Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வருகின்ற திங்கள் கூட்டமைப்பு - இந்திய தூதர் சந்திப்பு வவுனியா நிருபர் சனிக்கிழமை , மே 1, 2010 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நல்லெண்ணச் சந்திப்பு ஒன்றை நடத்த இந்தியத் தரப்பு அழைப்பு விடுத்துள்ளது.கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நாளை மறுதினம் திங்கட்கிழமை நண்பகல் இருதரப்பினரும் பரஸ்பரம் நேரில் சந்தித்துப் பேசஉள்ளார்கள். இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இது தொடர்பாக அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேரும் இச்சந்திப்பில் கலந்துகொள்கின்றார்கள். கடந்த தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்மைப்பினருக்கும், இந்தியத் தரப்பினருக்கும் இடையில் இடம்பெறுகின்ற …

    • 3 replies
    • 624 views
  2. இராணுவமா? கடற்படையா? பொலிஸாரா? விசாரணைகள் தீவிரம்! ஸ்ரீலங்காவின் தலை நகர் கொழும்பில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் காது இராணுவத்தினன் ஒருவரால் கடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஏழாம் திகதி கொழும்பு 7இல் அமைந்துள்ள மலலசேகர மாவத்தையில் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்துடன் பொலிஸ் அதிகாரி ஒருவர், 10 இராணுவ அதிகாரிகள், 8 கடற்படை அதிகாரிகள் ஆகியோர் சம்மந்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கெதிரான விசாரணையே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சம்பவ தினத்தன்று …

  3. மக்கள் எம்மோடு இருக்கும் வரை எம்மை யாரும் அசைக்க முடியாது! – ஜனாதிபதி மஹிந்த சூளுரை. [Wednesday, 2014-03-12 07:48:34] நாட்டு மக்கள் எம்மோடு இருக்கும் வரை ஆட்சி மாற்றத்துக்கு இடமில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ரத்மலானையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். 2016 வரை மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர். எனினும், எச்சந்தர்ப்பத்திலும் நாம் தேர்தல் நடத்த தயாராகவே உள்ளோம். தேர்தலுக்கு நாம் பயந்தவர்களல்ல. எதனையும் நாம் மேற்கொள்வது சர்வதேச அழுத்தங்களுக்குப் பயந்து அல்ல, சர்வதேச அழுத்தங்களுக்கு அன்றி மக்கள் விருப்பத்துக்கு நாம் எப்போதும் தலைவணங்குகிறோம். செய்வதற்கும் சொ…

  4. கிளிநொச்சி முல்லைத்தீவை கசக்கிப் பிழிந்த இலங்கைப் புலனாய்வுப் படை மன்னாரை இலக்கு வைப்பு:- மன்னாரில் இருவரின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள்-கண்டுபிடிக்க உதவுமாறும் கோரிக்கை! குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- மன்னார்:- படங்கள் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத்தெரிவித்து இருவரின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள் மன்னாரில் ஒட்டப்பட்டிருக்கின்றன. கோபி என அழைக்கப்படும் கசியன் மற்றும் அப்பன் என அழைக்கப்படும் நவனீதன் என்பவர்களே தேடப்படுவதாக சுவரொட்டிகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. மேற்குறித்த நபர்கள் தொடர்பில் தகவல்கள் தருவோருக்கு ஐந்து இலட்சம் ரூபாவினை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்…

    • 0 replies
    • 385 views
  5. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் இரா.சம்பந்தன் தவிர ஏனையோர், ஜெனிவாவுக்குப் படையெடுத்துள்ளனர். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம், வரும் 26ம் நாள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அன்றைய தினம் சிறிலங்கா தொடர்பான விவாதமும் நடக்க ஏற்பாடாகியுள்ளது. சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு பெரும்பாலும், 28ம் நாள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் ஜெனிவாவுக்குப் படையெடுத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராசா, லண்டனில் இருந்து ஜெனிவா செல்கிறார். மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாத…

  6. இப்படித்தான் சென்றவாரம் ரி வி ஐ தொலைக்காட்சியைப்ப்ற்றி,சி ரி ஆர் வானொலி ஊழியர்கள் பற்றி எல்லாம் எழுதுகிறார்கள் உண்மை யாதெனில் ரிவிஐ நிறுவனத்துக்கு பத்து பங்குதாரர்கள்,அவர்களில் தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர்களும் ஆதரவற்றவர்களும் இருக்கிறார்கள்.(கடந்த மே மாதம் வரையும் நல்லதோ கெட்டதோ ஒரு குடையின் கீழ் தான் அனைவரும் இருந்தோம்) (இப்போ நிலை சற்று வேறுதான் சிங்களவன் சொன்னபடி தமிழ் தேசியத்தை உடைக்கிறான், நம்மவரும் அதற்கு எடுபட்டு ஆடுகிறார்கள்)இப்போ எந்த கை ஓங்குகிறதோ அதனிடம் போய் சேரும்.அதேபோல சிரிஆர் வானொலியை நடத்துவது விவேகானந்தனோ,சக்தியோ அல்ல அவர்கள் கடைமையில் இருக்கும்போது மேலிடம் செய்தியை கொடுத்தால் அதை வெளியிடுவது அவர்களது கடைமை.அதற்காக அவர்களை எப்படியெல்லாம் குற்றம் சாட்…

    • 32 replies
    • 4.5k views
  7. மட்டு. வெல்லாவெளியில் இருந்து... மகாஓயாவிற்கு, பெற்றோல் கடத்திய இருவர் கைது! மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசததில் இருந்து அம்பாறை மகா ஓயா பிரதேசத்திற்கு கப்ரக வாகனம், பெற்றோல் கடத்திச் சென்ற பொலிஸ் சாஜன் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட இருவரை 910 லீற்றர் பெற்றோலுடன் வெல்லாவெளி வீதிச் சோதனைச் சாவடியில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். வெல்லாவெளி பிரதேசத்தில் இருந்து அம்பாறை நோக்கி சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் சென்ற பிக்கப் ரக வாகனத்தை வெல்லாவெளி பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடியில் பொலிசார் நிறுத்தி சோதனையிட்டபோது அந்த வாகனத்தில் வெல்லாவெளி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து வியாபாரத்துக்க…

  8. ஊழல் விசா­ர­ணைக்­கான தீர்ப்­பா­யத்­துக்கு அனு­மதி கடந்த காலங்­க­ளில் இடம்­பெற்ற ஊழல், மோச­டி­கள் தொடர்­பில் விசா­ரணை நடத்­து­வ­தற்­காகச் சிறப்புத் தீர்ப்­பா­யம் (ட்ரயல் அட் பார்) ஒன்றை அமைப்­ப­தற்கு அமைச்­ச­ரவை நேற்று அனு­மதி வழங்­கி­யது. வாராந்த அமைச்­ச­ர­வைக் கூட்­டம் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் நேற்று முற்­ப­கல் நடை­பெற்­றது. அதில் நீதி அமைச்­சர் தலதா அத்­து­கோரள நீதி­யா­யத்­துக்­கான யோச­னையை முன்­வைத்­தார். அமைச்­ச­ர­வை­யில் அது ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது. கடந்த ஆட்­சிக்­கா­லத்­தில் இடம்­பெற்ற பெரும் ஊழல், மோச­டி­கள் தொடர்­பான விசா­ர­ணை­கள் விரை­வாக இடம்­பெ­ற­வில்லை …

  9. புனர்வாழ்வு என்ற பெயரில் முன்னாள் போராளிகள் பலர் படையினரால் காடுகளை அழிக்கும் வேலைகளில் ஈடுபடுத்தப்படு கின்றனர். இந்நாட்டில் மாறிமாறி வந்த அரசு கள் தமிழினத்தின் மீது ஏற்படுத்திய துவே சம்தான் இந்த நாட்டில் போராட்டம் ஒன்றுக்கான சூழ்நிலையை ஏற்படுத்தியது. எனவே அதற்கு இன்றைய அரசும் பொறுப் பேற்று அவர் கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டா வது வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவ ர் மேலும் தெரிவித்தவை வருமாறு: யுத்தம் முடிந்து சுமார் 13 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இடைக்கால நிதி நிலை அறிக்கை சமர்ப…

    • 1 reply
    • 1.1k views
  10. ஐ.நா. நிறுவனங்களின் வாகனப் பயண அனுமதி ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டு நிறுவனங் களின் வாகனங்கள் ஏ 9 வீதியூடாக வன்னிப் பிரதேசத் துக்குச் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடமே அனுமதி பெற்றுச்செல்லவேண்டும். இந்தப் புதிய விதி, அல்லது ஏற்பாடு கடந்த ஒரு வார காலத்திற்கு முன்னர் நடை முறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இது வரை கால மும் ஜனாதிபதி செயலணிக் குழுவின் அங்கீகாரத்தைப் பெற்று ஐ.நா. தொண்டு நிறுவனங்கள் ஏ9 வீதியூடாக வன்னிப் பிரதேசத்துக்கு சென்று வந்தன. இந்தத் திடீர் மாற்றத்துக்கான, புதிய ஏற்பாட்டுக்கான காரணம் எதுவும் நிச்சயமாகத் தெரியாது. உத்தியோகப் பூர்பமாகத் தெரிவிக்கப்படவில்லை. போரினால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான வன்னி மக்கள் இப்போதுதான் தமது பகுதிகளில் மீளக் குடியமர்த்தப…

    • 0 replies
    • 495 views
  11. கல்வி அமைச்சுக்கு... முன்பாக பதற்றம் – போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் தாரைப் பிரயோகம்! பத்தரமுல்லை – இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனத்தின் எதிர்ப்பாளர்கள் கல்வி அமைச்சுக்குள் நுழைய முயற்சித்தவேளை, பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1286450

  12. மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக இம்மானுவேல் பெர்னாண்டோ நியமனம் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயராக கடமையாற்றிய கலாநிதி பீடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக திருத்தந்தை அறிவித்துள்ளதாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தெரிவித்தார். மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் வைத்து இன்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் இந்த அறிவிப்பை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை வெளியிட்டார். மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் மத்தியில் குறித்த விசேட அறிவித்தல் வழங்கப்பட்டு…

  13. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை அதிக முக்கியத்தும் கொடுத்து பேசுவது முட்டாள்தனமானது என வினாயகமூர்த்தி முரளிதர கூறியுள்ளார். தான், புலிகள் அமைப்பிலிருந்த போது தான் கே.பி.யை சந்தித்துள்ளதாகவும் ஆனால் கே.பி. கைது செய்யப்பட்ட பின்னர் அவரை சந்திக்கவில்லை எனவும் முரளிதர மேலும் தெரிவித்தார். கே.பி. வடபகுதி அபிவிருத்திக்குப் பொறுப்பாக நியமிக்கப் போவதாக வெளியான செய்தி குறித்து கேட்டபோது, “இவை அனைத்தும் தவறான விடயம். இதேபோன்று கே.பியை முதலமைச்சராக அரசாங்கம் நியமிக்கப்போவதாக சரத் பொன்சேகா கூறினார். அடுத்த நாளே அதற்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்தது. கே.பியை அந்தளவுக்கு முக்கியத்தும் கொடுத்து பார்ப்பது …

    • 8 replies
    • 1.5k views
  14. மோதல் சூழலில் பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளின் ஐ.நா பொதுச்செயலரின் பட்டியலில், சிறிலங்காவும் உள்ளடக்கப்பட்டதற்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. நேற்று ஐ.நா பாதுகாப்புச் சபையில் “பெண்கள் மற்றும் அமைதி மற்றும் பாதுகாப்பு” என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட திறந்த விவாதத்தில் உரையாற்றிய சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.. நேற்றுமுன்தினம், ஐநா பொதுச்செயலர் வெளியிட்ட அறிக்கையில் சிறிலங்கா உள்ளிட்ட 21 நாடுகளில் பாலியல் வல்லுறவுகள் தொடர்வதாக கூறப்பட்டிருந்தது. எனினும், இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்…

  15. தலைவர் பிரபாகரன் பிறந்த நாள்: மாவடிமும்மார் துயிலுமில்லத்தில் கொண்டாட்டம்! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 வது பிறந்த தின கொண்டாடம் மாவடிமும்மார் துயிலுமில்லத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. நாளைய தினம் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்படி மாவீரர் துயிலும் இல்லத்திலும் அனுட்டிக்கப்படவுள்ள நிலையில் பிரதேச இளைஞர்களினால் பிறந்த தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இதன் போது பிரதேச பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது. https://news.ibctamil.com/ta/internal-affairs/prabhakaran-birthday-mavadimummaar

  16. திண்ணைக்குக் காத்திருந்த வீரர்கள் GTNற்காக ஆனந்தத் தாண்டவன்:‐ நன்றி சிரச ரீவி:‐ வீடியோ கிளிப் வீடியோ கிளிப்பில் உள்ள உரைகளின் தமிழாக்கம்:‐ முல்லைத் தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா விஜயம் செய்திருந்தார். அவர் பங்கு கொண்ட நிகழ்வென்றில் ஆற்றிய உரைகள் இங்கு தரப்படுகிறது. இந்த உரை சிரச தொலைக்காட்சிச் சேவையின் செய்தியில் இருந்து பெறப்பட்டது. அதன் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. எஸ்.பீதாம்பரம்‐ அதிபர் சிதம்பரப்புரம் அரச தமிழ் பாடசாலை எமது புதுக்குடியிருப்பு எல்லைக்குள் ஒருமுறை காலடி எடுத்து வைத்து பாருங்கள், பிரதேசம் மயானத்தை விட கேவலமாக இருக்கிறது.…

  17. இலங்கையில் ஆறு ஆண்டுகளில் 11,531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள்! - திடுக்கிடும் புள்ளிவிபரம். [Friday, 2014-05-02 10:06:30] இலங்கையில் கடந்த ஆறு ஆண்டுகளில் பெண்கள் மீது 11,531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2007ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 11531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவங்கள் தொடர்பில் 12,229 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆயிரம் பெண்களில் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் வடக்கில் 119 பாலியல் வன்முறைச் சம்பவங்களும், 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையில் 256 சம்பவ…

  18. தொடர்­கி­றது ரயில் வேலை நிறுத்தம் கடும் சிர­மத்தில் பொது மக்கள் ரயில்வே ஊழி­யர்கள் மேற்­கொண்­டுள்ள பணிப் பகிஷ்­க­ரிப்பு ஆறா­வது நாளாக இன்றும் தொடர்­கி­றது. இதனால் பய­ணிகள் கடும் அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­கொண்­டுள்­ள­துடன் க.பொ.த. சாதா­ரண தரப்­ப­ரீட்­சைக்குத் தோற்றும் மாண­வர்கள் மிகுந்த நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்­ளனர். இதே­வேளை ரயில் சேவையை முன்­னெ­டுப்­ப­தனை இலக்­காகக் கொண்டு ஓய்வு பெற்­றுள்ள ரயில்வே ஊழி­யர்­களை சேவையில் இணைத்­துக்­கொள்­வ­தற்கு ரயில்வே திணைக்­களம் தீர்­மா­னித்­துள்­ளது. மேலும் ரயில் சேவையை அத்­தி­யா­வ­சிய சேவை­யாக அறி­விக்கும் வகையில் ஜனா­தி­பதி வெளி­யிட்­டுள்ள வர்த்­த­மா­னிக்கு நேற்று பாரா­ளு­மன்­றம…

  19. புலி­களின் தங்­கத்தை தேடி அகழ்வு பணி­களில் ஈடு­பட்ட மூவர் கைது.! தமி­ழீழ விடு­தலை புலி­களால் புதைக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் தங்­கத்தை தேடும் முக­மாக பெகோ இயந்­திரம் ஒன்­றினை திருடி வந்து, கைவி­டப்­பட்ட முகாம் ஒன்றின் அருகில் அகழ்வுப் பணி­களை முன்­னெ­டுத்த முன்னாள் புலிகள் இயக்க உறுப்­பினர் உள்­ளிட்ட மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். முல்லைத்தீவு, புதுக்குடி­யி­ருப்பு பொலிஸ் பிரிவில் இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் சந்­தேக நபர்கள் நேற்று கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர். புதுக்குடி­யி­ருப்பு விசு­வ­மடு பகு­தியில் நபர் ஒருவர் கிணறு வெட்­டு­வ­தற்­காக பெகோ இயந்­திரம் ஒன்­றினை அப்­ப­கு­திக்கு கொண்டு சென்­ற…

    • 2 replies
    • 391 views
  20. இலங்கைத் தமிழர்கள் 52 பேரை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி செய்தனர் என்கிற சந்தேகத்தில் இலங்கையர் ஒருவரை தமிழ்நாடு- திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலத்தில் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். அங்கு தனியார் விடுதி ஒன்றில் இவர்கள் தங்கி இருக்கின்றனர் என நெல்லை மாவட்ட கியூ பிராஞ்ச் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது. பொலிஸார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது அங்கு இலங்கையைச் சேர்ந்த 39 ஆண்களும், 9 பெண்களும், 5 குழந்தைகளும் இருந்தனர். இவர்கள் இந்தியா வருகின்றமைக்கு விசா பெற்று இருந்தனர். சிலர் கடவுச்சீட்டும் வைத்து உள்ளனர். சிலர் கடவுச்சீட்டை வைத்திருக்கவில்லை. பொலிஸார் கேட்டபோது சென்னையில் இருக்கின்றனர் என கூறினார்கள். உடனே பொலிஸார் சென்னைக்…

  21. யாழில் பிரசாரச் சுவரொட்டிகள்: மும்முரமாக அகற்றும் பொலிஸார்! யாழ்ப்பாணம் நகரில் தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் பணிகளில் பொலிஸார் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக எமது களநிலைச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதன்படி நகரின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் பிரசாரச் சுவரொட்டிகள் தற்பொழுது அகற்றப்பட்டு வருகின்றன. தேர்தல் பிரசார காலத்தில் பொது இடங்களில் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சார்ந்த பதாகைகளோ சுவரொட்டிகளோ காட்சிப்படுத்துவது தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். அவற்றையும் மீறிச் செயற்படுவோரை கைது செய்து விசாரிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்கால பிரசாரக் கொடிகள், பதாதைகள், சுவரொட்டிகள் மற்றும் பசையொட்டிகள் (stickers…

  22. வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் காத்திரமான முறையில் தீர்வுத் திட்டங்களை முன்வைக்கவில்லை என சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்களின் மெய்யான அபிலாஷைகளை புரிந்து கொண்டு அரசாங்கம் செயற்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் யதார்த்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாத நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் சகல அதிகாரங்களையும் வழங்க வேண்டியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். படிப்படியாக கிரமமான முறையில் ஒவ்வொரு விடயமாக வழங்கப்பட முடியும் எனவும், பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் அதிகாரத்தை பகிர்ந்தள…

    • 0 replies
    • 313 views
  23. ஊடக – அரசியல்வாதி வித்தியாதரன் சொல்ல மறந்த கதை ஹாய் வித்தி அண்ணா, நீங்கள் சுவிஸ் நாட்டில் ஆற்றிய உரை என ஒரு வசைபாடலை பல ஊடகங்கள் பிரசுரம் செய்திருந்தன. அதில் வேடிக்கை என்னவெனில் புலம்பெயர் தமிழ் சமூகத்தை வசைபாடி நீங்கள் வாய்க்கு வந்தபடி ஆற்றிய உரையை (வாய்க்கு ஏதும் ஆகிவிடாதோ) சில புலம்பெயர் ஊடகங்கள் பிரசுரம் செய்தது தான். இதனை நடிகர் சத்தியராஜ் இன் பாணியில் சொல்வதானால், மல்லாக்க படுத்திருந்து காறித் துப்பியிருக்கின்றன இந்த ஊடகங்கள். எனது ஊடக நண்பர் ஒருவரிடம் கேட்டேன், உங்களை பற்றி வசைபாடிய உரையை ஏன்டா பிரசுரம் செய்திருக்கிறீர்கள் என்று, அப்படியா? என அவன் திருப்பி கேட்டபோது தான் எனக்கு விளங்கியது அந்த செய்தியை வாசிக்காது பதிவேற்றியிருக்கிறார்கள் என்று. எமத…

  24. உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர் நீத்த தியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாளான செப் 26 திகதி கனடா தமிழ் இளையோர் அமைப்பு மரம் நடுதல் என்னும் நிகழ்வை ஏற்பாடு செய்து இருந்தது .திலீபன் அண்ணா தமிழர்களுக்காகவும் தனித்தமிழீழத்திற்காகவும் அன்று தன்னைத் தானே ஆகுதியாக்கி நடாத்திய தியாக வேள்வியின் நினவு தினத்தை முன்னிட்டு ரொண்டோ மாநகரில் தமிழ் இளையோர்களின் உதவியுடன் பல மரங்கள் நடப்பட்டு பூமித்தாய்க்கு கையளிக்கப்பட்டன. இவ் நிகழ்வில் தமிழ் இளையோர் பலர் தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுரவபடத்தை நெச்சில் தாங்கியவாறு பங்கேடுத்திருந்தினர் திலீபன் அன்ன அவர்களின் தியாகத்தை வேற்று இன மக்களுக்கு எடுத்துரைத்தவாறு மரம் நடுகை நிகழ்வை நிறைவு செய்தனர…

  25. இரணைமடு குடிதண்ணீர் திட்டத்து நிதியை திரும்பப் பெறுகின்றது பிரான்ஸ் நிறுவனம் news இரணைமடு குடிதண்ணீர் திட்டத்துக்கு நிதி வழங்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம், திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்திருந்த 5 ஆயிரத்து 232 மில்லியன் ரூபா நிதியைத் திரும்பப் பெறப்போவதாக அறிவித்துள்ளது. அது குறித்து வடக்கு மாகாண சபையின் நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கும் அறிவித்தல் விடுத்துள்ளது. இரணைமடுக் குடிதண்ணீர்த் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதில் ஏற்படும் கால தாமதம் மற்றும் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளமை என்பவற்றை அடுத்தே நிதியை மீளப் பெற்றுக் கொள் வதற்கு அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது என்றும் அறியமுடிகின்றது. இந்தத் திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 7 ஆயிரத்து 630 மில்லியன் ரூபாவு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.