Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மனித உரிமை ஆணையாளருக்கு க.வி.விக்னேஸ்வரன் கடிதம் சர்வதேச சமூகங்களுக்கு மீண்டும் சமாதானத்தை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறிய ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் திருமதி மிசெல் பச்செலெட் ஜெரியாவிற்கு நன்றி கூறி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். மேலும் விக்கினேஸ்வரன் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், “2020 செப்ரெம்பர் 14ந் திகதி உங்களால் வெளியிடப்பட்ட கருத்துரைக்கு இலங்கை என்ற தீபகற்பத்தின் தமிழ் மக்கள் தங்களது மனமார்ந்த நன்றியையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள். இலங்கை அரசாங்கத்தினுடைய கவலை தரும் போக்கினை நீங்கள் அறிந்துள்ளமை எமக்கு மகிழ்வைத் …

  2. தென்னாபிரிக்க தூதரகத்தில் பணியாற்றிய, கிளிநொச்சியைச் சேர்ந்தவர் தற்கொலை தென்னாபிரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றிய இலங்கையர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் கிளிநொச்சியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில், பிரேத பரிசோதனையை அடுத்து குறித்த நபரின் சடலத்தை இலங்கைக்குக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். http://athavannews.com/தென்னாபிரிக்க-தூதரகத்தி/

  3. யாழ்ப்பாணம் – வடமராட்சி, நாகர்கோவில் மத்திய மகா வித்தியாலயம் மீதான அரச படைகளின் விமானக் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் 21 பேரின் 25ம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும். இன்றைய நினைவேந்தல் நிகழ்வுக்கு பாதுகாப்பு தரப்பு மற்றும் வலயக் கல்வி திணைக்களம் என்பன பலத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்விற்க்கு பாடசாலையில் கல்வி கற்க்கும் மாணவர்களில் ஆறாம் ஆண்டிற்க்கு மேற்பட்ட மாணவர்களே அனுமதிக்கப்பட்டனர். இதேவேளை நாகர்கோவில் கிராமத்திற்கு செல்கின்ற அனைவரும் இராணுவத்தினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆட்கள் பதிவு செய்யப்பட்டே அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் நாகர்கோவில் வட்டார பிரதேச சபை உறுப்பினரும் பழைய மாணவனும் மா…

  4. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தன் முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ‍இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இந்த பதவியை பொறுப்பேற்றார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையான் தற்போது விளக்கமறியில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/90467

  5. முரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை - நாடாளுமன்றில் டக்ளஸ் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை ஒன்றை விரைவில் உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(22.09.2020) கேள்வி பதில் அமர்வில் கலந்து கொண்டு பதிலளிக்கையிலேயே குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக வடக்கு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களின் தொழில் நடவடிக்கை அதிகரித்துள்ளமையினால் வடக்கு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 'நீண்டகாலமாக தென்னிலங்கை மீனவர்கள் பருவ காலங்களில் வடக்கு கடற்பரப்பி…

  6. அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தின் வரைபினை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவினை சட்டத்தரணி இந்திக கல்லேஜ் தாக்கல் செய்துள்ளார். அரசியல் யாப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த அபேவர்தன் தலைமையில் ஆரம்பமானது. இதன் போது நீதியமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மொஹம்மத் அலி சப்ரி இதனை சமர்ப்பித்தார். https://www.virakesari.lk/article/90477

  7. பிரபாகரனுக்கு ஐ.தே.க. நாட்டை எழுதிக் கொடுத்ததை போன்ற ஒரு நிகழ்வு கோட்டா – மஹிந்த ஆட்சியில் நடைபெறாது:மஹிந்தானந்த by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/09/mahindananda.jpg ஐக்கிய தேசியக் கட்சி 2001 ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நாட்டை எழுதிக் கொடுத்தை போன்று கோட்டா – மஹிந்த ஆட்சி காலத்தல் இந்த நாட்டுக்கு எந்வொரு அநீதியும் நடக்காது என அமைச்சர் மஹிந்தானந்த அழுத்தகமே தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதுடன் பதாகைகளையும் சபையில் ஏந்தியவாறு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த விடயம் கு…

  8. அதாவுல்லா அணிந்திருந்த உடையால் நாடாளுமன்றில் குழப்பம் by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/09/Athaulla.jpg அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல். எம். அதாவுல்லா அணிந்திருந்த உடை குறித்து இன்று நாடாளுமன்றத்தில் ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. அதாவுல்லாவை நாடாளுமன்றத்திலிருந்து நீக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். எவ்வாறாயினும், உடையில் எந்த பிரச்சினையும் இல்லை என்று நாடாளுமன்ற செயலகம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்தது. இருப்பினும் அதாவுல்லாவின் உடையை தொடர்ந்து எதிர்த்த ஐக்கிய மக்கள் சக்தி வெளிநடப்பு செய்வதாகவும்…

  9. அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்– இரா.சாணக்கியன் by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/09/a13-1-720x450.jpg அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு, அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள் புனர்வாழ்வளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்புமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் என்ற ஒரு தேரரின் அடாவடித்தனத்தினைப்பற்றி இந்த இடத்தில் சில வார்த்தைகளை சொல்லத்தான் வ…

  10. மூவரின் உயிரைக் காவுகொண்ட கட்டட விபத்துக்கான காரணம் வெளியானது கண்டி – புவெலிகடவில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தின் அஸ்திவாரம் பாதுகாப்பு தரத்தின்படி நிர்மாணிக்கப்படவில்லை என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இடிந்த வீழ்ந்த ஐந்து மாடிக் கட்டடம் தாழ்வான, திறந்தவெளி வடிகால் அருகே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் கண்டி மாவட்டத்தின் தேசிய கட்டட ஆராச்சி நிறுவனத்தின் புவியியலாளர் சமந்த போகாஹாபிட்டிய குறிப்பிட்டார். நீர் வடிகால் மற்றும் ஏனைய சிக்கல்கள் காரணமாக, கட்டடம் நிலையானதாக இருக்காது என்றும் தரையுடனான அதன் தொடர்பும் வலுவாக இருக்காது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். கட்டமைப்பின் தரமற்ற தன்மை மற்றும் உறுதியற்ற தன்மை காரணமாக கட்டடம் இடிந்து விழுந்ததாக …

  11. ஐ.நா. உள்விவகாரங்களில் தலையிடாது என உறுதியாக நம்புகிறோம்- சபை கூட்டத்தில் ஜனாதிபதி உரை நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதற்கான முக்கியத்துவத்தை ஐக்கியநாடுகள் சபை கொடுக்கும் என தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் உயர் மட்டக் கூட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காணொளி தொடர்பாடல் மூலம் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி, “கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சில மாதங்களுக்குள் பொருளாதாரங்கள், சுகாதார அமைப்புகள் மற்றும் சமூகங்களைப் பாதித்துள்ளது. கொரோனா சவாலை இலங்கையால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது. இலங்கையி…

  12. சாக்குப் போக்குக் கதைகளைக் கூறி அரசாங்கம் நழுவிவிட முடியாது; மாவை சேனாதிராஜா “நினைவேந்தல் தடை உத்தரவுகளுக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், நீதிமன்ற உத்தரவுகளில் ஜனாதிபதி தலையிடமாட்டார் எனவும் சாக்குப் போக்குக் கதைகள் கூறி ராஜபக்ஷ அரச தரப்பினர் நழுவமுடியாது. நினைவேந்தல் தடை யுத்தரவுகளை உடன் நீக்கவேண்டும்” என வலியுறுத்தினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராசா. “தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு ராஜபக்ஷ அரசு விதித்துள்ள தடைக்கு எதிராகத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுத்துள்ள நகர்வுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைத்துத் தரப்புக்களுக்கும் பெரும் நன்றிகளைக்கூறுகின்றோம். ராஜபக்ஷ அரசு விதித்துள்ள தடைக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவு…

  13. இங்கு யாரும் துள்ளக்கூடாது: மன்னார் நகரசபையில் ஏற்பட்ட முறுகல் நிலை | ஈழ அரசியல் போகும் பாதை🤔 காதால் இரத்தம் வந்த படியால் முழுவதையும் பார்க்கவில்லை😪 14.30-35 இல் ஒருவர் கமராவை பார்த்து சிரித்தார் பாருங்கள் அதில் ஆயிரம் அர்த்தங்கள்😂

  14. சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாகாண சபைகள் மாற்றியமைக்கப்படும்?- சரத்வீரசேகர மாகாண சபைகளை சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாற்றியமைக்க வேண்டும் என்ற யோசனை தன்னிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மாகாண சபைகளின் எல்லைகளை பண்டைய காலத்தில் காணப்பட்ட ராஜ்ஜியங்களின் அடிப்படைகளில் மீளவரையறை செய்யவேண்டும் என்ற யோசனை எமக்கு கிடைத்துள்ளது. அதாவது மாகாண சபைகளை, சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாற்றியமைக்கவேண்டும் என்றே பெரும்பாலானோர் யோசனை முன்வைத்துள்ளனர். மேலும், தற்போதைய மாகாண சபை முறையை நீக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களும் விடுக்கப்படுகின்றன. …

  15. Editorial / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 02:14 - 0 - 206 AddThis Sharing Buttons Share to FacebookFacebookShare to TwitterTwitterShare to WhatsAppWhatsApp ஐக்கிய அமெரிக்காவில் வீசா காலம் நிறைவடைந்த நிலையில் தங்கியிருந்த 18 இலங்கை பிரஜைகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான முறையில் அங்கு தங்கியிருந்த குறித்த இலங்கையர்கள் அமெரிக்க பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு திரும்பி அனுப்பப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுக…

  16. தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, தமிழின வரலாற்றில் ஒரு மைல்கல் கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் வேறுபாடுகள் காணப்பட்ட நிலையிலும், தமிழினத்தின் விடிவுக்காகவும் நியாயத்துக்காகவும் ஒரேதளத்தில் நின்று, ஜனநாயக ரீதியில் போராட முடிவு செய்துள்ள தமிழ்க் கட்சிகள் அனைத்துக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஷாத் சாலி தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில், கருத்து வேறுபாடுகளையும் கௌரவத்தையும் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, அவற்றையெல்லாம் புறந்தள்ளி, பொதுவான சிந்தனைக்குள் வேற்றுமையில் இவர்கள் ஒற்றுமை கண்டிருப்பது, தமிழின வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த ஒற்றுமையானது தொடர வேண்டும் என்பதில…

  17. பலத்த பாதுகாப்புடன் பிள்ளையான் கொழும்பிற்கு எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டார். நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காகவே இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விரும்பு வாக்கினைப்பெற்று பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்…

  18. 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக சஜித் தரப்பு அறிவிப்பு by : Dhackshala 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “நாளை 20ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அன்றிலிருந்து 14 நாட்களுக்கு இதுதொடர்பான வியாக்கியானத்தை தெரிவிக்க காலம் வழங்கப்பட்டுள்ளது. நாம் இந்தக் காலத்தில் இதற்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளோம். …

  19. அரசுக்கு எதிராக தமிழர்கள் மீண்டும் போராடும் நிலைமை உருவாகலாம்- தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை by : Yuganthi தமிழ் இனத்தின் ஜனநாயக விடுதலைக்காக மரணித்தவர்களை அஞ்சலிக்கும் உரிமையை எவராலும் தடுக்கமுடியாது என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது. மேலும் இந்த அரசு, அஞ்சலி செலுத்தும் விடயத்தில் ஜனநாயகத்தன்மையுடன் நீதியான ஒரு பதிலை விரைவில் அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் தமிழர்கள் அகிம்சை ரீதியாக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடும் ஒரு சந்தர்ப்பம் உருவாகும் எனவும் அப்பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன், ஊடக அறிக்கையொன்றை இன்று (திங்கட்கிழமை)…

  20. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு 2074 முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இரண்டாயிரத்துக்கு அதிகமான முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாண்டு ஆரம்பம் முதல் 2074 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த முறைப்பாடுகள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.adaderana.lk/news.php?nid=134026

  21. இராணுவம் அச்சுறுத்துவதாக வவுனியா மக்கள் குற்றச்சாட்டு.! வவுனியா- வடக்கின் தனிக்கல்லு பிரதேசத்தில் அமைந்துள்ள வயல் நிலங்களிற்கு செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுப்பதாக பிரதேச ஒருங்கிணைப்பு குழுவில் குற்றம் சாட்டப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு.திலீபன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், “தனிக்கல்லு பகுதியில் அமைந்துள்ள எருக்கலம் பிலவு என்ற 500 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்கள் நூறு வருடங்கள் பழமையானது. இன்று எமது பரம்பரை, விவசாயகாணிகளிற்கு செல்வதற்கு இராணுவம் அனுமதி மறுக்கிறது. காணியின் உறுதியை தந்தபின்னர் காணிக்குள் இறங…

  22. ஊடகம் ஒன்றில் தனது நடிப்பை வெளிப்படுத்திய பிள்ளையான்! September 21, 2020 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு யுத்தத்தின் இறுதியில் நடந்தது தொடர்பான செய்தியைக் கேட்ட பின்னர் மிகவும் வேதனையாக இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார். 2009 போர் களத்தில் கருணா, பிள்ளையான் , மற்றும் சில ஒட்டுக்குழுக்கள் நேரடியான பங்கேடுத்தமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இன்று பிள்ளையான், கருணா போன்றோர் தமக்குக்கு சம்மந்தம் இல்லாததைப் போன்று அரசியலுக்கான தமிழ்மக்கள் முன் தமது நடிப்பை வெளிக்காட்டுகின்றனர். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும்…

  23. 20 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்று முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பக்கம் செல்வதால் சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லை - முபாறக் அப்துல் மஜீத் AdminSeptember 20, 2020 (பாறுக் ஷிஹான்)20 ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்று முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பக்கம் செல்ல முயற்சிப்பதனால் சிறுபான்மையினருக்கு இச்சட்டம் பாதிப்பில்லை என்றே எண்ணத் தோன்றுவதாக உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அகில இலங்கை முஸ்லிம் கட்சியின் தவிசாளர் றுஸ்தி நஸார் தலைமையில் 20 ஆவது அரசியல் திருத்த சட்டமும் சிறுபான்மை மக்களின் நிலைப்பாடும் என்ற தொனிப்பொருளில் நேற்று(19) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரி…

  24. தொழில் நிமித்தமாக.. சவுதி அரேபியாவுக்குச் சென்ற, 28 இலங்கையர்கள் மரணம் தொழில் நிமித்தமாக சவுதி அரேபியாவுக்குச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கடந்த 04 மாதங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த 28 பேரில் இரண்டு வீட்டுப் பணிப்பெண்களும் அடங்குகின்றனர். அதேநேரம், உயிரிழந்தவர்களின் சடலங்கள் அந்நாட்டினதும் சர்வதேச சட்டத்தின்படியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இறுதியாக தொற்று உறுதியான மூவரும் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெர…

  25. சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை – இன்று முதல் புதிய திட்டம் அமுல்! கொழும்பின் 4 மார்க்கங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கு விதிகளை மீறும் சாரதிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் ஆலோசனை வழங்கும் வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வீதி ஒழுங்கு விதிகளை மீறுவோரை அடையாளம் காணும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் நிஷ்ஷங்க குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு வார காலமாக பொதுமக்களின் நலன் கருதி கொழும்பு நகரிலும் அதனை அண்மித்த நகர்ப்புறங்களிலும் அதிகமான பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு சாரதிகளுக்கும் பாதசாரிகளுக்கும் உரிய வழிகாட்டல்களை வழங்கி வரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.