும் இடையே இருக்கும் பாசப்பிணைப்பைச் சொல்வதே இப்படம். ஒரு தம்பதியினர் டேவிட் என்ற இயந்திர மகனை ஒரு விஞ்ஞானியிடமிருந்து வாங்கி வீட்டிற்கு அழைத்துவருகின்றனர். டேவிட் என்ற மகனின் குணாதிசியங்கள் அம்மாவுக்கும் தந்தைக்கும் பாசத்தைக் காட்டும் படியே வடிவமைக்கப்பட்டிருக்கும். எப்போதும் அம்மாவிடம் பாசமாய் கொஞ்சி, பழகி, அம்மாவின் புன்னகை பார்த்து மகிழும் வண்ணம் டேவிட் வடிவமைக்கப்பட்டிருப்பான். டேவிட்டோடு பேசி நடக்கும் திறன் கொண்ட மற்றொரு சிறிய இயந்திர கரடி பொம்மையும் கூடவே இருக்கும் எ…

  18. முதல்முறை மழை பார்த்த சிறுபிள்ளை போலே... மனம் இன்று கொண்டாடுதே.. இது என்ன இருதயம் மிருதங்கம் போலே... இன்று புதுப்பண் பாடுதே... http://www.youtube.com/watch?v=uWt4zsXPHQA

  19. ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் திரைப்பட இயக்குனர் லெனின் எம் சிவம் அவர்கள் தீபம் கலையகத்தில் - உடன் யோகா தினேஷ்

  20. இளமை பருவத்தை நான் அனுபவித்தில்லை: ஏ.ஆர்.ரகுமான் இளமை பருவத்தை நான் அனுபவித்தில்லை. அப்போதும் இசையில்தான் நேரத்தை செலவிட்டேன் என்றார் ஏ.ஆர்.ரகுமான்.இதுபற்றி அவர் கூறியதாவது: கடினமாக வேலை வாங்கும் படங்களுக்கு மட்டுமே இப்போதெல்லாம் இசை அமைக்கிறேன். இல்லாவிட்டால் எனது ரசிகர்களை நான் இழக்க வேண்டியது இருக்கும். சரித்திர கால படங்களுக்கு இசை அமைத்து முடித்தபிறகு இப்போது இளைஞர்களை கவரும் படங்களுக்கு இசை அமைக்கிறேன். புராண, சரித்திர கால படங்களுக்கு இசை அமைத்ததால் நான் சோர்வு அடையவில்லை. தொடர்ந்து அத்தகைய படங்களில் பணியாற்ற விரும்புகிறேன். சரித்திர கால படங்களுக்கு இசை அமைக்கும்போது புதிய கலாச்சாரத்தை என்னால் கண்டு உணரமுடிகிறது. ஒரு சில படங்களுக்கு நான் அமைத்த இசை பின்…

  21. இணையத் தளத்தில் இருக்கும், நிர்வாண படங்களில்... இருப்பது நான் அல்ல: தமன்னா. சென்னை: இணையதளங்களில் உள்ள நிர்வாண படங்கள் தன்னுடையது அல்ல என்றும், அவை மார்பிங் செய்யப்பட்டவை என்றும் தமன்னா தெரிவித்துள்ளார். நடிகைகள் பலரின் புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட நடிகை அது நான் இல்லை, அவை போலியான படங்கள் என்று கூறுவார். தற்போது தமன்னாவுக்கும் அந்த நிலை தான். இணையதளங்களில் மார்பிங் செய்யப்பட்ட தமன்னாவின் நிர்வாண படங்கள் வெளியாகியுள்ளன. இதை பார்த்து தமன்னா அதிர்ச்சி அடைந்துள்ளார். அது போலி. இணையதளங்களில் இருக்கும் என்னுடைய நிர்வாண படங்கள் போலியானவை. போட்டோவில் உள்ள என் தலையை மட்டும் எடுத்து யாரோ நிர்வா…

  22. பல கோடி சொத்துக்களை இழந்து வீட்டை விட்டு வெளியேறினார் கார்த்திக்…! தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90–களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் கார்த்திக். இவர் மறைந்த நடிகர் முத்துராமனின் மகன் ஆவார்.முத்துராமனுக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் நிறைய வீடுகள் மற்றும் வணிக வளாகம் உள்ளது. இவற்றின் மதிப்பு பல கோடிகள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. முத்துராமனின் பூர்வீக வீட்டில் கார்த்திக் குடும்பத்துடன் வசித்தார். இதே வீட்டில் முத்துராமன் மனைவி சுலோசனா மற்றும் குடும்பத்தினர் வசித்தார்கள். முத்துராமனுக்கு கார்த்திக் தவிர இன்னொரு மகன் மற்றும் மகள்கள் உண்டு. கார்த்திக் குடும்பத்தினர் இடையே சமீபத்தில் திடீர் சொத்து தகராறு ஏற்பட்டது. வீட்டை விட்டு வெளியேறும்படி அவர் நிர்ப்பந்த…

  23. வெளியாகின, இயக்குநர் பாலா - பூஜாவின் கிஸ் கிஸ் படங்கள்! அந்தப் படங்களை முதலில் பார்த்தபோது நம்ப முடியவில்லை. காரணம் இயக்குநர் பாலா மீதான இமேஜ் அப்படி. ஆனால் சினிமாவில் அப்படி எந்த பிம்பத்தையும் நம்பத் தேவையில்லை என்பதைச் சொல்லும் வகையில் பாலாவும் அவரது விருப்ப நடிகை பூஜாவும் நெருக்கமாக முத்தமிட்டுக் கொள்ளும் படங்கள் நேற்று வெளியாகியுள்ளன. பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்தவர் பூஜா. அதற்கு முன் வரை சுமார் நடிகையாக இருந்தவரை, சூப்பர் நடிகையாக்கியது நான் கடவுள்தான். பின்னர் பாலா இயக்கிய பரதேசியில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏனோ மறுத்துவிட்டார். ஆனால் பாலா எப்போது அழைத்தாலும் நடிப்பேன் என்று சமீப காலமாக சொல்லிக் கொண்டிருந்தார் பூஜா. இந்த முத்தச் சம்பவ…

    • 12 replies
    • 4.3k views
  24. தீபாவளிக்கு தமிழில் வெளியாகிறது சங்கராபரணம்! 35 ஆண்டுகளுக்குப் பின் மறு வெளியீடு... கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் அளித்து கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கில் வெளியாகி, 4 தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த படம் ‘சங்கராபரணம்’. இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் தமிழில் தீபாவளிக்கு வெளி வர உள்ளது. கர்நாடக இசைக்கு இன்றளவும் சிறந்த எடுத்துக்காட்டாக தெலுங்கு திரைப்படமான ‘சங்கராபரணம்’ விளங்கி வருகிறது. இசைக்கு முக்கியத்துவம் அளித்து இயக்குநர் கே. விஸ்வநாத் இயக்கிய இப்படம், கடந்த 1979 ல் வெளியானது. பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக இப்படத்தில் பணியாற்றி இருந்தார். முக்கிய வேடங்களில் மறைந்த நடிகர் சோமயாஜுலு, மஞ்சு பார்கவி, ராஜலட்சுமி, துளசி போன்றோர் நடித…

    • 6 replies
    • 1k views
  25. தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த பார்த்திபன், மிகுந்த சிரத்தைக்குப் பிறகு இயக்கிய 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகி வெற்றிபெற்றிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் திருட்டு வீடியோக்களை ஒழிக்கும் விதத்தில், சென்னை பர்மா பஜாரில் ஒரு கடையில், இயக்குநர் பார்த்திபன் தானே நேரில் சென்று கையும் களவுமாக ஒருவரை பிடித்துள்ளார். இதை வீடியோ பதிவாக எடுத்து தனது யூடியூப் சனலிலும் பார்த்திபன் பதிவேற்றியுள்ளார். பார்த்திபனின் உதவியாளர் ஒருவர் கடையில் நிற்க, தூரத்தில் கேமராவுடன் இருக்கும் பார்த்திபன், உதவியாளருடன் செல்பேசியில் பேசுகிறார். சிடி வாங்குவதற்காக ஒருவர் வந்து, காசு கொடுத்து, அவருக்கு 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்தின் திருட்டு விசிட…

    • 9 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.