வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
தசாவதாரம்' ஆடியோ 25-ல் ரிலீஸ் அப்படி, இப்படியென்று ஒரு வழியாய் `தசாவதாரம்' ஆடியோ வெளியீட்டு விழா ஏப்ரல் 25-ம் தேதி என்பது முடிவாகி விட்டது. நேரு உள்விளையாட்டரங்கில், இந்த விழாவிற்காக முழு வீச்சில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்கர் விருது வழங்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் 'கோடாக்' அரங்கம் போன்ற செட், முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில், ஜாக்கிசான் சிறப்பு விருந்தினராக வருகை, கோலிவுட், பாலிவுட் பிரபல நட்சத்திரங்களின் பங்களிப்பு என்று ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது இந்த விழா. இந்நிகழ்ச்சியில் கமல் செய்த பத்து வேடங்களின் வித்தைகளையும் ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தாக்கப் போகிறார்களாம். தனது படங்களில் அவ்வப்போது தலைகாட்டுவதை வழக்கமா…
-
- 0 replies
- 783 views
-
-
‘அலைபாயுதே’, ‘விடிவி’ கார்த்திகளை மெர்சல் பண்றான் இந்தக் கார்த்தி! - ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ விமர்சனம் `மெர்சல்' படத்தின் முதற்காட்சியில் இளையதளபதியை போலீஸார் கைது செய்து அழைத்துச் செல்வது போலவே, இந்தப் படத்தின் முதற்காட்சியில் நம் சின்னதளபதியை போலீஸார் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். டிஜிட்டல் இந்தியா, ஜி.எஸ்.டி, மருத்துவர்களின் நிலை என இரு படங்களுக்குமிடையே நிறைய ஒற்றுமைகள் வேறு. இப்படி `மெர்சலு'க்கே ஜோடிக்கட்டாக நிற்பது யார் தெரியுமா? ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’, கெட்ட பய சார் இந்தக் கார்த்தி. மேற்சொன்ன ஓப்பனிங் காட்சியை அப்ரூட்டாக கட் செய்தால், அடுத்து அல்ட்ரா மாடலாக ஸ்பைக் கலையாமல் கல்லூரிக்கு பைக்கில் வந்து இற…
-
- 0 replies
- 782 views
-
-
பொலிவூட், கொலிவூட், டொலிவூட் என எந்த மொழிப் படமாக இருந்தாலும் நீச்சல் உடை, முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நடிகை தமன்னா அறிவித்துள்ளார். தமன்னா நாயகியாக நடித்துள்ள பாலிவுட் படம் ஹம்சகல்ஸ். இந்தப் படத்தில் அவருடன் ஈஷா குப்தா, பிபாஷா பாசு நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் மூவரும் நீச்சல் உடையில் தோன்றுவது போன்ற காட்சி இடம் பெறுகிறது. மற்ற இருவரும் நீச்சலுடையில் தோன்ற தமன்னா மட்டும் மறுத்துவிட்டாராம். பிகினிக்கு பதில், நன்கு மூடப்பட்ட ஒரு உடையை அவர் தேர்வு செய்தாராம். மேலும் நீச்சலுடை, முத்தக்காட்சிகளில் தன்னால் நடிக்க முடியாது என்றும் உறுதியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "முத்தக்காட்சி, நீச்சலுடைக் காட்சிகளில் நடிப்பதில்ல…
-
- 3 replies
- 782 views
-
-
வடிவேலு பாலாஜியின் மரணம் தொடர்பில் வௌியான அதிர்ச்சி தகவல்! கலக்கப்போவது யாரு, அது இது எது, சிரிச்சா போச்சு என நிகழ்ச்சிகளில் காமெடி செய்து கலக்கியவர் வடிவேலு பாலாஜி. கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்கவாதம் ஏற்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ளார். எனவே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பணம் இல்லாததால் ஓமந்தூர் அழைத்து செல்லப்பட்டுள்ளார், அங்கு படுக்கை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அதுவரை யாரும் உதவிடவும் முன் வரவில்லை. எனவே அவர் இன்று காலை தான் ராஜீவ் காந்தி வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட இன்றே அவர் உயிரிழந்துள்ளார். 45 வயதான வடிவேலு ப…
-
- 8 replies
- 781 views
- 1 follower
-
-
ஒரு அழகான ஹீரோயின் கூட நான் டூயட் பாடறது கூட பொறுக்கல பல ஹீரோக்களுக்கு! - வடிவேலுஒரு அழகான ஹீரோயினுடன் நான் டூயட் பாடினா கூட இங்குள்ள பல ஹீரோக்களுக்கு பொறுக்கவில்லை, என்று கூறியுள்ளார் வடிவேலு. 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வடிவேலு மீண்டும் நடிக்கும் படம் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன். இதில் அவர் தெனாலிராமன், மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆகிய இரு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு இந்தப் படத்தில் ஏகப்பட்ட ஜோடிகள். குறிப்பாக கிருஷ்ணதேவராயராக வரும் வடிவேலுவுக்கு 36 மனைவிகளாம்! படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்கவிருந்தவர் பில்லா 2 படத்தில் நடித்த பார்வதி ஓமணக் குட்டன். ஆனால் இப்போது அவர் இல்லை. மீனாட்சி தீக்ஷித் என்பவர் நடிக்கிறார். இதுகுறித்து வடிவேலு கூறுகையில், "அந்தப் புள்ளை தாங…
-
- 4 replies
- 781 views
-
-
இம்சை அரசன், இரும்புக்கோட்டையில் முரட்டு சிங்கம் என தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கிக் கொண்டு வீறு நடை போட்ட டைரக்டர் சிம்பு தேவனுக்கு கோடம்பாக்கத்து மார்க்கெட்டில் இது கடையடைப்பு நேரம்! மீண்டும் வடிவேலுவை வைத்து அவர் இயக்க நினைத்தாலும் புயலின் கதவு மூடியே கிடப்பதால் வேறு யார் யாரையோ சந்தித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. இவரிடம் சிஷ்யனாக பணியாற்றிய டைரக்டர் பாண்டிராஜே 'நான் உங்களுக்கு வாய்ப்பு தர்றேன். என் தயாரிப்பில் நீங்க படம் இயக்குங்க' என்றாராம். ஆனால் ஹீரோ கிடைக்க வேண்டுமே! அறிமுகப்படுத்தியவர் என்ற முறையில் சிவகார்த்திகேயனை அழைத்த பாண்டி, 'சிம்புதேவன் படத்துல நடிச்சுக் கொடுங்க. நான்தான் தயாரிக்கிறேன்' என்று சொல்ல முள்ளு கரண்டிய…
-
- 0 replies
- 781 views
-
-
[size=4]'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்பட உலகில் இசையமைக்க ஆரம்பித்து 20 வருடங்கள் பூர்த்தியாவதையொட்டியும் அவரை கௌரவிக்கும் வகையிலும் சென்னையில் பிரமாண்ட விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி சென்னை காமராஜர் அரங்கத்தில் இவ்விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இசை வாழ்க்கையை ஆரம்பித்த ஏ.ஆர். ரஹ்மான், தேசிய விருதுகளும் இரட்டை ஆஸ்கர் விருதுகளும் பெற்று தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்த்தவர். ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் முகமாக பிரபல இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகளென திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாக இவ்விழாவை ஏற்…
-
- 1 reply
- 781 views
-
-
பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயனின் பாடல் (வீடியோ இணைப்பு) [ Monday, 15 July 2013, 06:02.55 AM GMT +05:30 ] வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடியுள்ள பாடல் யூடியூப்பில் செம ஹிட் அடித்துள்ளது. பெண்கள், குழந்தைகள், இதயநோய் உள்ளவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க என்று எச்சரிக்கையோடு பின்னணி பாட ஆரம்பித்துள்ளார் நடிகரும், புதிய பாடகருமான சிவகார்த்திக்கேயன். "ஊரைக் காக்க உண்டான சங்கம்... உயிரைக் கொடுக்க உருவான சங்கம் இல்லை...இது இல்லை.... நாங்க எல்லோரும் விளையாட்டுப் பிள்ளை"..... இதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக சிவகார்த்திக்கேயன் பாடியுள்ள பாடல். யூடியூப்பில் இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.…
-
- 1 reply
- 781 views
-
-
ராஜபக்சே ஆதரவு படத்தில் இந்தி நடிகர் தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவதற்கு இந்தி நடிகர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். ஐஃபா விழாவை அமிதாப்பச்சன் புறக்கணித்த போது தாங்கிப் பிடித்தவர்கள் சல்மான்கானும், விவேக் ஓபராயும். தமிழர்களின் கண்டனத்தை மீறி இவர்கள் இலங்கையில் ஐஃபா விழாவை முன்னின்று நடத்தினர். பழங்கதையை மறப்போம். புதிதாக படம் எடுக்க இலங்கை செல்கிறார் ஜான் ஆபிரஹாம். ஈழப் போராளிகளுக்கும் சிங்களப் பேரினவாத அரசின் ராணுவத்துக்கும் இடையில் நடந்த போரை இவர் திரைப்படமாக்கப் போகிறாராம். இந்தப் படத்தில் அமைதிப்படை இலங்கையில் இருந்த காலகட்டமும் பதிவு செய்யப்பட உள்ளதாம். ஜாஃப்னா என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை தயாரித்து இந்திய புலனாய்வு அதிகா…
-
- 0 replies
- 780 views
-
-
பிரபாகரன்-துசரா பீரிஸின் திரைப்படம்:யமுனா ராஜேந்திரன் I பிரபாகரன் (Pirabakaran : in sihalese language : 2007) திரைப்படம் அதனது தகுதிக்கும் மீறிய விளம்பரம் பெற்ற திரைப்படமாக இருக்கிறது. தமிழகத்தில் சென்னையின் பிரசாத் ஸ்டூடியோவில் இந்தத் திரைப்படம் பிராஸஸிங்கில் இருந்தபோது, அதனது இயக்குனர் துசரா பீரிஸ், தமிழக திரைப்பட இயக்குனர் சீமான் தலைமையில் சென்ற தமிழீழ ஆதரவாளர்கள் குழவினரால் தாக்கப்பட்டார். உடைகள் கிழிபட்டு இரத்தக் காயப்படுத்தப்பட்ட அவர் மருத்துவமனையில் மார்பின் குறுக்கே உடலுக்குக் கட்டுப் போட்டபடியிலான போஸில் தமிழகப் பத்திரிக்கைகளுக்கும் இலங்கைப் பத்திரிக்கைகளுக்கும் நேர்முகங்கள் கொடுத்தார். பிரபாகரன் படத்தின் பிரதிகள் சென்னையிலிருந்து வெளியேறக் கூடாது…
-
- 2 replies
- 780 views
-
-
கொஞ்சம் விட்டிருந்தால் எஸ்.பி.பியை விஞ்சியிருப்பார் இந்த மனுஷன்! #KamalAsSinger ஆண்பாடகர்களில் எஸ்.பி.பியை விடச் சிறந்த ஒருவர் இல்லவே இல்லை என்று நண்பர்களிடத்தில் உச்சஸ்தாயியில் வாதிட்டாலும் ஒருத்தரை மட்டும் நினைக்கும்போது ‘ஒருவேளை இந்த ஆளு முழுநேரப் பாடகராக மட்டுமே ஆகியிருந்தால் எஸ்.பி.பியை மிஞ்சியிருப்பாரோ’ என்று தோன்றும். கமல்ஹாசன். 'அந்தரங்கம்’ என்ற படத்தில் ஜி.தேவராஜன் இசையமைப்பில் ‘ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள் என்றொரு பாடல்தான் கமல் பாடிய முதல் பாடல். கிட்டத்தட்ட கே.ஜே. ஏசுதாஸின் குரல் போல ரொம்ப சீரியஸாக இருக்கும் பாடல். பயந்து கொண்டே பாடியது போல் தெரியும். ஹிட்டான பாடல்தான். அதன்பிறகு இளையராஜா இசையில் அவள் அப்படித்தான…
-
- 0 replies
- 780 views
-
-
பிரபல தமிழக திரைப்படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் எந்த முன் அனுமதியும் பெறாமல் தங்கள் நிறுவன முத்திரை மற்றும் பெயரை பயன்படுத்தி வருவதாக அமெரிக்காவில் உள்ள ஆஸ்கர் அகாடமி குற்றம் சாட்டியுள்ளது. தங்களது டிரேட் மார்க்கை தவறாக பயன்படுத்திவருவதால் ஆஸ்கர் ரவிச்சந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துளளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. திரைப்படத்துறையில் உலக அளவில் சிறந்த படங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான பெருமைக்குரிய ஆஸ்கர் விருதுகளை அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆஸ்கர் அகாடமி என்ற நிறுவனம் வழங்கிவருவது தெரிந்த விஷயம்தான். ஆனால் அந்த நிறுவனத்தின் டிரேட் மார்க் சின்னத்தை அனுமதியில்லாமல் ரவிச்சந்திரன் பயன்படுத்தி வந்தததாக எழு…
-
- 0 replies
- 780 views
-
-
ஷங்கர்: உருமாறும் உடல்களின் அழகியல் ஆர். அபிலாஷ் சிவாஜி, எம்.ஜி.ஆர், எம்.ஆர் ராதா காலத்தில் இருந்தே மனித வாழ்வின் சீரழிவு, மீட்சி, மலர்ச்சி ஆகியவற்றை உடல்களில் நிகழ்த்திப் பார்க்கும் ஆர்வம் நமக்கு இருந்துள்ளது. அதனாலேயே திறமையும் அழகும் மிக்க நாயகன் நோய் (ரத்தக்கண்ணீர் (1954), தெய்வமகன் (1969)) அல்லது வறுமை (பராசக்தி (1952), கப்பலோட்டிய தமிழன் (1961), நல்ல நேரம் (1972)) அல்லது சதியால் (பராசக்தி, பாசமலர் (1961), உத்தம புத்திரன் (1958), அடிமைப்பெண் (1969), ஆயிரத்தில் ஒருவன் (1965), நாடோடி மன்னன் (1958), எங்க வீட்டுப் பிள்ளை (1965), குடியிருந்த கோயில் (1968), மலைக்கள்ளன் (1954), மதுரைவீரன் (1956)) நொடிந்து, உருமாறி சீரழிந்து போன நிலையில் தோன்றி போராடுவது அல்லத…
-
- 1 reply
- 779 views
-
-
சுதந்திரம் தித்திக்கும்பழம் தின்னக் கொடுப்பார்; மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு; பொன்னே. மணியே, என்றுனைப் புகழ்வார்; ஆயினும் பச்சைக் கிளியே அதோபார்! உன்னுடன் பிறந்த சின்ன அக்கா, வான வீதியில் வந்து திரிந்து தென்னங் கீற்றுப் பொன்னூசல் ஆடிச் சோலை பயின்று சாலையில் மேய்ந்து வானும் மண்ணுந்தன் வசத்திற் கொண்டாள்! தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ? அக்கா அக்கா என்றுநீ அழைத்தாய். அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே? http://www.paraparapu.com/
-
- 0 replies
- 779 views
-
-
'சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை. சென்னை: சூர்யா நடிக்கும் 'சிங்கம்- 2' திரைப்படத்தில் முஸ்லிம்களை கடல் கொள்ளையர்களாகவும், கொடூரமான வில்லன்களாகவும் சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தை மனதில் கொண்டு, சர்ச்சைக்குரிய காட்சிகளை இயக்குனர் ஹரி நீக்க முன் வர வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை ஓய்வதற்குள் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவர இருக்கும் 'சிங்கம்-…
-
- 1 reply
- 778 views
-
-
2016 - ல் கவனம் ஈர்த்த துணைக் கதாபாத்திரங்கள்! 2016-ம் ஆண்டு, ரசிகர்களுக்கு வெள்ளித்திரை அளித்தது வகைவகையான விருந்து. குறிப்பாக, கதாநாயகிகளுக்கு இணையாக துணைக் கதாபாத்திரங்கள் ஏற்ற நடிகைகள் ஸ்கோர் செய்யும் வாய்ப்பு, பல திரைக்கதைகளில் வழங்கப்பட்டன. அப்படி ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டவர்களில் சிலர்... மியா ஜார்ஜ் தொடரும் பெண் பார்க்கும் படலம், ஏதோ ஒரு காரணத்தால் கைநழுவிச் சென்றுகொண்டே இருக்கும் திருமண யோகம்... இந்தச் சூழல் ஒரு கிராமத்து அப்பாவிப் பெண்ணின் மனதை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை அழுத்தமாகச் சொன்ன படம் 'ஒருநாள் கூத்து'. 'லட்சுமி' கேரக்டரில், கிராமப்புற இளம் பெண்களின் நிலையையும், உணர்வுகளையும் மியா ஜார்ஜ் தன் கண்களாலும், ஆர…
-
- 0 replies
- 778 views
-
-
ரஜினி... ரஞ்சித்.. இவர்களைத் தாண்டி ஜெயித்திருக்கிறாரா சந்தோஷ் நாராயணன்? - `காலா’ இசை விமர்சனம் பாடல்: செம்ம வெய்ட்டு வரிகள்: டோப்போடெலிக்ஸ், அருண்ராஜா காமராஜ், லோகன் குரல்கள்: ஹரிஹர சுதன், சந்தோஷ் நாராயணன் முதலில் வெளியான சிங்கிள் இதுதான். ஏற்கெனவே கேட்ட பீட் மற்றும் ஒரே ரிதமாக இருப்பது குறை. ஆனால் நடுநடுவே ரிப்பீட்டில் ‘செம்ம வெய்ட்டு நம்ம காலா சேட்டு’க்கு முன் வரும் இசைத்துணுக்குச் சிறப்பு. இந்தி ராப், அவ்வளவாக ஒட்டவில்லை. ஆனால், தாராவியில் நடக்கும் கதைக்களத்துக்குத் தேவையானதாக இருக்கலாம். ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் தீனி. பாடல்: தங்கச்சில வரிகள்: அருண்ராஜா காமராஜ் குரல்கள்: ஷங்கர் …
-
- 0 replies
- 778 views
-
-
நாணயம் - எனது பார்வையில் சமீபகாலமாக ஆகிலப்படங்களை சுட்டு படமாக தரும் வேலை தமிழ் சினிமாவில் "கனஜோராக" நடந்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான THE BANK JOB என்ற படத்தின் அப்பட்டமான காப்பி தான் இந்தப்படம். Roger Donaldson இயக்கத்தில் Jason Statham அட்டகாசமான நடிப்பில் வெளியான இந்தப்படத்தின் கதை ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக்கி வடிவமைக்கப்பட்டது,ஆமாம்,1971 ஆம் ஆண்டில் மத்திய லண்டனில் உள்ள ஒரு வங்கியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது.வசூலில் சக்கை போடுபோட்ட இந்தப்படம் கடந்த 2009 ஆண்டில் சிறந்த திரைக்கதைக்கான Edgar விருதினையும் வாங்கியது. ஏற்கனவே எடுத்த தமிழ் படங்களிளிருந்தே காட்சிகளை சுட்டு படமாக வரும் படங…
-
- 1 reply
- 778 views
-
-
கமலை படமெடுக்கும் அக்ஷரா! -வாரிசுகளால் பெருமைப்படும் அப்பாக்கள்! ரஜினியின் பாபா படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் தன் வீடியோ கேமிராவில் பதிவு செய்திருந்தார் அவரது மகள் ஐஸ்வர்யா. அந்த படம் எப்படி உருவானது என்பதை தனி வீடியோ தொகுப்பாக போடவும் திட்டம் வைத்திருந்தார் அவர். ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த வீடியோ தொகுப்பு வெளியிடப்படவே இல்லை. அது போலவே தன் அப்பா கமல் நடிக்கும் தசாவதாரம் படப்பிடிப்பை வீடியோவில் படம் பிடித்து வருகிறார் அக்ஷரா! பத்து கெட்டப்புகளில் தோன்றும் கமல், மேக்கப்புக்காக செலவிடும் நேரம், சிரமம் எல்லாவற்றையும் ஷ§ட் பண்ணுகிறாராம். இதுவாவது வீடியோ பதிவாக வெளிவருமா? அதிருக்கட்டும்.... கமலின் மற்றொரு மகள் ஸ்ருதி இசையை முறையாக படித்து வருகிறார். தமிழில் …
-
- 0 replies
- 777 views
-
-
சம்பளப் பணத்தில் மோசடி செய்து விட்டதாக தனது மேனேஜர் முனுசாமி மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் நடிகை மாளவிகா. நாயகியாக, பின்னர் கவர்ச்சி நடிகையாக, அதன் பின்னர் குத்தாட்ட நாயகியாக கலக்கி வந்த மாளவிகா, சமீபத்தில் கல்யாணம் செய்து கொண்டார். அதன் பின்னர் கர்ப்பமடைந்தார். கர்ப்பமடைவதற்கு முன்பு ஒத்துக் கொண்ட இந்திர விழா படத்தில் குத்துப்பாட்டு இருந்ததால் அதில் நடிக்க முடியாமல் விலகிக் கொண்டார். தற்போது மும்பையில் கணவர் வீட்டில் தங்கியிருக்கும் மாளவிகா தனது மேனேஜர் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம். அதில், எனது சம்பளப் பணத்தை தயாரிப்பாளர்களிடமிருந்து முனுசாமிதான் வாங்கித் தருவார். ஆனால் பல தயாரிப்பாளர்கள் தந்த பணத்தை என்னிடம் முழு…
-
- 0 replies
- 776 views
-
-
30 படங்கள் வரை நடித்து முடித்து விட்ட பாலிவுட் ஸ்டார் தியா மிர்ஸா, இன்னும் தனக்குப் பிடித்த, தனது கனவு ரோல் வரவில்லை என்று ஏக்கம் தெரிவிக்கிறார். பாலிவுட்டின் கனவுக் கன்னிகளில் ஒருவரான தியா மிர்ஸா நடித்துள்ள கிரேஸி 4 பெரும் எதிர்பார்ப்பை பாலிவுட்டில் ஏற்படுத்தியுள்ளது. ராகேஷ் ரோஷனின் இயக்கத்தில் உருவாகியுள்ள கிரேஸி 4 படத்தில் ரித்திக் ரோஷன் கெட்ட ஆட்டம் போட்டுள்ளார். படத்தில் தியாவுக்கும் சூப்பர் ரோல். கிரேஸி 4 படத்தில் தியா இருப்பது பற்றி முதலில் படு ரகசியமாக வைத்திருந்தாராம் ராகேஷ் ரோஷன். இதுகுறித்து தியா கூறுகையில், நான் படத்தில் நடித்திருக்கிறேன் என்பதை சர்ப்ரைஸ் ஆக வைத்திருந்தார் ராகேஷ் ரோஷன். படம் பார்க்க வருபவர்கள் திடீரென என்னைப் பார்த்து ஆச்சரியமடைய வேண…
-
- 0 replies
- 776 views
-
-
சென்னை: எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை. தேவைப்பட்டால் நடிப்புத் தொழிலைவிட்டே விலகுகிறேன்... மீண்டும் ரேஸுக்குப் போகிறேன்," என்று அதிரடியாக கூறி விட்டார் நடிகர் அஜீத் [^] குமார். முதல்வர் கருணாநிதியை அஜீத் சந்திப்பதற்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு ஒரு சிறப்புப் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது.. "முதல்வருக்கு நடந்த விழா மேடையில் நான் பேசியது எழுதித் தயாரிக்கப்பட்ட பேச்சல்ல. அந்த நேரத்தில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த பேச்சு அது. அதில் எந்தத் தவறும் இல்லை. உண்மைகளைப் பேசினேன்... என்ன நடந்ததோ, அதைத்தான் சொன்னேன். நடிகர்களை,…
-
- 0 replies
- 776 views
-
-
மிஷ்கின் சொன்னதும், அவருக்கு திரும்பக் கிடைத்ததும்! அப்படி என்னதான் சொல்லிவிட்டார் இயக்குநர் [^] மிஷ்கின்? எதற்காக உதவி இயக்குநர்கள் கொதிக்கிறார்கள்? இதோ மிஷ்கின் பேட்டியின் ஒரு பகுதி: கேள்வி: தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுதுபவர்கள் குறைந்துவிட்டார்களே... பதில்: அதுதான் சார் என் கோபமும். இப்ப புத்தகம் படிக்கிற பழக்கம் குறைஞ்சிருச்சு. இன்னைக்கு வர்ற உதவி இயக்குனர் [^] களை நினைச்சா எனக்கு கோபம் வருது. இப்ப என்ன புத்தகம் படிச்சுட்டு இருக்கீங்கன்னு கேட்டா, பாரதிராஜா, இளையராஜாவெல்லாம் படிச்சுட்டா சினிமாவுக்கு வந்தாங்கன்னு கேட்கிறான் ஒருத்தன். கெட்ட வார்த்தையிலேயே திட்டி அனுப்பிச்சுட்டேன். அவங்க வாழ்க்கையை, கிராமங்களை, மனிதர்களை படிச்சவங்க. படிக்க…
-
- 0 replies
- 776 views
-
-
‘வில்லு’ ஷ¨ட்டிங்கிற்காக நேற்று, சுவிட்சர்லாந்து சென்றுள்ள விஜய், அடுத்து 2 படங்களில் நடிக்கிறார். ஒன்று ஏவி.எம் பாலசுப்ரமணியம் தயாரிக்கும் படம். அடுத்து அவர் நடிக்கும் 50-வது படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் வி.வி.கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இயக்குனர் முடிவாகவில்லை. தற்போது வி.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘பந்தயம்’ தயாராகி வருகிறது. வில்லு படம் நடித்து முடிந்தவுடன் அடுத்த படம் பற்றி அறிவிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=250
-
- 0 replies
- 775 views
-
-
கபாலி – திரைவிமர்சனம் 25 வருட சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினி. வெளியில் வரும்போதே அவர் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடிதான் சிறை சென்றார் என்பது தெரிய வருகிறது. சிறையில் இருந்து வெளியே வரும் அவரிடம் ஜான் விஜய், 25 வருடத்தில் மலேசியாவில் நடந்த மாற்றங்களை அவரிடம் விளக்கிக் கொண்டு வருகிறார். அப்போது, 43 கேங்க் என்ற கேங்ஸ்டர் கும்பல் மாணவர்களை போதை மருந்துக்கு அடிமையாக்கி இருப்பதையும், அதுமட்டுமில்லாமல், கொலை, கடத்தல் வேலைகளை செய்துவருவதாகவும் ரஜினியிடம் கூறுகிறார். முதலாவதாக 43-வது கேங்கை சேர்ந்த லிங்கேஷை சந்திக்கிறார்கள். அவனது கும்பலை அடித்து துவம்சம்செய்துவிட்டு, தான் வெளியில் வந்துவிட்டத…
-
- 2 replies
- 775 views
-