Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. நடிகை பூஜாவுக்கு, தொழில் அதிபருடன் ரகசிய திருமணம். சென்னை: நடிகை பூஜாவுக்கு ரகசியமாக திருமணம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜே ஜே படம் மூலம் கோலிவுட் வந்தவர் இலங்கையை சேர்ந்த நடிகை பூஜா. அவரது தாய் இலங்கையை சேர்ந்தவர், தந்தை கர்நாடகாவை சேர்ந்தவர். பெங்களூரில் படித்த பூஜா தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, சிங்கள மொழிப் படங்களில் நடித்து வந்தார்.அவருக்கும் இலங்கையை சேர்ந்த தொழில் அதிபர் தீபக் சண்முகநாதனுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்குள் ஒத்துப் போகாது என்று கூறி பிரிந்துவிட்டனர். இந்நிலைில் பூஜாவுக்கும், தீபக்கிற்கும் கொழும்புவில் ரகசியமாக திருமணம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பூஜா தமிழில…

  2. ’யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை’ ஸ்ருதிஹாசன் ‘சங்கமித்ரா’ திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அடுத்து ‘சபாஷ்நாயுடு’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஹிந்தியில் நடித்துள்ள ‘பெஹன் ஹோகி தேரி’ திரைப்படம் 9ஆம் திகதி வெளியாகிறது. இந்த நிலையில், சுருதிஹாசன் அறுவை சிகிச்சை செய்து தனது உதட்டை அழகுபடுத்திக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் சிலர் அவரை விமர்சித்தனர். இதற்கு பதில் அளித்துள்ள ஸ்ருதிஹாசன், “என் உடம்பு, என் முகம், என்ன வேண்டுமானாலும் செய்வேன். யாருக்கும் பதில் சொல்லவேண்டியது இல்லை. சமூக வலைத்தளங்களில் யார் என்னைப்பற்றி என்ன எழுதினாலும் எனக்கு கவலை இல்லை. நான் யாருக்கும் பதில…

  3. டைரக்டர் விஜய் டைரக்‌ஷனில் ‘இளையதளபதி’ விஜய் ஹீரோவாக நடித்து வரும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத புதிய படத்துக்காக மும்பையிலுள்ள பிஸியான ஏரியாவான மாஹிம் ஏரியாவை செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார் டைரக்டர் விஜய். ‘துப்பாக்கி’ படத்துக்குப் பின் இளையதளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பை மும்பையில் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏற்கனவே முதல்கட்ட படப்பிடிப்பை மும்பையில் நடத்திய டைரக்டர் விஜய் அந்தப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பையும் மும்பையில் எப்போதுமே பிஸியாக இருக்கும் பிரபல ஏரியாவான மாஹிம் ஏரியாவில் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்தப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தினால் ரசிகர்களால் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்று போலீஸார் எச்ச…

  4. [size=4]பிரபல இந்திப்பட இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கும் படம் 'டேவிட்!. இப்படத்தில், விக்ரம், ஜீவா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். கதைப்படி, விக்ரம் மீனவராகவும், ஜீவா இசைக் கலைஞராகவும் நடிக்கும் இப்படம், இரண்டு தனி கதைகளை கொண்டதாம். அதோடு, இரண்டு கதைகளையும், இரண்டு கேமராமேன்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.[/size] [size=4]மேலும், இப்படத்துக்கு, எட்டு பேர் இசையமைத்துள்ளனர். அவர்களில், "கொலைவெறிடி புகழ் அனிருத், பிரஷாந்த் பிள்ளை, மாடர்ன் மாபியா, ரெமோ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  5. ``ஆர்யாவோட முடிவு அப்போ தப்பா தெரிஞ்சது... இப்போ..?!’’ - `எங்க வீட்டு மாப்பிள்ளை' சீதாலட்சுமி `` `எங்க வீட்டு மாப்பிள்ளை’தான் நான் கலந்துக்கிட்ட முதல் ரியாலிட்டி ஷோ. இந்த ஷோ பற்றி கேள்விப்பட்டதும் ரொம்ப புதுசா இருந்துச்சு. இதுல என்ன இருக்குனு ஆர்வத்தோட கலந்துக்கப் போனேன்..'' எனப் படபடவென பேச ஆரம்பிக்கிறார் சீதாலட்சுமி. `எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஷோவோட ஃபைனல்ல ஆர்யா அந்த முடிவைச் சொன்னதும் உங்களுக்கு எப்படி இருந்தது..? ``ஃபைனல் அப்போ அவர் கையில் டோக்கன் ஆஃப் லவ் ரிங் வச்சிருந்ததை பார்த்தப்போது, வின்னர் பெயரைச் சொல்லப்போறாருனு நினைச்சுட்டு இருந்தோம். ஆனால், அவர் எதுவும் சொல்லாம, `நன்றி, வணக்கம்’னு சொன்னதும் எனக்கு செம ஷாக். மு…

  6. The way back ஆங்கில சினிமா சுதந்திரத்திற்கான வேட்கை அடக்க முடியாதது. மற்றவனுக்கு தாழ் பணிவதும், அடங்கி வாழ்வதும், கொடும் சிறையில் அடைக்கப்பட்டு அல்லலுறுவதும் எந்தவொரு மனிதனுக்கும் உவப்பானதல்ல. அதுவும் செய்யாத குற்றத்திற்காக அடைபட்டுக் கிடப்பது கொடூரமானது மட்டுமல்ல அவலமானதும் கூட. Janusz (Jim Sturgess) சிறையில் அடைபடுகிறான். அவன் குற்றம் செய்யவில்லை என்பது சூசமாக எமக்கு உணர்த்தப்படுகிறது. அவனது மனைவியே அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்வதைப் பார்க்கிறோம். பயத்தில் உறைந்த முகமும், கலைந்து கிடக்கும் கேசமும், சிவந்த கண்களும், முட்டிக் கொண்டு வரும் கண்ணீரும், அது உதிர்வதைத் தடுக்க முயலுவதுமாக அவள். மறுபு…

  7. அண்மையில் வெளிவந்த அமெரிக்க ஆக்‌ஷன் படங்களில் நல்லவை என்று கூறப்படுபவற்றைப் பார்க்கவேண்டும் என்று விரும்பினேன். ஒரு நாள் நேரம் கிடைத்தபோது, இணையத்தில் கடந்த 10 வருடங்களில் வெளியான அமெரிக்க ஆக்‌ஷன் படங்களைத் தேடிக்கொண்டிருந்தபோது Internet Movie Data Base (IMDB) என்றழைக்கப்படும் இணைய திரைப்பட தொகுப்பு எனும் இணையத் தளத்திற்குள் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த இணையத்தில் அனைத்துத் திரைப் படங்களையும் தரப்படுத்தி அத்திரைப்படங்களின் கதையைச் சுருக்கமாக விவரித்திருப்பார்கள். நாங்கள் ஆகா ஒகோ என்று புழுகும் அமெரிக்கப் படங்களுக்கு இவர்கள் கொடுக்கும் தரப்படுத்தல் புள்ளிகள் அவ்வளவு நன்றாக இருப்பதில்லை. பத்துப் புள்ளிகளுக்கு ஆறு புள்ளிகள் கிடைத்தாலே அந்தத் திரைப்படம் நிச்சயம் சிறந்த…

    • 1 reply
    • 594 views
  8. முதல் பார்வை: ஜானி உதிரன்சென்னை ரெண்டரை கோடிக்கான பண வேட்டையில் சாகசம் செய்யும் எதிர் நாயகனின் கதையே 'ஜானி'. பிரபு, ஆனந்த்ராஜ், அஷுதோஷ் ராணா, பிரசாந்த், ஆத்மா பேட்ரிக் ஆகிய ஐவரும் பிசினஸ் பார்ட்னர்கள். சீட்டு ஆடும் கிளப், மதுபானக்கூடம் என பல தொழில்களைச் செய்து வரும் இவர்கள் பணத்துக்காக சில சட்டவிரோதச் செயல்களையும் செய்கின்றனர். ரெண்டரை கோடி ரூபாய் பணம் தயார் செய்தால் கையில் விலை உயர்ந்த போதைப்பொருள் கிடைக்கும் என்று பிரபுவின் நண்பர் சாயாஜி ஷிண்டே கூறுகிறார். இதற்காக ஐவரும் இணைந்து ஆளுக்கு ரூ.50 லட்சம் ஏற்பாடு செய்கிறார்கள். பணத்தை சாயாஜி ஷிண்டேவிடம் யார் கொடுப்பது, பொருள் வாங்குவது எப்படி? பயணமுறை, பிக் அப் செய்வது என எல்லாம் பக்காவாக திட்டமிடப்ப…

  9. '' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்!'' - ஜெனிஃபர் கில்லி’ படத்தில் ‘புவி’ கதாபாத்திரம் மூலம் நம்மைக் கவர்ந்தவர் ஜெனிஃபர். தற்போது சன் டி.வி-யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ஸ்டார் வார்’ நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுக்கு நிகராக போட்டி போட்டு விளையாடி வருகிறார். அவரோடு ஒரு ஜாலி கேலி இன்டர்வியூ. ``ஒரு கல்யாண வீட்டுக்குப் போயிருந்தப்போ என்னை பார்த்துட்டு பி.வாசு சார் அவருடைய படத்துல நடிக்கக் கேட்டார். வீட்டிலேயும் ஒத்துக்கிட்டு என்னை நடிக்க வைச்சாங்க. என்னுடைய முதல் படம் ‘கிழக்கு கடற்கரை’. அப்ப ஆரம்பிச்ச பயணம் இப்பவரைக்கும் தொடருது’’ என்றவர் சீரியல் பயணம் பற்றிப் பேசினார். ``சின்ன வயசுல பட…

  10. மோகன்லால்: உளவியலும் உடல்மொழியும் ஆர். அபிலாஷ் கமலின் நடிப்பு பற்றி ஒரு ஓரு பேட்டியில் மணிரத்னத்திடம் கேட்கிறார்கள். அவர் ”நாயகன்” படத்தில் ஒரு காட்சியை படமாக்கிய அனுபவம் பற்றி சொல்கிறார். அது ரொம்ப முக்கியமான காட்சி. அதனால் அதை டாப் ஆங்கிளில் படமாக்க நினைக்கிறார் மணிரத்னம். அது போல் பின்னணி சூழல் அமைப்பிலும் கவனம் செலுத்துகிறார். ஆனால் கமல் நடிக்க துவங்கியதும் மொத்த காட்சியையும் அவர் ஆதிக்கம் செலுத்துகிறார். அதாவது ஒளிப்பதிவாளர், பின்னணி இசை அமைப்பாளர், கள அமைப்பாளர், கூட நடிப்பபவர்கள் யாரையும் பொருட்படுத்தாமல் கமல் தன்னந்தனியாக காட்சியை தன் முதுகில் தூக்கி செல்கிறார். மணிரத்னம் இதை ஒரு சிறப்பாக வியந்தாலும் கூட இது ஒரு குறை அல்லவா எனவும் …

  11. பிரபல தமிழ் நடிகை த்ரிஷா- தொழிலதிபர் வருண்மணியன் நிச்சயதார்த்தம் சென்னையில் இன்று நடைபெற்றது. சினிமாவில் 12 ஆண்டுகளாக நீடித்து வரும் த்ரிஷாவின் திருமணம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியானது. இதனிடையே, தொழிலதிபரான வருண்மணியனுடன் சேர்ந்து த்ரிஷா இருப்பது போன்ற படங்கள் வெளியானது. இதனால் த்ரிஷாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக செய்தி வெளியானது. ஆனால், இதனை த்ரிஷா மறுத்தார். இந்நிலையில், திடீரென வருண்மணியனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடந்த ஜனவரி 7ஆம் தேதி த்ரிஷா திடீரென அறிவித்தார். மேலும், ஜனவரி 23 ஆம் தேதி ( இன்று) திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் கூறியிருந்தார். அதன்படி, சென்னையில் இன்று காலை த்ரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடை…

  12. .சத்யராஜ் -மணிவண்ணன் காம்பினேசன் என்றாலே அந்த படத்தில் ஒரு பரபரப்பு இருக்கும். இன்னார் என்று பாராமல் கலாய்க்கும் அரசியல் காமடி சிரிக்க வைத்து விலா எலும்புகளை பதம் பார்க்கும். மொத்தத்தில் இந்த காம்பினேசன் பெரிய ஹிட் கொடுத்த படங்கள் ஏராளம். ‘வாழ்க்கை சக்கரம்’, ‘நூறாவது நாள்’, ‘புதுமனிதன்’, ‘மாமன் மகள்’ போன்ற படங்கள் உதாரணம். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ‘அமைதிப்படை’ படத்தின் இரண்டாம் பாகம் ‘நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ.,’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இது, சமீபத்திய அரசியலை கிண்டல் செய்யும் காமெடி படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், மணிவண்ணன், சீமான், ரகுமணிவண்ணன், வையாபுரி, எம் எஸ் பாஸ்கர், கோமல்ஷர்மா, வர்ஷா, மிருதுளா, அன்சிபா, கிருஷ்ணமூர்த்தி என்ற ம…

    • 0 replies
    • 593 views
  13. சமந்தாவின் குழப்பம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்தாலும் நான் ஈ படத்தின் மூலம்தான் தமிழ் ரசிகர்களிடையே அதிக அறிமுகமானவர் சமந்தா. நீதானே என் பொன்வசந்தம் அவருக்கு சிறந்த நடிகை என்ற விருதினை அளித்தது. சித்தார்த்துடன் காதல் என்ற செய்தி திடீரென்று பரவியது. அப்புறம் நாங்கள் நண்பர்கள்தான் என்று ஸ்டேட்மெண்ட் விடுகின்றனர். பரிகார பூஜை சமந்தாவும், சித்தார்த்தும் இணைந்து கோவில்களுக்கு ஜோடியாக சென்று பூஜைகளில் பங்கேற்றார்கள். விழாக்களுக்கு ஜோடியாக வருகிறார்கள். இருவருக்கும் விரைவில் திருமணத்தை முடிக்க குடும்பத்தினர் திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. - பப்ளி ஹன்சிகா இன்றைக்கு இளம் ரசிகர்களின் கனவுக்கன்னி ஹன்சிகாதான். சிம்பு காதலித்தால் அதற்கு மறுப்ப…

  14. தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு புதுடெல்லி, 2019ஆம் ஆண்டுக்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: * தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. * விஸ்வாசம் படம் இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருது * பார்த்திபன் இயக்கம், நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு படத்திற்கு சிறப்பு விருது * ஒத்த செருப்பு திரைப்படத்துக்காக ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிப்பதிவாளர் விருது * சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுசுக்கு வழங்கப்பட்டுள்லத…

  15. ரூ. 4500 கோடி வசூல் செய்து ஹாரிபாட்டர் படம் சாதனை ஹாரி பாட்டர் கதையை தழுவி எடுக்கும் சினிமா படங்கள் உலக அளவில் வசூல் சாதனையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் இதன் இறுதி பாகமான ஹாரிபாட்டரும், உயிர் ரகசியமும் (“ஹாரி பாட்டர் அண்டு டெத்லி ஹாலோவ்ஸ்” பார்ட்-2) என்ற படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை உலகம் முழுவதும் அமெரிக்காவின் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் பரபரப்பாக ஓடி வசூலில் சக்கை போடு போடுகிறது. இப்படம் இதுவரை ரூ.4500 கோடி வசூல் செய்து “பாக்ஸ் ஆப் கிட்” பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு வெளிவந்த பைரேட் ஆப் தி கரீபியன் என்ற படம் முதலிடம் வகிக்கிறது. இது ரூ.4635 கோடி வசூல் செய்துள்ளது. அதற்கு அடுத்த படியாக இப்படம் ரூ.4,500 க…

    • 0 replies
    • 592 views
  16. முத்திரை பதித்த வித்தகர்! S. V. Ranga Rao and M. R. Radha in Modern Theatres' `Kavitha'. - THE HINDU ஜூலை 3: எஸ்.வி.ரங்கா ராவ் நூற்றாண்டு தொடக்கம் செல்வாக்கு பெற்ற நடிகர்கள் வலிந்து உருவாக்கிக்கொண்ட சாகசக் கதாபாத்திரங்களின் நிழல், அத்தனை எளிதில் அவர்களை விடுதலை செய்வதில்லை. அவர்களுக்கான நட்சத்திரப் பிம்பத்தை உருவாக்குவது அந்த நிழலே. அந்தப் பிம்பத்துக்கு நேர்மாறான கதாபாத்திரத்தில் நடிக்கும்போது மக்கள் ஏற்பதில்லை. உச்ச நடிகர்கள் ஏற்கும் கதாபாத்திரங்களில், பிம்ப ஒளிவட்டம் பொருந்திய நடிகர்களாகவே பார்வையாளர்களுக்குத் தெரிவதால்தான் இந்தப் பின்னடைவு. எம்.ஜி.ஆரை ‘எங்க வீட்டுப் பிள்ளை’யாகவும் ஜெமினி கணேசனைக் காதல் மன்னனாக…

  17. களத்தில் சந்திப்போம் ரீமேக் உரிமைக்கு போட்டி போடும் நடிகர்கள் ஜீவா, அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ள படம் களத்தில் சந்திப்போம். என்.ராஜசேகர் இயக்கிய இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்பி.சவுத்ரி தயாரித்து இருந்தார். இந்த நிறுவனத்தின் 90வது தயாரிப்பு இது. குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய பொழுதுபோக்கு படமாக அமைந்துள்ளதால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா காரணமாக மக்கள் தியேட்டர்களுக்கு வர தயங்கிய நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவழைத்தது. அடுத்து களத்தில் சந்திப்போம் படம் தியேட்டர்களுக்கு குடும்ப ரசிகர்களை வரவழைத்துள்ளது. அனைவரும் ரசிக்கும் வகை…

  18. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் யாருக்கு தெரியாமல் ரகசியமாக நடந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையேயான காதல் கோலிவுட்டில் ஹாட் செய்தி. இந்நிலையில், ஒருவரும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாகவும், தனி குடியிருப்பில் சேர்ந்து வாழ்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தான், நயன்தாரா முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை தவிர்க்கிறார். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் அறம், டோரா, கொலையுதிர் காலம் படங்களில் கூட ஹீரோ கிடையாது. நயன்தாரா தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்ய…

  19. கரகம் என்ற படத்தை தயாரித்த எஸ்.கே.எம்.மீடியா என்ற பட நிறுவனம் அடுத்து தயரிக்கும் படத்திற்கு “அப்பாவுக்கு கல்யாணம்” என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகனாக எம். பாண்டியன் நடிக்கிறார். கதாநாயகியாக ரசிகப்ரியா நடிக்கிறார். மற்றும் எஸ்.எஸ்.மீனாட்சி ,தேவி சரவணன்,சங்கர், கிருஷ்ணமூர்த்தி, அற்புதம், வனிதா ஆகியோரும் நடிக்கிறார்கள். இசை - சார்லஸ்தனா ஒளிப்பதிவு - சி.கணேஷ்குமார் நடனம் - ஜி.சம்பத் , நிர்மல் கலை - ஜி.பாபு தயாரிப்பு நிர்வாகம் - என்.ஜனார்த்தனம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் ஆறுமுகசாமி படம் பற்றி இயக்குனர் ஆறுமுகசாமி..... ஒரு வெட்டியான் தான் ஆசையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்ற நினைப்பில் இருக்கிறான்.…

    • 0 replies
    • 592 views
  20. முதல் பார்வை: C/O காதல் பள்ளிக் காலம், பதின்ம வயது, நடுத்தர வயது, 40 வயதுக்கு மேல் என நான்கு பருவங்களில் நடக்கும் காதல் கதைகள். இதில் எந்தக் காதல் கை கூடியது, எது தோல்வியடைந்தது என்பதே 'C/O காதல்'. காதல் என்பதைத் தாண்டிய பொதுவான விஷயம் ஒன்று இந்த நான்கு காதல்களுக்கு இருக்கிறது. அதுவே படத்தின் முக்கியமான திருப்புமுனை. ஒரு காதலைத் தவிர மற்ற மூன்று காதல் கதைகளிலும் ஏதோ ஒரு விஷயம் கண்டிப்பாக நம்மைப் பாதிக்கிறது. பள்ளி நாட்கள் காதல் கதையில் சிற்பி கதாபாத்திரத்தின் முடிவும், நடுத்தர வயதுக் காதலில் சலீமா கதாபாத்திரத்தின் முடிவும் அதிர்ச்சியைத் தர, 40 வயதைக் கடந்த இருவர் காதலிக்கும் கதையில் அதன் வெகுளித்தனமும், நடக்கும் சம்பவங்களின் நகைச்சுவையும் ஆச்சரியத்தை…

  21. திரைக்குப் பின்னால்: இளையராஜாவின் இசை நிழல்! ராஜாவுடன் புரு ஆர்.சி.ஜெயந்தன் சரியாக 44 ஆண்டுகளுக்கு முன் ஓர் இசையமைப்பாளராகப் பிரவாகித்த இளையராஜா, தன் அறிமுகப்படத்தைக்கொண்டே, ‘அன்னக்கிளி’க்கு முன், ‘அன்னக்கிளி’க்கு பின் எனத் தமிழ்த் திரையிசையை இரு கூறாகப் பிரிக்கவேண்டிய கட்டாயத்தை உருவாக்கினார். புதிய இசைவடிவம், புதிய இசைக்கருவிகளின் அறிமுகம், புதிய ஒலிப்பதிவுத் தொழில்நுட்பம் என மெல்லிசை மன்னருக்குப் பின்னர், பெருந்தேடல் கொண்டிருந்தார். தனது தேடலுக்கு ஏற்ற ரசனை மிகுந்த ஒரு கலைஞனைத் தன் அருகில் வைத்துக்கொள்ள நினைத்தார். அப்போது நவீனத்தின் மொத்த உருவமாக அவருக்குக் கிடைத்தவர்தான் ‘புரு’ என்று இளையராஜாவால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட ஆர். புருஷோத்தமன். …

  22. பாடல்களே தேவையில்லை! - ஜிப்ரான் "கமல் அலுவலகத்தில் இருந்து போன் பண்ணி, "கமல் படத்துக்கு இசையமைக்க வேண்டும். டெல்லிக்கு கிளம்பி வாருங்கள்' என்றார்கள்" அறிமுகமான முதல் படத்திலேயே ("வாகை சூட வா') கவனம் ஈர்த்தவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். அந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு, இவருடன் பணிபுரிய விரும்பியவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான் கமல். "விஸ்வரூபம்-2' படத்துக்கு ஜிப்ரானை இசையமைக்க அழைத்த கமல், அவரின் இசை பிடித்துப் போனதால் தொடர்ந்து "உத்தம வில்லன்', "பாபநாசம்' பட வாய்ப்புகளையும் ஜிப்ரானுக்கே வழங்கியிருக்கிறார். அவரைச் சந்தித்தோம். முதல் படத்திலேயே உங்களுக்கு எக்கச்சக்க ரெஸ்பான்ஸ். அந்த நேரத்தில் எப்படி உணர்ந்தீர்கள்? என் பாட்டை எல்லோரும் கேட்க வேண்டும் …

  23. அவென்ஜர்ஸ்' இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கும் தனுஷ் நடிகர் தனுஷ் சகோதரர் செல்வராகவன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 2௦௦2ல் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்கம் எனப் படிப்படியாக உயர்ந்துள்ளார். ஏற்கனவே இரண்டு பாலிவுட் படங்களில் நடித்து உள்ளார். தற்போது மூன்றாவது பாலிவுட் படமான 'அட்ரங்கி ரே' படத்தில் நடித்து வருகிறார். கென் ஸ்காட் இயக்கிய சர்வதேச திரைப்படமான 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பாகி…

  24. 'மாஸ்டர்' படத்துக்காக ஒன்றிணைந்த தென்னிந்தியத் திரையுலகம். 'மாஸ்டர்' படத்தின் லீக்கான காட்சிகளைப் பகிர வேண்டாம் என்று தென்னிந்தியத் திரையுலகினர் ஒன்றிணைந்து கூறியுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். நாளை (ஜனவரி 13) இப்படம் வெளியாகவுள்ளதால், இந்தப் படத்தைத் திரையரங்குகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று (ஜனவரி 12) மாலை திடீரென்று படத்தின் சில காட்சிகள் ஒன்றின்பின் ஒன்றாக இணையத்…

  25. தமிழில் அறிமுகமாகும் பிரான்ஸ் அழகி புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் 'மேல்நாட்டு' மருமகன் திரைப்படத்தில் பிரான்ஸ் நாட்டின் மொடல் அழகியும் நடிகையுமான என்ட்ரியன் நடிக்கிறார். ராஜ்கமல் ஹீரோவாக நடிக்கும் இத்திரைப்படத்தை எம்.எஸ்.எஸ் இயக்குகிறார். தமிழ்நாட்டு இளைஞர்கள் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள். வெளிநாட்டு மோகத்தில் திளைக்கிறார்கள். இன்னும் சிலர் வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்துகொண்டு அங்கேயே தங்கிவிடுகின்றனர். அவர்களை பற்றிய கதை ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் தமிழ் கலாசாரத்தை விரும்பி, நேசித்து தமிழ் இளைஞனை திருமணம் செய்து கிராமத்தில் வாழ விரும்பும் வெளிநாட்டு பெண்ணின் கதை. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நல்ல வெளிநாட்டு நடிகையை தேடிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.