வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது? RS Infotainment இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து உருவாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. விடுதலை முதல் பாகம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இன்று அதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. விடுதலை படத்தின் இரண்டு பாகங்களுக்கும், இளையராஜா இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விடுதலை 2 படம் குறித்துப் பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்கள் என்ன சொல்கின்றன? படத்…
-
-
- 8 replies
- 1.1k views
-
-
சூது கவ்வும் 2: விமர்சனம்! SelvamDec 14, 2024 21:02PM உதயசங்கரன் பாடகலிங்கம் சிரிக்க வைப்பது சாதாரண விஷயமல்ல! ’மிர்ச்சி’ சிவா நடிக்கும் படங்கள் என்றாலே, தமிழ் சினிமாவை ‘ஸ்பூஃப்’ செய்கிற சில வரி வசனங்களாவது இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடத்தில் நிறைந்திருக்கிறது. காரணம், அவரது முந்தைய படங்கள் தான். அதிலிருந்து அவர் விலகி நிற்க முயற்சிகள் பெரிதாகப் பலனளிக்கவில்லை. இந்த நிலையில்தான், ‘சூது கவ்வும்’ இரண்டாம் பாகத்தில் அவர் நாயகனாக நடிக்கப் போவதாகச் செய்திகள் வந்தன. அடுத்தடுத்து பல அப்டேட்கள், டீசர், ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி, இதோ இப்போது தியேட்டரில் படமும் ரிலீஸ் ஆகிவிட்டது. சி.வி.குமார் தயாரித்துள்ள இப்படத்தைப் புதுமுக இயக்குனர் எஸ…
-
- 1 reply
- 371 views
-
-
ஆர்.ஜே. பாலாஜி நடித்த சொர்க்கவாசல் திரைப்படம் பார்த்தேன். சிறைச்சாலைக்குள்ளேயே கதை சுற்றிக் கொண்டிருந்தாலும் அலுப்பு ஏற்படவில்லை. ஒவ்வொருவராக கதை சொல்ல, படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும் இறுதிவரை அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கிறது. செல்வராகவன்,கருணாஸ், நட்டி ஆகியோருடன் ஷோபா சக்தியும் நடித்திருக்கிறார். ஈழத்து சீலன் பாத்திரம் ஷோபா சக்திக்கு. ஈழத் தமிழ் பேச்சில் அவரது நடிப்பு நன்றாகவே இருந்தது. திரைப்படம் ஆஹா ஓஹோ என்றில்லாவிட்டாலும் பார்க்கக் கூடிய படம்.
-
- 1 reply
- 602 views
-
-
ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ திரையிடல்; நெரிசலில் தாய் உயிரிழப்பு, மகன் காயம்! ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் புதன்கிழமை மாலை ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் சிறப்பு காட்சியை பார்க்கச் செனற் 35 வயதுடைய பெண்ணொருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார். மேலும், அவரது ஒன்பது வயதுடைய மகன் பலத்த காயமடைந்துள்ளதாக ஹைதராபாத் பொலிஸார் தெரிவித்தனர். ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படத்தின் சிறப்பு காட்சிக்கா வருகை தந்திருந்த தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனைப் பார்க்க ஏராளமான மக்கள் கூட்டம் அலை மோதியமையினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திரையிடலுக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் வந்திருந்த நடிகரைக் காண ரசிகர்கள் குவிந்ததால் திரையரங்குக்கு வெளியே பர…
-
- 1 reply
- 198 views
-
-
ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள் Getty Images தலைமுறைகள் கடந்தும் ரஜினிகாந்த் 'சூப்பர் ஸ்டாராக' நிலைத்து நிற்கிறார் "பலரும் அற்புதங்களை நம்புவதில்லை, ஆனால் அற்புதங்கள் நிகழ்கின்றன. ஒரு சாதாரண பேருந்து நடத்துனர் மிகப்பெரிய மனிதர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொள்வது ஓர் அற்புதம் தான்." கடந்த 2013ஆம் ஆண்டு என்டிடிவி ஊடக விருது (Greatest Global Living Indian Legends) வழங்கும் விழாவில், அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையால் விருது வாங்கிய பிறகு நடிகர் ரஜினிகாந்த் கூறிய வார்த்தைகள் இவை. கடந்த 1975ஆம் ஆண்டில், 'அபூர்வ ராகங்கள்' எனும் திரைப்பட…
-
- 4 replies
- 372 views
-
-
பொதுவாகவே ஒரு தனிமனிதனின் வருமானம், சொத்துக்கள், வாழ்க்கையை தோண்டியெடுத்து செய்தியாக்குவது அருவெருப்பான ஒன்றாகவே பார்ப்பதுண்டு. இங்கே வடிவேலுவின் இந்த பிரமாண்டம்பற்றி பகிர்வதற்குகாரணம், வாழ்க்கையின் அடிமட்டத்தின் கீழிருந்து ஒருவர் தனது ஒப்பற்ற திறமையினால் எவ்வளவு உயரத்திற்கு வந்தார் என்பதை காண்பிக்கவே.
-
- 0 replies
- 245 views
-
-
கமல் அடிக்கடி தனது பேட்டிகளில் நாகேஷை புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுவார், அது கொஞ்சம் மிகையோ என்று தோன்றுமளவிற்கு ஐயம் வரும், ஒரு கதிரையில் இருந்தபடி கணப்பொழுதில் எம்மையறியாமல் எங்கே அழுதுவிடுவோமோ என்ற அளவில் அச்சுறுத்தி அவரால் நெகிழ வைக்க முடியும் என்பதற்கு சாட்சியாக அவர் நடிப்பு இந்த காணொலியில் இருக்கிறது
-
-
- 16 replies
- 944 views
-
-
நேற்று மாவீரர் நாளில் விடுதலை2 படத்தின் பாடல் ஒன்று வெளியாகி இருக்கிறது. யுகபாரதி பாடல் வரிகளுக்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார். யோக்ஃபி பாடியிருக்கிறார். சமயம் பார்த்து பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். படத்தின் Trailer இலே ஒன்றைக் கவனித்தேன். நடிகர் இளவரசு பேசும் வசனம் இப்படி இருந்தது, “என்னை மாதிரி படிக்காத ஒருத்தன் தண்டவாளத்திலை தலை வைச்சு படுத்ததாலேதான் உன்னை மாதிரி..” ஆக ஆளும் கட்சிக்கு நல்ல ‘ஜஸ்’ வைத்திருப்பது தெரிகிறது. எம்ஜிஆரின் தலை நிச்சயமாக உருளும்.
-
- 0 replies
- 716 views
-
-
-
-
- 2 replies
- 728 views
-
-
ஒரு சினிமா பாணியிலான ஒரு வெப் தொடர்தான். ஒரு காதல் கதைதான் இருந்தாலும் வாழ்க்கையோடு ஒட்டி பயணிக்கும் கதை துளி விரசம் இல்லை, பொறுப்பற்ற நண்பர்கள் இல்லை, காதல் என்பதால் வேலை வெட்டி இல்லாமலும் எதிர்கால திட்டமிடல் இல்லாமலும் நகரும் கதை அல்ல. கொஞ்சம் பழைய தொடர்தான் பலர் ஏற்கனவே பாத்திருக்கவும் கூடும் , நான் அண்மையில்தான் பார்த்தேன் சும்மா ஒரு பொழுது போக்குக்கு ஒரு பகுதி மட்டும் பார்ப்போமென்று போய் ஆர்வம் தாங்காமல் ஒட்டுமொத்தமா பார்த்து முடிச்சேன். அதில் ஓரிரு பகுதிகள். காதலர்கள் என்றால் கல்யாணத்திற்கு முன் தனியே சந்தித்தால் வெறும் டேற்றிங் மட்டும்தானா? காதலனுக்கு ஆசை ஆசையா மீன் குழம்பும் வைத்து கொடுக்கலாம், காதலி ஆசைப்பட்டால் ஒரு…
-
-
- 1 reply
- 761 views
-
-
கங்குவா எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு! இரா.சரவணன் சமீபத்தில் வெளியான கங்குவா படம் குறித்து சமூக வலைத்தளங்களில் வன்மத்தை கக்கும் விமர்சனங்கள் வெளிப்பட்டன. அவை கங்குவா என்ற படத்தைக் கடந்து நடிகர் சூர்யா குடும்பத்தை தாக்கும் விமர்சனமாகவும் தூக்கலாக வெளிப்பட்டது. இந்தச் சூழலுக்கு இயக்குனர் இரா.சரவணன் மிக சிறப்பாக எதிர் வினையாற்றி இருக்கிறார்; இவர் மிகச் சமீபத்தில் வெளியான நந்தன் படத்தின் இயக்குனர். இந்தப் படம் உள்ளாட்சிகளில் பட்டியலினத் தலைவர்கள் தற்காலத்தில் சந்திக்க நேரும் அவமானங்கள் குறித்து மிகுந்த சமூக அக்கறையுடன் கவனப்படுத்தி இருந்தது. இவரது முந்திய படங்களான கத்துக்குட்டி, உடன்பிறப்பே போன்றவையும் சரவணனின் சமூக அக்கறைக்கு சாட்…
-
-
- 7 replies
- 807 views
-
-
'ஸ்க்விட் கேம் படமாக்கப்பட்டபோது 9 பற்களை இழந்தேன்'- விரைவில் வெளியாகும் இரண்டாம் பாகம்; தொடரின் இயக்குநர் கூறுவது என்ன? பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு, கொரிய நாடகமான ஸ்க்விட் கேம் 2021-இல் வெளியிடப்பட்டபோது உலகளவில் பேசப்பட்டது எழுதியவர், ஜீன் மெக்கென்சி பதவி, சோல் செய்தியாளர் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பிரபலமான கொரிய வெப் சீரிஸான ‘ஸ்க்விட் கேமை’ உருவாக்கியவர் அந்த தொடரின் படப்பிடிப்பின் போது மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார், படப்பிடிப்புத் தளத்தில் அவருக்கு ஆறு பற்கள் உடைந்தன என்றெல்லாம் செய்திகள் வந்தன. இதைப்பற்றி அவரிடமே கேட்டபோது, "ஆறு அல்ல, எட்டு-ஒன்பது பற்கள் உடைந்திருக்கலாம்," என…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
எனக்கு மிகவும்பிடித்த குணசித்திர & நகைச்சுவை நடிகர் டெல்லிகணேஷ். மரணம் எவருக்கும் சலுகை தரபோவதில்லை. காலங்கள் ஓடினால் காலமாக்கிவிடும் ஐயாவுக்கு அஞ்சலிகள்.
-
- 11 replies
- 939 views
-
-
அமரன் : விமர்சனம்! christopherNov 01, 2024 19:28PM மேஜர் முகுந்த் ஆக மிளிர்கிறாரா எஸ்கே?! தீபாவளி பண்டிகையையொட்டி தமிழில் மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் ரசிகர்களால் முதன்மையாக நோக்கப்படும் படம் ‘அமரன்’. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஜோடி மட்டுமல்லாமல், ‘ரங்கூன்’ தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் இரண்டாவது படம் இது என்பது அதற்கான காரணங்களில் ஒன்று. அதனைக் காட்டிலும் பெரியது, காஷ்மீரில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய பொதுமக்களைக் காக்கும் முயற்சியின்போது வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதை என்பது. தமிழில் ராணுவப் பின்னணியில் அமைந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ‘ரத்த திலகம்’ காலம் முதல் அதற்குச் சி…
-
-
- 4 replies
- 784 views
-
-
பரியேறும் பெருமாள் `கறுப்பி’ பேருந்து மோதி உயிரிழப்பு! பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த ‘கறுப்பி’ என்ற பெண் சிப்பிபாறை நாய், பேருந்து மோதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகன் கதிர் அவர்களின் செல்ல நாயாக ‘கருப்பி’ என்னும் சிப்பிபாறை வகை பெண் நாய் நடித்தது. இந்த நாய் அந்த படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் அவர்களின் உறவினர் ஒருவருக்கு சொந்தமானது. இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சினிமா ரசிகர்கள் பலராலும் இந்த நாய் நேசிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 31ஆம் திகதி தீபாவளி அன்று திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் கிராமத்தில் தனது வீட்டில் இருந்த கறுப்பி பட்டாசு சத்த…
-
- 0 replies
- 292 views
-
-
பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT 27 செப்டெம்பர் 2024, 06:35 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில், 2018ஆம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்தது. அப்படத்தை இயக்கிய பிரேம் குமாரின் இரண்டாவது படமான மெய்யழகன் இன்று (வெள்ளி, செப்டம்பர் 27) வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், தேவதர்ஷிணி, இளவரசு, ஸ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே ஆகியோர் நடித்திருக்கின்றனர். 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். சூர்யா-ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெய்ன்மெண்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிற…
-
-
- 12 replies
- 858 views
- 2 followers
-
-
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்த முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர், அங்கு எஞ்சி வாழும் ஈழத் தமிழ் மக்கள், முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அரச பயங்கரவாதத்தால் அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு அவல நிலையில் உழல்கிறது என்பதையும் கடந்த காலத்தின் எச்சங்களுடன் சித்தரித்திருக்கிறது ‘ஒற்றைப் பனை மரம்’. 2009இல் போரில் சரணடைந்த பெண் போராளியான கஸ்தூரி (நவயுகா), ராணு வத்தின் குண்டு வீச்சுக்கு நிறைமாதக் கர்ப்பிணி மனைவியைப் பறிகொடுத்த சுந்தரம் (புதியவன் ராசய்யா), அவர் தனது மகளாகத் தத்தெடுத்துக்கொண்ட அஜாதிகா ஆகியோர் பல வருட முகாம் வாழ்க்கைக்குப் பின்னர், சொந்த ஊரான கிளிநொச்சிக்கு வந்து வசிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால், போருக்குப் பிறகான வ…
-
- 0 replies
- 352 views
-
-
பட மூலாதாரம்,SSS PICTURES/X படக்குறிப்பு, சார் திரைப்படத்தில் ஒரு காட்சி 6 மணி நேரங்களுக்கு முன்னர் கிராமப்புறங்களில் கல்வியின் தேவை என்ன என்பதை உணர்த்தும் படமாக வெளியாகியுள்ளது விமல் நடிப்பில் வெளியான சார் திரைப்படம். நடிகர் போஸ் வெங்கட் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். சாயா தேவி நடிகையாக நடித்துள்ளார். நடிகர் சரவணன், விமலின் தந்தையாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் வெற்றமாறனின் கிராஸ்ரூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 1980களை களமாக கொண்ட திரைப்படம் இது. ஏற்கனவே கிராமம் ஒன்றில் பணியாற்றும் ஆசிரியராக வாகை சூடவா படத்தில் நடித்திருந்தார் விமல். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த அந்த திரைப்படம் 2011-ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் பட…
-
- 0 replies
- 357 views
- 1 follower
-
-
சிங்கப்பூர் சிவாஜிகணேசன் எனப்படும் இந்த கலைஞர் ஸ்மார்ட்போன் காலத்தில் சிவாஜி வாழ்வதுபோல் அச்சு அசல் அவர்போலவே தோற்றம் நடிப்பு உடல்மொழி என்று பிரமிக்க வைத்தார். பார்க்கவே சந்தோஷமாக இருந்த இந்த காட்சி மிகபெரும் சோகத்தில் முடிந்தது, இந்த பாடல் முடிவில் மாரடைப்பினால் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துபோனார் இந்த அற்புத கலைஞர்.
-
- 0 replies
- 1.4k views
-
-
’ஜெய் பீம்’ படம் மூலம் தமிழ் சினிமா பார்வையாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் த.செ.ஞானவேலும், ‘ஜெயிலர்’ பெற்ற வெற்றியை தக்கவைக்கும் முனைப்பில் இருந்த ரஜினியும் கைகோத்துள்ள படம்தான் ‘வேட்டையன்’. டீசர், ட்ரெய்லர் வெளியானபோதே என்கவுன்டரை நியாயப்படுத்தும் காட்சிகளுக்காக விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனங்களுக்கான விடை படத்தில் இருந்ததா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம். தமிழகத்தின் பிரபலமான என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி அதியன் (ரஜினிகாந்த்). ‘தாமதமான நீதி... மறுக்கப்பட்ட நீதி’ என்ற கொள்கையுடன் மோசமான ரவுடிகளை என்கவுன்டர் செய்து வருபவர். இன்னொரு பக்கம் என்கவுன்டருக்கு எதிரான மனநிலை கொண்டு, அதைக் கடுமையாக எதிர்க்கும் ஓய்வுபெற்ற நீதிபதி சத்யத…
-
- 1 reply
- 469 views
-
-
நான் ஒரு போக்கை கவனிக்கிறேன் - ஒரு படம் திரையரங்கில் வெளியாகும்போது ஐயோ அம்மா என்று பாராட்டித் தள்ளுகிறார்கள். அதுவே ஓடிடியில் வந்ததும் பார்த்துவிட்டு அமைதியாக நிறைகுறைகளை கவனித்து அந்தளவுக்கு ஒண்ணும் நல்லா இல்ல என்று எழுதுகிறார்கள். காதலிக்கும்போது ஒருவிதமாகவும் கல்யாணத்திற்குப் பிறகு இன்னொருவிதமாகவும் ஒரு பெண் தெரிவதைப்போல இது இருக்கிறது. பக்கத்தில் வந்ததும் அடச்சே என்றாகிறது. எனக்குத் தெரிந்து விதிவிலக்காக இது நடக்காதது "சார்ப்பட்டா பரம்பரைக்கு' மட்டும்தான். இந்த திரையரங்க வெளியீட்டின்போது ரத்தக்கண்ணீர் வடிப்பவர்கள், வைரல் ஆகிறவர்கள், விழுந்துவிழுந்து பேட்டியெடுக்கும் விகடன், கலாட்டா குழுவினர் ஓடிடியை பொருட்படுத்தாதது காரணமா? பெருங்கூட்டத்தின் பகுதிய…
-
- 1 reply
- 220 views
- 1 follower
-
-
இந்திய ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதினை பெற்றுக் கொண்டார் லைக்கா புரடக்ஸனின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் இந்தியாவின் 70 ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில், சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதினை லைக்கா குழுமத்தின் நிறுவனரும், லைக்கா புரடக்ஸன் நிறுவனத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் இந்திய ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, கடந்த 2022 ஆண்டு இயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் இரு பாகங்களாக பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா புறடக்ஸன் தயாரித்திருந்தது. இதில் முதல் பாகம் 2022ஆம் ஆண்டும், இரண்டாம் பாகம் 2023ஆம் ஆண்டும் வெளிவந்தன. பொன்னியின் செல்வன் முதலாவது படத்திற்கு…
-
-
- 11 replies
- 934 views
-
-
-
எனது வாழ்க்கையை தாண்டி ஒரு படம் எடுக்கவேண்டுமென்றால் அது ஈழத்தின் துயரத்தை படமாக்க விரும்புகிறேன் என இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழை ஆகிய படங்களின் இயக்குனரே மாரி செல்வராஜ் ஆவார். ஈழத்து மக்களின் வாழ்க்கை முறை இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் மேலும் தெரிவிக்கையில், ஈழத்து நாவல்களை படிக்கும்போது அது உணர்வு பூர்வமானதாக இருக்கும். அந்த மக்களுடைய வாழ்க்கை முறை வேறானது. நாம் நினைத்து கூட பாரக்க முடியாத இன்னொரு வாழ்க்கைமுறை அது. ஈழத்தின் நிஜத்தை படமாக்கவேண்டும் எனவே ஈழத்து ஒரு நாவலை அல்லது ஈழத்தின் நிஜத்தை படமாக்கவேண்டும் எ…
-
- 1 reply
- 442 views
- 1 follower
-
-
நீலநிற சூரியன் : விமர்சனம்! christopherOct 06, 2024 10:30AM பெண்ணாகத் தன்னை உணரும் ஆணின் கதை! பெரும்பாலான திரைப்படங்கள் வாழ்வோட்டத்தில் இருக்கிற பெருஞ்சிக்கல்களைப் பேசுவதே இல்லை. சமத்துவ சமுதாயம், பாலின சமத்துவம், சூழல் பாதுகாப்பு உட்படப் பல விஷயங்களைப் பேசுகிற வாய்ப்புகள் கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. அப்படியொரு நிலையில், தன்னைச் சிறு வயதில் இருந்து பெண்ணாக உணரும் ஆணின் உருமாற்றத்தைப் பேசுகிறது ‘நீலநிற சூரியன்’. சம்யுக்தா விஜயன் இதனை எழுதி இயக்கியிருக்கிறார். இந்தப் படம் தரும் காட்சியனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? வலிமிகு தருணங்கள்! பானு என்ற பெயரில் தன்னைப் பெண்ணாகப் பாவித்துக்கொண்டு பேசிப் பார்க்கிறார் அரவிந்த் (சம்யுக்தா வ…
-
- 0 replies
- 192 views
-