Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சின்னதாய், த்ரில்லிங்காய், ஒரு புன்னகைப் புரட்சி – தமிழ் சினிமா வ.ஸ்ரீநிவாசன் இரண்டு நாட்கள் முன்பாக திடீரென்று கிளம்பி ‘டிமாண்டி காலனி’ என்கிற படத்தைப் பார்த்தேன். ‘டிக்கட் கிடைக்குமா?’ என்கிற சஸ்பென்ஸோடுதான் எல்லாம் ஆரம்பித்தது. நான் தியேட்டருக்குப் போனபோது அரங்கு நிறைந்து விட்டது. யாரோ ஒருவர் தன்னிடம் அதிகமாய் இருந்த டிக்கட்டுகளை விற்கப் போய் படம் துவங்குவதற்கு ஐந்து நிமிடம் முன்பாக உள்ளே போனேன். படம் ஆரம்பித்ததும் முதல் 15, 20 நிமிடங்கள் “தப்பு செய்து விட்டோமே. பராபரியாக நன்றாக இருக்கிறது என்று யார் யாரோ சொன்னதையும், ஆங்கில ஹிந்துவில் நன்றாக இல்லை என்கிற மாதிரி இருந்த விமர்சனத்தையும் நம்பி வந்து விட்டோமே” என்று சோர்ந்து போனேன். எழுந்து வந்து விடலாம் ஒன்றும் பி…

  2. சென்னையின் குப்பம் ஒன்றில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தின் இளைய பிள்ளை ‘சின்ன காக்கா முட்டை’ (ரமேஷ்), மூத்த பிள்ளை ‘பெரிய காக்கா முட்டை’ (விக்னேஷ்). அப்பா ஏதோ குற்றத்துக்காகச் சிறை யில் இருக்கிறார். அவரை மீட்டு வரப் போராடுகிறார் அவர்களுடைய அம்மா (ஐஸ்வர்யா). ஒத்தாசையாக இருக்கிறார் பாட்டி (சாந்திமணி). சிறு வர்கள் இருவரும் தண்டவாளங்களின் ஓரங்களில் தவறி விழும் நிலக்கரியைப் பொறுக்கி விற்று ஐந்தோ பத்தோ சம்பாதிக்கிறார்கள். இவர்களது குப் பத்துக்கு அருகே புதிதாக பீட்சா ஹட் ஒன்று உதயமாகிறது. டிவி விளம் பரம் வாயிலாக பீட்சா சாப்பிட ஆசைப் படுகிறார்கள். 300 ரூபாய் பெறுமான பீட்சாவை அவர்கள் வாங்கவோ, சாப்பிடவோ முடிந்ததா என்பதை சுவாரஸ்யமான திரைப்படமாகத் தந்திருக்கிறார் புது இயக்குநர் மணிகண்ட…

    • 9 replies
    • 2.4k views
  3. இயக்குநர் ஆனந்த மூர்த்தி விடுதலைப் புலிகளின் தொடக்க கால உறுப்பினராக வாழ்க்கையைத் தொடங்கிப் பின்பு முக்கிய உறுப்பினராக மாறியவர் திலீபன். 1987-ல் இலங்கை - இந்தியா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை இலங்கை சென்றது. அதனிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தித் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் தொடங்கினார் திலீபன். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் உண்ணாவிரதம் தொடங்கிய 11- வது நாள் போராட்டப் பந்தலிலேயே உயிர் துறந்தார். ஈழ விடுதலைப் போராட்டத்தின் போக்கை மாற்றிய திலீபனின் வாழ்வையும் மரணத்தையும் விறுவிறுப்பான திரைப்படமாக வடித்தெடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந்த மூர்த்தி . அவரைச் சந்தித்தோம். திலீபனைத் தெரியும். அந்தத்…

    • 0 replies
    • 335 views
  4. "ஈழத்தமிழர்களையும் கொச்சைப்படுத்துவதால் சூர்யாவின் மாஸ் படத்துக்கு வரிச்சலுகை இல்லை" பாடலாசிரியர் சினேகன் PRINT EMAIL Details Published: 02 June 2015 சூர்யா நடித்த மாஸ் என்ற படத்தை மாசு என்ற மாசிலாமணி என்று திடீர் பெயர் மாற்றம் செய்தனர். எல்லாம் வரிச்சலுகையை மனதில் வைத்துதான் என்று கூறினார்கள். ஆனாலும் மாசு படத்திற்கு வரிச்சலுகை இல்லை என்று கையை விரித்து விட்டார்கள். காரணம் என்ன கேட்டால் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி வாங்கியதுதான் என்று சப்பை காரணத்தை சொன்னார்கள். ஆனால் அதுவல்ல உண்மை காரணமாம். உண்மையிலேயே வரிச்சலுகை கிடைக்காமல் போனதற்கு காரணம் வேறு என்று போட்டு உடைத்துள்ளார் பாடலாசிரியர் சிநேகன். 'சாந்தன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில…

  5. “பர்மிய முஸ்லிம்களை காப்பாற்றுவோம்” – பேஸ்புக்கில் ஆதரவு தரும் நடிகர் விஜய் சேதுபதி சென்னை: மியான்மரில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்களுக்காக நடிகர் விஜய் சேதுபது தன்னுடைய சமூக வலைதளப் பக்கமான பேஸ்புக் மூலமாக ஆதரவு தெரிவித்துள்ளார். பல்லாண்டு காலமாக பர்மாவில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம் சிறுபான்மையினர் "மியன்மாரை சேந்தவர்கள் அல்ல" என்ற கருத்து பரப்பப்பட்டு பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மரில் அவர்கள் வெளியேற்றும் வகையில் அவ்வப்போது இனக்கலவரங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினர் இந்த வன்முறைகளில் பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள். இனவாத புத்த பிக்குகள் தலைமையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன‌. புத்த இனவாத குழுக்களுக்கு அஞ…

    • 3 replies
    • 547 views
  6. மாசு படத்தில் இரண்டு சூர்யா.. ஒருவர் ஈழத் தமிழர்! "மாசு என்கிற மாசிலாமணி" படத்தில் இரு வேடங்களில் தோன்றும் சூர்யா, ஒன்றில் ஈழத்து இளைஞராக நடித்துள்ளாராம். சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மாசு என்கிற மாசிலாமணி' படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. இப்படத்தில் சூர்யா அப்பா-மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குநர் வெங்கட் பிரபு, 'மாசு படத்தில் சூர்யா இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அதில் ஈழத் தமிழனாக ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். ஒரு ஈழத்தமிழனாக சூர்யா நடிப்பது இதுதான் முதல…

  7. 80 களின் சினிமா நட்சத்திரங்கள் - அரிய காணொளி a0fc0df0f25fbf6a0a4436f4bf05d801

    • 0 replies
    • 588 views
  8. உயர்நிலை தகுதி பெறும்பொருட்டு மலைக்குகையொன்றில் தீவிர தியானத்தில் மூழ்குகிறான் தாக்ஷி எனும் இளம் துறவி. குறிப்பிட்ட காலம் நிறைவடைந்தவுடன், இமாலயத்தின் மடியில் அமைந்துள்ள ஒரு புத்தமடாலயத்தின் லாமாக்கள் (துறவிகள்) ஆளரவமற்ற திபெத் மலைப் பிரதேசத்திற்கு வருகின்றனர். அங்கு அமைந்துள்ள மலைக்குகைக்கு வந்து உள்ளே அமர்ந்திருக்கும் அவனை தியானத்திலிருந்து எழுப்புகின்றனர். அருகிலுள்ள ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று அவனை தூய்மைப்படுத்துகின்றனர். புதிய துவராடைகள் அணிவிக்கப்படுகிறது. புத்தமடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அவனுக்கு உலகமே புதியதாக தெரிகிறது. 'கென்போ' எனும் உயர்நிலை தகுதிச் சான்றும் அவனுக்கு வழங்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து நடைபெறும் விழாவில் பெரிய ராட்சச பொம்மை முகம…

    • 0 replies
    • 460 views
  9. ஜனநாதனின் புறம்போக்கு எனும் பொதுவுடமை யமுனா ராஜேந்திரன் I தமிழ் அரசியல் சினிமா என்பது, குறிப்பான காலம், குறிப்பான இடம், குறிப்பான பிரச்சினை, குறிப்பான வரலாறு, குறிப்பான உளவமைப்புள்ள பாத்திர வார்ப்புகள் என்பதனை ஒருபோதும் கொண்டிருப்பதில்லை. வெகுமக்களின் கையறுநிலையையும் அவர்களது பிரக்ஞையில் பொதிந்திருக்கும் நினைவுகளையும் அது காலமும் இடமும் குறிப்பிட்ட தன்மையும் கடந்த நிலையில் கலவையாகவும் மயக்கநிலையிலும் சித்தரிக்கிறது. அரசு, நிறுவனங்கள், அதிகார மையங்கள், அரசியல் கட்சிகள், நிலவும் மரபு, தணிக்கைமுறை போன்றவற்றை அவை பகைநிலையில் ஒரு போதும் வைத்துக்கொள்வதில்லை. அதே வேளையில் வெகுமக்கள் தாம் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கான போக்கிடமாகவும் ஆறுதலாகவும் விருப்ப நிறைவேற்றமாக…

  10. கருநிறக் கூந்தலில் இளநரை தோன்றிட, நிறைவேறாக் கனவுகளின் நிறமும் மங்கிடுமா? இல்லற வாழ்வில் தனைச் சார்ந்த உறவுகளின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சியுமாக் கொண்டவளின் தியாகங்களை அவ்வுறவுகள் தான் மதித்திடுமா? இல்லை அவை மிதிக்கப்படுமா? வாழ்வின் பருவமாற்றங்களுடன் வளர்ந்து விருட்சமான இலட்சியக்கனவுகள், நடுத்தரப்படுவம் நெருங்கிடும் காலந்தனிலும் வெறும் விதைகளாகவே வீணடிக்கப்படுமா? ஒவ்வோர் மனிதனுக்குள்ளும் இருக்கும் ஒர் தனி ஆற்றல்; தனது எது என்று இவள் என்று உணர்வாள்? எவர் இவளுக்கு உணர்விப்பர், ஊக்குவிப்பர்? தன் ஆற்றல் கண்டறிந்து, பற்றுடனும்,உறுதியுடனும் வீறுநடை போடு பெண்ணே! ஏற்றமுறும் உன் வாழ்வு! உனைப் போற்றிடும் உன் சுற்றம்! விதை விருட்சமாகித் தூற்றியோருக்கும் நிழல் தரும்!

  11. திருமணத்துக்குப்பிறகு, தனக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கையே இல்லாமல், குடும்ப வட்டத்துக்குள் முடங்கும் ஒரு பெண், ஒரு காலகட்டத்துக்குப் பின் அதே குடும்பத்தினரால் ஒதுக்கப்படும்போது எப்படி மீண்டும் தன் சுயத்தைக் கண்டடைகிறாள் என்பதே ‘36 வயதினிலே’. ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ மலையாளப் படத்தின் ரீமேக். அதை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இதையும் இயக்கியிருக்கிறார். பணம் சம்பாதிக்க அயர்லாந்துக்குப் போகவேண்டும் என்பது ரகுமானின் கனவு. மனைவி ஜோதிகாவின் 36 வயது அதற்குத் தடையாகிறது. கணவனும் மகளும் இதனால் எரிச்சல் அடைகிறார்கள். ரகுமான் ஒரு விபத்து நிகழ்த்திவிட, விசா கிடைக்கும் நேரத்தில் தன் மீது வழக்கு வந்துவிடக் கூடாது என்பதால் ஜோதிகாவை விபத்துக்குப் பொறுப்பேற்க சொல்கிறார். சட்டப்படி அதிலும் சிக்கல்…

    • 0 replies
    • 431 views
  12. நான்கு இளைஞர்களை நிஜமாகவே விளக்குமாறால் வெளுத்துக் கட்டிய ப்ரியங்கா! 'எல்லாரும் முட்டாளா இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்!' உலகத்துல எல்லோருமே முட்டாளா இருந்துட்டா எவ்ளோ நல்லாருக்கும்... இப்படி ஒரு யோசனை வந்தது இயக்குநர் இகோருக்கு... ஆரம்பித்துவிட்டார் வந்தா மல படத்தை. இகோர் தமிழ் சினிமாவுக்குப் புதியவர் அல்ல. ஏற்கெனவே கலாபக் காதலன், தேன் கூடு போன்ற படங்களைத் தந்தவர். கியிகர் புரொடக்ஷன் சார்பில் மலேசியாவைச் சேர்ந்த எஸ்.ஜெயராதாகிருஷ்ணன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். கங்காரு ப்ரியங்கா, தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ், வியட்நாம் வீடு சுந்தரம், மகாநதி சங்கர், எஸ்.ஜெயராதாகிருஷ்ணன், மலேசிய தியாகா, சவுகாந்த், மலைக்கா, திவ்யா, ராணி ஆகியோர் முக்கிய கேரக்டரில…

  13. ஓ காதல் கண்மணி - மணிரத்னத்தின் பழமைவாத அரசியல் சுரேஷ் கண்ணன் ஆண்டுத் தேர்வு முடிந்த விடுமுறை என்பதால் உறவினர்களின் பிள்ளைகளால் சூழ்ந்திருந்தது வீடு. எங்காவது வெளியில் போகலாம் என்று நச்சரித்தார்கள். சினிமாதானே தமிழ் சமூகத்தின் பிரதான பொழுதுபோக்கு? எனவே அதற்கு போகலாம் என்பது ஒருமனதாக முடிவாயிற்று. என்ன படம் போகலாம் என்பதற்கு 'ஓ காதல் கண்மணி' என்றார்கள். எல்லோருக்கும் சராசரியாக வயது 8 -ல் இருந்து 12 வயது வரைதான் இருக்கும். எனவே, 'அது காதல் தொடர்பான படமாயிற்றே, மேலும் cohabitation பற்றிய படமென்று வேறு சொல்கிறார்கள், பிடிக்காமற் போய் பின்னர் சிணுங்குவார்களோ, மேலும் இந்த வயதில் இவர்கள் பார்க்கின்ற படமா இது, என்றெல்லாம் கேள்விகள் உள்ளூற தோன்றின. எனவே அவ…

  14. உத்தம வில்லனும், கமலஹாசனும் வ.ஸ்ரீநிவாசன் திரைப்படம் எடுப்பதும் ஒரு வித்தை. இத்தனை வருடங்களாக இதில் இருக்கிறேன் என்பதாலோ, இத்தனை படங்கள் எடுத்திருக்கிறேன் / நடித்திருக்கிறேன் என்பதாலோ அது கை வந்து விடாது. சீதா தமிழில் சீதையாவதைப் போல் வித்யா, வித்யையாகி உச்சரிப்பில், பழக்கத்தில் வித்தையாகிறது. வித்யா என்றால் கல்வி, கற்றல். கல்விக் கடவுள் ‘கலை’மகள். ஆனால் ‘வித்தை’ என்னும் தமிழ்ச் சொல் பல பொருட்களிலும் வருகிறது. செப்பிடு வித்தை, கண்கட்டு வித்தை. ‘வித்தை காட்டுவது’. சினிமாவைக் கூட இப்படிச் சொல்லலாம். கண்கட்டு வித்தையால் வசனகர்த்தாக்களையும், நடிகர்களையும் முதலமைச்சர்களாக்க முடியும். தமிழில் வித்தை என்பதற்கு அதன் சம்ஸ்க்ருத பொருளையும் தாண்டி, திறன், தந்திரம், ஜாலம…

  15. ரஜினியிடம் போய் எப்படிக் கதை சொல்லி ஓகே பண்ணினார் இயக்குநர் ரஞ்சித் என்பதுதான் தற்போது தமிழ்த் திரையுலகில் எழுப்பப்படும் ஆச்சரியமான கேள்வி. ஆனால், ரஜினியிடம் போய் கதை சொல்ல வைத்து இப்படத்துக்கு ‘அ' போட்டுத் தொடங்கி வைத்தவர் செளந்தர்யா ரஜினிகாந்த். செளந்தர்யா - ரஞ்சித் நட்பு செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய 'கோவா' படத்தில் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ரஞ்சித். அப்போதிலிருந்தே செளந்தர்யாவுக்கு இயக்குநர் ரஞ்சித்தைத் தெரியும். ரஜினிகாந்த் தனது அடுத்த படத்துக்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதை விவாதத்தில் ஈடுபட்டுவந்தார். அப்போது, “எனக்கு ஏற்ற மாதிரி கார்த்திக் சுப்புராஜ், ரஞ்சித் போன்ற இளம் இயக்குநர்கள் கதை வைத்திருப்பார்களா…

    • 0 replies
    • 737 views
  16. சொத்துக்களை மீட்டுத்தரக்கோரி நடிகர் கஞ்சா கருப்பு போலீசில் மனு T சொத்துக்களை மீட்டுத்தரக்கோரி நடிகர் கஞ்சா கருப்பு சிவங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்துள்ளார். நடிகர் கஞ்சா கருப்பு திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு சிவகங்கை நகரைச் சேர்ந்தவர். இவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரையை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:- கடந்த வருடம் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற திரைப்படத்தை சிவகங்கை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் படமாக்கினர். இந்த படத்தின் டைரக்டராக கோபியும், நிர்வாக இயக்குனராக காளையப்பன் என்பவரும் இருந்தனர். பணம் பற்றாக்குறையால் படம் பாதியில் நின்றுவிட்டது. இதனால் இயக்குனர் கோபி, காளையப்பன் …

    • 0 replies
    • 405 views
  17. அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா "மத­னோற்­சவம் ரதி­யோ­டுதான்" - 1978 இல் வெளி­யான சது­ரங்கம் என்ற ரஜி­னியின் படப்­பா­ட­லிது. இந்தப் பாடலைக் கேட்டு எத்­த­னையோ வரு­டங்­க­ளா­கி­ன்றன. ஆனால் பாலுவின் குரல் அப்­ப­டி­யேதான் இருக்­கின்­றது. பாடலின் முத­லா­வது சர­ணத்தில் மீனாடும் கண்­ணி­லி­ருந்து நானா­டவோ.. தேனாடும் செவ்­விதழ் தன்னில் நீரா­டவோ.. என்று பாலு இரண்­டு­ த­டவை பாடு­கிறார். இரண்டு தட­வையும் வித்­தி­யா­ச­மாகப் பாடு­கிறார். அதற்குள் இரண்­டா­வது தடவை நீரா­டவோ என்று பாடும்­போது அதை நீ...ரா..டவோ என்று சில்­மிஷம் வேறு வைக்­கிறார். அது மட்­டு­மல்ல.. பாலு உச்­சஸ்­தா­யியில் பாடி முடிக்­கவும் வாணி அம்மா , .. புரி­யாத பெண்­மை­யிது . பூப்­போன்…

    • 1 reply
    • 1k views
  18. வேட்டி விளம்பரத்தில் நடிக்காதது ஏன்? ஒவ்வொரு மனிதரையும் சிந்திக்க வைத்த ராஜ்கிரண் பதில்! என்னதான் வர்த்தகமயமான சினிமா உலகில் வாழ்ந்தாலும், தனக்கென சில கொள்கைகளை விடாப்பிடியாக வைத்திருக்கும் அபூர்வ மனிதர்களும் அதே சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள். வர்த்தக விளம்பரங்களில் என்றல்ல, எந்த விளம்பரத்திலுமே தோன்றுவதில்லை என்ற கொள்கையில் பல ஆண்டுகள் உறுதியாக நிற்பவர் ரஜினி. அடுத்து ராஜ்கிரண். இவர் ஒரேயடியாக விளம்பரங்களில் நடிக்க மறுப்பதில்லை. அது நல்லதா, சமூகத்தை பாதிக்கிறதா என்பதைப் பார்த்தே எதையும் ஒப்புக் கொள்கிறார். சமீபத்தில் அப்படி வந்த ஒரு பெரிய வாய்ப்பை உதறித் தள்ளியிருக்கிறார். இதுபற்றி விகடனில் வெளியாகியுள்ள அவரது பேட்டியின் ஒரு பகுதி: ''…

  19. காற்றில் கலந்த இசை - பனிநிலத்தின் பாடல் மனது, காலம், நினைவு, நிலப்பரப்பு, உணர்வு என்று பல அடுக்குகளில் படிந்துகிடக்கின்றன இசையின் கூறுகள். குறிப்பிட்ட ஓர் இசையை மீண்டும் கேட்கும்போது, நீரின் மேல் மிதக்கும் மெல்லிய பூக்களாக மனதுக்குள் அவை மலர்வதை உணரமுடியும். நம் வாழ்வின் தருணங்களைத் தேக்கிவைத்திருக்கும் ஒரு பாடல், எங்கும் சுமந்துசெல்லக்கூடிய நிழல்படத் தொகுப்பாக நம்மைத் தொடர்ந்துகொண்டே இருக்கும். மழை ஓய்ந்த மதியப் பொழுதில் கேட்ட ‘அடி பெண்ணே’ பாடலை, சுட்டெரிக்கும் வெயிலின் தார்ச்சாலையில் நின்று கேட்டாலும் மனம் குளிர்ந்து சிலிர்ப்பதை உணரலாம். இரவின் தனிமையில் மொட்டை மாடியில் அமர்ந்து கேட்ட ‘பொன் மானைத் தேடி’ பாடல், எங்கோ ஒரு கிராமத்தில் வாழ்வைத் தொலைத்த காதலர்களை…

    • 52 replies
    • 32.7k views
  20. இயக்குநர் மணிரத்னத்திற்கு நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி. டெல்லி: பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் (59), நெஞ்சுவலி காரணமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை தனது குழுவினருடன் மணிரத்னம் கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில்,மணிரத்னத்திற்கு லேசான நெஞ்சுலி ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும், ஓய்வி…

  21. உத்தம வில்லரான' கமலுக்கு பத்திரிகையாளர்கள் மீது எப்போதும் அதீத பாசம். அதனால் மக்களுக்கு 2.30 மணிநேரம் போதும் என்று முடிவு செய்த படத்தை எங்களுக்கு மட்டும் 3 மணி நேரப்படமாக காண்பித்தார். அது கமல் கணக்கு. ‘என் சொந்த அந்தரங்கங்களை கிசுகிசுக்களாக எழுதிப் பொழைத்த புண்ணியவான்களே, உங்களுக்காக இந்தப் படம் சமர்ப்பணம்' என்று ஒரு நக்கல் கார்டு படத்தின் துவக்கத்தில் போடத் திட்டமிடப்பட்டு கடைசி நிமிடங்களில் அத்திட்டம் கைவிடப்பட்டதாக கமலுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து கேள்விப்பட்டேன். அப்படி செய்திருந்தாலும் தப்பில்லை என்றுதான் படம் பார்க்கும்போது தோணியது. ஏனெனில் இனி பத்திரிகையாளர்கள் தனது காதல் கதைகளை கிசுகிசுக்களாக எழுத முடியாதபடிக்கு மொத்தத்தையும் அவரே எழுதிக்கொண்ட படமே ‘உத…

    • 0 replies
    • 949 views
  22. வில்லியம் வாலஸும் மெல் கிப்சனும் [ ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2015, 11:03.04 AM GMT ] தமிழினத்தின் புனித மண்ணாக அறிவிக்கப்பட வேண்டிய முள்ளிவாய்க்கால் மண் ரத்தத்தால் நனைந்த நாளை நினைவுகூரும் விதத்தில், 2010ல், கோயம்பேடு அங்காடியில் ஓர் உருக்கமான நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார் பெருவணிகரும் தயாரிப்பாளருமான நண்பர் மணிவண்ணன். சுமார் ஆயிரம்பேர் திரண்டனர். கொல்லப்பட்ட உறவுகளின் நினைவாக மெழுகுவர்த்திகளை ஏற்றினர். அந்த நிகழ்வில் முதல் மெழுகுவர்த்தியை ஏற்றியவர், மறைந்த இயக்குநர் ஆர்.சி.சக்தி. மறுநாள் சக்தி சாரைச் சந்தித்து நன்றி தெரிவித்தபோது, கண்கலங்க அவர் என்ன சொன்னார் என்பதை சக்தியின் சகோதரன் கமல் தெரிந்துகொள்ள வேண்டும். "அந்த மக்களை சர்வதேசம் காப்பாற்றியிருக்க வேண்டும்...…

  23. மரணத்தைக் கண்ணில் பார்த்துவிட்ட ஒரு நடிகன், சாகாவரம் பெற்ற கலைஞனாக நடிக்கிறான். இந்த முரண்பாட்டில் மையம் கொண்டிருக்கும் உத்தம வில்லன், மரணத்தை எதிர்நோக்கும்போது ஏற்படக்கூடிய உணர்ச்சிக் கொந்தளிப்புகளைப் பற்றிப் பேசுகிறது. தமிழ் சினிமா கொண்டாடும் சூப்பர் ஸ்டார் மனோரஞ்சன் (கமல்ஹாசன்). ஒரு டீன் ஏஜ் பையனின் தந்தையான மனோரஞ்சனுக்கு ரகசியக் காதலியும் உண்டு (ஆண்ட்ரியா). வாழ்க்கையின் உச்சகட்ட வெற்றியைச் சுவைத்துக்கொண் டிருக்கும் தருணத்தில் கொடிய நோய் தாக்க, செய்யத் தவறிய பரிகாரங்கள், கடமைகளை வேகமாக நிறைவேற்ற முடிவுசெய்கிறான். ஒரு கலைஞனாக மக்கள் மனதில் இறவா இடம் பிடிப்பதற்காகத் தன்னை வளர்த்து ஆளாக்கிய இயக்குநர் மார்க்கதரிசியிடம் (கே. பாலசந்தர்) சென்று ஒரு சினிமா எடுக்கவும் வேண்டுக…

  24. சினிமாவை எனது சொந்த கருத்தை திணிக்கும் களமாக நான் பயன்படுத்துவதில்லை- மணிரத்னம்

  25. லண்டனில் முக்கிய பிரமுகர் ஒருவருடைய மகனின் திருமண வைபவத்தில் நடனம் ஆடுவதற்காக இலங்கை பொலிவூட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு அழைப்பு கிடைத்துள்ளது என்று இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நடனத்துக்காக அவர், இந்திய ரூபாவில் 4 கோடியை கேட்டுள்ளார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொலிவூட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு அந்த பணத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருமண வைபவத்தை மே மாதம் இறுதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருமண வைபவத்துக்காக லண்டன் செல்லும் அவர், அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருப்பார் என்றும் அந்த இரண்டு நாட்களுக்குமான தங்குமிட வசதிகள் மற்றும் விம…

    • 0 replies
    • 496 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.