Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர்களிடம் வாக்கு கேட்க தேசிய கட்சிகளுக்கு அருகதை இல்லை! – சிவஞானம் “யாழ்ப்பாணம் – மிருசுவிலில் தமிழர்களை படுகொலை செய்த குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனிலுக்கு பொது மன்னிப்பை வழங்கும் தென்னிலங்கை கட்சிகள் துப்பாக்கிகளைக் கூட கையில் ஏந்தாத ஆனந்த சுதாகரன் போன்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்துவருகின்றது. எனவே தேசியக் கட்சிகள் வடக்கு கிழக்கில் தமிழர்களிடம் வாக்குக் கேட்பதற்கு அருகதை இல்லை” இவ்வாறு வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்று (25) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார். மேலும், ‘மிசுருவில் பகுதியில் தமிழர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றொழித்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட…

  2. இதுதான் நீங்கள் கேட்ட கண்ணி வெடிகள் அகற்றும் பகுதி!’ என்று ஓட்டுனர் இயல்பாகத்தான் சொன்னார். ஆனால், எனக்கு கண்ணில் வெடித்ததுபோல் இருந்தது. எத்தனை உயிர்களைக் காவுவாங்கிய இடம்! கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டு பரந்தன் சந்தியைக் கடக்கையில், மனதில் பெரும் வெறுமை. அந்தச் சாலையின் வலதுபுறமாகச் செல்வதுதான் முல்லைத்தீவை அடையும் வழி. ‘சின்ன உப்பளம்’ பகுதியில் நின்றது பேருந்து. நான் இறங்கிய இடத்தில் ஓர் உணவகம். இராணுவத்துக்குச் சொந்தமானது என்ற மிலிட்டரி மிடுக்கு அந்த உணவகத்துக்கு இருந்தது. ஆயுதம் ஏந்தியபடி புலி பதித்த தடத்திலும், ஆக்கிரமிப்பாய் இன்று சிங்கள இராணுவம் குவிந்துள்ள பாதையிலும் கண்ணி வெடிகள் இருக்கின்றன. இனியும் யாருக்காக என்ற வேதனைக் கேள்வியுடன், மரண நெடுஞ்சாலை…

  3. சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம் என்று எம்.ஏ. சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வி தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் சிறிலங்கா நாட்டின் ஒரு அங்கம் என்பதால் ஜெனிவாவுக்குச் சென்று சிறிலங்கா நாட்டுக்கு எதிராகச் செயற்படப்போவதில்லை என்று பொருள்பட அவர் அந்தச் செவ்வியில் தெரிவித்திருக்கின்றார். ஜெனீவாவில் எங்களால் பரப்புரை செய்முடியும். ஆனாலும் நாங்கள் அதனைச் செய்யமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் சிறிலங்கா என்ற நாட்டின்; ஒரு அங்கமாக இருப்பதன் காரணமாக, சிறிலங்கா தேசத்திற்கு எதிராக எதனையும் செய்வதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். …

  4. நவம்பர் 27 அன்று சீனாவுடன் கூட்டுச் சேர்ந்து உருவாக்கப்பட்ட SupremeSAT 1 எனும் புதிய செய்மதியானது தற்போது அதற்கான சரியான இடத்தில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் யூன் 2013ல் இதன் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்புதிய செய்மதி அதற்கான சரியான திசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது விண்ணில் தனது செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு இன்னமும் ஆறு மாதங்கள் தேவைப்படுவதாகவும் Supreme குழுவின் பிரதம நிறைவேற்று இயக்குனர் விஜித் பீரிஸ் தெரிவித்துள்ளார். "நாங்கள் இந்த செய்மதிக்கான தரைக்கட்டுப்பாட்டு நிலையம் தொடர்பில் பல்லேகல விண்வெளி கல்லூரியுடன் பேச்சுக்களை நடாத்தி வருகிறோம். இத்திட்டத்தை அமுல்படுத்துவதில் தொலைத் தொடர்பாடல் அதிகார சபையின் அனு…

    • 2 replies
    • 344 views
  5. ஆயுதம் ஏந்திப் போராடி மக்களின் உரிமைகளை வென்று தருவதாக நான் உறுதியளிக்கப்போவதில்லை – சுமந்திரன் ஆயுதம் ஏந்திப் போராடி தமிழ் மக்களின் உரிமைகளை வென்று தருவேன் என வாக்குத் தரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், அஹிம்சை வழியில், இராஜதந்திரமாக, பேச்சுவார்த்தை மூலம் எவை எல்லாவற்றையும் பெறமுடியுமோ அவை எல்லாவற்றையும் பெற அயராது உழைப்பதாகவும் அவர் உறுதியளித்தார். தொடர்ச்சியாக சமஷ்டியை எதிர்த்தவர்களும் கேலி செய்தவர்களும் இன்று அதை பெற்றுத்தருவதாக கூறுகின்றார்கள் என குறிப்பிட்ட சுமந்திரன், அவ்வாறு கூறியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்துகொள்ள வேண்ட…

    • 2 replies
    • 532 views
  6. பொதுநலவாய மாநாட்டை வைத்து எம்மை எவரும் அச்சுறுத்த முடியாது உள்நாட்டு பிரச்சினையில் எந்தவொரு நாடும் தலையிட இயலாது எம்.எஸ். பாஹிம் இலங்கையில் நடை பெறவுள்ள பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டை பணயக் கைதி போல வைத்து எமது நாட்டின் உள்ளக பிரச்சினையில் தலையிட எந்த நாட்டிற்கும் இடமளிக்க முடியாது என சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். செப்டம்பர் மாதத்தில் இலங்கையில் நடை பெறவுள்ள பொதுநல வாய மாநாடு பெரும் பாலான நாட் டுத் தலைவர்களின் பங்களிப் புடன் சிறப்பாக நடைபெறும் எனவும் ஓரிரு நாடுகள் பங்கேற்காமல் இருப் பதால் பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டார். சு.க. ஏற்பாடு செய்திருந்த ஊடக வியலாளர் மாநாட்டில் உரையாற்று கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார…

    • 0 replies
    • 491 views
  7. சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பை சித்திரிக்கும் வகையில் வன்னி மறைக் கோட்டத்தில் நத்தார் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  8. வேற்றுமை கடந்து தமிழர்கள் விழித்தெழ வேண்டும்- சாணக்கியன் by : Litharsan தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களைப் பாதுகாக்கவும் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழர்களாகிய நாம் வேற்றுமை கடந்து விழித்தெழ வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “தமிழ் தேசியத்தைக் காத்து விலைமதிக்க முடியாத தமிழர் உரிமைகளை வென்றெடுக்க நாம் எல்லோரும் ஒன்றாய் இணைவோம். இ…

    • 1 reply
    • 555 views
  9. வவுனியாவில் இன்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் 14 படையினர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். மாமடுவ வீதியில் நெடுங்குளத்திற்கும் கருவேல புளியங்குளத்திற்கும் இடையில் படையினரின் யுனிகோன் வாகனத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6.40 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த படைத்தரப்பினர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர். இந்தக் குண்டு வாகனத்தின் உள் இருந்தே வெடித்துள்ளதாக காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் இந்தக் குண்டு எந்த ரகத்தைச் சேர்ந்தது என இதுவரையும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/…

  10. மனோ கணேசனை பாராளுமன்றம் அனுப்ப வேண்டியது தமிழர்களின் கடமை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், சனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை பாராளுமன்றம் அனுப்ப வேண்டியது கொழும்பு மாவட்ட தமிழர்களின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் இன்று (23) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளில் தமிழர்கள் செறிந்து வாழ்வதனால் அவர்கள் தமிழ்க் கட்சிகளை பிரதிநித்துவப் படுத்துகின்ற தமிழ் வேட்பாளர்களுக…

    • 0 replies
    • 402 views
  11. இலங்கை விமானப் படைக்கு இந்தியா உதவி? -ராஜாதிங்கள்கிழமை, ஜனவரி 5, 2009, 12:51 [iST] டெல்லி: இலங்கை விமானப் படைக்கு உதவி செய்வதற்காக இந்திய விமானப்படை அதிகாரிகள் இலங்கை சென்றதாகக் கூறப்படுவது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. அக் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையி்ல், இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவி வழங்கியதன் மூலம் அங்குள்ள தமிழர்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே துரோகம் விளைவித்தது. இந் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த அனைத்துக் கட்சி குழுவினரிடம், இலங்கை பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அந்த நாட்டிற்கு அனுப்பி வைப்…

    • 2 replies
    • 2.1k views
  12. சிறிலங்காவுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ள பரசிற்றமோல் January 15, 2013, 6:48 am|views: 124 பல அழுத்தங்களுக்கு உள்ளாகி வரும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு, மற்றுமொரு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவில் பயன்படுத்தும் நோய் வலி நிவாரணியான பரசிற்ற மோல் வில்லைகள் வழமையைவிட அதிகமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டில், சிறிலங்காவின் சனத்தொகையை விட 40 மடங்கு அதிகமான, பரசிற்ற மோல் வில்லைகள் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டில், வலி நிவாரணியான 810 மில்லியன் பரசிற்றமோல் வில்லைகள் அரசு மருத்துவமனைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. 2011ம் ஆண்டில் 560 மில்லியன் பரசிற்றமோல் வில்லைகளே அரசு மருத்து…

  13. யாழ் வலிகாமம் பகுதியில் வெள்ளை வானில் வந்த இனம் தெரியாத நபர்களால்? குடும்பஸ்த்தர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டுள்ளார் என யாழ் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு செயப்பட்டுள்ளது.கடத்தப்பட்ட

  14. பான் கீ மூன்-பிரதமர் சந்தித்துப் பேச்சு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அலரிமாளிகையில் சற்றுமுன்னர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/180857/ப-ன-க-ம-ன-ப-ரதமர-சந-த-த-த-ப-ப-ச-ச-#sthash.Tnd14zgO.dpuf

  15. தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர், தனது படம் பொறிக்கப்பட்ட இலவச பியர் ரின் விநியோகித்ததாக முறையிடப்பட்டுள்ளது. தென்மராட்சி பிரதேசங்களில் நேற்று இரவு பரவலாக பியர் ரின் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஹைஏஸ் வாகனம் ஒன்றில் வந்த கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்களான இளைஞர்கள், மீசாலை, அல்லாரை, புத்தூர் சந்தியடி பகுதிகளில் இளைஞர்களிற்கு பியர் வழங்கினர். இளைஞர்கள் கூட்டமாக நிற்கும் இடங்கள், விளையாட ஒன்றுகூடுமிடங்களில் வாகனத்தை நிறுத்தி இலவச பியர் வழங்கினர். அந்த பியர் ரின்களில் வேட்பாளரின் படம் பொறிக்கப்பட்ட பிரசுரம் ஒட்டப்பட்டிருந்தது. அந்த பகுதிகளில் மதுபானம் விநியோகிப்பது தொடர்பில் சாவகச்சேரி பொலிசாருக்கு பொதுமக்கள் தொலைபேசியில் முறையிட்டனர்…

  16. யாழ்ப்பாணக் கல்லூரி கிரிக்கட் மைதான கொலை வழக்கு- ஆறு எதிரிகளுக்கு யாழ் மேல் நீதிமன்றம் அழைப்பாணை யாழ்ப்பாணக் கல்லூரி கிரிக்கட் மைதான கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆறு எதிரிகளையும் யாழ் மேல் நீதிமன்றத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி ஆஜராகுமாறு நீதிபதி இளஞ்செழியன் அழைப்பாணை மூலம் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறுகின்ற கிரிக்கட் போட்டியின்போது மைதானத்தில் வைத்து ஜயரட்னம் தனுஷன் அமலன் என்பவர் கொல்லப்பட்டிருந்தார். இந்தக் கொலைச் சம்பவத்தில் சிவசண்முகநாதன் மதுஷன், இந்திரசீலன் பிருந்தாபன், ரமேஷ்…

  17. பாறுக் நஜீ- Eliana Apicella எனும் அமெரிக்க பிரஜை அண்மையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் விடுதி இலக்கம் 6 இல் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடல்வளரி அழற்சி (Appendicitis) இருப்பது கண்டறியப்பட்டு குடல் வளரியை அகற்றும் அறுவைசிகிச்சை (Appendicectomy) சத்திர சிகிச்சை நிபுணர் Dr. P. K. Ravindran தலைமையில் வெற்றிகரமா மேற்கொள்ளப்பட்டது. இன்று 11.08. 2020 பூரண சுகத்துடன் அவர் சத்திர சிகிச்சை விடுதியை விட்டு வெளியேறும் போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தனக்கு வழங்கப்பட்ட மேம்பட்ட சேவையை பாராட்டி நன்றி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் அமெரிக்காவில் உள்ள வைத்திய சேவையை விட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்பட…

  18. இனப்பிரச்சினைக்கு அனைத்து கட்சி மாநாட்டின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் - புலம்பெயர் தமிழர்கள் [ வியாழக்கிழமை, 15 சனவரி 2009, 04:19.31 PM GMT +05:30 ] இலங்கை இனப்பிரச்சினைக்கு அனைத்து கட்சி மாநாட்டின் ஊடாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு காணப்படவேண்டும் என தமிழர்களும் வெளிநாட்டில் உள்ள இலங்கை தமிழர்களும் எதிர்பார்ப்பதாக ரொயட்டர் செய்திசேவை தெரிவித்துள்ளது. ரொயட்டர் செய்திசேவையின் பிரைசன் ஹல் இது தொடர்பில் செய்தி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கையின் 25 வருடக்கால யுத்தத்தி;ல் தற்போது தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை படையினரால் காட்டுப்பகுதிக்கு ஓரங்கட்டப்பட்டுள்ளனர், எனினும் ராஜதந்திரிகளும் இந்திய அரசியல்வாதிகளும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வுக்காணப்பட வ…

  19. தமிழ் அரசியல் கைதிகள் குறித்த ஹக்கீமின் குற்றச்சாட்டு கேலிக்கூத்து! – கைதிகளின் உறவினர்கள் ஆழ்ந்த கவலை!! தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு துளியளவேனும் அக்கறையில்லை என்பதையே அவரின் கேலிக்கூத்தான கருத்துகள் வெளிப்படுத்துகின்றன என தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றில் கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற குற்றவியல் நடைமுறைக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றிய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்க் கைதிகள் தொடர்பில் இங்கு பேசினாலும் அவர்கள் குறித்தான தகவல்களை வழங்கத் தவறிவிட்டது என்று கூறினார். அமைச்சரின் மேற்படி கருத்தானது தமிழ் அரசியல் கைத…

    • 3 replies
    • 517 views
  20. 9 ஆவது சரத்தை நீக்க வேண்டாம் : அரசியலமைப்பு குறித்து கர்தினால் இலங்கை மதச்­சார்­பில்­லாத நாடு என்ற மேற்­கு­ல­கத்தின் கொள்­கையை நாம் ஏற்­றுக்­கொள்ள வேண்­டிய தேவை கிடையாது எனத் தெரி­வித்­துள்ள கத்­தோ­லிக்க பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பின் 9 ஆவது ஷரத்து நீக்­கப்­படக் கூடாது என்றும் வலி­யு­றுத்­தி­யுள்ளார். கம்­பஹா மாவட்­டத்தில் திரு இரு­த­ய­நாதர் தேவா­ல­யத்தில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­று­கை­யி­லேயே பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை இவ்­வாறு கருத்து வெளி­யிட்­டுள்ளார். ஆண்­டகை அங்கு மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, இலங்கை மதச்­சார்­பில்­லாத நாடு என்ற கெ…

  21. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ; வடக்கு - கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினமான எதிர்வரும் ஆவணி 30ஆம் திகதி வடக்கு - கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் காலை 11மணிக்கு முன்னேடுக்கப்படவுள்ளது. வடக்கில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி யாழ்மாவட்ட செயலகத்தில் ஐக்கியநாடுகள் சபைக்கான மகஜர் கையளித்தவுடன் நிறைவுபெறும். அதேபோல் கிழக்கில் மட்டக்களப்பு கல்லடியில் ஆரம்பமாகி காந்திபூங்கவரை சென்று ஐக்கியநாடுகள் சபைக்கான மகஜர் கையளித்தவுடன் நிறைவுபெறும். காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி அவர்களது உறவுகள் மழை,வெயில்,பனி பாராது தமது உறவுகள் கிடைப்…

  22. "இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் எதிரொலியாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்திருக்கின்றனர். இவர்களுக்குத் தேவையான உணவு, உடை, தங்கும் வசதிகளை இந்திய அரசு கவனித்து வருகிறது. ஈழத் தமிழ் அகதிகளுக்கான பராமரிப்புப் பொறுப்பை அரசு எப்போது ஏற்றுக்கொண்டதோ அன்று முதல் இவ்விவகாரம் "உள்நாட்டுப் பிரச்சினை' என்ற வட்டத்தைக் கடந்து ஈழத் தமிழர் பிரச்சினையில் தலையிடும் உரிமை இந்தியாவுக்கு வந்துவிட்டது. இலங்கைப் பிரச்சினையில் தலையிட எல்லா உரிமையும் உண்டு மட்டுமல்ல; கணிசமான பொறுப்பையும் இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும். முக்கிய பங்காற்ற வேண்டும். சொல்லொணாத் துன்பங்களுக்குள்ளாகி தினமும் உயிர் விட்டுக் கொண்டிருக்கும் அந்த ஈழ…

  23. மனோ கணேசனைப் புகழ்ந்த தினகரனின் ஆசிரியரை, விரட்டினார் புலிகேசி மகிந்தர் ஜன 30, 2013 கொழும்பிலிருந்து வெளிவரும் அரச ஆதரவுப் பத்திரிகையான தினகரன் வாரமஞ்சரியில் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனைப் புகழ்ந்து ஆசிரியர் தலையங்கம் எழுதியமைக்காக அந்தப் பத்திரிகை ஆசிரியரை சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பணியிலிருந்து விரட்டியுள்ளார். மனோ கணேசனின் நண்பராக இருக்கும் குறித்த பத்திரிகை ஆசிரியர் தினகரன் வார மஞ்சரியின் ஆசிரியராக பணியாற்றுகிறார். கடந்த 13 ஆம் திகதி குறித்த பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் மனோ கணேசனைப் புகழ்ந்து அவர் எழுதிவிட்டார் என்றே அவரை சிறீலங்காவின் ஜனாதிபதி தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக தினகரன் பத்திரிகை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்து…

  24. யாழில் இவ்வருடம் "பியர் "பாவனையில் குறைவு யாழ்ப்பாண மதுவரித் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம், நல்லூர், வேலணை ஆகிய பகுதிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் கடந்த 6 மாதம் வரையிலான புள்ளிவிபரங்களின்படி பியர் நுகர்வு 27% ஆல் குறைவடைந்துள்ளதாக யாழ்ப்பாண மதுவரி திணைக்கள புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு 21 இலட்சத்துக்கு மேற்பட்ட லீட்டர் பியர் விற்பனை இடம்பெற்றதாகவும் எனினும் இவ்வருடம் கடந்த 6 மாத புள்ளிவிவரங்களின்படி 7 இலட்சத்து 42 ஆயிரம் லீட்டர் பியர் நுகர்வு மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் யாழ்ப்பாண மதுவரி திணைக்கள புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு வைன் நுகர்வு கடந்த வருடத்துடன் ஒப்பிடும…

    • 18 replies
    • 2.2k views
  25. இலங்கையில் போரை நிறுத்தம் ஏற்பட வழிவகுக்குமாறு இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து சட்ட மன்றத்தில் வெள்ளிக்கிழமை (23.01.09) முதல்வர் கருணாநிதி தீர்மானம் முன்மொழிகிறார் நன்றி: நககீரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.