Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ILAMARAN நடிகர்கள்: சி. இளமாறன், ராதாரவி, ஆடுகளம் நரேன், பசி சத்யா, ஜெயராஜ், விஜயா, கர்ணராஜா; கதை, வசனம், இசை, இயக்கம்: சி. இளமாறன். உலக அளவில் சினிமா விமர்சகர்களாக இருந்த பலர் இயக்குனர்களாகியிருக்கிறார்கள். ஷான் - லுக் கொதார், ஃப்ரான்சுவா த்ருஃபோ போன்றவர்கள் விமர்சகர்களாக இருந்து மிகச் சிறந்த இயக்குனர்களாகவும் உருவெடுத்தார்கள். இந்தியாவிலும் காலித் முகமத், மின்டி தேஜ்பால் போன்றவர்கள் விமர்சகர்களாக இருந்து இயக்குனர்களாக மாறியிருக்கிறார்கள். அதே பாணியில், தமிழ்த் திரையுலகில் மிகவும் அறியப்பட்ட சினிமா விமர்சகரான …

  2. ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' மூலமாக திரைக்கு மீண்டும் வருகிறார் நடிகர் வடிவேலு. 'கைப்புள்ள', 'வண்டு முருகன்', 'இம்சை அரசன்', 'நாய் சேகர்' என தனது பல நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் மூலமாகவும் 'வரலாறு முக்கியம் அமைச்சரே', 'பேச்சு பேச்சாதான் இருக்கனும்' என வசனங்கள் மூலமாகவும் மக்களின் அன்றாட வழக்கத்தில் ஒன்றாகிய ஒரு நகைச்சுவை கலைஞன். திரைக்கு மீண்டும் வருவது, திரையில் நடிக்காமல் இருந்த காலக்கட்டம், இத்தனை ஆண்டு திரையுலக அனுபவத்தில் இருந்து கற்று கொண்ட பாடம், நடிகர் ரஜினி, கமல், நண்பர் விவேக் என பல விஷயங்கள் குறித்து பிபிசி தமிழிடம் கலந்துரையாடினார். அதில் இருந்து... 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' …

  3. எச் ராஜா உட்பட காவிக்கூட்டத்தை வச்சு செஞ்சிருக்கானுவ போல…முஸ்லீம் மதவாதிகள் போல கொரோனாவுக்கு பெல் அடிச்சு மாட்டுமூத்திரம் குடிக்கும் இவனுகளும் மோசமான காட்டுமிராண்டிகள்… அதுக்காகவே படம் அமோக வெற்றிபெற அடியேனும் வாழ்த்துகிறேன்..

  4. நம்மவர்களின் படைப்புக்கள் நாளுக்கு நாள் வித்தியாசமான உச்சங்களை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கக் கூடிய சூழலில் அண்மைய நாட்களாக இந்த நெருக்கடியான சூழலிலும் பல படைப்புக்களை நம்மால் பார்க்க கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் குவேனிக்கதையை நந்திக்கடலின் துயரப்பாடலுடன் இணைத்து 20 நிமிட திரிவுபட்ட வரலாற்றுக் கதையாக நந்திக்குவேனி உருவாகியிருக்கிறது. சிறு எறும்பாகவாவது பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக திரிபுபடுத்திய குவேனியின் கதையை நந்திக்கடல் துயரத்துடன் இணைத்து படைத்திருக்கிறார்கள் “நந்தி குவேனி” என்ற குறும்படம் தற்போது இந்த படத்தின் பெஸ்ட் லுக் வெளிவந்துள்ளது .இந்த குறும்படத்தினை கதை எழுதி இயக்கியுள்ளார் ஈழ வாணி கதைக்கு உயிரோட்டமளித்து …

    • 0 replies
    • 395 views
  5. உலகத் தமிழர்களின் பேரவாவுடன் விரைவில் "மேதகு-2 " தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களது போராட்ட வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மேதகு திரைக்களத்தின் இரண்டாம் படைப்பான, மேதகு-2 தமிழ்த்திரைப்படத்தின் முதல் பார்வை படவடித்தை இயக்குனர் சசிகுமார் மற்றும் இசையமைப்பாளரும் நடிகருமான ஜீவி பிரகாஷ் இணைந்து வெளியிட்டனர். மேதகு-2 திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி, நவம்பர்-26 அன்று வெளியிடப்படவிருப்பதாக மேதகு திரைக்களம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. https://www.thaarakam.com/news/91e70aa2-60b7-4f5e-88ac-03ec399de5fc

  6. பிரான்ஸ் பாரிஸில் இடம்பெறும் Auber International Film Festival இல் Best Original Screenplay பிரிவில் மதிசுதாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் விருதைப் பெற்றிருக்கின்றது . நீண்டகால கடின உழைப்பு ,தயாரிப்பிற்கான குழு முயற்சி ,தலைப்பு பிரச்சினை ,அதன் பின்னரான சுமூக தீர்வு என பல்வேறு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் குறித்த திரைப்படம் எங்கள் கதைகளுக்கான ஒரு அங்கீகாரமாக விருதை பெற்றிருக்கின்றமை உண்மையில் மகிழ்ச்சிகரமான விடயமே . படக்குழுவிற்கும் இயக்குனரிற்கும் எமது வாழ்த்துக்கள் . ஆதி விருதை பெற்றது மதிசுதாவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் - My Blog (ceylontamilnews.com)

  7. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், தம்பி ராமைய்யா, பிரகாஷ் ராஜ், கருணாகரன், மாரிமுத்து; இசை: தமன் (பாடல்கள்), சாம் சி. எஸ். (பின்னணி); ஒளிப்பதிவு: ஆர்.டி. ராஜசேகர்; இயக்கம்: ஆனந்த் சங்கர். அரிமா நம்பி, இருமுகன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஆனந்த் சங்கரின் அடுத்த படம் இது. ராஜீவும் சோழனும் சிறுவயது முதலே நண்பர்கள். ராஜீவின் தந்தை (பிரகாஷ் ராஜ்) ஒரு ஒய்வுபெற்ற சிபிஐ அதிகாரி. அவர் ராஜீவிற்கும் சோழனுக்கும் சிறு வயது முதலே காவல்துறையின் நுணுக்கங்கள் குறித்து பயிற்சியளிக்கிறார். சில நாட்கள் கழித்து ராஜீவின் தந்தை யாராலோ கொல்லப்பட்டுவிட, ராஜீவும் சோழனும் பிரிகிறார்கள். வளர்ந்த பிறகு …

  8. முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், இளவரசு; ஒளிப்பதிவு: எஸ்.ஆர். கதிர்; இசை: ஷான் ரோல்டன்; இயக்கம்: த.செ. ஞானவேல். வெளியீடு: அமெஸான் பிரைம் ஓடிடி. விருத்தாச்சலத்தில் உள்ள கம்மாபுரத்தில் 1993ஆம் ஆண்டு பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரத்தை பின்னணியாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் 'ஜெய் பீம்'. தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டம் ஒன்றில் வசிக்கும் இருளர் பழங்குடியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (மணிகண்டன்). மன…

  9. 50 வயது ஹீரோவுக்கு 18 வயது ஹீரோயின் எதற்கு கேப்டனின் சுவாரசியமான பதில்

  10. கமல்ஹாசனைப் பற்றி..... மின்னம்பலம்2021-11-07 நடிகர் கமல்ஹாசனின் 67ஆவது பிறந்தநாள் இன்று (நவம்பர் 7). இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கமல் பிறந்த நாள் சிறப்பு தொகுப்பு 1. பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி. சீனிவாசனுக்கும், ராஜலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கமல்ஹாசன். 2. இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி. இவர்களில் கமல்ஹாசன்தான் கடைசியாக பிறந்தவர். 3. கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா. 4. களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர் கமல்ஹாசன். 5.களத்தூர் க…

  11. நடிகர் ரஜினிகாந்தின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில், அதை நீக்கும் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை கூறுகிறது. நடிகர் நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சோதனைகளுக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரவித்தனர். இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கையை காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில், ரஜினிகாந்த் நேற்று சிறிய தலைசுற்றலுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அவருக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் (Carotid Artery) அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்…

    • 3 replies
    • 931 views
  12. புனித் ராஜ்குமார் மறைவு: தலைவர்கள், நடிகர்கள் இரங்கல்! மின்னம்பலம்2021-10-30 கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் 46 வயதிலேயே அகால மரணமடைந்தது இந்தியத் திரையுலகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. புனித் ராஜ்குமார் கன்னட நடிகர் என்றாலும் அவரது அப்பா மறைந்த ராஜ்குமார் காலத்திலிருந்தே பல மொழி திரைக்கலைஞர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள். அதனால், புனித்தின் திடீர் மறைவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியில் இருந்து, கன்னடத் திரையுலகத்தை மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரையுலகத்தினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பலரும் புனித் மறைவுக்கு அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்து வருகிறார்கள். தமிழ்த் திரையுலகில் நடிகர்கள் சரத்குமார், வி…

  13. விருதை எதிர்பார்க்கவில்லை: ரஜினிகாந்த் மின்னம்பலம்2021-10-24 தாதா சாகேப் பால்கே விருதினை எதிர்பார்க்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவின் உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, இந்திய சினிமாவின் தந்தையாக போற்றப்படும் தாதா சாகேப் பால்கே பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படும். இவ்விருதை இதுவரை லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர். தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர் ஆகியோர் பெற்றுள்ளனர். இந்நிலையில், 2019ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக விருது வழங்கும் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் …

  14. ஆஸ்கர் போட்டியில் மண்டேலா: மகிழ்ச்சியில் யோகிபாபு மின்னம்பலம்2021-10-22 தமிழ்நாட்டு அரசியலில் வாக்குக்குப் பணம் கொடுப்பதையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் மையக்கருவாக கொண்டு சமூக அவலங்களை விமர்சித்த திரைப்படம் மண்டேலா படைப்பு ரீதியாக விமர்சகர்களால் பாராட்டப்பட்ட மண்டேலா திரைப்படம் இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு அனுப்புவதற்கு முன்பு நடத்தப்படும் தேர்வு பட்டியலில் இடம்பிடித்து பெருமை சேர்த்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகள் சார்பிலிருந்து பல படங்கள் இந்த விருதுக்குப் போட்டியிடுகின்றன. அந்தவகையில் 2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2022மார்ச் 27ல் நடக்கிறது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான பிரிவில் ஆண்டுதோறு…

  15. ஏழு வருடங்களுக்கு பின்... மீண்டும் நடிக்க வரும், மீரா! நடிகை மீரா ஜாஸ்மின் ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்திருந்தார். பின்னர் அணில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1244791

  16. பழம்பெரும் நடிகரான... ஸ்ரீகாந்த் காலமானார்! பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான ஸ்ரீகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக தனது 83 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 200 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேநேரம் பல மேடை நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1244596

  17. ஈழத்தமிழர்களின் வலிகளை சொல்லும் ‘ஆறாம் நிலம்’ மின்னம்பலம்2021-09-25 இலங்கை தமிழர்கள் வாழ்க்கை, தமிழீழப் போராட்டம் இவற்றை பற்றிய திரைப்படங்கள், குறும்படங்கள் வெளி வந்திருக்கின்றன. உண்மை நிலையை உலக மக்களுக்கு கொண்டு செல்லும் நேர்மையான படைப்புகளாக இல்லை என்பதே இலங்கை தமிழர்கள் கூறிவரும் குற்றசாட்டு அதனை போக்கும் வகையில்" ஆறாம் நிலம்" எனும் பெயரில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. நேரடியாக ஓடிடியில் செப்டம்பர் 24ல் வெளியாகியுள்ள இப்படத்தின் பிரத்யேக காட்சி சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது தமிழீழம் அமைய இலங்கையில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஆயுதப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. அந்த இறுதிப்போரின் …

    • 8 replies
    • 1k views
  18. சமந்தா விவாகரத்து: 'நாக சைதன்யாவும் நானும் இனி கணவன் - மனைவி இல்லை' 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@SAMANTHAPRABHUOFFL படக்குறிப்பு, சமந்தா - நாக சைதன்யா. நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் அக்கினேனி நாக சைதன்யா ஆகிய இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளனர். சமந்தா- நாக சைதன்யா விவாவகரத்து செய்திகள் வெளிவரத் தொடங்கிய போது, இது குறித்து இருவருமே எதுவும் சொல்லவில்லை. வதந்தி என மட்டுமே இதற்கான பதிலாக சமூக வலைத்தளங்களிலும், சமீபத்திய சில பேட்டிகளிலும் தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில், இன்னும் சில நாள…

  19. ச.ஆனந்தப் பிரியா பிபிசி தமிழுக்காக நூற்றாண்டு காணும் தமிழ் சினிமாவின் வரலாற்றை நடிகர் சிவாஜி கணேசனை தவிர்த்து விட்டு எழுத முடியாது. தனது நடிப்பாலும் கதா பாத்திரங்களாலும், வசனங்களாலும் அன்றும் இன்றும் என்றும் அவருக்கான இடம் நிலைத்திருக்கும். இன்று அவரது 93-வது பிறந்தநாள். இன்று அவரை சிறப்பிக்கும், வகையில் கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டுள்ளது. நடிகர் சிவாஜி கணேசன் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். மேடை நாடகத்தில் அதீத ஆர்வம் கொண்ட சிவாஜி கணேசனின் முதல் நாடகத்தின் பெயர் 'இராமாயணம்'. இதில் சீதை வேடத்தில் நடித்தார் சிவாஜி. 'சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' மூலம் கணேச மூர்த்தி, 'சிவாஜி' கண…

    • 1 reply
    • 469 views
  20. நடிகர் சிவாஜிக்கு கூகுள் டூடுல்! மின்னம்பலம்2021-10-01 நடிகர் சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளான இன்று (அக்டோபர் 1) அவரை சிறப்பித்து கௌரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது. சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் நடிக்க இயலாத சூழல் ஏற்பட்டது. ஒரே நாளில் நடிகர் சிவாஜி கணேசன், அண்ணாதுரை அவர்கள் எழுதிய நாடக வசனத்தை உள்வாங்கி சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்தார். அந்த நாடகத்தை நேரில் கண்டு ரசித்து வியந்த தந்தை பெரியார் அவரை வெகுவாக பாராட்டியதுடன் கணேசன் என்கிற பெயருக்கு முன் சிவாஜி என்கிற அடைமொழியை வழங்கினார். பிறகு அதுவே அவரது பெயராக நிலைத்தது. 1952ல் வெளிவந்த ‛பராசக்தி படம் மூலம் திரை…

    • 1 reply
    • 351 views
  21. எஸ்பிபி உயிருடன் இருந்தவரை இளையராஜாவை புகழாத மேடைகளே கிடையாது, எஸ்பிபி உயிருடன் இருந்தவரை அவரை இளையராஜா ஒரு மேடையில்கூட புகழ்ந்ததுகிடையாது. வாழும்போதே நட்பை கொண்டாடுங்கள் போன பின்னர் பேசி கைதட்டு வாங்கி என்ன புண்ணியம்?

  22. காணாமல் போன மாடுகளைத் தம்பதியர் கண்டுபிடித்தார்களா என்பதே 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்'. தனது இரண்டு மாடுகளையும் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் செல்கிறார் குன்னிமுத்து. ஆனால், காவல் துறையினர் புகாரை எடுக்க மறுக்கிறார்கள். உயிருக்கு உயிராகக் குழந்தைகள் மாதிரி வளர்த்த மாடுகளை அவர் தேடிக் கண்டிபித்தாரா, இல்லையா, அந்த மாடுகள் காணாமல் போனது ஏன், எப்படிக் காணாமல் போனது, மாடுகள் தொலைந்ததால் அந்த ஊர் எப்படி மாறுகிறது என்பதே 'இராமே ஆண்டாளும் இராவணே ஆண்டாலும்' திரைக்கதை. நாயகன் குன்னிமுத்துவாக 'மிதுன் மாணிக்கம்'. புதுமுகம் என்பதால் கதைக்கு ரொம்பவே உபயோகமாக அமைந்துள்ளது. அவருடைய வெகுளித்தனம் இந்தக் கதைகளத்துக்கு அருமையாகப் பொருந்தியுள்ளது. பார்வை…

  23. முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: விஜய் சேதுபதி, டாப்சி பன்னு, ஜார்ஜ் மரியன், மதுமிதா, சுப்பு பஞ்சு அருணாசலம், யோகி பாபு, சேத்தன், ராதிகா, தேவதர்ஷினி, சுரேகா வாணி, ஜெகபதிபாபு, ராஜந்திரபிரசாத்; இசை: கிருஷ்ண கிஷோர்; ஒளிப்பதிவு: ஜார்ஜ் கௌதம்; இயக்கம்: தீபக் சுந்தர்ராஜன். பேயையும் நகைச்சுவையையும் கலந்து Horror - Comedy என்ற பாணியில் வெளிவந்த பல திரைப்படங்கள் தமிழில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. அந்த பாணியில் வெளிவந்திருக்கும் ஒரு படம்தான் 'அனபெல் சேதுபதி'. இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு பௌர்ணமி தினத்தன்று யார் தங்கினாலும் இறந்து, அவர்களும்…

  24. டிக்கிலோனா': சந்தானம் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்வதாக சர்ச்சை - என்ன நடந்தது? ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 21 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@IAMSANTHANAM படக்குறிப்பு, நடிகர் சந்தானம் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஓடிடியில் நேரடியாக வெளியான திரைப்படம் 'டிக்கிலோனா'. இதில் மாற்றுத்திறனாளிகள் குறித்து, நகைச்சுவை என்ற பெயரில் சந்தானம் பேசியிருக்கும் சில வசனங்களும், பெண்கள் சுதந்திரம், உடை குறித்த சில கருத்துகளும் பொது வெளியில் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றன. அது என்ன சர்ச்சை? அது ஏன் விவாதமாகியிருக்கிறது? தமிழ்நாட்டில் கொரோனா த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.