வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
இந்திரலோகம் என்ற எண்ணெய் கொப்பரையில் விழுந்து, தனது வழக்கமான அலப்பறையை தொலைத்தவர் வடிவேலு. “வேணாம்டா இந்த ஹீரோ பொழப்பு” என்று விலகி வேறு திசையில் ஓட ஆரம்பித்தவரை, மறுபடியும் லகான் போட்டு இழுத்திருக்கிறது ஒரு கதை. புரபஷனல் கொலைக்காரன் ஒருவன், கொலை செய்யப்போகிற இடத்தில் எல்லாம் எக்குதப்பாக எதையாவது செய்து மாட்டிக் கொள்வானாம். பிறகென்ன...? தர்ம அடிதான்! படம் முழுக்க இப்படி நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டதுபோல் எக்கச்சக்க நகைச்சுவை. கேட்டவுடன் பிடித்துப் போக, தனது விரதத்தை முடித்துக் கொண்டாராம் வடிவேலு. இந்த கதையில் ஹீரோவாக நடிக்க ரெடி என்று கூறிவிட்டாராம். இப்படி ஒரு கதையை சொல்லி வடிவேலுவின் வைராக்கியத்தை பொடி பொடியாக்கியவர் ராஜு ஈஸ்வரன் என்ற இயக்குனர். சின…
-
- 0 replies
- 986 views
-
-
தனுஷ் தன் திரைப்பயணத்தில் மிக மோசமான நிலையில் இருந்த போது அவரை தூக்கிவிட்ட படம் விஐபி. ஒட்டு மொத்த இன்ஜினியரிங் மாணவர்களின் ஆதரவுடன் செம்ம ஹிட் அடிக்க, தற்போது விஐபி-2வில் மீண்டும் இறங்கி அடிக்க தனுஷ் களம் இறங்கியுள்ளார், தனுஷ் இறங்கி அடித்தாரா? பார்ப்போம். கதைக்களம் விஐபி தனுஷ் திரைப்பயணத்தில் பிரமாண்ட வெற்றி. சிம்பிள் கதை, பண பலம் உள்ளவன் நினைத்தால் எதையும் செய்யலாம். ஆனால், இளைஞர் சக்தி அதை விட பெரியது என்று காட்டியிருப்பார்கள். அதே டெம்ப்ளைட் தான், என்ன இதில் கொஞ்சம் அதிக பட்ஜெட் அவ்வளவு தான், கஜோல் என்ற எல்லோரும் தெரிந்த முகம். தென்னிந்தியாவிலேயே மிகப்பெரும் Construction வைத்திருப்பவர் கஜோல். அவர் c…
-
- 3 replies
- 985 views
-
-
அனைவரும் பார்க்கவேண்டிய படம் "3 Idiots" - திரைவிமர்சனம் படத்தின் பெயரை பார்த்ததும் சரி! எதோ மூன்று பேர் முட்டாள்தனமா காமெடி என்கிற பெயரில் எதோ செய்வார்கள் கடைசியில் பப்பரப்பேன்னு முடித்து விடுவாங்க என்று நினைத்து சென்றால் யோவ்! உன் நினைப்பை தூக்கி உடப்புல போடு! ன்னு சொல்லாம படத்தை முடித்து நச்சுனு கொட்டு வைத்துட்டாங்க! எப்போதும் எனக்கு அமீர் மீது மதிப்புண்டு வழக்கமான ஹிந்தி மசாலாக்கலில் இருந்து வித்யாசமான படங்களில் நடிக்கிறார் என்று.. அது இதில் தாறுமாறாக உறுதியாகி இருக்கிறது. படத்தின் கதை என்னவென்றால் மூன்று நண்பர்கள் கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்கிறார்கள், அவர்கள் முறையே அமீர், (நம்ம)மாதவன், ஷர்மின். இதில் அமீர் மிகப்பெரிய பணக்காரர் மகன், மாதவன் ந…
-
- 2 replies
- 985 views
-
-
Shakuntala Devi - Human Computer.. இந்தப்படம், "மனித கணினி" என பிரபல்யமாக அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி (4 நவம்பர் 1929 - 21 ஏப்ரல் 2013) பற்றிய ஒரு இந்தி மொழி வாழ்க்கை வரலாற்று நகைச்சுவை-நாடக படமாகும் தாயைப்பற்றிய மகளின் உணர்வுகள், அறிந்த உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம். ஒரு மகளுக்கும் தாய்க்கும் இடையிலான பிணைப்பை, அவர்களின் வித்தியாசமான எண்ணங்களை அவரது மகள் இந்தப்படம் மூலம் பகிர்ந்துகொள்கிறார். 2001 ஆம் ஆண்டில், அனுபமா பானர்ஜி (சன்யா மல்ஹோத்ரா) தனது கணவர் அஜயுடன் தனது தாயார் சகுந்தலா தேவி (வித்யா பாலன்) மீது வழக்குத் தொடுப்பதற்காக லண்டன் வரும் பொழுது அவரது நினைவுகள் கடந்த காலத்தை நோக்கி செல்கிறது. கடினமான கணித கேள்விகளை சகுந்தலா மிகமிக வே…
-
- 8 replies
- 985 views
-
-
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் இடத்தை எளிதாக அடைந்துவிட்டார் நகைச்சுவை நடிகர் சந்தானம். இவருக்கு காமெடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தைக் கூட அலெக்ஸ் பாண்டியன் பட இயக்குனர் தனது படத்தின் டைட்டில் கார்ட் மூலம் வழங்குவதாகவும் தகவல்கள் பரவியுள்ள நிலையில் சந்தானம் தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாக குமுறலுடன் கூறுகிறார் ஒரு உதவி இயக்குனர் ஒருவர். சந்தானம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா 'என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பதும், இந்த படத்தின் கதை, திரைக்கதை கூட நடிகர் சந்தானத்துடையது தான் என்பதே இதுவரை எட்டியிருந்த தகவல். ஆனால் இப் படத்தின் கதை சந்தானத்துடையது அல்ல, என்னுடையது என்கிறார் இவர். நவீன் சுந்தர் என்பவர், இவர் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இவர் குமுறலுடன…
-
- 0 replies
- 985 views
-
-
நீங்கள் இந்த உலகில் பெளதீக ரீதியாக மனிதன் என்கிற அடையாளத்தைத் தவிர சமூகத்தில் என்னவாக அடையாளப்படுத்தப் படுகிறீர்கள்? உங்கள் பெயர், முகம், பதவி தவிர்த்துப் பார்த்தால் நீங்கள் வாழும் தேசத்தின் குடிமகனாக, நீங்கள் சார்ந்த இனத்தவராக உங்களுக்கென்று ஒரு அடையாளம் நிச்சயமிருக்கும். ஆனால் பெயரையோ, முகத்தையோ, இனத்தையோ, வாழும் ஊரையோ, தேசத்தையோ அடையாளமாக சொல்லமுடியாதபடி எத்தனையோ லட்சம் பேர் ஏதோ ஒரு தேசத்தின் எல்லைப் பகுதியில் அல்லது ஜனசஞ்சாரத்தில் ஒளிந்து கொண்டபடி, தங்கள் இயல்பான அடையாளத்தை தொலைத்துவிட்டு ‘அகதிகள்' என்ற பெயரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உலகில் மிக அதிக எண்ணிக்கையில் அகதிகளாக வாழ்பவர்கள் பாலஸ்தீனியர்கள். அதற்கு அடுத்தபடியாக ஆப்கானியர்கள். பொதுவாக…
-
- 1 reply
- 984 views
-
-
நடிகர்களின ரசிகர்கள் தங்கள் தலைவர்களை பில்டப் செய்து சொல்லும் வாசகங்கள் பல உண்டு. அதில் ஒன்று, 'தலைவர் வந்து நின்றால் போதும் படம் நூறு நாள்!' உண்மை! 'ஆழ்வார்' படத்தில் அஜித்தை பார்க்கும் போது, சும்மா திரையில் வந்து போனாலே படம் பிய்ச்சுக்கும் என்று தோன்றுகிறது. படத்தின் தயாரிப்பாளர் மோகன் நடராஜனும் இதையே கூறுகிறார். "பட பூஜை போஸ்டரில் அஜித் சாமி கும்பிடும் ஸ்டில்லைப் பார்த்து பாராட்டாதவர்கள் இல்லை. அப்போதே 'ஆழ்வார்' ஒரு வெற்றி படம் என தீர்மானித்து விட்டேன்." அழகுக்கு ஆபரணம் தேவையில்லை என்றாலும் அஜித்தை மேலும் அட்டகாசமாக காட்ட காஸ்ட்யூமில் காசை அள்ளி வீசியிருக்கிறார்கள். அதிலும் பாடல் காட்சிகளில் இன்னும் விசேஷம். குறிப்பாக, சுவிட்சர்லாந்தில் எடுக்கப்…
-
- 0 replies
- 984 views
-
-
வேலையில்லா பட்டதாரி - விமர்சனம் நட்சத்திரங்கள் : தனுஷ், அமலா பால், விவேக், சரண்யா, சமுத்திரக்கனி, சுரபி, செல் முருகன் மற்றும் பலர் கதை, திரைக்கதை, இயக்கம் : வேல்ராஜ் இசை : அனிருத் ஒளிப்பதிவு : அருண்பாபு எடிட்டிங் : ராஜேஸ் குமார் தயாரிப்பு : தனுஷ் எஞ்சினியரிங் முடித்துவிட்டு வேலையில்லாமல் 'தண்டச்சோறாக' இருக்கிற வேலையில்லா பட்டதாரி வேலை கொடுக்கிற பட்டதாரியாக மாறி சாதிக்கிறதுதான் படத்தின் கதை. இந்தச் சிறிய கதையை பெரிய கதையாக ரசிக்க வைக்கிறார் அறிமுக இயக்குநர் வேல்ராஜ். 'எந்திரிடா தண்டச் சோறு' என்று ஆரம்பிக்கிற படம் பின்னர் எந்த இடத்திலும் ரசிகர்களை தூங்க விடாமல் ரசிக்க வைக்கிறது. பி.ஈ (பொறியியல்) பட்டம் பெற்ற வேலையில்லா பட்டதாரி ரகுவரனாக தனுஷ். ஆதரிக்கிற அம்…
-
- 0 replies
- 984 views
-
-
டைரக்டர் சாமியிடம் அறைவாங்கிய பத்மப்ரியா, பத்திரிகையாளர்களை சந்தித்தார். நடந்த சம்பவம் குறித்து படபடப்புடன் பேச ஆரம்பித்தார். படப்பிடிப்பு முடிந்து காரில் ஏறப்போன என்னை அழைத்த சாமி, அத்தனை பேர் முன்னிலையிலும் பளார் என்று கன்னத்தில் அறைந்தார். அவரின் இந்த செயல், பல நாட்களாக பிளான் பண்ணி செய்தது போல் இருந்தது. நான் ஒரு மிடில்கிளாஸ் பொண்ணு. அப்படியே நடுங்கி போய்விட்டேன். நானும் 21 படங்களில் நடிச்சு முடிச்சுட்டேன். பல விருதுகள் வாங்கியிருக்கேன். இப்படி ஒரு மோசமான அனுபவம் என் வாழ்க்கையில் நடந்ததே இல்லை. எனக்கு அழுகை சரியா வரலை. அழ வைக்கதான் அடித்தேன் என்று பத்திரிகைகளில் சொல்லியிருக்கிறார். என்னை அறையும்போது எந்த கேமிராவும் ஓடவில்லை. எந்த லைட்டுகளும் ஆன் செய்யப்பட்டிருக்க…
-
- 0 replies
- 984 views
-
-
அப்பனும், ஆத்தாளும் மற்றும் பாரதிராஜாவும்! மண் வாசனை மாறாத இயக்குநர் பாரதிராஜா. அவர் கொடுத்த ஆரம்ப காலப் படங்களில் தெறித்த மண் வாசமும், மனிதர்களின் பாசமும், எத்தனை காலமானாலும் மறக்க முடியாத, ஜீவனுள்ள காவியப் படைப்புகள். அப்படிப்பட்ட பாரதிராஜா, அப்பேர்ப்பட்ட படங்களைக் கொடுத்து ரொம்ப காலமாகி விட்டது. எப்பேர்ப்பட்ட படங்கள் அவை என்ற பிரமிப்பு இன்னும் நீங்காமல் இருக்கும் நிலையில் இடையில் அவர் ஆடிய 'பொம்மலாட்ட'மும், 'கண்களால் கைது செய்'த விதமும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் இப்போது மீண்டும் தனது மண்ணுக்கு பரிவாரங்களுடன் தடபுடலாக கிளம்பியுள்ளார் பாரதிராஜா. பண்ணைப்புரத்து பாண்டவர்களில் ஒருவரான இளையராஜா இல்லாத நிலையில், புரவி வேகத்திலான புதுமை…
-
- 0 replies
- 983 views
-
-
மாதம்தோறும் 50 ஆயிரத்துக்குக் குறையாமல் ஒரு லட்சத்துக்கு மிகாமல் கொடுத்து விடுகிறார். 3 கார், 3 வேலையாட்கள்! சென்னையில் ஷூட்டிங் என்றால் ராத்தங்கல் வெளியில் இல்லை! வெளியூர் போயிருந்தால் ஷூட்டிங் முடிந்ததும் சென்னைக்கு வந்து பிள்ளைகளைப் பார்க்கிறார். மனைவியுடன் தாம்பத்யம் இல்லை. இதுதான் டான்ஸ் மாஸ்டரின் தற்போதைய வாழ்க்கை. ‘இது நல்லாயிருக்கா தம்பி? அந்த நடிகையுடன் சுற்றுவதை நிறுத்திட்டு மனைவிக்கு நல்ல புருஷனா, பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கக் கூடாதா?’ என்று பிரபல தயாரிப்பாளரின் மனைவி கேட்க, அவர் சொன்ன பதில் ‘என்னால அவளை மறக்கமுடியலே ஆன்ட்டி!’ என்கிறாராம் நடிகர் மாஸ்டர் டைரக்டர். படங்களைப் பார்வையிட.... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4…
-
- 1 reply
- 983 views
-
-
தமிழ் சினிமாவை பொறுத்தவரை திருமணம் ஆகும்வரை தான் ஹீரோயின் மார்க்கெட். திருமணம் ஆகி குழந்தை பெற்றுவிட்டால், அக்கா, ஆண்ட்டி வேடங்கள்தான் கிடைக்கும். இதற்கு பயந்து கொண்டே திருமணத்தை தள்ளிவைக்கின்றார்கள் நடிகைகள். இன்னும் சில நடிகைகள் திருமணம் ஆனாலும் தேடிப்பார்.காம்.குழந்தை பெறுவதை ஒத்தி வைக்கின்றார்கள். ஐஸ்வர்யாராய் திருமணம் ஆகி, மூன்று ஆண்டுகள் வரை குழந்தை பெறாமல் ஹீரோயினாக நடித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சினேகா மற்றும் ஜெனிலியா ஐஸ்வர்யாராயை பின்பற்றி, குழந்தை பெறுவதை தள்ளிவைத்துள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. கே.ஆர்.விஜயாவுக்குப்பிறகு புன்னகை அரசி என்ற அடைமொழியுடன் கோடம்பாக்கத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சினேகா. கடந்த ஆண்டு நடிகர் பிரசன்னாவ…
-
- 2 replies
- 983 views
-
-
சினிமா ஆர்வலர்களின் கண்களுக்கும் கருத்துகளுக்கும் தீனிபோட சென்னையில் 'சினிமா டுடே' திரைப்பட விழா தொடங்கியது. திரைப்பட ஊடகம் தொடங்கப்பட்டு பவள விழா கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 75 ஆண்டு கால திரைப்பட வரலாற்றை நினைவு கொள்ளும் வகையில் சர்வதேச திரைப்படவிழா (Film panorama) சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாயாஜால் திரையரங்குகளில் தொடங்கப்பட்டது. நடிகர்கள் ஜெயம்ரவி, அருண்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், அலெக்ஸ், நடிகைகள் சினேகா, கஸ்தூரி, கீர்த்திசாவ்லா ஆகியோர் கலந்துகொண்டு பலூன்களை பறக்கவிட்டு திரைப்பட விழாவை தொடங்கி வைத்தனர். நேற்று தொடங்கிய படவிழா நாளை வரை நடக்கிறது. சர்வதேச அளவில் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்ட 30 படங்கள் தினமும் 10 ப…
-
- 0 replies
- 983 views
-
-
நடிகை நயன்தாரா பிறப்பால் ஒரு கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர். பின் பிரபு தேவா மீது கொண்ட காதலால் இந்து மதத்திற்கு மாறினார், பிறகு அந்த காதல் தோல்வியில் முடிந்த கதை தான் நமக்கே தெரியும். தற்போது ஆன்மிகத்தில் மூழ்கியிருக்கும் நயன்தாரா, சமீபத்தில் கூட வட இந்திய கோவிலுக்கு சென்று வந்தார். இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், ஏதோ ஒரு மன விரக்தியில் தான் இருந்து வருகிறார். மனஅமைதி கிடைக்க செய்யும் முயற்சியில் நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் நித்யானந்த ஆசிரமத்துக்கு வருமாறு நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நிறைய பெண்கள் ஆசிரமத்துக்கு வந்து தியானம், யோகா மூலம் கவலைகளை மறக்கிறார்கள். எனவே நீங்களும் ஆசிரமத்துக்க…
-
- 5 replies
- 983 views
-
-
ரஜினி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை அவர் நடித்துள்ள குசேலன் படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து நிருபர்களிடம் கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பின் மாநில தலைவர் ஏ.டி.நாராயண கவுடா கூறியதாவது: கர்நாடகா - தமிழகம் இடையே ஒகேனக்கல் எல்லை பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது. ஒகேனக்கல் பகுதியை கர்நாடகாவுடன் சேர்க்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்தப் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக திரையுலகினர் உண்ணாவிரதம் இருந்தனர். அதில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், கன்னடர்கள் விஷக்கிருமிகள். அந்தக் கிருமிகளை அழிக்க வேண்டும் என்று மிகவும் கேவலமாக பேசியுள்ளார். ரஜினியின் பேச்சு 5 கோடி கன்னடர்கள் மனதில் ஆறாத காய…
-
- 0 replies
- 983 views
-
-
தமிழ் சினிமாவை புரிஞ்சுக்கவே முடியவில்லை. வெற்றிலை குதப்பி கஞ்சா விற்றபோது சங்கீதாவுக்கு கிடைக்காத வரவேற்பு கொழுந்தனை காமப் பார்வை பார்த்தப் பிறகு கிடைத்திருக்கிறது. பிரச்சனையை கிளப்பிய 'உயிர்' படத்துக்குப் பிறகு மூன்று முக்கியப் படங்களில் நடிக்கிறார் சங்கீதா. இதில் இரண்டில் சங்கீதாதான் ஹீரோ - ஹீரோயின் எல்லாம். முதல்படம் 'காசு'. 'உயிர்' படத்தைப் போல இதிலும் கொஞ்சம் வில்லங்கமான வேடமாம். இரண்டாவது 'தனம்.' சேலை கட்டி தனத்தில் சங்கீதாவைப் பார்ப்பதே பரவசம். இளையராஜ சுவாமிகள் (அப்படிதான் விளம்பரப்படுத்துகிறார்கள்) இசையமைக்கிறார். இவை இரண்டுக்கும் பிறகு சங்கீதா நடிக்கும் படம் 'இவன் யாரோ.' அறிமுக இயக்குனர் இயக்கும் இந்தப் படத்தின் ஹீரோ, மாதவன். க்ரைம் த்ரில்லரான இ…
-
- 0 replies
- 983 views
-
-
கரிமேடு படத்தில் பூஜா காந்தியின் அரை நிர்வாண காட்சி May 8, 2013 03:41 pm நடிகை பூஜா காந்தி கரிமேடு என்ற படத்தில் ஜாக்கெட் அணியாமல் அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பெங்களூர் அருகே உள்ள தண்டுபாளையம் என்ற இடத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. அந்த பகுதியில் 91 பாலியல் வல்லுறவுகள்,106 கொலைகள், 203 கொள்ளைகள் நடந்தன. இத்தகு அக்கிரமங்கள் செய்த மனித மிருகங்களை காவல்துறையினர் எப்படி வேட்டையாடினார்கள் என்பதே கதை. இதில் பூஜாகாந்தி கொடூர கொலைகள் செய்யும் வில்லியாக வருகிறார். அவருடன் மக்ராந்த் தேஷ்பாண்டே, ரவிசங்கர், சீனிவாச மூர்த்தி, பிரியங்கா கோத்தாரி, ரகுமுகர்ஜி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் கன்னடத்தில் ஏற்கனவே வசூல்…
-
- 2 replies
- 982 views
-
-
சாமானிய நாயகர்களின் மரணம் சுரேஷ் கண்ணன் வாரம் ஒரு முறை மாத்திரமே திரைப்படம் ஒன்றைக் காண கூடிய தூர்தர்ஷன் காலக்கட்டத்தில் அதைக் காணப் போகும் பரவசத்தின் ஊடே பெயர்கள் ஓடும் போது 'சண்டைக்காட்சிகள் அமைப்பு" என்கிற வார்த்தை வருகிறதா என்பதை நண்பர்களுடன் இணைந்து கூர்மையாக கவனித்து நிச்சயித்துக் கொள்வோம். அந்த வார்த்தைதான் அந்தப் படத்தை தொடர்ந்து பார்க்கப் போகிறோமோ அல்லவா என்பதை தீர்மானிக்கும் விஷயமாக அப்போது இருந்தது. ஹீரோ என்று ஒருவன் இருந்தால் அவன் நிச்சயம் சண்டை போடத்தெரிந்தவனாகத்தான் இருந்தாக வேண்டும், அல்லாவிடில் அவன் ஹீரோவே அல்ல என்று நம்பிக் கொண்டிருந்த விடலை வயதுக் காலத்தை தாண்டிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு திரைப்படத்தின் காட்சி என்னை சற்று கலைத்து…
-
- 0 replies
- 982 views
-
-
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக உரக்கப் பேசும் படமே 'வெள்ளைப்பூக்கள்'. ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான விவேக் அமெரிக்காவில் இருக்கும் மகனுடன் ஓய்வுக்காலத்தைக் கழிக்க அங்கு செல்கிறார். மக்கள் நடமாட்டமே இல்லாத அமைதி சூழ் உலகு அவருக்குப் புதிதாக இருக்கிறது. மகன் தேவ் உடன் பேசும் விவேக் மருமகள் பெய்ஜி ஹெண்டர்சனுடன் பேசாமல் தன் வேலையை மட்டும் பார்க்கிறார். அமெரிக்காவில் இருக்கும் மற்றொரு தமிழரான சார்லியின் அறிமுகப் படலத்துக்குப் பிறகு அவரும் விவேக்கும் சகஜமாகப் பழகி அமெரிக்காவில் இஷ்டம் போல் உலா வருகிறார்கள். இந்நிலையில் திடீரென்று விவேக்கின் பக்கத்து வீட்டுப் பெண் மோனா கடத்தப்படுகிறாள். அதற்கடுத்த சில நாட்களில் கார்லோஸ் என்ற பள்…
-
- 1 reply
- 982 views
-
-
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் மேலுமொரு தமிழ்படம் திரையிடப்படுகிறது. பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் தயாரித்த படம் 'மொழி'. காது கேட்காத வாய் பேச முடியாத இளம் பெண்ணின் உலகை, அவளது தன்னம்பிக்கையை, சுய கெளரவத்தை இப்படத்தில் ரசிக்கும்படி வெளிப்படுத்தியிருந்தார் இயக்குனர் ராதாமோகன். மெல்லிய நகைச்சுவை இழையோட ஒரு சீரியஸ படத்தை தரமுடியும என்பதற்கு இன்று உதாரணமாக விளங்குகிறது 'மொழி'. இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. கேன்ஸ் படவிழாவுக்கு ஏற்கனவே 'வெயில்' தேர்வாகியுள்ளது. 19-ம் தேதி திரையிடப்படும் 'வெயில்' திரைக்காட்சியில் பங்கேற்க அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கரும் இயக்குனர் வசந்தபாலனும் கேன்ஸ் செல்கின்றனர். இம்மாதம் 22-ம் தேதி கேன்ஸ் படவிழாவில் 'ம…
-
- 0 replies
- 982 views
-
-
பாலிவுட்டின் இந்த வருட 'மோஸ்ட் வான்டட்’ திரைப்படம் 'Ra. One’. 'Random Access Version 1.0’ என்பதன் சுருக்கம்தான் 'ரா-1’. ஷங்கரின் 'ரோபோ’வை (இந்தி 'எந்திரன்’)விட பவர்ஃபுல் சினிமாவாக 'ரா-1’ இருக்க வேண்டும் என்று தூக்கம் பார்க்காமல் உழைத்துக்கொண்டு இருக்கிறார் ஷாரூக் கான். ஷங்கர் சொன்ன 'எந்திரன்’ கதை பிடிக்காமல், அதில் இருந்து விலகினாலும், அந்தக் கதையின் ஒன் லைனைத் தழுவித்தான் ஷாரூக் இந்தப் படத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார் என்று ஏற்கெனவே ஒரு பேச்சு பரவிக்கிடக்கிறது. அதனால், 'எந்திரன்’ படத்தின் அட்வான்ஸ்டு ரீ-மேக்தான் ரா.1 என்ற கிண்டல் பேச்சை அடித்துத் தூள் தூளாக்கும் வெறியுடன் உழைத்துக்கொண்டு இருக்கிறார் ஷாரூக். பெரும் பட்ஜெட் படம் பற்றிய சிறு துளித் தகவல்கள்! …
-
- 2 replies
- 982 views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/03/blog-post_4601.html
-
- 0 replies
- 982 views
-
-
விரைவில் எனக்கு திருமணம்: ஸ்ரேயா நான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகின்றேன், பெற்றோர் எனக்கு மாப்பிள்ளை பார்க்கின்றனர் என நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். திருமணம் குறித்து ஸ்ரேயா அளித்த பேட்டியில், எல்லாம் அந்தந்த வயதில் நடக்க வேண்டும். பெற்றோருக்கும் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே நான் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டேன். பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையே திருமணம் செய்து கொள்வேன். திருமணத்துக்கு நான் சம்மதித்து விட்டதால் ஸ்ரேயாவுக்கு சினிமா வாய்ப்பு போய்விட்டது. அதனால்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று வதந்திகள் பரவக்கூடும். சினிமாவுக்கும், திருமணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செய்து இதனை புரிந்த…
-
- 6 replies
- 981 views
-
-
Jan 21, 2011 / பகுதி: செய்தி / கனடியத் தமிழ் திரைப்பட விழா விருதிற்கான தெரிவுகள் கனடியத் தமிழ் திரைப்பட விழா விருதிற்கான தெரிவுகள் சிறந்த திரைக்கதை A. நன்றி அம்மா B. 3 இரவு 4 பகல் C. எரிதழல் பறவைகள் சிறந்த படத்தொகுப்பு (editing)) A. பூச்செடி B. நன்றி அம்மா C. Wind (காற்று) சிறந்த ஒளிப்பதிவு: A. எரிதழல் பறவைகள் B. Nuit et Blanc (கறுப்பு வெள்ளை) C. Wind (காற்று) சிறந்த இயக்கம்: A. நன்றி அம்மா B. எரிதழல் பறவைகள் C. பூச்செடி சிறந்த குறுந்திரைப்படம்: A. நன்றி அம்மா B. எரிதழல் பறவைகள் C. Wind (காற்று) சிறந்த இசைக்காணொளி: A. ஒளி வரும் வரையில் B. The Final Chapter C. செல்லுவா பெண்ணே (Chelluva Penne) …
-
- 1 reply
- 981 views
-
-
நவீன ஓவியங்களைப் போலவே ஓவியர்களின் வாழ்க்கையும் புதிரும் வசீகரமும் நிரம்பியது. நீண்ட பாரம்பரியமும் மரபும் கொண்ட ஓவிய உலகில் பல நூற்றாண்டுகளாகவே ஓவியர்கள் தனித்துவமானவர்களாகவும் தங்களுக்கென தனியானதொரு அகவுலகையும் உணர்ச்சி நிலைகளையும் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். டாவின்சி ஓவியராக மட்டுமின்றி சிறந்த எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார் என்பதற்கு சான்றாக அவரது நோட்புக்ஸை வாசிக்கும் போது அறிய முடிகிறது. அது போல கவிஞர்களாகவும், இசைக்கலைஞர்களாகவும், தத்துவ சார்பு கொண்டவர்களாகவும் பல முன்னணி ஓவியர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சிகள் உள்ளன. புகழ்பெற்ற ஓவியர்களின் வாழ்க்கை வரலாறுகளை வாசிக்கையில் அனைவரது வாழ்விலும் மிகுந்த வறுமையும் சொல்ல முடியாத அவமானமும் தன…
-
- 0 replies
- 981 views
-