ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143682 topics in this forum
-
கிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஜனாதிபதியின் விருது கிடைக்கப்பெற்றுள்ளது. 2016 இல் தேசிய உணவு உற்பத்தியில் ஆற்றிய சிறந்த பணியினை பாராட்டும் வகையில் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த விவசாயி மயில்வாகனம் இராஜகோபால் ( வயது 59) என்பவருக்கு கிடைத்துள்ளது. இதில் முதலாம் இடம் களுத்துறையைச் சேர்ந்த விவசாயிக்கு கிடைத்துள்ளது. இரண்டாம் இடத்தினை பெற்ற இவருக்கு சான்றிதழ் விருது உட்பட நான்கு இலட்சம் ரூபா பணமும் வழங்கி கௌரவிக்க…
-
- 0 replies
- 525 views
-
-
அடைக்கலம் தேடி அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற வழியில் இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கப்பலில் இருந்த தமிழ் அகதி இளைஞர் ஒருவர் மருத்துவ உதவிகள் கிடைக்காத நிலையில் இரத்தவாந்தி எடுத்து மரணமாகியுள்ளர். http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2A4OJlaccaeoOAd4deKKMMW0a3cdlYOed4dBTnB23022m4BZ4e
-
- 0 replies
- 715 views
-
-
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அமிர்தலிங்கம் இராசகுமாரன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு இந்த விசாரணை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று (26) மாலை 2 மணிக்கு யாழ். பொலிஸ் நிலையத்திற்கு விசாணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். நேற்று உள்ளுர் பத்திரிகை ஒன்றில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்ததாக "மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படுவதை தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கமே தவிர, தமது மண்ணிற்காக வித்தாகிப்போன மாவீரர்கள் தடை செய்யப்படவில்லை......................" என வெளியாகிய செய்தி தொடர்பாகவே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. - S…
-
- 0 replies
- 216 views
-
-
கற்பிட்டி சவக்காலையில் வைக்கப்பட்டிருந்த யோசுநாதரின் திருச் சொரூபம் கீழே அடித்து நொருக்கப்பட்டுள்ளமை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கற்பிட்டி சென். மேரிஸ் வீதியிலுள்ள கிறிஸ்தவ சவக்காலையில் உள்ள செபம் படிக்கும் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த யோசுநாதரின் திருச் சொரூபம் நிலத்தில் கீழே அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், குறித்த சவக்காலையில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் அடையாளத்திற்காக பெயருடன் புதைக்கப்பட்ட சுமார் 40 சிலுவைகள் (குருஸ்) இதன்போது சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் நேற்று (23) இரவு தமக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, இன்று (24) வெள்ளிக்கிழமை ச…
-
- 1 reply
- 290 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழு அமைப்பது தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தென்னாபிரிக்கா அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு உதவத் தயாராக இருப்பதாக, அண்மையில் கொழும்பு வந்திருந்த தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்திருந்தார். இந்த திட்டத்துக்கு தென்னாபிரிக்கா உதவியளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா கொழும்பில் சந்தித்து, இந்தத் திட்டம் குறித்து எடுத்துக் கூறியிருந்தார். அதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் த…
-
- 3 replies
- 492 views
-
-
விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கவச உடை கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:முல்லைத் தீவு பகுதியில், இறுதிக் கட்ட போர் நடந்த இடத்தில், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இறுதிக்கட்ட போர் நடந்தபோது, ஏராளமான ஆயுதங்களை புலிகள், பூமிக்கு அடியில் புதைத்து வைத்தாக தகவல் வெளியானதை அடுத்து, அந்த பகுதி முழுவதும், விரிவான சோதனை நடத்தப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு மே 18 அன்று, ராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதற்குபின், தற்போது பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் – பலாலி பிரதான வீதியில் மாநகர சபை வரவேற்பு பதாகை அமைப்பு! யாழ். மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் – பலாலி பிரதான வீதியில், யாழ். மாநகர எல்லை ஆரம்பிக்கும் பகுதியில் வரவேற்பு பதாகை அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணனால் யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதியினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியில் யாழ்ப்பாண மாநகரசபை அன்புடன் வரவேற்கின்றது என்னும் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் வரவேற்பு பதாதை யாழ் மாநகரசபையில் இலட்சனையுடன் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறித்த ப…
-
- 1 reply
- 376 views
-
-
-
சர்வதேச விசாரணைக்கான எதிர்ப்பே என்னை இலக்கு வைக்க காரணம் .! நாட்டின் 70 ஆண்டுகால தனிக்கட்சி அரசியலில் செய்ய முடியாததை தேசிய அரசாங்கத்தில் முன்னெடுக்கவே கூட்டாட்சி அரசாங்கத்தை அமைத்தோம். எனினும் தேசிய அரசாங்கத்திலும் எதிர்பார்த்ததை செய்ய முடியவில்லை. சர்வதேச தேவைக்காகவே இந்த அரசாங்கமும் இயங்குகின்றது என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ தெரிவித்தார். சர்வதேச விசாரணைக்கு நான் தடையாக உள்ளதாலேயே என்னை இலக்கு வைத்துள்ளனர். ஆனால் நாட்டை சரியான திசை யில் திருப்பும் தேவைக்காக அரசியல் மாற்றத்தை செய்து நாட்டை மீட்டெடுக்க ஒருபோதும் பின்னிற்க மாட்டோம். அதில் மாநாயக்க தேரர்களின் பங்களிப்பையே…
-
- 1 reply
- 445 views
-
-
Published by T Yuwaraj on 2022-01-21 17:27:17 இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதேச சபையின் முன்பாக இன்று காலை காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து இந்த போராாட்டத்தை முன்னெடுத்திருந்தன. போராட்டத்தை முன்னெடுத்த மீனவர்கள் அங்கிருந்து பிரதேச செயலகம் வரையில் பேரணியாக சென்றனர். பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவர்கள் பிரதேச செயலகம் ஊடாக ஜனாதிபதி , மற்றும…
-
- 4 replies
- 371 views
-
-
சரத் பொன்சேகா அணி ஆழும் கட்சியின் எம்.பி முஷைமில்லா அவர்களுக்கு 30 மில்லியன் ரூபா லஞ்சம் கொடுத்து வாங்க முயற்சித்ததாக வீடியோ ஆதாரங்களுடன் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். தனது கட்சியினை சேர்ந்த முஷைமில்லா அவர்களுக்கு வெள்ளவத்தையில் உள்ள ஷபரி ஹோட்டலில் 205 ஆம் இலக்க ரூமில் வைத்து 30 மில்லியன் ரூபா கொடுத்து தமக்கு ஆதரவு தருமாறு கேட்டதாகவும் அதற்கான வீடியோ ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார் விமல் வீரவன்ச. http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E…
-
- 2 replies
- 1.1k views
-
-
டெல்லி: இந்திய- இலங்கை மீனவர்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மத்திய அமைச்சர் சரத்பவார் விடுத்த அழைப்பை ஏற்று அந்நாட்டு அமைச்சர் ராஜித சேனாரத்ன விரைவில் டெல்லி வருகை தர இருக்கிறார். இது தொடர்பாக இலங்கை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகையில், "எமது 170 மீனவர்களும் 32 படகுகளும் தமிழ் நாட்டிலும் எஞ்சியவர்கள் ஆந்திர மாநிலத்திலும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் உள்ள இலங்கை மீனவர்களை சட்டப்படி விடுவிப்பதற்காக மாநில அரசாங்கம் அவர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் அப்படி நடைமுறை வழக்கத்திலில்லை. ஒன்றிணைந்த விசாரணைக் குழுகூடி ஆராய்வதன் மூலமே சிறை வைக்கப்படும் மீனவர்கள் விடுவிக்கப்படுவது உண்டு. ஆனால் தற்போது தமிழ்நாட்டு முதலமைச்…
-
- 2 replies
- 661 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவுக்கு பைத்தியம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே கட்சியின் தலைமை பதவியை ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியிருந்தார். தற்போது தான் பதவியை வழங்கவில்லை என்கிறார். எனவே அவருக்கு பைத்தியம் என்றே கூறவேண்டும் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். வெள்ளவத்தையிலுள்ள கண் வைத்தியசாலை ஒன்றினை மேற்பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்த லின் பின்னர் சபாநாயகர் சமல் ராஜபக் ஷவின் வீட்டில் சுதந்திரக் கட்சி முக்கியஸ் தர்களின் சந்திப்பொன்று இட…
-
- 0 replies
- 212 views
-
-
-ஆர்.ரஸ்மின் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை ஹிஜ்ராபுரம் ஜூம்ஆப்பள்ளிவாயல் ஏற்பாடு செய்த 'ஸலாதுல் இஸ்திஹார்' மழை வேண்டி தொழுகை இன்று 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் ஹிஜ்ராபுரம் ஜூம்ஆப்பள்ளிவாயல் மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது 'ஸலாதுல் இஸ்திஹார்' மழை வேண்டி தொழுகை நிறைவேற்றப்பட்டதுடன், குத்பா பிரசங்கம் மற்றும் விசேட துஆப் பிரார்த்தனைகள் என்பனவும் இடம்பெற்றன. இந்த தொழுகையில் வடமாகாண சபை உறுப்பினர் யாஸின் ஜவாஹிர் (ஜனோபர்) மற்றும் ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி, தண்ணீரூற்று ஆகிய ஜூம்ஆப்பள்ளிவாயலின் பிரதம இமாம்களும், ஊர்மக்கள் பலரும் கலந்து கொண்டனர். கடந்த சில மாதங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை இல்லாமையால் கடும் வரட்சி காணப்படுவதுடன், முறிப்…
-
- 0 replies
- 463 views
-
-
இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவும்: அமெரிக்காவிடம் சம்பந்தன் கோரிக்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் அதிகாரியிடம் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோரியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் அதிகாரி ப்ரயன் புரக் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் விளக்கமளித்துள்ளார். இனப் பிரச்சின…
-
- 6 replies
- 603 views
-
-
Published by J Anojan on 2022-02-09 16:23:22 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜயசூரிய, மூன்று மாதங்களுக்கு பயணத்தடையை நீக்கியதுடன் பாராளுமன்ற உறுப்பினர் பதியுதீனின் கடவுச்சீட்டை விடுவிக்கவும் உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தை வீட்டில், வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஹட்டன் டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். சிறுமியின்…
-
- 0 replies
- 148 views
-
-
. பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ பெற்றுள்ளது:சிதம்பரம் வீரகேசரி இணையம் 2/1/2010 3:18:17 PM - விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ இலங்கை அரசிடமிருந்து பெற்றுள்ளதாக இந்திய உட்துறை அமைச்சர் பா. சிதம்பரம் இன்று தெரிவித்துள்ளதாக த இந்து செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அண்மையில் வெளியான சி.பி.ஐ.யின் அறிக்கையில் பிரபாகரனின் மரணச் சான்றிதழிற்காக தாம் காத்திருப்பதாக தெரிவித்திருந்தது. ராஜீவ் காந்தி கொலைவழக்கில் முக்கியகுற்றவாளியான விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் கந்த மே மாதம் 18ஆம் திகதி இலங்கை இராணுவத்துடனான இறுதிக்கட்ட மோதலில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது…
-
- 6 replies
- 1.7k views
-
-
செவ்வாய், பிப்ரவரி 9, 2010 19:55 | ஞானசீலன், யாழ்ப்பாணம் இடம் பெயர்ந்த நிலையில் கல்வி கற்றுவரும் 2 மாணவர்கள் தற்கொலை!! யாழ் பல்கலைக்கழகம் துக்கத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த முதலாமாண்டு மாணவர்கள் இருவர் இன்று காலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று யாழ் பல்கலைக்கழகத்தையும் கல்வி சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள என பதிவு இணையத்தின் யாழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த உற்ற நண்பர்களான இருவரும் இருபாலையில் உள்ள தமது உறவினர் வீடு ஒன்றுக்கு இன்று காலை சென்ற பின்னர் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றினுள் வீழ்ந்து தற்கொலை செய்துள்ளனர். இவ் முடிவுக்கு முன்னர் அவர்க…
-
- 11 replies
- 1.6k views
-
-
காணி அளவீட்டு குழு விரைகிறது இரணைதீவுக்கு கிளிநொச்சி இரணைதீவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான காணி அளவீட்டு குழு இன்று இரணைதீவு பயணமாகின்றது. 1993ம் ஆண்டு தமது பூர்வீக மண்ணைவிட்டு வெளியேறிய மக்கள் அப்பகுதிக்கு சென்று தங்கி மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். 2008ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தின் பின்னர் மீள்குடியேறிய போது இரணைதீவில் சென்று தங்கி மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அதிகளவான எரிபொருள் செலவு காணப்படுவதாகவும், பிரித்தானியர் காலத்தில் வழங்கப்பட்ட தமது உறுதிக்காணிகளில் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கமாறு …
-
- 0 replies
- 720 views
-
-
சிறீலங்கா பொருட்களை புறக்கணியுங்கள்: மூன்றாவது காணொளி சிறீலங்கா பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை மேற்கொண்டு வரும் புலம்பெயர் தமிழ் அமைப்பு “உள்ளாடைகளுக்கு சிந்தப்பட்ட குருதி” என்ற தனது காணொளி வெளியீட்டின் மூன்றாவது பகுதியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்கா பொருட்களை வெளிநாடுகளில் புறக்கணிக்கும் போராட்டங்களை மேற்கொண்டுவரும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் வெசிங்டனை தளமாக கொண்ட பிரிவு “உள்ளாடடைகளுக்கு சிந்தப்பட்ட குருதி” என்ற தனது காணொளி வெளியீட்டின் மூன்றாவது பகுதியை வெளியிட்டுள்ளது. ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசின் ஆதரவுடன் மேற்கொள்ளப்டும் வன்முறைகள் குறித்து அனைத்துலக மக்களுக்கு விளக்கமளிப்பதற்காக இந்த…
-
- 2 replies
- 929 views
-
-
புதன், மார்ச் 3, 2010 21:38 | நிருபர் கயல்விழி தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களை சிறீலங்கா இராணுவம் கடுமையாக துன்புறுத்துகின்றது வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களை சிறீலங்கா இராணுவம் கடுமையாக துன்புறுத்துவதாக வவுனியா தகவல்கள் தெரிவித்துள்ளன. சிறீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா தடுப்பு முகாம்களில் உள்ள இளம்பெண்களை சிறீலங்கா இராணுவம் அதிக துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி வருகின்றது. குறிப்பாக பெண் இராணுவத்தினர் அதிக துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் தம்மால் காத்திரமான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியும் என பொது அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ம…
-
- 1 reply
- 982 views
-
-
‘உயர்நீதிமன்ற வியாக்கியானம்; ஜனநாயகத்தின் வெளிப்பாடு’ அரசமைப்பின், 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், உயர் நீதிமன்றம் நாடளுமன்றத்துக்கு வழங்கியுள்ள வியாக்கியானமானது, நாட்டின் ஜனாநாயகம், நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை வெளிப்படுத்துவதாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 20ஆவது திருத்தம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் குறித்து, அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனநாயக நாட்டில் மக்களின் எதிர்பார்ப்புகள் - அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தவகையில், 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் ஊடாக சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில்…
-
- 0 replies
- 171 views
-
-
பயங்கரவாதத்தின் நவீன அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண புதிய சட்டம் வேண்டும் – ரணில் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இன்றுநாடளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நவீன பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார். புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கும் போது புலனாய்வு அமைப்பும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும். புதிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உருவாகலாம் என்பதனால் புதிய சட்டத்தை கொண்டுவந்து இவ்வாறான பிரச்சினைகள…
-
- 0 replies
- 203 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2001ம் ஆண்டு முதல் இரு தரப்புக்கும் இடையிலான உறவு தொடர்பில் விசரணை நடத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தமிழ் பேசும் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக புலிகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டு செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விசாரணை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…
-
- 2 replies
- 487 views
-
-
1997 கலதாரி குண்டுவெடிப்பு, 72 வயது மட்டு வாழ் வயோதிபர் சூத்திரதாரியென கைது மட்டுநகர் நிருபர் வெள்ளிக்கிழமை, மார்ச் 19, 2010 1997 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலதாரி குண்டுவெடிப்பின் சூத்திரதாரியென 72 வயதுடையவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த இவர் கோட்டை பகுதியில் முன்பு வியாபாரம் செய்து வந்தவர் என்றும். பின்னர் மட்டக்களப்பில் வசித்து வந்தவர் என்றும் பொலிசார் கூறியுள்ளனர். புலனாய்வுத்துறையில் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராம் இந்த வயோதொபர் என பொலிசார் கூறியுளனர். http://www.eelanatham.net/story/1997-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%…
-
- 2 replies
- 705 views
-