வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
[size=2] "திரைப்படங்கள் பொழுதினைப்போக்கும் வெறும் கேளிக்கை ஊடகங்கள் மட்டுமல்ல அதன் வாயிலாக ஒரு தேச விடுதலைப்போரையும் முன்னெடுத்துச் செல்ல முடியும்” என்று இயக்குனர் இகோர் இயக்கியிருக்கும் ஈழத்தமிழருக்கானத் திரைப்படம் என்கிற முத்திரையுடன் வெளிவர இருக்கும் தேன்கூடு படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கவிஞர் காசி ஆனந்தன், நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் இயக்குனர் செந்தமிழன் சீமான், இயக்குனர் புகழேந்தி ஆகியோர் பேசினார்கள்.[/size] [size=2] ஈழப்போர் ஏற்பட்ட காரணம், இன்றைய நிலை மற்றும் எதிர்காலத்தில் அது எவ்வாறு தொடரவேண்டும் என்பதைச் சொல்லும் படமாக தேன்கூடு படத்தை இயக்கியிருக்கிறார் இகோர். இந்தப் படத்தின் முன்னோட்டத்தினை கமலாத் திரையரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் இயக்க…
-
- 0 replies
- 523 views
-
-
[size=2]சோகத்தை மறக்க சினிமாவும் எனது குடும்பமும்தான் எனக்கு பெரும் உதவியாக உள்ளது என்கிறார் நயன்தாரா. [/size] [size=2] சிம்புவை காதலித்து பிரிந்த நயன்தாரா, அதன்பின் பிரபுதேவாவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள தயாராக இருந்தனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திடீரென பிரிந்தனர். இது குறித்து அதிகம் பேசாமல் இருந்தார் நயன்தாரா. இந்நிலையில் ஆந்திர அரசின் நந்தி விருதுக்காக அவர் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை அவர் பெற உள்ளார். [/size] [size=2] இது குறித்து நயன்தாரா கூறியதாவது: [/size] [size=2] ஸ்ரீராம ராஜ்யம் படம் நான் எதிர்பார்க்காமல் எனக்கு கிடைத்தது. கவர்ச்சி வேடங்களில் இருந்து ஒதுங்கி, கு…
-
- 3 replies
- 678 views
-
-
வடிவேலு நகைச்சுவை http://www.youtube.com/watch?v=kZeEzte6BD0&feature=related
-
- 1 reply
- 965 views
-
-
[size=2]மலையாளத்தில் வெற்றிப்பெற்ற ‘டிராபிக்’ படம் தமிழில் சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் தயாராகிறது. இதில் ‘ஆட்டோகிராப்’ மல்லிகா கதாநாயகி நடிக்கிறார். [/size] [size=2] இதில் நான் சேரனுக்கு ஜோடியாக நடிக்கிறேன். அவருக்கு ஜோடியாக நடிக்க விருப்பமில்லை. காரணம் ‘ஆட்டோகிராப்’ படத்தில் நடிக்கும் போது என்னை அடித்தார். ஆனால், இப்போது அவரே வந்து சமாதானம் சொன்னார். படத்தின் இயக்குநர் என்ற முறையில் உன்னை அப்போது அடித்தேன். ஆனால் இப்போது நானும் நடிகராகவே படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னபிறகு நடிக்க சம்மதித்தேன் என்றார் மல்லிகா.[/size] [size=2] http://pirapalam.net/news/cinema-news/chennaieil-oru-naal-131012.html[/size]
-
- 1 reply
- 722 views
-
-
[size=2] ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் கதையில் தொடங்கி, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றதன் பின்னணி வரை நீள்கிறது மாற்றான். [/size][size=2] விஞ்ஞானி ராமச்சந்திரனின் மரபு அறிவியல் சோதனை காரணமாக சூர்யா இரட்டையர்களாக பிறக்கிறார்கள். [/size] [size=2] இருவருக்கும் சேர்த்து ஒரு இதயம் தான். அப்பா பால் பவுடர் வியாபாரத்தில் முதலிடம் பிடிக்கிறார். வெளிநாட்டு பெண்மணி ஒருவர் ராமச்சந்திரன் நடத்தும் நிறுவனத்தை உளவு பார்க்க வருகிறார். அவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். தன்னுடைய வெற்றிக்காக எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் ராமச்சந்திரனின் சூழ்ச்சியால் இரட்டையர்களில் ஒருவர் இறக்கிறார். அவரின் இருதயம் மற்றொருவருக்கு பொருத்தப்படுகிறது.[/size] [size=2] அவர் வெளிநா…
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=4]மாற்றான் படம் இன்று உலகமெங்கும் பெரும் ஆரவாரத்துடன் வெளியாகியுள்ளது. 'படம் எப்படி இருக்கிறது?' சினிமா ரசிகர்கள் இருவர் சந்தித்துக் கொண்டால் கேட்கும் முதல் கேள்வி இதுதான். படத்தின் முதல் காட்சி முடிந்துள்ள நிலையில் படம் குறித்த ஃபீட்பேக் கிடைக்க ஆரம்பித்துள்ளது. பார்த்த ரசிகர்கள் பலருக்கும் படத்தின் கதை, எடுக்கப்பட்ட விதம், படத்தின் வேகம் போன்றவற்றில் பல்வேறு கருத்துகள் இருந்தாலும், அனைவரின் ஒருமித்த கருத்து: 'சூர்யா பிரமாதப்படுத்திட்டார்!' படத்தின் முதல் பாதி முழுக்க ஒட்டிப் பிறந்த இரட்டையராக நடித்துள்ள சூர்யா, இடைவேளைக்குப் பிறகுதான் தனித்தனி சூர்யாவாக வருகிறார். இரண்டு சூர்யாக்கள், அதுவும் ஒருவரோடு ஒருவர் ஒட்டிக் கொண்டே சண்டை போடுவதும், காதல் வயப்படுவத…
-
- 2 replies
- 968 views
-
-
[size=2]மீனவர்கள் வாழ்க்கை கதை படமாகிறது. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் ‘நீர்ப்பறவை’. விஷ்ணு, சுனேனா ஜோடியாக நடிக்கின்றனர். [/size] [size=2] இப்படம்பற்றி இயக்குனர் சீனு ராமசாமி கூறியதாவது: [/size] [size=2] கடல் சார்ந்த காதல், கடல் சார்ந்த அரசியல் கதையாக உருவாகிறது ‘நீர்ப்பறவை’. மீனவரின் மகனாக விஷ்ணு, கிறிஸ்தவ ஆலயத்தில் பணியாற்றும் பெண்ணாக சுனேனா நடிக்கின்றனர். [/size] [size=2] இவர்களுக்கிடையேயான காதல் கவிதையாக படமாகி இருக்கிறது. இதன் ஷூட்டிங் திருச்செந்தூரில் மணப்பாடு மீனவ கிராமத்தில் நடந்தது. கடுமையான வெயில் நேரத்தில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. ஏற்ற கதாபாத்திரத்துக்காக சுனேனா வெயிலில் நின்று தனது நிறத்தை கருமையாக மாற்றிக்கொண்டார். [/size] [size=2] மேலும்…
-
- 0 replies
- 405 views
-
-
கலைப்புலி எஸ். தாணு, ஏ.ஆர். முருகதாஸ், விஜய், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் துப்பாக்கி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, அடையாறு பார்க் ஹெரட்டன் ஹோட்டலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. துப்பாக்கி படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்துவிட்டு அப்படத்தில் தான் சொந்த குரலில் பாடியுள்ள கூகுள், கூகுள்.. எனும் பாடலை விழா மேடையில் நான்கு வரிகள் பாடிக் காட்டிய விஜய், இந்தப் படம் எனது ட்ரீம் புராஜக்ட் ஆகும். இந்தப் படத்திற்காக எங்க அப்பாவுக்குதான் நன்றி சொல்லவேண்டும். தயாரிப்பாளர் எஸ்.தாணு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், கதாநாயகி காஜல் அகரவால் என இவ்வளவு பெரிய டீமை எனக்காக அமைத்துக் கொடுத்தவர் அவர்தான்.…
-
- 4 replies
- 1.2k views
-
-
[size=2]மொழி தெரியாத நடிகைகளிடம் தமிழ் வசனம் பேச வைப்பது கடினம் என்றார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய், காஜல் அகர் வால் நடிக்கும் ‘துப்பாக்கி படத்தின் பாடல் சிடி வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. [/size] [size=2] இதில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது: [/size] [size=2] உதவி இயக்குனராக பணியாற்றிய நேரத்திலேயே விஜய் படத்தை இயக்குவது பற்றி அவரிடம் பேசி வந்தேன். அந்த வாய்ப்பு இப்போதுதான் அமைந்திருக்கிறது. விஜய்யின் இமேஜ் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரிடம் பணியாற்றியபோது அவரது டைமிங் வசனம், காட்சியை மெருக்கேற்றும்விதம் பிடித்திருந்தது. இதில் இந்தி, ஆங்கில வசனங்களும் பேசி இருக்கிறார். வடநாட்டுக்காரர்கள் பேசுவதுபோல் அவர் இந்தி பேசியபோது அவரை வைத்து இந்தி படம்…
-
- 6 replies
- 803 views
-
-
[size=2]சூர்யா& கே.வி. ஆனந்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் மாற்றான் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. அதுவும் குறிப்பாக நார்வேயில் மாற்றான் படத்தை பெரிதும் எதிர்ப்பார்க்கிறார்கள். [/size] [size=2] காரணம் கே.வி.ஆனந்த் நாணிகோணி என்ற பாடல் காட்சிக்காக நார்வேயின் அற்புதமாக அழகை அப்படியே செல்லுலாய்டில் பதிவேற்றி இருக்கிறாராம். மேலும் நார்வேயில் வாழும் தமிழ் மக்கள் சூர்யாவிடம் காட்டிய அன்பை பார்த்து பெரிதும் வியந்தர்ராம் சூர்யா. நாணிகோணி பாடல் காட்சியை பார்ப்பதற்கு நார்வேயில் மாற்றா-னுக்கு பெரும் கூட்டம் வரும் என்பதில் ஐயமில்லை. [/size] http://pirapalam.net/news/cinema-news/maatraan-111012.html
-
- 0 replies
- 462 views
-
-
மாற்றான் வியாழன், 11 அக்டோபர் 2012( 11:15 IST ) Share on facebook Share on twitter More Sharing Services FILE சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக நடித்திருக்கும் படம். கே.வி.ஆனந்த் இயக்க, சுபா வசனம் எழுதியுள்ளனர். கல்பாத்தி எஸ்.அகோரம் தனது ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்துள்ளார். சூர்யா அகிலன், விமலன் என்ற ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்களாக நடித்துள்ளார். இதில் இருவர் சாது, இன்னொருவர் கற்பனை செய்ய முடியாத குணம் கொண்டவர். இவர்களின் லவ் அஃபையராக காஜல் அகர்வால். இவர்களுடன் விவேக், சச்சின் கடேகர், தாரா, இஷா ஷெர்வானி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் காட்சிகள் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோ…
-
- 0 replies
- 539 views
-
-
ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷுக்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது “வயிற்று வலி நோயாளி’ வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார். ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். “டாக்டர்…’ என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சரியம். அவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரும் நாகேஷின் நடிப்பை ரசித்தார். நாடகம் முடிந்த பின் மேடை ஏறிய எம்.ஜி.ஆர்., “நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து …
-
- 1 reply
- 634 views
-
-
ரஜினி கேட்டும் கூட, பாலச்சந்தரின் படத்துக்கு இசையமைக்க மறுத்துவிட்டேன் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார். பிரபல வார இதழில் இளையராஜா வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். புதுப்புது அர்த்தங்கள் படத்துக்குப் பிறகு பாலச்சந்தர் படங்களுக்கு அவர் இசையமைக்காமல் போனது, அதுவும் ரஜினி கேட்டும் கூட இசையமைக்க மறுத்தது பற்றி வாசகர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். அந்த கேள்வி பதில்: கேள்வி: புது புது அர்த்தங்கள் படத்திற்கு பிறகு நீங்கள் பாலசந்தர் படங்களுக்கு இசையமைக்கவில்லையே, ஏன்? பதில்: புது புது அர்த்தங்கள் படத்திற்கு ரீரெக்கார்டிங் நடக்க வேண்டிய நேரத்தில் இங்கே ஸ்ட்ரைக் இருந்தது. அதனால் சிவா என்கிற படத்துக்காக நான் பாம்பே போயிருந்தேன். அப்போ கவி…
-
- 0 replies
- 590 views
-
-
[size=2]இப்போது காஜல் அகர்வால் காட்டில் தான் அடைமழை பெய்கிறது. தெலுங்கில், "மார்க்கெட் உச்சத்தில் இருந்த நேரத்தில் தான், தமிழில், "துப்பாக்கி, மாற்றான் படங்களில் ஒப்பந்தமாகி, கோலிவுட்டுக்கு வந்தார். [/size] [size=2] இங்கு வந்து, "பிசியானவர், தெலுங்கில் நடித்து வந்த இரண்டு படங்களை திரும்பி கூட பார்க்கவில்லை. இதனால், காஜலை வைத்து, சில நாட்கள் படப்பிடிப்பு நடத்திய அவர்கள், பின், வேறு நடிகைகளை ஒப்பந்தம் செய்து, படத்தை முடித்திருக்கின்றனர். மகேஷ்பாபு, ராம்சரண் போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களையே, "டீலில் விட்டதால், காஜல் மீது, தெலுங்கு பட அதிபர்கள் கடுப்பில் உள்ளனர். [/size] [size=2] இதையடுத்து, தற்போது பாலிவுட் சினிமாவில், தன் கவனத்தை திருப்பி இருக்கும் காஜல், தமிழ…
-
- 0 replies
- 600 views
-
-
[size=2] ‘தீராத விளையாட்டு பிள்ளை’ பட நடிகை தனுஸ்ரீ தத்தா, மொட்டை அடித்து சாமியாராக மாறியுள்ளார். [/size] [size=2] காரணம் என்ன தெரியுமா?[/size] [size=2] "உங்களுக்கு மனஅமைதி வேண்டுமானால், அதற்கு பரிகாரம்... நடிப்பதை கைவிட வேண்டும். மொட்டை அடித்து ஆன்மிக சேவை செய்தால் மட்டுமே சாத்தியம்” என ஜோதிடர் ஒருவரின் அறிவுரைதான்! [/size][size=2] நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் 20 பேரும் இது போன்ற சிறப்பு பூஜைகள் நடத்தி உள்ளார்கள். [/size] [size=2] திரை நட்சத்திரங்களுக்கு பரிகார பூஜை செய்யும் பெரம்பலுரைச் சேர்ந்த ராஜ ராகவனை, சிறு தேடலுக்கு பிறகு தொடர்புகொண்டோம். முதலில் பேச மறுத்தவர், பிறகு பல விஷயங்களை சொன்னார்.[/size] [size=2] "உலகில் மிகவும் மனது…
-
- 0 replies
- 816 views
-
-
The Secret Life of Bees எனும் பேரில் 2002இல் அமெரிக்காவைச்சேர்ந்த கதாசிரியர் Sue Monk Kidd என்பவரால் ஓர் நாவல் எழுதப்பட்டது. இந்த நாவல் 2008இல் படமாக்கப்பட்டது. இது பதின்மவயது சிறுமி ஒருத்தியை மையப்படுத்திய கதை. ஆகோ ஓகோ என்று சொல்வதற்கு இல்லை. ஆனால், படத்தை சும்மா பார்க்கலாம், பிழையில்லை. இங்கு சிறுமியாக நடிக்கின்ற பெண் Dakota Fanning இப்போது அமெரிக்காவில் வளர்ந்து வருகின்ற, சிறுவயதிலிருந்து நடிக்கும் (ஏராளம் விருதுகளை வென்றுள்ள) கதாநாயகி. 2012இல் வெளிவந்த The Twilight Saga எனும் படத்தில் Janeஆக நடித்தவரும் இவரே. இந்த The Secret Life of Bees படத்தில் பிரபல பாடகி Alicia Keys அவர்களும் ஒரு பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். முழு நீளப்பட இணைப்பு : http://www.putlo…
-
- 3 replies
- 643 views
-
-
[size=2] சத்யராஜ் , மணிவண்ணன், சீமான், ரகு மணிவண்ணன், கேரளா புது வரவு மிருதுளா, கோமல் ஷர்மா, வர்ஷா ஆகியோர் நடிக்க மிகப்பிரம்மாண்டமாக தயாராகும் படம் 'அமைதிப்படை பார்ட் 2 ' -''நாகராஜ சோழன் எம் ஏ., எம் எல் ஏ''. [/size] [size=2] 1994 ல் வெளிவந்து அரசியல் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய படம் அமைதிப்படை. நடிகர் சத்யராஜின் நடிப்பு பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை கொண்டாடிய படம் அமைதிப்படை. [/size] [size=2] இயக்குனர் மணிவண்ணனைப் பார்க்கும் ரசிகர்களும் சரி, அபிமானிகளும் ''சார் அமைதிப்படை மாதிரி ஒரு படம் கொடுங்க'' என்று கேட்டதன் விளைவு.. இந்த அமைதிப்படை இரண்டாம் பாகம். [/size] [size=2] இந்தப் படத்துக்கு 'அமைதிப்படை பார்ட் 2 '- ''நாகராஜ…
-
- 0 replies
- 692 views
-
-
[size=5]தமிழ் சினிமாவின் கற்பனை வறட்சியும் அக்கறைப் பஞ்சமும்[/size] அரவிந்த கிருஷ்ணா ஏன் தமிழ் சினிமாவில் மாற்று முயற்சிகள் வருவதில்லை? வந்தாலும் அவை ஏன் நேர்த்தியான ஆக்கங்களாக இருப்பதில்லை? அப்படியே இருந்தாலும் அவை ஏன் ஓடுவதில்லை? த்ரீ இடியட்ஸ், பீப்ளி லைவ், மை நேம் இஸ் கான் முதலான இந்திப் படங்கள் சமூக அக்கறையுடன் சில முக்கியமான பிரச்சினைகளைத் தொட்டுக் காட்டுகின்றன. பா, பிளாக், பர்ஃபி, தாரே ஜமீன் பர் முதலான சில படங்கள் தனி மனிதர்களின் அதிகம் கவனிக்கப்படாத சில உடல் நல மன நலப் பிரச்சினைகளைப் பற்றி அக்கறையுடன் பேசுகின்றன. இவை வணிக ரீதியாகவும் வெற்றி பெறுகின்றன. மேலே சொன்ன அனைத்துப் படங்களிலும் ஒரு முன்னணி இயக்குநர், நட்சத்திர ஹீரோ, நட்சத்திர ஹீரோயின் ஆகியோர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=2] 1976ம் ஆண்டு அன்னக்கிளி வழியாக சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு இசைத்துறையில் இது 31 வது ஆண்டு.[/size] [size=2] அன்னக்கிளி உன்னைத்தேடுதே எனத் தொடங்கிய இந்த இசையருவி நதியாக ஒடத்தொடங்கி இன்று கடல் அளவுக்கு தன் இசை எல்லையை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது. இளையராஜா பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள பண்ணையபுரம் கிராமம். இப்போது அது தேனி மாவட்டமாக உள்ளது. அப்பா பெயர் ராமசாமி. அம்மா சின்னத்தாயம்மாள். இரண்டாவது மனைவியின் ஐந்தாவது குழந்தை தான் இளையராஜா. ஆறாவது பிறந்தவர் தான் அமர்சிங் என்ற கங்கை அமரன். தனது இளம் வயது நினைவுகளை இளையராஜாவே சொல்கிறார்.[/size] [size=2] "நான் பிறந்தது 3&6&1943. அப்பாவுக்கு ஜோதிடம் தெரியும். என் பிற…
-
- 0 replies
- 2.3k views
-
-
[size=2] கவர்ச்சி நடிகை சுஜிபாலா & இயக்குநர் ரவிக்குமாரின் காதல் தற்போது முறிந்துள்ளது. ‘உண்மை’ என்ற தலைப்பில் படம் இயக்கி வரும் புதிய இயக்குநர் ரவிக்குமாருக்கும் அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த சுஜிபாலாவுக்கும் காதல் மலர்ந்தது. [/size] [size=2] இருவரது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. இடையில் திடீரென தற்கொலை முயற்சி மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார் சுஜிபாலா. ஆனால் நான் மாத்திரை மாற்றி சாப்பிட்டேன் என சமாளித்தார். ஆனால் அவரது தற்கொலை முயற்சியில் இருந்த உள் குத்து விவகாரம் தற்போது வெளியாகிஉள்ளது. [/size] [size=2] இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.[/size][size=2] இரு …
-
- 0 replies
- 455 views
-
-
[size=2] "ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தைப் போலவே, ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும், "சேட்டை படத்திலும், விமான பணிப் பெண்ணாக நடிக்கிறார் ஹன்சிகா. [/size] [size=2] அதோடு, "கலகல காமெடி, "கிளுகிளு கவர்ச்சி என, புகுந்து விளையாடி இருக்கிறார்.ஏற்கனவே ஆர்யாவுடன் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுத்துள்ளார் அஞ்சலி. [/size] [size=2] தற்போது குளியல் காட்சி ஒன்றில், அரைகுறை ஆடைகளுடன் ஹன்சிகா நடித்துள்ளார். ஒரு தண்ணீர் தொட்டிக்குள் நீச்சல் அடிப்பது போன்று படமான இந்த காட்சியை, ஒரு நாள் முழுக்க படமாக்கப்பட்டது. குறிப்பிட்ட நபர்களை தவிர யாருக்கும் அங்கே அனுமதி இல்லையாம்.[/size] [size=2] http://pirapalam.net/news/nadikai/hansika-081012.html[/size]
-
- 0 replies
- 506 views
-
-
இனி அவன் : பின் முள்ளிவாய்க்கால் திரைப்படம் யமுனா ராஜேந்திரன் 07 அக்டோபர் 2012 இனி அவன் திரைப்படம் எடின்பர்க் திரைப்பட விழாவிலும் தொறான்ரோ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டதனையடுத்து அப்படத்தினை அக்டோபர் இலண்டன் திரைப்பட விழாவுக்கு எதிர்பார்த்தேன். திரைப்பட்டியலி;ல் இனி அவன் இருக்கவில்லை. படத்தைப் பார்க்க வேண்டும் எனும் எனது இயல்பான அவஸ்தை எனக்கு இருந்தபடியால் எனது ஆவலை ஹந்தகமாவுக்கு மின்னஞ்சலில் தெரிவித்தேன். மின்னஞ்சல் அனுப்பப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் அதற்கு ஏற்பாடு செய்வதாக அவரிடமிருந்து பதில் வந்தது. அதற்கு அடுத்த நாள் அவரது படத்தயாரிப்பாளர் 24 மணிநேரம் பார்ப்பதற்காக மட்டும் எனக்கு ஒரு இணைப்பைப் பிரத்யேகமாக அனுப்பியிருந்தார். விமர்சனத…
-
- 1 reply
- 1.5k views
-
-
அண்மையில் இந்தப்படத்தை யூடியூப் ஊடாய் பார்த்தேன். 2005இல் வெளிவந்து பல விருதுகளைப்பெற்ற படம் இது. Memoirs of a Geisha எனும் நாவலின் கதையைக் கருவாகக்கொண்டது இது. கீசா எனும் சொல்லின் பொருளை கிட்டத்தட்ட தேவதாசி/அரம்பையர் போன்ற சொற்களுடன் ஒப்பிடலாம் என்று நினைக்கின்றேன். ஜப்பான் நாட்டு கலாச்சாரத்தில் கீசா என்பவர் (ஆண்களை) மகிழ்விக்கும் ஓர் பெண் கலைஞர். பொறுமை இருந்தால் பாருங்கள். பல விடயங்களை அறியமுடிந்தது. http://youtu.be/juT422RBwLk (முழுமையான படம்)
-
- 3 replies
- 754 views
-
-
[size=2]பில்லி, சூனிய பாதிப்பிலிருந்து விடுபட நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் பங்கேற்றார் சமந்தா. ஆந்திராவில் வசிக்கும் கேரள மந்திரவாதி டி.எஸ்.வினீத் பட். [/size] [size=2] நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மத்தியில் பிரபலம். தீய சக்திகளின் ஆதிக்கம் இருந்தால் அதை சிறப்பு பூஜைகள் நடத்தி சரி செய்வாராம். சமீபத்தில் இவரது உதவியை நாடினார் சமந்தா. ‘பாணா காத்தாடிÕ படத்தில் அறிமுகமான சமந்தா, ‘நான் ஈÕ பட வெற்றிக்கு பிறகு உச்சத்துக்கு சென்றார். [/size] [size=2] மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் திடீரென்று தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டார். படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மணிரத்னம், ஷங்கர் படங்களிலிருந்து விலகினார…
-
- 0 replies
- 3.9k views
-
-
[size=2] அழகான, குடும்பத்தை மட்டுமே கவனிச்சிக்கிற குடும்பத் தலைவி ஸ்ரீதேவி. கணவர், மகள் எல்லாருமே இவங்க அதிகம் படிக்காததுனால அடிக்கடி அவ மரியாதை செய்யறாங்க. அதுக்கு முக்கிய காரணம் நாலு பேர் எதிர்ல ஆங்கிலம் பேசத் தெரியாததுதான்.[/size] [size=2] ஸ்ரீதேவி நேரம் கிடைக்கும் போது அழகழகா லட்டு செஞ்சி வீடு வீடா கொடுக்கிறாங்க. லட்டு மட்டுமே செய்யத்தான் லாயக்குன்னு மத்தவங்க நினைக்கிற மாத்தி எப்படி அருமையா ஆங்கிலம் பேச கத்துகிறாங்க அதற்காக அவர் படும் சிரமம் என்பதே படத்தின் கதை.[/size] [size=2] நியூயார்க்குல இருக்கிற அக்கா பொன்னு கல்யாணத்துக்காக ஸ்ரீதேவி போறாங்க. திடீர்னு ஒரு நாள் நாலு வாரத்தில ஆங்கிலம் கத்துக்கற கிளாஸ்ல சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறாங்க. யாருக்கும் தெரிய…
-
- 2 replies
- 1k views
-