ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143647 topics in this forum
-
'அரசியல் தீர்வு விடயத்தில் மஹிந்த அரசு காட்டும் இழுத்தடிப்பு மற்றும் வடக்கு, கிழக்கில் படையினரின் அராஜகங்கள் குறித்து சர்வதேச நாடுகளுக்கு எதிர்வரும் தினங்களில் எடுத்துரைக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நேற்று ஜேர்மனிக்குப் பயணமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், சர்வதேச மத்தியஸ்தம் ஊடாக ஒரு தீர்வைப்பெறவே தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள் என்பதை அந்நாட்டுப் பிரதிநிதிகளிடம் தெரிவிக்கவுள்ளதாகவும், இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும் என்பதனை வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தை நம்பி நாம் இனிப் பேச்சுக்கு செல்லமாட்…
-
- 0 replies
- 396 views
-
-
பம்பலப்பிட்டி குடியிருப்பிலிருந்து வெளியேறுமாறு எமக்கு அழுத்தம் : தொடர்மாடி குடியிருப்பு மக்கள் விசனம் பம்பலப்பிட்டி குடியிருப்பிலிருந்து வெளியேறுமாறு எமக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது. எவ்விதமான கரிசனையுமற்ற வகையில் 64 மாடிகளை கொண்ட தொடர்மாடி குடியிருப்பில் எம்மை அடைத்து துன்புறுத்தவே அரசாங்கம் விரும்புகின்றது என்று பம்பலப்பிட்டி தொடர்மாடி குடியிருப்பு மக்கள் விசனம் தெரிவித்தனர். இந்தக் குடியிருப்பு தொகுதியை வர்த்தக நடவடிக்கைககளுக்காக பயன்படுத்திக்கொண்டு முதியோரையும் சிறுவர்களையும் அநாதரவாகவே பலரும் முயற்சிக்கின்றனர். குறித்த விவகாரத்தில் உடனடி…
-
- 3 replies
- 636 views
-
-
ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசினை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.01.09) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 440 views
-
-
இறுதி யுத்தம் இடம்பெற்ற புதுமாத்தளனையும் ஆக்கிரமிக்கச் சென்றனர் சிங்கள மீனவர்கள் - 30 ஜனவரி 2013 இறுதியுத்தம் நடந்த பகுதிகளில் ஒன்றான புதுமாத்தளனில் குடியேறி அப்பகுதி கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்காக நேற்று (29.01.13) தெற்கிலிருந்து ஒரு பகுதி சிங்கள மீனவர்கள் தமது குடும்பங்கள் சகிதம் சென்று சேர்ந்தனர். இதனால் புதுமாத்தளன் பகுதி மீனவர்களுக்கும் சிங்கள மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு அப்பகுதியில் பதற்றம் நிலவியது. ஏற்பட்ட முறுகல் நிலையினையடுத்து 'எதிர்வரும் 3ம் திகதி முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் வருகை தந்து குடியேறி அப்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோம்' என்று கூறி குறித்த சிங்கள மீனவர்கள் திரும்பிச் சென…
-
- 1 reply
- 524 views
-
-
இனங்களுக்கு இடையே புரிந்துணர்வை உருவாக்கக் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வர வேண்டும் 9 வது பாராளுமன்றத்தில் சபாநாயகரை வாழ்த்திப் பேசுகையில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறுபவர்கள் உண்மையான வரலாற்றை நாட்டு மக்களுக்குச் சொல்லத் தயாரா என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு, பாராளுமன்றத்தில் விக்னேஸ்வரன் முதன் முதலாக ஆற்றிய கன்னி உரை பாராளுமன்றத்திலும் தென் பகுதியிலும் பலத்த சலசலப்…
-
- 2 replies
- 557 views
-
-
எங்களை எதிர்ப்பவர்களுடைய தலையை வெட்டவும் தெரியும், வெட்டியவனை காவல்துறையில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும் எமக்குத் தெரியும். இது எங்களுடைய அரசாங்கம் இங்கு நாங்கள் வைப்பதுதான் சட்டம் என்று இன்று காலை ஊர்காவற்றுயில் இடம்பெற்ற கூட்டுறவுத் திணைக்கள பொதுச் சபை நிர்வாகத் தெரிவில் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி யின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் கமல் பொதுச் சபை உறுப்பினர்களை அச்சுறுத்தியதுடன் தமக்கு ஏற்ற அடிவருடிகளை புதிய நிர்வாக சபைக்கு தெரிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுச் சபை உறுப்பினர்கள் மேற்படி விடையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர். இன்று காலை ஊர்காவற்றுறை பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பொதுச் சபை நிர்வாகத் தெரிவுக் சுட்டம் …
-
- 0 replies
- 375 views
-
-
நன்றி என்ற ஒரு வார்த்தை ஊடாக என் மக்களுக்கு நன்றியை தெரிவிக்க முடியாது தமிழ் மக்கள் எனக்கு மிகப்பெரிய ஆணை ஒன்றை தந்துள்ளனர். அந்த ஆணையை எதிர்வரும் ஐந்து வருடங்கள் தமிழ் மக்களுக்கு செய்யவிருக்கும் பாரிய சேவை ஊடாக தான் நன்றி சொல்ல முடியும் என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் நேற்றைய தினம் (28) ஒன்பதாவது பாராளுமன்றத்தில் ஆற்றிய தமது உரையில் தெரிவித்தார். அவரின் முழு உரை வருமாறு, ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இரண்டாவது முறையாகவும் மக்களின் பிரதிநிதியாக வருவதற்கு வாய்ப்பு தந்த யாழ் கிளிநொச்சி உறவுகளுக்கு இந் நேரம் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நன்றி என்ற ஒரு வார்த்தை ஊடாக என் மக்களுக்…
-
- 1 reply
- 669 views
-
-
-
Wednesday, 28 January 2009 தமிழினத்தை அழித்துவிட முயலும் சிங்கள இனவெறி அரசின் பயங்கரவாத முகத்தையும், அதற்குத் துணைபோய்க் கொண்டிருப்பவர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது. தன்மானம் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். இன்றே முடிவெடுத்துக் செயல்படுவோம்., தமிழனத்தைக் காப்போம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களைப் பொறுத்தவரை பிரணாப்பின் கொழம்பு பயணம் ஏமாற்றமாகவே முடிந்துள்ளது. ஏனெனில் இலங்கையில் தமிழினப் படுகொலைக்குக் காரணமான போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திக் கூறிவருவதற்கும், பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணத்திற்கும் எந்த சம…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா அரசின் இணையத்தளங்கள் மீதான தொடரும் தாக்குதல்கள்! இதுவரை சிறிலங்கா அரசின் 50 இணையத்தளங்கள் செயலிழந்துள்ளன Posted by Nilavan on February 10th, 2013 சிறிலங்கா அரசின் இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறுவருகின்றன. இதுவரை சிறிலங்கா அரசின் 50 இணையத்தளங்கள் வரை சைபர் தாக்குதலுக்கு இலக்காகி செயலிழந்துள்ளன. ஆகப்பிந்திய தாக்குதல் நல்லிணக்க ஆணைக்குழுவின் இணையத்தளம் மீது நடத்தப்பட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல்களால் கணினிகளில் சேமிக்கப்பட்டிருந்த சிறிலங்கா அரசின் அதிகாரபூர்வ ஆவணங்கள், தகவல்களும் அழிந்து போயுள்ளன. ஊழியர் சேமலாப நிதியம், நீ…
-
- 4 replies
- 785 views
-
-
முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கடுமையான கடற்சண்டையில் சிறிலங்கா கடற்படையின் "அரோ" வேகத்தாக்குதல் படகுகள் இரண்டு கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 395 views
-
-
யாழில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட போதிலும் , தொடரும் தாக்குதல் சம்பவங்கள்: யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் அண்மைய நாட்களில் இரவு வேளைகளில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு காணப்படுகின்ற நிலையிலும், இரவு வேளைகளில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. யாழ்.நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அண்மைய நாட்களாக ஆயுதம் தாங்கிய பொலிசார் உட்பட சுமார் பத்து பொலிசார் அடங்கிய பொலிஸ் குழுக்கள் முக்கிய சந்திகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். முக்கிய சந்திகளில் நிற்கும் இந்த பொலிஸ் குழுக்கள் வீதியால் செல்லும் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் , என்பவற்றை மறித்து வாகனங்களை பரிசோதனை செய்வதுடன், ஆவணங்களையும் பரிசோதனை செய்கின்றனர். …
-
- 2 replies
- 275 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதுவர் உள்ளிட்ட, வெளிநாட்டுத் தூதுவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரி கூறியிருப்பது தம்மைத் திருப்திப்படுத்தவில்லையென பேர்லின் தெரிவித்துள்ளது. “தறவான புரிந்துணர்வுகள் ஏற்பட்டால் அது பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படலாம். ஆனால் அச்சுறுத்தல் மூலம் தீர்க்க முடியாது” என ஜேர்மன் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. பொறுப்பற்ற வகையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு, அவர்களுக்கு புத்துயிரளிக்க முயற்சிக்கும் வெளிநாட்டுத் தூதுவர்கள், செய்தி முகவர்கள் அனைவரும் நாட்டைவிட்டுத் துரத்தப்பட…
-
- 3 replies
- 2k views
-
-
புதிய அரசியல் யாப்பு இலங்கையை மதச்சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் – ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கோரிக்கை புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்பிருந்ததைப் போன்றே முக்கியத்துவம் இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் நாம் எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தனது கட்சியின் நிலைப்பாடு குறித்து அவர் அறிக்கையின் மூலம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 1978ஆம் ஆண்டில் இலங்கையின் அரசியல் யாப்பில் இரண்டாவது அத்தியாயம் பௌத்த மதம் தொடர்பாக கீழ்க்கண்டவாறு கூறுகிறது. இலங்…
-
- 0 replies
- 237 views
-
-
-
ஏ9 வீதியை மறித்து மாணவர்கள் போராட்டம் (2ஆம் இணைப்பு) யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவத்திற்கு நீதி கோரி யாழ் செயலகம் மற்றும் ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் தங்போது ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதேவேளை மாணவர்களின் போராட்டத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபடவில்லை. http://onlineuthayan.com/news/19324
-
- 8 replies
- 1.4k views
-
-
சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் அரசியலமைப்பை திருத்த முடிவு? (ரொபட் அன்டனி) சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் தற்போதைய அரசியலமைப்பில் மாற்றத்தை செய்வது குறித்து தேசிய அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மட்டும் அரசியலமைப்பில் திருத்தங்களை செய்துகொள்வது தொடர்பில் ஆராயப்படுவததாக அரசதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான இரண்டு கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இவ்வாறு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் அரசியலமைப்பு விவகாரத்தை கையாள்வது குறித்து ஆராய்…
-
- 2 replies
- 346 views
-
-
விடுதைப்புலிகள் அழைத்ததன் பேரிலேயே நோர்வே சமாதான பேச்சுவார்த்தையில் நடுநிலைமை வகித்தது- எரிக் சொல்ஹெய்ம் விடுதைப்புலிகள் விரும்பி தம்மை அழைத்ததன் காரணத்தாலேயே தமது நாடு இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதான பேச்சுக்களில் நடுநிலைமை வகித்ததாக நோர்வே நாட்டின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் அவர் வழங்கிய விசேட நேர்காணல் ஒன்றிலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார் . அதேவேளை அந்த நேர் காணலில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் இலங்கைக்கான சமாதான அனுசரணை பணியில் பிரான்ஸ் பங்கேற்க வேண்டுமென அப்போதைய அரச தலைவர் சந்திரிகா விரும்பியதாகவும் எரிக் சொல்ஹெய்ம் க…
-
- 3 replies
- 544 views
-
-
முத்துக்குமார்-இரவி-இரவிச்சந்திரன்-அமரேசன் மூட்டிய தமிழ்த் தேசியத் தீ பரவட்டும்! 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் பிரளயம் போல கிளம்பி தமிழக அரசியலை தலைகீழாக மாற்றியது. அதற்குப் பிறகு இப்போது 2009ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இலங்கையில் தமிழ் மக்களை நாள்தோறும் கொன்று குவித்து வரும் சிங்கள பேரினவாத அரசைக் கண்டிக் கவோ தமிழினப் படுகொலையைத் தடுக்கவோ எதுவும் செய்ய இந்திய அரசு முன்வரவில்லை என்பதோடு சிங்களக் கொலைகாரக் கும்பலுக்கு ஆயுதங்களை யும், நிதியையும் வாரி வாரி வழங்கி வருகின்றது. தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி களும் தனித்தனியாகவும் கூட்டாகவும் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வல…
-
- 1 reply
- 760 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி பி (B) வலயத்தில் வெளியாறுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதானது தமிழ் மக்களின் இனப்பரம்பலை திட்மிட்டு குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பண்ணையாளர்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாடுளே இடம்பெற்று வருகின்றன. மகாவலி பி வலயத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்களே இவ்வாறு அ…
-
- 1 reply
- 811 views
-
-
"பொதுமக்களின் இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டு இலங்கையில் நடைபெற்று வரும் போர் இடைநிறுத்தப்பட வேண்டும்" என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 1.2k views
-
-
மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், மேல் மாகாணத்துக்கு மட்டுமல்ல கிளிநொச்சியிலும் நிறைய சேவை செய்ய விரும்பினார். அவர் செய்ய நினைத்ததை கட்டாயமாக நிறைவேற்ற வேண்டுமென நாங்கள் தீர்மானித்துள்ளோம் என்று அவரது மகனும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (26) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும், “எனவே தான் இங்கு 35 மில்லியனை ஒதுக்கியுள்ளோம். இங்கே 28 ஆயிரம் வீடுகளை கட்டுவதாக ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்திருந்தார். அதையும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். என்னை பொறுத்தவரை நான் சொன்னதைச் செய்வேன். உங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் கட்டாயம் செய்வோம். நான் தமிழ் பேசும் அமைச்சர், அதிலும் இளமையான அமைச்சராக இருக்கிறேன். நான…
-
- 0 replies
- 514 views
-
-
தமிழரை முற்றாக அழிக்கும் சிங்களவனின் போருக்குத் தலையாட்டும் ஐ.நா - தமிழ்நெட் UN nods ‘fight to the finish’ [TamilNet, Saturday, 28 February 2009, 04:04 GMT] The position taken by UN Security Council Friday indicating no go beyond ‘hearing’, and the considerate briefing of John Holmes largely endorsing and trusting Colombo’s agenda and assurances for civilians, are read between the lines by international political observers as a ‘knowing wink’ at Colombo to pursue its offensive. Alternatively, the UN stance either paves way for intervention by interested powers outside of the UN or perhaps reveals an actuality that the UN can be shaken not when people face genocid…
-
- 12 replies
- 1.6k views
-
-
வெள்ளத்தில் மிதக்கும் பொம்மைவெளி -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஜே-87 கிராம சேவகர் பிரிவில் உள்ளடங்கும் பொம்மைவெளி கிராம மக்கள், மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மழை வெள்ளம் காரணமாக இப்பிரதேசத்தில் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 'நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகால் இன்மையே இதற்கு முக்கிய காரணம்' என யாழ். பொம்மைவெளி பள்ளிவாசல் நிர்வாக செயலாளர் எம்.றிஸ்வான், குறிப்பிட்டார். மேலும், வெள்ள நீர் பாதிப்புக்குள்ளாக மக்களின் நிலமையை கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் …
-
- 3 replies
- 380 views
-
-
இலங்கைக்கு இந்தியா, அமெரிக்க போன்ற நிலைவரும்
-
- 0 replies
- 712 views
-