வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5562 topics in this forum
-
டிசம்பர் 9: திரை – ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ? PrakashDec 07, 2022 09:23AM இந்த மாதம் 9ஆம் தேதி அன்று மட்டும் திரையரங்குகளில் 5க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாக உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் கடைசி மாதமான டிசம்பரில் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். அதேபோலத்தான் இந்த ஆண்டும் ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வர உள்ளன. இதில், கடந்த டிசம்பர் 2ஆம் தேதி மட்டும் விஜய் சேதுபதியின் டி.எஸ்.பி., விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி, மஞ்சக்குருவி, தெற்கத்தி வீரன் உள்ளிட்ட படங்கள் தியேட்டர்களில் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த நிலையில், திரையுலகில் டிசம்பர் 9ஆம் தேதி ஒரு முக்கியமான நாளாகப் பார்க்கப்படுகிறது. அதன்படி, அந்த த…
-
- 0 replies
- 188 views
-
-
தமிழ் சினிமா 'திலீபன்': திரைக்கு வர தயாராகி வரும் ஒரு போராளியின் கதை கட்டுரை தகவல் எழுதியவர்,கல்யாண் குமார் பதவி,பிபிசி தமிழுக்காக 16 நவம்பர் 2022, 12:07 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் 'இயக்குநர்' ஆக வேண்டும் என்கிற கனவில் சென்னைக்கு வந்திறங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர்தான், பெங்களூரு வாழ் தமிழரான ஆனந்த் மூர்த்தி. பல போராட்டங்களுக்குப் பிறகு இயக்குநர்கள் கதிர் மற்றும் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். திரைப்பட வரலாற்றில் தன் ஒவ்வொரு படமும் தடம் பதிக்க வேண்டும் என்பதை தமது கொள்கையாகக் கொண்டிருக்கிறார் ஆனந்த் மூர்…
-
- 0 replies
- 285 views
- 1 follower
-
-
ஆட்டு தலை, மனித உடம்பு. யார் இந்த ஆட்டு குழந்தை?
-
- 3 replies
- 503 views
-
-
யசோதா - திரைப்பட விமர்சனம் பட மூலாதாரம்,@SAMANTHAPRABHU2 11 நவம்பர் 2022 நடிகர்கள்: சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், முரளி ஷர்மா; இசை: மணி ஷர்மா; இயக்கம்: ஹரி - ஹரீஷ். ஓர் இரவு, அம்புலி, ஆ ஆகிய படங்களை இயக்கிய ஹரி - ஹரீஷ் இரட்டையரின் லேட்டஸ்ட் படம்தான் இந்த யசோதா. சமந்தா நடித்திருப்பதால், கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது இந்தப் படம். இன்று வெளியாகியிருக்கும் இந்தப் படத்திற்கு ஊடகங்களில் தற்போது விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன. இந்தப் படத்தின் கதை இதுதான்: தன்னுடைய தங்கையின் மருத்துவச் செலவுக்குத் தேவைப்படுவதால், யசோதா (சமந்தா) வாடகைத் தாயாகிறார். அந்த காலகட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்த…
-
- 0 replies
- 491 views
- 1 follower
-
-
ஜாக்குலினை ஏன் கைது செய்யவில்லை? டெல்லி நீதிமன்றம் கேள்வி By DIGITAL DESK 3 10 NOV, 2022 | 06:24 PM இலங்கையரான பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என இந்திய அமுலாக்கத் துறையினரிடம் டெல்லி நீதிமன்றமொன்று இன்று கேள்வி எழுப்பியது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையவராக கூறப்படும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கத் துறை விசாரித்தது. இந்த விவகாரத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றம்சுமத்தப்பட்டவர்களின…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
கமல் ஹாசன் பிறந்தநாள்: ஓடிடி குறித்து கமல் கொடுத்த விளக்கம் முதல் அடுத்த பட அறிவிப்பு வரை கல்யாண் குமார் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒருபுறம் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு. இன்னொருபுறம் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸின் சார்பில் அடுத்தடுத்து நான்கு படங்களின் தயாரிப்புப் பணிகள். மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் 'தலைவன் இருக்கிறான்' படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் பதிவு. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணி, விக்ரம்-2 படத்தின் நூறாவது நாள் விழா ஏற்ப…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
அவதார் - 2 உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது ஏன்? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AVATAR/TWITTER 2009ஆம் ஆண்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய அவதார் திரைப்படத்தின் அடுத்த பாகம் டிசம்பரில் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவதார் திரைப்படம் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துவது ஏன்? இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அவரது துவக்க காலத் திரைப்படங்களில் இருந்தே உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டவர். இவரது இயக்கத்தில் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் நடித்து 1984ல் வெளியான The Terminator பெரும் பரபரப்பை ஏற…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
ஐஸ்வர்யா ராயால் நம்ப முடியாத நிஜம்: "எனக்கா 49 வயது"- பிரபலங்கள் கொண்டாட இதுதான் காரணம் கல்யாண்குமார். எம் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AISHWARYARAIBACHCHAN_ARB படக்குறிப்பு, ஐஸ்வர்யா ராய் திரைப்பட உலகில் 25 ஆண்டுகளாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய், தனது பிறந்த வயது 49 என்பதை நம்ப முடியாதவராக இருக்கிறார். சமீபத்தில் ஒரு திரைப்படத்துக்காக அவர் எடுத்துக் கொண்ட படத்தை பகிர்ந்தபடி இந்த கருத்தைத்தான் ஐஸ்வர்யா ராய் பகிர்ந்திருக்கிறார். பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கதாநாயகிகள் மீது ஒரு ஈ…
-
- 0 replies
- 296 views
- 1 follower
-
-
“பொன்னியின் செல்வன்“ பார்த்தார் மஹிந்த ராஜபக்ஷ அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்ட பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன் – 1’ படத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பார்த்து ரசித்துள்ளார். கொழும்பில் உள்ள savoy திரையரங்கில் தனது பாரியாருடன் இணைந்து இன்றைய தினம்(19) இந்த படத்தினை அவர் பார்த்து ரசித்துள்ளார். எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்…
-
- 3 replies
- 1.1k views
-
-
வாடகைத்தாய் மூலம் நடிகை நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தை ? By T. SARANYA 10 OCT, 2022 | 10:56 AM வாடகைத்தாய் மூலம் நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கேரளாவை சேர்ந்த நயன்தாரா 2005 இல் தமிழில் 'ஐயா' படத்தில் அறிமுகமாகி 17 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கிறார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அவருடன் காதல் வயப்பட்டார். இருவரும் 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி மாமல்லபுரத்தில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தில் ரஜினிகாந…
-
- 29 replies
- 3.1k views
- 1 follower
-
-
'Love is political' என்ற வசனத்திற்கேற்ப மனிதர்களுக்கிடையேயான இயற்கையான காதல் உணர்வை போலி கவுரவம் எப்படி அறுத்து பலியிடத் துடிக்கிறது என்பதுதான் 'நட்சத்திரம் நகர்கிறது'. சினிமாவில் நடித்து பெரிய ஹீரோ ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி வருகிறார் அர்ஜுன் (கலையரசன்). அங்கு நாடகக் குழு ஒன்றில் இணைந்து நடிப்பு பயிற்சியில் ஈடுபடும் அவர், குழுவிலிருப்பவர்களின் கருத்தியலில் முரண்படுகிறார். தொடர்ந்து நாடகக் குழு சார்பில் அரசியல் நாடகம் ஒன்று நடத்த திட்டமிடப்படுகிறது. இதையொட்டி ரெனே (துஷாரா) - இனியன் (காளிதாஸ்) காதல் ப்ரேக் ஒன்றும் நிகழ்கிறது. இப்படியான பல கிளைக்கதைகளால் நகரும் நட்சத்திரக் கூட்டத்தில் இறுதியில் அரசியல் நாடகம் நடத்தப்பட்டத…
-
- 1 reply
- 504 views
-
-
காந்தாரா - சினிமா விமர்சனம் 14 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,RISHABH SHETTY நடிகர்கள்: ரிஷப் ஷெட்டி, கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி, சப்தமி கௌடா; ஒளிப்பதிவு: அரவிந்த் எஸ். காஷ்யப்; இசை: அஜனீஷ் லோக்நாத்; இயக்கம்: ரிஷப் ஷெட்டி. கன்னடத்தில் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் 'காந்தாரா' திரைப்படம், இந்த வாரம் முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு அக்டோபர்16இல் வெளியாகிறது. கடந்த சில ஆண்டுகளில் 'கவலுதாரி', 'கருட கமனா க்ருஷப வாகனா' என கன்னட திரையுலகிலிருந்து கவனிக்கத்தக்க திரைப்படங்களாகவே வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், காந்தாரா இந்தப் போக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத…
-
- 0 replies
- 335 views
- 1 follower
-
-
இயக்குநர் ராம் தமிழில் தீவிர சமூகவியல் விவாதங்களை எழுப்பும் படங்களை எடுப்பவர் ராம். தமிழ் தேசியம், நகரமயமாக்கலால் ஒடுக்கப்படும் தனியர்களின், சாமர்த்தியமற்றோரின் உளவியல், குரூரமும் கருணையும் கலந்த பெண்களின் தனித்த உலகம், உலகுடன் ஒத்துப் போக முடியாத வளர்ந்தவர்களின் உருவகம் போலத் தோன்றும் கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகள், எல்லாரையும் மன்னிக்கிற யாரையும் நசுக்கக் கூடிய இவ்வாழ்க்கையின் குறியீடான இயற்கை, இவற்றுக்கு இவர்களுக்கு இடையிலான மோதலே ராமின் படங்கள். யாருடனும் ஒப்பிட முடியாத தனித்துவமான பார்வையும் திரைமொழியும் கொண்ட படங்களை எடுத்திருக்கிறார் ராம். "பராசக்திக்குப்" பிறகு பார்வையாளர்களுடன் நேரடியாக அரசியல் 'பேசுகிற' படங்களை…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
பொய்களின் புதையலே பொன்னியின் செல்வன்! -சாவித்திரி கண்ணன் சோழ மண்ணின் வரலாற்று அடையாளங்களே இல்லாத காட்சிப்படுத்தல்கள்!, சத்தியம் செய்து சொன்னாலும் கூட தமிழச்சிகள் என நம்ப முடியாத நடிகைகள்! நாளும், பொழுதும் போர்களோடும், சூழ்ச்சிகளோடுமாக மன்னர்கள் வாழ்ந்ததாக காட்டும் அறியாமை! பிரம்மாண்டம் காட்டிடும் பித்தலாட்டச் சினிமா! உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தப் படம் பற்றி எழுதுவதையே தவிர்த்து விடலாம் என்று தான் படம் பார்த்து முடித்ததும் தோன்றியது! அந்த அளவுக்கு படத்தில் வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம், வன்முறைகள், ரத்தம் போன்றவை தூக்கலாக இருந்தது ஒரு காரணம்! ‘பண்டைய மன்னராட்சி காலம் என்றாலே அன்று இயல்பாக மனிதர்கள் இருந்திருக்க மாட்டார்களோ..…
-
- 1 reply
- 752 views
- 1 follower
-
-
பொன்னியின் செல்வன் - 1 படத்தின் வசூல் இதுவரை எவ்வளவு? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LYCA PRODUCTIONS / MADRAS TALKIES மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் குறித்து விமர்சகர்கள் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்தாலும், படம் உலக அளவில் மிகப் பெரிய வசூலைப் பெற்றுவருகிறது. தமிழ்நாட்டில் வசூல் 100 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாக திரையுலகினர் கூறுகின்றனர். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் சுமார் 2,000 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. மிக பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்புச் செ…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
பொன்னியின் செல்வன் பற்றி இலங்கையின் முன்னாள் ஒலி ஒளிபரப்பாளர் சத்தியநாதன்
-
- 11 replies
- 1.5k views
-
-
-
- 31 replies
- 2.7k views
- 1 follower
-
-
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற நடிகர் சூர்யா By DIGITAL DESK 5 01 OCT, 2022 | 04:03 PM புது தில்லியில் நடைபெற்ற 68 ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் சார்பில் திரைப்படத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது ' சூரரைப் போற்று' படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யா தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவருக்கு நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சூர்யாவிற்கு விருதினை வழங்கி கௌரவித்தார்.…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
@ராசவன்னியன் பொன்னியின் செல்வன் எப்படி இருக்கு. படத்தில்.... இலங்கை, என காட்டப்பட்ட காட்சிகள், தாய்லாந்தில் எடுக்கப் பட்டதாம்.
-
- 0 replies
- 329 views
-
-
உண்மையான பான் இந்திய படம் பொன்னியின் செல்வன் : பிரபலங்கள் பேச்சு! மின்னம்பலம்2022-07-09 பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம்பிரபு, பிரகாஷ்ராஜ், ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். முதல் பாகம் …
-
- 22 replies
- 2.7k views
- 2 followers
-
-
பொன்னியின் செல்வன் - நாராயணா, இலங்கை தேசம் தொடர்ந்து புதிய ’சிங்கள’ பஞ்சாயத்து.! சென்னை: இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் சினிமா தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இப்போது இலங்கையில் இருந்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது. பொன்னியின் செல்வன் மெகா திரைப்படத்தில் தமிழ்த் திரை உலக நட்சத்திரப் பட்டாளங்கள் ஒன்று திரண்டு நடித்திருக்கின்றன. உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன் இந்தப் படம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. நாராயணா.. பொன்னியின் செல்வன் படம் வெளியாவதற்கு முன்னரே முன்னோட்ட காட்சிகளைக் கொண்டே சர்ச்சைகள் வரிசையாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. தமிழில் வெளியான முன்னோட்டத்தில், ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரம், நாராயணா என சொல்வதற…
-
- 2 replies
- 425 views
-
-
சமந்தாவுக்கு என்னாச்சு? சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்! JegadeeshSep 21, 2022 19:49PM தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு உட்பட பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவுடன் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா தமிழில் விஜய், சூர்யா உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதிலும் கடந்த ஆண்டு ‘புஷ்பா’ படத்தில் ஆடிய ஒற்றை பாடலுக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துவிட்டார். இந்நிலையில், அதிக வெளிச்சத்தில் நடித்தால் வரக்கூடிய பாலிமார்பஸ் லைட் எரப்ஷன் என்ற தோல் நோயால் ந…
-
- 0 replies
- 350 views
-
-
தமிழ் சினிமா படம் வெளியாகி 3 நாட்களுக்குப் பிறகே விமர்சனம்: திரையுலகிற்குப் பலனளிக்குமா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கோப்புப்படம் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகி மூன்று நாட்களுக்குப் பிறகே விமர்சனங்களை வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்வதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது திரையுலகிற்கு எந்த அளவுக்குப் பலனளிக்கும்? தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று காலை நடைபெற்றது. சங்கத் தலைவர்…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
அண்மையில் நான் பார்த்த படங்களில் உலுக்கி எடுத்த இன்னொரு நல்லதொரு திரைப்படம்.OTT யில் வெளியாகியுள்ளதால் IPTV மற்றும் பல streaming தளங்களில் இப்படத்தை பார்க்கலாம். குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவை செய்கின்றவர்கள் எம் கண் முன் மிகவும் சாதாரணமாக உலவுகின்றவர்களே என்றதை நெற்றிப் பொட்டி பலமாக அறைந்து சொல்கின்றது இப் படம். பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் கண்டிப்பாக பாருங்கள் ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் கண்டிப்பாக பாருங்கள் பிள்ளைகளைப் பெற்றாதவர்களும் கண்டிப்பாக பாருங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து பாருங்கள் --------------- கார்கி: திரை விமர்சனம் ஒரு சிறுமி, அவள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் கூட்டுப் பாலியல்வன்கொடுமைக்கு…
-
- 2 replies
- 929 views
-
-
வெந்து தணிந்தது காடு விமர்சனம்! Sep 16, 2022 07:06AM IST தமிழ் சினிமாவில் வந்த கேங்ஸ்டர் படங்களில் ஆங்கிலப் படங்களின் பாதிப்பு இருக்கும். 1987 ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா, நாசர், ஜனகராஜ், நிழல்கள் ரவி நடித்து ” நாயகன்” திரைப்படம் வெளியானது. அதன் பிறகு இந்த படத்தின் திரைமொழியாக்கத்தை முறியடிக்க கூடிய வகையில் எந்தப் படமும் கடந்த 35 ஆண்டுகளில் வெளிவரவில்லை. தமிழ்நாட்டின் கடைகோடி, கடலோர பகுதிகளான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து பிழைப்புக்காகவும், தொழில் செய்வதற்காகவும் தினந்தோறும் மும்பை நோக்கி நம்பிக்கையுடன் பயணிப்பவர்கள் இன்றும் உள்ளனர். அப்படி சென்று தாதாக்களின் தலைவனாக மாறுபவர்களும் உண்டு. இதில…
-
- 2 replies
- 591 views
-